Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெய்ஜிங் சார்பு சமூக ஊடக கணக்குகள் அண்மையில் இமயமலை எல்லையில் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் ஒரு ஏரியின் கரையில் இந்திய துருப்புக்கள் இடிந்து கயிற்றால் கட்டப்பட்டிருப்பதைக் காட்டும் படங்களை வெளியிட்டன.

பெய்ஜிங் சார்பு சமூக ஊடக கணக்குகள் அண்மையில் இமயமலை எல்லையில் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் ஒரு ஏரியின் கரையில் இந்திய துருப்புக்களை   கயிற்றால் கட்டப்பட்டிருப்பதைக் காட்டும் படங்களை வெளியிட்டன.

https://www.dailymail.co.uk/news/article-8425875/Three-Indian-soldiers-killed-fighting-Chinese-forces-disputed-Himalayan-border.html

  • Replies 131
  • Views 12.9k
  • Created
  • Last Reply

 

 

சமூக வலைத்தளங்களில் சிங்கள சிறிலங்காவும் சீனாவின் ஒரு முகவர் என்றும் 

சிங்கள சிறிலங்கா இந்தியாவிற்கு எதிரானது என்ற உண்மையை 

ஆங்கில மற்றும் முடிந்த ஹிந்திய ஊடகங்களிலும் பதியவேண்டும். 

  • Sri Lanka too a close ally of China 
  • The leaders of Sri Lanka too like Pakistani leaders 
  • China has a strong presence in Sri Lanka. Should India worry there too? 
  • In the south, in Sri Lanka and Maldives, China has built ports to convert as military installations 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ampanai said:

 

 

Vfhj.jpg

கிந்தியனுக்கு அடி அகோரமாம் தோழர்.! இங்க மிலிட்டரிமார் கதைக்கினம் .. 😄

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Vfhj.jpg

கிந்தியனுக்கு அடி அகோரமாம் தோழர்.! இங்க மிலிட்டரிமார் கதைக்கினம் .. 😄

புரட்சி, உங்களால் எப்படி முடிகிறது?

நீங்கள் இந்தியாவில் வாழும் தமிழர். ஒரு சிறு அளவிலாவது உங்களுக்கு உங்கள் ராணுவம் மீது அபிமானம் இருக்கலாம். அப்படியிருக்க, நீங்களும் எங்களைப்போல இந்திய ராணுவத்திற்கு ஏற்படும் அழிவினை எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது? 

எங்களைப்பொறுத்தவரை அது மகிழ்ச்சியான விடயம். ஏனென்றால், இந்தியாவினால் நாம் அழிக்கப்பட்டிருக்கிறோம். அவர்களின் ராணுவம் நேரடியாகவே எம்மக்களில் குறைந்தது 20,000 பேரை 1987 இலிருந்து 1990 இற்கிடையில் கொன்றது. ஆகவே, எம்மை அழித்தவர்கள் ஆகவே எம்மை அழித்தவர்கள் அழிக்கப்படும்போது எமக்கு அது மகிழ்ச்சியைத் தருகிறது. 

உங்களுக்குமா? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

புரட்சி, உங்களால் எப்படி முடிகிறது?

நீங்கள் இந்தியாவில் வாழும் தமிழர். ஒரு சிறு அளவிலாவது உங்களுக்கு உங்கள் ராணுவம் மீது அபிமானம் இருக்கலாம். அப்படியிருக்க, நீங்களும் எங்களைப்போல இந்திய ராணுவத்திற்கு ஏற்படும் அழிவினை எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது? 

எங்களைப்பொறுத்தவரை அது மகிழ்ச்சியான விடயம். ஏனென்றால், இந்தியாவினால் நாம் அழிக்கப்பட்டிருக்கிறோம். அவர்களின் ராணுவம் நேரடியாகவே எம்மக்களில் குறைந்தது 20,000 பேரை 1987 இலிருந்து 1990 இற்கிடையில் கொன்றது. ஆகவே, எம்மை அழித்தவர்கள் ஆகவே எம்மை அழித்தவர்கள் அழிக்கப்படும்போது எமக்கு அது மகிழ்ச்சியைத் தருகிறது. 

உங்களுக்குமா? 

அதென்ன .. கர்நாடகாவில் நானும் உதை வாங்கி இருக்கேன் தோழர்.. 2009 க்கு பிறகு தமிழ் நாட்டிலே ஒரு தினுசாத்தான் இளைஞர்கள் திரியினம்..☺️

டிஸ்கி 

இவ்வளவு தான் பூமி பாரம் தாங்குவது.? இயற்கை.. குறைக்கட்டும் என்ட மனநிலைக் கு வந்துட்டேன் தோழர்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அதென்ன .. கர்நாடகாவில் நானும் உதை வாங்கி இருக்கேன் தோழர்.. 2009 க்கு பிறகு தமிழ் நாட்டிலே ஒரு தினுசாத்தான் இளைஞர்கள் திரியினம்..☺️

ஓ..அப்படியா? நீங்களும் எங்கள் ரகம்தான்.

ஒரு மானமுள்ள  தமிழனை தமிழ்நாட்டில் அதிகாரத்தில் ஏற்றுங்கள் தோழர். சிலவிடயங்கள் செய்ய வேண்டும்.

Edited by ரஞ்சித்
spelling

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

பெய்ஜிங் சார்பு சமூக ஊடக கணக்குகள் அண்மையில் இமயமலை எல்லையில் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் ஒரு ஏரியின் கரையில் இந்திய துருப்புக்கள் இடிந்து கயிற்றால் கட்டப்பட்டிருப்பதைக் காட்டும் படங்களை வெளியிட்டன.

பெய்ஜிங் சார்பு சமூக ஊடக கணக்குகள் அண்மையில் இமயமலை எல்லையில் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் ஒரு ஏரியின் கரையில் இந்திய துருப்புக்களை   கயிற்றால் கட்டப்பட்டிருப்பதைக் காட்டும் படங்களை வெளியிட்டன.

எத்தனை தரமும்.... ஆசையுடன் பார்க்கக் கூடிய அழகான படம். 👏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லடாக்கில் மோதல் எதிரொலி: முப்படைகளும் உஷார் நிலை - எல்லையில் கூடுதல் படைகள் குவிப்பு

லடாக்கில் மோதல் எதிரொலி: முப்படைகளும் உஷார் நிலை - எல்லையில் கூடுதல் படைகள் குவிப்பு

 

லடாக் எல்லையில் இந்தியா-சீனா படையினர் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து முப்படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பதிவு: ஜூன் 18,  2020 05:30 AM
புதுடெல்லி, 
 
லடாக்கின் கிழக்கே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந்தேதி இரவு இந்தியா-சீனா படையினருக்கு இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனா தரப்பிலும் 35 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இந்தியா, சீனா இடையே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடந்துள்ள மிகப்பெரிய இந்த மோதலால் எல்லையில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. அங்கு அமைதியை ஏற்படுத்த இருநாடுகளும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதேநேரம் எல்லையில் எத்தகைய அச்சுறுத்தலையும் சமாளிக்கவும் இந்தியா தயாராகி வருகிறது.
 
இதற்காக முப்படை தலைவர் பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இதில் முப்படைகளையும் தயார் நிலையில் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தியா-சீனா எல்லை நெடுகிலும் படைகள் உஷார் படுத்தப்பட்டு உள்ளன.
 
குறிப்பாக மோதல் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தோ-திபெத் படை வீரர்கள் அதிகபட்ச உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். மலைப்பாங்கான பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் லடாக்கில் ராணுவத்துடன் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
அத்துடன் எத்தகைய சூழலையும் எதிர்கொள்வதற்காக லடாக், அருணாசல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பதற்ற சூழல் நிலை நிறைந்த எல்லைப்பகுதிகளில் கூடுதல் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
 
இதைப்போல சீனாவுடனான எல்லைப்பகுதிகளை விழிப்புடன் கண்காணிக்குமாறு முன்வரிசை விமானப்படை தளங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி அவர்களும் பலத்த உஷார் நிலையை அறிவித்துள்ளனர்.
 
மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்கள் அடிக்கடி உலவும் என்பதால் கடற்படையும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இந்திய கடல் எல்லையில் கூடுதல் போர்க்கப்பல்கள் மூலம் ரோந்து பணிகளை கடற்படை தீவிரப்படுத்தி இருக்கிறது.
 
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கிந்தியனுக்கு அடி அகோரமாம் தோழர்.! இங்க மிலிட்டரிமார் கதைக்கினம் ..

இலங்கையர்கள் இந்தியாவை மிகவும் வெறுக்கிறார்கள் ஆனால் நீங்கள் சொல்வதை தான் என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை :rolleyes:
ஈழத்தமிழர்களே தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்கள் அந்த நாடுகள் தவறு செய்தால் கூட சரி என்று இலவசமாக பிரசாரம் செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையர்கள் இந்தியாவை மிகவும் வெறுக்கிறார்கள் ஆனால் நீங்கள் சொல்வதை தான் என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை :rolleyes:
ஈழத்தமிழர்களே தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்கள் அந்த நாடுகள் தவறு செய்தால் கூட சரி என்று இலவசமாக பிரசாரம் செய்கிறார்கள்.

சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது.

எங்கேயே நல்ல சூடு வாங்கியிருக்கிறார்.காயம் ஆறட்டும் கொஞ்சம் விடுங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லடாக் எல்லை மோதலுக்கு காரணமான சீன கூடாரம்

chinese-tent  

புதுடெல்லி

லடாக் எல்லையில் சீன ராணுவம் அமைத்திருந்த கூடாரமே இருதரப்பு மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அந்த கூடாரத்தை இந்திய ராணுவ வீரர்கள் அகற்றிய போது இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்துள்ளது.

கடந்த மே மாத தொடக்கத்தில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சாக், கோக்ரா, டவ்லத் பெக் ஒல்டி, பான்கோங் ஏரி பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. கடந்த 6-ம் தேதி இருதரப்பு ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி எல்லையில் இருந்து சீனப் படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு வந்தன. ஆனால் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்கள் தொடர்ந்து முகாமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கர்னல் சந்தோஷ் பாபு, இந்திய எல்லைக்கு உட்பட்ட 'பி 14' பகுதியில் சீன ராணுவ வீரர்கள் கூடாரம் அமைத்து தங்கியிருப்பதை கண்டறிந்தார். இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது கூடாரத்தை அகற்ற சீன ராணுவம் ஒப்புக் கொண்டிருந்தது.

கடந்த 15-ம் தேதி மாலையில் சம்பவ பகுதிக்கு துணிச்சலாக சென்ற கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி, ஜார்கண்டை சேர்ந்த வீரர் குண்டன் ஓஜா ஆகியோர் அந்த கூடாரத்தை அகற்ற கோரினர். இந்திய ராணுவ படை சற்று தொலைவில் முகாமிட்டிருந்தது.

அப்போது கூடாரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த சீன வீரர்கள், இரும்பு கம்பி, உருட்டுக்கட்டையால் கர்னல் சந்தோஷ் பாபுவையும் 2 இந்திய வீரர்களையும் கடுமையாக தாக்கினர். எல்லை ஒப்பந்த நடைமுறைகளின்படி இந்திய வீரர்கள் ஆயுதங்களை வைத்திருக்கவில்லை. பெரும் எண்ணிக்கையில் திரண்ட சீன வீரர்களை, 3 பேரால் சமாளிக்க முடியவில்லை. இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ் பாபு உட்பட 3 பேரும் உயிரிழந்தனர்.

சற்று தொலைவில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், சக வீரர்கள் உயிரிழந்த தகவல் அறிந்து ஆவேசம் அடைந்தனர். இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. 900-க்கும் மேற்பட்ட வீரர்கள் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 6 மணி நேரம், அதாவது நள்ளிரவு வரை மோதல் நீடித்தது.

கல்வான் பள்ளத்தாக்கு மலைச்சரிவு பகுதியாகும். சண்டையின் போது இருதரப்பு வீரர்களும் மலையில் இருந்து தவறி விழுந்தனர். இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 16 பேர் கொடூர தாக்குதலிலும் 4 பேர் மலையில் இருந்து கீழே விழுந்தும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன

https://www.hindutamil.in/news/india/559934-chinese-tent-1.html

 

 

 

 

 

வறுமை காரணமாக இராணுவத்தில் இணைந்தார் 😞 

  • கருத்துக்கள உறவுகள்

modi-3.jpg

அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் – சீனாவுக்கு பிரதமர் எச்சரிக்கை

இந்தியா, அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கும் என சீனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மஹாராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

கூட்டத்தின் தொடக்கத்தில் லடாக் எல்லையில் அத்துமீறிய சீன இராணுவத்தினர் உடனான தாக்குதலில் வீர மரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில முதல்வர்கள் ஆகியோர் காணொலி காட்சி மூலமாக எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த மோடி, “எல்லையை காக்கும் முயற்சியில் இந்திய இராணுவ வீரர்கள் தீரத்துடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடுதான். அதேநேரத்தில் அத்துமீறினால் எந்தவொரு சூழலிலும் தக்க பதிலடி கொடுக்கும் பலம்வாய்ந்த நாடாகும்.

இந்தியாவின் துணிச்சல் மற்றும் வீரத்தை பற்றி உலகிற்கே தெரியும். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவை கோபப்படுத்தும் நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். ஆத்திரமூட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தியா அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது” என மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/அத்துமீறினால்-இந்தியா-தக/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனையில் யார் பக்கம் நிற்கப் போகிறது இலங்கை?

விமலநாதன் விமலாதித்தன்ஊடகவியலாளர் - சர்வதேச விவகாரங்கள்
மகிந்த, கோட்டபய, மோதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

(இதில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் கருத்துகள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)

ஆசியாவின் பிராந்திய வல்லாதிக்க சக்திகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில், இருந்த எல்லைப்பூசலானது உயிர்ச்சேதம் மிக்க மோதலாக உருமாற்றம் கண்டுள்ள வேளையில், ஆசியாவின் பிற நாடுகள் இந்தப் பிரச்சனையை எந்தக் கோணத்தில் அணுகப் போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.

தெற்காசியப் புவியியலில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாய் அமைந்துள்ள இலங்கை, இன்று வரை அந்த இரு நாடுகளுடனும் மிகச்சிறந்த உறவைப் பேணி வருகின்றது.

இந்தியாவின் செல்வாக்கு இலங்கை அரசியல் தளத்தில் பலகாலமாக இருந்து வந்த போதும், 2015ஆம் ஆண்டுக்கு முற்பட்ட மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்திலேயே சீனாவின் கை இலங்கையில் மேலோங்கியது.

சீனாவின் நிதியுதவியுடன் பல்வேறு கட்டுமானத்திட்டங்கள் இலங்கையின் பல பாகங்களிலும் ஆரம்பிக்கப்பட்டன.

வருமான மீட்டுவதற்கு பொருத்தமற்ற திட்டங்கள் என அவற்றின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதும், சீனாவின் கால் அந்தக் காலப்பகுதியிலேயே மிக நன்றாக ஊன்றப்பட்டது.

2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னால், இந்தியாவின் கை உள்ளதென்றும் ஒரு கருத்து நிலவுகின்றது.

மைத்ரிபால சிரிசேனபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமைத்ரிபால சிரிசேன

அந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷவின் கட்சியைப் பிளந்து கொண்டு எதிர்த்தரப்புக்குச் சென்ற மைத்ரிபால சிரிசேனவின் செயற்பாடுகளின் பின்னால், இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் அதிகாரி ஒருவர் இருந்ததாக, மகிந்தவின் தரப்பு விமர்சித்திருந்தது.

எவ்வாறாயினும் சீன சார்பு கொண்டிருந்த இலங்கையின் முன்னைய ஆட்சியாளர் தூக்கியெறியப்பட்டமையானது, இந்தியாவுக்கு மிகுந்த சாதகமாகவே அமைந்தது.

இலங்கை ஜனாதிபதிப் பதவியில் அடுத்து அமர்ந்த மைத்ரிபால சிரிசேனவும், பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவும் தமக்குள் முரண்நிலை கொண்டிருந்த போதும், இந்தியாவின் நட்புக்கரத்தை மிக உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், ஏற்கனவே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்த சீனாவின் கட்டுமானத் திட்டங்களில், ஒரு தேக்கநிலை ஏற்படவே செய்தது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற பயங்கரவாதக் குண்டுவெடிப்புகளின் பின்னான விசாரணைகளுக்கு, இந்தியாவின் உறுதுணை விரைவாகக் கிட்டியதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது இரண்டாவது பதவியேற்பின் பின்னர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயத்தில் இலங்கை உள்ளடக்கப்பட்டதும், இந்தக் கோணத்தில் நோக்கப்பட வேண்டிய ஒன்றே.

இந்தக் காலப்பகுதியில், பதவியிறக்கப்பட்ட மகிந்த ராஜபக்‌ஷ தமது இந்தியத்தொடர்புகளூடாக இந்திய ஆட்சியாளார்கள் தம் மீது வைத்திருந்த பார்வையை மாற்றுவதில் வெற்றிகண்டார் என்றே சொல்லவேண்டும்.

மகிந்தபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியாவின் பிரதான ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவின் முக்கியஸ்தரும் அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமிக்கும் மகிந்தவுக்கும் இடையில் ஏற்கனவே நிலவிவந்த நட்பு, இந்த முயற்சியில் வெற்றியடைய பெரிதும் உதவியிருந்தது.

அதேவேளை மகிந்த தமது சீன நண்பனையும் கைகழுவி விடாது இறுகப் பற்றியிருந்தார்.

அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த ஜனாதிபதித்தேர்தலில் பெற்ற அபார வெற்றிக்குப் பின்னால், ஈஸ்டர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் நிலவிய போதும், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு பெரும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் ஆசீர்வாதம் உறுதியாக இருந்தது.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு புதுடெல்லி வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பிதழ் வைக்கப்பட்டமையும், அதை ஏற்று தனது முதலாவது அயல்நாட்டு விஜயமாக அவர் அங்கு சென்றமையும் பிராந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றன.

கடந்த ஆண்டு இறுதியில் இந்திய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினூடாக, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக, இந்தியா செயற்பட்டிருந்தது.

இதன் மூலம் அந்த நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியத் தலையீடு ஏற்பட்டது.

இலங்கையில் பல காலமாக, பெரும்பான்மை - சிறுபான்மை முரண்நிலை காணப்பட்டு வருகின்ற போதிலும், சிறுபான்மை மக்கள் தொடர்பில் இந்தியா தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வந்த போதும், இந்தச் சட்டத்திருத்தத்தில் இலங்கையை இந்திய ஆட்சியாளர்கள் உள்ளடக்காமல் விட்டமை, சுட்டிக்காட்டத்தக்கது.

கோட்டாபயபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையின் புதிய ஜனாதிபதியான கோட்டாபயவுடனான நல்லுறவை முறித்துக் கொள்வதற்கும் அதன் மூலம் அவர் முற்றிலுமாக சீனச் சார்பு கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுவதற்கும், இந்திய அரசாங்கம் சந்தர்ப்பம் அளிக்கவில்லை.

இலங்கையின் சிறுபான்மை இன மக்களான தமிழர்கள், பல ஆண்டுகளாக இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் நிலை காணப்படுகின்றது.

இந்த அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டே வந்திருக்கின்றது.

தமிழ்நாடு மாநிலத்தில் வலுவாக காலூன்ற முனைந்து கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சி, இந்தப் பிரச்சினையை தமிழ் அகதிகளுக்குச் சாதகமாகக் கையாண்டு, அந்தச் சட்டத்திருத்தத்தில் இலங்கையையும் உள்ளடக்கியிருக்க முடியும்.

அதன் மூலம், தமிழ்நாட்டு அரசியலில் தன் மீது சாதகமான அலையொன்றையும் கிளப்பியிருக்க, இந்தியாவின் பிரதான ஆளும் கட்சியால் முடிந்திருக்கும். எனினும், இலங்கை அரசினுடனான நல்லுறவை, தனது கட்சியின் எதிர்காலத்தை விடவும் முக்கியமாகப் பார்த்தது இந்திய ஆளுந்தரப்பு.

இந்தியாவுடன் பலகாலமாக நட்புப்பேணி வந்த நேபாளம், தற்போது சீனச்சார்பு நிலையை எடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவின் வெளியுறவுச் செயற்பாட்டில், இது குறிப்பிடத்தக்க ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகின் பல நாடுகளும் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீள்வதற்குப் போராடி வருகின்ற இச்சுழலில், இந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட தாக்குதலில், இருநாட்டுப் படைகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், இலங்கை இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவு பேணிவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசு, அணிசாரா கொள்கையைப் பின்பற்றவே அதிக சாத்தியங்கள் உள்ளன.

விமலநாதன் விமலாதித்தன் Image captionவிமலநாதன் விமலாதித்தன்

இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கின்ற சூழலில், அதில் பாரிய வெற்றி பெறுவதனூடாக, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொள்வதையே ஒரே இலக்காகக் கொண்டு செயற்படும் இலங்கையின் ஆளும்தரப்பு, இந்திய - சீன முரண்நிலைக்குள் ஒருதரப்பை மட்டும் சார்ந்து ஆதரவளித்துக் கொண்டிருக்கப் போவதில்லை.

மேலும், இந்த இந்திய - சீன மோதலானது, பாரிய போராக வெடிக்கும் நிலையும் இல்லாத காரணத்தால், இருதரப்பில் ஒன்றை மட்டும் இலங்கை சார்ந்து நிற்பது, தமக்கு உகந்தது அல்ல என்பதை, இலங்கை ஆளும் தரப்பு தெளிவாக உணர்ந்திருக்கின்றது.

கடந்த காலத்தில் விட்ட பிழையை, ராஜபக்‌ஷ சகோதரர்கள் மீண்டுமொருமுறை விடப்போவதில்லை என்பதையே, அண்மைய அரசியல் நகர்வுகள் காண்பிக்கின்றன.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், கடந்த 45 ஆண்டுகளில் இந்திய - சீன இராணுவப் படைகளுக்கு இடையே இடம்பெற்ற மிக மோசமான தாக்குதலாக இது அமைந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளார் நாயகமான அண்டனியோ குட்டெரெஸ், லடாக் பகுதியிலிருந்து இருநாட்டுப் படையினரும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல், வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த இரு நாடுகளின் சிறந்த நண்பனாகத் திகழும் இலங்கையின் ஜனாதிபதி செயலகமோ அல்லது வெளிவிவகார அமைச்சோ, இது தொடர்பாக எக்கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.

பிராந்திய வல்லாதிக்க சக்திகளுடனான இந்தப் பிரச்சினையில் தலையிடாது, நகர்வதற்கு இலங்கை தற்போதைக்கு, மௌனம் என்ற ஆயுதத்தையே கையிலேந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-53088301

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சீன மோதலைத் தடுக்கும் ஆற்றல்...சிறீலங்கா என்ற அழகிக்கு மட்டுமே உள்ளது. ஈழத்தமிழரை அழிக்கும்போது இந்திய, சீன, பாக்கி நாடுகளை தனது மடியில் கிடத்தி, ஒன்றிணைத்து நண்பர்களாக்கிய வரலாற்றுப் பெருமை அதற்கு உள்ளது. 😆

1 hour ago, ஏராளன் said:

எனினும், இந்த இரு நாடுகளின் சிறந்த நண்பனாகத் திகழும் இலங்கையின் ஜனாதிபதி செயலகமோ அல்லது வெளிவிவகார அமைச்சோ, இது தொடர்பாக எக்கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.

அணி சேரா கொள்கை ?

1 hour ago, ஏராளன் said:

தெற்காசியப் புவியியலில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாய் அமைந்துள்ள இலங்கை, இன்று வரை அந்த இரு நாடுகளுடனும் மிகச்சிறந்த உறவைப் பேணி வருகின்றது.

உண்மை அதுவல்ல. சீனாவே சிங்களத்தின் நண்பன் 

ஆனால், அந்த கசப்பான உண்மையை இந்திய கொள்கை வகுப்பாளர்களும், தமிழின விரோதிகளும் திட்டமிட்டு மறைக்கிறார்கள். 

விமலநாதன் விமலாதித்தன் யார் என்றே தெரியவில்லை. இந்த கட்டுரை கூட சிங்களத்தின் ஊடக பரப்புரையில் அங்கமோ என எண்ணத்தோன்றுகின்றது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடனான மோதலில் 35 சீனப்படை வீரர்கள் பலியாகினர்?

B408-1-960x640.jpg?189db0&189db0

 

இந்திய – சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் சீன இராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்தனர் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்திய – சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய இராணுவத்தின் கேணல் உட்பட இராணுவத்தினா் 20 பேர் உயிரிழந்தனர்.

இத்தகவலை இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வௌியிட்டுள்ளது.

எனினும், சீன வீரர்கள் உயிரிழந்தமை குறித்து அந்நாடு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

 

https://newuthayan.com/இந்தியாவுடனான-மோதலில்-35-ச/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர் பயிற்சியில் ஈடுபட்டு ஆயுத பலத்தை காட்டும் சீனா; ரோபோக்களை வைத்தும் சோதனை

போர் பயிற்சியில் ஈடுபட்டு ஆயுத பலத்தை காட்டும் சீனா; ரோபோக்களை வைத்தும் சோதனை

இந்தியாவுடனான மோதலுக்கு பிறகு போர் பயிற்சியில் ஈடுபட்டு ஆயுத பலத்தை காட்டும் சீனா; ரோபோக்களை வைத்தும் சோதனை நடத்துகிறது.
பதிவு: ஜூன் 18,  2020 14:43 PM

புதுடெல்லி

இந்திய- சீனா எல்லையில் கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் கர்னல் உட்பட 20 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில்,தற்போது சீனாவும் தங்கள் தரப்பில் 43 பேர் பலியானதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இது திங்களன்று நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களா என்ற தகவலை சீனா ராணுவம் உறுதி செய்ய மறுத்துள்ளது.


இந்த மோதலில் இரு தரப்பினரும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவில்லை, ஏனெனில் சமாதான உடன்படிக்கையின் கீழ் இரு தரப்பினரும் சர்ச்சைக்குரிய எல்லையிலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதனால் கொல்லப்பட்ட ராணுவத்தினர் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளதும், பலர் கால்வன் ஆற்றில் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.கால்வன் ஆற்றில் விழுந்தவர்கள் உயிர் தப்புவது கடினம் என்பதால், பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இதனிடையே டெல்லியில் அதிகாரிகள் தரப்பு இந்த மோதலுக்கு பழிவாங்க வேண்டும் என்று கோரியதால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 'வீரர்களின் தியாகம் வீணாகாது என்று எச்சரித்துள்ளார்.

மேலும், இந்தியா சமாதானத்தையே விரும்புகிறது, ஆனால் மோதல் போக்கு நீடித்தால் அது நிலைமை எதுவாக இருந்தாலும் பொருத்தமான பதிலை அளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சீனா நாட்டின் சக்தி வாய்ந்த ஆயுதங்களை போர் பயிற்சிக்கு உட்படுத்தியுள்ள வீடியோ காட்சிகளை சீனா வெளியிட்டுள்ளது.

அண்மையில் இந்தியாவுடனான கொடிய எல்லை மோதலில்  ஈடு பட்ட சீனா மோதல் நடந்த அதே இடத்தில் ஒரு பெரிய இராணுவப் பயிற்சி நடத்தி வருகிறது. இந்த வீடியோவை சீன அரசு தொலைக்காட்சி வெளியிட்டு உள்ளது. அதில் சுமார் 7,000 சீன ராணுவத்தினர் போர் பயிற்சியில் கலந்து கொள்வதும், ஆயுத பலத்தை காட்டுவதாகவும் அமைந்துள்ளது.

தீவிரவாதத் தாக்குதல் மற்றும் போர்களில் ஏற்படும் ராணுவத்தினரின் உயிரிழப்பைத் தடுக்க போர்முனை ரோபோவை சீனா மீண்டும் சோதனை செய்துள்ளது. மணிக்கு 10 கிலோ மீட்டர் வரை வேகமாகச் செல்லும் இந்த ரோபோ முழுவதும் ரிமோட் மூலம் இயக்கப்படுகிறது.

இரவிலும் தெளிவாகப் பார்க்ககூடிய நவீன வசதிகளும், இயந்திரத் துப்பாக்கியும் இந்த ரோபோவில் பொருத்தப்பட்டுள்ளன.

செங்குத்தாக ஏறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதில், கேமராவும் அடக்கம். ரோபா வாரியர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபாபோ மூலம் எந்த காலச்சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் சண்டையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/18144304/Chinas-state-broadcaster-reported-on-a-large-military.vpf

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இந்த மோதலில் இரு தரப்பினரும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவில்லை, ஏனெனில் சமாதான உடன்படிக்கையின் கீழ் இரு தரப்பினரும் சர்ச்சைக்குரிய எல்லையிலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

arjuna.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா-சீனா மோதலுக்கான காரணம் என்ன...? சீனா தனது தரப்பு உயிர் இழப்பை மறைப்பது ஏன்..?

இந்தியா-சீனா மோதலுக்கான காரணம் என்ன...? சீனா தனது தரப்பு உயிர் இழப்பை மறைப்பது ஏன்..?

இந்தியா-சீனா மோதலுக்கான காரணம் என்ன சீனா தனது தரப்பு உயிர் இழப்பை மறைப்பதற்கான காரணம் என்ன எனதகவல் வெளியாகி உள்ளது.
பதிவு: ஜூன் 18,  2020 16:13 PM
புதுடெல்லி

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது பதற்றமான சூழ்நிலை உருவாகி வரும் நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

திங்கட்கிழமை நள்ளிரவில் இந்தியா மற்றும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில், சுமார் 20-க்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.இந்தியா கொடுத்த பதிலடி தாக்குதலில் சீனா தரப்பில் பலியானோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 -க்கும் மேல் இருக்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.


எங்கள் தரப்பில் உயிரிழப்புகளை குறித்து தகவலை வெளியிடப்போவது இல்லை என  சீனா கூறியது. சீனா ஏன் தனது கொல்லப்பட்ட வீரர்களின் விவரங்களை மறைக்கிறது என சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. இதற்கிடையில், சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து ஒரு பெரிய உண்மை வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கு பயந்து சீனா தனது துருப்புக்களின் எண்ணிக்கையை மறைத்ததாக கூறப்படுகிறது.

தென் சீனா மார்னிங் போஸ்டின் அறிக்கையின்படி, சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு முக்கியமான சந்திப்பு இருக்க வேண்டும். சீனா முழு சம்பவத்தையும் குறைத்து மதிப்பிட முயன்றதைக் கண்டேன். இந்த மூலோபாயத்தின் கீழ், சீனா தனது உயிரிழப்புகளின் எண்ணிக்கையை வெளியிடவில்லை மற்றும் முழு விஷயத்திலும் அமைதியாக இருந்தது. இந்த மோதலில் இரு தரப்பு வீரர்களும் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் துருப்புக்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை.

சமீபத்திய ஆண்டுகளில் இந்திய - சீனா இடையே எல்லைப்பகுதியில் அவ்வப்போது மோதல், பிரச்சினை இருந்தாலும் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதில்லை.

ஆனால், சுமார் 53 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் இந்த உயிரிழப்பானது பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

சுமார் 4056 கி.மீட்டர் அளவுக்கு இந்தியாவும் சீனாவும் எல்லையைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றன. இந்தியா-சீனா எல்லை ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தராகாண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் வரை நீள்கிறது.இந்திய - சீனா எல்லைப் பகுதியானது கிழக்கு, மேற்கு, மத்திய என்று மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டிருக்கிறது.

இவற்றில் மேற்கு எல்லையான லடாக், மத்திய எல்லையான சிக்கிம், கிழக்கு எல்லைப் பகுதியான அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் தான் இரு தரப்புக்கும் பிரச்சினை அதிகமாகிவருகிறது.மேற்கே, உள்ள அக்சாய் சின் பகுதி தனக்குச் சொந்தமானது என்று இந்தியாவும் கிழக்கே உள்ள அருணாச்சலப் பிரதேசம் தனக்குச் சொந்தமானது என்று சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன.

கடந்த 1962-ஆம் ஆண்டு ஏற்பட்ட போரில் அக்சாய் சின் பகுதியைச் சீனா அடாவடியாக ஆக்கிரமித்துக்கொண்டது. அதன்பிறகு பின்வாங்கவே இல்லை. அக்சாய் சின் மீதான இந்தியாவின் உரிமையை நிராகரித்துவிட்டது சீனா.அதுமட்டுமின்றி, அருணாச்சலப் பிரதேசத்தை திபெத்தின் ஒரு அங்கம் என்றும் சீனா உரிமை கோரி வருகிறது.அருணாச்சலப் பிரதேச விவகாரத்தில் 1914-ல் பிரித்தானியா இந்தியா மற்றும் திபெத் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட மக்மோஹன் கோடு ஒப்பந்தத்தை இன்றுவரை சீனா ஏற்க மறுக்கிறது.

1914-ல் திபெத் தனி நாடாக இருந்தது. அதன்பிறகு 1950-ஆம் ஆண்டு சீனா திபெத்தை முழுவதுமாக கபளீகரம் செய்துவிட்டது. இரு நாடுகளுக்கும் இடையே இன்றுவரை சரியான எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு இறுதி செய்யப்படவில்லை. 1965- ல் நடந்த போருக்குப் பிறகு இந்திய ராணுவம், சீன இராணுவம் எந்த பகுதிகளில் நிலை கொண்டிருந்தார்களே அதை எல்லைக் கட்டுப்பாடு பகுதியாக இரு நாடுகளும் பின்பற்றி வருகின்றன.இந்த எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையும் சீன வீரர்கள் மதிக்காமல் அவ்வப்போது அத்துமீறி நுழைவதே பிரச்சனைக்கு காரணமாக அமைகின்றன.

இந்தியா - சீனா இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடானது மலைகள், ஆறுகள், பனிப்பாறைகள், பனிப் பாலைவனங்கள், புல்வெளிகள் ஊடாகப் பணிக்கிறது.இந்தப் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட இடங்களை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும்போது பிரச்சினை ஏற்படுகிறது.

தங்களது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வரை இரு நாடுகளும் சாலை, பாலங்கள், முகாம்கள் அமைக்கின்றன. சீனா ஏற்கெனவே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு விரைவாக செல்லும் வகையில் சாலைகள், பாலங்களை ஏற்படுத்திவிட்டது.

அதற்குப் பதிலடி அளிக்கும் இந்தியாவும் தற்போது எல்லைப் பகுதியில் தளவாடங்களை விரைவில் கொண்டுசெல்லும் வகையில் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கட்டுமானத்துக்குச் சீன எதிர்ப்பு தெரிவித்துசண்டையிட்டு வருகிறது.

இந்தியா 255 கி.மீட்டர் தொலைவிலான சாலையை லடாக் லே நகரிலிருந்து டர்புக், ஷியோக் வழியாக தவ்லத் பேக் ஓல்டி எனும் சீன எல்லையை ஓட்டிய பகுதி வரை அமைத்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவால் மிக எளிதாக இராணுவத் தளவாடங்களை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வரை நகர்த்தமுடியும்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/18161321/How-India-and-Chinas-deadliest-clash-in-decades-came.vpf

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

இந்தியாவுடனான மோதலில் 35 சீனப்படை வீரர்கள் பலியாகினர்?

B408-1-960x640.jpg?189db0&189db0

 

இந்திய – சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் சீன இராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்தனர் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்திய – சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய இராணுவத்தின் கேணல் உட்பட இராணுவத்தினா் 20 பேர் உயிரிழந்தனர்.

இத்தகவலை இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வௌியிட்டுள்ளது.

எனினும், சீன வீரர்கள் உயிரிழந்தமை குறித்து அந்நாடு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

 

https://newuthayan.com/இந்தியாவுடனான-மோதலில்-35-ச/

அட அதையும் நீங்கள்தானா சொல்வது 😂😂

நம்பீட்டோம் 😏

2 minutes ago, உடையார் said:

இந்தியா-சீனா மோதலுக்கான காரணம் என்ன...? சீனா தனது தரப்பு உயிர் இழப்பை மறைப்பது ஏன்..?

இந்தியா-சீனா மோதலுக்கான காரணம் என்ன...? சீனா தனது தரப்பு உயிர் இழப்பை மறைப்பது ஏன்..? சீனா ஏன் தனது கொல்லப்பட்ட வீரர்களின் விவரங்களை மறைக்கிறது என சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. இதற்கிடையில், சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து ஒரு பெரிய உண்மை வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கு பயந்து சீனா தனது துருப்புக்களின் எண்ணிக்கையை மறைத்ததாக கூறப்படுகிறது.

சொல்லும் பொய்யைக்கூட திறம்படக் கூற முடியாத இந்தியா 😂😂😂😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீண்டிய சீனா, பதிலடி தந்த இந்தியா

சீண்டிய சீனா, பதிலடி தந்த இந்தியா

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனாவுக்கு, இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
பதிவு: ஜூன் 19,  2020 05:00 AM
இந்திய-சீன வீரர்கள் இடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில்மிகப்பெரிய மோதல் நடந்து உள்ளது. நமது தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்து உள்ளனர். சீன தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.
 
கடந்த 1962-ம் ஆண்டு நடந்த இந்தியா-சீனா போருக்கு பின் நடந்த மிகப்பெரிய மோதலாக இது பார்க்கப்படுகிறது. இருப்பினும் சீனாவின் அத்துமீறலுக்கு முதல் முறையாக இந்தியா கடும் பதிலடி கொடுத்துள்ளது.
 
போருக்கு பின் சீனா இதுவரை பல நூறு முறை இந்திய எல்லைக்குள் வந்து நமது வீரர்களை சீண்டி சென்று உள்ளது. இந்த சீண்டலுக்கு காரணம், இந்திய வீரர்களை அவர்கள் பலவீனமாக நினைத்தது தான். ஆனால் இந்த முறை இந்தியா தந்த பதிலடியால் சீனா தற்போது திகைத்து நிற்கிறது.
 
சீனா ஏன் தொடர்ந்து எல்லை தாண்டி வந்து இந்தியாவை சீண்டி வருகிறது என்பதனை பார்ப்பதற்கு முன்பு நமக்கும், சீனாவிற்கும் உள்ள எல்லை பிரச்சினைகளை தெரிந்து கொள்வது அவசியம்.
 
பண்டைய காலம் முதல் சீனாவிற்கு மிகுந்த நட்பு நாடாகத்தான் இந்தியா விளங்கி வந்தது. இருநாடுகள் இடையே போர் நடந்ததாக வரலாற்று தரவுகள் இல்லை. ஆனால் அதே நேரத்தில் இருநாடுகளும் வணிகத்தில் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டன. காலம், காலமாக எல்லைதாண்டி நீடித்து வந்த இந்த நட்பு, 19-ம் நூற்றாண்டு முதல் எல்லை பிரச்சினை மூலம் விரிசல் விழ தொடங்கியது.
 
இந்தியாவும்-சீனாவும் 3 ஆயிரத்து 488 கிலோ மீட்டர் தூரமுள்ள எல்லையை தற்போது பகிர்ந்து உள்ளன. யூனியன் பிரதேசமான லடாக், மற்றும் இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த எல்லைகள் உள்ளன. அதில் இமாசல் மற்றும் உத்தரகாண்ட் தவிர மற்ற பகுதிகளில் உள்ள எல்லைகளில் சீனா தொடர்ந்து பிரச்சினை செய்கிறது. கடந்த 1914-ம் ஆண்டு திபெத்தும்-ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவும் எல்லை தொடர்பாக மெக்மோகன் கோடு உடன்படிக்கை ஒன்றை செய்தன. இந்த உடன்படிக்கை தான் அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகியவற்றில் இந்தியாவின் எல்லை எதுவரை என்பதனை உறுதி செய்தது.
 
ஆனால் திபெத், சீனாவின் ஒரு அங்கமாக உள்ளது. இந்த ஒப்பந்தம் போட திபெத் நிர்வாகத்திற்கு அதிகாரம் கிடையாது. எனவே திபெத்தின் பகுதியான சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் எங்களுக்கே சொந்தம் என்று சீனா இப்போது வரை சொல்லி வருகிறது.
 
அடுத்ததாக லடாக் பகுதி. சுதந்திரம் பெற்ற பிறகு ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஜம்முவின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்தது. அது தான் தற்போதைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று சொல்கிறோம்.
 
அதே போல் சீனாவும், ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. அது தான் அக்சய்சின். இந்த இடம் தான், கடந்த 1962-ம் ஆண்டு நடந்த இந்திய-சீனா போருக்கு அடித்தளம் அமைத்தது. போருக்கு பின் அக்சய்சின், முழுவதையும் சீனா தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது.
 
எனவே தான் அக்சய்சின் அருகில் உள்ள இந்த பகுதிகளில் தொடர்ந்து எல்லை பிரச்சினை ஏற்படுகிறது. எல்லை பிரச்சினைக்கு மிக மற்றொரு காரணம் எல்லை என்று வரையறுக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள் பனி மலைகள் மற்றும் ஆறுகளாக உள்ளன. இது சீனாவின் அத்துமீறலுக்கு மிகுந்த வசதியாக உள்ளது. அடிக்கடி இந்திய எல்லைக்குள் நுழையும் சீன வீரர்களை இந்திய படையினர் தடுத்தி நிறுத்தி அனுப்பி விடுவார்கள்.
 
இந்திய-சீன எல்லை பகுதிகளில் சீனா பல்வேறு கட்டுமானப்பணிகளை முடித்து உள்ளது. இதுவரை எல்லைப்பகுதிகளில் மட்டும் 42 விமான நிலையங்களை கட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக திபெத் எல்லை அருகே மிகப்பெரும் விமான நிலையத்தை சீனா கட்டி உள்ளதாகவும், அது அனைத்து வானிலையின் போதும் செயல்படும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இதுதவிர எல்லைகளில் சாலை போக்குவரத்தையும் சீனா நன்றாக மேம்படுத்தி உள்ளது.
 
இந்தியாவை பொறுத்தவரை தற்போது அதிக அளவில் சாலை பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதன்காரணமாக டோக்லாம் மற்றும் கல்வான் பகுதிகளில் பிரச்சினை ஏற்பட்டது. அதாவது தனது எல்லை பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்திய சீனா கூறுவது என்னவென்றால், இந்தியா தனது எல்லை பகுதியில் எந்த பணியும் எல்லையில் மேற்கொள்ள கூடாது என்பதுதான்.
 
ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அனைத்து பணிகளும் இந்திய எல்லைக்குள் நடக்கிறது. எனவே இதில் சீனா தலையிடக்கூடாது என்பது இந்தியாவின் வாதமாக உள்ளது. இதனை சீனாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் எல்லை தாண்டி வந்து இந்தியாவிற்கு தொல்லை கொடுக்கிறது.
 
இந்த தொல்லைக்கு இந்தியா கொடுத்த பதிலடியால் தற்போது சீனா மவுனம் காக்கிறது. கொரோனா விவகாரத்தில் உலக நாடுகளின் நம்பிக்கையை இழந்த சீனா, இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் அடுத்த என்ன செய்யப்போகிறது என்பதை அறிய அனைத்து நாடுகளின் புருவத்தை உயர்த்தி உள்ளன. தற்போதைய நிலையில் சீனா, இந்தியாவுடன் எந்த மோதல் போக்கையும் கடைப்பிடிக்காது என்றே வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் சீனா ஏதாவது சில்மிஷம் செய்தால் அதனை முறியடிக்கும் திறன் இந்தியாவிற்கு இருக்கிறதும் என்றும் அவர்கள் சொல்கின்றனர்.
 
202006190453406932_gun-india._L_styvpf.g
துப்பாக்கி பயன்படுத்தாதது ஏன்?
 
சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நமது ராணுவ வீரர் ஒருவர் கூறியதாவது:-
 
எல்லையில் சீன வீரர்கள் அடிக்கடி அத்துமீறுவது வழக்கம். ஆனால் அப்போது அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் வரிசையில் நின்று, இது எங்கள் பகுதி, உள்ளே வரக்கூடாது என்று தடுப்பார்கள். அப்போது வாக்குவாதம் ஏற்படும். அதன்பின் சீன வீரர்கள் திரும்பி சென்று விடுவார்கள். அன்றைய தினம் கல்வான் பகுதியில் முகாமிட்டுள்ள இருநாட்டு படைகளும் திரும்பி செல்வது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இது போன்று உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் இருநாட்டு வீரர்களும் திரும்பி செல்ல வேண்டும். ஆனால் அன்று சீன வீரர்களில் 10 சதவீதம் பேர் முகாம் அமைத்தனர். உடனே இந்திய வீரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது முதலில் சீன வீரர்கள் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் தொடங்கினர். ஒருவருக்கு ஒருவர் பலமாக கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கினர். அருகில் ஆறு இருந்ததால் சிலர் ஆற்றில் தள்ளிவிடப்பட்டனர். சுமார் 6 மணி மோதலுக்கு பின் அங்கு அமைதி நிலவியது. இருநாட்டு ஒப்பந்தப்படி எல்லைக்கோடு அருகே ஆயுதம் பயன்படுத்தக்கூடாது என்பதால் வீரர்கள் துப்பாக்கி போன்ற ஆயுதத்தை பயன்படுத்தாமல் சண்டையிட்டனர். ஒருவேளை சீன வீரர்கள் ஆத்திரத்தில் துப்பாக்கி எடுத்து இருந்தால், அதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து இருக்கும் என்று அவர் கூறினார்.
 
கல்வான் பள்ளத்தாக்கும், பட்டுச்சாலையும்...
 
பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெரிகட்டும் என்பார்கள். அது போல இந்தியா நமது நாட்டில் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் சீனாவை எரிச்சலைடைய செய்கிறது. மிக முக்கியமாக சீனா ஆக்கிரமித்துள்ள நமது அக்சய் சின் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் மீட்கப்படும் என்று இந்தியாவின் குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. இது சீனாவை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதே போல் காஷ்மீரில் 370-வது பிரிவை நீக்கி லடாக் பகுதியை யூனியன் பிரதேமாக அறிவித்ததை சீனாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 
சீனா தனது பொருட்களை உலக அளவில் எளிதில் சந்தைப்படுத்துவதற்கு வசதியாக பட்டுச்சாலை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது சீன அதிபர் ஜின்பிங்கின் கனவு திட்டமாகும். சீனாவை ஆப்பிரிக்கா, அரேபியா, ஐரோப்பிய நாடுகளுடன் இணைப்பது தான் இந்த வழித்தடம். பண்டைய சீனர்கள் பட்டு வணிகத்திற்காக பயன்படுத்திய பாதைக்கு தற்போது சீனா உயிர் கொடுத்து வருகிறது. திபெத்தில் தொடங்கும் இந்த சாலை கல்வான் பள்ளதாக்கு வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீருக்கு செல்கிறது. எனவே கல்வான் பகுதி சீனாவிற்கு மிகவும் முக்கியமாக தெரிகிறது. எனவே தான் அந்த பகுதியை முழு அளவில் ஆக்கிரமிக்க இந்தியாவுடன் பிரச்சினை செய்கிறது. ஆனால் கல்வான் பகுதி முழுவதும் இந்தியாவிற்கு சொந்தம் என்பதால் அங்கு எந்த பணியும் மேற்கொள்ள கூடாது என்று இந்தியா சொல்கிறது. இந்தியாவின் இந்த தடையால் பட்டுச்சாலை திட்டத்தில் சீனாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
202006190453406932_modi-china._L_styvpf.
 
 
 
சீனாவின் குள்ளநரித்தனமும், இந்தியாவின் ராஜதந்திரமும்...
 
ஆசிய பிராந்தியத்தில் சீனாவுக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. தன்னுடைய வளர்ச்சி மட்டும் போதும், இந்தியா வளரக்கூடாது என்பதில் சீனா முனைப்போடு செயல்படுகிறது. இந்தியாவிற்கு எதிராக தீவிரவாத தாக்குதலில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு சீனா பக்கபலமாக உள்ளது. ஐ.நா. சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு எந்த காரணமுமின்றி தற்போது வரை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
 
காஷ்மீர் மக்கள் சீனா விசா கேட்டு விண்ணப்பித்தால் அவர்களை இந்தியர்கள் என்று சீனா அங்கீகரிக்க மறுக்கிறது. அருணாசல பிரதேசத்திற்கு நமது பிரதமர் சென்றால் கூட அது தவறு என்று அறிக்கை கொடுக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, பட்டுச்சாலை திட்டத்திற்காக சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது.
 
சீனாவின் இது போன்ற குள்ளநரி நடவடிக்கைகளுக்கு இந்தியாவும் ராஜதந்திரமாக தொடர்ந்து பதிலடி தருகிறது. சீனாவின் பிடியில் உள்ள திபெத்தின் சுதந்திரத்திற்காக போராடும் தலாய்லாமை இந்தியா தொடர்ந்து கவுரப்படுத்தி சீனாவுக்கு தலைவலி தருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா மேற்கொள்ளும் சாலை பணிகளுக்கு பதிலடியாக, தென்சீன கடல் பகுதியில் சீனா-வியட்நாம் இடையே பிரச்சினை உள்ள கடல் பகுதியில் இந்தியா தனது எண்ணெய் கிணறுகளை அமைக்கிறது.
 
அருணாசல பிரதேசம் இந்தியாவின் அங்கம் என்பதனை உறுதிப்படுத்தி கொள்ள முன்பு பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தொடர்ந்து அருணாசல பிரதேச மேல்சபையில் இருந்து மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். சீனாவின் எதிரிகளான ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகளுடன் இந்தியா இணக்கமான நட்பை பேணி வருகிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்

சீரியல் மாதிரி போகும் என்று பார்த்தால் குறும்படம் மாதிரி முடிந்திட்டுதே?

  • கருத்துக்கள உறவுகள்

                     மிகவும் சுவாரிசமான கலந்துரையாடல்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.