Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

 

உண்மையில் தெரியாமல்தான் கேட்கின்றேன்

அடிக்கடி படுக்கை  விடயம் படுக்கை  விடயம்  என நீங்கள்  எழுதுவதனால் 

உங்களுக்கு எனது கேள்வி புரியும் என  நினைக்கின்றேன்.

ஒரு தலைவனின்

அல்லது  ஒரு தளபதியின்

அல்லது ஒரு வழிகாட்டியின்

அல்லது  ஒரு விடிவெள்ளியின் 

படுக்கை  விவகாரம் எப்படி இருக்கணும்??

எப்படி இருக்கக்கூடாது?????

அது பார்ப்பவர்களது பார்வையை பொறுத்து ...கட்டிய மனைவி தான் தன்னுடைய கணவன் யாரோடு போனாலும்  கவலைப் பட வேண்டும் ...அங்கிருப்பவர்களே அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அக்கரைப்படவில்லை ...நீங்கள் ஏன் குத்தி முறிகிறீர்கள் ...அவரது அரசியலை விமர்சியுங்கள் . நான் தப்பு சொல்லவில்லை ...அவரது அரசியல் தொடர்பான கருத்துக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் எப்ப பார்த்தாலும் எப்பவோ எடுத்த ஒரு 
போட்டோவை வைத்துக் கொண்டு நக்கலடிப்பதிலேயே காலத்தை கழிக்கிறீர்களே நீங்களா தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப் போறீர்கள்?
 

21 hours ago, Maruthankerny said:

"தனிப்பட்ட விடயம்"
மக்கள் பணத்தை களவெடுத்து கொண்டுபோய் 
விலைமாதர் போன்ற பெண்களுடன் படுப்பது தனிப்பட்ட விடயமா? 

மருதர் ,நீங்கள் கருணாவிடம் காசு கொடுத்து ஏமாந்தீர்களா?
அல்லது யாராவது உங்களிடம் வந்து முறையிட்டார்களா?
புலிகளுக்கும், அவருக்கும் பிரச்சனை வந்ததிற்கு முக்கிய காரணமே கிழக்கின் நிதி நிர்வாகம் வன்னியின் கட்டுப்பாட்டில் இருந்த படியால்.
அவர் கிழக்கு நிதி நிர்வாகத்தை தன்னிடம் தரச் சொல்லி கேட்டது உங்களுக்கு தெரியாதா?

22 hours ago, பையன்26 said:

எம் போராட்ட‌த்தில் இருந்த‌ போது ச‌மாதான‌ கால‌த்தில் ( த‌லைவ‌ரின் அம்மா அப்பாவின் காலில் விழுந்து ஆசிர்வாத‌ம் பெறுவாராம் , அதே த‌லைவ‌ரின் அப்பா அம்மா இற‌ந்த‌ போது எட்டியும் பார்க்காத‌ ஈன‌ பிற‌வி இவ‌ன் )

எம் போராட்ட‌த்தில் த‌லைவ‌ர் பொட்டு அம்மான் , ம‌ற்றும் ப‌ல‌ த‌ள‌ப‌திக‌ள் அவ‌ர்க‌ளின் ம‌னைவிக‌ளை த‌விற‌ வேறு பெண்க‌ளை தொட்ட‌து இல்லை ,

எம் போராட்ட‌ விதிமுறைக‌ள்

ம‌து அருந்த‌க் கூடாது
புகை பிடிக்க‌ கூடாது

கும்மான் போராட்ட‌த்தில் இருந்த‌ கால‌த்தில் ஒழுங்காய் இருந்து இருப்பானோ என்று நினைக்கும் போது ப‌ல‌ ச‌ந்தேக‌ங்க‌ள் வ‌ருது /


கும்மான் என்ற‌ கோமாளியை ப‌ற்றி ர‌திய‌க்கா யாழில் எழுதி த‌னுக்கு இருக்கும் ம‌ரியாதைய‌ தானே தாழ்த்தி கொள்ளுகிறா  , 

எவ‌ள‌வு அசிங்க‌ங்க‌ள் க‌ருணாவை ப‌ற்றி ப‌ல‌ர் எழுதியும் க‌ருணாவை காரி துப்பியும் , ர‌திய‌க்கா போன்ற‌ ஒரு சில‌ர் அண்ண‌ன் என்று எழுதும் போது பார்க்கிற‌வை நினைப்பின‌ம் சாடிக்கு ஏற்ற‌ மூடி போல‌ ,

இசைக்க‌லைஞ‌ன் அண்ணா போன்ற‌ ஒழுக்க‌மான‌வ‌ர்க‌ளை ம‌ச்சான் என்று அழைத்து விட்டு அதே வாயால் , ஒரு கோமாளிய‌ போய் அண்ண‌ன் என்று சொல்லுவ‌து வேடிக்கையாய் இருக்கு ,

க‌ருணா எம் போராட்ட‌த்தில் ஒரு ஆணியும் புடுங்க‌ல‌ , த‌லைவ‌ர் க‌ருணாவை த‌லைக்கு மேல‌ தூக்கி வைத்து அழ‌கு பார்த்த‌து தான் த‌லைவ‌ர் செய்த‌ மிக‌ப் பெரிய‌ த‌வ‌று ,

பொட்டு அம்மானின் சொல்லை  த‌லைவ‌ர் கேட்டு இருந்தா 2004 க‌ருணாவுக்கு ச‌ங்கு ஊதி இருக்க‌லாம் , அவ‌ன் துரோக‌த்தின் உச்சிக்கு போன‌ பிற‌க்கு த‌லைவ‌ர் வ‌ன்னிக்கு வ‌ர‌ சொல்லி அழைக்கிறார் ,  

க‌வுசெல்லிய‌ன் அண்ணா இன்னும் ப‌ல‌ருட‌ன் தான் இவ‌ன் த‌ப்பிக்க‌ பார்த்த‌வ‌ன் , க‌வுசெல்லிய‌ன் அண்ணா எம் போராட்ட‌த்த‌ நேசித்த‌ ப‌டியால் க‌ருணாவுக்கு ஆமாம் போட்டு விட்டு வ‌ன்னியில் வ‌ந்து சொன்ன‌வ‌ர் க‌ருணா இப்ப‌டி ச‌தி செய‌லில் இற‌ங்கி விட்டான் ஏதாவ‌து சீக்கிர‌ம் செய்து ஆக‌னும் என்று , 

க‌ட‌சியில் சொர்ன‌ம் அண்ணா ர‌மேஸ் அண்ணா ர‌ம‌ண‌ன் அண்ணா க‌ருணாவை ம‌ட‌க்கி பிடிக்கும் ந‌ட‌வ‌டிக்கையில் இற‌ங்கின‌வை , க‌ம‌வெறிய‌ன் த‌ப்பிச்சிட்டான் ,


2004ம் ஆண்டுக்கு பிற‌க்கு க‌ருணாவின் வாழ்க்கை ஆபாச‌ பெண்க‌ளுட‌ன் ,

தூ தூ தூ , 

இவ‌ன் எம் போராட்ட‌ ர‌க‌சிய‌ங்க‌ள எல்லாம் சிங்க‌ள‌வ‌னுக்கு சொல்லிக் கொடுத்த‌ ப‌டியால் தான் சிங்க‌ள‌மும் இந்திய‌மும் எம்ம‌வ‌ர்க‌ளை ஈசியா அழிக்க‌ முடிந்த‌து , 

பாம்பை க‌ண்டால் ப‌டையே ந‌டுங்கும் ,

( க‌ரும்புலிக‌ளைக் க‌ண்டால் இந்திய‌ன் சிங்க‌ள‌ம் இர‌ண்டுமே ந‌டுங்கும் )

எம்ம‌வ‌ர்க‌ளுக்கு வ‌ந்த‌ அனைத்து ஆயுத‌ க‌ப்ப‌லும் வ‌ன்னிக்கு வ‌ந்து இருக்க‌னும் , சிங்க‌ள‌வ‌னுக்கு இன்னும் பேர் இழ‌ப்பை குடுத்து இருக்க‌லாம் )


த‌டை செய்யப் ப‌ட்ட‌ குண்டுக‌ள் தேவைப் ப‌ட்டு இருக்கு எம்ம‌வ‌ர்க‌ளை அழிக்க‌ , அதே த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ ஆயுத‌ம் எம்ம‌வ‌ர் கையில் இருந்து இருக்க‌னும் , வ‌ன்னியில் சின்ன‌ அங்குல‌த்த‌ கூட‌ பிடித்து இருக்க‌ மாட்டார்க‌ள் சொறில‌ங்கா ப‌டையும் குண்டியா ப‌டையும் 

நீங்கள் சொல்ல வாறது விளங்குது ...உங்களை மாதிரி தேசியத்தை குத்தகைக்கு  எடுத்தவர்கள் இப்படித் தான் என்று தெரிந்தபடியால் எனக்கு ஏமாற்றமில்லை 
 

  • Replies 225
  • Views 25.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

 

தேவையில்லாமல் இடையில் புகவில்லை. தேவையான படியால் தான் இடையில் புகுந்தேன். நீங்கள் களவிதிக்கு மாறாக எழுதினால் கருத்து வெட்டப்படும். மற்றவர்களுக்கு சொல்லி நான் கருத்துக்களை வெட்ட நீங்கள் ஒன்றும் ஆட்களை பிடித்து தின்னும் ஆளில்லை தானே. ஆகவே யாரிடமும் சொல்லி வெட்ட வேண்டிய அவசியம் இல்லை.

அவர் வெல்லுவார் என்று எங்கும் நான் சொல்லவில்லை ....வென்றால் சந்தோசம்😁 ஆனால் காலம் முழுக்க அடிமையாய் இருக்க வேண்டும் என்பது அந்த மக்களது விதி என்றால் யாரால் மாத்தேழும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

அது பார்ப்பவர்களது பார்வையை பொறுத்து ...கட்டிய மனைவி தான் தன்னுடைய கணவன் யாரோடு போனாலும்  கவலைப் பட வேண்டும் ...அங்கிருப்பவர்களே அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அக்கரைப்படவில்லை ...நீங்கள் ஏன் குத்தி முறிகிறீர்கள் ...அவரது அரசியலை விமர்சியுங்கள் . நான் தப்பு சொல்லவில்லை ...அவரது அரசியல் தொடர்பான கருத்துக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் எப்ப பார்த்தாலும் எப்பவோ எடுத்த ஒரு 
போட்டோவை வைத்துக் கொண்டு நக்கலடிப்பதிலேயே காலத்தை கழிக்கிறீர்களே நீங்களா தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப் போறீர்கள்?
 

மருதர் ,நீங்கள் கருணாவிடம் காசு கொடுத்து ஏமாந்தீர்களா?
அல்லது யாராவது உங்களிடம் வந்து முறையிட்டார்களா?
புலிகளுக்கும், அவருக்கும் பிரச்சனை வந்ததிற்கு முக்கிய காரணமே கிழக்கின் நிதி நிர்வாகம் வன்னியின் கட்டுப்பாட்டில் இருந்த படியால்.
அவர் கிழக்கு நிதி நிர்வாகத்தை தன்னிடம் தரச் சொல்லி கேட்டது உங்களுக்கு தெரியாதா?

நீங்கள் சொல்ல வாறது விளங்குது ...உங்களை மாதிரி தேசியத்தை குத்தகைக்கு  எடுத்தவர்கள் இப்படித் தான் என்று தெரிந்தபடியால் எனக்கு ஏமாற்றமில்லை 
 

அமைதி சகோதரி. நேற்று ஒரு பாடகர் இதையே செய்தபோது என்னை முடக்கியது இன்னொரு ரதியோ? அவரின் மகன் எங்கள் வீட்டில் வந்து தங்கிப்போகிறார். தகப்பன் என்றால் அவருக்கு உயிர் உங்களுக்கு ஏன் கொதித்தது? நீங்கள் எங்கிருந்து விமர்சிக்கிறீர்கள்??? எனக்கு நல்லா வேணும்?? என்னை நான் மாற்றிக்கொள்ள இனியாவது முயலணும்??? 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வல்வை சகாறா said:

தேர்தல் காலம் தெளிவாகவே சிங்களம் தமிழர் பலத்தை(?) சிதைக்க எத்தனிக்கிறது  ஒரு வீர வரலாறு காணாமல் ஆக்கப்பட்டு நிகழ்காலத்தில் அங்கலாய்த்துக் கிடப்பதிலேயே கழிகிறது.  கலங்கரைகள்  தெரியாத இடத்தில் கரை ஏறும்  சாத்தியம்  இல்லை உறுதியான வழி காட்டிகளை உருவாக்க  கூடிய நிலையிலோ அல்லது உருவாகக் கூடிய நிலையிலோ நாம் இருக்கிறோமா என்பது கேள்விக் குறி  இங்குநாம்  விவாதிக்கும் பாணி எனக்கு கருணாாவைப்  பற்றி அதிகம் தெரியும்.  துரோகி , ஒழுக்கம் கெட்டவன்  மக்கள் பணத்தை  கொள்ளை  அடித்தவன் என்ற கருத்துகளுக்கு அப்பால் நகர முடியாத சுழிக்குள் சிக்கி இன்னும் மீளமுடியாத பலவீனத்தை  வெளிப்படுத்துவதைத்  தவிர நம்மால் வேறெதனையும்   செய்ய முடியாது. புதிய வரலாற்றை கட்டி எழுப்ப  எந்த கல்லை எவர் சுமக்கலாம்? மன்னிக்கவும் எந்த கல்லை நான் சுமக்கிறேன்  என்று  வழிகாட்டக் கூடாதா?

எங்கள் இனத்தை காட்டிக் கொடுத்தவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாட சொல்கின்றீர்களா???

எல்லாத்தையும் மறந்து.

Quote" இனத்தை காட்டிக் கொடுத்தவனை பிறப்பில் சந்தோகமென உரக்க கூறு"

 

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை கட்சியிலிருந்து நீக்குங்கள்

இராணுவ வீரர்களை கொன்றதாக கூறியுள்ள கருணாவின் உரை பாரதூமானதெனத் தெரிவித்த  ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம்,  கருணாவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்  கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று முன்தினம்  (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

கருணா அம்மான் பாரதூரமான உரையொன்றை நிகழ்த்தியுள்ளார்.  மொட்டுக் கட்சியின் பிரதான பொறுப்பை வகிப்பவர் என்ற வகையில் இந்த உரை தொடர்பில்,  நாட்டு மக்கள் அவதானம் செலுத்த வேண்டும். இராணுவத்தை கொன்றவர் மொட்டுக் கட்சியில் அங்கம் வகிப்பதும் பாரதூரமானதெது.   இது குறித்து  ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியை வெளியிடுவதாக, அகிலவிராஜ் இதன்போது  தெரிவித்தார்.

மேலும், அரசாங்கமும் இதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட  அவர்,  கருணாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றா

http://www.tamilmirror.lk/செய்திகள்/கரணவ-கடசயலரநத-நககஙகள/175-252248

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

புலிகளுக்கும், அவருக்கும் பிரச்சனை வந்ததிற்கு முக்கிய காரணமே கிழக்கின் நிதி நிர்வாகம் வன்னியின் கட்டுப்பாட்டில் இருந்த படியால்.

முரளிதரன் சொல்லக் கேள்விப்படவில்லை அவர் வேறு காரணம் சொல்கிறார்.  காட்டிக்கொடுப்புகளெல்லாம்  நிதிக்காகவே. 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பால் வடியும் முகத்தை பாருங்கள்.

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2020 at 03:48, பெருமாள் said:

நான் கொரோனாவை விட பயங்கரமானவன்’: அம்மான் அதகளம்!

இதை கேட்டு கொர்னோவுக்கு  கோபம் வரப்போகுது .

7 hours ago, குமாரசாமி said:

பால் வடியும் முகத்தை பாருங்கள்.

எனக்கு கொமெடி  பீஸ் தான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சிரிக்காமல் இருக்கிறதுக்கும் ஒரு கெட்டித்தனம் வேணும்.😎

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி இப்ப எங்கள் தலைமை எது.நாம யாருக்கு ஓட்டு போட வேணும்.சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, பெருமாள் said:

இதை கேட்டு கொர்னோவுக்கு  கோபம் வரப்போகுது .

எனக்கு கொமெடி  பீஸ் தான் .

ஓம் ஓம்இந்த  கொமடி பீஸ் தான் புலிகளையே சுழித்திட்டு வந்தது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

 

ஓம் ஓம்இந்த  கொமடி பீஸ் தான் புலிகளையே சுழித்திட்டு வந்தது 

முஸ்லீம் பெண்ணை போல் முக்காடு போட்டு தப்பியது எல்லாம் உங்களுக்கு பெருமையாய் இருக்கு .

தவளை தன்  வாயால் கெடுவது போல் உளறி கொட்டி இனியென்ன சைக்கிளுக்கு பஞ்சர் ஓட்ட பழகி  வைத்திருப்பது எதுக்கும் நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

சரியான காச்சல்... வர ஏலாம  கிடக்குது எண்டு  CID க்கு அம்மான், இண்டைக்கு குளிசை குடுத்துப் போட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

சரியான காச்சல்... வர ஏலாம  கிடக்குது எண்டு  CID க்கு அம்மான், இண்டைக்கு குளிசை குடுத்துப் போட்டார்.

எல்லாம் வாய்ச் சவடால் தான்...😹😹😹😾

 

  • கருத்துக்கள உறவுகள்


அம்மானின் அலம்பறை  குறித்து சரத் பொன்சேகா...

ஒரு இரவில், 2000, 3000 பேரை, கருணா ஒருவராக கொன்று முடிப்பதென்பது ஒரு நம்புகிற விசயமா? 

மேலும் ஆனையிறவில் அந்தளவு இழப்புக்கள் எமக்கு உண்டாகவில்லை என்கிறார்.

இவர் ஒரு போதுமே போர்க்களத்தில் யாரையுமே கொல்லவில்லை என்பதே உண்மை.

தன்னிடம் சரணடைந்த 600 போலீசுக்காரர்களையும், முல்லைத்தீவு முகாம் தாக்குதலில், சரணடைந்த 1200 பேரையும் ஈவு இரக்கமின்றி கொன்ற மாவீரன் தான் கருணா என்று அம்மானை தூக்கி, குப்பையில் போட்டு விட்டு போய் விட்டார் பொன்சேகா.  

கடந்த மாதம், இறுதி வரையில் சரணடையாமல், போர்க்களத்தில் போராடி வீழ்ந்த பிரபாகரனுக்கு என்றும் எனது மரியாதை, கவுரவம் இருக்கும் என்று சொல்லிய அதே போன்சேகா, அம்மானின் பேச்சு, வாக்குகளுக்கான வெத்துவேட்டுகள் என்று சொல்லி உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:


அம்மானின் அலம்பறை  குறித்து சரத் பொன்சேகா...

ஒரு இரவில், 2000, 3000 பேரை, கருணா ஒருவராக கொன்று முடிப்பதென்பது ஒரு நம்புகிற விசயமா? 

மேலும் ஆனையிறவில் அந்தளவு இழப்புக்கள் எமக்கு உண்டாகவில்லை என்கிறார்.

இவர் ஒரு போதுமே போர்க்களத்தில் யாரையுமே கொல்லவில்லை என்பதே உண்மை.

தன்னிடம் சரணடைந்த 600 போலீசுக்காரர்களையும், முல்லைத்தீவு முகாம் தாக்குதலில், சரணடைந்த 1200 பேரையும் ஈவு இரக்கமின்றி கொன்ற மாவீரன் தான் கருணா என்று அம்மானை தூக்கி, குப்பையில் போட்டு விட்டு போய் விட்டார் பொன்சேகா.  

கடந்த மாதம், இறுதி வரையில் சரணடையாமல், போர்க்களத்தில் போராடி வீழ்ந்த பிரபாகரனுக்கு என்றும் எனது மரியாதை, கவுரவம் இருக்கும் என்று சொல்லிய அதே போன்சேகா, அம்மானின் பேச்சு, வாக்குகளுக்கான வெத்துவேட்டுகள் என்று சொல்லி உள்ளார்.

என்னது முல்லைத்தீவு முகாம் தாக்குதலில் கும்மானா....

அட போங்கடா நான் இந்த ஊரை விட்டே...... போறன்...

83-E7-EDE4-3-EC6-4395-A2-A7-D9-C1457-F6-

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

என்னது முல்லைத்தீவு முகாம் தாக்குதலில் கும்மானா....

அட போங்கடா நான் இந்த ஊரை விட்டே...... போறன்...

83-E7-EDE4-3-EC6-4395-A2-A7-D9-C1457-F6-

Responding to the claim, Field Marshal Fonseka said it was true that Karuna killed 1,200 army personnel, who surrendered in Mullaitivu and another 600 police officers in the East.

While saying that he must be put behind bars over the statement, the Field Marshal proceeded to say that Karuna Amman could even be produced before a Court Martial. 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

Responding to the claim, Field Marshal Fonseka said it was true that Karuna killed 1,200 army personnel, who surrendered in Mullaitivu and another 600 police officers in the East.

While saying that he must be put behind bars over the statement, the Field Marshal proceeded to say that Karuna Amman could even be produced before a Court Martial. 

 

நாதம்ஸ் நான் உங்களை சொல்லவில்லை. சிங்களவர்கள் எல்லாரும் திட்டம் போட்டு நடக்கிறார்கள். கடைசியில் கோட்டையில் சண்டை பிடித்ததும் கும்மான் என்பார்கள்.

யாழில் உள்ள, தாங்கள் முன்னாள் புலிகள் என்று வெளிப்படையாக எழுதுபவர்கள் தூங்குகிறார்களா....?

  • கருத்துக்கள உறவுகள்

கருணா எந்தவோர் இனத்துக்கும் அவசியமில்லாதவர்

கருணா அம்மான் இராணுவத்தினரை கொன்றதாக நிகழ்த்தியிருந்த உரை மட்டமானதென சாடும் அமைச்சர் விமல் வீரவன்ச, தான் செய்த கொலைகளை சொல்லிப் பெருமைப்படும் ஒருவர் எந்தவோர் இனத்துக்கும் அவசியமற்றவர் என்றும் சாடினார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், 

எந்தவொரு பயங்கராவத அமைப்பிலிருந்த நபருக்கும் அந்த அமைப்பிலிருந்து விலகியிருக்கவும்,  பயங்கராவாத கொள்கைகளை கைவிட்டுச் செயற்படவும் அதிகாரம் உள்ளதெனவும் தெரிவித்தார். 

ஜே.வி.பியின்  செயலாளரான டில்வின் சில்வா தனது தோள் மீது ஆயுதங்களை சுமந்து சென்ற போதே வாத்துவ ரயில் நிலையத்தில் வைத்து இராணுத்தினராக பிடிக்கப்பட்டார் என்றும், அதனால் தற்போதும் டில்வின் சில்வாவுக்கு அரசியல் செய்ய அதிகாரமில்லை எனக் கூறமுடியாது என்றார்.

ஆனால், தாம் பயங்கரவாத அமைப்புகளில் இருந்த காலத்தில் செய்த வீரச் செயல்களை மீண்டும் பெருமையாக கூறிக்கொள்ள முயற்சிப்பது  ஏற்புடையதைல்லவென தெரிவித்த அவர்,  கருணா அம்மான் தற்பொதைய சந்தர்ப்பத்தில் நிகழ்த்தியுள்ள உரை மட்டமானதெனவும் சாடினார்.

தான் புலிகள் அமைப்பில் இருந்தபோது எத்தனை இராணுவத்தினரை கொன்றார் என்பதை பெருமையாக கூறிக்கொள்ளும் கருணா அம்மானை இந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளபோவதில்லை என்றும் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கரண-எநதவர-இனததககம-அவசயமலலதவர/175-252319

  • கருத்துக்கள உறவுகள்

karuna-3.jpg

கருணா அம்மானிடம் விசாரணைகளை மேற்கொள்ள 02 குழுக்கள் அம்பாறை, மட்டக்களப்புக்கு விரைந்தன

UPDATE 02 – கருணா அம்மானிடம் விசாரணைகளை மேற்கொள்ள 02 குழுக்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்கு சென்றுள்ளன என பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதி அமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் உடல்நலக் குறைவால் சி.ஐ.டி.யில் முன்னிலையாக முடியாதுள்ளதாக தனது சட்டத்தரணியின் ஊடாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் குணமடைந்த பின்னர் தனிப்பட்ட தினத்தில் சி.ஐ.டி.யில் முன்னிலையாகுமாறு கருணா அம்மானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


UPDATE 01 – முன்னாள் பிரதி அமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் உடல்நலக் குறைவால் சி.ஐ.டி.யில் முன்னிலையாக முடியாதுள்ளதாக தனது சட்டத்தரணியின் ஊடாக அறிவித்துள்ளார்.

ஆணையிரவு முகாமினை ஒரே இரவில் தொடர் தாக்குதல்களினால் கைப்பற்றிய போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை கொன்று குவித்தோம் என அண்மையில் கருணா அம்மான் தெரிவித்த கருத்தை அடுத்து குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்தக் கருத்து பாரதூரமானது என தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியது மாத்திரமின்றி வழக்குத் தாக்கல் செய்யுமாறும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரினர்.

இதற்கமையவே அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே தனது சட்டத்தரணியின் ஊடாக மேற்குறிப்பிட்ட காரணத்தை தெரிவித்து தற்சமயம் சமூகமளிக்க முடியாது என கருணா அம்மான் அறிவித்துள்ளார்.

http://athavannews.com/1117892-2/

  • கருத்துக்கள உறவுகள்
On 22/6/2020 at 14:10, ரதி said:


 

மருதர் ,நீங்கள் கருணாவிடம் காசு கொடுத்து ஏமாந்தீர்களா?
அல்லது யாராவது உங்களிடம் வந்து முறையிட்டார்களா?
புலிகளுக்கும், அவருக்கும் பிரச்சனை வந்ததிற்கு முக்கிய காரணமே கிழக்கின் நிதி நிர்வாகம் வன்னியின் கட்டுப்பாட்டில் இருந்த படியால்.
அவர் கிழக்கு நிதி நிர்வாகத்தை தன்னிடம் தரச் சொல்லி கேட்டது உங்களுக்கு தெரியாதா?


 

கொம்மான் வைத்திருக்கும் பணமெல்லாம் 
கொழும்பில் கோப்பி கொட்டை வியாபாரம் பண்ணி சேர்த்த காசா?
கொஞ்சமும் கூச்சம் இல்லமால் இப்படி முழு பூசணிக்கையையே 
புதைக்கிறீரங்களே? 

இயக்கத்துக்கு காசு கொடுத்த ஒவ்வரு தமிழனும் கருணாவால் ஏமாற்றப்பட்டவர்கள்தான் 
இதில் நான் நீங்கள் என்று தனி தனியாக இனி பிரிக்க முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

முன்னாள் பிரதி அமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் உடல்நலக் குறைவால் சி.ஐ.டி.யில் முன்னிலையாக முடியாதுள்ளதாக தனது சட்டத்தரணியின் ஊடாக அறிவித்துள்ளார்.

இராணுவத்தை கண்டு கொரானா பயப்படுது சரி 
கோரானவை விட பயங்கரமான கும்மான் ஏன் நடுங்கிறார், யோவ் கும்மான் நீர் ஒரு வெத்து வேட்டு 
எஜமான்கள் கிள்ளி போடுறதை அப்பிடியே வழிச்சு நக்கினமா வாலாட்டினமா என்று இருக்கோணும்,
இடைக்கிடையே குரைக்கலாம் ஆனால் எஜமான்கள் நித்திரையை குழப்பாமல் குரைக்கோணும், குழப்பினால் இப்படித்தான் CID ஐ அனுப்பி BPஐ அட்ஜெஸ்ட் செய்வினம்     

  • கருத்துக்கள உறவுகள்

சிஐடியில் ஆஜரானார் கருணா!

109748355_kamalgunarathnaandkaruna-itijtwtterphoto.jpg?189db0&189db0

 

போரில் இராணுவ வீரர்களை கொன்றமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க கருணா எனும் வி.முரளிதரன் இன்று (25) சற்றுமுன் சிஐடியில் ஆஜராகியுள்ளார்.

‘புலிகளுடன் இருந்த போது ஆணையிறவு மோதலில் 3000 இராணுவ வீரர்களை கொன்றதாக அண்மையில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.’

இந்நிலையில் அது குறித்து உடனடியாக விசாரணை செய்ய சிஐடிக்கு பதில் பொலிஸ்மா அதிபர் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/சிஐடியில்-ஆஜரானார்-கருணா/

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரின் இறுதிநாட்களில் விநாயகமூர்த்தி முரளீதரன் தி கார்டியன் எனும் செய்தித்தாளுக்குப் பேட்டியளித்திருந்தார். அதில் தலைவரையும், போராட்டத்தையும் பற்றி அவர் கூறிய விடயங்கள் காணக்கிடைத்தது. அதிலிருந்து சில கருத்துக்கள்.

"புலிகளின் கதை முடிந்து விட்டது, அவர்களால் இனி எழவே முடியாது".

"இன்னும் ஒரு 1000 அல்லது 1500 பேர்தான் அவர்களில் இருக்கிறார்கள். குறைந்தது 65,000 ராணுவத்தினரால் அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களால் தப்பமுடியாது. சண்டை கடுமையாக இருக்கும், வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி என்று நடக்கும்".

"பிரபாகரன் ஒரு பைத்தியக்காரன். அவருக்கு தான் அரசனாக வரவேண்டும் என்று ஆசை இருந்தது. அதனால் கொடூரமான சர்வாதிகாரியாக அவர் நடந்துகொண்டார். சிங்களவர்களை போரில் உங்களால் வெல்லமுடியாது என்று நான் அவருக்கு அறிவுரை கூறினேன், ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 22 வருடகால எனது ராணுவ அனுபவத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் விலகிவிட்டேன்". 

"இடங்களைத் தக்கவைத்துக்கொண்டு போராடலாம் என்று தற்கொலைத்தனமான முடிவினை அவர் எடுத்தார். அவர்களின் தலைநகரான கிளிநொசி விழுந்தபோதே அது தவறான முடிவென்று அவருக்குப் புரிந்திருக்கவேண்டும்.
 ஆனால், மக்கள் தம்முடன் இருந்தால் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தலாம் என்று அவர் எண்ணினார். அதனால் இன்று ஒரு லட்சம் மக்கள் அவருடைய மூட்டாள்த்தனமான எண்ணத்தினால் அகப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவரோ போராட்டத்தைத் தொடர்ந்தும் கொண்டுசெல்லும் நோக்கில் காட்டிற்குள் ஒளிந்துவிட்டார்".

"நான் மகிந்தவிடம் கடலில் இருந்தோ ஆகாயத்தில் இருந்தோ தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். மக்கள் அதிகமாகக் கொல்லப்படலாம் என்று நான் கவலைப்பட்டதுபோலவே மகிந்தவும் கவலைப்பட்டார், அதனாலேயே கடல் மற்றும் வான் தாக்குதல்களை எனது சொற்படி அவர் நிறுத்தினார்". 

"புலிகளின் படுதோல்விக்குக் காரணம் அவர்களது கையடக்கத் தொலைபேசிகள்தான். அவர்களது இருப்பிடத்தை அறிந்துகொண்டு ராணுவத்தின் கொமாண்டோப் படையினர் அவர்களை ஒவ்வொருவராக இலக்குவைத்துத் தாக்கினர். அவர்களால் மீண்டு எழ முடியாது, அவர்களது தொலைத் தொடர்பு வலையை நாம் உடைத்துவிட்டோம், அவர்களின் கதை முடிந்துவிட்டது".

"சரத் பொன்சேக்கா மீது நாம் தாக்குதல் நடத்தினோம். ஆனால் அவர் தப்பிவிட்டார். ஆனால் ஒரு கேர்ணல் தர அதிகாரியும் சில ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டார்கள். ஆனால், நாம் இப்போது அடிக்கடி சந்தித்து எமது பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்கிறோம்.நாங்கள் ஒருவரில் ஒருவர் அதிக மரியாதை வைத்திருக்கிறோம். அவர் ஒரு வெற்றிவீரன், அதுபோல நானும் வெற்றி வீரனே".

" எமது மக்களைக் காக்கலாம் என்று எண்ணித்தான் போராட்டத்தில் இணைந்தேன், ஆனால் அது மிகத்தவறான பாதையென்பது இப்போது தெரிகிறது. 2003 ஆம் ஆண்டு நோர்வேயில் சிங்கள அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுக்களில் நான் ஈடுபட்டு கையொப்பம் இட்டதனாலேயே பிரபாகரன் என்னை தமிழினத் துரோகி என்று அழைத்தார். அதிலிருந்து நான் பிரிந்துவிட்டேன்".

சில நேரங்களில் சில மனிதர்கள்.
 

https://www.theguardian.com/world/2009/mar/21/tamil-tigers-sri-lanka-karuna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.