Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாவால் புலிகள் தோற்கவில்லை! – பொன்சேகா

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

1}தமிழரும் ,முஸ்லீம்களும் இணைந்து அரசியலா ?

ஒற்றுமையாக இருந்தால் நல்ல விடிவு இருவருக்கும் 

  • Replies 138
  • Views 13.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரஞ்சித் said:

ஒரு சின்னத் தகவல்.

1) இந்தக் குண்டுவெடிப்பு நடந்த அன்று குறைந்த  மூன்று  முறையாவது இதுபற்றிய எச்சரிக்கையினை இலங்கைக்கு வழங்கியதே இந்திய உளவுத்துறைதான். தானே செய்யப்போகும் தாக்குதல்பற்றி தானே சொல்லவேண்டிய தேவையென்ன?

 

இவர்கள் யார்? உங்களிடம் ஆதாரம் இருக்கின்றதா?

2)பரந்தன் ராஜனைச் சொல்கிறீர்களா? அவர் கருணா பிரிந்தவுடனேயே இலங்கைவந்து இலங்கையின் ராணுவ புலநாய்வுப் பிரிவுடனல்லவா இயங்கிவருகிறார்? ரோவின் ஆள் என்றால், அவரை இலங்கையரசு சேர்த்துவைத்திருப்பது எங்கனம்?

1) குண்டு வெடித்த அடுத்த நொடியே சுயமாக சிந்திக்கத் தெரிந்த அனைத்து மனிதர்களுக்கும் ஒன்று மிகத் தெளிவாகப் புரிந்தது (உணர்ந்து கொண்டது). அது - இந்தக் குண்டுவெடிப்பைச் செய்ததி மேற்கின் அனுசரணையுடன் இந்திய RAW உளவுப் பிரிவுதான் என்பது. 

2) பரந்தன் இராஜன் இருப்பது இலங்கையிலல்ல. இந்தியாவில். இதனை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆதாரங்கள் என்னிடம் உண்டு. அவரின் கீழ் முன்னாள் ஆயுததாரிகளை RAW ஒன்றிணைக்கிறது. உது 100%மும் உண்மை. இதனை ஏற்கனவே பலதடவை கூறிவிட்டேன். . இலங்கை அரசு தனது சொற்படி கேட்டு நடக்காவிட்டால் இலங்கையில் மீண்டுமொரு இரத்தக் களரி நிச்சயம். .  RAWவின் கைத்தடி பரந்தன் ராஜன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

கட்டாயம் காசு சேர்க்க ஒரு கூட்டம் குஷியாக வெளிக்கிடும்.ஆனால் சனம் இப்போது படு உஷார். ஆயுதபோராட்டத்தினால் பட்டது போதும் என்ற தெளிவு உள்ளது.

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் ஆனால் அங்கு முரளிதரனின் தடிக்குத்தான் பயம் இருக்கு என்கிறார்கள். அதைத்தான் நான் எழுதினேன் ஆனால் இங்கு என்னைப் பற்றி ஒரு விம்பத்தை வைத்து அதை அவர்களே மெருகூட்ட கற்பனையை வளர்த்து எழுதுகிறார்கள். நம்மால் அவர்களது கற்பனை மற்றும் எழுதும் திறன் வளர்ச்சி அடைந்தால் சந்தோசம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

கச்சதீவில் சீனாவுக்கு தளத்தையும், ஹம்பாந்தோட்டையில் துறைமுகத்தையும் இலங்கை அரசு கொடுத்திருக்கிறது. 45 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சீன - இந்திய எல்லையில் யுத்தம் ஆரம்பமாகி இருக்கிறது. ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகளில் முக்கியமான புலஸ்தினி ராஜேந்திரன் “றோ” வின் உளவாளி என்று இலங்கை அரசு அடையாளம் கண்டுள்ளது. தாக்குதலின் பின் புலஸ்தினி வெற்றிகரமாக தப்பி இந்தியா சென்றுவிட்டார்.

 

8 hours ago, ரஞ்சித் said:

ஒரு சின்னத் தகவல். இந்தக் குண்டுவெடிப்பு நடந்த அன்று குறைந்த  மூன்று  முறையாவது இதுபற்றிய எச்சரிக்கையினை இலங்கைக்கு வழங்கியதே இந்திய உளவுத்துறைதான். தானே செய்யப்போகும் தாக்குதல்பற்றி தானே சொல்லவேண்டிய தேவையென்ன?

றோவின் நோக்கம் அப்பாவி மக்களை கொல்வதல்ல: எங்கள் சொல் கேளாவிட்டால், எங்களால் உங்களை அழிக்க முடியும் என்று மிரட்டுவது. அதற்கு அப்பாவி மக்கள் பலியாவது தேவையானால், றோவுக்கு அது பொருட்டல்ல. மிரட்டல் தெளிவாக செய்யப்பட்டுள்ளது.

8 hours ago, கற்பகதரு said:

விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சியில் றோவின் முன்னாள் ஆயுததாரிகள் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

 

8 hours ago, ரஞ்சித் said:

இவர்கள் யார்? உங்களிடம் ஆதாரம் இருக்கின்றதா?

சிவாஜிலிங்கம் - ரெலோ, சுரேஷ் பிரேமச்சந்திரன் - ஈ.பி.ஆர்.எல்.எப். ஆதாரம்: ரெலோவை அழித்தபின், ஈ.பி.ஆர்.எல்.எப். யை அழிக்குமுன் விடுதலைப்புலிகள் சந்தி - சந்தியாக கூட்டம் வைத்து தந்த விளக்கம்.

7 hours ago, ரஞ்சித் said:

ஆக, ரோவின் சூழ்ச்சிக்குத் தமிழர் பலியாகி, தமக்கெதிராகப் போராடியதால்த்தான் தமிழரை சிங்களவர்கள் அழிக்கவேண்டி வந்ததென்று சொல்கிறீர்கள். ஆயுதப்போராட்டத்திற்கு முந்திய தமிழர் மீதான தாக்குதல்கள்பற்றி மிக வசதியாக மறந்துவிட்டீர்கள்.

சிங்களவரை கட்டுக்குள் வைத்திருப்பதுதான் நோக்கமென்றால், அதை நேரே செய்யாமல், ஈழத்தமிழரைக் கொன்று அதைச் செய்யவேண்டிய தேவை என்ன? ஈழத்தமிழரை அழித்ததன்மூலம் இலங்கையைச் சீனாவிடமிருந்து இந்தியாவால் பிரிக்க முடிந்ததா? இல்லையே, இன்னும் இன்னும் அல்லவா உள்ளே நுழைய விட்டிருக்கிறார்கள்?

 சிங்களவரை றோ நேரடியாக படை அனுப்பி அழிக்க முடியாது. சர்தேச சட்டங்கள் ஒருபுறம், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும், இந்தியாவை கபளீகரம் செய்ய வெளிப்படையான சந்தர்ப்பம் கொடுப்பது மறுபுறம் என்று அது அமையும். இது எனது விளக்கம் அல்ல, விடுதலைப்புலிகள், 84 - 85ல் தந்த விளக்கம். தமிழர் இந்தியாவிலும்  இருப்பதை பயன்படுத்தி, இனக்கலவரங்களை காரணம் காட்டி, தமிழரை உசுப்பேத்தி இந்தியா, தமிழரின் அப்பாவித்தனத்தையும், இயலாமையையும் பயன்படுத்தி கொண்டது. ரஞ்சித், இதை சொல்வதால் கோபம் கொள்ளாதீர்கள், இந்த தகவல்கள், ஈழத்தமிழர் பிரச்சினையில் அரிச்சுவடி. பழைய விடுதலைப்புலிகளின் வெளியீடுகளை நீங்கள் படிப்பது பயன்தரும்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

ஆனால் 1980 இலிருந்து 2009 வரை எல்லாதமிழர்களையும் ஒன்றாக வழிநடத்த ஒரு தலைவர் இருந்தாரே? அவரையும் எதிர்த்துக்கொண்டுதானே எதிரியுடன் போய்ச் சேர்ந்து துரோகமிழைத்தார்கள்?

கருணா அம்மான் இப்போதும் தலைவர் பிரபாகரன் என்றுதானே சொல்லுகின்றார். கருணாவின் பிரச்சினையை ஒரு தனிமனித பிரச்சினை என்று தட்டிக்கழித்து பின்னர் நடந்த வரலாறு எல்லாம் திரும்பவும் சொல்லவேண்டியதில்லை.

இப்போது மக்கள் ஜனநாயக வழியில் கருணாவை அம்பாறையில் தெரிவு செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் மக்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் மேல் சவாரிவிட்ட கூட்டமைப்புத்தான் முட்டாள்தனமாக கிழக்கில் செயற்பட்டு பிள்ளையானின் பின்னரும் கருணாவின் பின்னரும் மக்களை திரளவைத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

கருணா அம்மான் இப்போதும் தலைவர் பிரபாகரன் என்றுதானே சொல்லுகின்றார். கருணாவின் பிரச்சினையை ஒரு தனிமனித பிரச்சினை என்று தட்டிக்கழித்து பின்னர் நடந்த வரலாறு எல்லாம் திரும்பவும் சொல்லவேண்டியதில்லை.

இப்போது மக்கள் ஜனநாயக வழியில் கருணாவை அம்பாறையில் தெரிவு செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் மக்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் மேல் சவாரிவிட்ட கூட்டமைப்புத்தான் முட்டாள்தனமாக கிழக்கில் செயற்பட்டு பிள்ளையானின் பின்னரும் கருணாவின் பின்னரும் மக்களை திரளவைத்துள்ளது.

அப்போ கூட்டமைப்பை மீண்டும் மக்கள் தெரிவு செய்தால் மக்கள் முட்டாள்களா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

ஆக, தமிழர்களுக்குச் சிங்களவர்களால் பாதிப்பில்லையென்று சொல்கிறீர்கள். இதே முஸ்லிம்களை தமிழர்களுக்கெதிராகக் கொம்புசீவி, பிரித்தாண்டு , இன்று தமிழர்களுக்கெதிரான சக்தியாக மாற்றியது யாரென்று நினைக்கிறீர்கள்? அன்று தமிழர்க்கெதிராக முஸ்லீம்களை ஆதரித்தவர்களே இன்று முஸ்லீம்களுக்கெதிராக தமிழரை நிறுத்துகிறார்கள். இது மீளவும் மாறாதென்னும் உங்களின் நம்பிக்கையினை நான் பாழாக்க விரும்பவில்லை. 

தமிழர்களுக்கு சிங்களவரால் பாதிப்பு இல்லை என்று நான் எழுதவேயில்லை. முஸ்லிம்களால் ஏற்படும் பாதிப்பு சிங்களவரை விடக் குறைவு என்று கிழக்கு மக்கள் கருதும் நிலைதானே உள்ளது. அதை மறுக்கமுடியுமா?

சிங்களவர்கள், தமிழரையும் முஸ்லிமையும் மோதவிட்டு விரிசலை ஏற்படுத்தி 20-30 வருடங்களாகின்றது. அது தமிழரும் முஸ்லிமும் ஒருவரை ஒருவர் நம்பாமல் சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் வரை தொடரவே செய்யும். இணைந்து செயற்பட சாத்தியம் இல்லை என்றே கருதுகின்றேன்.

4 minutes ago, MEERA said:

அப்போ கூட்டமைப்பை மீண்டும் மக்கள் தெரிவு செய்தால் மக்கள் முட்டாள்களா?

மக்கள் ஒருபோதும் முட்டாள்களில்லை. மக்கள் இன்னும் பொறுமைசாலிகளாக இருக்கின்றார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்😀

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

கோத்தபாயவுக்குத் தமிழர்களைப்பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள் பாருங்கள், அங்கேதான் அசத்துகிறீர்கள். ஒரு பதினொரு வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். முள்ளிவாய்க்கால் எனுமிடத்தில் கோத்தபாய எனும் பெயரில் ஒருவர் லட்சக்கணக்கான தமிழர்களை சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான வகையில் கொன்றுகுவித்தார். இன்று நீங்கள் தமிழர்களுக்குச் சார்பாகவும் முஸ்லீம்களுக்கெதிராகவும் களமிறங்குவார் என்று கிழக்கு தமிழர்கள் நம்பும் கோத்தாவும் முள்ளிவாய்க்காலில் தமிழர் மீது “அன்பைப் பொழிந்து தள்ளிய” கோத்தாவும்  ஒரே ஆளாக இருக்காது என்று நம்புகிறேன்.

நான் கோத்தபாயவுக்கு தமிழர்களைப் பிடிக்கும் என்று எங்கே எழுதினேன்?🤔

கோத்தபாயவுக்கு முஸ்லிம்களைப் பிடிக்காது என்றால் தமிழர்களைப் பிடிக்கும் என்று அர்த்தம் அல்ல. எல்லாவற்றையும் கறுப்பு-வெள்ளையாகப் பார்க்கக்கூடாது.  சாம்பலில் கூட பல வகைகள் உள்ளன..😎

கோத்தபாய சிங்களவர்களின் ஆதரவினால் மட்டும் ஜனாதிபதியானவர். அவருக்கு வாக்குப்போடாத தமிழரை கட்டாயம் பிடிக்காமல் இருக்கும். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுக்க எதிரணிகளைச் சிதறடிக்கவேண்டிய தேவை உள்ளது. அதற்கான அரசியல் ஆட்டங்களையும் கோத்தபாய நடாத்தத்தானே வேண்டும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

மக்கள் ஒருபோதும் முட்டாள்களில்லை. மக்கள் இன்னும் பொறுமைசாலிகளாக இருக்கின்றார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்😀

😀😀😀😀

இந்த பொறுமை தான் கூட்டமைப்பின் புழுகிற்கு காரணம், வாய் கூசாமல் பொய் என்று தெரிந்தும் புழுகிறார்கள்.

திருகோணமலையில் மாத்திரம் 221 கோடிக்கு அபிவிருத்தி செய்திருக்கிறார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் ஆய்வாளர்களின் அண்மைய கட்டுரைகளை வாசித்தால் கூட்டமைப்பு தொடர்ந்தும் வாக்குவங்கியை தக்கவைக்குமா என்று தெரியவில்லை.  அங்கயன் கூட வெல்ல வாய்ப்பிருக்கின்றது.

ஒரு காலத்தில் இளையோர் தேசியத்தின் மீது மிகவும் பற்றுள்ளவராக இருந்தார்கள். ஆனால் இப்போது நுகர்வோர் கலாச்சாரத்திற்குள் அமிழ்ந்து அதிகாரம் உள்ள அமைச்சுக்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று சிந்திக்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள் போலிருக்கு. 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2020 at 16:20, கிருபன் said:

அம்பிகா அவர்கள் போனஸ் ஆசனம் மூலம் தேசியப்பட்டியல் எம்பியாகத் தெரிவு செய்யப்படுவது நல்லதே. பாராளுமன்றம் சட்டவாளர்களுக்கானது. விவாதம் செய்யத் தெரியாமல் எழுதியதையே வாசிக்கத் தெரியாமல் நித்திரை கொள்ளப் போவர்களைவிட ஆளுமையுள்ளவர்கள், புலமையுள்ளவர்கள் போகலாம்தானே.

கட்டாயம் போகவேணும் 
அப்பதான் அரச அனுசரணையுடன் தமிழர் பிரதிநிதியாக  ஜெனிவா போய் வருடந்தோறும் சிங்களவனுக்கு 
கைமாறு செய்யலாம், ஒரு ரெண்டு பேர் தான் வருடந்தோறும் அங்கே போய் பேச்சுக்காவது தமிழருக்கு நடந்ததை கதைக்கினம் அதற்கும் ஆப்பு வைக்காட்டில் எப்படி...?, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவை பற்றி என்ன நினைக்கிறீர்கள் அண்ணை ...? (எனக்கு தனிப்பட்ட அனுபவம் உண்டு அது வேறு கதை)  

மிக விரைவில் வடக்கு மக்கள் திண்ட பருப்பு செரிக்க முடியாமல் வாந்தியெடுப்பினம் பாருங்க ....
2014 இலேயே  கூத்தமைப்பால் ஒரு இன்ச் கூட நகரமுடியாது இவர்கள் எல்லாம் சுத்த ஹம்பக்குகள் என்று எதிர்வுகூறியவர்கள் நாம் ,ஆனால் இதை கண்டுபிடிக்க வாக்களித்தவர்களுக்கு  6  வருடம் எடுத்திருக்கிறது.
கூத்தமைப்புற்கு வாக்கு போடுவது stalemate போல (திரிசங்கு நிலை ) ,அபிவிருத்தி என்று கேட்டு பெறவும் முடியாது 
உரிமை,தேசியம் தன்னாட்சி என்று கூவவும் முடியாது, வேண்டுமென்றால் சிங்களத்தில் ஒரு கதையையும் 
தமிழில் மற்றுமொரு கதையும் கதைத்து ஐந்தைந்து வருடங்கள் ஓட்டலாம், அதற்குள் வடக்கில் மக்கள் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற கிழக்கு மாகாண தமிழர்களின் நிலையில் இருப்பர்    

திரும்பவும் சொல்கிறேன் கூத்தமைப்பு எத்தனை ஆசனம் எடுத்தாலும் ஒண்டும் புடுங்கமுடியாது என்று 
அம்பிகா இல்ல எந்த கொம்பிகா வந்தாலும் பருப்பு தான் என்னோடு பந்தயம் கட்ட தயாரா ...?  

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கற்பகதரு said:

 சிங்களவரை றோ நேரடியாக படை அனுப்பி அழிக்க முடியாது.

 

9 hours ago, கற்பகதரு said:

இது எனது விளக்கம் அல்ல, விடுதலைப்புலிகள், 84 - 85ல் தந்த விளக்கம்.

 இதைவைத்து திருவாளர் கற்பகம் விளக்க வருவது என்னவென்றால் 
RAW உளவாளியை அனுப்பி மீண்டும் தமிழர்களை போட்டுத்தள்ளி தனது அரிப்பை தீர்த்துக்கொண்டது,
அதாவது மீண்டும் மீண்டும் தமிழர்களிடம் சொல்கிறது எங்கள் சொல் கேளுங்கள் எண்டு , அது என்ன சொல் என்று எங்களிடம் கேட்கப்படாது ,ஏன் RAW இற்கே அது தெரியாது , ஆனால் நீங்கள் சொல் கேற்கவேண்டும் 
இல்லை இப்படி உளவாளியை அனுப்பி குண்டு குண்டாய் வெடிப்போம், சிங்களவனும் முஸ்லிமும் எங்கள் சொல் கேக்காட்டிலும் உளவாளியனுப்பி தமிழனை தான் வெடிப்போம், Mind it 
சொல் கேக்கணும்  

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரஞ்சித் said:

கருணா ஆதரவாளர்களிடம் இரு கேள்விகள்.

முதலாவது : போர்க்குற்ற விசாரணைகள் , நிரந்தர அரசியல்த் தீர்வுபற்றி கருணாவினதும் அவரது ஆதரவாளர்களினதும் நிலைப்பாடு என்ன?

இரண்டாவது :"பழையதை மறப்போம்" என்பதன் மூலம் இவர்கள் சொல்ல விழைவது கருணாவின் துரோகத்தை மறப்போம் என்பதையா, போர்க்குற்றங்களை மறப்போம் என்பதையா அல்லது நிரந்தர அரசியல்த் தீர்வை மறப்போம் என்பதையா?

கருணாவை ஆதரித்துக்கொண்டும் தமிழ்த்தேசியத்தை இன்னும் காவுபவர்கள் போலவும் சிலர் போடும் வேஷங்கள் உண்மையாகவே அருவருப்பைத்தான் தருகிறது. ஏனென்றால், இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. 

ரகு அண்ணை 
நீங்களா இது ...?

முதலாவது : போர்க்குற்ற விசாரணைகள் , நிரந்தர அரசியல்த் தீர்வுபற்றி கருணாவினதும் அவரது ஆதரவாளர்களினதும் நிலைப்பாடு என்ன?

இதன் தற்போதைய முன்னேற்றம் என்ன , புலிகளின் மௌனிப்பின் பின் போர்க்குற்ற விசாரணை ,நிரந்தர அரசியல் தீர்வு எந்த அளவு முன்னேறியிருக்கிறது அதாவது தமிழர்களின் ஏக பிரதிநிதிகளின் கீழ்...? ஏதாவது புள்ளிவிபரம்...?, கும்மானை தூக்கி கடாசி மீண்டும் கூத்தமைப்பை ஏக பிரதிநிதிகளாக்க கிழக்கு தமிழர்கள் தயார் அடுத்த ஐந்து வருடங்களுக்கு உந்த விடயங்களில் எவ்வளவு வீதம் கூத்தாடிகளால்  முன்னேற முடியும்...?
+ முஸ்லிம்களுடன் எப்படி அரசியல் செய்யப்போகிறார்கள்....?, ஒன்று பட்ட அரசியலா சமாந்தர அரசியலா இல்லை சரணாகதி அரசியலா அல்லது மூன்றுமல்லாது எல்லாவற்றையும் அவர்களுக்கு தூக்கி கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்கும் அரசியலா...இப்பிடி எல்லாவற்றுக்கும் Hypothetical ஆகவன்றி பொட்டில் அறைவது போல் பதில் தர முடியுமா  

இரண்டாவது :"பழையதை மறப்போம்" என்பதன் மூலம் இவர்கள் சொல்ல விழைவது கருணாவின் துரோகத்தை மறப்போம் என்பதையா, போர்க்குற்றங்களை மறப்போம் என்பதையா அல்லது நிரந்தர அரசியல்த் தீர்வை மறப்போம் என்பதையா?

இலங்கை அரசியலில் தமிழர்களின் தற்போதைய  வகிபாகம் என்னவென்பதையே மறந்துவிட்டீர்களா 
யாருடைய ஆயுத்தத்தை வாங்கி யாருடைய அரிப்புக்கு மருந்தாக சண்டை போட்டோமோ அவர்களே 
அவர்கள் வேண்டா வெறுப்பாக தந்த தீர்வை இலங்கை நீதித்துறை பறிக்கும்போது கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தார்கள், சர்வதேச சமூகம் எமக்கு ஆதரவான சக்திகள் ...மண்ணாங்கட்டிகள் என்று 
கூவும் ஒவ்வொரு கூத்தாடிக்கும் தெரியும் அப்டியென்ற ஒன்றே தமிழர்களுக்கு இல்லை என்பது 
இருந்தாலும் கூவுவது  ஐந்துவருட டீலிங்கிற்கும் ,வாகன அனுமதிப்பத்திரத்திற்கும், இப்போதைய அரசு 
முற்று முழுதான இனவாத அரசு ,எதை வைத்து சமாளிக்க போகிறீர்கள் ,நாளைக்கே மட்டக்களப்பு மட்டக்களப்பிஸ்த்தான் என்று மாறும் போது என்ன செய்யப்போகிறீர்கள், இவற்றுக்கெல்லாம் நடு மண்டையில் நச்சென்று இறங்கும் பதிலுண்டா உங்களிடம், இருந்தால் சொல்லுங்கள் கும்மனை  கசக்கி குப்பை தொட்டியில் போடும் வரிசையில் உங்களுக்கு முன்னாடியே நான் நிற்பேன் 

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னெழுச்சியாக உதவப்போன எனது நண்பர்களிடம் இந்த அரசியல் வியாதிகள் ஆடிய ஆட்டம் உங்களுக்கு தெரியுமா ....? இவர்கள் எப்படி மக்களை முன்னேற்றுவார்கள் ,மக்கள் ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடும் வரை தான் இவனுக்கு மவுசு 
இவனுக்கு முஸ்லீம் வந்தால் என்ன கள்ள உறுதி முடிச்சு காணி புடிச்சால் தான் என்ன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3000 பேரை காப்பாற்றிய முன்னாள் போராளிக்கு இந்த நிலையா?

கருநாயை பற்றி கிழிக்கின்றார் 😡

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

 

 இதைவைத்து திருவாளர் கற்பகம் விளக்க வருவது என்னவென்றால் 
RAW உளவாளியை அனுப்பி மீண்டும் தமிழர்களை போட்டுத்தள்ளி தனது அரிப்பை தீர்த்துக்கொண்டது,
அதாவது மீண்டும் மீண்டும் தமிழர்களிடம் சொல்கிறது எங்கள் சொல் கேளுங்கள் எண்டு , அது என்ன சொல் என்று எங்களிடம் கேட்கப்படாது ,ஏன் RAW இற்கே அது தெரியாது , ஆனால் நீங்கள் சொல் கேற்கவேண்டும் 
இல்லை இப்படி உளவாளியை அனுப்பி குண்டு குண்டாய் வெடிப்போம், சிங்களவனும் முஸ்லிமும் எங்கள் சொல் கேக்காட்டிலும் உளவாளியனுப்பி தமிழனை தான் வெடிப்போம், Mind it 
சொல் கேக்கணும்  

காத்தன்குடியில் பேரிச்சை பழம் விளைகிறதாமே? சாப்பிட்டு பார்க்கவில்லையா? அழகான அரபுலகம் உருவாக வாழ்த்துகள். 😄

  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎-‎07‎-‎2020 at 06:31, ரதி said:

நீங்கள் விரும்புறீங்களோ ,இல்லையோ கிழக்கில் முஸ்லிம்களுக்கு இவர் மேல் பயம் ...இவர் இருந்தால் தேவையில்லாமல் கை வைக்க மாட்டார்கள் ...அரசை எடுத்துக் கொண்டால் இவர் அவர்களை சமாளித்து நடந்து கொள்வார் ...இங்குள்ள பலர்ஆசைப்படுகிற மாதிரி கோத்தா சகோதரங்கள் இப்போதைக்கு இவரை தூக்கி  எறிய மாட்டார்கள் ...  அவர் ஒன்றும் முட்டாள் இல்லை ...அவரும் கோ.சகோதரர்களை பகைக்க மாட்டார் ...கொஞ்ச காலத்திற்கு வண்டி ஸ்மூர்த்தாய் போகும் 🙂
 

போகும் போகும் , தொல்பொருள் கந்தாயம் வந்து எல்லைகளை உங்கட நடுவீட்டுக்குள்ளால போடும் வரை , பின்னர் அம்மான் அமைதிப் படுத்தப் படுவார் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் ஒரு இரட்சகர் அம்மானின் வந்து சேருவார் இனப்பிரச்சனைக்கு  இலகுவான தீர்வு இதை விட வேறென்ன …..

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக இடப்பட்ட மலக்கும்பம் நன்றாகவே மணம் வீசும் , விஷயம் அறிந்தவன் இசுலாமியரை கிட்ட கூட்டி வருவான் இசுலாமியனும் மணம் தாங்காமல் காத தூரம் தள்ளி நிப்பான் . மலம் காயும் , மணம் போகும் இசுலாமியன் மீண்டும் வந்து கும்பத்தை அள்ளி வீட்டு தோட்டத்திற்கு உரமாக்குவான் .  அவர்களுக்கு  வெற்றி வெற்றி நிலவரம் -- தமிழனின் கோவணம் மேலும் செக்சியாக மாறும் ….

 

39 minutes ago, கற்பகதரு said:

காத்தன்குடியில் பேரிச்சை பழம் விளைகிறதாமே? சாப்பிட்டு பார்க்கவில்லையா? அழகான அரபுலகம் உருவாக வாழ்த்துகள். 😄

அங்கு எப்பவோ அரபுலகத்தை அமைத்து விடடார்கள். வெலிக்கந்தை தொடக்கம் பாணமை வரைக்கும் முஸ்லீம் பிரதேசங்கள் எல்லாம் முற்றிலும் மாற்றி விடடார்கள். அந்த ஸஹ்ரான் கூடடம் மட்டும் அந்த உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகளை நடத்தி இருக்கவிடடால் கிழக்கிஸ்தானையே உருவாக்கி இருந்திருப்பார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

காத்தன்குடியில் பேரிச்சை பழம் விளைகிறதாமே? சாப்பிட்டு பார்க்கவில்லையா? அழகான அரபுலகம் உருவாக வாழ்த்துகள். 

காத்தான்குடியில் பேரிச்சம் பழம் விழைஞ்ச உசார்ல காத்தான்குடி ஜனாதிபதி 
பல்கலைக்கழகம் கட்டி வாங்கின பல்பு அண்ணருக்கு தெரியாதோ ....?
நாட்டின பேரீச்சையை காத்தான்குடி ஜனாதிபதியே அவரோட கையால் பிடுங்கவைக்கப்படுவார்
சிங்களவன் இந்த விடயத்தில் கில்லி என்பது கற்பகத்திற்கு தெரியாதோ 
 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Robinson cruso said:
1 hour ago, கற்பகதரு said:

காத்தன்குடியில் பேரிச்சை பழம் விளைகிறதாமே? சாப்பிட்டு பார்க்கவில்லையா? அழகான அரபுலகம் உருவாக வாழ்த்துகள். 😄

அங்கு எப்பவோ அரபுலகத்தை அமைத்து விடடார்கள். வெலிக்கந்தை தொடக்கம் பாணமை வரைக்கும் முஸ்லீம் பிரதேசங்கள் எல்லாம் முற்றிலும் மாற்றி விடடார்கள். அந்த ஸஹ்ரான் கூடடம் மட்டும் அந்த உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகளை நடத்தி இருக்கவிடடால் கிழக்கிஸ்தானையே உருவாக்கி இருந்திருப்பார்கள்.  

இது போதாது என்றா சம்பந்தர் முதலைமைச்சர் பதவியையும் முஸ்லிம்களிடம் கொடுத்தார் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

அப்பதான் அரச அனுசரணையுடன் தமிழர் பிரதிநிதியாக  ஜெனிவா போய் வருடந்தோறும் சிங்களவனுக்கு 
கைமாறு செய்யலாம், ஒரு ரெண்டு பேர் தான் வருடந்தோறும் அங்கே போய் பேச்சுக்காவது தமிழருக்கு நடந்ததை கதைக்கினம் அதற்கும் ஆப்பு வைக்காட்டில் எப்படி...?, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவை பற்றி என்ன நினைக்கிறீர்கள் அண்ணை ...? (எனக்கு தனிப்பட்ட அனுபவம் உண்டு அது வேறு கதை)

ராஜபக்ஸக்கள் 2/3 எடுக்கமுடியாவிட்டால், கூட்டமைப்பு  சமஸ்டியைப் பெற்றுக்கொள்ள ஆதரவு கொடுக்கலாம் அப்படி சமஸ்டி கிடைக்க வாய்ப்பிருந்தால், முள்ளிவாய்க்காலில் நடந்தது போர்க்குற்றம் என்றும், இனவழிப்பு இல்லை என்றும் சொல்லி சமஸ்டித் தீர்வை இழுபடாமல் பெற்றுக்கொள்ளலாம். இப்படியான ராஜதந்திர ரீதியில் சட்டங்களை நுணுகி ஆராய்ந்து விட்டுக்கொடுத்துப் பேசி சமஸ்டித் தீர்வைக் கொண்டுவர துறைசார் நிபுணர்கள் தேவைதானே.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, யாப்பில் உள்ள அடிப்படை உரிமைச் சட்டத்திற்குள் வரும் பேச்சுச் சுதந்திரம், விரும்பிய சமயத்தை பின்பற்றும் சுதந்திரம்,  சித்திரவதைகளுக்குப் பொறுப்புக்கூற் வைப்பது போன்ற விடயங்களை கையாளுகின்றது. ஆனால் அரசுக்கு முண்டுகொடுக்கும் வேலையையும் பார்க்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

ராஜபக்ஸக்கள் 2/3 எடுக்கமுடியாவிட்டால், கூட்டமைப்பு  சமஸ்டியைப் பெற்றுக்கொள்ள ஆதரவு கொடுக்கலாம் அப்படி சமஸ்டி கிடைக்க வாய்ப்பிருந்தால், முள்ளிவாய்க்காலில் நடந்தது போர்க்குற்றம் என்றும், இனவழிப்பு இல்லை என்றும் சொல்லி சமஸ்டித் தீர்வை இழுபடாமல் பெற்றுக்கொள்ளலாம். இப்படியான ராஜதந்திர ரீதியில் சட்டங்களை நுணுகி ஆராய்ந்து விட்டுக்கொடுத்துப் பேசி சமஸ்டித் தீர்வைக் கொண்டுவர துறைசார் நிபுணர்கள் தேவைதானே.

கிருபண்ணை ஆசைப்படலாம் பேராசை படக்கூடாது 
சமஷ்டியோ ...? பேரம் பேசி ஆதரவு கொடுப்பினமோ ...? யாரு கோத்தா போன்ற கடைந்தெடுத்த இனவாதியிடமோ ...? 
கொஞ்சம் பின்னால் போய் பாருங்கோ, நல்லாட்சியரசாங்கம் அந்தரத்தில் ஊசலாடியபோது நீங்கள் மேலே  சொன்னதை  விட டக்கரான வாய்ப்பு கிட்டியதே , எதை பேசி எதை பெற்றவர்கள் ....?
ஆளாளுக்கு ரெண்டு கோடியை தவிர,போனதடவை  துறைசார் நிபுணர்கள் சமஷ்ட்டிக்கு சொன்ன வரைவிலக்கணம் வேறு  தனி தினுசா இருந்துச்சே மீண்டும் முதலில் இருந்தா....? 5 வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் Reset பட்டனை அழுத்துவீர்களோ  

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, அக்னியஷ்த்ரா said:

கிருபண்ணை ஆசைப்படலாம் பேராசை படக்கூடாது 
சமஷ்டியோ ...? பேரம் பேசி ஆதரவு கொடுப்பினமோ ...? யாரு கோத்தா போன்ற கடைந்தெடுத்த இனவாதியிடமோ ...? 
கொஞ்சம் பின்னால் போய் பாருங்கோ, நல்லாட்சியரசாங்கம் அந்தரத்தில் ஊசலாடியபோது நீங்கள் மேலே  சொன்னதை  விட டக்கரான வாய்ப்பு கிட்டியதே , எதை பேசி எதை பெற்றவர்கள் ....?
ஆளாளுக்கு ரெண்டு கோடியை தவிர,போனதடவை  துறைசார் நிபுணர்கள் சமஷ்ட்டிக்கு சொன்ன வரைவிலக்கணம் வேறு  தனி தினுசா இருந்துச்சே மீண்டும் முதலில் இருந்தா....? 5 வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் Reset பட்டனை அழுத்துவீர்களோ  

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக இருக்கின்றதே. சமஸ்டிதான் கூட்டமைப்பு நாடும் தீர்வு என்று. சுமந்திரன் ஐயா கூட 15 ஆசனத்துடன் பலமாகப் பாராளுமன்றம் போனால் எதுவும் சாத்தியப்படலாம் என்று!

ஒன்றிலும் நம்பிக்கையில்லாவிட்டால் தமிழர்கள் விரைவில் சிங்கள பெளத்தர்களாக மாறுவதுதான் தீர்வாக வரும். அதுவும் நீர்கொழும்பு போன்ற பல இடங்களில் நடந்த வரலாறு இருக்கின்றதுதானே.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக இருக்கின்றதே. சமஸ்டிதான் கூட்டமைப்பு நாடும் தீர்வு என்று. சுமந்திரன் ஐயா கூட 15 ஆசனத்துடன் பலமாகப் பாராளுமன்றம் போனால் எதுவும் சாத்தியப்படலாம் என்று!

ஒன்றிலும் நம்பிக்கையில்லாவிட்டால் தமிழர்கள் விரைவில் சிங்கள பெளத்தர்களாக மாறுவதுதான் தீர்வாக வரும். அதுவும் நீர்கொழும்பு போன்ற பல இடங்களில் நடந்த வரலாறு இருக்கின்றதுதானே.

 

கிருபன் ஐயா, சுத்துமாத்திரன் தான் சொல்கிறார் தமது ஆதரவு தளத்தில் எள்ளளவும் மாற்றமில்லை என்று, அதேநேரம் சென்ற தேர்தலில் 16 ஆசனம் (16 ஆசனங்களுடன் பாராளுமன்றம் போய் ஒன்றும் புடுங்க வில்லை.) பிறகேன் மக்களிடம் கெஞ்ச வேண்டும் 15 ஆவது தாங்கோ என்டு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, MEERA said:

கிருபன் ஐயா, சுத்துமாத்திரன் தான் சொல்கிறார் தமது ஆதரவு தளத்தில் எள்ளளவும் மாற்றமில்லை என்று, அதேநேரம் சென்ற தேர்தலில் 16 ஆசனம் (16 ஆசனங்களுடன் பாராளுமன்றம் போய் ஒன்றும் புடுங்க வில்லை.) பிறகேன் மக்களிடம் கெஞ்ச வேண்டும் 15 ஆவது தாங்கோ என்டு?

தமிழரசுக்கட்சி,தமிழர்விடுதலைக்கூட்டணி கூத்தமைப்பு ஆக்களுக்கு பரம்பரை பரம்பரையாய் முதுகு சொறிஞ்சு விட்ட கூட்டங்கள் லேசிலை விட்டுட்டு வரமாட்டினம்.அவையள் என்ன சொன்னாலும் இவையளுக்கு வேதவாக்காய்த்தான் தெரியும். 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.