Jump to content

ந‌ட‌க்க‌ இருக்கும் ஈழ‌த்து தேர்த‌ல் ப‌ற்றி அண்ண‌ன் சீமானின் காணொளி , ம‌ற்றும் எம் ஜீ ஆர் எம் போராட்ட‌த்துக்கு உத‌வின‌துக‌ளை ந‌ல் ம‌ன‌தோடு சொல்லுகிறார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

க‌ருணாவுக்கு ஓட்டு போட‌ வேண்டாம் என்று எம் உற‌வுக‌ளை அன்போடு கேட்டு கொள்ளுகிறார் அண்ண‌ன் சீமான் 

 

Link to comment
Share on other sites

தற்போது இருக்கும் எம் ஈழத்து தமிழ் அரசியல்வாதிகளுக்கு 13 ஆம் சரத்து, ஒற்றையாட்சி பற்றி எல்லாம் தெரிந்து இருப்பதை விட சீமானுக்கு அதிகப்படியாக தெரிந்து இருக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு குறிப்பிடப்படும் பாலா மாஸ்ரர் இப்போது லண்டனில் வாழ்கிறார். இவர் உட்பட ஆனந்தசங்கரி பத்திரிகையாளர் திருநாவுக்கரசு காசி ஆனந்தன் பரந்தன் ராஜன் ஆகியோர் இந்தியாவினது நிகழ்சித்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டாச்சு. தவிர சீமான் இந்தியாவால் களமிறக்கப்பட்ட மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளடங்கலான விக்கியரை எதிர்க்கமாட்டார் காரணம் அப்படிப்பேசினால் மத்தியில் தமிழகம் ஈழம் தொடர்பாகக் கொள்கைவகுப்போருக்குகச் சினம் வந்துவிடும் என்பதால். கதையோட கதையாக இதையும் பாருங்கோ

பையன் அவர்களே,

கருணா பிள்ளையான் ஒரு பொருட்டல்ல

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Elugnajiru said:

இங்கு குறிப்பிடப்படும் பாலா மாஸ்ரர் இப்போது லண்டனில் வாழ்கிறார். இவர் உட்பட ஆனந்தசங்கரி பத்திரிகையாளர் திருநாவுக்கரசு காசி ஆனந்தன் பரந்தன் ராஜன் ஆகியோர் இந்தியாவினது நிகழ்சித்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டாச்சு. தவிர சீமான் இந்தியாவால் களமிறக்கப்பட்ட மண்டையன் 

 

உங்க‌ளுக்கு ந‌ம்பிக்கையான‌வ‌ர்க‌ளுட‌ன் நீங்க‌ள் ப‌ய‌ணியுங்க‌ள் , அதில் நான்  ஒரு போதும் த‌லையிட‌ மாட்டேன் ,

நான் ஒரு க‌ட்சி த‌லைவ‌ர் ஓட‌ ந‌ம்பிக்கை வைத்து ப‌ய‌ணிக்கும் போது , அதில் தேவை இல்லா குழ‌ப்ப‌த்த‌ உண்டு ப‌ண்ண‌ வேண்டாம் ,

நீங்க‌ள் எழுதுவ‌து உங்க‌ள் க‌ற்ப‌னைக்கு எட்டிய‌து , க‌ள‌ நில‌வ‌ர‌ம் முற்றிலும் மாறுப‌ட்ட‌து , இனியும் வேண்டாம் பூனைக் க‌தைக‌ள் ,

எம் இன‌த்தில் எதிரிக‌ளை உருவாக்காம‌ல் ந‌ண்ப‌ர்க‌ளை உருவாக்க‌ பாருங்கோ 

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

இங்கு குறிப்பிடப்படும் பாலா மாஸ்ரர் இப்போது லண்டனில் வாழ்கிறார். இவர் உட்பட ஆனந்தசங்கரி பத்திரிகையாளர் திருநாவுக்கரசு காசி ஆனந்தன் பரந்தன் ராஜன் ஆகியோர் இந்தியாவினது நிகழ்சித்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டாச்சு. தவிர சீமான் இந்தியாவால் களமிறக்கப்பட்ட மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளடங்கலான விக்கியரை எதிர்க்கமாட்டார் காரணம் அப்படிப்பேசினால் மத்தியில் தமிழகம் ஈழம் தொடர்பாகக் கொள்கைவகுப்போருக்குகச் சினம் வந்துவிடும் என்பதால். கதையோட கதையாக இதையும் பாருங்கோ

பையன் அவர்களே,

கருணா பிள்ளையான் ஒரு பொருட்டல்ல

 

எழுஞாயிறு இங்கு சீமான் சொன்னதையே இவரும் சொல்கிறார்.என்ன தான் பிரச்சனை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Elugnajiru said:

கதையோட கதையாக இதையும் பாருங்கோ

காணொளி இணைப்பிற்க்கு... நன்றி எழுஞாயிறு. இவர், எனது நெருங்கிய உறவினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பையன்26 said:

க‌ருணாவுக்கு ஓட்டு போட‌ வேண்டாம் என்று எம் உற‌வுக‌ளை அன்போடு கேட்டு கொள்ளுகிறார் அண்ண‌ன் சீமான் 

 

நல்ல பதிவு பையன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

எழுஞாயிறு இங்கு சீமான் சொன்னதையே இவரும் சொல்கிறார்.என்ன தான் பிரச்சனை?

அதைதான் அவரும் சொல்கின்றார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Elugnajiru said:

இங்கு குறிப்பிடப்படும் பாலா மாஸ்ரர் இப்போது லண்டனில் வாழ்கிறார். இவர் உட்பட ஆனந்தசங்கரி பத்திரிகையாளர் திருநாவுக்கரசு காசி ஆனந்தன் பரந்தன் ராஜன் ஆகியோர் இந்தியாவினது நிகழ்சித்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டாச்சு. தவிர சீமான் இந்தியாவால் களமிறக்கப்பட்ட மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளடங்கலான விக்கியரை எதிர்க்கமாட்டார் காரணம் அப்படிப்பேசினால் மத்தியில் தமிழகம் ஈழம் தொடர்பாகக் கொள்கைவகுப்போருக்குகச் சினம் வந்துவிடும் என்பதால். கதையோட கதையாக இதையும் பாருங்கோ

பையன் அவர்களே,

கருணா பிள்ளையான் ஒரு பொருட்டல்ல

 

2009 குப் பின்னர் தமிழ் மக்களின் கூட்டு உளவியலைச் சிதைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 

 2009 முடிந்தவுடன் நாங்கள் மக்களை சந்திக்கும் போது அவர்களிடம் இரண்டு கேள்விகள் இருந்தன. என்ன நடந்ததென்றும் தெரியவில்லை. என்ன நடக்கப் போகிறது என்றும் தெரியவில்லை. 

உண்மையில் என்னவென்று சொன்னால் மக்களிடம் நடந்த கதைகளை திருப்பிக் கூற வைத்து அவர்களின் அந்த வெளிப்பாடுகளுக்கு ஊடாக எதிர்காலத்தில் தாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்பதனை தீர்மானிக்க வைத்திருக்க வேண்டும். இது தான் ஆற்றுப்படுத்தலுக்கு மிக அடிப்படையான விடயம். அதை நாங்கள் செய்திருக்க முடியும். என தெரிவித்தார் யாழ். பல்கலையின் முதுநிலை விரிவுரையாளரான கலாநிதி. க. சிதம்பரநாதன். 

அவர் மேலும் முக்கியமாக தெரிவித்த விடயங்கள் வருமாறு, 
மக்களை அடித்து நொறுக்கினால் பிறகு மீண்டும் ஒரு எழுச்சி இங்கு நடந்துவிடக் கூடாது. மீண்டும் மக்கள் ஒற்றுமைப்பட்டுவிடக் கூடாது. இளைஞர்கள் செயல்முனைப்பானவர்களாக ஆகி விடக் கூடாது. அதற்கான தரகராக தான் சம்பந்தர் செயற்பட்டார்.  

மக்கள் மத்தியில் அரசியல் இல்லை. அவர்கள் மத்தியில் எந்த தெளிவூட்டலும் இல்லை.   அரசியல் கலந்துரையாடல்கள் இல்லை. அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாது. 

மக்கள் மத்தியில் புகுத்தப்பட்ட கருத்துகள் என்னவென்று சொன்னால் இனி எங்களால் ஏலாது.  நாங்கள் சிறுபான்மையினம். நாங்கள் ஒரு மாதிரி சமாளித்துப் போக வேண்டும். அடங்கிப் போய்த் தான் காரியங்களைப் பெற வேண்டும். யதார்த்தமாக சிந்திக்க வேண்டும். ஏதாவது சலுகைகளைப் பெற வேண்டும். இப்படியான நிலையில் உள்ள பெரிய ஆபத்து என்னவென்றால் தங்களால் எதுவும் ஏலாது என நினைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். 
 
முப்பது வருடங்கள் போராடிய எம் மக்கள் தான் தங்களுக்கு என்ன வேண்டும் என தீர்மானிக்க வேண்டும். சுமந்திரன் அல்ல. சம்பந்தன் அல்ல. 

முழுமையான நேர்காணலை காணொளியில் காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்று என்றால் யார்? கஜேந்திரகுமாரா அல்லது விக்கினேஸ்வரன் ஐயாவா?

-குருபரன் குமாரவடிவேல் -

முதலில் விக்கினேஸ்வரன் ஐயாவை பார்ப்போம். தனிப்பட்ட நீதியரசர் விக்கினேஸ்வரனின் கரங்கள் தூயமையானவை. 2013இல் கூட்டமைப்பில் இணைந்து முதலமைச்சரானவர் 18 மாதங்களிலேயே தமிழரசுக் கட்சியின் பிறழ்வுகளை விளங்கி தனித்து ஒரு நிலைப்பாட்டை எடுத்தவர். தனது மனசாட்சிக்கு ஏற்ப செயற்படுபவர் என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் ஐயாவிடம் உள்ள மிகப் பெரிய குறைபாடே அவரின் அரசியல் தயக்கமும் அரசியல் கருத்தியல் தெளிவின்மையும். இரண்டு உதாரணங்களை பார்ப்போம்:

முதலாவது:

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு முன்மொழிவுகளில் மிகப் பெரிய கருத்தியல் உள்ளடக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முக்கியமானவர். அந்த நேரத்தில் நான் பேரவையின் உப குழுவில் சிவில் சமூக பிரதிநிதியாக சனாதிபதி சட்டத்தரணி புவிதரனுடன் சேர்ந்து பணியாற்றினேன். பேரவையின் வரைவை தயாரிப்பதில் குறிப்பிடத்தக்களவு பங்கு எங்களுக்கும் இருந்தது. அந்த வரைபின் இறுதி வடிவம் நீதியரசருக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது அதில் 'தமிழ் தேசம்' எனக் குறிப்பிடப்பட்ட இடங்களை எல்லாம் வெட்டி நீக்கி 'தமிழ் மக்கள்' என வெட்டி திருத்தினார். மேலே தான் செய்ததற்கு விளக்கமாக 'இந்த திருத்தங்கள் கூட்டமைப்பின் 'உணர்வுகளை' (feelings) ஐ மதித்து செய்யப்படுகின்றன' என விக்கினேஸ்வரன் ஐயா குறிப்பிட்டார்.

கஜேந்திரகுமார் இதை கடுமையாக எதிர்த்தார். கஜேந்திரகுமார் தேசம் என்ற சொல் பாவனையின் முக்கியத்துவத்தை சட்டம் சார்ந்து, தேசத்தின் இறைமையில் இருந்தான எமது தீர்வு எடுத்தப்படவேண்டியதன் நடைமுறை முக்கியத்துவம் சார்ந்து, முன்வைத்து வருபவர். ஒரு நாட்டிற்குள் தீர்வையினும் அது தேசம் என்ற அங்கீகாரத்துடன் வராவிட்டால் அதனால் பிரோயோசனமில்லை என்பதனையும் குறிப்பாக தமிழரால் முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டங்களிலேயே நாம் இதனை சொல்லாமல் விடுவது ஒரு தொடந்தேர்ச்சியான அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட முறிவாக இருக்கும் என்பதனையும் கஜேந்திரகுமார் அறிவார். அந்த தெளிவோடு எவ்வளவு அழுத்தம் வந்தாலும் தோல்வியை கண்டாலும் தொடர்ந்து பிரயாணிப்பவர் அவர். அந்த வகையில் விக்கினேஸ்வரன் ஐயா தேசம் என்ற சொல்லை விடுத்து சுமந்திரன் சேர் பரிந்துரைக்கும் 'மக்கள்' என்ற சொல்லை முன்வைப்போம் என்று நிலைப்பாடு எடுத்த போது மிகக் கடுமையாக எதிர்த்து அந்த மாற்றத்துடன் பேரவையின் அரசியல் தீர்வு யோசனை முன்வைக்கப்பட அனுமதிக்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். இந்த மாற்றங்களை பிரேரித்த விக்கினேஸ்வரன் ஐயா ஆவணத்திற்கு நான் மின்னஞ்சலில் உடனடியாக பதிலளித்தேன். 1951 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் முதலாவது பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானத்திலேயே 'தேசம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இதனை தற்போதைய தமிழரசுக் கட்சியினர் மறந்திருக்கலாம் ஆனால் தமிழரை தேசம் என வரையறுத்த முதல் கட்சி தமிழரசுக் கட்சி தான் என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். அதன் பின்னர் விக்கினேஸ்வரனை ஐயா அதை ஏற்றுக்கொண்டார். இந்த சம்பவம் விக்கினேஸ்வரன் ஐயாவின் அரசியல் தயக்கத்திற்கும் தெளிவின்மைக்கும் சான்று.

இரண்டாவது:

2019 சனாதிபதித் தேர்தலில் தமிழ் கட்சிகள் மத்தியில் பொது நிலைப்பாடு வேண்டும் என்ற நோக்கத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் கூட்டங்களை நடத்தினர். நான் இதில் ஆரம்பத்தில் கலந்து கொள்ளவில்லை. பின்னர் இடைக்கால அறிக்கையை வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும் என்ற கஜேந்திரகுமார் பொன்னம்மபலத்தின் வலியுறுத்தலை கூட்டமைப்பு ஏற்காதிருக்க பேச்சுவார்த்தை முறிவடையும் என்று மாணவர்கள் அஞ்ச என்னையும் அழைத்தார்கள். அறிக்கையின் கீழே முன்னணியின் நிலைப்பாட்டை தனித்து சொல்லி அவர்களின் அந்த நிராகரிப்பை பதிவு செய்தல், ஒரு அடிக்குறிப்பாக முன்னணியின் நிலைப்பாட்டை சேர்த்தல் என பல தெரிவுகள் முன்வைக்கப்பட்டன. மாவை, சுமந்திரன் சேர், ஸ்ரீகாந்தா சேர், சுரேஷ் என்று எல்லோரும் அதை எதிர்த்தார்கள். முன்னணி மட்டும் நிராகரிக்கின்றது என்று அறிக்கை வெளிவந்தால் தாம் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்வது என்று அர்த்தமாகி விடுமே, அதனால் அப்படி சேர்க்கக் கூடாது என்றும் இன்று விக்கினேஸ்வரன் ஐயாவோடு கூட்டணியில் இருக்கும் சில தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.விக்கினேஸ்வரன் ஐயா கொஞ்சம் பிந்தி வந்தார். அவருக்கு நடந்த விவாதத்தின் சுருக்கத்தை சுமந்திரன் சேர் வழங்கினார். நிராகரிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை தானும் ஏற்பதாக விக்கினேஸ்வரன் ஐயாவும் சொன்னது எனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. குறைந்தது முன்னணி தமது நிலைப்பாட்டை தனித்து சொல்ல அறிக்கையில் இடம் வழங்கலாம் என்பதைக் கூட விக்கினேஸ்வரன் ஐயா பரிசீலிக்கவில்லை. இடைக்கால அறிக்கையை பற்றி அந்த அறிக்கையில் பேச வேண்டுமா என்பதை கூட நியாயமான நிலைப்பாடாக கருதலாம். ஆனால் அதை நிராகரிக்கக் கூடாது என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. அன்றுடன் யார் மாற்று என்பது தொடர்பில் எனக்கு தெளிவாக விளங்கியது.

இதை சொல்வதால் எனக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு கருத்து முரண்பாடுகள் இல்லை என்று சொல்வதற்கு இல்லை. முன்னணி சனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரியது தவறு எனக் கருதுகிறேன். 2013இல் வடக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணிக்க எடுத்த முடிவு உத்தி சார்ந்து தவறு என நான் கருதுகிறேன். முன்னணியின் சில உறுப்பினர்களின் அதி தீவிர தேசியவாதம் வன்மமானது. தேர்தல் அரசியலில் அதி கூடிய விட்டுக்கொடுப்பின்மை, இறுக்கத்தை காட்டுவதாகவும் கருதியது உண்டு. எனினும் கூட்டமைப்பின் தேசிய நீக்க அரசியலுக்கு சவால் கொடுக்க கூடிய தெளிவு உள்ள ஆளுமைகள் உள்ள ஒரே கட்சி என்னை பொறுத்த வரையில் முன்னணி தான்.

- குருபரன் குமாரவடிவேல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின்படியே நடக்கிறார்கள் என்று மிகவும் திட்டமிட்டவகையில் பிரச்சாரம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக உணர்கிறேன். இலங்கையில் கஜேந்திரக்குமாரைத் தவிர அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் தமிழ்த்தேசியத்தைக் கைவிட்டுள்ள நிலையில், தமிழ்த்தேசியத்தின் மிகப்பெரும் குரலாக இன்று இலங்கைக்கு வெளியே ஒலித்துக்கொண்டிருப்பது சீமான் மட்டும்தான். ஆகவே, தமிழ்த்தேசியம் என்பது இந்தியாவின் பொம்மைதான் என்று செய்யப்படும் விசமப் பிரச்சாரம் சீமானைக் குறிவைத்தே நடத்தப்படுவதாக உணர்கிறேன். 

இவ்வாறு, சீமானை இந்தியாவின் கைக்கூலி என்று முகவரியிடும் இந்தப் பிரச்சாரங்களின் பின்னாலிருப்பவர்கள் சீமானின் கருத்தியலுக்குப் பலம்சேர்க்கும் புலம்பெயர் முன்னாள்ப் புலிகள் மற்றும் ஆதரவாளர்களையும் சேர்த்தே இந்தியாவினால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள் அல்லது, இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின்படி செயற்படுபவர்கள் என்று கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், சீமான் இந்தியாவின் ஏஜெண்ட் என்று அவிழ்த்துவிடப்பட்டும் இப்பிரச்சாரங்கள் ஏன் ஈழத்தமிழர்களைக் குறிவைத்தே நடத்தப்படவேண்டும் என்பதையும் ஆராய வேண்டும். 

ஆனால் உண்மை அதுவல்ல. இன்று இந்தியாவிற்கு தமிழகத்தில் இருக்கும் முக்கிய சவால் சீமான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டும் தமிழ்த்தேசிய அரசியல்தான் என்றால் மிகையில்லை. சீமான் முன்னெடுக்கும் தமிழ்த்தேசியம் ஈழத்தமிழர்களுக்குச் சார்பானதென்பதும், சீமான் மூலமான தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலையென்பது மீள் எழுகையினை நோக்கிச் செல்கிறதெனும் இந்திய பிராந்திய வல்லாதிக்கத்தின் அச்சமே, சீமானையும் ஈழத்தமிழரையும் முற்றாகப் பிரித்துவிடும் இந்தப் பிரச்சாரக் கைங்கரியம் என்றால் அது மிகையில்லை. 

தம்மை முன்னின்று அழித்தது இந்தியாதான் என்று ஈழத்தமிழர்கள் இன்று முற்றிலுமாக நம்பும் நிலையில், ஈழத்தமிழரின் எழுச்சிக்காகவும், சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து வலியுறுத்தும் சீமானை ஈழத்தமிழர்களிடமிருந்து பிரிப்பதன் மூலம் இலாபம் அடையப் போவது யாரென்று தேடினால் இந்த விசமப் பிரச்சாரம் எங்கிருந்து வருகிறதென்பது புரியும். 

அத்துடன், இவ்வகையிலான பிரச்சாரத்தை இன்னொரு பிரிவினரும் முன்னெடுக்கின்றனர். சிங்களவர்கள் நல்லவர்கள், இந்தியாவை ஈழத்தமிழர்கள் இன்றுவரை நம்பியிருப்பதாலேயே தமிழர்களை அவர்கள் அழிக்கிறார்கள் எனூம் பிரச்சாரமும் முன்வைக்கப்படுகிறது. 1987 ஆம் ஆண்டுடன் இந்தியாவினது உண்மை முகம் மிகத்தெளிவாக ஈழத்தமிழருக்கு உணர்த்தப்பட்டு, 2009 இல் வெளிப்படையாகவே இந்தியா ஈழத்தமிழர்மீதான இனக்கொலையினை நடத்தி முடித்த பின்னரும்கூட, இந்தியாவை ஈழத்தமிழர்கள் இன்னும் நம்புகிறார்கள் என்பதும், அதனாலேயே சிங்களவர்கள் தொடர்ந்தும் கொல்கிறார்கள் என்பது சிங்கள பெளத்த பேரினவாதத்தை ஆதரிக்கும் அல்லது அதற்காகச் செயற்படும் சக்திகளால் மட்டுமே முடியும். 

 

Link to comment
Share on other sites

On 30/7/2020 at 14:16, Elugnajiru said:

இங்கு குறிப்பிடப்படும் பாலா மாஸ்ரர் இப்போது லண்டனில் வாழ்கிறார். இவர் உட்பட ஆனந்தசங்கரி பத்திரிகையாளர் திருநாவுக்கரசு காசி ஆனந்தன் பரந்தன் ராஜன் ஆகியோர் இந்தியாவினது நிகழ்சித்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டாச்சு. தவிர சீமான் இந்தியாவால் களமிறக்கப்பட்ட மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளடங்கலான விக்கியரை எதிர்க்கமாட்டார் காரணம் அப்படிப்பேசினால் மத்தியில் தமிழகம் ஈழம் தொடர்பாகக் கொள்கைவகுப்போருக்குகச் சினம் வந்துவிடும் என்பதால். கதையோட கதையாக இதையும் பாருங்கோ

பையன் அவர்களே,

கருணா பிள்ளையான் ஒரு பொருட்டல்ல

 

மக்களுக்கு எப்போதுமே இரண்டு தேர்வுகளுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும். அந்த வகையில்தான் கஜேந்திரகுமார், மற்றும் விக்கி அவர்களை குறிப்பிடுகிறார் சீமான். மிகுதியை தாயக மக்கள் செயல்படுத்துவார்கள் அல்லவா?!

2010 என நினைக்கிறேன். அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கஜேந்திர குமாரையும் ஆதரியுங்கள் என நான் உட்பட சிலர் இங்கு எழுதியபோது, ஒற்றுமை, தீர்வுப்பொதி என “சம்பந்த” வுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இன்று குய்யோ முறையோ என கத்துகிறார்கள்.

அரசியலில் ஒருமுறை தப்புக்கணக்கு போட்டால் அது பல சந்ததிகளை அழித்துவிடும் அல்லது பின்னோக்கி தள்ளிவிடும். இனிமேலாவது மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎07‎-‎2020 at 16:08, பையன்26 said:

க‌ருணாவுக்கு ஓட்டு போட‌ வேண்டாம் என்று எம் உற‌வுக‌ளை அன்போடு கேட்டு கொள்ளுகிறார் அண்ண‌ன் சீமான் 

 

தான் போக வழியில்லையாம் மூஞ்சுறு ...........😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தான் போக வழியில்லையாம் மூஞ்சுறு ...........😂😂😂

எட்டப்பர் கூட்டங்களுக்கு  எப்ப எங்கை நல்லது புடிச்சிருக்கு?
எவனை எப்ப கவுக்கலாம் எண்டு கண்ணுக்கை எண்ணை ஊத்திக்கொண்டு திரியுற கூட்டங்களுக்கு நல்லதும் தெரியாது கெட்டதும் தெரியாது.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, இசைக்கலைஞன் said:

மக்களுக்கு எப்போதுமே இரண்டு தேர்வுகளுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும். அந்த வகையில்தான் கஜேந்திரகுமார், மற்றும் விக்கி அவர்களை குறிப்பிடுகிறார் சீமான். மிகுதியை தாயக மக்கள் செயல்படுத்துவார்கள் அல்லவா?!

 

தமிழ்த் தேசியத்தை ஒற்றுமையாக முன்னெடுக்காத கட்சிகள் தனிநபர்களாக பாராளுமன்றம் செல்வது பன்மைத்துவமாக இருக்கலாம். ஆனால் எதுவித பலனும் தராத ஆண்டுகளாக அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளும் இருக்கும்.

தாயக மக்கள் எப்படியான தீர்ப்பை வழங்குவார்கள் என்று நாளை தெரியும். அவர்களை “மொக்குக் கூட்டம்” என்று வசைபாடாவிட்டால் சரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட வீட்டில 2சைக்கிளுக்கு, 2மீனுக்கு போட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஏராளன் said:

எங்கட வீட்டில 2சைக்கிளுக்கு, 2மீனுக்கு போட்டோம்.

நல்ல முடிவு... ஏராளன். பாராட்டுக்கள்.
வீட்டுக்கு... போடாமல் விட்டது, மிக்க மகிழ்ச்சி. :)   

நான்... ஊரில், இருந்திருந்தால்... எல்லா வாக்குகளும், 
🚴‍♂️ சைக்கிளுக்கே 🚴‍♀️.. போட வைத்திருப்பேன். :grin:

Link to comment
Share on other sites

On 30/7/2020 at 12:38, பையன்26 said:

க‌ருணாவுக்கு ஓட்டு போட‌ வேண்டாம் என்று எம் உற‌வுக‌ளை அன்போடு கேட்டு கொள்ளுகிறார் அண்ண‌ன் சீமான் 

 

தல,
எங்களுக்கு ஒரு ஆணியும் பிடுங்க வேண்டாம். உங்களுடைய குடும்ப பஞ‍்சாயத்தை பருங்கோ.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, zuma said:

தல,
எங்களுக்கு ஒரு ஆணியும் பிடுங்க வேண்டாம். உங்களுடைய குடும்ப பஞ‍்சாயத்தை பருங்கோ.
 

 

 

உண்ணாவிரதத்தில் கருணாநிதி

இதயக்கோவில் எம் ஜி ஆர் அவர்களின் ...

 

Link to comment
Share on other sites

21 hours ago, ரஞ்சித் said:

தம்மை முன்னின்று அழித்தது இந்தியாதான் என்று ஈழத்தமிழர்கள் இன்று முற்றிலுமாக நம்பும் நிலையில், ஈழத்தமிழரின் எழுச்சிக்காகவும், சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து வலியுறுத்தும் சீமானை ஈழத்தமிழர்களிடமிருந்து பிரிப்பதன் மூலம் இலாபம் அடையப் போவது யாரென்று தேடினால் இந்த விசமப் பிரச்சாரம் எங்கிருந்து வருகிறதென்பது புரியும். 

அத்துடன், இவ்வகையிலான பிரச்சாரத்தை இன்னொரு பிரிவினரும் முன்னெடுக்கின்றனர். சிங்களவர்கள் நல்லவர்கள், இந்தியாவை ஈழத்தமிழர்கள் இன்றுவரை நம்பியிருப்பதாலேயே தமிழர்களை அவர்கள் அழிக்கிறார்கள் எனூம் பிரச்சாரமும் முன்வைக்கப்படுகிறது. 1987 ஆம் ஆண்டுடன் இந்தியாவினது உண்மை முகம் மிகத்தெளிவாக ஈழத்தமிழருக்கு உணர்த்தப்பட்டு, 2009 இல் வெளிப்படையாகவே இந்தியா ஈழத்தமிழர்மீதான இனக்கொலையினை நடத்தி முடித்த பின்னரும்கூட, இந்தியாவை ஈழத்தமிழர்கள் இன்னும் நம்புகிறார்கள் என்பதும், அதனாலேயே சிங்களவர்கள் தொடர்ந்தும் கொல்கிறார்கள் என்பது சிங்கள பெளத்த பேரினவாதத்தை ஆதரிக்கும் அல்லது அதற்காகச் செயற்படும் சக்திகளால் மட்டுமே முடியும். 

2009ற்கு பின் மனவழுத்தத்துடன் வாழ்வதாகவும் விடிவுக்கான பாதை தெரியவில்லை, குழப்பமாக இருப்பதாகவும் எங்கோ நீங்கள் எழுதியதை படித்ததாக நினைவு. சிறிலங்காவும், இந்தியாவும் எதிரிகள். ஆனால், சீமானில் விடிவுக்கான நம்பிக்கை வந்திருப்பதாக தெரிகிறது. பலருக்கும் நம்பிக்கைதான் வாழ்க்கை, இல்லையா? இந்த நம்பிக்கை மனநிம்மதியை தர வாழ்த்துகள். 

Link to comment
Share on other sites

40 minutes ago, குமாரசாமி said:

 

உண்ணாவிரதத்தில் கருணாநிதி

இதயக்கோவில் எம் ஜி ஆர் அவர்களின் ...

 

கருணாநிதிக்கு இது டபுல பொருந்தும். எம் ஜி ஆர் உயிரோடுயிருக்கும் வரை எமது போராட்டத்திதை நியாயமாக ஆதரித்தவர். அவரும் உயிரோடு இருந்து சுயநல அரசியலுக்கு பாவித்தால் அவருக்கும் இது பொருத்தும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.