Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி

Featured Replies

10 minutes ago, பெருமாள் said:

மேலும் இந்த தேர்தல் நியாயமாய் நடந்ததா என்றால் இல்லை என்றே கூறனும்  .

(1) யாழ் மாவட்டத்தை விட அதிகளவு வாக்குகள் கொண்ட மாவட்டங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ் மாவட்ட முடிவு அறிவிக்க தாமதமானது ஏன்?
(2) மூன்று வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒரு வீடியோவில் சுமந்திரனுக்காக தனது முடிவு மாற்றப்பட்டதாக சித்தார்த்தன் விசனப்படுகிறார். இது ஏன் நடந்தது?
(3) இன்னொரு வீடியோவில் சசிகலா ரவிராஜ் அழுது கொண்டு வெளியேறுகிறார். அவரது மகள் “அப்பாவைக் கொன்ற மாதிரி எங்களையும் கொன்று விடுவார்கள். வா அம்மா போய்விடுவோம்” என்கிறார் அழுதபடியே. தனது வெற்றி சுமந்திரனுக்காக மாற்றப்பட்டு விட்டது என சசிகலா ரவிராஜ் கூறுகிறார். இது ஏன் நடந்தது?
மாலை 6 மணிக்கு எண்ணி முடிக்கப்பட்டு இரவு 12 மணிவரை முடிவு அறிவிக்காமல் தாமதப்படுத்திய வேளையில்தான் இவை நடைபெற்றன. வாக்கு என்னும் இடத்துக்கு சுமத்திரன் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் ?  எழும் நியாயமான சந்தேகத்தை தேர்தல் திணைக்களம் போக்குமா?

ஒரு விடயத்தை யோசித்து பாருங்கள்: தமிழர் பிரதேசத்திலேயே தமக்கு தேவையானவர் ஒருவரைன்வெல்ல வைக்க இவ்வளவு பாடுபட்ட இந்த கும்பல்  சிங்கள பிரதேசங்களில் எந்தளவுக்கு முயற்சித்திருப்பார்கள்.  

  • Replies 119
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் என்றால் என்னென்று அறியாத சுமந்திரன் உண்மையில் இந்த தேர்தலிலும் தோற்றே விட்டார். அதுவும் பகிரங்கமாக நான் 1 இலட்சம் வாக்குகளால் வெல்வேன் என்று அறிவித்து போட்டியிட்ட பின்னும் மக்களால் நிராகரிக்கப்பட்டதை மறைத்து சிங்கள எஜமானர்களின் அராஜக அரசியலின் தயவோடு மீண்டும் வெற்றி பெற்றதாகக் காட்டப்பட்டுள்ளாரே தவிர..

கூட்டமைப்பில் வெற்றி பெற்ற அனைவரும் சிங்களத்தின் கைக்கூலிகள் என்பது வெள்ளிடை மலை. இவர்கள் முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு அழிப்பின் போதும் பின்னும் முண்டுகொடுத்தவர்களாவர். 

55 minutes ago, பெருமாள் said:

இங்கு சுமத்திரனுக்கு சார்பாக கருத்து  இடுபவர்களுக்கு உண்மை தெரிந்தும் தங்களின் ஈகோ அடிபடக்கூடாது என்பதில் குறியாக உள்ளார்கள் இனி இங்கு எவ்வளவுதான் உண்மையை தேடிகொண்டுவந்து கொட்டினாலும் முயலுக்கு மூன்று கால்தான் .

இவர்கள் குறிப்பிடுவதைப்ம்பார்த்தால் மாட்டுக்கு எத்தனை கால் என்று கேட்டால் ஆட்டுக்கு நாலு கால் என்றுப்சமாளிக்கிரார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஆங்கிலப் புலமை இருந்தும் இது வரை சர்வதேசத்துடன் பேசாமல் இருந்த சுமத்திரன் இனி மேல் தான் பேச போறாராக்கும் 
 

அக்கோய்,

உங்கள் அண்ணருக்கு கிழக்கு மாகாண Governor ஆக நியமனம் கிடைக்கும் என பட்சி சொல்கிறது. பட்சியின் செய்தி உண்மையோ 😀

செய்தி உண்மையானால் முசிலிம்களுக்கு காலம் சரியில்லை என்பது உண்மை. 😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இங்கு சுமத்திரனுக்கு சார்பாக கருத்து  இடுபவர்களுக்கு உண்மை தெரிந்தும் தங்களின் ஈகோ அடிபடக்கூடாது என்பதில் குறியாக உள்ளார்கள் இனி இங்கு எவ்வளவுதான் உண்மையை தேடிகொண்டுவந்து கொட்டினாலும் முயலுக்கு மூன்று கால்தான் .

ஆனால் சுமத்திரன் எனும் பதவி வெறி பிடித்தவர் எப்படியும் சுத்துமாத்து பண்ணி வருவார் என்பது முன்னமே தெரியும் எழுதியும் உள்ளோம் இனி கொலை கொள்ளை விபத்துக்கள் பெண்கள் மீதான வன்முறைகள் காரணமில்லா தற்கொலைகள் மலிந்த இடமாக வடகிழக்கு மாறும் வடமராட்ச்சியில் இன்றே பெண் விதானையின் தாலிக்கொடி பட்டப்பகலில் அறுக்கப்பட்டுள்ளது .போதைவஸ்த்து பாவனைகள் குடிவகைகள் மலிந்த பூமியின் நரகமாய் மாறும் கடவுள் கூட காப்பற்ற முடியாத மக்களாய் நம் சொந்தங்கள் .

 ""இனி கொலை கொள்ளை விபத்துக்கள் பெண்கள் மீதான வன்முறைகள் காரணமில்லா தற்கொலைகள் மலிந்த இடமாக வடகிழக்கு மாறும் வடமராட்ச்சியில் இன்றே பெண் விதானையின் தாலிக்கொடி பட்டப்பகலில் அறுக்கப்பட்டுள்ளது .போதைவஸ்த்து பாவனைகள் குடிவகைகள் மலிந்த பூமியின் நரகமாய் மாறும் கடவுள் கூட காப்பற்ற முடியாத மக்களாய் நம் சொந்தங்கள் ."" என்று கூறுவது,  இதற்கு முன்னர் நிலமை மிக அழகாய் இருந்தது போல அர்த்தப்படுமல்லவா ? அரசிற்கு நற்சான்று கொடுப்பதாகிவிடும்.  ☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

மேலும் இந்த தேர்தல் நியாயமாய் நடந்ததா என்றால் இல்லை என்றே கூறனும்  .

(1) யாழ் மாவட்டத்தை விட அதிகளவு வாக்குகள் கொண்ட மாவட்டங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ் மாவட்ட முடிவு அறிவிக்க தாமதமானது ஏன்?
(2) மூன்று வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒரு வீடியோவில் சுமந்திரனுக்காக தனது முடிவு மாற்றப்பட்டதாக சித்தார்த்தன் விசனப்படுகிறார். இது ஏன் நடந்தது?
(3) இன்னொரு வீடியோவில் சசிகலா ரவிராஜ் அழுது கொண்டு வெளியேறுகிறார். அவரது மகள் “அப்பாவைக் கொன்ற மாதிரி எங்களையும் கொன்று விடுவார்கள். வா அம்மா போய்விடுவோம்” என்கிறார் அழுதபடியே. தனது வெற்றி சுமந்திரனுக்காக மாற்றப்பட்டு விட்டது என சசிகலா ரவிராஜ் கூறுகிறார். இது ஏன் நடந்தது?
மாலை 6 மணிக்கு எண்ணி முடிக்கப்பட்டு இரவு 12 மணிவரை முடிவு அறிவிக்காமல் தாமதப்படுத்திய வேளையில்தான் இவை நடைபெற்றன. வாக்கு என்னும் இடத்துக்கு சுமத்திரன் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் ?  எழும் நியாயமான சந்தேகத்தை தேர்தல் திணைக்களம் போக்குமா?

சுமந்திரன் தெரிவு தவறானது என எழும் நியாயமான சந்தேகத்துக்குரிய பல விடயங்கள் சாட்சிகளாகவும், வெளிப்படையாகவும்  இருக்கும்போது எதற்காக எங்கள் சட்டவாளர்களும், அரசியல் செய்யவந்த மேதைகளும் சனநாயக முறைப்படியேனும் நீதிமன்றம் சென்று எதுவும் செய்யாது வாளாவிருக்கின்றனர்... புரியவில்லை. தமிழினத்தின்மேல் சவாரி செய்து இன்பம்காண சிங்களவர்தான் முயற்சிசெய்கிறார்கள் என்றால் தமிழர்களுமா....?😟   

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் புரியாமலா இன்னும் தமிழராக இருக்கிறீங்கள்.😀

 

  • கருத்துக்கள உறவுகள்

அச்சுறுத்துதல்  மற்றும் அழைத்துவருவோரே ஏமாற்றுதல் போன்ற பிறழ்வுநிலைகள் மிகவும் கேவலமான அரசியலாகும்.  அப்படியொரு அரசியல் செய்வதைவிட ஒதுங்கியிருக்கலாம் . மக்களுக்கு உண்மையிலேயே சேவை செய்யும் மனப்பான்மையிருந்தால்  இன்றிருக்கும் இலங்கைத் தீவிலே பலவழிகளைத் திறக்கலாம். எற்கனவே கள உறவு ஒருவரும் கூட்டமைப்பைச் சுட்டி எழுதியிருந்தார்.  எனவே பதவிகளுக்கும் சுகபோகத்திற்குமாக தமது கல்வி தொழிற் தகமைகளைக்கூட  மறந்தோராக இப்படித் தேவையா (?) என்று ஏன் சிந்திக்க மறுக்கின்றார்கள்.  மனிதாபிமானத்தோடு சிந்திப்பதே  முதலாவது அரசியற் செயற்பாடாக இருக்க முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

 

யாழ் களத்தில் நடந்த புடுங்குப்பாட்டை நேரடியாக இதில் காணக்கிடைக்கிறது 😂😂

நன்றி நெடுக்ஸ் 👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் ..மிக சரியாக கணித்த தாங்கள் உண்மையிலே ஒரு தீர்க்க தரிசி..👍

ஒரு அரிசியும் கிடையாது அங்கிருப்பவர்கள் உங்கள் சகோதரர் என்று யோசியுங்கள் தானாகவே வந்து விழும்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

 

இந்த லட்ஷணத்தில விருப்பு வாக்கு பெற்று வென்றாராம் நம்புங்கள் மக்களே நம்புங்கள்.

7 hours ago, Paanch said:

சுமந்திரன் தெரிவு தவறானது என எழும் நியாயமான சந்தேகத்துக்குரிய பல விடயங்கள் சாட்சிகளாகவும், வெளிப்படையாகவும்  இருக்கும்போது எதற்காக எங்கள் சட்டவாளர்களும், அரசியல் செய்யவந்த மேதைகளும் சனநாயக முறைப்படியேனும் நீதிமன்றம் சென்று எதுவும் செய்யாது வாளாவிருக்கின்றனர்... புரியவில்லை. தமிழினத்தின்மேல் சவாரி செய்து இன்பம்காண சிங்களவர்தான் முயற்சிசெய்கிறார்கள் என்றால் தமிழர்களுமா....?😟   

அவர்களுக்கு தெரியும் அப்படி நடக்க முடியாதென்று. அதனால்தான் எல்லோரும் பின்னடிக்கிறார்கள். இவர்கள் நேர்மையானவர்களாக இருந்திருந்தால் மீளவும் என்னும்படி கோரலாம், நீதிமன்றம் செல்லலாம். நிச்சயமாக அப்படி செய்யமாட்ட்டார்கள். ஏன் என்றால் இதில் எழுதும் போராளிகளுக்கும், அங்குள்ள பெருங்குடி மக்களுக்கு ம் அந்த உண்மை நன்றாகவே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Robinson cruso said:

நீதிமன்றம் செல்லலாம். நிச்சயமாக அப்படி செய்யமாட்ட்டார்கள்.

நிச்சயமாக அப்படி செய்யமாட்டார்கள். இலங்கையின் நீதித்துறை அப்பப்பா! உடனேயே நீதி கிடைத்துவிடும் நம்புங்கள். சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட்டபோது அவருக்கு விழுந்த வாக்குகள் பாதி எரிந்த நிலையில் பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டது. திட்டமிட்டு அரங்கேறிய நாடகம். இதெல்லாம் சாத்தியமா? சுமந்திரன் போன்றோரும், அவருக்கு  சாமரம் வீசுவோரும் நம்பலாம்.

Just now, satan said:

நிச்சயமாக அப்படி செய்யமாட்டார்கள். இலங்கையின் நீதித்துறை அப்பப்பா! உடனேயே நீதி கிடைத்துவிடும் நம்புங்கள். சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட்டபோது அவருக்கு விழுந்த வாக்குகள் பாதி எரிந்த நிலையில் பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டது. திட்டமிட்டு அரங்கேறிய நாடகம். இதெல்லாம் சாத்தியமா? சுமந்திரன் போன்றோரும், அவருக்கு  சாமரம் வீசுவோரும் நம்பலாம்.

அதே யாழ்ப்பாண நீதிமன்றம் ராணுவத்துக்கும், அரசுக்கும் எதிராக மக்களுக்கு நியாயமான தீர்ப்புக்களை கொடுத்ததை மறக்கமுடியாது. மீண்டும் வாகு எண்ணுவதட்கு நீதிமன்றம் செல்லத்தேவை இல்லை. அரச அதிபர் கூற்றுப்படி நேர்மையாக வாக்குகள் என்னப்பட்டுள்ளது. எனவே நீங்கள்பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றால் நாங்கள் ஓரும் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா மகிந்தா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் முறைகேடு நடக்கிறது என்று கூப்பாடு போட்ட மஹிந்த தேசப்பிரிய. மகிந்த வென்றதாக அறிவித்தவுடன், தேர்தல் முறைகேடு எதுவும் நடக்கவில்லையென பல்டி அடித்துவிட்டார் உயிர்பயம், ஐயா உயிர்பயம். 

Just now, satan said:

சரத் பொன்சேகா மகிந்தா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் முறைகேடு நடக்கிறது என்று கூப்பாடு போட்ட மஹிந்த தேசப்பிரிய. மகிந்த வென்றதாக அறிவித்தவுடன், தேர்தல் முறைகேடு எதுவும் நடக்கவில்லையென பல்டி அடித்துவிட்டார் உயிர்பயம், ஐயா உயிர்பயம். 

அப்போது தேர்தல் ஆணையகம் இருக்கவில்லை. தேர்தல் அணையாளராகவே இருந்தார். இப்போது 19 அரசியலமைப்பின்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது இருந்த நிலைமை இல்லை இப்போது. மேலும் இந்த கூட்ட்டமைப்பின் mp களைநம்பி யாருமே இல்லை. இவர்கள் இருந்தாலும் ஒன்றுதான், இல்லாவிடடாலும் ஒன்றுதான். எனவே அங்குள்ள அதிகாரிகள், அரச அதிபர், தேர்தல் கண்காணிப்பாளர்கள் , கட்சிகளின் பிரதிநிதிகள் யாவருமே ஏற்றுக்கொண்ட பின்னர் விதண்டாவாதம் புரிவது நல்லவர்களுக்கு அழகில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

எது இருந்தாலும், மாறினாலும் நாம் கதைப்பது இலங்கை சட்டம். ஒரு விடுதலை போரை பயங்கரவாதமாக்கி அதை அழித்து அதை நிஞாயப்படுத்தும் நாடு, நீதி துறை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ப. தெய்வீகன் முகநூலில் எழுதியது. வாசிக்க விருப்பம் இல்லாதவர்கள் வேகமாக scroll செய்யவும்😀

 

ஒரு பெண்ணின் கண்ணீருக்கான பெறுமதி என்பது மிக மிக அதிகம். அதுவும் சுமந்திரனுக்கு எதிரான ஒரு பெண்ணின் கண்ணீருக்கான பெறுமதி அதிகமோ அதிகம். நேற்றிரவு யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தையும் அதையொட்டி முழுவீச்சில் நடைபெற்றுவரும் பிரச்சாரத்தையும் ஓரளவுக்கு இவ்வாறு புரிந்துகொள்ளமுடியும்.

தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குக்கள் வாக்குச்சாவடிகளிலிருந்து வாக்கு எண்ணும் இடத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், எண்ணப்பட்ட வாக்குகள் பகுதி பகுதியாக அறிவிக்கப்படும். ஆனால், இறுதி அறிவிப்பு வரும்வரை எந்த முடிவுக்கும் வந்துவிடமுடியாது. இது உலகெங்கிலும் நடைபெறுகின்ற பொதுவான தேர்தல் வழமை. 

மாமனிதர் ரவிராஜ் அவர்களின் மனைவி சசிகலா அவர்களது விடயத்தில் நடைபெற்றதும் இதுதான். இறுதியாக வரவிருந்த பல தொகுதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னர், அவர் 
மற்றவர்களைவிட முன்னிலையில் இருந்திருக்கலாம். முதல் தடவையாக தேர்தலில் போட்டியிட்ட அவர், அதனை வெற்றியாகவே கண்டு பரவசப்பட்டிருக்கலாம். ஆனால், படிப்படியாக ஏனைய தொகுதி வாக்குகள் வந்து சேர்ந்தபோது, "அமைதிப்படை" படத்தில் 
சுயேட்சை வேட்பாளர் நாகராஜசோழனுக்கு வாக்கு எகிறிக்கொண்டுபோனதுபோல - நிலமை மாறி - கீழிருந்த சித்தார்த்தனும் சுமந்திரனும் மேலேறியிருக்கிறார்கள். அவ்வளவுதான். சின்னக்குழந்தையும் புரிந்துகொள்ளக்கூடிய சிம்பிளான தேர்தல் நடைமுறை இது. 

ஆனால், இவரது ஆத்திரம் ஆரோகணிப்பதற்கு காரணமாக அங்கு இன்னொரு சம்பவமும் நடத்துவிட்டது. 

கொழும்பிலிருந்துகொண்டு உள்ளடி வேலைகளினால் தனது வெற்றியை தீர்மானித்துக்கொண்டிருக்கிறார் என்று எதிர்த்தரப்பினர் மத்தியில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட பிரச்சாரத்தை பொய் என்று நிரூபிப்பதற்காக, தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிவிட்டார் என்ற தகவல் உறுதியான பின்னர், யாழ்ப்பாணத்தில் தனது வீட்டிலிருந்த சுமந்திரன், மத்திய கல்லூரி வளாகத்துக்கு வந்தார். 

இந்த நேரத்தில், தான் நம்பியிருந்த வெற்றி கைதவறிப்போன விரக்தியிலிருந்த சசிகலா அவர்களும் அவரது மகளும் வாக்கெண்ணுமிடத்திலிருந்து கோபத்தோடு வெளியேறியிருக்கிறார்கள். தங்கள் தோல்விக்கு சுமந்திரனே பொறுப்பென்று பொரிந்து தள்ளிவிட்டுப்போயிருக்கிறார்கள். 

மத்திய கல்லூரி வளாகத்திற்குள் சசிகலா அவர்கள் கூறியதுபோலவும் - பின்னர் அவரது மகள் முகநூலில் பதிவுசெய்துள்ளதுபோலவும் - இந்த விடயத்தை சற்று ஆழமாக பார்த்தால் - 

சுமந்திரனும் சயந்தனும் வாக்கெண்ணும் இடத்துக்கு வந்து அதிகாரிகளுக்கு அருகிலிருந்துகொண்டார்கள் என்றும் சுமந்திரனுக்கான வெற்றியை தன்னிடமிருந்து பறிந்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். 

1) யாழ் தேர்தல் களம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை முன்னதாகவே தெரிந்து, கண்ணுக்குள் எண்ணைவிட்டுக்கொண்டு பணிபுரிகின்ற அதிகாரிகள் மத்தியில் இது சாத்தியமா?

2) அப்படியே ஒரு சம்பவம் இடம்பெறக்கூடிய சூழ்நிலை அங்கு நிலவியது என்று எடுத்துக்கொண்டாலும், சுமந்திரனுக்கு கிடைத்த வாக்குகள் 27 734. அடுத்த இடத்திலுள்ள சித்தார்த்தனுக்கு கிடைத்த வாக்குகள் 23 740. சசிகலா அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் அதற்கும் கீழ்தானிருக்கவேண்டும். கிட்டத்தட்ட நாலாயிரம் வாக்குகள் வித்தியாசம். வாக்கு எண்ணும் நிலையத்துக்குள் கோத்தபாய ராஜபக்ஷவே வந்தால்கூட 4000 வாக்குகளை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு போட்டு, வெற்றியை பறிப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா? 

3) அப்படியே சசிகலாவுக்கு வாக்கு முறைகேடு நடைபெற்றிருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் அவருக்கு அருகிலிருக்கும் சித்தார்த்தன்தானே அவரது முதல் குற்றவாளியாக இருக்கமுடியும். ஏன் சுமந்திரனை குற்றப்படுத்துகிறார்?

எது எப்படியோ, சுமந்திரன் அங்கு அதிரடிப்படையினர் சமேதராக வந்து இறங்க - சுமந்திரனின் வெற்றியென்பது எப்போதும் முறைகேடாக மாத்திரமே அவருக்கு கிடைப்பதற்கு சாத்தியமுள்ளது என்று தீராத நம்பிக்கைகொண்ட "இனிய தோழர்கள் கூட்டம்" அவரைக்கண்டவுடன் குதூகலமாக -  சசிகாலா அவர்களும் மகளும் அந்தநேரம் பார்த்து அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேற - அத்தனை கமராக்களும் அது அறுசுவையாகிப்போனது. 

ஆனால், இங்குள்ள மிக முக்கியமான விடயம் - சசிகலா அவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர். அவரே சுமந்திரனுக்கு எதிராக இவ்வாறு நடந்துகொண்டதானது, தேர்தலில் கூட்டமைப்பு அடைந்துள்ள சரிவோடு இன்னமும் கூடுதல் கறையை ஏற்படுத்தியிருக்கிறது. It was truly an ugly event.

சசிகலா அவர்கள் தனக்கு உண்மையிலேயே இந்தத்தேர்தலில் துரோகமிழைக்கப்பட்டிருக்கிறது என்று கருதினால், இதனை நேரடியாக நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லலாம். அவரது வாக்குப்பெட்டி மீண்டும் பிரிக்கப்பட்டு எண்ணுவதற்கு நீதிமன்ற உத்தரவைப்பெறலாம். வழியில்லாமல் இல்லை.

இவை எதையும் கிஞ்சித்தும் தெரிந்துகொள்ளாமல், அவரின் அறியாமையை தங்களது அரசியல் சுயலாபத்துக்கு பயன்படுத்தி, சுமந்திரனின் மீது சேறடிக்கும் கூட்டத்துக்கு சசிகலா அவர்கள் பலியாடாகவேண்டியதில்லை.

தேர்தல் முடிவுகளை கேட்டபடி கடைவாய்நீர் வடிய அப்படியே நித்திரையான சிலது, தூக்க கலக்கத்தில் எழுந்து நின்று "சுமந்திரனாம் அடியுங்கடா... அடியுங்கடா" - என்று கத்தியபடி அரைகுறையாக ஓடுவதை பார்த்தால், கொரோனாவே அஞ்சப்போகிறது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people

MP இவர்தான்.... ஆனால்,  பெற்ற வாக்குகள்... இவருடையதில்லை. :grin: 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலா அவர்களது கணவர் மாமனிதர் ரவிராஜ்  அவர்களது சிலையை சுமந்திரன் தனது சொந்தச்செலவில் செய்ததாக சிலையின் கீழ்பக்கத்தில் எழுதப்பட்டிருக்கு எனவும் அச்சிலையில் ரவிராJ அவர்களது பெயருக்கு முன்பாக மாமனிதர் எனும் சிறப்பை எழுத சுமந்திரன் அனுமதிக்கவில்லை எனவும் அதை சசிகலா  அவர்கள் அப்போது எதிர்க்கவில்லை எனவும் அறியமுடிகிறது.

சசிகலா அவர்கள் தெரியாத்தனமாக இல்லை தெரிந்துகொண்டே இந்தக்கூட்டத்துடன் சேர்ந்துவிட்டார் சேர்ந்த இடம் சரியில்லை ஆகவே பட்டு உணரவேண்டியதுதான்.

ஆனால் இவர் போகுது விடு என சத்தமில்லாது வீட்டுக்குள்(?) போய் முடங்கியிந்தால் கூட்டமைப்பில் சுமந்திரன் செய்யும் சுத்துமாத்துகளது தொடர்ச்சியாக இதுவும் ஒன்று என் வெளியில வந்திருக்காது  இச்செய்திமூலம் "சுமந்திரன் சுத்துமாத்தில் பி எச் டி எனும் பட்டத்தை உலகறிய வாங்கிவிட்டதை நிரூபிச்சுள்ளார்.

2 hours ago, கிருபன் said:

ப. தெய்வீகன் முகநூலில் எழுதியது. வாசிக்க விருப்பம் இல்லாதவர்கள் வேகமாக scroll செய்யவும்😀

 

ஒரு பெண்ணின் கண்ணீருக்கான பெறுமதி என்பது மிக மிக அதிகம். அதுவும் சுமந்திரனுக்கு எதிரான ஒரு பெண்ணின் கண்ணீருக்கான பெறுமதி அதிகமோ அதிகம். நேற்றிரவு யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தையும் அதையொட்டி முழுவீச்சில் நடைபெற்றுவரும் பிரச்சாரத்தையும் ஓரளவுக்கு இவ்வாறு புரிந்துகொள்ளமுடியும்.

தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குக்கள் வாக்குச்சாவடிகளிலிருந்து வாக்கு எண்ணும் இடத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், எண்ணப்பட்ட வாக்குகள் பகுதி பகுதியாக அறிவிக்கப்படும். ஆனால், இறுதி அறிவிப்பு வரும்வரை எந்த முடிவுக்கும் வந்துவிடமுடியாது. இது உலகெங்கிலும் நடைபெறுகின்ற பொதுவான தேர்தல் வழமை. 

மாமனிதர் ரவிராஜ் அவர்களின் மனைவி சசிகலா அவர்களது விடயத்தில் நடைபெற்றதும் இதுதான். இறுதியாக வரவிருந்த பல தொகுதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னர், அவர் 
மற்றவர்களைவிட முன்னிலையில் இருந்திருக்கலாம். முதல் தடவையாக தேர்தலில் போட்டியிட்ட அவர், அதனை வெற்றியாகவே கண்டு பரவசப்பட்டிருக்கலாம். ஆனால், படிப்படியாக ஏனைய தொகுதி வாக்குகள் வந்து சேர்ந்தபோது, "அமைதிப்படை" படத்தில் 
சுயேட்சை வேட்பாளர் நாகராஜசோழனுக்கு வாக்கு எகிறிக்கொண்டுபோனதுபோல - நிலமை மாறி - கீழிருந்த சித்தார்த்தனும் சுமந்திரனும் மேலேறியிருக்கிறார்கள். அவ்வளவுதான். சின்னக்குழந்தையும் புரிந்துகொள்ளக்கூடிய சிம்பிளான தேர்தல் நடைமுறை இது. 

ஆனால், இவரது ஆத்திரம் ஆரோகணிப்பதற்கு காரணமாக அங்கு இன்னொரு சம்பவமும் நடத்துவிட்டது. 

கொழும்பிலிருந்துகொண்டு உள்ளடி வேலைகளினால் தனது வெற்றியை தீர்மானித்துக்கொண்டிருக்கிறார் என்று எதிர்த்தரப்பினர் மத்தியில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட பிரச்சாரத்தை பொய் என்று நிரூபிப்பதற்காக, தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிவிட்டார் என்ற தகவல் உறுதியான பின்னர், யாழ்ப்பாணத்தில் தனது வீட்டிலிருந்த சுமந்திரன், மத்திய கல்லூரி வளாகத்துக்கு வந்தார். 

இந்த நேரத்தில், தான் நம்பியிருந்த வெற்றி கைதவறிப்போன விரக்தியிலிருந்த சசிகலா அவர்களும் அவரது மகளும் வாக்கெண்ணுமிடத்திலிருந்து கோபத்தோடு வெளியேறியிருக்கிறார்கள். தங்கள் தோல்விக்கு சுமந்திரனே பொறுப்பென்று பொரிந்து தள்ளிவிட்டுப்போயிருக்கிறார்கள். 

மத்திய கல்லூரி வளாகத்திற்குள் சசிகலா அவர்கள் கூறியதுபோலவும் - பின்னர் அவரது மகள் முகநூலில் பதிவுசெய்துள்ளதுபோலவும் - இந்த விடயத்தை சற்று ஆழமாக பார்த்தால் - 

சுமந்திரனும் சயந்தனும் வாக்கெண்ணும் இடத்துக்கு வந்து அதிகாரிகளுக்கு அருகிலிருந்துகொண்டார்கள் என்றும் சுமந்திரனுக்கான வெற்றியை தன்னிடமிருந்து பறிந்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். 

1) யாழ் தேர்தல் களம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை முன்னதாகவே தெரிந்து, கண்ணுக்குள் எண்ணைவிட்டுக்கொண்டு பணிபுரிகின்ற அதிகாரிகள் மத்தியில் இது சாத்தியமா?

2) அப்படியே ஒரு சம்பவம் இடம்பெறக்கூடிய சூழ்நிலை அங்கு நிலவியது என்று எடுத்துக்கொண்டாலும், சுமந்திரனுக்கு கிடைத்த வாக்குகள் 27 734. அடுத்த இடத்திலுள்ள சித்தார்த்தனுக்கு கிடைத்த வாக்குகள் 23 740. சசிகலா அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் அதற்கும் கீழ்தானிருக்கவேண்டும். கிட்டத்தட்ட நாலாயிரம் வாக்குகள் வித்தியாசம். வாக்கு எண்ணும் நிலையத்துக்குள் கோத்தபாய ராஜபக்ஷவே வந்தால்கூட 4000 வாக்குகளை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு போட்டு, வெற்றியை பறிப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா? 

3) அப்படியே சசிகலாவுக்கு வாக்கு முறைகேடு நடைபெற்றிருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் அவருக்கு அருகிலிருக்கும் சித்தார்த்தன்தானே அவரது முதல் குற்றவாளியாக இருக்கமுடியும். ஏன் சுமந்திரனை குற்றப்படுத்துகிறார்?

எது எப்படியோ, சுமந்திரன் அங்கு அதிரடிப்படையினர் சமேதராக வந்து இறங்க - சுமந்திரனின் வெற்றியென்பது எப்போதும் முறைகேடாக மாத்திரமே அவருக்கு கிடைப்பதற்கு சாத்தியமுள்ளது என்று தீராத நம்பிக்கைகொண்ட "இனிய தோழர்கள் கூட்டம்" அவரைக்கண்டவுடன் குதூகலமாக -  சசிகாலா அவர்களும் மகளும் அந்தநேரம் பார்த்து அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேற - அத்தனை கமராக்களும் அது அறுசுவையாகிப்போனது. 

ஆனால், இங்குள்ள மிக முக்கியமான விடயம் - சசிகலா அவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர். அவரே சுமந்திரனுக்கு எதிராக இவ்வாறு நடந்துகொண்டதானது, தேர்தலில் கூட்டமைப்பு அடைந்துள்ள சரிவோடு இன்னமும் கூடுதல் கறையை ஏற்படுத்தியிருக்கிறது. It was truly an ugly event.

சசிகலா அவர்கள் தனக்கு உண்மையிலேயே இந்தத்தேர்தலில் துரோகமிழைக்கப்பட்டிருக்கிறது என்று கருதினால், இதனை நேரடியாக நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லலாம். அவரது வாக்குப்பெட்டி மீண்டும் பிரிக்கப்பட்டு எண்ணுவதற்கு நீதிமன்ற உத்தரவைப்பெறலாம். வழியில்லாமல் இல்லை.

இவை எதையும் கிஞ்சித்தும் தெரிந்துகொள்ளாமல், அவரின் அறியாமையை தங்களது அரசியல் சுயலாபத்துக்கு பயன்படுத்தி, சுமந்திரனின் மீது சேறடிக்கும் கூட்டத்துக்கு சசிகலா அவர்கள் பலியாடாகவேண்டியதில்லை.

தேர்தல் முடிவுகளை கேட்டபடி கடைவாய்நீர் வடிய அப்படியே நித்திரையான சிலது, தூக்க கலக்கத்தில் எழுந்து நின்று "சுமந்திரனாம் அடியுங்கடா... அடியுங்கடா" - என்று கத்தியபடி அரைகுறையாக ஓடுவதை பார்த்தால், கொரோனாவே அஞ்சப்போகிறது.

 

 

சுமந்திரன் ஆதரவாளர்கள் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை எழுதுவது எந்த நன்மையையும் தர போவதில்லை. ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் சொலவதால் அது உண்மையாகி விட போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Elugnajiru said:

சசிகலா அவர்களது கணவர் மாமனிதர் ரவிராஜ்  அவர்களது சிலையை சுமந்திரன் தனது சொந்தச்செலவில் செய்ததாக சிலையின் கீழ்பக்கத்தில் எழுதப்பட்டிருக்கு எனவும் அச்சிலையில் ரவிராJ அவர்களது பெயருக்கு முன்பாக மாமனிதர் எனும் சிறப்பை எழுத சுமந்திரன் அனுமதிக்கவில்லை எனவும் அதை சசிகலா  அவர்கள் அப்போது எதிர்க்கவில்லை எனவும் அறியமுடிகிறது.

சசிகலா அவர்கள் தெரியாத்தனமாக இல்லை தெரிந்துகொண்டே இந்தக்கூட்டத்துடன் சேர்ந்துவிட்டார் சேர்ந்த இடம் சரியில்லை ஆகவே பட்டு உணரவேண்டியதுதான்.

ஆனால் இவர் போகுது விடு என சத்தமில்லாது வீட்டுக்குள்(?) போய் முடங்கியிந்தால் கூட்டமைப்பில் சுமந்திரன் செய்யும் சுத்துமாத்துகளது தொடர்ச்சியாக இதுவும் ஒன்று என் வெளியில வந்திருக்காது  இச்செய்திமூலம் "சுமந்திரன் சுத்துமாத்தில் பி எச் டி எனும் பட்டத்தை உலகறிய வாங்கிவிட்டதை நிரூபிச்சுள்ளார்.

பட்டறிந்த அனந்தி எச்சரிக்கை மணி அடித்தாவே, யார் கண்டு கொண்டார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

சுமந்திரன் ஆதரவாளர்கள் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை எழுதுவது எந்த நன்மையையும் தர போவதில்லை. ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் சொலவதால் அது உண்மையாகி விட போவதில்லை.

சிலுவையில் அறையப்பட்ட இயேசுபிரான்கூட மூன்றாம்நாள்தான் உயிர்த்தெழுந்தார் என்கிறார்கள்.
ஆனால் ஐந்தாம் நிலையில் இருந்த சுமந்திரன் ஒரே இரவில் இரண்டாவது நிலைக்கு வந்து அற்புதம் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
இது எப்படி நிகழ்ந்தது என்று சசிகலா ரவிராஜ் மட்டுமல்ல சுமந்திரனின் ஆதரவாளர்கள்கூட திகைத்து நிற்கிறார்கள்.
இங்கு வேடிக்கை என்னவெனில் “சுமந்திரன் நேர்மையானவர். அவர் மோசடி செய்யவில்லை” என்று அவரின் விசுவாசிகளால்கூட கூற முடியவில்லை.
மாறாக, இலங்கை தேர்தல் திணைக்களம் நேர்மையானது. அதில் மோசடி செய்ய முடியாது என்றே கூற முற்படுகிறார்கள்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.