Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டின் முழு நிர்வாகமும் இராணுவத்தின் கைக்குள் – ஏற்கமுடியாது என்கின்றார் சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

M.A.Sumanthiran.jpg

நாட்டின் முழு நிர்வாகமும் இராணுவத்தின் கைக்குள் – ஏற்கமுடியாது என்கின்றார் சுமந்திரன்

மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது நாட்டின் நிர்வாகத்தை இராணுவத்திடம் தாரைவார்ப்பதற்கு சமானனது என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், நாடு இராணுவ மயமாவதாக தாம் கூறியபோது அதனை அரசும் அரசுடன் இணைந்த கட்சிகளும் மறுப்பு தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டினார்.

நாட்டின் சிவில் நிர்வாகத்தை மேற்கொள்ளும் உள்நாட்டு அலுவல்கள் விடயங்கள் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் செல்வதானது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும் அதேவேளை சகல அதிகாரிகளையும் இராணுவம் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

ஒரு நாட்டின் சிவில் நிர்வாகங்களுடனேயே சர்வதேச நாடுகள் தொடர்பினை பேண விரும்பும் நிலையில் அந்தநிலை தற்போது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம் இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் கீழ் சிவில் நிர்வாகத்தினை ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அத்தனை தமிழ் அமைச்சர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

http://athavannews.com/நாட்டின்-முழு-நிர்வாகமும/

இப்படி சொல்லிவிடடாள் எப்படி? ஏற்கமுடியாதுதான். அப்படி என்றால் அதட்குரிய தீர்வு என்ன. சிங்கள குடியேற்றத்தையும் ஏற்க முடியாதுதான். அது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அப்படி என்றால் இந்த தமிழ் தேசியம் என்ன செய்தது? எங்காவது நிறுத்த முடிந்ததா?

அதைத்தான் முதலில் எழுதி இருந்தேன். தமிழ் தேசியம் தொடங்கிய நாளில் இருந்து Reverse கியரில்தான் செல்கிறது. சிங்களம் Forward கியரில் செல்கிறது. தடுக்க முடிந்ததா? இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லிவிடடால் நிறுத்துவான் என்று நப்பாசை உங்களுக்கு.

இப்போது நெடுங்கேணிக்கு வந்து விட்ட்து. மன்னர் பக்கமாக மடு வரையும் வந்து விட்ட்து. இன்னும் கொஞ்ச காலத்துக்குள் கிளிநொச்சி யாழ்ப்பாணம் எண்டு வரும். அதட்கு பின்னர் எல்லோரும் இலங்கையர்களே. தமிழர் சிங்களவர் பிரதேசம் எண்டு இருக்காது. அநேகமாக போகிற போக்கில் தமிழ் தேசியமும் நீடிக்காதுபோலதான் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

இலங்கையர்களே. தமிழர் சிங்களவர் பிரதேசம் எண்டு இருக்காது. அநேகமாக போகிற போக்கில் தமிழ் தேசியமும் நீடிக்காதுபோலதான் தெரிகின்றது.

மகிந்தாவும் இதைதான் சொல்லியிருக்கின்றார் எல்லோரும் சீனா இலங்கையர் என்று சொல்ல வேண்டிய காலம் வரும் ....

தமிழரே இருக்கமாட்டார்கள் பிறகு தமிழ் தேசியத்தை எதிர்பார்க்க்லாம்....இன்னும் 50 வருடத்தில்

5 hours ago, தமிழ் சிறி said:

M.A.Sumanthiran.jpg

நாட்டின் முழு நிர்வாகமும் இராணுவத்தின் கைக்குள் – ஏற்கமுடியாது என்கின்றார் சுமந்திரன்

 நாட்டின் நிர்வாகத்தை இராணுவத்திடம் தாரைவார்ப்பதற்கு சமானனது என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், நாடு இராணுவ மயமாவதாக தாம் கூறியபோது அதனை அரசும் அரசுடன் இணைந்த கட்சிகளும் மறுப்பு தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டினார்.

 

 

சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஐ.நா சபையில் நல்லவ்ர்கள் வல்லவர்கள்  என சர்டிபிகட்வழ்ங்கிவிட்டு இப்ப இராணுவ ஆட்சி என்றால்

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் சும்மா பாசாங்கு வார்த்தைஜாலம். அடிச்சுப்பிடிச்சுக்கொண்டு முந்திக்கொண்டு அரசுக்கு ஆதரவு  கொடுப்பார். தமிழருக்குள் உலாவும் கோத்தா இவர்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

நாட்டின் முழு நிர்வாகமும் இராணுவத்தின் கைக்குள் – ஏற்கமுடியாது என்கின்றார் சுமந்திரன்

இந்த ராணுவத்திற்குத்தானே ஐக்கிய நாடுகள் சபையில் கால அவகாசம் கேட்டு வாங்கினாய்?

இந்தராணுவத்தை ஆதரித்துத்தானே புலிகளின் போராட்டத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சபதமிட்டாய்?

இந்த ராணுவம் செய்த இனக்கொலையினைத்தானே அப்படி நடக்கவில்லை என்று சத்தியம் செய்தாய்?

ஆகாவே, நடப்பதைப் பார்த்துக்கொண்டு, வாயை மூடிக்கொண்டிரு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இந்த ராணுவத்திற்குத்தானே ஐக்கிய நாடுகள் சபையில் கால அவகாசம் கேட்டு வாங்கினாய்?

இந்தராணுவத்தை ஆதரித்துத்தானே புலிகளின் போராட்டத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சபதமிட்டாய்?

இந்த ராணுவம் செய்த இனக்கொலையினைத்தானே அப்படி நடக்கவில்லை என்று சத்தியம் செய்தாய்?

ஆகாவே, நடப்பதைப் பார்த்துக்கொண்டு, வாயை மூடிக்கொண்டிரு.

இந்த லட்சணத்துக்குள், சுமந்திரன்... புத்திசாலி, படித்தவர், சிறந்த வழக்கறிஞர்,  
என்று சொல்லிக் கொண்டு  கூட்டம் திரியுது.    

நீங்கள் கூறும் கருத்து சரியாகவும் இருக்கலாம். பிழையாகவும் இருக்கலாம். அந்த கருத்தை சர்வதேசம் ஏற்றுக்கொண்டதா என்பதையும் எழுத வேண்டும். ஏற்றுக்கொண்டால் அதட்கு கரணம் இருக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

680616-AD-FB5-A-477-E-B9-E9-C2-B187-EE15

 சுமந்திரனின்..  இராணுவ மயமாக்கல். :grin: 😂

இலங்கையில் இலங்கை ராணுவம் இருக்காமல் எந்த ராணுவம் இருக்கும்? அந்த ராணுவத்துடந்தான் சுத்த வேண்டும். நிர்வாகத்தில் தலையிடுவதை ஏற்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

680616-AD-FB5-A-477-E-B9-E9-C2-B187-EE15

 சுமந்திரனின்..  இராணுவ மயமாக்கல். :grin: 😂

நடையில் ஒரு மிடுக்கு .. ஒரு பெருமிதம் .. ஸ்ரைல்.. இதெல்லாம் தானா வராது தோழர் ..👍 நான் நினைக்கிறேன் அவர் ஒரு தீவிர ரசுனி ரசிகர் என்டு .. ☺️..😊

CLFdQu-UEAAEDjn.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

இலங்கையில் இலங்கை ராணுவம் இருக்காமல் எந்த ராணுவம் இருக்கும்? அந்த ராணுவத்துடந்தான் சுத்த வேண்டும். நிர்வாகத்தில் தலையிடுவதை ஏற்க முடியாது.

றொபின்சன்...  தயவு செய்து, தலைப்பு செய்தியையும், பின்னே உள்ள கருத்துக்களையும்,  வாசித்து... புரிந்த பின், நீங்கள் கருத்து எழுதுங்களேன்.

இல்லையேல்..... மற்றவர்கள் உங்களை,🔩  நட்டு 🔧  கழண்டவர் என்று முடிவு கட்டி விடுவார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2020 at 13:59, தமிழ் சிறி said:

சகல அதிகாரிகளையும் இராணுவம் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு தனி மனிதனின் அசைவுகளும் கண்காணிக்கப்படும், குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழரின். 

2 hours ago, தமிழ் சிறி said:

றொபின்சன்...  தயவு செய்து, தலைப்பு செய்தியையும், பின்னே உள்ள கருத்துக்களையும்,  வாசித்து... புரிந்த பின், நீங்கள் கருத்து எழுதுங்களேன்.

இல்லையேல்..... மற்றவர்கள் உங்களை,🔩  நட்டு 🔧  கழண்டவர் என்று முடிவு கட்டி விடுவார்கள்.

உண்மையாத்தானே எழுத வேண்டும். மற்றவர்கள் விருப்பத்துக்கு எப்படி எழுதலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உம்மைச் சுற்றி இருக்கிற இராணுவத்தை வெளியேற்றும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Robinson cruso said:

உண்மையாத்தானே எழுத வேண்டும். மற்றவர்கள் விருப்பத்துக்கு எப்படி எழுதலாம்.


யாருக்கு உண்மையாக எழுத வேண்டும்?

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:


யாருக்கு உண்மையாக எழுத வேண்டும்?

 

யாருக்காக அனுப்பப்பட்டோமோ அவருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புலவர் said:

முதலில் உம்மைச் சுற்றி இருக்கிற இராணுவத்தை வெளியேற்றும். 

அதை வெளியேறினால் றோட்டிலை  படுத்து கிடக்கும்  பிச்சைக்காரனிடமும் அடிவேண்டவரும் அது அவனுக்கும் தெரியும் .

On 21/8/2020 at 22:19, nunavilan said:


யாருக்கு உண்மையாக எழுத வேண்டும்?

 

எனக்கு தெரிந்த உண்மையை எழுதுகிறேன் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/8/2020 at 05:59, தமிழ் சிறி said:

நாட்டின் முழு நிர்வாகமும் இராணுவத்தின் கைக்குள் – ஏற்கமுடியாது என்கின்றார் சுமந்திரன்

 இவருக்கு ஆமி,பொலிஸ் சுற்றம் சூழ இருக்க வேணுமெண்டால் இன்னும்/தொடர்ந்து கூவ வேணும்.😎

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றி திரிவது விசேட அதிரடிப்படையுடன் பிறகு கதை மட்டும் அடிச்சு விடுவது இவருக்கு லண்டன் , பிரான்ஸ் கிளைகளில் வேறு செம்படிகள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சுற்றி திரிவது விசேட அதிரடிப்படையுடன் பிறகு கதை மட்டும் அடிச்சு விடுவது இவருக்கு லண்டன் , பிரான்ஸ் கிளைகளில் வேறு செம்படிகள் 

அதையேன் பேசுவான்.......:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.