Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ள முன்னணி எம்.பிக்கள்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ள முன்னணி எம்.பிக்கள்.!

1597290943_br%20copy.jpg

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் 15 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9 மணியளவில் இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசியப் பட்டியலில் தெரிவான செல்வராஜா கஜேந்திரன் ஆகிய இருவருமே முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

இந்த உறுதிப்பிரமாண நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளா்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளா் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

http://aruvi.com/article/tam/2020/08/13/15515/

என்ன உறுதிப்பிரமணமென்று தெரிவித்தால் நல்லது. இதே உறுதிப்பிரமணத்தை பாராளுமன்றில் எடுப்பார்களா அல்லது வேறொரு உறுதிப்பிரமணத்தை எடுப்பார்களா என்பதையும் மக்களுக்கு தெரிவித்தால் நல்லது. வடக்கில் தமிழ் தேசியமும் தெடகில் சிங்கள தேசியமாக இல்லாவிடடாள் சரிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Robinson cruso said:

என்ன உறுதிப்பிரமணமென்று தெரிவித்தால் நல்லது. இதே உறுதிப்பிரமணத்தை பாராளுமன்றில் எடுப்பார்களா அல்லது வேறொரு உறுதிப்பிரமணத்தை எடுப்பார்களா என்பதையும் மக்களுக்கு தெரிவித்தால் நல்லது. வடக்கில் தமிழ் தேசியமும் தெடகில் சிங்கள தேசியமாக இல்லாவிடடாள் சரிதான்.

 நீதியரசர் முன்னால செய்யுற சனாதிபதி சத்தியப் பிரமானத்தை ருவான்வெலிசயவிலும்...

சனாதிபதி காரியலாயத்தில் செய்யுற அமைச்சர் துணை அமைச்ச சத்தியப் பிரமானங்களை.. தலதாமாளிகையிலும் செய்யலாம்.. 

அதெல்லாம் தங்களின் கண்ணுக்கு சிங்கள பெளத்த பெருந்தேசியமாகத் தெரியவில்லை..

தமிழன் தன் உறவுகளைப் பலிகொடுத்த இடத்தில் அவர்களின் நினைவாக அவர்கள் முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்தால் மட்டும் ஏன் கொதிக்கிறது..

ரொபின்சன் குரோசோவின் கருத்துக்கள் எல்லாமே பக்கச் சார்ப்பாகவே உள்ளன. ஒன்றில்.. ஈபிடிபி  ஒட்டுக்குழுவுக்கு அல்லது ஒட்டுக்குழுக்களுக்கு ஆதரவாக.. இல்ல.. சொறீலங்கா சிங்கள பெளத்த பயங்கரவாத  அரசுக்கு சார்ப்பாக. 

ஏன் நீங்கள் ஒட்டுக்குழுப் பார்வை மட்டும் தான் பார்ப்பீர்களோ..?!

இது வசைபாடல் அல்ல.. ஏன் உங்களிடம்.. தமிழ் மக்களின் உணர்வு சார்ந்து ஒரு பார்வை வருகுதில்லை என்பதான ஆதங்கம் மட்டுமே.

70 வருசமா தமிழனை அடிக்கிறவனை அடக்கிறவனை நல்லவனாக் காண்கிறீங்க.. ஆனால்.. சொந்த இனத்தவனின் வலியை மதிப்பவனை.. மிதிக்க நினைக்கிறீங்க ஏன்..?! 

Just now, nedukkalapoovan said:

 நீதியரசர் முன்னால செய்யுற சனாதிபதி சத்தியப் பிரமானத்தை ருவான்வெலிசயவிலும்...

சனாதிபதி காரியலாயத்தில் செய்யுற அமைச்சர் துணை அமைச்ச சத்தியப் பிரமானங்களை.. தலதாமாளிகையிலும் செய்யலாம்.. 

அதெல்லாம் தங்களின் கண்ணுக்கு சிங்கள பெளத்த பெருந்தேசியமாகத் தெரியவில்லை..

தமிழன் தன் உறவுகளைப் பலிகொடுத்த இடத்தில் அவர்களின் நினைவாக அவர்கள் முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்தால் மட்டும் ஏன் கொதிக்கிறது..

ரொபின்சன் குரோசோவின் கருத்துக்கள் எல்லாமே பக்கச் சார்ப்பாகவே உள்ளன. ஒன்றில்.. ஈபிடிபி  ஒட்டுக்குழுவுக்கு அல்லது ஒட்டுக்குழுக்களுக்கு ஆதரவாக.. இல்ல.. சொறீலங்கா சிங்கள பெளத்த பயங்கரவாத  அரசுக்கு சார்ப்பாக. 

ஏன் நீங்கள் ஒட்டுக்குழுப் பார்வை மட்டும் தான் பார்ப்பீர்களோ..?!

இது வசைபாடல் அல்ல.. ஏன் உங்களிடம்.. தமிழ் மக்களின் உணர்வு சார்ந்து ஒரு பார்வை வருகுதில்லை என்பதான ஆதங்கம் மட்டுமே.

70 வருசமா தமிழனை அடிக்கிறவனை அடக்கிறவனை நல்லவனாக் காண்கிறீங்க.. ஆனால்.. சொந்த இனத்தவனின் வலியை மதிப்பவனை.. மிதிக்க நினைக்கிறீங்க ஏன்..?! 

முடியுமென்றால் நான் எழுதின கருத்துக்கு பதில் எழுதுங்கள். பதில் தெரியாவிடடாள் அவன் அப்படி செய்தான், இவன் அப்படி செய்தான் எண்டு அளப்ப வேண்டாம். ஈபிடிபி , ஒட்டுக்குழு , அது இது எண்டு எழுதி அதுக்கு பின்னாலே ஒளியும் கோழைகளாக இருக்கக்கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த மண்ணில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் சீ.வி.விக்னேஷ்வரன்..!

IMG-8555_1080.jpg

நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தேசிய அரசியலில் தனது பயணத்தை முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த மண்ணிலிருந்து இன்று ஆரம்பித்திருக்கின்றார்.

IMG-8572_1080.jpg

இன்று காலை 10 மணிக்கு முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறிய மண்ணுக்கு சென்ற சீ.வி.விக்னேஸ்வரன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பெருமளவு ஆதரவாளர்கள் குழுவினர்,படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான அஞ்சலிகளை செலுத்தியதுடன், சீ.வி.விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவுசுடர் முன்பாக சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார் .

https://jaffnazone.com/news/19871

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

சனாதிபதி காரியலாயத்தில் செய்யுற அமைச்சர் துணை அமைச்ச சத்தியப் பிரமானங்களை.. தலதாமாளிகையிலும் செய்யலாம்.. 

அதெல்லாம் தங்களின் கண்ணுக்கு சிங்கள பெளத்த பெருந்தேசியமாகத் தெரியவில்லை..

 

முள்ளிவாய்க்காலில் எம்.பிக்கள் பதவியேற்கலாமா?: பதவியேற்பு விதிகள் என்ன சொல்கின்றன?
 

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பதவியேற்கவுள்ளார் என அவரது கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், எதிர்வரும் சனிக்கிழமை முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு வெளியில் பதவிப்பிரமாணம் செய்யலாமா? அரசியலமைப்பு என்ன சொல்கிறது? என்பதையும் குறிப்பிட்டு விடுகிறோம்.

அரசியலமைப்பின் 63வது உறுப்புரையில்,நாடாளுமன்றத்தின் முன்னர் கீழ்க்காணும் சத்தியத்தை செய்து கையொப்பமிடும் வரை நாடாளுமன்றத்தில் அமர்தலோ வாக்களித்தலோ ஆகாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, நாடாளுமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்த பின்னரே அவர் அங்கீகரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக முடியும்.

இதேவேளை, நாடாளுமன்ற நிலையியல் கட்டளையில்-

நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்கள், முதல்நாள் அவர்களிற்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் இருந்த பின்னர், முதலில் சபாநாயகர் தெரிவு இடம்பெறும். அடுத்தது, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் முன்பாக சபாநாயகர் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார், பின்னர் சபாநாயகரின் முன்பாக அனைத்து உறுப்பினர்களும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

1 minute ago, முதல்வன் said:

 

அதாவது, நாடாளுமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்த பின்னரே அவர் அங்கீகரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக முடியும்.

இதேவேளை, நாடாளுமன்ற நிலையியல் கட்டளையில்-

நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்கள், முதல்நாள் அவர்களிற்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் இருந்த பின்னர், முதலில் சபாநாயகர் தெரிவு இடம்பெறும். அடுத்தது, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் முன்பாக சபாநாயகர் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார், பின்னர் சபாநாயகரின் முன்பாக அனைத்து உறுப்பினர்களும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதாவது பாராளுமன்றத்தில் சிங்கள ஸ்ரீ லங்காவின் அரசியலைப்புக்கு ஏட்ப சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டும். அது வரைக்கும்  அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக முடியாது.

அப்படி என்றால் இப்போது நடக்கும் கூத்துக்கள் எல்லாம் உஷார் மடயர்களை சந்தோசப்படுத்துவதட்காக, அப்பாவிகளை ஏமாத்துவதட்காக  இருக்கலாம். அதாவது இதனால் எந்த பிரயோசனமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதை தலதா மாளிகைக்கு பதிலடி என்றும் எடுக்கலாம்.

இவங்கள் எங்கே சத்தியப்பிரமாணம் என்ன சத்தியப்பிரமாணம் எல்லாம் முக்கியம் இல்லை குருசோ அண்ணே, நாளைக்கு மக்களுக்காக என்ன செய்கிறார்கள் எண்டது தான் முக்கியம். 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தலதா மாளிகையில்  படம்  காட்டேக்க, நாங்களும் படம் கட்டுகிறதில்லை என்ன பிழை?

Just now, zuma said:

சிங்களவன் தலதா மாளிகையில்  படம்  காட்டேக்க, நாங்களும் படம் கட்டுகிறதில்லை என்ன பிழை?

பாரு பாரு நல்ல பாரு பாயா ஸ்கோப்பு படத்தை பாரு. அவனுகள் படம் காட்டுறாங்கள் , இந்த ஏமாளிகள் பார்த்து ரசிக்கிறார்கள். ஈழத்துக்கு இன்னும் கொஞ்ச தூரம்தான் இருக்கு. வாருங்கள் மக்களே. 

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன விசயம் தான் குருசோ. நீங்களும் அவர்களும் தேசியத்தை நேசிக்கிறவர்கள். நீங்கள் உண்மையான தேசியம் போலி தேசியம் என்று இரண்டாய் உடைக்கிறீங்கள்.

போலி தேசியவாதிகள் என்று அவர்கள் மீது வெறுப்பை வளர்க்கிறீங்கள். போலி தேசியவாதிகள் உங்களை ஏமாத்திப்போடுவாங்கள் என்று அவர்கள் மீது அக்கறையாக பேசுகிறீகள் என்று வைச்சால், நாகரீகமாகவும் அவர்களுக்கு விளங்கக்கூடியவாறும் தான் கருத்தை வைக்கவேண்டும். 

அவர்களும் உங்கட கருத்தியலில் இருக்கும் உண்மைதன்மையை உணர நேரம் கொடுக்கவேண்டும். போலி தேசியவாதிகள் என்று நீங்கள் சொல்லுபவர்கள் ஏதாவது நல்லது செய்தால் பாராட்டவேணும். அவர்கள் வழியில் சென்று அவர்கள் பிழை விடும்போது சுட்டிக்காட்ட வேண்டும். 

அவர்களும் விமர்சனம் வைப்பவனை எல்லாம் ஒட்டுக்குழு என்றும், துரோகி என்று  சிங்கள அரசின் கைக்கூலி என்றும் வசைபாடுதலை தவிர்க்கவேண்டும். உணமையான எதிரியை கண்டறிய எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

வெறுமனே வெறுப்பை விதைப்பதால் ஒற்றுமை வளராது. தேசியத்தை நேசிக்கும் கருத்தாளர் இடையே ஒற்றுமை இல்லை என்றால் தேசியத்துக்கு என்னாகும் என்று இரு தரப்புமே நினைதாலே முதல் வெற்றி.

 

எங்களில் தொடங்குவமே ஒற்றுமைக்கும் நெறிப்படுத்தலுக்கும் காத்திரமான விமர்சனத்துக்குமான முதல் படியை.

ஏதோ என்னால முடிஞ்சதை விளங்கப்படுத்தி இருக்கிறேன் இனி உங்கட இஷ்டம்.

இதை ஒரு திரியாக திறந்து மனப்பூர்வமாகவும் நாகரிகமாகவும் வெற்றி தோல்வி இல்லாமலும் குழு வாதம் இல்லாமலும் விவாதிச்சாலே இங்கே வாசிக்கும் வாசகர்களைக்கூட எம்மால் ஒருங்கிணைக்க முடியும்.

எங்கட எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சி பேதமின்றி செய்யுற நல்லதுக்களை பதிவு செய்யவும் கெட்டதுகளை விமர்சிக்கவும் ஒரு நியாயமான திரி அல்லது குழு அமைப்போம்.

அவர்களும் பார்க்கட்டும், அவர்களிடம் கொண்டு சேர்க்கவும் ஆட்கள் இருப்பினம் தானே.

என்ன நான் சொல்லுறது.

 

Edited by முதல்வன்

முள்ளிவாய்க்காலில் மாண்ட போராளிகளும் மக்களும் ஒற்றையாட்சிக்காகவா போராடி மடிந்தார்கள்? 

இலங்கை ஒற்றையாட்சியை காப்பாற்றுவேன் என்று பிரிவினைக்கு ஆதரவு இல்லை என்று முள்ளிவாய்க்காலில் எடுக்கும் சத்தியபிரமாணம் மூலம் மீண்டும் அவர்களை மோசமாக அவமதிக்க போகின்றார்களா? 

காத்திரமாக செயலாற்றாது வெற்று உணர்ச்சி அரசியலைத்தான் இவர்கள் தொடரப் போகின்றனரா?

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த மண்ணில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் சீ.வி.விக்னேஷ்வரன்..!

IMG-8555_1080.jpg

நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தேசிய அரசியலில் தனது பயணத்தை முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த மண்ணிலிருந்து இன்று ஆரம்பித்திருக்கின்றார்.

 

இன்று காலை 10 மணிக்கு முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறிய மண்ணுக்கு சென்ற சீ.வி.விக்னேஸ்வரன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பெருமளவு ஆதரவாளர்கள் குழுவினர்,படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான அஞ்சலிகளை செலுத்தியதுடன், சீ.வி.விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவுசுடர் முன்பாக சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார் .

https://jaffnazone.com/news/19871

தமிழ் தேசியத்தை காக்க ஸ்ரீலங்கா பொலிசாரின் குடை பிடிப்பு தேவைப்படுகிறது விக்கினேஸ்வரனுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

முள்ளிவாய்க்காலில் மாண்ட போராளிகளும் மக்களும் ஒற்றையாட்சிக்காகவா போராடி மடிந்தார்கள்? 

இலங்கை ஒற்றையாட்சியை காப்பாற்றுவேன் என்று பிரிவினைக்கு ஆதரவு இல்லை என்று முள்ளிவாய்க்காலில் எடுக்கும் சத்தியபிரமாணம் மூலம் மீண்டும் அவர்களை மோசமாக அவமதிக்க போகின்றார்களா? 

காத்திரமாக செயலாற்றாது வெற்று உணர்ச்சி அரசியலைத்தான் இவர்கள் தொடரப் போகின்றனரா?

இதெல்லாம் பாராளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தால் நடந்திருக்கும்.
முள்ளிவாய்க்காலில் செய்ததால் நடக்க வாய்ப்பில்லை 
என்ற கோட்ப்பாட்டு விதி மட்டும் எனக்கு புரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கு தமிழை  விக்கி அவர்கள்  முன்னின்று செய்த போது  ஏன் யாரும் மேலே பொங்கியது போல் பொங்கவில்லை?

முள்ளிவாய்க்காலில் நடை பெற்றது just ஒரு சம்பிரதாய நிகழ்வே. பதவி பிரமாணம் அல்ல. 

9 minutes ago, Maruthankerny said:

இதெல்லாம் பாராளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தால் நடந்திருக்கும்.
முள்ளிவாய்க்காலில் செய்ததால் நடக்க வாய்ப்பில்லை 
என்ற கோட்ப்பாட்டு விதி மட்டும் எனக்கு புரியவில்லை 

இலங்கைப் பாராளுமன்றம் ஒற்றையாட்சியை வலியுறுத்தும் ஒரு அமைப்பு. அதில் ஒற்றையாட்சியை உறுதியாகப் பேணுவேன் என்று சத்தியப்பிரமாணம் எடுப்பதில் எந்த முரணும் இல்லை. ஆனால் அந்த பாராளுமன்றத்தினை நிராகரித்து ஒற்றையாட்சியை மறுத்து தனி நாடு கோரி போராடியதற்காக மக்களும் போராளிகளும் கொத்து கொத்தாக பலியிடப்பட்ட ஒரு நிலத்தில் நின்று கொண்டு "நான் ஒற்றையாட்சியை உறுதியாக பேணுவேன்' என்று சத்தியம் செய்வது எந்த விதத்தில் அந்த  மண்ணில் மாண்டவர்களுக்கு செய்யும் மரியாதையாக அமையும் என்று சொல்லுங்கள்?

இங்கு தேவை ஏட்டிக்கு போட்டியான அரசியலும் மக்களை உணர்ச்சி கொந்தளிப்பில் வைத்து செய்யும் அரசியலும் அல்ல. 

14 minutes ago, nunavilan said:

பொங்கு தமிழை  விக்கி அவர்கள்  முன்னின்று செய்த போது  ஏன் யாரும் மேலே பொங்கியது போல் பொங்கவில்லை?

பொங்கு தமிழ் பிரகடனமும், ஒற்றையாட்சியை பேணுவேன், தனி நாடு கேட்க மாட்டேன் என்பதும் ஒன்றா? ஆகக் குறைந்தது பொங்கு தமிழ் பிரகடனத்தில் என்ன என்ன சொல்லப்பட்டு இருக்கு என்றாவது நினைவிருக்கா?

இது  ஒரு வகையான சீண்டும் நடவடிக்கையாகவே கோத்தா வினால் பார்க்கப்படும் 
சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் செல்பவர்கள்  திருப்பி அனுப்பபடுவார்கள்
 இனிமேல் எந்த ஒரு நினைவு தின வைபவங்களுக்கு அனுமதி கிடைக்காது 
இன்று நடைபெற இருந்த செஞ்சோலை படுகொலை நினைவு தினத்தினையே
தடுத்து நிறுத்தியுள்ளனர் போலீசார் 

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

பொங்கு தமிழ் பிரகடனமும், ஒற்றையாட்சியை பேணுவேன், தனி நாடு கேட்க மாட்டேன் என்பதும் ஒன்றா? ஆகக் குறைந்தது பொங்கு தமிழ் பிரகடனத்தில் என்ன என்ன சொல்லப்பட்டு இருக்கு என்றாவது நினைவிருக்கா?

முதலாவது தனிநாடு  முடியாது. அது சட்டமாக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் என்ன சொல்லி மாவீரர்களை வணங்கலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன தெரியாமல் இருக்கிறோமா??

 

பிரபாகரன் காலத்தில் செய்யப்பட்ட  சொல்லப்பட்ட அனைத்ட்கையும் இப்போ செய்ய இனவத அரசு விடுமா? இதற்குள் மக்களுக்கு நோகும் என்பது எந்த வித தில் நியாயம்??

4 minutes ago, nunavilan said:

சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன தெரியாமல் இருக்கிறோமா??

 

இந்த மூன்றையுமே பாராளுமன்ற உறுப்பினராக ஒருவர் சத்தியப்பிரமாணம் எடுக்கும் போது நிராகரிக்கின்றார். ஏனெனில் இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம், பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் எடுக்கும் ஒருவர் இவற்றை நிராகரிக்கின்றேன் என்று வலியுறுத்தும் வாசகங்களை கொண்ட சத்தியத்தை தான் எடுக்க வேண்டும். அது தான் இலங்கைச் சட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை போய்  முள்ளிவாய்க்காலில் எப்படி சத்தியபிரமாணம், அல்லது சத்தியம் எடுக்க் முடியும். துல்பன் சொன்னது போல் முதல் முதல் பாரளுமன்றம் போகுமுன் சம்பிரதாயபூர்வமாக மாவீரர்களை வணங்கி செல்வது பிழையா என்பது எனது ஆதங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Robinson cruso said:

முடியுமென்றால் நான் எழுதின கருத்துக்கு பதில் எழுதுங்கள். பதில் தெரியாவிடடாள் அவன் அப்படி செய்தான், இவன் அப்படி செய்தான் எண்டு அளப்ப வேண்டாம். ஈபிடிபி , ஒட்டுக்குழு , அது இது எண்டு எழுதி அதுக்கு பின்னாலே ஒளியும் கோழைகளாக இருக்கக்கூடாது.

உங்களிடம் வினவப்பட்ட வினா அப்படியே பதில் இன்றி இருக்குது. அதை விட்டிட்டு.. மீண்டும் மீண்டும்.. சிங்கள பெளத்த பேரினாவாதத்திற்கும் அதன் அடிவருடிகளுக்கும்.. அபிவிருத்தி என்ற போலி பிம்பத்துனூடு வக்காளத்துக்கு வாக்குவதை மட்டுமே செய்கிறீர்கள்.

இது சிங்கள பாராளுமன்றத்துக்கான சத்தியப்பிரமானம்.. கிடையாது. இது அவர்கள் கொண்ட கொள்கை மீதான உறுதிமொழி என்று எடுத்துக் கொள்ளலாம்.

சிங்கள பெளத்த பேரினாவதத்தை எதிர்கொள்ள தமிழ் மக்கள் கட்சி பேதமின்றி.. மீண்டும் ஒன்றிணைய வேண்டிய காலமிது. அபிவிருத்தி அதுஇதென்று போலி வாதங்களை முன் வைத்து சிங்கள பெளத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு வலுப்படுத்தலுக்கு உதவி நிற்பதை தவிர்க்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

உறுதி மொழி எடுத்துக் கொள்பவர்கள் இலங்கையில் சட்டத்தரணிகளாக உள்ளவர்கள் தான். எனவே??

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

இதை போய்  முள்ளிவாய்க்காலில் எப்படி சத்தியபிரமாணம், அல்லது சத்தியம் எடுக்க் முடியும். துல்பன் சொன்னது போல் முதல் முதல் பாரளுமன்றம் போகுமுன் சம்பிரதாயபூர்வமாக மாவீரர்களை வணங்கி செல்வது பிழையா என்பது எனது ஆதங்கம்.

பிழை அல்ல. வணங்கிச் செல்வது மனதுக்கு மகிழ்வானதுதான். ஆனால் சிங்களத்திற்கு பிழையான சமிஞ்ஞையைக் கொடுக்கவோ தமிழர்களுக்கு அதீத எதிர்பார்ப்பைக் கொடுக்கவோ கூடாது என்பதுதான் நலன் விரும்பிகளின் ஆதங்கம் 🤥

11 hours ago, Robinson cruso said:

பாரு பாரு நல்ல பாரு பாயா ஸ்கோப்பு படத்தை பாரு. அவனுகள் படம் காட்டுறாங்கள் , இந்த ஏமாளிகள் பார்த்து ரசிக்கிறார்கள். ஈழத்துக்கு இன்னும் கொஞ்ச தூரம்தான் இருக்கு. வாருங்கள் மக்களே. 

குறுசோ,

உங்கள் வயது  48-52 என்பதற்குள் வருமா 😜

  • கருத்துக்கள உறவுகள்
Quote

பிழை அல்ல. வணங்கிச் செல்வது மனதுக்கு மகிழ்வானதுதான். ஆனால் சிங்களத்திற்கு பிழையான சமிஞ்ஞையைக் கொடுக்கவோ தமிழர்களுக்கு அதீத எதிர்பார்ப்பைக் கொடுக்கவோ கூடாது என்பதுதான் நலன் விரும்பிகளின் ஆதங்கம் 🤥

11 வருடங்களாக முள்ளிவாய்க்கால் பக்கமே ( ஒரு முறை போனவர் ஆனால் முள்ளிவாய்க்கால் முன்றலுக்கு போகவில்லை.) போகாதவர் தமிழ் மக்களுக்கு கொடுக்கும் சமிக்ஞை என்ன? அவர் அரசுக்கு கொடுக்கும் சமிக்ஞை என்ன?

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.