Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் தொடர் கொள்ளை ; கணவன், மனைவி உட்பட மூவர் சிக்கினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்டத்தில் அண்மைய நாட்களாக வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கணவன்-மனைவி மற்றும் திருட்டு நகைகளை வாங்கிய கடை உரிமையாளர் ஆகியோர் இன்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

4a88a9f8-b69c-441c-ba4c-0aeb3c2e9ee7.JPG

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் மாவட்டத்தில் அண்மைய நாட்களாக வயோதிபர்கள் வாழும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றன.

குறிப்பாக சாவகச்சேரி, கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள வயோதிபர்களின் வாழும் வீடுகளில் அண்மைய நாட்களாக உடைக்கப்பட்டு திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வந்தன.

இந்த சம்பவங்கள் தொடர்பில் குறித்த பிரதேசத்தின் பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையிலான குழுவினர் விஷேட விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டவர் என்று கூறப்படும் பிரதான சந்தேகநபர் இன்று சுன்னாகத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரது மனைவியும் திருடப்பட்ட நகைகளை கொள்வனவு செய்த நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 6 பவுன் நகைகளும் 20 பவுன்களுக்கான அடகு வைக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்களும் பல தேசிய அடையாள அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் சந்தேகநபரின் உடமையில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொடிகாமம் பகுதியில் கடந்த ஓகஸ்ட் மாதம் பத்தாம் திகதி இரவு வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி மூன்றரை பவுன் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது.இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அத்துடன் சுன்னாகம் பகுதியில் கடந்த மே மாதம் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 4 லட்சம் ரூபாய் பணமும் 5 பவுன் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பிலும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் சாவகச்சேரி பகுதியில் வயோதிபர் ஒருவரின் வீட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் மற்றும் பூநகரியில் 5 லட்சம் ரூபாய் பணம் மோதிரம் போன்றவற்றை திருடியமை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான இவர் பல மாதங்களாக தலை மறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் மற்றும் அவருடைய மனைவி நகைகளை கொள்வனவு செய்த நகைக்கடை உரிமையாளர் ஆகியோரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/88285

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பிழம்பு said:

யாழ். மாவட்டத்தில் அண்மைய நாட்களாக வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கணவன்-மனைவி மற்றும் திருட்டு நகைகளை வாங்கிய கடை உரிமையாளர் ஆகியோர் இன்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

4a88a9f8-b69c-441c-ba4c-0aeb3c2e9ee7.JPG

 

நல்ல காலம் கொரானாவால் நிழலி அவர்கள் தப்பித்தார் 
எல்லாம் சாதாரணமாக இருந்து இருந்தால் .... இலங்கைக்கு விசிட் போய் 
ரகசிய போலீஸ் என்று தெரியாமல் நீல டீ சேர்ட் அக்காவை சைட் அடித்து 
உள்ளுக்குத்தான் போயிருப்பார். 

11 minutes ago, Maruthankerny said:

நல்ல காலம் கொரானாவால் நிழலி அவர்கள் தப்பித்தார் 
எல்லாம் சாதாரணமாக இருந்து இருந்தால் .... இலங்கைக்கு விசிட் போய் 
ரகசிய போலீஸ் என்று தெரியாமல் நீல டீ சேர்ட் அக்காவை சைட் அடித்து 
உள்ளுக்குத்தான் போயிருப்பார். 

ஹிஹிஹி... உண்மை தான்...ஆள் பார்க்க சூப்பரா டக்கரா இருக்கா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 6 பவுன் நகைகளும் 20 பவுன்களுக்கான அடகு வைக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்களும் பல தேசிய அடையாள அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் சந்தேகநபரின் உடமையில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப் பொருள் போனசாக சேர்த்திருப்பார்களோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Maruthankerny said:

நல்ல காலம் கொரானாவால் நிழலி அவர்கள் தப்பித்தார் 
எல்லாம் சாதாரணமாக இருந்து இருந்தால் .... இலங்கைக்கு விசிட் போய் 
ரகசிய போலீஸ் என்று தெரியாமல் நீல டீ சேர்ட் அக்காவை சைட் அடித்து 
உள்ளுக்குத்தான் போயிருப்பார். 

நீலச்சட்டையை பாக்க கராட்டி தெரியும் போல கிடக்கு. 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

நல்ல காலம் கொரானாவால் நிழலி அவர்கள் தப்பித்தார் 
எல்லாம் சாதாரணமாக இருந்து இருந்தால் .... இலங்கைக்கு விசிட் போய் 
ரகசிய போலீஸ் என்று தெரியாமல் நீல டீ சேர்ட் அக்காவை சைட் அடித்து 
உள்ளுக்குத்தான் போயிருப்பார். 

நீலச் சட்டைக்கு பக்கத்தில் நிற்ப்பவரின் முகச்சாயல் கிட்டத்தட்ட நிழலியின் முகச்சாயல் இருக்குது.😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சுவைப்பிரியன் said:

நீலச் சட்டைக்கு பக்கத்தில் நிற்ப்பவரின் முகச்சாயல் கிட்டத்தட்ட நிழலியின் முகச்சாயல் இருக்குது.😁

அதே முகச்சாயல் இருக்கும்போது 
அதே இரத்த அழுத்தமும் இருக்கும்தானே?
அதுதான் (படம் எடுக்க) கிடைச்ச காப்பில் 
ஆட்டோ ஓட பார்க்கிறார் (பக்கத்தில் போன் நின்று) 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

ஹிஹிஹி... உண்மை தான்...ஆள் பார்க்க சூப்பரா டக்கரா இருக்கா

ஏதோ நினைவுகள் மனதிலே வருகுதே........

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் குட்டி போல இருக்கு 😄

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

யாழ். மாவட்டத்தில் அண்மைய நாட்களாக வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கணவன்-மனைவி மற்றும் திருட்டு நகைகளை வாங்கிய கடை உரிமையாளர் ஆகியோர் இன்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4a88a9f8-b69c-441c-ba4c-0aeb3c2e9ee7.JPG

திருடர்கள், கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களைச் சுற்றிநின்று படம்பிடித்து, குற்றத்தடுப்புப் பிரிவினர்  தங்கள் வீர தீரச் செயல்களை ஊடகங்களில் வெளியிடுவார்களே அன்றிப் பிடிபட்ட குற்றவாளிகளை காட்டுவதில்லை. காட்டச் சட்டமும் இடம்கொடுக்காது. அதன்வழி அந்த நீலச் சட்டைக்காரியும் ஒரு அதிகாரிதான். ஆளைப்பார்க்க எலும்புகளை எண்ணக்கூடியவர்போல் தெரிகிறது.    நல்லகாலம் நிழலி அவர்கள் இலங்கைக்கு விசிட் போய் நீல டீ சேர்ட் அக்காவை சைட் அடித்திருந்தால்  
உள்ளுக்குப்போய் கம்பி எண்ணுமுன் தன் எலும்புகளையும் அவரே பொறுக்கி எண்ணவேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்கும்.😂 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

சிங்களக் குட்டி போல இருக்கு 😄

எனக்கும் அதெ சந்தெகம்தான். ஒரு சந்தேகம் இதில் யார் ரகசிய பொலீஸ் யார் குற்றவாளிகள்? எல்லாரையும் பார்க்க ஒரேமாதிரி இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

திருடர்கள், கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களைச் சுற்றிநின்று படம்பிடித்து, குற்றத்தடுப்புப் பிரிவினர்  தங்கள் வீர தீரச் செயல்களை ஊடகங்களில் வெளியிடுவார்களே அன்றிப் பிடிபட்ட குற்றவாளிகளை காட்டுவதில்லை. காட்டச் சட்டமும் இடம்கொடுக்காது. அதன்வழி அந்த நீலச் சட்டைக்காரியும் ஒரு அதிகாரிதான். ஆளைப்பார்க்க எலும்புகளை எண்ணக்கூடியவர்போல் தெரிகிறது.    நல்லகாலம் நிழலி அவர்கள் இலங்கைக்கு விசிட் போய் நீல டீ சேர்ட் அக்காவை சைட் அடித்திருந்தால்  
உள்ளுக்குப்போய் கம்பி எண்ணுமுன் தன் எலும்புகளையும் அவரே பொறுக்கி எண்ணவேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்கும்.😂 

நிலைமை அந்த அளவுக்கு போயிருக்காது ....
கல்லுக்குள் இருந்தே  எப்படி தண்ணி எடுக்கிறது என்பது 
நித்தியானந்தா சச்சிதானந்தா நிழலியானந்தா போன்ற சுவாமிகளுக்கு 
நல்லாவே தெரியும். அக்கா அவசரப்பட்டு போலிஸ்ட்டேஷன் கூட்டிப்போயிருந்தாலும் 
அங்குபோய் மனம் உருகி தானே கொண்டுவந்து விட்டு இருப்பா 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Maruthankerny said:

 நீல டீ சேர்ட் அக்காவை சைட் அடித்து 
உள்ளுக்குத்தான் போயிருப்பார். 

அவர் பொலிஸ் அக்கா என்று நினைக்கிறேன்....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அவர் பொலிஸ் அக்கா என்று நினைக்கிறேன்....

குட் மோனிங்.🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, ragaa said:

எனக்கும் அதெ சந்தெகம்தான். ஒரு சந்தேகம் இதில் யார் ரகசிய பொலீஸ் யார் குற்றவாளிகள்? எல்லாரையும் பார்க்க ஒரேமாதிரி இருக்குது.

எங்கடை ஊரிலை பொலிஸ் எண்டாலே ஹைய் லெவல் கள்ளர்தானே..😁

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2020 at 12:52, குமாரசாமி said:

எங்கடை ஊரிலை பொலிஸ் எண்டாலே ஹைய் லெவல் கள்ளர்தானே..😁

இருந்தாலும் இலங்கைப் பொலிசை அத்தனை உயர்வாகப் போற்றக்கூடாது சாமியார். லெவல் கள்ளர் என்றாலே போதும். கைலெவல் கள்ளரைப் பொலீசாகக் கொண்ட ஒரு நாடு இருக்கிறது, அதுதான் தமிழ்நாடு.😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Paanch said:

இருந்தாலும் இலங்கைப் பொலிசை அத்தனை உயர்வாகப் போற்றக்கூடாது சாமியார். லெவல் கள்ளர் என்றாலே போதும். கைலெவல் கள்ளரைப் பொலீசாகக் கொண்ட ஒரு நாடு இருக்கிறது, அதுதான் தமிழ்நாடு.😎

அப்பிடியெண்டால் தமிழ்நாட்டிலை எங்கடை பாஞ்ச் ஐயாவை பொலிஸ் நல்லாய் கவனிச்சு பணிவிடை செய்திருக்கு எண்டு அர்த்தம்...😁

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அப்பிடியெண்டால் தமிழ்நாட்டிலை எங்கடை பாஞ்ச் ஐயாவை பொலிஸ் நல்லாய் கவனிச்சு பணிவிடை செய்திருக்கு எண்டு அர்த்தம்...😁

உண்மைதான் சாமியார் அவர்களே! தமிழ்நாட்டில் மட்டுமல்ல இலங்கை, சிங்கப்பூர், யேர்மனியில்கூட பொலிசு நல்லாய் கவனிச்சு பணிவிடை செய்திருக்கு. காரணம், என்னிடம் இருந்த அமெரிக்க ஆமித்தளத்தில் ஒரு அதிகார மட்டத்தில் பணிபுரிந்த அடையாள அட்டை.😆

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.