Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா முதல் 250 ரூபா வரை உயர்வடையும் அபாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 14/10/2020 at 06:16, தனிக்காட்டு ராஜா said:

இதுவரை புலம்பெயர்ந்தோர் செய்தது என்ன ??  ஏதாவது மிகப்பெரிய அபிவிருத்தி திட்டங்கள் , முதலீடுகள் , செய்தது என்ன ஒன்று இல்லை ஐ. நாவரைக்கும்  நீதி கேட்டு குளிருலயும்  வெயிலிலையும் நடந்ததுதான் மிச்சம் பல நாடுகளை முதலிட சொல்கிறது இலங்கை அரசு அதில் புலம்பெயர்ந்த பணக்காரர்கள் இருக்கிறார்கள் அவர்களால் மக்களுக்கு நன்மை கிடைக்கலாம் ( வேலைவாய்ப்பு ) அரசுக்கு வருமானம் இதைதான் அரசு யோசிக்கிறது . ஆனால் புலத்தமிழர்கள் இலங்கையில் முதலிட மாட்டார்கள் முதலிட போவதுமில்லை ஆனால்  இலங்கையில் முதலிட முடியாது பாதுகாப்புமில்லை என்பார்கள் 

முதலிட வேண்டாம் எத்தனை பேர் மீண்டும் குடியேற நினைக்கிறார்கள் காரணம் சொல்வார்கள் இலங்கையில் வாழமுடியாது அரசு எங்களை கொலை செய்து விடும் என்று போராடிய போராளிகளே இங்கு வாழும் போது பொய்ய சொல்லி விசா பெற்றவர்களால் இங்கு வாழமுடியாது அது அவர்களுக்கு தெரியும் . இங்கு வாழ்வதும் மனிதர்கள்தான் . 

இப்படி சொல்லும் நீங்கள் ஏன் இலங்கைக்கு வந்து அரசை எதிர்த்து போராட  முடியாது அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முடியாது சொல்லுங்கள் பார்ப்பம் ஆக இருக்கும் இடத்தில் இருந்து அல்வா மட்டும்கொடுப்பம்  சும்மா போங்க சார் பழைய புராணத்தைப் பாடமல் 

உப்பின் அருமை அப்பன் இருக்கும் போது தெரிவதில்லை. அது போல் புலம்பெயர் மக்கள் தாயக மக்களுக்கு செய்தவைகள் பெரிதாகவோ அருமையாகவோ தெரிவதில்லை.வெகு சுலபமாக பல வசனங்களை எழுதி விட்டீர்கள்.

மாத வருமானங்களையே தங்கள் ஊருக்காக மக்களுக்காக அர்ப்பணித்தவர்கள் பலர்.இன்னுமொன்றை சொல்வதானால் உங்களைப்போல் சாதாரண வாழ்க்கைகூட என்னால் வாழ முடியவில்லை.என்னைப்போல் பலர் புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்றார்கள். அவர்கள் என்னைப்போல் பகிரங்க வாழ்க்கை வாழ்பவர்கள் அல்ல.அதனால் உங்களைப் போன்றவர்களுக்கு பல முகங்கள் தெரிவதில்லை. தெரிய வேண்டிய அவசியமுமில்லை.

  • Replies 56
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தனி போன்றவர்களோடு இனி வரும் காலத்தில் அவதானமாகவே யாழ் கள உறவுகள் இருக்க வேண்டிய சூழ் நிலையை அவரது எழுத்து சொல்லி செல்கிறது..என்ன எப்போ பதிந்த திரியில் இப்போ இருந்து அடி படுகிறார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம்.சில திரிகளுக்குள்  நான் அவ்வளவாக வருவதில்லை..ஆனாலும் தனியின் கருத்தை பார்த்ததும்...எழுதுகிறேன்.எனது கருத்தை எடுக்க வேண்டும் என்றாலும் எடுக்கலாம்..

வெளியிலிருந்து போன உறவுகளோடு ஊர் ஊராக நின்று சோ காட்டியதையும் இப்போ  இவர் எழுதியிருப்பதையும் நினைக்க மிகவும் வெறுப்பாக இருக்கிறது..புலம் பெயர்ந்தவர்கள் கொடுத்தார்கள் கொடுக்கவிலை அல்லது கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் குடுக்கப் போகிறார்கள் என்பது எல்லாம் பறை அடித்து சொல்லிக் கொண்டு செய்தவர்களல்ல நாங்கள்.வீடுகளில் மாத இறுதியில்  பண பற்றாக்குறையினால்  பிரச்சனை ஏற்படுகிறது என்றால் எத்தனை விதமான கள்ளக் கணக்கு காட்டி இருப்போம்..போய் பிரண்ட் இருக்காடி அப்படியானவர்வர்களுக்கு குடுத்தாயா என்று கேடடு திட்டு வாங்கிய காலங்களும் எங்களுக்கு உண்டு.. அது எல்லாம்  வேற்று கிரக மக்களுக்கா அனுப்பினோம்..ஆ..

 

.அது மட்டுமல்ல நாடு நாடாக தெரு தெருவாக நின்று போராடங்கள் நடத்தியதை விட அங்கு வந்து வேறு போராட வேண்டுமா..ஏன் ஊரில் உள்ள உறவுகளுக்காக சுவிசில் உயிரோடு எரிந்தவர்களை மறந்து விட்டீர்களா இந்தியாவில் ஆண் பெண் என நினைத்தவுடன் எரிந்தார்களே மறந்துட்டீர்களா..புலம் பெயர்ந்தவர்கள் என்றால் என்ன அவ்வளவு கிள்ளுக் கீரைகளாகி விட்டோமா..சொல்லப் போனால் அங்குள்ள அனேகரின் சுக போக வாழ்க்கைக்கு பச்சை பச்சையா அனுப்பி வைக்கிறதே எங்கள் கைகள் தான்.யாயினி ஏன் இதற்குள் எழுதுது என்று யாரும் நினைக்க வேண்டாம்..பட் எழுத வேண்டிய சூழ் நிலை..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

தனி போன்றவர்களோடு இனி வரும் காலத்தில் அவதானமாகவே யாழ் கள உறவுகள் இருக்க வேண்டிய சூழ் நிலையை அவரது எழுத்து சொல்லி செல்கிறது..என்ன எப்போ பதிந்த திரியில் இப்போ இருந்து அடி படுகிறார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம்.சில திரிகளுக்குள்  நான் அவ்வளவாக வருவதில்லை..ஆனாலும் தனியின் கருத்தை பார்த்ததும்...எழுதுகிறேன்.எனது கருத்தை எடுக்க வேண்டும் என்றாலும் எடுக்கலாம்..

வெளியிலிருந்து போன உறவுகளோடு ஊர் ஊராக நின்று சோ காட்டியதையும் இப்போ  இவர் எழுதியிருப்பதையும் நினைக்க மிகவும் வெறுப்பாக இருக்கிறது..புலம் பெயர்ந்தவர்கள் கொடுத்தார்கள் கொடுக்கவிலை அல்லது கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் குடுக்கப் போகிறார்கள் என்பது எல்லாம் பறை அடித்து சொல்லிக் கொண்டு செய்தவர்களல்ல நாங்கள்.வீடுகளில் மாத இறுதியில்  பண பற்றாக்குறையினால்  பிரச்சனை ஏற்படுகிறது என்றால் எத்தனை விதமான கள்ளக் கணக்கு காட்டி இருப்போம்..போய் பிரண்ட் இருக்காடி அப்படியானவர்வர்களுக்கு குடுத்தாயா என்று கேடடு திட்டு வாங்கிய காலங்களும் எங்களுக்கு உண்டு.. அது எல்லாம்  வேற்று கிரக மக்களுக்கா அனுப்பினோம்..ஆ..

 

.அது மட்டுமல்ல நாடு நாடாக தெரு தெருவாக நின்று போராடங்கள் நடத்தியதை விட அங்கு வந்து வேறு போராட வேண்டுமா..ஏன் ஊரில் உள்ள உறவுகளுக்காக சுவிசில் உயிரோடு எரிந்தவர்களை மறந்து விட்டீர்களா இந்தியாவில் ஆண் பெண் என நினைத்தவுடன் எரிந்தார்களே மறந்துட்டீர்களா..புலம் பெயர்ந்தவர்கள் என்றால் என்ன அவ்வளவு கிள்ளுக் கீரைகளாகி விட்டோமா..சொல்லப் போனால் அங்குள்ள அனேகரின் சுக போக வாழ்க்கைக்கு பச்சை பச்சையா அனுப்பி வைக்கிறதே எங்கள் கைகள் தான்.யாயினி ஏன் இதற்குள் எழுதுது என்று யாரும் நினைக்க வேண்டாம்..பட் எழுத வேண்டிய சூழ் நிலை..

மிக்க நன்றி யாயினி!

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள் தாயகத்தில் எதுவுமே செய்யவில்லை என்கின்ற தொனியில் சிலர் எழுதுவது தெரிகிறது. அவர்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

செய்யும் உதவிகளை சொல்லிக் காட்டுதல் அழகில்லை. ஆனால், சிலவிடயங்களைப் பகிரலாம் என்று நினைக்கிறேன். 

நான் 2002 இல் இங்கு புலம்பெயர்ந்து வந்த காலத்திலிருந்து அவுஸ்த்திரேலிய மருத்துவ உதவிகள் நிதியம் (ஒஸ்ட்ரேலியன் மெடிகல் எயிட் பண்ட்) எனும் புலம்பெயர் அமைப்பின் மூலம் தாயகத்திற்கு தொடர்ச்சியாக உதவிவரும் பல தன்னார்வ நன்கொடையாளர்களில் ஒருவராக இருக்கிறேன். தாயகத்தின் (வடக்கிலும் கிழக்கிலும்) உள்ள பல்வேறுபட்ட வைத்தியசாலைகள், சுகாதார பராமரிப்பு நிலையங்கள், பாடசாலைகள் என்று பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கு வருடந்தோறும் பணமாகவும், மருத்துவ உபகரணங்களாகவும், எக்ஸ்ட்ரே கருவிகள், ஸ்கானர்கள், வைத்தியசாலைப் படுக்கைகள், ஊனமுற்றவர்களுக்கான நான்கு சக்கர வண்டிகள் என்றும், மருத்துவ ஆலோசனைகள், பயிற்சிப் பட்டறைகள் என்கிற சேவைகள் வடிவிலும் இந்த நிறுவனம் பெருமளவு தொண்டுகளை ஆற்றி வருகிறது. வருடம் தோறும் பெரிய வெள்ளியன்று இங்கிருக்கும் தமிழ் வானொலிகள் ரேடியோதொன் எனும் நேரலை நிகழ்ச்சிமூலம் தன்னார்வத் தொண்டர்கள் மக்களை நன்கொடைகளுக்கு ஊக்குவித்துவருவதுடன் பெருமளவு நிதியினைச் சேகரித்தும் அனுப்பிவருகிறார்கள்.

சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு ஆயர் வணக்கத்திற்குறிய பொன்னையா ஆண்டகை அவர்கள் இங்கு வந்திருந்தபொழுது இந்த நிறுவனத்தின் அமைப்பாளர்களில் இருவரான வைத்திய கலாநிதிகள் மனோமோகன் மற்றும் கேதீஸ்வரன் அவர்கள் ஆயருடன் கிழக்கிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை அனுப்புவதுதொடர்பாகக் கலந்துரையாடியபோது நானும் அவ்விடத்தில் இருந்தேன். 

இன்றுவரை இந்த நிறுவனத்தின் தொண்டுகள் வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ச்சியாக நடந்தே வருகிறது. 

நான் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டதன் ஒரே நோக்கம் நாம் செய்யும் உதவிகளைச் சொல்லிக் காட்டவல்ல, மாறாக புலம்பெயர்ந்தோர் என்னத்தைப் பிடுங்கினர் என்று சகட்டுமேனிக்குக் கேட்டுவிட்டுச் செல்லும் சிலர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.

அடுத்தது, இக்களத்திலேயே நேசக்கரம் (சாந்தி) எனும் புலம்பெயர் உதவி அமைப்புப் பற்றி அறியாதவர்கள் இருக்கமுடியாது. அதே போல தனிப்பட்ட ரீதியில் தம்மாலான உதவிகளைச் செய்துவரும் விவசாயி விக், ஜூட் அண்ணா (கற்பகதரு), குசா (குமாரசாமி), விசுகு (குகன் அண்ணா), மோஹன் அண்ணாவின் முயற்சிகள் உள்ளிட்ட பலர் தனியாகவும் அமைப்பு ரீதியாகவும் உதவுகிறார்கள்.

இவர்கள் எல்லாவற்றையும் விட, ஒவ்வொரு புலபெயர் தமிழனும், தமிழிச்சியும் தாயகத்தில் வாழும் தமது உறவுகளுக்காக தவறாது பண உதவிகளைச் செய்தே வருகிறார்கள். புலம்பெயர் உதவிகள் மூலமே பலரது வாழ்வு தாயகத்தில் இன்று நடக்கிறது. 

அரசுக்குச் சோரம்போய், அற்ப சலுகைகளுக்காக புலம்பெயர் தமிழனை வசைபாடும் நபர்கள் "புலம்பெயர் தமிழர்கள் என்னத்தைப் பிடுங்கினார்கள்" என்று கேட்கும் முன்னம் சிந்தித்துக் கேட்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/10/2020 at 05:16, தனிக்காட்டு ராஜா said:

முதலிட வேண்டாம் எத்தனை பேர் மீண்டும் குடியேற நினைக்கிறார்கள் காரணம் சொல்வார்கள் இலங்கையில் வாழமுடியாது அரசு எங்களை கொலை செய்து விடும் என்று போராடிய போராளிகளே இங்கு வாழும் போது பொய்ய சொல்லி விசா பெற்றவர்களால் இங்கு வாழமுடியாது அது அவர்களுக்கு தெரியும் . இங்கு வாழ்வதும் மனிதர்கள்தான் . 

இதை உணர்ச்சியாக பார்க்காமல், சமூக, பொருளாதார கட்டமைப்பு என்பதன் அடிப்படையில் சிந்தித்தால், நீங்கள் கூட விரும்ப மாடீர்கள்.

நீங்கள் சொன்னவாறே, பெருமளவில் புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் தமது இடத்தில் வந்து வாழுகிறார்கள் என்று வைப்போம்.

முக்கியமாக, இந்த மீள் குடியேற்றத்தில், தனி மனித விருப்பு, வெறுப்புகள், மற்றும் நடத்தைகள், செயற்றப்பாடுகளே மிகப் பெரிய பங்கை வகிக்கும்.

எவ்வளவு தான் பணம் இருந்தாலும், அடிப்படை வளம் (நிலமும், நீரும் ) அங்கிருந்து தான் வர வேண்டும்.

முதலாவது, பண வீக்கமும், வள மற்றும் வேலைப்  போட்டியும் உருவாகும். 

மீள வந்தவர்கள் முதலிட்டு எதாவது தொடங்கினால், அவர்கள் மீள வந்தவர்களையே பெரும்பாலும் வேளைக்கு அமர்த்துவார்கள். இது வேலை கலாசாரத்துடன் மற்றும் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்டது. 
இதை நான் சொல்வது,  இங்கே விவசாயி விக் எழுதுவதை பார்த்து. 

இந்த போட்டியில் பெரும்பாலும், அவரவர் வேண்டியதை அடையக் கூடிய பணம் மட்டுமல்ல, வேறு பல காரணிகள், இதில் முக்கியமாக அவர்கள் வேறு கலாசாரத்தில், வேறு மொழியில் இரு தலை கொள்ளி எறும்பாக, இரண்டு தோணிகளில் கால் வைத்ததாக  வாழ்ந்த (ஏறத்தாழ சர்வதேச) அனுபத்துக்கு முன் அங்குள்ளவர்களால் போட்டி  போட முடியாது.

மற்றது மொழி, ஆங்கிலமே சர்வதேச மொழியாக (ஏன் இப்பொது கொழும்பூ நிர்வாகத்தை பொறுத்தவரை) இருப்பதால், பல விடயங்களை அவர்கள் இலகுவாக கையாளுவார்கள்.

அங்குள்ள உள்ளூர்  நிர்வாகம் திக்குமுக்காடும், வழமையான கதைகளால் ஏய்ப்பது கடினம். சில வேளைகளில் பகுதி உள்ளூர்  நிர்வாகம் புலம் பெயந்தவரால் நிரப்ப படுவதற்கும் இடம் இருக்கிறது.    
  
இதை கையாள்வதத்திற்கு, அங்குள்ளவர்கள், மீள குடி இருக்க வந்தவர்  மீது பெரும்பாலும் வன்முறைகள் சார்ந்த தெரிவே  உண்டு. ஆனால், அதிலும் அவர்கள் வேண்டியதை பெற்று விட முடியுமா என்பது ஓர் கேள்வி. மேலும், இதே வன்முறையை, மீள வந்தவர்கள் சட்டத்தின் அடிப்படையில் பாவிப்பதற்கும் பெரிய வாய்ப்புகள் இருக்கிறது.

பிரச்னை வேண்டாம் திரும்பி விடுவோம் என்பவர்களும் இருப்பார்கள். 

ஆனால் வந்து விட்டோம், எமது இடம், எதுவாயினும் நின்று பிடிப்போம் என்று ஓர்மம் எடுத்தால், அங்குள்ளவர்கள் மிகவும் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டி வரும்.

ஒன்று சொல்கிறேன், புலம் பெயர்வர்களின் வாழ்க்கை கண்ணோட்டமும், சிங்கள ஆட்சி மற்றும் மேல்தட்டு வாழ்க்கை  கண்ணோட்டமும், இந்த இன வேறு  பாட்டை எடுத்து விட்டால், ஏறத்தாழ ஒன்று.

மீள வந்தால், தனி மனித தேவை - இன வேறுபாடு என்பதுக்கிடையிலான பிரிவு மழுங்கி விடும். எது ஓங்கும் இப்பொது சொல்ல முடியாது. ஆனால், எனது ஊகம் தனி மனித தேவைகள், ஏனெனில் திரும்பி வருபவர்கள் இந்த இன வேறுபாடு என்பதை தெரிந்தே வருகிறார்கள்.

அதனால், அங்குள்ளவர்களை விட,   சிங்கள ஆட்சி மற்றும் மேல்தட்டு உடன் ஒத்து போய் தமக்கு வேண்டியதை அடையாக கூடியவர்களாக மீள வந்தவர்களுக்கே  பெரும்பாலும் வாய்ப்புகள் உருவாகும்.

அதை விட,  சிங்கள ஆட்சி மற்றும் மேல்தட்டு மீள வந்தவர்களுடன் ஒத்து போக கூடிய வாய்ப்புகள் உண்டு.

கருணாவே, தமிழர்களுக்கு  துரோகமாக சிங்களத்துடன் சேர்ந்து போக முடியும் என்பது நடந்து இருப்பதால், அப்படியான ஒன்றும் இல்லாமல் மீள வந்தவர்களும்,   சிங்கள ஆட்சி மற்றும் மேல்தட்டும் ஏன் ஒத்து போக முடியாது. சிந்தித்து பாருங்கள்.

இந்த மீள் வரவு விருப்பின் அடிப்படையில் சிறுது சிறிதாக நடந்தால், இந்த விளைவுகள் கண்ணனுக்கு தெரியாது.

ஒரேடியாக, அலை அலையாக புலம் பெயந்தவர்கள் மீள வந்தால் மேலே மேலோட்டகமாக  சொன்னது நடக்காமல் இருபதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்.

அதனால், ஆங்கிலத்திலேயே சொல்கிறேன், be careful about what you wish for and unintended consequences. 

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே, புலம் பெயர்ந்தவர்கள் வீடு கட்டுவதால் அங்குள்ளவர்கள் இருப்பிடத்தை பெறுவதத்திற்கு அதிக சிரமப்படுகிறார்கள்  என்று   இங்கு சொல்லப்பட்டு, அதை அப்படி இருக்க முடியாது என்பதற்காண காரணத்தை சமூக, பொருளாதார அடிப்படையில் எழுதி இருக்கிறேன்.    

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kadancha said:

ஒன்று சொல்கிறேன், புலம் பெயர்வர்களின் வாழ்க்கை கண்ணோட்டமும், சிங்கள ஆட்சி மற்றும் மேல்தட்டு வாழ்க்கை  கண்ணோட்டமும், இந்த இன வேறு  பாட்டை எடுத்து விட்டால், ஏறத்தாழ ஒன்று.

நான் சொல்வது, liberal outlook in  life. 

அங்கு இருப்பவர்கள் கொண்டிருப்பது இன்னமும் conservative outlook in life.

இது இரண்டிலுமே சரியோ, தவறோ அல்ல, ஏனெனில் இது வாழ்க்கை அனுபவம்.

அனால், conservative outlook உள்ளவர்கள், liberal outlook உள்ளவர்களை முகம் சுளித்து கோபம் அடைவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தனியை நொந்து எழுதக்  கூடாது என்பதே நான் சொல்வது.

ஏனெனில், ஓர் அனுபவத்திற்கு (புலம் பெயர்ந்து) ஊடக சென்று வரமால், அந்த அனுபவத்தின் எல்லைகளை அறிய முடியாது. அது  போலவே சிந்தனைகளும்.

இங்கே தனியின் ஆற்றலையோ, திறமையையோ விமர்சிக்கவில்லை.     

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தமான ஒன்றை சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் 

15 hours ago, யாயினி said:

தனி போன்றவர்களோடு இனி வரும் காலத்தில் அவதானமாகவே யாழ் கள உறவுகள் இருக்க வேண்டிய சூழ் நிலையை அவரது எழுத்து சொல்லி செல்கிறது..என்ன எப்போ பதிந்த திரியில் இப்போ இருந்து அடி படுகிறார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம்.சில திரிகளுக்குள்  நான் அவ்வளவாக வருவதில்லை..ஆனாலும் தனியின் கருத்தை பார்த்ததும்...எழுதுகிறேன்.எனது கருத்தை எடுக்க வேண்டும் என்றாலும் எடுக்கலாம்..

வெளியிலிருந்து போன உறவுகளோடு ஊர் ஊராக நின்று சோ காட்டியதையும் இப்போ  இவர் எழுதியிருப்பதையும் நினைக்க மிகவும் வெறுப்பாக இருக்கிறது..புலம் பெயர்ந்தவர்கள் கொடுத்தார்கள் கொடுக்கவிலை அல்லது கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் குடுக்கப் போகிறார்கள் என்பது எல்லாம் பறை அடித்து சொல்லிக் கொண்டு செய்தவர்களல்ல நாங்கள்.வீடுகளில் மாத இறுதியில்  பண பற்றாக்குறையினால்  பிரச்சனை ஏற்படுகிறது என்றால் எத்தனை விதமான கள்ளக் கணக்கு காட்டி இருப்போம்..போய் பிரண்ட் இருக்காடி அப்படியானவர்வர்களுக்கு குடுத்தாயா என்று கேடடு திட்டு வாங்கிய காலங்களும் எங்களுக்கு உண்டு.. அது எல்லாம்  வேற்று கிரக மக்களுக்கா அனுப்பினோம்..ஆ..

 

.அது மட்டுமல்ல நாடு நாடாக தெரு தெருவாக நின்று போராடங்கள் நடத்தியதை விட அங்கு வந்து வேறு போராட வேண்டுமா..ஏன் ஊரில் உள்ள உறவுகளுக்காக சுவிசில் உயிரோடு எரிந்தவர்களை மறந்து விட்டீர்களா இந்தியாவில் ஆண் பெண் என நினைத்தவுடன் எரிந்தார்களே மறந்துட்டீர்களா..புலம் பெயர்ந்தவர்கள் என்றால் என்ன அவ்வளவு கிள்ளுக் கீரைகளாகி விட்டோமா..சொல்லப் போனால் அங்குள்ள அனேகரின் சுக போக வாழ்க்கைக்கு பச்சை பச்சையா அனுப்பி வைக்கிறதே எங்கள் கைகள் தான்.யாயினி ஏன் இதற்குள் எழுதுது என்று யாரும் நினைக்க வேண்டாம்..பட் எழுத வேண்டிய சூழ் நிலை..

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க ஒரு ஞாபகத்திற்கு படம் எடுத்தோம் ஆனால் நாங்கள் எங்கு சுற்றினோம் எந்த சிறுவர் இல்லங்களுக்கு சென்றோம், எத்தனை ஏழை சிறார்கள் கல்விக்கு உதவினோம் என்பதை தம்பட்டம் அடிக்க வில்லை அது உங்களுக்கு தெரிய வாய்ப்பும் இல்லை. 

நான் தற்போது  நாட்டில் நடந்து வருவதை ,ஜதார்த்தத்தை எழுதும் போது அதை ஏற்க பலரால் முடியவில்லை . நான் இங்கு சொகுசு வாழ்க்கை வாழவில்லை விடுமுறையில் தினக்கூலி வேலைக்கு செல்கிறேன் நம்புவீர்களா? நம்ம மாட்டீர்கள் சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்றால் இந்த முகம் தெரியாத இணையத்தில் பல லட்சம் சம்பாதித்து இருப்பேன் அது இங்கு எனக்கு உதவி செய்கிறோம் என்று சொன்ன உள்ளங்கள் அறியும் யாயினி

 

பலருக்கு வெறுப்பு வந்திருக்கு, கவனமாக பழக சொல்லியும் எழுதி உள்ளீர்கள் நீங்கள் மட்டும் அல்ல இன்னும் பலர் இருக்கலாம் அனைத்து யாழ் நண்பர்களுக்கும் இத்தனை காலம் பயணித்துள்ளோம் . நான் அரச கைக்கூலியும் அல்ல அனைைவருக்கும் நன்றி .

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.😏😏😏 

 

 

22 hours ago, சுவைப்பிரியன் said:

இனி தனியை புறக்கனிக்க வேணும்.தனி இனி நீங்கள் தனியதான்.😀

சொன்னாலும் குற்றம் சொல்லா விட்டாலும் குற்றம் 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யதார்த்தமான ஒன்றை சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் 

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க ஒரு ஞாபகத்திற்கு படம் எடுத்தோம் ஆனால் நாங்கள் எங்கு சுற்றினோம் எந்த சிறுவர் இல்லங்களுக்கு சென்றோம், எத்தனை ஏழை சிறார்கள் கல்விக்கு உதவினோம் என்பதை தம்பட்டம் அடிக்க வில்லை அது உங்களுக்கு தெரிய வாய்ப்பும் இல்லை. 

நான் தற்போது  நாட்டில் நடந்து வருவதை ,ஜதார்த்தத்தை எழுதும் போது அதை ஏற்க பலரால் முடியவில்லை . நான் இங்கு சொகுசு வாழ்க்கை வாழவில்லை விடுமுறையில் தினக்கூலி வேலைக்கு செல்கிறேன் நம்புவீர்களா? நம்ம மாட்டீர்கள் சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்றால் இந்த முகம் தெரியாத இணையத்தில் பல லட்சம் சம்பாதித்து இருப்பேன் அது இங்கு எனக்கு உதவி செய்கிறோம் என்று சொன்ன உள்ளங்கள் அறியும் யாயினி

 

பலருக்கு வெறுப்பு வந்திருக்கு, கவனமாக பழக சொல்லியும் எழுதி உள்ளீர்கள் நீங்கள் மட்டும் அல்ல இன்னும் பலர் இருக்கலாம் அனைத்து யாழ் நண்பர்களுக்கும் இத்தனை காலம் பயணித்துள்ளோம் . நான் அரச கைக்கூலியும் அல்ல அனைைவருக்கும் நன்றி .

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.😏😏😏 

 

 

சொன்னாலும் குற்றம் சொல்லா விட்டாலும் குற்றம் 

நிற்பதும் போவதும் உங்களின் தனிப்பட்ட விடையம்..ஆனால் தனியை கலைத்ததில் யாயினிக்கும் பஙகுண்டு என்று இந்தக் களத்தில் யாரும் சொல்லிக் கொள்ள வேண்டாம்..மெளனிகளாக இருப்பவர்கள் அப்படி ஒரு குற்றச் சாட்டையும் என் மேல் வைப்பார்கள்.ஏன் எனில் ஏற்கனவே வேண்டாத ஒருத்தி போல் தான் இங்கு நட மாடிக் கொண்டு திரிகிறேன்..நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யதார்த்தமான ஒன்றை சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் 

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க ஒரு ஞாபகத்திற்கு படம் எடுத்தோம் ஆனால் நாங்கள் எங்கு சுற்றினோம் எந்த சிறுவர் இல்லங்களுக்கு சென்றோம், எத்தனை ஏழை சிறார்கள் கல்விக்கு உதவினோம் என்பதை தம்பட்டம் அடிக்க வில்லை அது உங்களுக்கு தெரிய வாய்ப்பும் இல்லை. 

நான் தற்போது  நாட்டில் நடந்து வருவதை ,ஜதார்த்தத்தை எழுதும் போது அதை ஏற்க பலரால் முடியவில்லை . நான் இங்கு சொகுசு வாழ்க்கை வாழவில்லை விடுமுறையில் தினக்கூலி வேலைக்கு செல்கிறேன் நம்புவீர்களா? நம்ம மாட்டீர்கள் சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்றால் இந்த முகம் தெரியாத இணையத்தில் பல லட்சம் சம்பாதித்து இருப்பேன் அது இங்கு எனக்கு உதவி செய்கிறோம் என்று சொன்ன உள்ளங்கள் அறியும் யாயினி

 

லருக்கு வெறுப்பு வந்திருக்கு, கவனமாக பழக சொல்லியும் எழுதி உள்ளீர்கள் நீங்கள் மட்டும் அல்ல இன்னும் பலர் இருக்கலாம் அனைத்து யாழ் நண்பர்களுக்கும் இத்தனை காலம் பயணித்துள்ளோம் . நான் அரச கைக்கூலியும் அல்ல அனைைவருக்கும் நன்றி .

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.😏😏😏 

 

 

சொன்னாலும் குற்றம் சொல்லா விட்டாலும் குற்றம் 

தனி, இது மாற்றாக ஒரு கருத்தும் வரக் கூடாது என்போர் பல காலங்களாக கடைப்பிடிக்கும் ஒரு உத்தி! கான்சல் கலாச்சாரம் (cancel culture) ! இதை ஏற்றுக் கொண்டு நீங்க விலகினால் இவர்களுக்கு வெற்றி, இதையே பதில் சொல்ல இயலாத கேள்வி கேட்கும் ஏனையோரிலும் பிரயோகித்து யாழை வட கொரியா லெவலுக்கு மாத்தி விடுவர். 

தயவு செய்து இணைந்திருங்கள்! 

2 minutes ago, யாயினி said:

நிற்பதும் போவதும் உங்களின் தனிப்பட்ட விடையம்..ஆனால் தனியை கலைத்ததில் யாயினிக்கும் பஙகுண்டு என்று இந்தக் களத்தில் யாரும் சொல்லிக் கொள்ள வேண்டாம்..மெளனிகளாக இருப்பவர்கள் அப்படி ஒரு குற்றச் சாட்டையும் என் மேல் வைப்பார்கள்.ஏன் எனில் ஏற்கனவே வேண்டாத ஒருத்தி போல் தான் இங்கு நட மாடிக் கொண்டு திரிகிறேன்..நன்றி.

யாயினி, உங்களுக்கு என்ன பிரச்சினை? நான் எல்லாத் திரிகளும் பார்ப்பதில்லை. எனக்கும் சிலருக்கும் விழாத கல்லெறியா உங்களுக்கு இங்கே விழுகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கண பேர் தனி சொன்ன கருத்தை சரியாய் விளங்கிக் கொள்ளவில்லை ....வெளி நாட்டில் இருந்து நம்மால் பணத்தை மட்டும் தான் அனுப்ப முடியும் ...எங்களிடம் இருக்கும் பணம் போனால் நாளைக்கே அதை உழைத்து கொள்ள முடியும்...ஆனால் இங்கே இருந்து காசை அனுப்பி போட்டு அரசிற்கு எதிராய் போராடு ,ஆர்ப்பாட்டம் செய் என்று தூண்டி விடுவது அவர்களது உயிர்களோடு சம்மந்தப்பட்ட விசயம்...இவ்வளது நாளும் அப்படி செய்து தான் புலியையே அழித்தீர்கள் ...மீதம் இருக்கும் தமிழரையும் அழிக்க வேண்டாம் ...உயிர் போனால் திரும்ப வராது 

12 minutes ago, யாயினி said:

நிற்பதும் போவதும் உங்களின் தனிப்பட்ட விடையம்..ஆனால் தனியை கலைத்ததில் யாயினிக்கும் பஙகுண்டு என்று இந்தக் களத்தில் யாரும் சொல்லிக் கொள்ள வேண்டாம்..மெளனிகளாக இருப்பவர்கள் அப்படி ஒரு குற்றச் சாட்டையும் என் மேல் வைப்பார்கள்.ஏன் எனில் ஏற்கனவே வேண்டாத ஒருத்தி போல் தான் இங்கு நட மாடிக் கொண்டு திரிகிறேன்..நன்றி.

ஒரு கருத்தை எழுதினால் அதற்கான விமர்சனத்தை எதிர் நோக்க பழகிக் கொள்ளுங்கள் ...கருத்திற்கு கருத்தால் பதில் சொல்லாமல் துரோகி என்பதும் ,யாழை விட்டு ஒருவரை துரத்தும் நிலைக்கும் வர பண்ணுவது எந்த வகையான செயல் யாயினி ?

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யதார்த்தமான ஒன்றை சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் 

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க ஒரு ஞாபகத்திற்கு படம் எடுத்தோம் ஆனால் நாங்கள் எங்கு சுற்றினோம் எந்த சிறுவர் இல்லங்களுக்கு சென்றோம், எத்தனை ஏழை சிறார்கள் கல்விக்கு உதவினோம் என்பதை தம்பட்டம் அடிக்க வில்லை அது உங்களுக்கு தெரிய வாய்ப்பும் இல்லை. 

நான் தற்போது  நாட்டில் நடந்து வருவதை ,ஜதார்த்தத்தை எழுதும் போது அதை ஏற்க பலரால் முடியவில்லை . நான் இங்கு சொகுசு வாழ்க்கை வாழவில்லை விடுமுறையில் தினக்கூலி வேலைக்கு செல்கிறேன் நம்புவீர்களா? நம்ம மாட்டீர்கள் சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்றால் இந்த முகம் தெரியாத இணையத்தில் பல லட்சம் சம்பாதித்து இருப்பேன் அது இங்கு எனக்கு உதவி செய்கிறோம் என்று சொன்ன உள்ளங்கள் அறியும் யாயினி

 

பலருக்கு வெறுப்பு வந்திருக்கு, கவனமாக பழக சொல்லியும் எழுதி உள்ளீர்கள் நீங்கள் மட்டும் அல்ல இன்னும் பலர் இருக்கலாம் அனைத்து யாழ் நண்பர்களுக்கும் இத்தனை காலம் பயணித்துள்ளோம் . நான் அரச கைக்கூலியும் அல்ல அனைைவருக்கும் நன்றி .

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.😏😏😏 

 

 

சொன்னாலும் குற்றம் சொல்லா விட்டாலும் குற்றம் 

கருத்துக்களம்  என்றால் பிரச்சனை வருவது இயல்புதான் இந்த உரசல்களை விட்டுத்தள்ளி தனியொருவன் தொடர்ந்து இணைத்திருங்கள் தயவு செய்து உங்கள் முடிவை மாற்றுவீர்கள் என்று நம்பிக்கையுடன் பெருமாள் .

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரதி said:

இங்கே கண பேர் தனி சொன்ன கருத்தை சரியாய் விளங்கிக் கொள்ளவில்லை ....வெளி நாட்டில் இருந்து நம்மால் பணத்தை மட்டும் தான் அனுப்ப முடியும் ...எங்களிடம் இருக்கும் பணம் போனால் நாளைக்கே அதை உழைத்து கொள்ள முடியும்...ஆனால் இங்கே இருந்து காசை அனுப்பி போட்டு அரசிற்கு எதிராய் போராடு ,ஆர்ப்பாட்டம் செய் என்று தூண்டி விடுவது அவர்களது உயிர்களோடு சம்மந்தப்பட்ட விசயம்...இவ்வளது நாளும் அப்படி செய்து தான் புலியையே அழித்தீர்கள் ...மீதம் இருக்கும் தமிழரையும் அழிக்க வேண்டாம் ...உயிர் போனால் திரும்ப வராது 

ஒரு கருத்தை எழுதினால் அதற்கான விமர்சனத்தை எதிர் நோக்க பழகிக் கொள்ளுங்கள் ...கருத்திற்கு கருத்தால் பதில் சொல்லாமல் துரோகி என்பதும் ,யாழை விட்டு ஒருவரை துரத்தும் நிலைக்கும் வர பண்ணுவது எந்த வகையான செயல் யாயினி ?

இங்கு நான் மட்டும் கருத்தை பகிர வில்லை..இன்னும் நிறைய பேர் பகிர்ந்து இருக்கிறார்கள்..நான் தனியை களத்தை விட்டு போக சொலல்லவில்லை..அப்படி ஒரு திருவுபடுத்தலை உண்டாக்குவது உங்களின் கருத்தாடலே..கொஞ்சம் நலிந்தவர்கள் என்றால் போல் ஒரேயடியாக மட்டம் தட்டாதீரகள் ரதி.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, யாயினி said:

இங்கு நான் மட்டும் கருத்தை பகிர வில்லை..இன்னும் நிறைய பேர் பகிர்ந்து இருக்கிறார்கள்..நான் தனியை களத்தை விட்டு போக சொலல்லவில்லை..அப்படி ஒரு திருவுபடுத்தலை உண்டாக்குவது உங்களின் கருத்தாடலே..கொஞ்சம் நலிந்தவர்கள் என்றால் போல் ஒரேயடியாக மட்டம் தட்டாதீரகள் ரதி.

யார் இங்கே நலிந்தவர் ?....ஏன் அப்படி சொல்கிறீர்கள்?...முதலில் உங்கள் தாழ்வு மனப்பான்மையை விட்டுத் தொலையுங்கள் ...இது கருத்துக்களும் ...இங்கு எல்லோரும் சமம் ...ஏழை ,பணக்காரன் ,படித்தவன் படிக்காதவன் பேதம் இங்கு இல்லை ...அப்படி ஒரு பேதம் இருக்க கூடாது என்று தான் எத்தனையோ பேர் கேட்டும் மோகன் காசு உறுப்பினர்களிடம் வேண்டவில்லை ஒரு பெண்ணான நீங்கள் மனவுறுதி கொண்டவராக இருக்க வேண்டும் ,இருங்கள் 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

இதற்கெல்லாம் விலத்தினால், எதிலுமே விலத்தி ஓடிக் கொண்டு இருக்கத்  தான் வேண்டும் வாழ்க்கையில். 

சிங்களத்துக்கு விலத்தி ஓடாத நீங்கள், ஏன் விலத்துகிறீர்கள்?

இங்கே என்னை இந்திய RAW ஆக இருப்பாரோ என்று கேள்வி எழுப்பப்பட்டதும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

யார் இங்கே நலிந்தவர் ?....ஏன் அப்படி சொல்கிறீர்கள்?...முதலில் உங்கள் தாழ்வு மனப்பான்மையை விட்டுத் தொலையுங்கள் ...இது கருத்துக்களும் ...இங்கு எல்லோரும் சமம் ...ஏழை ,பணக்காரன் ,படித்தவன் படிக்காதவன் பேதம் இங்கு இல்லை ...அப்படி ஒரு பேதம் இருக்க கூடாது என்று தான் எத்தனையோ பேர் கேட்டும் மோகன் காசு உறுப்பினர்களிடம் வேண்டவில்லை ஒரு பெண்ணான நீங்கள் மனவுறுதி கொண்டவராக இருக்க வேண்டும் ,இருங்கள் 

 

முதலில் இந்த திரியை பப்பிளிக்கிலிருந்து எடுப்பது நன்று.நான்(ம்)மோகன் அண்ணா பற்றி ஒரு வார்த்தை கூட பேச வில்லை..ஆகவே அவரை அவராகவே இருக்க விடுதல் நன்று.
இதற்கு மேல் எழுத ஒன்றும் இல்லை.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பு பல தடவை எழுதியது தான்.தயவு செய்து தாயகத்தில் உள்ளவர்களின் நிலமையையும் புரிந்து கொள்ள வேண்டும்.இல்லா விட்டால் இந்தக்களம் வெறும் புலத்தாருக்கான களமாகி விடும்.தனிக்கு புலம் பெயர் மக்களின் உதவிகள் பற்றி தனிப்பட்ட முறையிலும் தெரியும்.முன்பு ஒரு தாயக உறவு ஒன்று எழுதியது எங்களையும் வெளியில் எடுத்து விடுங்கள் நாங்களும் உங்களுக்கு இணையாக தேசியம் கதைக்கிறம் என்டு.தனி தயவு செய்து உங்கள் முடிவை மாற்றுங்கள்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

தனி, சகோதரா இந்த சலசலப்புகளை சிறிது தவிர்த்து விட்டு தொடர்ந்து இணைந்திருங்கள்.......இது எல்லாம் கடந்து போகும்.....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யதார்த்தமான ஒன்றை சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் 

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க ஒரு ஞாபகத்திற்கு படம் எடுத்தோம் ஆனால் நாங்கள் எங்கு சுற்றினோம் எந்த சிறுவர் இல்லங்களுக்கு சென்றோம், எத்தனை ஏழை சிறார்கள் கல்விக்கு உதவினோம் என்பதை தம்பட்டம் அடிக்க வில்லை அது உங்களுக்கு தெரிய வாய்ப்பும் இல்லை. 

நான் தற்போது  நாட்டில் நடந்து வருவதை ,ஜதார்த்தத்தை எழுதும் போது அதை ஏற்க பலரால் முடியவில்லை . நான் இங்கு சொகுசு வாழ்க்கை வாழவில்லை விடுமுறையில் தினக்கூலி வேலைக்கு செல்கிறேன் நம்புவீர்களா? நம்ம மாட்டீர்கள் சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்றால் இந்த முகம் தெரியாத இணையத்தில் பல லட்சம் சம்பாதித்து இருப்பேன் அது இங்கு எனக்கு உதவி செய்கிறோம் என்று சொன்ன உள்ளங்கள் அறியும் யாயினி

 

பலருக்கு வெறுப்பு வந்திருக்கு, கவனமாக பழக சொல்லியும் எழுதி உள்ளீர்கள் நீங்கள் மட்டும் அல்ல இன்னும் பலர் இருக்கலாம் அனைத்து யாழ் நண்பர்களுக்கும் இத்தனை காலம் பயணித்துள்ளோம் . நான் அரச கைக்கூலியும் அல்ல அனைைவருக்கும் நன்றி .

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.😏😏😏 

 

 

சொன்னாலும் குற்றம் சொல்லா விட்டாலும் குற்றம் 

சரி.....அங்கை சந்திப்பம் 😁

 

  • கருத்துக்கள உறவுகள்
On 14/10/2020 at 15:16, தனிக்காட்டு ராஜா said:

ஐ. நாவரைக்கும்  நீதி கேட்டு குளிருலயும்  வெயிலிலையும் நடந்ததுதான் மிச்சம்

விடா முயற்சி ஒருநாள் பலன் தரும். கிழக்குகள் வெளிக்கும் காலை வந்தால், நாம் நினைத்தது நடக்கும் வேளை வந்தால், அதுவரை விடாது தொடர்வோம். எங்களால் இயன்றதை நாங்கள் செய்கிறோம், அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்யட்டும்.

On 15/10/2020 at 22:21, colomban said:

சாட்டையடி

எல்லோரும் ஒன்று சேர்ந்து, தொடர்ந்து ஒரு இலக்கு நோக்கி  முயற்சித்தால் சாதிக்கலாம். தொடர்ந்து தட்டும்போது ஓர்நாள்  கதவு திறக்கும், தொடர்ந்து கேட்கும் போது நமக்கு அருளப்படாவிட்டாலும், நாம் கொடுக்கும் அரிக்கண்டத்திலாவது  (தொல்லையின் பொருட்டாவது) தூக்கி எறியலாம். நாம் நிஞாயம் கேட்பது சாதாரணமானவர்களிடம் அல்ல, பொல்லாத நடுவரிடம்  இருந்து.  நம்மிடம் எல்லாம் இருந்தும், பெறுவதற்கு உரிமம் இருந்தும் பெறமுடியாமல் போனதற்கு பிரதான காரணம் நம்மிடம் ஒற்றுமையில்லை. ஒத்துழைக்காவிட்டாலும் குழப்பியடிக்காமல் இருப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.😏😏😏 

 

தனி,

இந்த லொல்லுதானே வாணாம் என்கிறது.

“நேக்கு போகணும்னு தோணுறது ஆனா எங்க போகணும்னு தோணலியே” என்ற சிவாஜி ஸ்டைல் வசனம் எல்லாம் போதும் ஐயா, பிலிஸ் கம் பேக்.

பல ஆண்டுகளாக ஊரை விட்டு வந்த எமக்கு 20, 30, 40 வருடங்களின் பின்னான ஊரின் நிலமை புரியாதது வியப்பில்லை தனி.

எங்களுக்கு நீங்கள் சொல்லும் யதாத்தத்தை ஏற்க முடியாமையால் வார்த்தைகளை நாம் விட்டு விடக்கூடும்.

ஆனா நீங்களும் கைவிட்டு விட்டால் எங்களுக்கு யார்தான் இடித்துரைப்பார்?

சுவை, நீங்கள், அக்னி போன்றோர் எழுதும் கருத்து இங்கே எழுதப்படும் மிச்ச 10 கருத்துக்கு சமன். ஏன்னென்றால் நீங்கள்தான் எமக்கும் மண்ணுக்குமான இணைப்பு பாலம்.

இதை ஒரு பொது சேவையாக கருதியாவது தொடருங்கள்.

ஜஸ்ரின், யூட், கோசான். துல்பென் வாங்காத அடியா? 

வேணும் எண்டால் தனி மடலில் கேளுங்கள், அடி வாங்கியும் நோகாத மாதிரி நடிப்பது எப்படி என ஒரு சின்ன டுடோரியல் போட்டு விடுகிறேன்😂

7 hours ago, Justin said:

 எனக்கும் சிலருக்கும் விழாத கல்லெறியா உங்களுக்கு இங்கே விழுகிறது?

ஜஸ்ரின் அண்ணா, 

உங்களுக்கு வேண்டாம் என்றால் அது உங்கள் பிரச்சனை.

நான் இந்த கற்களை நம்பித்தான் அடுத்த சமருக்கு கராஜை இடித்து பெருப்பிப்பதாக உள்ளேன். கெடுத்து விடாதீர்கள் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, goshan_che said:
On 16/10/2020 at 19:26, Justin said:

 எனக்கும் சிலருக்கும் விழாத கல்லெறியா உங்களுக்கு இங்கே விழுகிறது?

 

தாங்கள் எழுதுறதெல்லாம் பூ,புஷ்பம்,பூமாலை.அதுக்கு மற்றவன் பதில் கருத்து எழுதினால் கல்லெறிதல்.

வணக்கம் நிர்வாகம்! இனிமேல் கருத்துக்களை வெட்டேக்கை ஒழுங்காய் வெட்டுங்கப்பா.நேற்று ஒழுங்காய் வாசிச்சன். இண்டைக்கு மிச்ச சொச்சம் தொங்குது.

 

  • கருத்துக்கள உறவுகள்

தனி என்ற முனிவர்ஜீ யாழ் களத்தில் இருந்து விலகுவதாக எழுதிய கருத்தை வாசித்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் யாழ் களத்தில் மிகவும் ஆர்வமுடன் வாசிக்கும் பதிவுகள் தாயகத்தில் இருந்து எழுதும் தனி போன்றவர்களின் கருத்துகளைத்தான். உண்மைநிலைகளை செய்திகளோ, ஆய்வுகளோ தராது. நேர்மையான கருத்துக்கள்தான் தரும்.

கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்களின் உண்மையான உணர்வுகளைப் புரிந்து, அரசியல் நிலைப்பாட்டு மாற்றங்களின் சிக்கல்களை அறிய விரும்பாமல், தீக்கோழி மண்ணுக்குள் தலையைப் புதைப்பதுபோல, மாயையில் இருப்பவர்களின் கருத்துக்களால் யாழை விட்டு விலகக்கூடாது.

புலம்பெயர் தமிழரில் பலர் இன்னமும் முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்துபோனதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. கடந்த 11 வருடங்களாக நடக்கும் அரசியல் மாற்றங்களைப் பற்றி மனம் திறந்து உரையாடாமல், மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்புக்கொடுக்காமல் அக்குரல்களை ஒடுக்கத்தான் இப்போதும் பலர் விரும்புகின்றார்கள். ஆனால் இது ஆரோக்கியமானது அல்ல.

முனிவர்ஜீயை மீண்டும் களத்தில் காணவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

 

தாங்கள் எழுதுறதெல்லாம் பூ,புஷ்பம்,பூமாலை.அதுக்கு மற்றவன் பதில் கருத்து எழுதினால் கல்லெறிதல்.

வணக்கம் நிர்வாகம்! இனிமேல் கருத்துக்களை வெட்டேக்கை ஒழுங்காய் வெட்டுங்கப்பா.நேற்று ஒழுங்காய் வாசிச்சன். இண்டைக்கு மிச்ச சொச்சம் தொங்குது.

 

அண்ணை, நீங்கள் "தாற்பரியத்தோடு" எழுதும் பதில்களை பதில் கருத்தென்று நீங்கள் நினைப்பது, அகற்ற வேண்டிய கருத்தென்று மட்டூஸ் நினைப்பது. இதனால் நீங்கள் அடிக்கடி மூக்குச் சிந்துவது, இதெல்லாரும் பார்ப்பதும் அறிந்ததும் தானே? இதை அறியாத ஒருவர் நீங்கள் மட்டும் தான்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.