Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குளிர்..... - நிழலி

Featured Replies

குளிர்.....

-----------------------

 

கதவுகளின் இடுக்குகளினூடாக
கசிந்து வருகின்றது
துருவங்களில் பயணித்த
குளிரின் சாரல்

கிளைகளினூடே தாவி
ஏறுகின்ற குளிர்
இலைகளின் விளிம்பில்
உதிர்ந்து என் அறையெங்கும்
வியாபிக்கின்றது

வெளியே பூனை ஒன்று
குளிரின் அரவம் கேட்டு
தன் மீசைகளை
ஒடுக்கி கதவுகளினூடே
உள் நுழைகின்றது

குளிர் எப்போதுமே
இளமை காலம் ஒன்றில்
கடந்து போன
திருவெம்பாவை பாடல்களையும்
வைரவர் கோவிலின்
அதிகாலைப் பூசைகளையும்
அந்தோணியார் கோவிலின்
மார்கழி மாத
இயேசு பிறப்பையும்
நினைவுபடுத்திக் கொள்கின்றது

இடையிடையே
மார்கழி மழையில்
நனைந்த
நந்தியாவட்டை பூவின்
வாசத்தையும்
பவள மல்லிகையின்
இளம் சிகப்பு
இதழ்களையும் கூட
குளிர் ஞாபகப்படுத்தி
செல்கின்றது

குளிர் ஒரு
காலப் பெரு நதி
தன் கீழ்
புதைந்து கொண்ட
எல்லா நினைவுகளின்
மேல் பனியை பொழிந்து
இனிப்பை தடவிச்
செல்கின்றது

சில நேரங்களில்
அது
தகிக்கும் நினைவுகளின்
மீது
பெரு நெருப்பை
மூட்டி விட்டுச் செல்வதையும்
தவறவிடுவதில்லை...

----

நிழலி

Nov 29/2020

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

குளிர் எப்போதுமே
இளமை காலம் ஒன்றில்
கடந்து போன
திருவெம்பாவை பாடல்களையும்
வைரவர் கோவிலின்
அதிகாலைப் பூசைகளையும்
அந்தோணியார் கோவிலின்
மார்கழி மாத
இயேசு பிறப்பையும்
நினைவுபடுத்திக் கொள்கின்றது

இடையிடையே
மார்கழி மழையில்
நனைந்த
நந்தியாவட்டை பூவின்
வாசத்தையும்
பவள மல்லிகையின்
இளம் சிகப்பு
இதழ்களையும் கூட
குளிர் ஞாபகப்படுத்தி
செல்கின்றது

speaker455-1517821798.jpg

எங்கோ அதிகாலை  கோயில் புனலில் 

"செல்லத்தா செல்ல மாரியாத்தா

என்று l.r ஈஸ்வரியின் குரல் இழையோடுகிறது "

குளிர் கால நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர் ..👍

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலங்களிலாவது ஊரை நினைப்போமாக.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று... -6 பாகை. வேலைக்கு  போகவே மனமில்லாமல் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் மண்ணின் குளிரையும் வாழ்ந்த மண்ணின் நினைவையும் குழைத்து அருமையான குளிர்க் கவிதை. பாராட்டுக்கள் நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்குள் இழுத்துச் சென்று விட்டது கவி வரிகள்.அருமை

Edited by பசுவூர்க்கோபி

  • கருத்துக்கள உறவுகள்

குளிரோடு சேர்ந்து ஒரு அமைதியும் வந்து விடுவது மாதிரித் தான் எனது அனுபவம் இருக்கிறது. அது விடுமுறைத்தினங்கள் அதிகம் வருவதாலோ அல்லது சத்தங்களும் சூழலில் உறைந்து விடுவதாலோ தெரியவில்லை!

புதிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்க அருமையான நாட்கள்  குளிர் கால நாட்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இனி குளிர்காலம் வாட்டி எடுக்கப் போகிறது அதற்காக இப்பவே குளிருக்கு அப்பீல் செய்யப் படுகிறது.....!  😂

நல்ல கவிதை .....பகிர்வுக்கு நன்றி நிழலி .....!  👍

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் இளவேனில் காலத்திற்காக ஏங்கவைக்கும்!

கோடைகாலப் பயணங்களை நினைவுபடுத்தும்!

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் என்னுடன் வேலைபார்த்தவர் ஒருவர் கனடாவிற்கு குடியேறிவிட்டார் .. கனடாவில் அவரது முதலாவது குளிர்காலம்.. பனி கொட்டுவதை வீடியோவில் அனுப்பிருந்தார்.. அமைதியான வீதியும், வெள்ளை பனிமழையும் பார்க்க மிகவும் அழகாகவும் இருந்து,..

ஆனால் இங்கே 40டிகிரியில் அனல்பறக்கும் வெயில்.. 

49-E6-C182-EFFC-4-DFA-9-ECC-5-CD3620516-

  • தொடங்கியவர்
On 11/30/2020 at 11:09, புரட்சிகர தமிழ்தேசியன் said:

speaker455-1517821798.jpg

எங்கோ அதிகாலை  கோயில் புனலில் 

"செல்லத்தா செல்ல மாரியாத்தா

என்று l.r ஈஸ்வரியின் குரல் இழையோடுகிறது "

குளிர் கால நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர் ..👍

 

குளிர்காலத்தில் தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கும் பக்திப்பாடல்களும் அதன் நினைவுகளும் எப்பவும் இனிமையானவை.

நன்றி தோழர்

On 11/30/2020 at 11:30, ஈழப்பிரியன் said:

இந்தக் காலங்களிலாவது ஊரை நினைப்போமாக.

ஊரின் நினைவுகளும் அதன் மீதான தீராக் காதலும் அடி மனதில் எப்பவும் ஒரு மூலையிலிருந்து அருட்டிக் கொண்டு தானிருக்கும்.

வருகைக்கும் பின்னூட்டமிட்டமைக்கும் நன்றி.

On 11/30/2020 at 13:07, Kavallur Kanmani said:

வாழும் மண்ணின் குளிரையும் வாழ்ந்த மண்ணின் நினைவையும் குழைத்து அருமையான குளிர்க் கவிதை. பாராட்டுக்கள் நிழலி.

குளிர்காலம் எப்பவுமே அழகானவை. ஒவ்வொரு வயதிலும் அதற்கே உரிய நிகழ்வுகளை எமக்குத் தந்து கொண்டுதானிருக்கும்.

வருகைக்கு நன்றி அக்கா.

On 11/30/2020 at 13:34, பசுவூர்க்கோபி said:

ஊருக்குள் இழுத்துச் சென்று விட்டது கவி வரிகள்.அருமை

நன்றி பசுவூர்க்கோபி. 

பசுவூர் என்பது ஒரு ஊரின் பெயரா?

  • தொடங்கியவர்
On 11/30/2020 at 15:47, Justin said:

குளிரோடு சேர்ந்து ஒரு அமைதியும் வந்து விடுவது மாதிரித் தான் எனது அனுபவம் இருக்கிறது. அது விடுமுறைத்தினங்கள் அதிகம் வருவதாலோ அல்லது சத்தங்களும் சூழலில் உறைந்து விடுவதாலோ தெரியவில்லை!

புதிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்க அருமையான நாட்கள்  குளிர் கால நாட்கள்!

ஊரில் குளிர்காலம் என்றால் நிறைய மழையும் பெய்து கூதலும் இருக்கும். போர்த்துக் கொண்டு படுக்க சுகமான காலம். ஆனால் இங்கு குளிர் இருக்கு, ஆனால் கூதல் இல்லை.

On 11/30/2020 at 18:24, suvy said:

இனி குளிர்காலம் வாட்டி எடுக்கப் போகிறது அதற்காக இப்பவே குளிருக்கு அப்பீல் செய்யப் படுகிறது.....!  😂

நல்ல கவிதை .....பகிர்வுக்கு நன்றி நிழலி .....!  👍

இங்கு குளிருடன் பனியும் சேர்ந்து வருவதால் ஆரம்பத்தில் சந்தோசமாகவும் பிறகு எப்படா இளவேனில் காலம் வரும் என்ற ஏக்கமாகவும் இருக்கும்.

வருகைக்கு நன்றி அண்ணா.

18 hours ago, கிருபன் said:

குளிர் இளவேனில் காலத்திற்காக ஏங்கவைக்கும்!

கோடைகாலப் பயணங்களை நினைவுபடுத்தும்!

பனியை அடைவைத்து மரங்கள் இலையை பொரித்தெடுக்கும் காலத்துக்காக ஏங்குவது ஒவ்வொரு வருடமும் நடக்கின்றது.

13 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சமீபத்தில் என்னுடன் வேலைபார்த்தவர் ஒருவர் கனடாவிற்கு குடியேறிவிட்டார் .. கனடாவில் அவரது முதலாவது குளிர்காலம்.. பனி கொட்டுவதை வீடியோவில் அனுப்பிருந்தார்.. அமைதியான வீதியும், வெள்ளை பனிமழையும் பார்க்க மிகவும் அழகாகவும் இருந்து,..

ஆனால் இங்கே 40டிகிரியில் அனல்பறக்கும் வெயில்.. 

49-E6-C182-EFFC-4-DFA-9-ECC-5-CD3620516-

இங்கு இன்றும் நல்ல பனி. முழு நிலாவும் சில நாட்களுக்கு முன்னர் தான் வந்தமையால் வெண்ணிற இரவுகளை பார்க்க கூடியதாக இருக்கின்றது இப்ப.

 

  • கருத்துக்கள உறவுகள்

மழையும் குளிரும் மெல்லிய கூதல் காற்றும்

இஞ்சி தேநீரும் இதமாக சூடேற்றுகிறது

இங்கே 
புயல் வருமென புகையும் அடுப்பும்
கூப்பன் மாவில் குண்டான றொட்டியாக 
தேங்காய் சம்பலில் தேசிக்காய் புளியிலே 
மாசியும் மசிந்து மழையிலே வயிறு நிறைகிறது. 

On 11/30/2020 at 15:11, நிழலி said:

குளிர்.....

-----------------------

 

கதவுகளின் இடுக்குகளினூடாக
கசிந்து வருகின்றது
துருவங்களில் பயணித்த
குளிரின் சாரல்

கிளைகளினூடே தாவி
ஏறுகின்ற குளிர்
இலைகளின் விளிம்பில்
உதிர்ந்து என் அறையெங்கும்
வியாபிக்கின்றது

வெளியே பூனை ஒன்று
குளிரின் அரவம் கேட்டு
தன் மீசைகளை
ஒடுக்கி கதவுகளினூடே
உள் நுழைகின்றது

குளிர் எப்போதுமே
இளமை காலம் ஒன்றில்
கடந்து போன
திருவெம்பாவை பாடல்களையும்
வைரவர் கோவிலின்
அதிகாலைப் பூசைகளையும்
அந்தோணியார் கோவிலின்
மார்கழி மாத
இயேசு பிறப்பையும்
நினைவுபடுத்திக் கொள்கின்றது

இடையிடையே
மார்கழி மழையில்
நனைந்த
நந்தியாவட்டை பூவின்
வாசத்தையும்
பவள மல்லிகையின்
இளம் சிகப்பு
இதழ்களையும் கூட
குளிர் ஞாபகப்படுத்தி
செல்கின்றது

குளிர் ஒரு
காலப் பெரு நதி
தன் கீழ்
புதைந்து கொண்ட
எல்லா நினைவுகளின்
மேல் பனியை பொழிந்து
இனிப்பை தடவிச்
செல்கின்றது

சில நேரங்களில்
அது
தகிக்கும் நினைவுகளின்
மீது
பெரு நெருப்பை
மூட்டி விட்டுச் செல்வதையும்
தவறவிடுவதில்லை...

----

நிழலி

Nov 29/2020

அருமையான கவிதை👍🏽

  • கருத்துக்கள உறவுகள்

 குளிரில் இருந்து நிழல் சொன்ன கவிதை சூடாகவே இருந்தது.வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.