Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸை கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் 10 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்! -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணனை ஆதரித்து, கட்சியின் கொள்கைக்கு துரோகம் செய்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 10 உறுப்பினர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (30) சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மணிவண்ணனை ஆதரித்ததன் மூலம் கட்சியின் கொள்கைக்கு துரோகம் இழைத்து, யாழ்ப்பணம் மாநகர சபையின் எமது கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பத்துப்பேர் டக்ளஸ் தேவானந்தாவுடன், கைகோர்த்து கட்டிப்பிடித்துக் கொண்டுள்ளனர். அவர்களை எமது இயக்கத்தில் இருந்து நீக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

டக்ளஸை கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் 10 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்! | NewUthayan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே நீக்கிக்கிட்டு போனா.. கடைசியில் கட்சியில் இவர் மட்டும் தான் மிஞ்சுவார் போலக் கிடக்கு.

மேலும் கட்சித் தலைமை.. உறுப்பினர்களின் குரலுக்கு செவி மடுக்கக் கற்றுக்கொள்வது தான் தேர்தல் சனநாயகமாகும். 

ஈபிடிபி இனவிரோதக் கும்பல் இந்தச் சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்தி.. தன்னை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் அதேவேளை.. தமிழ் தேசியக் கட்சிகள் ஒற்றுமை இன்றி.. நொருங்கிக் கொண்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம்.. எதேச்சதிகார கட்சித் தலைமைகள் எனலாம். இது தமிழ் மக்கள் விரும்பக் கூடிய ஒரு அரசியல் போக்கு அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

நீக்க வெளிக்கிட்டால் பெரும்பாலான உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை நீக்க வேண்டிவருமே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமாருக்கு முக்கியம் தனக்கு ஒரு ஆசனம் பாராளுமன்றில், அடுத்த பல வருடங்களுக்கு ! 

இது தாத்தாவுக்கும், அப்பாவுக்கும் (அவர்களது ஆத்மா சாந்தியடைக!) இருந்த அதே பிரச்சினை தான்! 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் என்ன பிரச்சினை? ஐனநாயகத்துக்கு சாவால் விடும் படி எவர் நடந்தாலும் நடவடிக்கை அவசியம். குனியவோ வளையவோ தொடங்கினால??? இங்கே கருத்து எழுதும் எவரும் எது சரி பிழை என்பதற்கப்பால் கட்சி ஆதரவு பரம்பரை வரை சென்று அலசுவது??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, விசுகு said:

உண்மையில் என்ன பிரச்சினை? ஐனநாயகத்துக்கு சாவால் விடும் படி எவர் நடந்தாலும் நடவடிக்கை அவசியம். குனியவோ வளையவோ தொடங்கினால??? இங்கே கருத்து எழுதும் எவரும் எது சரி பிழை என்பதற்கப்பால் கட்சி ஆதரவு பரம்பரை வரை சென்று அலசுவது??

ஆனால் தாம் சார்ந்தோர் தொடர்பாக கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் நடந்த திருவிளையாடல்களை மறந்தும் நினைவு கூரமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு மக்களுக்கு உடனடி தேவைகளை தீர்க்கவில்லை என்ட ஆதங்கத்தில் விழுந்த வாக்கை வைத்து கனக்க துள்ளக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சுவைப்பிரியன் said:

கூட்டமைப்பு மக்களுக்கு உடனடி தேவைகளை தீர்க்கவில்லை என்ட ஆதங்கத்தில் விழுந்த வாக்கை வைத்து கனக்க துள்ளக் கூடாது.

உடனடியாக ஒன்றும் செய்ய இல்லை என்பதற்காக அல்ல நீண்ட காலம் அவகாசம் கொடுத்தும் எதுவுமே செய்யவில்லை என்பதற்காக.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக கட்சியை கையாளாமல் பழிவாங்கும் நடவடிக்கையால் வந்த வினை. ஆனாலும் மணிவண்ணன் மீது கையேந்திரகுமார்  வைத்த குற்றச்சாட்டு நிரூபணமாக அதிக காலம் எடுக்காது. தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக கூடாத கூட்டத்தில் இணைந்தாரா? அன்றி அதே குணம் உடையவர்தானா மணிவண்ணன் ......????? பன்றியோடு சேர்ந்த கன்றும் ....தின்னும் முதுமொழி. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

உண்மையில் என்ன பிரச்சினை? ஐனநாயகத்துக்கு சாவால் விடும் படி எவர் நடந்தாலும் நடவடிக்கை அவசியம். குனியவோ வளையவோ தொடங்கினால??? இங்கே கருத்து எழுதும் எவரும் எது சரி பிழை என்பதற்கப்பால் கட்சி ஆதரவு பரம்பரை வரை சென்று அலசுவது??

ஒரு பிரச்சினையுமில்லை கஜேந்திரகுமார் செய்தால்! 

கூட்டமைப்பு கட்சி ஒழுங்கமைப்பை மீறி விட்டார் என்று விக்கியரை விலக்க நடவடிக்கை எடுத்தால் மட்டும் தான் பிரச்சினை (அவையள் வளைஞ்சு முறிஞ்சிருக்க வேணும்)! 

ஆனால்,  கஜேந்திரகுமாரின் பதவி மோகம் பற்றிய கருத்து என் பலநாள் அவதானிப்பின் வழி வந்தது. தேர்தலில் வென்றதும் "11 வருட கனவு" என்று கண்ணீர் விட்டது இதன் அறிகுறி தான்!

வருங்காலத்தில் ஒரு கட்டத்தில் கஜன் குழு அரசில் அமைச்சுப் பதவி எடுத்துக் கொள்ளும். அதையும் "வளையாத் தனமை, ராசதந்திரம்" என்று வாழ்த்திக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்!

16 hours ago, satan said:

சரியாக கட்சியை கையாளாமல் பழிவாங்கும் நடவடிக்கையால் வந்த வினை. ஆனாலும் மணிவண்ணன் மீது கையேந்திரகுமார்  வைத்த குற்றச்சாட்டு நிரூபணமாக அதிக காலம் எடுக்காது. தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக கூடாத கூட்டத்தில் இணைந்தாரா? அன்றி அதே குணம் உடையவர்தானா மணிவண்ணன் ......????? பன்றியோடு சேர்ந்த கன்றும் ....தின்னும் முதுமொழி. 

என் அரசியல் ஆதரவு மணிக்கோ கஜேந்திரகுமாருக்கோ இல்லை. ஆனால் ஒரு கேள்வி தவிர்க்க முடியாதது.

 மணி மீது கஜேந்திரகுமார் வைத்த குற்றச்சாட்டு தெரிந்திருந்த போது தான் அவரை வைத்து தேர்தலில் வாக்குகளை வென்று ஒரு ஆசனம் ப்ளஸ் பெற்றார்கள். இப்போது  சுட்டிக் காட்டும் "கொள்கை" தான் முக்கியமென்றால் ஏன் தேர்தலுக்கு முதலே நடவடிக்கை எடுக்கவில்லை மணி மீது? 

இதற்கு கஜேன்களோடு தொடர்பில் இருக்கும் யாழ் கள உறுப்பினரிடமிருந்து கூடப் பதில் இல்லை! எனவே தான் பதவிக்காக எதையும் செய்யக் கூடியவர் கஜேந்திரகுமார் என சந்தேகிக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஒரு பிரச்சினையுமில்லை கஜேந்திரகுமார் செய்தால்! 

கூட்டமைப்பு கட்சி ஒழுங்கமைப்பை மீறி விட்டார் என்று விக்கியரை விலக்க நடவடிக்கை எடுத்தால் மட்டும் தான் பிரச்சினை (அவையள் வளைஞ்சு முறிஞ்சிருக்க வேணும்)! 

ஆனால்,  கஜேந்திரகுமாரின் பதவி மோகம் பற்றிய கருத்து என் பலநாள் அவதானிப்பின் வழி வந்தது. தேர்தலில் வென்றதும் "11 வருட கனவு" என்று கண்ணீர் விட்டது இதன் அறிகுறி தான்!

வருங்காலத்தில் ஒரு கட்டத்தில் கஜன் குழு அரசில் அமைச்சுப் பதவி எடுத்துக் கொள்ளும். அதையும் "வளையாத் தனமை, ராசதந்திரம்" என்று வாழ்த்திக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்!

என் அரசியல் ஆதரவு மணிக்கோ கஜேந்திரகுமாருக்கோ இல்லை. ஆனால் ஒரு கேள்வி தவிர்க்க முடியாதது.

 மணி மீது கஜேந்திரகுமார் வைத்த குற்றச்சாட்டு தெரிந்திருந்த போது தான் அவரை வைத்து தேர்தலில் வாக்குகளை வென்று ஒரு ஆசனம் ப்ளஸ் பெற்றார்கள். இப்போது  சுட்டிக் காட்டும் "கொள்கை" தான் முக்கியமென்றால் ஏன் தேர்தலுக்கு முதலே நடவடிக்கை எடுக்கவில்லை மணி மீது? 

இதற்கு கஜேன்களோடு தொடர்பில் இருக்கும் யாழ் கள உறுப்பினரிடமிருந்து கூடப் பதில் இல்லை! எனவே தான் பதவிக்காக எதையும் செய்யக் கூடியவர் கஜேந்திரகுமார் என சந்தேகிக்கிறேன். 

உங்கள் கற்பனைகள் எல்லாம் எனது கொள்கை ஆக்காதீர்கள். விக்கியர் மாகாண முதலமைச்சராக ஆன பின்னர் அவரை தன்னிச்சையாக இயங்க அனுமதித்திருக்கணும் என்பது மட்டுமே எனது நிலைப்பாடு. மாகாண சபைக்கு வரும் பணத்தைக் கூட தமது கட்சியின் சார்பில் பாவிக்க வெளிக்கிட்டு உள்ளதையும் கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கியதே கூட்டமைப்பின் சாதனை. இது தமிழ் மக்கள் சார்ந்த எனது கவலையே தவிர எனது கட்சி கொள்கை என்று எதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

உங்கள் கற்பனைகள் எல்லாம் எனது கொள்கை ஆக்காதீர்கள். விக்கியர் மாகாண முதலமைச்சராக ஆன பின்னர் அவரை தன்னிச்சையாக இயங்க அனுமதித்திருக்கணும் என்பது மட்டுமே எனது நிலைப்பாடு. மாகாண சபைக்கு வரும் பணத்தைக் கூட தமது கட்சியின் சார்பில் பாவிக்க வெளிக்கிட்டு உள்ளதையும் கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கியதே கூட்டமைப்பின் சாதனை. இது தமிழ் மக்கள் சார்ந்த எனது கவலையே தவிர எனது கட்சி கொள்கை என்று எதுவும் இல்லை.

இரு கேள்விகள்: 

அப்படி மாகாணசபைக்கு வந்த பணத்தை கூட்டமைப்பு கட்சி வேலைக்குப் பயன்படுத்த முனைந்ததா அல்லது கட்சியின் கொள்கைப் படி மக்களுக்கான வேலைத் திட்டத்தில் பயன்படுத்த முனைந்ததா? 

விக்கியர் மாகாணசபைக்கு தெரிவான போது சுயாதீன வேட்பாளராக நின்று வென்றாரா அல்லது கூட்டமைப்பின் வேட்பாளராக நின்று வென்றாரா? 

எனவே, உங்கள் பதிலில் வெளிப்பட்டது உங்களுக்கிருக்கும் "நிறக்கண்ணாடி போட்ட பார்வை" தானேயொழிய என் கற்பனையல்ல.

இது உங்கள் போன்ற ஆட்களில் இருக்கும் அடிப்படையான பிரச்சினை. கொள்கை என்று எதுவும் நிலையாக இல்லை. பிடித்தமான கட்சி/தரப்பு செய்தால் ஒரு அளவீடும் நியாயமும், பிடிக்காத தரப்பு செய்தால் வேறான அளவீடும் நியாயமும்! 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

இரு கேள்விகள்: 

அப்படி மாகாணசபைக்கு வந்த பணத்தை கூட்டமைப்பு கட்சி வேலைக்குப் பயன்படுத்த முனைந்ததா அல்லது கட்சியின் கொள்கைப் படி மக்களுக்கான வேலைத் திட்டத்தில் பயன்படுத்த முனைந்ததா? 

விக்கியர் மாகாணசபைக்கு தெரிவான போது சுயாதீன வேட்பாளராக நின்று வென்றாரா அல்லது கூட்டமைப்பின் வேட்பாளராக நின்று வென்றாரா? 

எனவே, உங்கள் பதிலில் வெளிப்பட்டது உங்களுக்கிருக்கும் "நிறக்கண்ணாடி போட்ட பார்வை" தானேயொழிய என் கற்பனையல்ல.

இது உங்கள் போன்ற ஆட்களில் இருக்கும் அடிப்படையான பிரச்சினை. கொள்கை என்று எதுவும் நிலையாக இல்லை. பிடித்தமான கட்சி/தரப்பு செய்தால் ஒரு அளவீடும் நியாயமும், பிடிக்காத தரப்பு செய்தால் வேறான அளவீடும் நியாயமும்! 

இது பற்றி கனக்க விவாதங்களும் எழுத்துக்களும் இங்கே நடந்தன. முடிந்தால் தேடி வாசியுங்கள். 

ஒரு மாகாண முதலமைச்சராக வந்த பின்னர் எல்லோருக்கும் பொதுவானவராக இருந்து இருக்கணும் என்பதே எனது நிலைப்பாடு. அவருக்கு கட்சி ரீதியாக அழுத்தங்கள் வந்ததாலேயே திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று அவரே சொல்லி உள்ளார். 

மற்றும் படி எனது கொள்கை நிலைப்பாடு பற்றி உங்களிடமிருந்து அத்தாட்சி பத்திரம் தேவையில்லை. நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

அவருக்கு கட்சி ரீதியாக அழுத்தங்கள் வந்ததாலேயே திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று அவரே சொல்லி உள்ளார். 

அழுத்தங்கள் மட்டுமல்ல தடைகள், மன அழுத்தங்கள், அவதூறுகள், புறக்கணிப்புகள்.........

 

6 hours ago, Justin said:

பதவிக்காக எதையும் செய்யக் கூடியவர் கஜேந்திரகுமார் என சந்தேகிக்கிறேன்.

பதவியோடு, பழிவாங்கலுக்காகவும்  மணிவண்ணனும் எதையும் செய்வார் என்று நான் நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

அழுத்தங்கள் மட்டுமல்ல தடைகள், மன அழுத்தங்கள், அவதூறுகள், புறக்கணிப்புகள்.........

 

பதவியோடு, பழிவாங்கலுக்காகவும்  மணிவண்ணனும் எதையும் செய்வார் என்று நான் நினைக்கிறேன். 

விடுங்க சகோ. பதிலளிக்கும் அவசரத்தில் அவர்களே அவர்களது கத்திக்கு பலியாகி விடுகின்றனர். மேலே கட்சி கொள்கை என்று அவர் எழுதிய அனைத்தும் அவருக்கே ஆப்படிக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2020 at 15:00, சுவைப்பிரியன் said:

கூட்டமைப்பு மக்களுக்கு உடனடி தேவைகளை தீர்க்கவில்லை என்ட ஆதங்கத்தில் விழுந்த வாக்கை வைத்து கனக்க துள்ளக் கூடாது.

கூட்டமைப்பு  தோற்க வேண்டும் என்பதற்காக  மக்களின் உடனடி தேவைகளை தீர்க்கவில்லையா??

7 hours ago, Justin said:

ஒரு பிரச்சினையுமில்லை கஜேந்திரகுமார் செய்தால்! 

கூட்டமைப்பு கட்சி ஒழுங்கமைப்பை மீறி விட்டார் என்று விக்கியரை விலக்க நடவடிக்கை எடுத்தால் மட்டும் தான் பிரச்சினை (அவையள் வளைஞ்சு முறிஞ்சிருக்க வேணும்)! 

ஆனால்,  கஜேந்திரகுமாரின் பதவி மோகம் பற்றிய கருத்து என் பலநாள் அவதானிப்பின் வழி வந்தது. தேர்தலில் வென்றதும் "11 வருட கனவு" என்று கண்ணீர் விட்டது இதன் அறிகுறி தான்!

வருங்காலத்தில் ஒரு கட்டத்தில் கஜன் குழு அரசில் அமைச்சுப் பதவி எடுத்துக் கொள்ளும். அதையும் "வளையாத் தனமை, ராசதந்திரம்" என்று வாழ்த்திக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்!

என் அரசியல் ஆதரவு மணிக்கோ கஜேந்திரகுமாருக்கோ இல்லை. ஆனால் ஒரு கேள்வி தவிர்க்க முடியாதது.

 மணி மீது கஜேந்திரகுமார் வைத்த குற்றச்சாட்டு தெரிந்திருந்த போது தான் அவரை வைத்து தேர்தலில் வாக்குகளை வென்று ஒரு ஆசனம் ப்ளஸ் பெற்றார்கள். இப்போது  சுட்டிக் காட்டும் "கொள்கை" தான் முக்கியமென்றால் ஏன் தேர்தலுக்கு முதலே நடவடிக்கை எடுக்கவில்லை மணி மீது? 

இதற்கு கஜேன்களோடு தொடர்பில் இருக்கும் யாழ் கள உறுப்பினரிடமிருந்து கூடப் பதில் இல்லை! எனவே தான் பதவிக்காக எதையும் செய்யக் கூடியவர் கஜேந்திரகுமார் என சந்தேகிக்கிறேன். 

https://www.facebook.com/pakalavan.tv/videos/177248557424668

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 உள்வீட்டுப்பூசல் நடுச்சந்திக்கு வந்திருக்கு வீட்டுக்கு அவமானம். சொலமன் சிறில் வந்திருந்தாலும் நாளைக்கு சுமந்திரன் அவரையும் வீழ்த்துவார். என்னைப்பொறுத்த வரையில் சொலமன், சுமந்திரன் வலையில் இருந்து தப்பிவிட்டார் என்றே நான்நினைக்கிறேன். இது மாவையருக்கு விடப்பட்ட எச்சரிக்கை. ஈ. பி டிபிக்கு வக்காலத்து வாங்க ஒருவர் கூடியிருக்கிறார். தேர்தலிலும் போட்டி குறையும் என்று நினைக்கலாம் மணிவண்ணன் யாரென்பது வெளிவர ரொம்பக் காலமெடுக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலம் தனிநாடு கேட்டு சிங்களவருடன் போரிட்டவர்களை, இன்று நகர சபைக்காக தமிழர்களுக்குள்ளேயே மோதவிட்ட விசயத்தில் உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் இனம் சிங்களவர்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

ஒரு காலம் தனிநாடு கேட்டு சிங்களவருடன் போரிட்டவர்களை, இன்று நகர சபைக்காக தமிழர்களுக்குள்ளேயே மோதவிட்ட விசயத்தில் உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் இனம் சிங்களவர்கள்தான்.

இப்பவாவது ஊருக்க நடக்கிற பதவி ஆசைகளையும் , ஊர் நிலமைகளையும் புசிஞ்சு கொள்ளட்டும் 

ஈழத்தமிழர்களின் பெயர் பெற்ற இடம் யாழ்ப்பாணம் இப்ப கைமாறி வேற ஆட்ளிடம் போகிறது இங்க அரசியல் வீராப்பு , துரோகம் என்று சொல்லுற ஆட் களும் இன்று சேர்ந்த கூட்டணியாரையும் என்ன சொல்லி திரிவாங்களோ  தெரியல சாமியோவ்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இப்பவாவது ஊருக்க நடக்கிற பதவி ஆசைகளையும் , ஊர் நிலமைகளையும் புசிஞ்சு கொள்ளட்டும் 

ஈழத்தமிழர்களின் பெயர் பெற்ற இடம் யாழ்ப்பாணம் இப்ப கைமாறி வேற ஆட்ளிடம் போகிறது இங்க அரசியல் வீராப்பு , துரோகம் என்று சொல்லுற ஆட் களும் இன்று சேர்ந்த கூட்டணியாரையும் என்ன சொல்லி திரிவாங்களோ  தெரியல சாமியோவ்

இவர்கள் என்னதான் செய்யட்டும் ஆனால் சிங்களம் தள்ளி விடாமல் விடாது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

இவர்கள் என்னதான் செய்யட்டும் ஆனால் சிங்களம் தள்ளி விடாமல் விடாது.

சிங்களம் தள்ள தேவையில்லை இவங்களே ஆளையாள் தள்ளிவிழுத்தி விடுவாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சிங்களம் தள்ள தேவையில்லை இவங்களே ஆளையாள் தள்ளிவிழுத்தி விடுவாங்கள்

மணிக்கு பாராளுமன்ற பின்கதவு ஆசனத்தை கொடுத்திருந்தால் இந்த தள்ளுமுள்ளு இப்போதைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ இல்லாவிட்டாலும் வேறொருநாள் வந்தே இருக்கும். முளையிலேயே  கிள்ள உதவியாக இருக்கும், சேதம் குறைவு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.