Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமல் எனும் சர்வாதிகார குழப்பவாதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
கமல் எனும் சர்வாதிகார குழப்பவாதி
 
 
368D6B6E-D03F-4276-AB62-BFDE83C14F38.webp
 

 

கமல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் வீட்டு மனைவியருக்கு ஊதியம் வழங்கப்படும் எனும் தனது வாக்குறுதி சம்மந்தமான ஒரு கேள்விக்கு பதில் அளித்த அபத்தமான விதத்தை உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். கமலுடன் இருக்கிற வேறு நிர்வாகி ஒருவர் தெளிவாக சிறப்பாக பதிலளிக்க கமல் பேசுவது மட்டும் அதர்க்கமாக, சம்மந்தமில்லாமல், தெளிவற்று இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். தன் கட்சி நிர்வாகி தன்னை விட கோவையாகப் பேசுவதைக் கண்டு பதற்றமாகிய கமல் மீண்டும் மைக்கை எடுத்து குழப்படியாக பேசிய ஜம்பத்தையும் கவனித்திருப்பீர்கள். பத்திரிகையாளர்களின் கேள்விகள் அவரை எப்படி பதற்றமாக்குகிறது, உடனே சின்ன பயத்துடன் சிரித்தபடி சமாளித்து மீண்டும் சம்மந்தாசம்மந்தமில்லாமல் எப்படி பேசுகிறார் என்பதையும் பார்த்திருப்பீர்கள். தான் அளிக்கும் வாக்குறுதி ஒன்று குறித்த அடிப்படை புரிதல் கூட ஒருவருக்கு இல்லையா, அதை நியாயப்படுத்த ஒரு பள்ளிக்குழந்தை தெரிந்த அளவுக்குக் கூட ஒருவருக்குத் தெரியாதா எனவும் யோசித்திருப்பீர்கள். 

 

குறிப்பாக, பொறியியல், மருத்துவம், பல்வேறு பட்டப்படிப்புகள் முடித்த பெண்கள், பள்ளிக் கல்வி வரை முடித்தவர்கள் என பல்வேறு கல்விப் பின்னணி, தகுதி கொண்ட மனைவியருக்கு எப்படி சம்பளம் வரையறை பண்ணுவது என்பதே கேள்வி. அதற்கு மிக எளிய பதில் “கல்வித்தகுதி அடிப்படையில் அல்ல, குடும்பத்திற்காக செலுத்து உழைப்பின் அடிப்படையிலே சம்பளம், அனைவருக்கும் ஒரே சம்பள வரையறை தான்.” என்பதே. ஆனால் கமல் இன்னொரு டிராக்கில் போய் தான் சார்ந்த சினிமாத் துறையில் எப்படி லைட் பாய்க்கு, நடிகருக்கு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு என ஒவ்வொரு அளவிலான சம்பளம் உண்டு, ஆனால் அதே நேரம் அத்தனை பேரின் பங்களிப்பும் முக்கியம் என நீண்ட ஒரு பதிலை அளித்தார். இதைக் கேட்கையில் என்னதான் சொல்ல வருகிறார் எனும் குழப்பம் ஏற்படும். ஏன் குழப்பம் என்றால் கமல் எந்த கேள்வியையும் யோசித்து புரிந்து கொண்டு பதிலளிப்பதில்லை, மாறாக அவர் சிந்தித்தபடியே பேசுகிறார். அவரது மனம் இயல்பாகவே ஒழுங்கற்று தடம் புரண்டு சிந்திப்பது. மனிதன் நிலவில் கால் பதித்ததைப் பற்றி கேட்டால் கூட அவர் அப்படியே ரைமிங்காக ஆரம்பித்து ஒரு யுடர்ன் எடுத்து தனது படங்களைப் பற்றி பேசி, பாலசந்தர், தன் அப்பா, தன் அம்மா, அண்ணா, தாத்தா என முக்கால் மணிநேரம் பேசுவார். சரி வேண்டாம், அணு விஞ்ஞானம் பற்றி கேளுங்கள். அதற்கும் அப்படியே தன் சினிமாவில் வந்த ஒரு வசனத்தில் இருந்து ஆரம்பித்து தனது பழைய நினைவுகளில் மூழ்கி விட்டு எனக்கு அணு விஞ்ஞானமும் தெரியும், அனுஹாசனையும் தெரியும் என பஞ்ச் சொல்வார். ஆனால் அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் என நீங்கள் மண்டையை பிய்த்துக் கொள்வீர்கள். கமல் அளவுக்கு வாசிப்போ, மொழி சாமர்த்தியமோ இல்லாத எடப்பாடியார் கூட கமலை விட சிறப்பாக எதிர்-விமர்சனக் கேள்விகளை எதிர்கொண்டு பதறாமல் குழப்பாமல் பதிலளிப்பதைக் காண்கிறோம். ஆனால் உலக மகாஞானியான கமலுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு பிரச்சனை? இப்படியான ஒருவரின் பொறுப்பில் ஒரு மாநிலத்தை விட்டால் அவரால் எந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்? ஆட்சி என்பது என்ன நடிப்பா, திரைக்கதை, வசனப்படி செயல்பட?

 

இதற்கு பதில் காண நாம் அரசியல்வாதிகளின் ஒரு பொது இயல்பை புரிந்து கொள்ள வேண்டும் - அது அனைத்து வித மக்களுடனும் சகஜமாக பேசிப் பழகுவது, எல்லாவித எதிர்வினைகளையும் போகிற போக்கில் லைட்டாக எடுத்து கொள்வது. ஆனால் கமல் இதற்கு நேரெதிரான ஆளுமை கொண்டவர். மிகை-நுண்ணுணர்வும், சுயமோகமும் மிக்க அவர் அடிப்படையில் ஒரு தனியரும் கூட. தான் மிக சௌகர்யமாக உணர்கிற, தன்னை தொடர்ந்து ஜால்ரா அடிக்கிறவர்களிடமே அவர் இணக்கமாக உணர்கிறார். மற்றவர்கள் தன்னை எப்படிப் பார்க்கிறார்கள் எனும் பிரக்ஞையும் அவருக்கு மிக அதிகம். கமல் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அதை பின் தொடர்ந்து பதிவு செய்ய ஒரு பத்திரிகையாளர் கூட செல்கிறார். ஒருநாள் காலையில் நட்சத்திர விடுதி ஒன்றில் அவர் கமலை பேட்டி எடுக்கிறார். கமல் காலையில் எழுந்து செய்கிற வேலைகளைக் காட்டி விட்டு உணவு மேஜையில் அவரது காலையுணவு விளம்பப்பட்டிருக்க கமல் பேட்டியை துவங்குகிறார். அடிப்படையான நாகரிகம் தெரிந்தவர்கள் தாம் உணவருந்தும் போது யார் பேசினாலும் அவருக்கு ஒரு கோப்பை பழச்சாறோ தேநீரோ ஆவது வரவழைத்துக் கொடுப்பார்கள், அல்லது சாப்பிடுகிறீர்களா என்றாவது கேட்பார்கள். ஆனால் இவர் கவலையே இல்லாமல் நிருபரை பார்க்க வைத்து பூரியை தன்பாட்டுக்கு உள்ளே தள்ளியபடி கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். கமல் ஒரு பொது வெளியில் சகஜமாக எல்லாருடனும் பழகும் இயல்பற்றவர். ஏனென்றால் தன் மக்களைத் தவிர பிறர் மீது ஒரு பயம் அவருக்குள் படிந்திருக்கிறது. அதனாலே அவர் முடிந்தவரையில் பொதுமக்களின் கேள்விகளை, ஊடகங்களை தவிர்க்கிறார். மாறாக - மோடி ஜியைப் போல - பதிவு செய்யப்பட்ட கருத்தாடல்களையே விரும்புகிறார். இதுவும் சுயமோகம் மிக்க சர்வாதிகாரிகளின் இயல்பே. அவர்கள் தானொரு கண்ணாடி மாளிகைக்குள் வாழ்கிறோம் எனத் தெரிந்திருப்பார்கள், அதனாலே அதில் விரிசல் ஏற்படக் கூடாது என அதீத அக்கறை காட்டுவார்கள்.

 

இவ்வருட பிக்பாஸில் பாலாஜி கமல் அணிந்து வந்த கூர்க்கா சீருடையை நோக்கி சிரித்து விட்டார். அதை போகிற போக்கில் எடுத்துக் கொள்ள முடியாமல் கமலின் முகம் சிவந்து விட்டது. “என்ன? என்ன?” என பாலாஜியை அழைத்து கோபமாக கேட்கிறார். பாலாஜி நிலைமையை புரிந்து கொண்டு “உங்க டிரஸ் சூப்பரா இருக்கு” என சலூட் அடித்துக் காட்டி சமாளித்து விட்டார். இதற்கு முன்பு கமல் குறித்து ஒரு கிண்டலான கருத்து சொன்னதற்காக அவர் நடிகர் சரவணனை வெளியேற்றினார் என கேள்விப்பட்டிருக்கிறோம்.

 

 ஒரு பேட்டியில் நடிகர் ஜெயராம் “தெனாலி” படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார் - கமலுக்கு ஜெயராம் சொல்லும் ஜோக்குகள் ரொம்ப பிடிக்கும். படத்தளத்தில் அவர் ஜெயராமை அழைத்து உட்கார வைத்து ஜோக்குகளைக் கேட்டுக் கொண்டிருப்பார். ஒரு காட்சி எடுக்கும் நேரம் வருகிறது. எல்லாரும் தயார். இயக்குநர் கமல் பக்கத்தில் வந்து நின்று அவரது கவனத்தைக் கவர முயன்று கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் பொறுமை இழந்து “சார்” எனக் குறுக்கிடுகிறார். அப்போது கமல் கோபமாகி அவரை நோக்கி கத்துகிறார்: “பேசிக்கிட்டிருக்கோமில்ல, ஏன் தொந்தரவு பண்றீங்க?” இயக்குநர் உடனே ஓரமாய் பதுங்கிக் கொள்கிறார். அடுத்து ஜெயராம் சொல்கிற பல ஜோக்குகளைக் கேட்டு ரசித்து சிரித்த பின்னரே அவர் காட்சிக்கு தயாராக நடிக்க வருகிறார். இது சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களுக்கு வழக்கமாக இருக்கலாம், ஆனால் கமல் 24 மணிநேரமும் இந்த மூடில் தான் இருக்கிறார். 

 

ஒரு இலக்கிய சம்பவம் சொல்கிறேன் - கமலின் ஒரு படத்தைக் குறித்து ஒரு முக்கியமான இலக்கிய பத்திரிகையில் சாரு நிவேதிதா ஒரு கட்டுரை எழுதி அதில் கமலை கிழித்து தொங்க விட்டு விடுகிறார். அப்பத்திரிகைக்கு சந்தா எடுத்துள்ள கமல் உடனே பத்திரிகையின் எடிட்டரை தன் வீட்டுக்கு அழைத்து கத்த ஆரம்பித்து விடுகிறார். அவர் அதற்கு சொன்ன காரணமே விசித்திரமானது - “தமிழ் சினிமா உலகில் உங்க பத்திரிகை சந்தா எடுத்துள்ள ஒரே கலைஞன் நான் தான். அப்படிப்பட்ட என்னை விமர்சித்து எப்படி அதில் கட்டுரை வரலாம்?” இதெல்லாம் ஒரு காரணமா? நீங்கள் ஒரு பத்திரிகைக்கு சந்தா எடுத்தால் பிறகு அதில் உங்கள் படைப்புகளை புகழ்ந்து மட்டுமே கட்டுரைகள் வர வேண்டுமா? இப்படி வினோதமாக நம்மில் யாராவது இதுவரை யோசித்திருக்கிறோமா? நாமெல்லாம் சந்தா எடுத்த பின் அதில் நம் படைப்புகள் வர வேண்டும் என்று கூட கோர தயங்குவோம். ஆனால் கமல் யோசிப்பார்.

அவருக்கு இந்த உலகமே பணிவிடை செய்ய வேண்டும். தன்னை எப்போதும் எல்லாரும் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்க வேண்டும். இவர் நாளை முதல்வரான எப்படியெல்லாம் நடந்து கொள்வார் யோசியுங்கள் - சட்டமன்றத்தில் துணை நடிகர்களும், அடிபொடிகளும் எழுந்து நின்று கமல் பட வசனங்களை சொல்லி, அவரது நடிப்பை பாராட்டியபடியே இருப்பார்கள். அதைத் தாண்டி அவருக்கு ஒன்றும் தெரியாது, புரியாது, அக்கறையும் இல்லை.

 

ஆனால் தனி உரைகள் ஆற்ற சொன்னால் அதை நன்றாக எழுதி வைத்து மனனம் பண்ணி நிகழ்த்தி விடுவார். இதை அவர் எடப்பாடி மற்றும் ஸ்டாலினை விமர்சித்து அண்மையில் பேசிய காணொலி ஒன்றில் கண்டோம். திரும்ப யாராவது கேள்வி கேட்டால் அந்த நொடியே அவர் ஸ்தம்பித்து நின்று விடுவார். “டாஸ்மாக்கை மூடி விடலாம், உங்களிடம் உள்ள மாற்றுத் திட்டமென்ன எனக் கேட்டால்” குழப்பமாகி அப்படியே அதே சினிமா, பாலசந்தர், தன் குடும்பம் என ஜல்லியடிக்க ஆரம்பித்து விடுவார். ஏனென்றால் எதையும் அவர் யோசித்து வைப்பதில்லை, தன்னைச் சுற்றி வாழும் மக்களைக் குறித்த கவனமோ அக்கறையோ இல்லை. அவர் ஒரு நல்ல சினிமாக்காரர், அதைத் தவிர வேறெதையும் யோசிக்காதவர்.

 வாழ்க்கையை சினிமாவாக காண்கிற ஒரு ரசிகர் மட்டுமே கமலை ஒரு அரசியல் தலைவராக, முதல்வர் வேட்பாளராக ஆதரிக்க முடியும். அதனாலே சொல்கிறேன்: வரும் தேர்தலில் “மய்யத்துக்கு” கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழகத்தை பல நூற்றாண்டுகள் பின்னுக்குத் தள்ளி விடும். நாம் சர்வாதிகாரத்துக்காக இந்த மண்ணை தயாரிக்கத் தொடங்கி விடுவோம்

 

 

http://thiruttusavi.blogspot.com/2021/03/blog-post_8.html

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் பேட்டிக்கும் வெகு துரம்.அது இவர் வெறும் நடிகனாக இருந்த போதே தெரிந்த விடையம்.

இன்று காலையில் ஒரு சிறு வீடியோ நான் இருக்கும் வட்ஸ் அப் குழுமத்தில் இருந்து வந்தது. 

ஒரு ஊடகவியலாளர் கமலை நோக்கி,  எடப்படியார் வன்னியர் சாதி மக்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடை ஒதுக்கியது பற்றிக் கேள்வி கேட்க, கமல் ஏதோ சொல்ல வாயைத் திறந்து தடுமாறி குளறி பின் இன்னொருவர் பேச நேரம் கொடுக்க வேண்டும் என்று தப்பிக்கின்றார். அந்த வீடியோவை வசூல்ராஜா எம் பி பி எஸ் படத்தில் கமல் சொல்லும் தானொரு டுபாக்கூர் எனும் காட்சியுடன் இணைத்து ஒட்டி அனுப்பியிருந்தார்கள் பார்த்து வாய் விட்டு சிரிக்க கூடிய வீடியோ.

இந்த தேர்தலுடன் மய்யம் மையவாடிக்கு போனால் ஆச்சரியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிழலி said:

இன்று காலையில் ஒரு சிறு வீடியோ நான் இருக்கும் வட்ஸ் அப் குழுமத்தில் இருந்து வந்தது. 

ஒரு ஊடகவியலாளர் கமலை நோக்கி,  எடப்படியார் வன்னியர் சாதி மக்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடை ஒதுக்கியது பற்றிக் கேள்வி கேட்க, கமல் ஏதோ சொல்ல வாயைத் திறந்து தடுமாறி குளறி பின் இன்னொருவர் பேச நேரம் கொடுக்க வேண்டும் என்று தப்பிக்கின்றார். அந்த வீடியோவை வசூல்ராஜா எம் பி பி எஸ் படத்தில் கமல் சொல்லும் தானொரு டுபாக்கூர் எனும் காட்சியுடன் இணைத்து ஒட்டி அனுப்பியிருந்தார்கள் பார்த்து வாய் விட்டு சிரிக்க கூடிய வீடியோ.

இந்த தேர்தலுடன் மய்யம் மையவாடிக்கு போனால் ஆச்சரியமில்லை.

தேர்த‌ல் நேர‌ம் முக‌த்தை காட்டும் காள‌ன் இவ‌ர் ?

இவ‌ருக்கு முத‌ல் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ ம‌ற்ற‌ மாரி த‌வ‌க்கை ச‌ர‌த்குமார்  ம‌க்க‌ள் பிர‌ச்ச‌னைக்கோ அடுத்த‌ ச‌ந்த‌தியின் எதிர் கால‌த்துக்கோ இதுவ‌ரை த‌மிழ் நாட்டில் இவ‌ர் ஒன்றும் செய்த‌து இல்லை ?

தேர்த‌ல் வ‌ரும் போதும‌ட்டும் தான் இவ‌ர்க‌ளை ஊட‌க‌ங்க‌ளில் காண‌லாம் ?

த‌ன்ற‌ ப‌ட‌ம் ஓடாட்டி நாட்டையே விட்டு ஓடிடுவேன் என்று க‌ம‌ல் சொன்ன‌தை இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் ச‌ர‌த்குமார் ந‌க்க‌ல் அடித்தார் இப்ப‌ இரு குள்ள‌ ந‌ரிக‌ளும் ஒரு த‌ட்டில் ?

கொடுமையிலும் கொடுமை என்ன‌ என்றால் இதுக‌ள் பெரும் த‌லைவ‌ர் காமராஜ‌ர் ப‌ற்றி க‌தைப்ப‌து , அந்த‌ ம‌னிச‌னின் பெய‌ரை சொல்ல‌ இவ‌ர்க‌ள் த‌குதியான‌வ‌ர்க‌ள் கிடையாது 


 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, பையன்26 said:

தேர்த‌ல் நேர‌ம் முக‌த்தை காட்டும் காள‌ன் இவ‌ர் ?

இவ‌ருக்கு முத‌ல் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ ம‌ற்ற‌ மாரி த‌வ‌க்கை ச‌ர‌த்குமார்  ம‌க்க‌ள் பிர‌ச்ச‌னைக்கோ அடுத்த‌ ச‌ந்த‌தியின் எதிர் கால‌த்துக்கோ இதுவ‌ரை த‌மிழ் நாட்டில் இவ‌ர் ஒன்றும் செய்த‌து இல்லை ?

தேர்த‌ல் வ‌ரும் போதும‌ட்டும் தான் இவ‌ர்க‌ளை ஊட‌க‌ங்க‌ளில் காண‌லாம் ?

த‌ன்ற‌ ப‌ட‌ம் ஓடாட்டி நாட்டையே விட்டு ஓடிடுவேன் என்று க‌ம‌ல் சொன்ன‌தை இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் ச‌ர‌த்குமார் ந‌க்க‌ல் அடித்தார் இப்ப‌ இரு குள்ள‌ ந‌ரிக‌ளும் ஒரு த‌ட்டில் ?

கொடுமையிலும் கொடுமை என்ன‌ என்றால் இதுக‌ள் பெரும் த‌லைவ‌ர் காமராஜ‌ர் ப‌ற்றி க‌தைப்ப‌து , அந்த‌ ம‌னிச‌னின் பெய‌ரை சொல்ல‌ இவ‌ர்க‌ள் த‌குதியான‌வ‌ர்க‌ள் கிடையாது 


 

 
 

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:
 
 

இவ‌ரை இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் கொஞ்ச‌மும் ம‌திப்ப‌து இல்லை , இவ‌ன் ஒரு ப‌ச்சோந்தி தாத்தா ?

யோக்கிய‌ன் போல‌ க‌தைப்பான் தேர்த‌ல் நேர‌ம் சொன்ன‌த‌ எல்லாத்தையும் காற்றில் ப‌ற‌க்க‌  விட்டு விடுவார் ?

அண்ண‌ன் சீமான் தொட‌ர்ந்து த‌னித்து நிக்கிற‌ ப‌டியால் தான் நாளுக்கு நாள் க‌ட்சி முன்பை விட‌ இப்போது வேக‌மாய் வ‌ள‌ந்து வ‌ருது ?

தேர்த‌ல் முடிந்தாலும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பிள்ளைக‌ள் ம‌க்க‌ள் சேவ்வை செய்வ‌தில் அவ‌ர்க‌ள் தான் முத‌ல் இட‌த்தில் ?

குள‌ங்க‌ளை சுத்த‌ம் செய்வ‌து
ம‌ர‌ங்க‌ள் ந‌டுவ‌து ம‌க்க‌ளுக்கு ஒன்னு என்றால் க‌ட்சி பிள்ளைக‌ள் தான் முன்னுக்கு போய் நிப்பார்க‌ள் ?

இப்ப‌டி நாம் த‌மிழ‌ர் க‌ட்சி செய்த‌ ந‌ல்ல‌துக‌ளை சொல்லி கொண்டே இருக்க‌லாம் தாத்தா 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரையேறுவாரா கமல்?


spacer.png

‘‘விதை விதைச்சவுடனே பழம் சாப்பிடணும்னு நினைக்க முடியுமோ... இன்னிக்கு நான் விதைக்கிறேன். நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ... அதுக்கு அப்புறம் உன் மகன் சாப்பிடுவான்... அப்புறம் அவன் மகன் சாப்பிடுவான். அதைப்பார்க்க நான் இருக்க மாட்டேன்... ஆனா, விதை நான் போட்டது!’’

இது தேவர் மகன் படத்தில் சிவாஜி பேசும் வசனம். அந்த வசனத்தை எழுதியதும் கமல்தான். அதை அவரே மேடையில் சொல்லியிருக்கிறார். அரசியலில் கால் பதித்து, கட்சியைத் துவக்கியதும் தமிழக மக்கள் நலனுக்காக நான் போட்ட விதைதான் என்றும் அவரே விளக்கியும் இருக்கிறார். ஆனால் அவர் விதைத்த விதை, வளர்ந்து மரமாகி கனிகள் தரும் அளவுக்கு வளருமா என்பதுதான் இப்போது சந்தேகமாக இருக்கிறது. கட்சி துவக்கிய 15 மாதங்களில் கமல் சந்தித்த முதல் தேர்தல் 2019 நாடாளுமன்றத் தேர்தல். அதிலேயே அவருடைய கட்சி 16 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தது. தமிழகத்தில் மொத்தம் 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் கமலின் கட்சி, மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அவற்றில் கோவை, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, சேலம், திருப்பூர் ஆகிய ஆறு தொகுதிகளும் கொங்கு மண்டலத்தில் இருக்கும் தொகுதிகள்.

அதிலும் கோவையில்தான் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 104 வாக்குகள் பெற்றிருந்தது. சென்னையில் உள்ள மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யத்துக்கு மூன்றாமிடம் கிடைத்திருந்தது. இதிலிருந்தே நகர்ப்புறத்தில் படித்த மக்கள் மத்தியில்தான் கமல் கட்சிக்கு வாக்கு வங்கி இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்து விட்டது. ஆனால் அதிசயமான ஒரு முரண்நகை என்னவென்றால், தமிழகத்திலேயே கல்வியறிவு அதிகமுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் அக்கட்சி மிகக்குறைவான வாக்குகளைப் பெற்றிருந்தது.

கோவையில் அதிகமான வாக்குகள் வாங்கிய நம்பிக்கையில்தான், கோவை தெற்கு தொகுதியை அவர் தேர்வு செய்திருக்கிறார். சென்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மகேந்திரன், இந்தத் தொகுதியில் 23,800 வாக்குகள் பெற்றிருந்தார். தமிழகத்திலேயே மிகவும் பாதுகாப்பான, வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாகக் கருதியே இங்கு போட்டியிட கமல் முடிவு செய்துள்ளார். கோவை நகரில் அவர் போட்டியிடுவதாக அறிவித்ததும் கோவை மக்களிடையே பெரு மகிழ்ச்சியும், வரவேற்பும் ஏற்பட்டது.

வரலாறு காணாத வகையில், இந்தத் தேர்தலில் கொங்கு மண்டலமே தேர்தலில் முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், கமல் இங்கு போட்டியிடுவது மேலும் கவனம் பெற்றுள்ளது. கமலின் சொந்த ஊர், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி. அவர் வளர்ந்தது வாழ்ந்தது எல்லாம் சென்னையில். ஊட்டி, கொடைக்கானல் ஆகிய ஊர்களில் கூட, படப்பிடிப்புக்காக மாதக்கணக்கில் கமல் தங்கியிருக்கிறார். ஆனால் சதி லீலாவதி படத்தில் கொங்கு பாஷை பேசி நடித்ததைத் தவிர, கமலுக்கும் கோவைக்கும் பெரிதாக எந்தத் தொடர்புகளும் இல்லை. அவர் தேர்தலில் நிற்பதாக இருந்தால் மயிலாப்பூரில் நிற்பார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக கோவை தெற்கை அவர் தேர்ந்தெடுத்ததற்கு அவரே ஒரு காரணமும் தெரிவித்துள்ளார்.

‘‘கோயம்புத்துார் எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்பது பழமொழி. இன்றைக்கு நிலைமை மாறிவிட்டது. கொங்கு ஊழலின் கோட்டையாக மாற்றப்பட்டிருக்கிறது. அதை மாற்றுவதற்காகவே அங்கு போட்டியிடப்போகிறேன்!’’ என்று கோவையில் போட்டியிடுவதற்கு ஒரு காரணத்தையும் கமல் தெரிவித்தார். உண்மையில் இந்தத் தேர்தலில், அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் கொங்கு மண்டலத்தைத்தான் அதிகமாகக் குறி வைத்துள்ளன. அதற்குக் காரணம், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக ஆட்சியமைக்கவும், திமுகவுக்கு அந்த வாய்ப்பு நழுவிப்போனதற்கும் காரணம், கொங்கு மண்டலத்தில் இரண்டு கட்சிகளுக்கும் கிடைத்த வெற்றி தோல்விகள்தான்.

அந்த ஒரே காரணத்தால்தான், ஜெயலலிதா இருக்கும்போதே, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன் என எல்லோருக்கும் மிகவும் பசையுள்ள துறைகளை வாரி வழங்கினார். அவர் மறைந்த பின், அதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, அந்தப் பதவியைக் கைப்பற்றியதற்கும் காரணம் அந்த பசைதான் என்பது ஊரறிந்த ரகசியம். இந்தத் தேர்தலில் தமிழகத்தில் வேறு எந்தப் பகுதியில் தங்களுக்கு வெற்றி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கொங்கு மண்டலத்தில் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்ற முடியுமென்று அதிமுகவின் மிக முக்கியத் தலைகள் நம்புகிறார்கள். அதேபோல, 2016 சட்டமன்றத் தேர்தலில் தங்களைக் கைவிட்ட கொங்கு மண்டலத்தில் இந்த முறை பாதியையாவது கைப்பற்ற வேண்டுமென்று திமுகவும் தீவிரமாகப் போராடுகிறது. இவ்விரு கட்சிகளின் தலைவர்கள், தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட கொங்கு மண்டலத்தில்தான் அதிகமாக பரப்புரை செய்கிறார்கள்.

இப்போது கமலும் இங்கு களம் இறங்கியிருப்பது, கொங்கு மண்டலத்தை வைத்தே தமிழக அரசியல் பின்னப்படுகிறது என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது. ஆனால் இரண்டு கட்சிகளையும் தாண்டி கமலால் இங்கு எந்தளவுக்கு வாக்குகளை வாங்க முடியுமென்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. கல்வியிலும், பொருளாதாரத்திலும் மற்ற நகரங்களை விட, பல அடிகள் முன்னே நிற்கும் கோவையில் கமலின் அரசியல் வியூகம், எந்தளவிற்கு வெற்றி பெறுமென்பதை இப்போது கணிக்க முடியவில்லை. ஆனால் கமல் நினைப்பதைப் போல கோவை ஒன்றும், சாதியையும், மதத்தையும் முற்றிலுமாக மறுக்கிற முற்போக்குச் சிந்தனைக்குரியவர்களைக் கொண்ட நகரம் என்று சொல்லிவிட முடியாது.

இன்னும் சொல்லப் போனால், தென்மாவட்டங்களில் இருப்பதை விட இங்கு சாதிய உணர்வு அதிகம். இப்போது கொங்கு மண்டலத்திலுள்ள அமைச்சர்களில் உடுமலை ராதாகிருஷ்ணனைத் தவிர, மற்ற அனைவருமே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அந்த அமைச்சர்களில் பலருக்கு இருக்கும் சமுதாய உணர்வும், அதற்காக அவர்கள் செய்துள்ள காரியங்களும் கொங்கு மண்டலத்தில் பல விதமான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் கிளப்பியிருப்பதும் கமலுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதே கொங்கு மண்ணில் இருக்கும் படித்தவர்கள், தொழில்முனைவோர் பலருக்கும், தற்போதுள்ள அமைச்சர்கள் பலருடைய ஊழல் விவகாரங்களும், சொத்துக்குவிப்பும் நன்றாகவே தெரியும். ஆனால் நம்முடைய ஆட்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதால் அதைப் பற்றி பேசவே விரும்புவதில்லை.

இந்த அமைச்சர்களைக் குறி வைத்துத்தான் இப்போது கமல், ‘கொங்கு ஊழலின் கோட்டையாக மாறிவிட்டது’ என்று சொல்லிக் கொண்டு அதை மாற்றப்போவதாக கோவைக்கு வந்திருக்கிறார். கமல் சொல்வதைப் போலவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி என முக்கிய அமைச்சர்கள் அனைவரின் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையில் நிறைய புகார்களும் உள்ளன. பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும் விசாரணையில் இருக்கின்றன.

இவற்றில் பெரும்பாலான புகார்களையும், ஊழல் வழக்குகளையும் தாக்கல் செய்திருப்பது திமுகதான். சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் அறப்போர் இயக்கமும் ஏராளமான தரவுகளைத் திரட்டி, வழக்கு தொடுத்திருக்கிறது. ஆனால் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் யாரும், அதிமுக அமைச்சர்கள் யார் மீதும் எந்த ஊழல் குற்றச்சாட்டையும் தனிப்பட்ட முறையில் வைத்ததுமில்லை; அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டதில்லை. ஆர்டிஓ ஆபீசில் லைசென்ஸுக்கு இவ்வளவு, தாசில்தார் ஆபீசில் சாதிச்சான்றுக்கு இவ்வளவு, வாரிசு சான்றுக்கு இவ்வளவு என்று பட்டியல் வெளியிட்ட ‘கொங்கு ஊழலின் கோட்டை’ என்பதற்கு எந்த ஆதாரத்தையும் ஏன் வெளியிடவில்லை என்று கோவை மக்கள் கேட்கிறார்கள். அதுபோல வேலுமணியை எதிர்த்து அவர் ஏன் போட்டியிடவில்லை என்றும் சமூக ஊடகங்களில் சராமாரியாக கமலுக்குக் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அவர் கோவைக்கு வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு பேட்டி கொடுத்தபோதும், அன்றிரவு பொதுக்கூட்டத்தில் பேசியபோதும் இதுபற்றி எதையுமே அவர் தெளிவாகப் பேசவில்லை. வழக்கம்போலவே அவருடைய பேச்சு, யாருக்கும் புரியாமல்தான் இருந்தது. கூட்டத்தில் தெளிவாகப் பேசிய ஒரே நபர், பழ கருப்பையா மட்டுமே. அவரும் அதிமுக ஆட்சியைப் பற்றியோ, அக்கட்சியின் ஊழலைப் பற்றியோ அதிகம் பேசாமல், திமுகவையும் குறிப்பாக ஸ்டாலினையும் தாக்குவதிலேயே அதிகமாகக் கவனம் செலுத்தினார்.

‘‘காதில் இருப்பதைப் பறித்துக்கொள்வான் அதிமுகக்காரன்; காதோடு அறுத்துவிடுவான் திமுகக்காரன். இரண்டு திராவிடக்கட்சிகளுக்கும் இடையில் கொள்ளையடிப்பதில் ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது. அதிமுக ஆட்சியில் இருந்தால் தொடைக்கறி அவர்களுக்கு; எலும்புக்கறி திமுகவினருக்கு. அதுவே திமுக ஆட்சிக்கு வந்தால் தொடைக்கறி திமுகவினருக்கு; எலும்புக்கறி அதிமுகவினருக்கு. சாராய ஆலைகள் நடத்தும் 10 அதிபர்களில் ஐந்து பேர் அதிமுகவினர்; ஐந்து பேர் திமுகவினர். ஆட்சி மாறும்போது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் மட்டும் மாமூல் கொடுப்பார்கள்!’’ என்று திராவிடக்கட்சிகளைப் பின்னிப் பெடலெடுத்த பழ கருப்பையா , கமலை எதிர்த்துப் போட்டியிடும் வானதி சீனிவாசனையும் வாங்கு வாங்கென்று வாங்கினார். ‘‘வானதியால் டெபாசிட் கூட வாங்க முடியாது; பாரதிய ஜனதா நிற்கும் 20 இடங்களிலும் தோற்கும்’’ என்று ஆவேசம் காட்டி விட்டு அமைதியாகிவிட்டார். அதிமுக அமைச்சர்களைச் சீண்டவே இல்லை.

அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த விஞ்ஞானி பொன்ராஜ், சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து அக்கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மட்டுமே அதிமுகவின் ஊழல் பற்றித் தெளிவாகப் பேச்சைத் துவக்கினார். ஜெயலலிதா இருக்கும்போது அவர் கேட்டுக்கொண்டபடி, ‘விஷன்–2023’ திட்டத்தைத் தயாரித்துக் கொடுத்தது பற்றியும், அதுபற்றி அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு வகுப்பு எடுத்தது பற்றியும் விளக்கிவிட்டு, ‘‘அந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை என்ற துறையை உருவாக்கச் சொன்னதும் நான்தான். அந்தத்துறைக்கு வேலுமணியை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. அவர் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளுக்கு 40 பர்சண்டேஜ் கமிஷன் வாங்கி, கமிஷன் துறையாக மாற்றிவிட்டார்’’ என்று கமலின் குற்றச்சாட்டுக்கான விஷயங்களை விளக்க ஆரம்பித்தார். ஆனால் அதற்குள் கமல் வந்துவிட்டதால் அவருடைய பேச்சை அப்படியே நிறுத்திவிட்டனர்.

அதற்குப் பிறகு கமல் பேசியதும், அதற்கான அருஞ்சொற்பொருள் புரியாமல் கோவை மக்கள் குழம்பியதும் மைக்கேல் மதனகாமராஜன் குழப்பங்களை மிஞ்சுபவை. கோவையில் ஏன் போட்டியிடுகிறீர்கள் என்று நிருபர்கள் கேட்ட கேள்வியையும் அவரே கேட்டுக்கொண்டு, ‘ஏன் கூடாது என்பதுதான் என் பதில்’ என்றார் கமல். தமிழ்ச்சினிமாவை மாற்றுவதாக 22 வயதில் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றியது போல, கோவை தெற்கு தொகுதியையும், தமிழகத்தையம் மாற்றி அமைப்பேன் என்று அவர் சொல்ல வந்ததும் ரொம்ப நேரத்துக்குப் பின்புதான் புரிந்தது.

தனிப்பட்ட தாக்குதலில் அவர் ஈடுபடவில்லை என்பது மெச்சத்தக்க விஷயமாகத்தான் தெரிந்தது. ஆனால் அவருடைய பேச்சில் எதையோ எதிர்பார்த்து கூடிய கூட்டத்துக்கு எந்த மெசேஜூம் கிடைக்கவேயில்லை. இத்தனைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதே தேரடித்திடலில் கூடிய கூட்டத்தை விட, கமலுக்கு அதிகமான கூட்டமே கூடியிருந்தது. இன்னும் சொல்லப் போனால், முதல்வரின் கூட்டத்துக்கு தலைக்கு 200 ரூபாய் என்று ஆட்களைத் திரட்டி வந்தது எல்லோருக்குமே தெரிந்த சேதியாக இருந்தது. கமலின் கூட்டத்துக்கு வந்தவர்கள் அனைவருமே தன்னிச்சையாக வந்தவர்கள் என்பதால் அந்தக் கூட்டம் பிரமாண்டமாகவும் பிரமிப்பூட்டுவதாகவும் தெரிந்தது. வழக்கமாக இப்படியொரு பொதுக்கூட்டம் நடந்து திரும்பும்போது, அதில் கட்சித்தலைவரின் பேச்சைப் பற்றிய விமர்சனங்களும், உணர்ச்சிப்பூர்வமான பகிர்வுகளையும் அதிகமாகக் கேட்க முடியும். ஆனால் கமலின் கூட்டம் முடிந்து திரும்பிய கூட்டம் ஏதோ மவுன ஊர்வலத்தில் பங்கேற்றுத் திரும்பும் கூட்டம் போலவே நிசப்தமாகவே கலைந்து சென்றதைப் பார்க்க முடிந்தது. கமலின் பேச்சைப் போலவே அந்த மவுனத்தின் அர்த்தமும் புரியவேயில்லை.

மறுநாள் காலையில் கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில், ஸ்டாலின் பாணியில் ‘வாக்கிங்’ சென்று வாக்காளர்களைக் கவர்ந்தார் கமல். மீன் மார்க்கெட், ஆவின் டீக்கடை என பல இடங்களிலும் அவர் நடந்தே சென்று மக்களைச் சந்தித்தார். அவரைப் பார்க்கக் கூட்டம் கூடியது. எல்லோரும் அவருடன் செல்பி எடுக்கவே பெரிதும் விரும்பினார்கள். அவர்களில் பலருக்கு அவர் அங்கு தேர்தலில் நிற்கிற விஷயம் கூடத் தெரியவில்லை. இன்னும் 20 நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள் தமிழகம் முழுவதும் வலம் வந்து பரப்புரை செய்வதற்கு கமல் பறந்து கொண்டே இருக்கப் போகிறார். மீண்டும் கோவை தெற்குத் தொகுதிக்குப் போய் அவரால் வாக்குச்சேகரிக்க நேரமிருக்குமா என்பது தெரியவில்லை.

வாக்குப்பதிவு நடப்பதற்குள் கோவைக்கு வந்து தான் சொன்ன குற்றச்சாட்டையும், தமிழ்ச்சினிமாவை மாற்றியது போல மாற்றுவேன் என்ற வாக்குறுதியையும் அவர் தெளிவாக விளக்கிச் சென்றால் கோவை தெற்கு தொகுதியில் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவர் தேறுவதற்கு வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் சென்ற முறை வாங்கிய 23 ஆயிரத்துடன் இன்னொரு 23 ஆயிரம் வாக்குகள் கமலுக்குக் கிடைக்கலாம். ஜெயிப்பது கஷ்டம்!

தமிழகம் நன்றாயிருக்க வேண்டுமென்று கமல் நினைத்தால்... விதை போடலாம்; விடுகதை போடக் கூடாது!
 

 

https://minnambalam.com/politics/2021/03/17/20/will-kamal-succeed

  • கருத்துக்கள உறவுகள்

கமல்ஹாசன்: நடிகர் முதல் அரசியல்வாதி வரை ஒரு "தசாவதாரம்"

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

ஆறு வயதில் துவங்கி தற்போதுவரை 220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் கமல்ஹாசன், நடிகர் என்ற வகையில் நான்கு தேசிய விருதுகள், தயாரிப்பாளராக ஒரு தேசிய விருது, பத்துக்கும் மேற்பட்ட தமிழக அரசின் விருதுகள் ஆகியவற்றைப் பெற்றவர். இந்திய அரசு வழங்கும் உயரிய சிவிலியன் விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்மபூஷண் பட்டங்களையும் பெற்றவர். தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் தவிர, இந்தி, வங்க மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார் கமல்ஹாசன்.

ஆனால், 2018ல் அவர் புதிதாக அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கி தேர்தலைச் சந்தித்து கணிசமான வாக்குகளைப் பெற்றாலும் குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெறவில்லை. இருந்தபோதும் தற்போது அடுத்த தேர்தலுக்குத் தயாராகியிருக்கிறார் கமல்ஹாசன்.

பரமக்குடியில் பிறந்து சென்னையில் வளர்ந்து, திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய கமல் தற்போது கோவை தெற்குத் தொகுதியில் வாக்குகளைக் கோரி வருகிறார். அவருடைய அரசியல் பயணம் மிகக் குறுகியது என்றாலும், திரையுலகப் பயணம் அசாத்தியமானது.

பரமக்குடி முதல் பார்த்தால் பசி தீரும் வரை

கமல்

பட மூலாதாரம்,KAMALHASSAN

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியின் பிரபல வழக்கறிஞர் சீனிவாசன். இவரது மனைவி ராஜலட்சுமி. இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே சாருஹாசன், சந்திரஹாசன், நளினி என மூன்று குழந்தைகள் இருக்க, நான்காவது மகனாக 1954ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பிறந்தார் கமல்ஹாசன்.

பள்ளிப்படிப்பு பரமக்குடியில் துவங்கியது. பிறகு தன் அண்ணன் சாருஹாசனுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார் கமல். இந்தத் தருணத்தில்தான் ஏ.வி.எம். ஸ்டுடியோ அதிபர் ஏ.வி. மெய்யப்பச்செட்டியாரின் கண்ணில்படவே, களத்தூர் கண்ணம்மா படத்தில் ஒப்பந்தமானார் கமல்.

1960ல் ஜெமினி கணேசன் - சாவித்ரி நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக அந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கமலுக்கு வழங்கப்பட்டது.

அடுத்தடுத்து படங்களிலும் நடிக்க ஒப்பந்தமானார் கமல். களத்தூர் கண்ணம்மாவிற்குப் பிறகு, பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, கண்ணும் காலும் (மலையாளம்), ஆனந்த ஜோதி, வானம்பாடி ஆகிய படங்களில் நடித்தார். 1960ல் குழந்தை நட்சத்திரமாகத் துவங்கிய அவரது சினிமா பயணம், 63ல் முடிவுக்கு வந்தது.

திரையுலகில் கிடைத்த 'பிரேக்'

பிறகு, திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் தன் படிப்பைத் தொடர்ந்தார் கமல். அங்கு எட்டாம் வகுப்புவரை முடித்த பிறகு, புரசைவாக்கம் எம்.சி.டி. முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தார்.

பதின்ம வயதை எட்டியிருந்த கமலின் ஆர்வம் முழுக்க நடிப்பின் மீதே இருக்க டி.கே.எஸ். நாடகக் குழுவில் சேர்ந்தார் அவர். அதே நேரத்தில் நடன வகுப்பிலும் சேர்ந்தார். படிப்பு பத்தாம் வகுப்போடு நின்று போனது.

இதற்குப் பிறகு தன் நண்பர்களுடன் சேர்ந்து சிவாலயா என்ற நடனக் குழுவைத் துவங்கினார் கமல். ஆனால், சில மாதங்களிலேயே நடனக்குழு கலைந்துவிட்டது. அந்தத் தருணத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடன வடிவமைப்பாளராக இருந்த தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் கமல்.

இதற்குப் பிறகு 1970ல் தேவர் பிலிம்ஸ் தயாரித்த மாணவன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மீண்டும் திரையில் தோன்றினார் கமல். அதற்குப் பிறகு, அன்னை வேளாங்கண்ணி, குறத்தி மகன் படங்களில் சிறிய வேடங்களில் நடித்த கமலுக்கு, அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் படங்களின் மூலம் 'பிரேக்' கொடுத்தார் இயக்குனர் பாலச்சந்தர்.

இதற்குப் பிறகு மளமளவென பட வாய்ப்புகள் கமலுக்கு வந்து குவிந்தன. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய படங்களிலும் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார் அவர். 74ல் வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை, 75ல் வெளிவந்த அபூர்வ ராகங்கள் ஆகியவை கமல்ஹாசனுக்கு தனித்த அடையாளத்தை அளித்தன.

இதற்குப் பிறகு திரும்பிப் பார்க்கவே நேரமில்லாத அளவுக்கு படங்களை நடித்துக் குவித்தார் கமல்.

மலையாளத்தில் மட்டும் 35க்கும் மேற்பட்ட படங்களிலும் 15க்கும் மேற்பட்ட இந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார் கமல். ஏழுக்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, மூன்று படங்களுக்கு கதை - திரைக்கதை, இரண்டு படங்களுக்கு திரைக்கதை - வசனம், சுமார் பத்து படங்களுக்கு திரைக்கதை, எட்டுக்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன ஆசிரியர், நான்கு படங்களுக்கு இயக்குனர், 70க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர், திரைப்பட பாடலாசிரியர் என திரையுலகின் பல துறைகளிலும் கால் பதித்து சாதனை படைத்தவர் கமல்.

அரசியலை நோக்கிய மன மாற்றம்

KAMAL

பட மூலாதாரம்,KAMALHASSAN

ரஜினியும் கமல்ஹாசனும் வெற்றிகரமாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் நடிகராக இருந்து அரசியலில் இறங்கி எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். ஆகவே, வெற்றிகரமான அடுத்த தலைமுறை நடிகர்களான கமலும் ரஜினியும் எம்.ஜி.ஆரைப் போல அரசியலில் ஈடுபடுவார்களா என்பது தவிர்க்க முடியாத கேள்வியாக இருந்துவந்தது.

தொன்னூறுகளின் மத்தியப் பகுதியிலிருந்து இந்தக் கேள்விகளுக்கு மறைமுகமாக ரஜினிகாந்த் தீனிபோட்டுவந்தாலும், கமல் அதிலிருந்து விலகியே இருந்தார். ஆனால், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்து, எதிர்க்கட்சி தலைவரும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான மு. கருணாநிதியும் செயலிழந்த நிலையில் இருந்தபோது, கமல்ஹாசனிடம் மனமாற்றம் ஏற்பட்டிருக்கக்கூடும்.

ரஜினிகாந்த்தைப் பொறுத்தவரை சமீபகாலத்தில்தான் அரசியலைப் பற்றி நேரடியாகப் பேசினார் என்றாலும் அவர் தன் திரைப்படங்களின் மூலம் தன் அரசியல் பிரவேசம் குறித்த கருத்துகளை நீண்ட காலமாகவே தெரிவித்துவந்ததாக அவரது ரசிகர்கள் கருதினார்கள். அவரும் அதற்கேற்றபடி பூடகமான அரசியல் கருத்துகளைத் தெரிவித்துவந்தார். ஆனால், கமல்ஹாசன் சமீப சில ஆண்டுகளுக்கு முன்புவரை அரசியல் தொடர்பாக எதையும் பேசியவரில்லை.

சில பத்தாண்டுகளுக்கு முன்பாக ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா எனக் கேள்வியெழுப்பப்பட்டபோது, "தான் அரசியலுக்குப் பொருத்தமானவரில்லை" என்று பதிலளித்திருந்தார். தினத்தந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து, எனக்கு தோள் கொடுங்கள் என்று அழைத்தால் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டபோது, "அரசியலுக்கு வர மாட்டேன் என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன்" என்று பதிலளித்தார் கமல். ஆனால், காலம் வேறு கணக்குகளை வைத்திருந்தது.

விஸ்ரூபத்தில் வந்த பிரச்சனைகளும் கமல் எடுத்த அவதாரமும்

கமல்

பட மூலாதாரம்,KAMAL

2013ஆம் கமல் நடித்து வெளிவந்த விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதில் பிரச்சனை ஏற்பட்டபோது, அவர் வெளிப்படையாக பேச ஆரம்பித்தார். 2013ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்ட நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறான காட்சிகள் இருப்பதால் படத்தை வெளியிடக்கூடாது என இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அந்தப் படத்துக்கு தமிழ்நாடு அரசு 15 நாட்கள் தடை விதித்தது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "தமிழ்நாடு அரசு விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்து இருப்பது என்னை மட்டுமல்ல. நாட்டையே அவமதிக்கும் செயல். மிரட்டல் தொடர்ந்தால் நாட்டைவிட்டு வெளியேறுவது பற்றி பரிசீலிப்பேன்" என்று குறிப்பிட்டார். இதற்குப் பிறகு, கமல்ஹாசனும் இஸ்லாமிய அமைப்புகளும் சந்தித்துப்பேசிய பிறகு, பிரச்சனை ஒருவாறு முடிவுக்கு வந்தது. சில காட்சிகள் நீக்கப்பட்டு, அதே ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி படம் வெளியானது.

இதற்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த கமல்ஹாசன், 2017ஆம் ஆண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது, நடப்பு அரசியலைக் குறித்தும் சிலவற்றைப் பேசினார். இது கொஞ்சம் கொஞ்சமாக பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்தது. ஊழல் புகார்களைச் சுமத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அமைச்சர்கள், "ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களைத் தெரிவிக்க வேண்டும். அரசைப் பற்றி அவதூறாகப் பேசினால் வழக்குப் பதிவுசெய்யப்படும்" என்று தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், "அரசு நிர்வாகத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அந்தந்த துறை அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரியில் பதிவுசெய்யுங்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதையடுத்து, தமிழக அரசின் இணையத்தளத்தில் இருந்த அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரிகள் அகற்றப்பட்டன.

இருந்தபோதும் கமல் அரசியல் குறித்துப் பேசுவதும் அதற்கு அமைச்சர்கள் குறிப்பாக டி. ஜெயக்குமார் பதிலளிப்பதும் வாடிக்கையாகிப்போனது. இந்த நிலையில், விரைவிலேயே அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கப்போவதாக அறிவித்தார் கமல்ஹாசன்.

கட்சி தொடங்கிய கமல்ஹாசன்

கமல்

பட மூலாதாரம்,MAKKAL NEETHI MAIYAM

அதன்படி, 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி மதுரையில் ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்திய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கினார். இந்தக் கட்சியின் துவக்க விழாவில் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

திரையுலகில் கமல்ஹாசனின் சக நடிகர்களாக இருந்த ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் அரசியலுக்கு வருவதாக அறிவித்தனர். 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். ஆனால், அந்த திசையில் அவர் தொடர்ந்து பயணிக்கவில்லை. ஆனால், 2017ஆம் ஆண்டின் மத்தியில் தனது அரசியல் பயணம் குறித்து பூடகமாகப் பேச ஆரம்பித்த கமல், கட்சி தொடங்கி, அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார்.

2019ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தையும் வெல்லவில்லை என்றாலும் சுமார் 15 லட்சத்து 75 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. சில தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும் வட சென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் 10 சதவீதத்துக்கு மேலான வாக்குகளையும் பெற்றது அந்தக் கட்சி.

ஆனால், கமல் கட்சி துவங்கியதிலிருந்து அவரது கொள்கை எதனை அடிப்படையாக வைத்தது என்ற குழப்பம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. கட்சி துவங்கிய தருணத்தில் கட்சியின் கொள்கை குறித்துப் பேசியபோது "என்னுடைய கொள்கை இடதுமல்ல, வலதுமல்ல, மையத்தில் இருப்போம்" என்றார். அதன் பொருள் பலருக்கும் விளங்கவில்லை.

"பிக் பாஸ்" நிகழ்ச்சியில் பேசும்போது "விந்திய மலைக்கு இந்தப் பக்கம் இருக்கும் தென்னிந்தியா சுயமரியாதை இந்தியா" என்று பேசி திராவிடக் கட்சியினரை உற்சாகப்படுத்தினார். திடீரென 'கருப்புக்குள் காவியும் அடக்கம்' என்று சொல்லி அதிரவும் வைத்தார்.

மதுரையில் கட்சி துவங்கிய தினத்தில் "ஊழல்தான் எல்லா தீமைகளுக்கும் காரணம் என்பதால் அதை ஒழிப்பதற்கே முன்னுரிமை" என்றும் "நல்ல தரமான கல்வி எல்லோருக்கும் கிடைக்கப் பாடுபடுவேன்" என்றும் "சாதிமதம் அறவே நீக்கப்படும்" என்றும் பேசினார் கமல். இலவசம் கிடையாது என்றார்.

இதற்குப் பிறகு, கமல்ஹாசனின் பேச்சுகளில் ஊழல் ஒழிப்பு என்ற அம்சமே பிரதானமான விஷயமாக இடம்பெற்றுவருகிறது. செய்தியாளர் சந்திப்புகள், அவரது ட்விட்டர் பக்கம் ஆகியவற்றில் பூடகமான முறையில் கமல் தெரிவிக்கும் கருத்துகள் அவரை முழுமையாக கணிக்க முடியாமல் வைத்திருக்கின்றன.

ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் இதே போன்ற பூடமான முறையில் பேசுவது வாக்காளர்களிடம் எடுபடுமா என்பதை வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் எதிரொலிக்கும்.

சொந்த வாழ்க்கை

கமல்

பட மூலாதாரம்,KAMAL

 
படக்குறிப்பு,

மகள்கள் அக்ஷரா ஹாசன், ஸ்ருதி ஹாசனுடன் கமல்ஹாசன்

கமல்ஹாசன் இரு முறை திருமணம் செய்திருக்கிறார். மேல் நாட்டு மருமகள் படத்தில் நடித்தபோது சந்தித்த வாணி கணபதியை 1978ல் திருமணம் செய்தார். இதற்கு சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து செய்தனர். இதற்குப் பிறகு பாலிவுட் திரைக்கலைஞரான சரிகாவை திருமணம் செய்தார் கமல். இந்தத் தம்பதிக்கு ஸ்ருதி, அக்ஷரா என இரு மகள்கள் உண்டு. சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், திரைக்கலைஞர் கௌதமியுடன் இணைந்து வாழ்ந்தார் கமல். தற்போது இருவரும் பிரிந்துவிட்டனர்.

கமல்ஹாசன்: நடிகர் முதல் அரசியல்வாதி வரை ஒரு "தசாவதாரம்" - BBC News தமிழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கமல் எனும் 'யூதர்'

ஆர். அபிலாஷ்

1616169268482786-0.png
 
பி-டீம், சி-டீம் எல்லாம் விடுங்கள். கொள்கை அளவில் பாஜகவின் தமிழ் வடிவமே மய்யம். இந்த அரசியலை கமல் ஹே ராமிலேயே ஆரம்பித்து விட்டார். "கோட்ஸே கெட்டவன் அல்ல, அதற்காக அவன் முழுக்க நல்லவனும் அல்ல, இந்த காந்தியின் அரசியலினால் பிரிவினை வந்து எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்? ஆனால் அதுக்காக காந்தியை நாம் முழுக்க மறுக்கவும் இயலாது, அவர் ஒரு மகாத்மா" என பிடிகொடுக்காமல் வலதுசாரித்தனம் பேசும் படமே அது. அதனாலே தோல்வியுற்றது. 
இந்து, இந்தி, இந்திய தேசிய விசயத்தில் மய்யத்தின் அத்தனை கொள்கைகளும் இப்படி வலதுசாரிகளுக்கு மறைமுக ஆதரவை வழங்குபவையே. அதை சூரப்பா விவகாரத்தில் பார்த்தோம். இப்போது மும்மொழிக் கொள்கையிலும். உளவியல் ரீதியில் பார்த்தால், கமலுக்கு எளிய சாமான்ய தமிழ் மக்களின் பண்பாடு, நம்பிக்கைகள், கலாச்சாரம், இவற்றை முன்னிறுத்தும் அரசியலுடன் உடன்பட முடியவில்லை எனத் தோன்றுகிறது. 'மனதளவில்' அவர் இம்மண்ணின் மைந்தன் அல்ல. அவருடைய எந்த வணிகப்படத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் சொந்தக்காரர்கள் அவருக்கு எதிராக குழிபறிப்பார்கள்,  சொந்த சாதிக்காரர்கள் ஒன்று குறுகின மனப்பான்மை கொண்டவர்களாகவோ பகுத்தறிவில்லாத மூடர்களாகவோ இருப்பார்கள். ஒரு கிராமத்தில் ஒருவர் கூட ஹீரோவை புரிந்து கொள்ள முடியாதபடிக்கு கீழே இருப்பார்கள். இந்த திரைக்கதை டெம்பிளேட் கமலுக்கு சமூகம் குறித்துள்ள எண்ணப்பாட்டை வெளிப்படுத்துவது. இப்போதும் கூட அவரால் தனக்குத் தெரியாதவர்களிடம், தன் புகழ்பாடி அல்லாதவர்களிடம் சகஜமாக பேச முடியாது. பவுன்சர்கள் இல்லாமல் அவரால் பயணிக்க முடியாது. பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினாலே பதற்றம். இதுவே தன் மொழியை, மக்கள் மொழியை பாதுகாக்கும் தெளிவற்றவராக அவரை ஆக்குகிறது. தனக்கு இணக்கமாக இல்லாத மக்களை அவரால் புரிந்து கொள்ளவோ நேசிக்கவோ முடியாது. ஏனென்றால் மக்களைப் பார்த்ததும் இவர்கள் நம்மவர்கள் அல்ல என்றே நினைக்கிறார். அவர்கள் "நான் உங்கள் ரசிகன்" என சரணடையாவிடில் அவர் முகத்தில் புன்னகையே வராது. 
 
கமல் ஒரு தனியர். எலைட்டிஸ்ட். அந்நியர். இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத் தயங்கும் குழப்பவாதி. மும்மொழியை விடுங்கள், அவருக்கு - தன்னைத் தவிர -  யார் மொழியைப் பற்றியும் அக்கறை இல்லை. ஏனென்றால் 'மனதளவில்' இது அவரது மாநிலமே அல்ல. கொஞ்சம் மிரட்டினால் நான் வெளிநாடு போகிறேன் கிளம்பி விடுவார். அவர் மனதளவில் தான் ஒரு தமிழ் யூதன் என நினைக்கிறார் எனத் தோன்றுகிறது.(இதை நான் சாதியளவில் சொல்லவில்லை. இது ஒரு கலாச்சார பிரச்சனை.) இவரை நம்பி வாக்களிப்பவர்களை என்ன சொல்வது?
 
 
  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்கு வாக்கு போட்ட மக்கள் கமலுக்கும் போடுவார்கள் என நம்புகிறேன்.

கமல் போன்ற சமூக அக்கறையுள்ள ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் தமிழக மக்களிடம் அங்குள்ள ஊடகங்களிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. எம்மக்கள் சீமான் போன்ற உணர்ச்சிவசப்பட்ட பேச்சுக்களுக்கு ஒரு புறமும் சாதிய மதவாதங்களை மையப்படுத்தி மற்றவர்கள் மீது வசைபாடும் பிரமுகர்களுக்கு மறுபுறமுமே தமது கவனத்தை செலுத்துகின்றார்கள்.

கமல் தனது 'விதையை' பக்குமடையாத விளை நிலத்தில் விதைக்கின்றார். அந்த நிலம் பக்குவமடைய இன்னும் சில தசாப்தங்கள் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

கமல் கடந்த காலத்தில் மக்களுக்கு செய்தவையாவன?
1.
2.
3.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது  புதிசு கண்ணா  புதிசு......🤣

 Bild

சிலர் திடீரரென பதட்டமடைவதைப் பார்த்தால்.. கமல் தனது பாதையில் சரியாகப் பயணிப்பது போலத் தெரிகின்றது.. வாழ்த்துக்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, manimaran said:

கமல் தனது 'விதையை' பக்குமடையாத விளை நிலத்தில் விதைக்கின்றார். அந்த நிலம் பக்குவமடைய இன்னும் சில தசாப்தங்கள் தேவை.

பக்குமடையாத தமிழக விளை நிலத்தை மேலும் பழுதடைய செய்ய சீமான் இருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பக்குமடையாத தமிழக விளை நிலத்தை மேலும் பழுதடைய செய்ய சீமான் இருக்கிறார்.

 தமிழ்நாட்டை பக்குவமடைய வைக்க கமலகாசன் பொருத்தமானவர்.கையிலை டோர்ச்சலைட் வேறை இருக்கு....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

 தமிழ்நாட்டை பக்குவமடைய வைக்க கமலகாசன் பொருத்தமானவர்.கையிலை டோர்ச்சலைட் வேறை இருக்கு....:cool:

கு.சா அண்ணா... இந்த மூஞ்சூறு துடைப்பக் கட்டையை தூக்கிக் கொண்டு போனது போலயோ 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, சாணக்கியன் said:

சிலர் திடீரரென பதட்டமடைவதைப் பார்த்தால்.. கமல் தனது பாதையில் சரியாகப் பயணிப்பது போலத் தெரிகின்றது.. வாழ்த்துக்கள் 🙏

சீமானை பார்த்து பலர் பதட்டமடைகின்றார்களே......?
ஆகையால்...................அதுவும் சரியான வழிதானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, Sasi_varnam said:

கு.சா அண்ணா... இந்த மூஞ்சூறு துடைப்பக் கட்டையை தூக்கிக் கொண்டு போனது போலயோ 

அதே.......😁

On 20/3/2021 at 20:59, குமாரசாமி said:

சீமானை பார்த்து பலர் பதட்டமடைகின்றார்களே......?
ஆகையால்...................அதுவும் சரியான வழிதானே?

ஒரு நல்ல கீரைக்கடையும் அதற்கு ஒரு நல்ல எதிா்கடையும் இருப்பது  தெருவுக்கு நன்மைதானே..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

B5DA0D46-9B2B-43FB-8813-6FD5ADB73D5D.webp
 

 

“நீங்க ஏன் கமலை இவ்வளவு கடுமையாக வெறுக்கிறீங்க?” என ஒரு நண்பர் கேட்டார். (பொதுநலம் கருதி அவருக்கு அளித்த பதிலை இங்கு பகிர்கிறேன்.)

 

பதில்: “நான் கமலை வெறுக்கவில்லை. சொல்லப் போனால் ஒரு நடிகராக, இயக்குநராக, திரைக்கதை எழுத்தாளராக எனக்கு அவரை பிடிக்கும். சந்தேகமே இல்லை. ஆனால் அரசியலில் குதித்த பிறகே கமல் அதிகமாக சமூகம், அரசியல், பண்பாடு பற்றி உளற ஆரம்பித்தார். அவருடைய பேட்டிகள், டிவிட்டர் களமாடல்கள், பிக்பாஸ் போதனைகள் என. இது அவர் மீது இருந்த நல்ல அபிப்ராயத்தை கலைத்து விட்டது. அதாவது எனக்கு இதற்கு முன்பு கமல் என்கிற மனிதன் எப்படி சிந்திப்பான் எனத் தெரியாது; தெரியத் தொடங்கியதும் ஒரு கசப்பு, பயம் வந்து விட்டது. 

 

அடுத்து, கமலின் அரசியல் சித்தாந்தம். என்னதான் “மையம்” என அவர் வலியுறுத்தினாலும் உண்மையில் அவர் மையத்தில் இல்லை. அவர் வலதுசாரி சிந்தனையின் பக்கத்தில் தோளில் கைபோட்டுக் கொண்டு நிற்கிறார். இதை நீங்கள் சுட்டிக் காட்டினால் அவர் நாளை “பெரியார், நாத்திகம், அம்பேத்கர்” என்றெல்லாம் தயிர்சாதம் கிண்டலாம். ஆனால் அவருடைய கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் அப்பட்டமாக பாஜகவின் சித்தாந்தம், செயல்திட்டங்களுடன் இணக்கமானவை. தாராளமயமாதல், தனியார்மயமாதல், பொதுத்துறைகளை ஒழித்தல், அதிகாரப் படிநிலை, பொருளாதார அசமத்துவம், புதிய கல்விக் கொள்கை, சமூக நலத்திட்ட எதிர்ப்பு அவர் பாஜகவுடன் “கண்மணி அன்போடு காதலன்” எனும் நிலையில் தான் இருக்கிறார். மதவெறி அரசியலை மட்டும் நேரடியாக பேச மாட்டார் அல்லது இதுவரை பேசியதில்லை. ஆனால் “ஹேராமில்” அதற்கான துவக்கப் புள்ளிகளும் உண்டு. மதவாதத்தைப் பொறுத்தமட்டில் அவர் காந்தியத்துக்கும் ஆர்.எஸ்.எஸின் பாசிச சித்தாந்தத்துக்கும் நடுவில் எங்கேயோ சிக்கிக் கொண்டிருக்கிறார். 

 

ஆம், கமல் பாஜவை விமர்சித்திருக்கிறார். ஆனால் அது சீமான் தெறிக்க விடுவதை போலத் தான் - கட்சிக் கொள்கைகளில் எல்லாம் பல்லிளித்து விடுகிறது. கமல் எப்போதுமே இப்படித் தான் என நினைக்கிறேன். பாஜக அரசு தொடர்ந்து இருமுறை மத்தியில் வென்றுள்ளது அவரைப் போன்ற வேலி ஓணான்களுக்கு ஒரு துணிச்சலை அளிக்க வலப்பக்கமாய் சில அடிகள் எடுத்து வைத்திருக்கிறார். இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று, அடுத்த பத்தாண்டுகளில் பாஜக தொடர்ந்து வலுப்பெறுமானால் முழுமையான வலதுசாரியாக கமல் உருவெடுப்பார் என நினைக்கிறேன். 

 

ஏன் ஒருவரை மதிப்பிட இந்த கட்சிக் கொள்கை, அரசியல் நிலைப்பாடு முக்கியம் என நீங்கள் நினைக்கலாம். கமல் ஒரு புதிய குரல், எந்த ஊழல் பின்னணியும் இதுவரையிலும் இல்லாதவர், அவருக்கு வாய்ப்பளித்தால் எல்லாரையும் போலத் தான் அவருடைய அரசியலும் இருக்கும்? “எல்லா அரசியல்வாதியும் அடிப்படையில் ஒன்றே, கொள்கைகள் சும்மா பெயருக்குத் தான்” என நானும் ஒரு காலத்தில் நம்பினேன். ஆனால் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, குடியுரிமை திருத்த மசோதா என பாஜக தாம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட ஒவ்வொரு நாசக்கார கொள்கையாக, வாக்குறுதியாக நிறைவேற்றிய போதே நான் விழித்துக் கொண்டேன். எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றல்ல, எல்லா அரசியல்வாதிகளும் ஒன்றல்ல என எனக்கு அப்போது விளங்கியது.

 ஒரு கட்சிக்குள்ள பிரத்யேக சமூக பொருளாதார கலாச்சார சித்தாந்தம், நம்பிக்கை, திட்டங்களே அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகான முடிவுகளை, நடவடிக்கைகளை தீர்மானிக்கின்றன, இந்த அரசியல் சட்டதிருத்தங்கள், முடிவுகள் நம் வாழ்க்கையை தலைகீழாகி புரட்டிப் போடும் எனப் புரிந்து கொண்டேன்.

 நம் அன்றாட வாழ்க்கையில் எங்கே அரசியல் இருக்கிறது, அரசியல் வெறும் பேஸ்புக் அக்கப்போருக்கானது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவை ஏற்படுத்திய விலை ஏற்றம் உங்களுடைய வாழ்க்கையை துளியேனும் பாதிக்கவில்லை என நீங்கள் உறுதியாக சொல்ல முடியுமா? “மோடி எங்களுக்காக ராமர் கோயில் கட்டி விட்டார்” என்கிற பாசத்துக்காக நீங்கள் ஒருவேளை மகிழ்ச்சியாகவே இருப்பதாக கற்பனை பண்ணிக் கொள்ளலாம். ஆனால் எதார்த்தத்தை மறுக்க முடியாது. பாஜக-அதிமுக கோட்டையான கோவையிலே மக்கள் ஜி.எஸ்.டியினால் நொந்து போயிருப்பதாகப் படித்தேன். ஆனால் நீங்கள் பாஜகவினரை குற்றம் சொல்லவே முடியாது. அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் தந்துள்ளதையே நிறைவேற்றினார்கள். அதை சரிவர புரிந்து கொள்ளாமல், விமர்சிக்காமல், எதிர்க்காமல் வாக்களித்த, அல்லது ஊமையாக இருந்த நாம் அல்லவா இந்த கொடுமைகளுக்கு பொறுப்பு!

 

காலம் மாறி விட்டது. இனி அரசியல் உங்கள் அன்றாடத்தின் பகுதியும் தான். பாராளுமன்றத்தில் நடப்பவை உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் குறைய காரணமாகும். ஒரே இரவில் நீங்கள் லாக் டவுன் என்ற பெயரில் வீட்டுச்சிறை வைக்கப்படுவீர்கள். வாய்ப்பு வசதி இல்லாதவர்கள் உங்கள் கண்முன்னால் பல்லாயிரம் மைல்கள் நடந்து மடியும் போது அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க நேரிடும். ஒரு ஆவணத்தை தாக்கல் செய்யும் போது ஏற்படும் பிழையால் உங்கள் குடியுரிமை மறுக்கப்படலாம் (அஸ்ஸாமில் முன்னாள் முதல்வருக்கே நடக்கும் போது ஏன் எனக்கும் உங்களுக்கும் நடக்கக் கூடாது). ஒரு கருத்தை எழுதியதற்காக நீங்களோ உங்கள் பிள்ளைகளோ கைது செய்யப்படலாம். இதற்கெல்லாம் காரணம் நாம் தான் - நாம் உஷாராக, கவனமாக, பொறுப்பாக இல்லை, அதனால் இந்திய ஜனநாயக அமைப்பு எனும் “கங்கையில்” “சாக்கடை” கலந்து விட்டது. 

 

இனி இது திரும்பத் திரும்ப நடந்து மோசமாகாதிருக்கும் பொறுப்பு நமக்கு உண்டு. நம்மால் ஆட்சியை தீர்மானிக்க முடியாது, ஆனால் விமர்சிக்க, எதிர்க்க, கருத்துக்களை நம் அளவில் திசைதிருப்ப முடியும். ஒரு சின்ன கல்லை எடுத்துப் போட முடியுமெனில் அதை செய்வோம். அதனாலே பாஜக கூட்டணியை, அவர்களைப் போன்றே கொள்கை கொண்ட மாற்று மூன்றாம் அணி கட்சிகளை நாம் புறக்கணிக்க / எதிர்க்க வேண்டும்.

 

கமல் குடும்பத் தலைவிகளுக்கு ஊதியம் வழங்குவது பற்றிப் பேசும் போது ஒரு விபரீதமான கருத்தை சொன்னார்: எப்படி சினிமாவில் லைட் பாய்க்கு ஒரு சம்பளம் ஹீரோவுக்கு ஒரு சம்பளம் என இருக்கிறதோ அப்படியே குடும்பத் தலைவிகளுக்கும் சம்பளம் வழங்குவோம் என்றார். இந்த லைட் பாய் சம்பள விவகாரம் மிக அபத்தமானது. விளக்குகிறேன்:

 சினிமாவுக்குள் ஊதிய விசயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஆனால் கமல் அதை ஆதரிக்கிறார். இது சரி என்றால் ஒரு நாயகனுக்கு நூறு கோடி சம்பளமும் நடிகைக்கு சில லட்சங்கள் சம்பளமும் கொடுப்பது நியாயமாகி விடும். இது சரி என்றால் விவசாயிகள் கடன் செலுத்த முடியாமல் தற்கொலை பண்ணுவதும், அவர்களுடைய விளைச்சலை விற்கிற தரகர்கள், முதலாளிகள் செழிப்பதும் நியாயமாகி விடும். இது சரி என்றால், நம்முடைய சாதி அமைப்பும் நியாயமாகி விடும். இது சரி என்றால் ஒரு தனியார் நிறுவனத்தில் எந்த வேலைப் பாதுகாப்பும் இன்றி மிகக்குறைந்த ஊதியத்துக்கு மக்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதும் சரி என்றாகி விடும். இது சரி என்றால் எல்லா ஏற்றத்தாழ்வுகளும் சரி ஆகி விடும். இது கமல் போகிற போக்கில் தவறி சொல்லிய கருத்தல்ல - அவருடைய “பேசும் படத்தைப்” பாருங்கள்; வாய்ப்பு கிடைத்தால் மார்க்ஸியம் பேசும் கீழ்த்தட்டினர் சட்டவிரோதமாக மேற்தட்டு முதலாளிகளின் இடத்தை எடுத்துக் கொள்வார்கள், திருடுவார்கள், பணக்காரர்களின் வீட்டில் தங்கி, அவர்களுடைய ஆடையை அணிவார்கள், ஏனென்றால் அவர்கள் அயோக்கியர்கள் என சித்தரித்திருப்பார்; துவக்க காட்சிகளில் நாயகனின் அறையில் கார்ல் மார்க்ஸின் படம் தொங்குவதை கவனியுங்கள். இப்படித் தான் அவர் கம்யூனினஸத்தையே அபத்தமாக புரிந்து கொள்கிறார். அவருடைய எல்லா படங்களையும் பாருங்கள் - ஏழைகள், கீழ்த்தட்டினர், கீழ்சாதியினர், வேலைக்காரர்கள் சதிகாரர்களாக இருப்பார்கள். இப்படியான ஒருவர் ஒரு குடும்பத் தலைவியின் வீட்டு பணிக்கு ஊதியம் கொடுப்பதை வீண் செலவு என்கிறார். அதற்குப் பதிலாக அவர்களே சுயமாக சம்பாதிக்கும் பட்சத்தில் வேலைகளை அளிப்போம் என்கிறார். அதுவும் அவர்களுடைய கல்வித் தகுதியை பொறுத்து. நான் கேட்கிறேன், அவர்கள் என்ன இப்போது வேலை கிடைக்காமலா வீட்டில் அடங்கிக் கிடக்கிறார்கள்? இல்லை. அவர்கள் சுதந்திரமாக வெளியே சென்று வேலை பார்க்க முடியாதபடி இந்த குடும்ப அமைப்பு இருக்கிறது. கமலின் தீர்வு என்ன பண்ணுகிறதென்றால் 1) குடும்ப சுரண்டலை நியாயப்படுத்துகிறது, 2) குடும்ப வேலைகளையும் பார்த்த பிறகு அப்பெண்கள் கூடுதலாக கைத்தொழில் போன்ற பணிகளையும் செய்து சம்பாதிக்கட்டும் என்கிறது. என்ன ஒரு திமிர்த்தனம்! அயோக்கியத்தனம்! இது போன்ற பெண் விரோதக் கருத்துக்களை அவர் பிக்பாஸில் உளறும் போதும் உதிர்த்திருக்கிறார். அதை கவனியுங்கள். கமலுடைய தயாரிப்பு நிறுவனத்தில் செய்த வேலைக்கான ஊதியம் இன்னும் தரப்படவில்லை என கௌதமி சொன்ன போது அதற்கு உலகநாயகன் அளித்த பதிலைப் பாருங்கள். இதோடு பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில்  குற்றவாளிகளின் சார்பாக அவர் பேசியிருப்பதைப் பாருங்கள். இந்த புள்ளிகளை இணைத்தால் உங்களுக்கு கமல் குறித்த துல்லியமான சித்திரம் கிடைக்கும். 

 

இவரையா புதிய குரல் என்கிறோம்? சத்தியமாக இல்லை. இவர் இற்றுப் போன பிற்போக்குப் பார்வை கொண்ட ஒரு மிகப்பழைய மனிதர். இவரிடம் இருந்து ஒலிப்பது ஒரு சனாதனக் குரல். இவருடைய சாதியை வைத்து நான் இதை சொல்லவில்லை, கருத்துக்களை வைத்தே மதிப்பிடுகிறேன். இந்த சனாதன சிந்தனையுடன் நவதாராளவாத வலதுசாரிப் பார்வையும் சேர்ந்து கொள்கிறது. கமல் என்னதான் முற்போக்கு வேடம் போட முயன்றாலும் அவரால் பிற்போக்கு வலதுசாரியாகவே செயல்பட முடியும். 

 

இந்த கட்டத்திலும் இதையெல்லாம் தெரிந்திருந்தும் கமலை ஆதரிக்கிறவர்கள் மறைமுக இந்துத்துவர்கள், நவதாராளாவாத சுரண்டலை விரும்புகிறவரக்ள், சனாதனவாதிகள், திமுக வெறுப்பாளர்கள் அல்லது அவரது தீவிர கமல் ரசிகர்கள். இதை அவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாமல், திமுகவுக்கு கமலே மேல் என ஜல்லியடிப்பது தான் அயோக்கியத்தனம். ஆம், திமுக தலைமையில் பல பிரச்சனைகள் உள்ளன. ஆனால் கொள்கை அளவில் திமுக நேரடியாக இப்படியான பிற்போக்குத்தனங்களை ஆதரிக்காது. இலவசங்களை ஒழிப்போம் எனக் கூவியபடி மத்தியில் மோடி செய்வதை போலச் செய்து மோசமான மக்கள் விரோத சட்டங்களை இயற்றாது. என்னதான் குடும்ப அரசியல் என்றாலும் குறைந்தபட்ச ஜனநாயக மாண்புகள் பேணப்படும். ஆனால் கமலைப் போன்றவர்களை நாம் ஆதரித்தாலோ நரேந்திர மோடிகள் தமிழக மண்ணில் வேறு கட்சிப் பெயர்களில் தோன்றி நிலைப்பெற உதவுகிறோம் எனப் பொருள். பல நூறு ஆண்டுகள் இந்த மாநிலத்தை பின்னுக்குத் தள்ளப் போகிறோம் எனப் பொருள்.

 

தனிப்பட்ட முறையில் எனக்கு கமலின் நடிப்பும் பிடிக்கும். ஆனால் அவரைப் போன்றவர்களின் அரசியலை எதிர்த்தே ஆக வேண்டிய நெருக்கடியில் நாம் இருக்கிறோம். தனிப்பட்ட வெறுப்போ மூர்க்கமான திமுக ஆதரவோ அல்ல என் கமல் எதிர்ப்புக்கான காரணங்கள். சித்தாந்தம் மட்டுமே!

 

எந்த அடிப்படை அறிவும் இல்லாத, பாசிச ஆதரவாளர்கள் மட்டுமே இப்போதைக்கு கமலை ஆதரிக்க முடியும்!

 

http://thiruttusavi.blogspot.com/2021/03/blog-post_23.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

D56D1A1F-F094-4454-BD5C-EBE8DB5C96B3.webp
 
ம.நீ.ம வேட்பாளர் பத்மபிரியாவின் பேட்டியைப் பார்த்தேன்.
 
1) கட்சிக்கு ஏன் வந்தீங்க என்று கேட்டால் “கட்சியின் கொள்கைகள் பிடித்து வந்தேன்” எனச் சொல்ல வேண்டும். ஆனால் இவர் வெள்ளந்தியாக “கமல் சார் அழைத்தார், சேர்ந்தேன்” என ஒப்புக் கொள்கிறார். நியாயமே! ம.நீ. மய்யத்துக்குத்தான் கொள்கையே கிடையாதே. 
 
2) கமலைப் போன்றே சதா “நான் ... நான் ... நான்” என் ஒரே சுயமுன்னெடுப்பு. ஒரு இடத்தில் கூட இப்போதுள்ள அரசுடன் எப்படி சித்தாந்த ரீதியாக முரண்படுகிறோம், தமது அரசியல் எப்படி வேறுபட்டது எனச் சொல்லவில்லை. கடந்த ஐந்து வருட கால அரசியல் சம்பவங்கள், நிலைப்பாடுகள் பற்றிக் கூட சொல்ல ஒன்றுமில்லை. செய்தித்தாள் கூட வாசிக்காதவர்களே அக்கட்சியில் இருக்கிறார்கள். கமலை போலச் செய்வதே வேட்பாளர்களின் ஒரே கொள்கை.
 
3) சாதி குறித்து அவர் சொல்வது இன்றைய கணிசமான மேற்தட்டு மாணவர்களிடம் உள்ள கருத்து தான். ஆகையால் எனக்கு இதில் பெரிய ஆச்சரியமில்லை. விண்ணப்ப படிவத்தில் சாதியைக் குறிப்பிடாமல் விட்டால் சாதி ஒழிந்து விடும் என அவர் மட்டும் அல்ல பத்தாம்பசலித்தனமாக சிந்திப்பது, கமலும் தான். இது இரண்டு விசயங்களைக் காட்டுகிறது: 
அ) இவர்கள் உச்சிகோபுரத்தில் வசிக்கிறார்கள். மக்களுடன் மக்களாக இல்லை. தம்முடைய சொந்தபந்தம் தாண்டின, சொந்த வர்க்கத்தைக் கடந்த நட்புறவுகள் கூட இவர்களுக்கு இருக்காது. மணிரத்னத்தின் “ஆயுத எழுத்து” படத்தில் இளைஞர்கள் தேர்தலில் வென்று சட்டமன்றத்துக்கு செல்வார்கள். அந்த இளைஞர்களும் அரசியல் பேசாமல், சித்தாந்த வரலாற்றை தெரிந்து கொள்ளாமல் சும்மா குளம் வெட்டி, பாட்டுப் பாடினால் அது முன்னேற்றம் என நினைப்பார்கள். சூர்யா பாத்திரம் ஆந்திராவை சேர்ந்த ஜார்ஜ் ரெட்டி எனும் இடதுசாரி சிந்தனை கொண்ட மாணவர் தலைவனின் வாழ்க்கையை ஒட்டி அமைக்கப்பட்டது. ஆனால் அவனுக்கு எந்த அரசியல் சார்பும் இல்லாதது போல மணி காட்டியிருப்பார். இதைத் தான் மணி, கமல், பத்மபிரியா போன்றவர்கள் ஒரு அரசியல் தகுதியாகவே கருதுகிறார்கள். ஏனென்றால் அரசியல் சிந்தனை ஒருவித சீரழிவாம். அதனாலே எங்காவது கருத்து சொல்லி மாட்டிக் கொள்கிறார்கள். சாதியை விடுங்கள் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஏன் பேதியாகிறது எனக் கேட்டால் கூட தெரியாது.
ஆ) சாதி என்பது விண்ணப்ப படிவத்திலே மட்டும் இருக்கிறது என நினைப்பது சாதிய மரபு, சடங்கு, சம்பிரதாயங்கள் ஆகியவற்றை பின்பற்றி சாதிக்குள்ளேயே வாழ உதவுகிறது. அதாவது உண்மையில் இருந்து தப்பித்து செல்ல இது ஒரு எளிய உத்தியாகிறது. சாதியை மற்றமையாக்க உதவுகிறது. கமலின் மகளின் பெயர் ஸ்ருதி ராஜலக்ஷ்மி. தாத்தா, பாட்டியின் பெயரை பேரன், பேத்திக்கு வைப்பது ஒரு சாதீய சமூகப் பழக்கம். அதே போலத்தான் என்னதான் சிக்கன் சாப்பிட்டாலும் தன்னுடைய கணிசமான நண்பர்களை பிராமணர்களாகவே கமல் வைத்திருக்கிறார். என்னதான் பிராமணர்களை கிண்டலடித்தாலும் பிராமணப் பின்புலம் கொண்ட நாயக பாத்திரம் ஏற்பதில் அவருக்கு ஒரு விருப்பம் இருக்கிறது. உ.தா., “தசாவதாரம்” படத்தை எடுத்துக் கொள்வோம். அதில் கமல் பல சாதிப் பின்புலம் கொண்ட பாத்திரங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று பிராமண பாத்திரம் - ரங்கராஜன் நம்பி. அவருக்கு மன்னன் மரண தண்டனை அளிக்கும் போது வரும் பாடல் “கல்லை மட்டும் கண்டால்...”. இப்பாடலில் வரும் இவ்வரியை கவனியுங்கள்:
 
“ராஜலெட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்”
 
தன் சொந்த தாய் தந்தையரின் பெயரை ஏன் கமல் இந்த பாத்திரத்துக்கு மட்டும் சூட்டுகிறார். ஏன் தாழ்ந்த சாதிப் பாத்திரத்துக்கு அதை செய்யவில்லை? சரி அது ஒரு பிராமணப் பாத்திரம், அதனால் அப்பெயர்கள் என்றால் ஏன் கமலின் சொந்த பெற்றோரின் பெயர்கள்? அங்கே வருகிறது அவரது சாதிப் பாசம் - அவர் அப்பாத்திரத்துடன் தன்னை நேர்வாழ்வில் அடையாளப்படுத்த விரும்புகிறார்.
 
 எதற்கெடுத்தாலும் தன் அப்பா, தாத்தா என ஏன் ரீல் ஓட்டுகிறார் கமல்? ஏனென்றால் அந்த பிடிப்பு அவருக்கு உவகை அளிக்கிறது. குடும்பம் தான் சாதியின் அடிப்படை, அதை ஒழிக்க வேண்டும் என பெரியார் சொன்னது இதனால் தான். இப்படியானவர்களுக்கு சாதியை விட முடியாது. சாதியை விட வேண்டுமென்றால் சொந்தங்களிடம் இருந்து விலக வேண்டும், கோயில் சம்பிரதாயங்களை விட வேண்டும். Who Were the Shudhras நூலில் முன்னுரையில் அம்பேத்கர் தெளிவாக சொல்லுகிறார் - ‘சாதியினால் பலன் அடைகிறவர்கள் வைதீக இந்து மதப் பிரதிகளை, வைதீகத்தை எதிர்க்க மாட்டார்கள்’ என்று. ஏனென்றால் அவர்களுக்கு அது தேவையில்லை. அல்லது குறைந்தது சமூக அரசியல் அக்கறை இருக்கக் கூடியவர்கள், வாசிப்பும், புரிதலும் கொண்டவர்கள் என்றால் ஒரு பொதுநோக்கின் பொருட்டு வைதீகத்தை எதிர்ப்பார்கள் (திராவிட மரபில் நேர்ந்ததைப் போல). கமல்களும், பத்மபிரியாக்களும் வைதீகத்தில் ஊறிப் போனவர்கள். அவர்கள் சான்றிழைக் கடந்து யோசிக்காதது சாதி நெருப்பு அவர்களை தீண்டியதே இல்லை என்பதால் தான்.  
 
4) என்னதான் சுயசிந்தனை படைத்தவர்கள் ஆரம்பத்தில் ம.நீ.மய்யத்தில் சேர்ந்தாலும் கமல் தன்னைப் போன்ற பால்புட்டிகளுக்கே (தடவல் மாஸ்டர் சிநேகன், ஶ்ரீப்ரியா, பத்மப்ரியா) வேட்பாளராகும் வாய்ப்பளிக்கிறார். எந்த அரசியலும் தெரியக் கூடாது, சித்தாந்த புரிதல் இருக்கக் கூடாது, எதிர்த்து கேள்வி எழுப்பக் கூடாது, தன்னை சதா புகழ வேண்டும் என்பதே கமல் இவர்களுக்கு வைக்கும் அளவுகோல். அதில் தேறி முதல் மதிப்பெண் பெற்றவரே பத்மபிரியா.
 
 5) பத்மபிரியாவுக்கு தமிழிலும் பேச வரவில்லை. ஆங்கிலத்தையும் தப்பு தப்பாக பயன்படுத்துகிறார். இவர் ஒரு ஆசிரியையாக இருந்தார் என நினைக்கும் போது பக்கென்கிறது. 
 
6) ஆர்.எஸ்.எஸ் ஆட்களிடம் இருந்து சித்தாந்தத்தை உருவி, அவர்களுடைய சங்கி மனநிலையை மட்டும் தக்க வைத்தால் மக்கள் நீதி மய்யம் வந்து விடும். சிம்பிள் பார்முலா!

http://thiruttusavi.blogspot.com/2021/03/blog-post_46.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.