Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிரியர் அடித்ததில் மாணவனுக்கு நடத்த விபரீதம்: இதை மறைக்க பாடசாலை நிர்வாகத்தினர் செய்த காரியம்- யாழில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொலன்னறுவை, அநுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைக்க நிலம் தருவீர்களா? – கோவிந்தன் கேள்வி

ஆசிரியர் அடித்ததில் மாணவனுக்கு நடத்த விபரீதம்: இதை மறைக்க பாடசாலை நிர்வாகத்தினர் செய்த காரியம்- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் மீது ஆசிரியர் ஒருவர் தடியால் அடித்த சம்பவத்தில் மாணவனின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தனக்கு வணக்கம் சொல்லவில்லையெனக் கூறியே ஆசிரியர் அடித்துள்ள நிலையில், கண்ணில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதனை மறைப்பதற்கு பாடசாலை நிர்வாகத்தினர் மேற்கொண்ட செயற்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கணவனிடம் இருந்து பிரிந்துள்ள நிலையில் ஊர்காவற்துறையில் வசிக்கும் பெண்ணொருவர், இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், தனது பிள்ளையை  ஊர்காவற்றுறையிலுள்ள பாடசாலையில் மாணவர் விடுதியில் தங்கிக் கல்வி கற்பதற்குச் சேர்த்துள்ளார்.

குறித்த மாணவன் கல்வியில் சிறந்து காணப்படுவதுடன் வகுப்பின் மாணவத் தலைவனாகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 21ஆம் திகதி ஆங்கில பாடத்தைக் கற்பிப்பதற்காக வகுப்பறைக்குச் சென்றிருந்த ஆசிரியைக் கண்டதும் மாணவன், காலை வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்துள்ளார்.

எனினும், அதனை அவதானிக்காத ஆசிரியை, காலை வணக்கம் ஏன் சொல்லவில்லை எனக்கேட்டு தடியினால் அடித்தபோது தவறுதலாக மாணவனின் கண்ணில் பட்டுள்ளது. இதையடுத்து, மாணவன் அழுதபோது கற்றலுக்குத் தொந்தரவு செய்யவேண்டாமென மாணவனை எச்சரித்துள்ளார்.

அத்துடன், குறித்த ஆசிரியையின் கற்றல் செயற்பாடு நிறைவடைந்த பின்பும் மாணவன் வேதனையால் தொடர்ச்சியாக அழுத நிலையில் வகுப்பாசிரியருக்கு ஏனைய மாணவர்களினால் தெரியப்படுத்தப்பட்டதுடன் வகுப்பாசிரியர் மாணவனை அழைத்துச் சென்று தண்ணீரினால் கண்களைக் கழுவி விட்டுள்ளார்.

அதன்பின்னரும், மாணவனுக்கு கண்ணில் வலி தொடர்ந்துள்ள நிலையில், பாடசாலை நிறைவடைந்ததும் ஏனைய மாணவர்கள் விடுதிப் பொறுப்பாளரும் பாடசாலை அதிபருமான பாதிரியாரிடம் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த மாணவனை ஊர்காவற்துறை வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுமாறும் வைத்தியர்கள் கேட்டால் விளையாடும்போது கண்ணில் பட்டதாகக் கூறுமாறும்  சொல்லி ஏனைய மாணவர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இதன்போது மாணவனுக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர் கண்ணுக்குள் இருந்து சிறு தடித் துண்டினை எடுத்துள்ளார். இதுதொடர்பாக மாணவனிடம் வைத்தியர் கேட்டபோது, விளையாடும் போது தடி பட்டதாகவே மாணலன் கூறியுள்ளார்.

இதன்பின்னர், பிரச்சினையை அறிந்த மாணவனின் தாயார், மறுநாள் பாடசாலைக்குச் சென்று மகனைச் சந்தித்து விபரங்களைக் கேட்டதுடன் பாடசாலை அதிபரை சந்திக்க பல மணிநேரம் காத்திருந்தார்.

அத்துடன், விடயத்தை அறிந்ந சில ஆசிரியர்கள் மதியம் 1.30 மணியளவில் அதிபர் அறைக்குப் பக்கத்திலுள்ள அறைக்குள் தாயாரை அழைத்துச் சென்று  சமாதானம் பேசியுள்ளனர்.

மேலும், மாணவனை வேறு பாடசாலையில் கல்வி கற்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம் எனவும்  இந்தப் பாடசாலையில்தான் தொடர்ந்து கல்வி கற்கவேண்டும் என்றும் மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர்.

இதன்போது, தனது பிள்ளை வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக தனக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை என்றுத் தாயார் கேட்டதுடன் விடுதிப் பொறுப்பாளரான பாடசாலை அதிபரைச்  சந்தித்துக் கேட்டுவிட்டே செல்வேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், அதிபரை அழைத்துவருவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற குறித்த ஆசிரியர்கள் திரும்பிவராத நிலையில் பாடசாலை முடிவடைந்து, மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வெளியேறியதன் பின்னர் மதியம் 2.30 மணியளவில அதிபர் குறித்த மாணவனின் தாயாரைச் சந்தித்துள்ளார்.

இதன்போது, குறித்த ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இனி இத்தகையதொரு சம்பவம் நடைபெறாது என்றும் கூறி தாயாரை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, மாணவனை அதிபர் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அதன்பின்னர், மாணவனிடம் விடுதியில் வைத்து, ‘கோத்தைக்கு யாருடா சொன்னது, கொப்பன் ஏன் கோத்தையை விட்டுட்டுப் போனான் என இப்பதான் விளங்குது’ என்று கூறி, ஏனைய மாணவர்கள் முன்னிலையில் மாணவனைத் திட்டி அடித்துள்ளார்.

அதாவது, மாணவனின் உடல் முழுவதும் தழும்பு வரும் வரையில் அவர் அடித்துள்ளார். மேலும், தாயார் கதைத்து விட்டுச்சென்ற ஆசிரியர்களிடம் மன்னிப்பு கோருமாறும் மாணவனைப் பணித்துள்ளார். குறித்த பணிப்புரைக்கமைய மறுநாள் மாணவன், குறித்த ஆசிரியர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார் என இந்தச் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது மாணவன் வைத்தியசாலையில் தாயாரின் பராமரிப்புடன் சிகிச்சை பெற்று வருவதுடன்  வைத்தியசாலைப் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மாணவனிடம் வாக்குமூலம் பெற்று மேலதிக நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனடிப்படையில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

https://athavannews.com/2021/1212084

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களை தண்டிப்பது இயல்பு தான். ஆனால் தப்பே செய்யாமல் தண்டனை அனுபவிப்பதும், அதிபர் மாணவனின் குடும்பத்தை விமர்சிப்பதும் சரியல்ல. திறமையான மாணவனை அரவணைத்து ஆற்றுப்படுத்தி கல்வியை தொடர வைக்குமா பாடசாலை சமூகம்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சம்பவம் தொடர்பாக மற்றும்  ஏனைய பாடசாலை பிள்ளைகளுக்கு எதிரான சம்பவங்கள் இருப்பின்.. 

கீழ் வரும் சர்வதேச சிறுவர் பாதுகாப்பு அமையத்திற்கு அறியத் தாருங்கள்.

குறித்த பாடசாலை.. அதன் முகவரி.. சம்பந்தப்பட்ட ஆசிரியர்.. அதிபர்.. பாதிக்கப்பட்ட மாணவனின் மருத்துவ அறிக்கை.. இருப்பின்.. தரவுகள் தரப்படின்.. பொதுமக்கள்.. நாங்களே இந்த சிறுவர்களை பாதுகாக்க வேண்டிய தரப்புக்களிடம் முறையிட முடியும்.'

தொடர்ந்து இந்த நவீன உலகில் இப்படியான காட்டுமிராண்டித்தனங்களுக்கு இடமளித்துக் கொண்டிருக்கக் கூடாது. 

அண்மையில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவன் ஒருவனும் ஆசிரியர் திட்டியதால்.. வழங்கிய கடும் தண்டனையின் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுமட்டுமன்றி ஆசிரியர்களின் தாந்தோன்றித்தனமான தட்டிக்கேட்க யாருமில்லை என்ற கோதாவிலான சிறுவர்கள் மீதான வன்முறை என்பது எனியும் வெறும் செய்தியாக வாசித்துவிட்டுச் செல்லும் விடயமாக இருக்க முடியாது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக முறையிட கீழ் கண்ட இணையத்தளத்தை நாடுங்கள்.

https://forms.theiline.co.uk/save-the-children-uk

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

தொடர்ந்து இந்த நவீன உலகில் இப்படியான காட்டுமிராண்டித்தனங்களுக்கு இடமளித்துக் கொண்டிருக்கக் கூடாது. 

மிகச்சரியாகச் சொன்னீர்கள் 👍

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பாடசாலை கலாச்சாரத்தில் இவை எல்லாம் புதியவை அல்ல. வீடுகளில் பிள்ளைகளை மோசமாய் அடிப்பது, தண்டிப்பது பாடசாலைவரை வியாபித்து உள்ளது. அவ்வளவுதான்.

பாடசாலை உதைபந்தாட்ட போட்டிகளில் நல்லாய் விளையாடாத பெடியங்களுக்கு செவிட்டை பொத்தி கொடுப்பது தொடக்கம் தவணை பரீட்சை புள்ளிகளை பார்த்துவிட்டு பிள்ளைகளுக்கு கையில் கிடைத்ததால் மொங்குவதுவரை எங்கள் அணுகுமுறை இப்படித்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆசிரியைக்கு கட்டாயம் தண்டனை கிடைக்க வேண்டும்.
தப்பித்தால் பல மாணவர்களின் உயிருக்கு ஆபத்தான நிலைமை உருவாகும்.

2 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

எங்கள் பாடசாலை கலாச்சாரத்தில் இவை எல்லாம் புதியவை அல்ல. வீடுகளில் பிள்ளைகளை மோசமாய் அடிப்பது, தண்டிப்பது பாடசாலைவரை வியாபித்து உள்ளது. அவ்வளவுதான்.

பாடசாலை உதைபந்தாட்ட போட்டிகளில் நல்லாய் விளையாடாத பெடியங்களுக்கு செவிட்டை பொத்தி கொடுப்பது தொடக்கம் தவணை பரீட்சை புள்ளிகளை பார்த்துவிட்டு பிள்ளைகளுக்கு கையில் கிடைத்ததால் மொங்குவதுவரை எங்கள் அணுகுமுறை இப்படித்தானே.

ஓ அப்படியென்றால் இதை நீங்கள் ஆதரிக்கின்ரீர்கள்  
உங்கள் பிள்ளைகளுக்கு நடந்தாலும்.......

மிகவும் காட்டமான கருத்து
எங்கள் சமுதாயம் திருந்த பல வருடங்கள் ஆகும்

இந்த பள்ளியில் 5ம் 6ம் வகுப்பில் கற்றஆங்கிலம்தான்  இன்றும் நான் எழுதுவதும் பேசுவதும். நான் படித்தபோது தனியார் பாடசாலையாக இயங்கியது. வடமாகாணத்தில் பேர்போன பாடசாலைகளுள் ஒன்றாகவும் இருந்தது கற்பித்தவர்கள் ஊர்க்காரர்கள் .தற்போது அரச பாடசாலை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

‘கோத்தைக்கு யாருடா சொன்னது, கொப்பன் ஏன் கோத்தையை விட்டுட்டுப் போனான் என இப்பதான் விளங்குது’ என்று கூறி, ஏனைய மாணவர்கள் முன்னிலையில் மாணவனைத் திட்டி அடித்துள்ளார்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார். இப்படி எத்தனையோ வலிகளோடும், வேதனைகளோடுமே பலரின் வாழ்க்கை கழிகிறது. சாயத் தோள் கொடுப்பதைவிட, சாய்த்து விழுத்துகிறார்கள். பாவம்! அந்த மாணவனின் கல்வி, எதிர்காலம் கேள்விக்குறி. ஆசிரியர்களை கையெடுத்து கும்பிட்ட காலம் மாறி பழிவாங்கும் நிலையில் வந்து நிற்கிறது. எமது சமுதாயம் தடம் மாறி போவதற்கு இதுவும் ஒரு காரணம். பயிற்சி அற்ற, மனிதாபிமானம் இல்லாத, பழிவாங்கும் ஆசிரியர்களிடம்;  குறைகளோடும், வலிகளோடும் உயர நினைக்கும் இளைய சமுதாயம் சிக்கித் தவிக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வேதனையான சம்பவம், அந்த தாய் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த பையனை படிக்க வைத்துகொண்டிருப்பார்கள். இவ்வளவு அழிவு நடந்தும் எம் மக்கள் திருந்த இடமிருக்கு

1 hour ago, sitpi said:

 .தற்போது அரச பாடசாலை.

அரச பாடசாலையில் தான் நானும் படித்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி இப்ப அந்த பையனின் நிலை என்ன ? எப்படி அந்த பையன் அந்த பாடசாலையில் தொடர்ந்து படிக்க முடியும். அந்த மாணவன் நன்றாக படிப்பதால் அவரை யாழில் ஒரு பாடசாலைக்கு மாறரறி படிக்க வைக்கமுடியுமா? எல்லாரும் கதைக்கிறோம் ஒருவரும் ( நான் உற்பட) ஒன்றும் செய்கிறோமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியுடன் நல்ல பழக்கவழக்கத்தையும் கற்பிக்கவேண்டிய பாதிரியாரும் இதர ஆசிரியர்களும் சிறுவனுக்கு அநீதியான முறையில் தண்டனை வழங்கிய வகுப்பு ஆசிரியையுடன் கூட்டுசேர்ந்திருப்பது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. அவர்கள் சிறுவனை கேட்ட கேள்வியை நாங்களும் பள்ளி நிர்வாகத்தை திருப்பிகேட்டால் என்னவாகும்? அனைத்தையும் வைத்து பார்க்கும்போது பள்ளியில் நிர்வாக சீர்கேடு உள்ளதாகவே தெரிகிறது.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கவேண்டிய ஆசிரியர் சமூகத்தில் இப்படியான கழிவுகளும் ஆசிரியர்களாக வருவதற்கு அரசும், அரசியல்வாதிகள் சிலரும் பின்புலமாக உள்ளது தெரிந்தாலும், ஏதும் செய்யமுடியாத அடக்குமுறை சிறீலங்காவில் உள்ளது. ஆனாலும் நாங்கள் கனவுகாண்பதை யாராலும் தடுக்க முடியாது.  இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய அதிபரும், ஆசிரியர்களும் குற்றவாளிகளாகக் காணப்படுமிடத்து அவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்து, அந்த இடத்திற்குப் புதியவர்களை நியமிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஓய்வூதியம் கிடைப்பதையும் தடைசெய்ய வேண்டும். அதற்கான் சட்டம் இல்லையென்றால் சட்டத்தை உருவாக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Paanch said:

ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கவேண்டிய ஆசிரியர் சமூகத்தில் இப்படியான கழிவுகளும் ஆசிரியர்களாக வருவதற்கு அரசும், அரசியல்வாதிகள் சிலரும் பின்புலமாக உள்ளது தெரிந்தாலும், ஏதும் செய்யமுடியாத அடக்குமுறை சிறீலங்காவில் உள்ளது. ஆனாலும் நாங்கள் கனவுகாண்பதை யாராலும் தடுக்க முடியாது.  இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய அதிபரும், ஆசிரியர்களும் குற்றவாளிகளாகக் காணப்படுமிடத்து அவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்து, அந்த இடத்திற்குப் புதியவர்களை நியமிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஓய்வூதியம் கிடைப்பதையும் தடைசெய்ய வேண்டும். அதற்கான் சட்டம் இல்லையென்றால் சட்டத்தை உருவாக்க வேண்டும். 

ஆசிரியர் அடிக்ககூடாது என்று சொன்னீர்கள் நான் பாடசாலையில் பணி புரிவதால் முன்னர் கருத்தை சொன்னேன் இலங்கை மாறாது தற்போது சில பாடசாலைகளில் கற்பித்தல் என்பது தொழிலாகி வருகிறது  பாடசாலையில் எந்த பாடத்தை கற்பிக்கிறாரோ அந்த பாடங்களுக்கு அனைத்து மாணவர்களும் அந்த ஆசிரியர் வீட்டில் ரியுசனுக்கு செல்ல வேண்டும் என்ற நிலையும் மாறாக வேறு ஆசிரியரிடம் சென்றால் அந்த மாணவந்தான் வகுப்பில் ஏச்சுக்கும் பேச்சுக்கும்  உதாரணமாவான் .

ஆனால் இதன் உண்மை நிலை வேறு போல் முகநூலில் கதை சொல்கிறார்கள் . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆசிரியர் அடிக்ககூடாது என்று சொன்னீர்கள் நான் பாடசாலையில் பணி புரிவதால் முன்னர் கருத்தை சொன்னேன் இலங்கை மாறாது தற்போது சில பாடசாலைகளில் கற்பித்தல் என்பது தொழிலாகி வருகிறது  பாடசாலையில் எந்த பாடத்தை கற்பிக்கிறாரோ அந்த பாடங்களுக்கு அனைத்து மாணவர்களும் அந்த ஆசிரியர் வீட்டில் ரியுசனுக்கு செல்ல வேண்டும் என்ற நிலையும் மாறாக வேறு ஆசிரியரிடம் சென்றால் அந்த மாணவந்தான் வகுப்பில் ஏச்சுக்கும் பேச்சுக்கும்  உதாரணமாவான் .

ஆனால் இதன் உண்மை நிலை வேறு போல் முகநூலில் கதை சொல்கிறார்கள் . 

முந்தியும் கற்பித்தல் தொழில் தான். நான் வாங்காத அடியே?எங்கையும் வாத்தியளோடை சேட்டை விட்டால் பிள்ளையளின்ரை படிப்புத்தான் நாசமாய் போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்களின் கவனத்தை ஈர்ப்பதில் குறிவைக்கும் செய்திகளை மட்டும் நம்பி வெளியார் குழம்புவதைவிட இப்படியான விடயங்களை பாடசாலை பழைய மாணவர் சங்கம், சம்மந்தப்பட்ட ஊர் சமூக அமைப்புக்கள் பார்துகொள்வது நடைமுறைக்கு ஒத்தது. வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டாமல் அறிவுபூர்வமாக சம்மந்தப்பட்ட பகுதி பிரச்சனைகளை கையாள்வது சிறப்பு.

பெரிய பள்ளிக்கூடம், யாழ் நகர பாடசாலைகளில் இதைவிட மோசமான சம்பவங்கள் நடந்தால் என்ன செய்வது?

சமூக விழிபபுணர்வு தேவை. தவிர பெற்றார் பாடசாலை ஆசிரியர்கள், சமூகத்துடன் நெருங்கிய தொடர்பை பேணுவதும் அவசியம். பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பி வைப்பதுடன் பெற்றார் கடமை முடிந்துவிடவில்லை.

மாணவனுக்கு பிரச்சனை உண்மையில் எங்கே இருந்து ஆரம்பிக்கின்றது என்பதே ஒரு கேள்விக்குறி. தடித்துண்டு கண்ணுக்குள் சென்ற சம்மவத்தின் முன்பே வேறு பல சம்பவங்கள் கோர்வையாக நடந்து இருக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.