Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின்... புதிய சட்டமா அதிபராக தமிழர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் புதிய சட்டமா அதிபராக தமிழர்!

இலங்கையின்... புதிய சட்டமா அதிபராக தமிழர்!

இலங்கையின் புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்தினத்தை நியமிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் முன்மொழிவை ஏற்று நாடாளுமன்றத் தெரிவுக்குழு இந்த ஒப்புதலை அளித்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019, மே 10இல் சட்டமா அதிபராகப் பொறுப்பேற்ற ஜெனரல் தப்புல டி லிவேராவின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், பதில் மன்றாடியார் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் சட்டமா அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சோசலிசக் குடியரசாக அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் இலங்கையின் சட்டமா அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள மூன்றாவது தமிழரும் நான்காவது சிறுபான்மையினராகவும் சஞ்சய் ராஜரத்தினம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1217220

Edited by தமிழ் சிறி

  • தமிழ் சிறி changed the title to இலங்கையின்... புதிய சட்டமா அதிபராக தமிழர்!
  • கருத்துக்கள உறவுகள்

அழுத்தக்குறைப்புக்காகவோ அல்லது திறமைக்கு முன்னுரிமையா என்று புரியவில்லை.

இலங்கையின் இதுவரை ஏற்கனவே இரண்டு தமிழர்கள் சட்டமா அதிபராக பதவி வகித்த நிலையில் தற்போது ராஜரட்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஏற்கனவே 1975 ல் சிவா பசுபதி அன்றைய ஜனாதிபதி வில்லியம் கோபல்லாவால் நியமிக்கப்பட்டார்.  1999 ல் கமலசபேசன்  சந்திரிகா குமாரதுங்கவால் நியமிக்கபட்டிருந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இலங்கையின்... புதிய சட்டமா அதிபராக தமிழர்!

இலங்கையில் தமிழருக்கு பிரச்சனை என்று எவனுமே வாய்திறக்க முடியாது! ஆமா சொல்லிப்புட்டேன்.!! 🤨

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்கு, தாரைவாக்கும் சட்டமூலம், சிங்களத்தின் எதிர்ப்பினை சந்திப்பதால், சட்ட துறையில், ஆமாம் சாமிகளை அமர்த்துகிறார்கள், ராஜபக்சேக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் முன்மொழிவை ஏற்று நாடாளுமன்றத் தெரிவுக்குழு இந்த ஒப்புதலை அளித்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரால் நியமிக்கப்பட்டவர்கள் செய்த வேலைப்பாடுகளிலிருந்து மிகவும் தெளிவாகபுரியம். அவர் என்ன செய்ய நினைக்கிறாரோ அதை இவர் நிறைவேற்றி முடிப்பார். பழியையும் ஏற்பார். உதாரணம் பல்கலைக்கழக நினைவுத்தூபி உடைப்பு. அது சரி அந்த துணைவேந்தர் நலமாக வீடு திரும்பி விட்டாரா? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

பல்கலைக்கழக நினைவுத்தூபி உடைப்பு. அது சரி அந்த துணைவேந்தர் நலமாக வீடு திரும்பி விட்டாரா? 

அவர் திரும்பவில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர்மேல் அதீத நன்றிகொண்ட நாய் ஒன்று அவரைக் காணால் விசர்கொண்டு, சிவலிங்கத்தையே காலால் விறாண்டிக் குதறியதாமே.....??    

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

அவர் திரும்பவில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர்மேல் அதீத நன்றிகொண்ட நாய் ஒன்று அவரைக் காணால் விசர்கொண்டு, சிவலிங்கத்தையே காலால் விறாண்டிக் குதறியதாமே.....??    

சூறாவளியால்  நட்சேத்திரத்தை ஒன்றும் செய்திட முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் தமிழன். ராசரத்தினமும் தமிழன். ஆகையால் ராசரத்தினத்துக்கு வாழ்த்துக்கள். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்...

சட்டமா அதிபர்களாக, பொலிஸ் மா அதிபர்களாக, வெளிவிவகார அமைச்சராக, உயர்நீதியரசர்களாக  இலங்கையை நிர்வகிக்கும் அதி உயர் பதவிகளில் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள்,

ஆனால் அவர்கள் பெயர்கள் மட்டுமே தமிழில் இருக்கும் மற்றும்படி

தம்மை தமிழர் என்று வடக்கு கிழக்கு தமிழர்கள் சொல்வதை அடியோடு வெறுப்பவர்கள், தமிழராக தம்மை பொதுவெளியில் காட்டிக்கொள்வதை விரும்பாதவர்கள்,

ஒரு சிங்களவனைவிட சிங்கள தேசத்தின்மீது அதியுயர் விசுவாசமாகவும், சிங்கள இனத்திடம் தமது உரிமைகளை வேண்டி நிற்கும் தமிழர்கள்மீது கொலைவெறி கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இந்த தமிழர்களைவிட கோத்தபாயவும் இலங்கையின் இனவெறி தேரர்களும் எவ்வளவோ உயர்வானவர்கள், அவர்கள் தமிழரின் எதிரிகள் என்ற உண்மையை எப்போதும் மறைத்ததில்லை.

வேடதாரி தமிழர்களைவிட வெளிப்படையான எதிரிகள் உயர்வானவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, valavan said:

இலங்கையில்...

சட்டமா அதிபர்களாக, பொலிஸ் மா அதிபர்களாக, வெளிவிவகார அமைச்சராக, உயர்நீதியரசர்களாக  இலங்கையை நிர்வகிக்கும் அதி உயர் பதவிகளில் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள்,

ஆனால் அவர்கள் பெயர்கள் மட்டுமே தமிழில் இருக்கும் மற்றும்படி

தம்மை தமிழர் என்று வடக்கு கிழக்கு தமிழர்கள் சொல்வதை அடியோடு வெறுப்பவர்கள், தமிழராக தம்மை பொதுவெளியில் காட்டிக்கொள்வதை விரும்பாதவர்கள்,

ஒரு சிங்களவனைவிட சிங்கள தேசத்தின்மீது அதியுயர் விசுவாசமாகவும், சிங்கள இனத்திடம் தமது உரிமைகளை வேண்டி நிற்கும் தமிழர்கள்மீது கொலைவெறி கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இந்த தமிழர்களைவிட கோத்தபாயவும் இலங்கையின் இனவெறி தேரர்களும் எவ்வளவோ உயர்வானவர்கள், அவர்கள் தமிழரின் எதிரிகள் என்ற உண்மையை எப்போதும் மறைத்ததில்லை.

வேடதாரி தமிழர்களைவிட வெளிப்படையான எதிரிகள் உயர்வானவர்களே.

சரியாக சொன்னீர்கள்👍

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

நானும் தமிழன். ராசரத்தினமும் தமிழன். ஆகையால் ராசரத்தினத்துக்கு வாழ்த்துக்கள்.

உங்களுடையது நல்ல அணுகுமுறை.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உங்களுடையது நல்ல அணுகுமுறை.

இனிமேல் அவர் மகிந்தவின் கோத்தபாயவின் அனைத்து அநியாயமான முடிவுகளுக்கும் தலை அசைப்பார் அதாவது தமிழர்கள் தலை அசைப்பர்??

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விசுகு said:

இனிமேல் அவர் மகிந்தவின் கோத்தபாயவின் அனைத்து அநியாயமான முடிவுகளுக்கும் தலை அசைப்பார் அதாவது தமிழர்கள் தலை அசைப்பர்??

எனது உறவினர் ஒருவர் இலங்கையில் மருத்தவராக இருக்கிறார் அவர் பதவி உயர்வு அடைந்த போது வாழ்த்தினேன். ராஜரத்தினத்தை யார் என்றே தெரியாது. தமிழர் ஒருவர் உயர் பதவியை அடைந்ததால் வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியாயின் முன்னாள் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் அவர் பதவி ஏற்ற போது நீங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கணுமே? நான் அதை கவனிக்கவில்லையே. நம்ம மறைந்த கதிர்காமர் ...  நீங்கள் வாழ்த்த வேண்டிய பலர் எதிர்காலத்தில் உண்டு தயாராக இருங்கள். இவர் ஒருவேளை நம்ம எல்லோரின் வாழ்த்துதலுக்கும் உரியவராக மாறலாம் யார் கண்டா? 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/5/2021 at 17:49, ஏராளன் said:

அழுத்தக்குறைப்புக்காகவோ அல்லது திறமைக்கு முன்னுரிமையா என்று புரியவில்லை.

நீங்கள் ஊரிலதானே? விசாரிச்சு எங்களுக்கும் சொல்லுறது?

நாங்கள் யூடியூப்ல ஆரும் தகவல் தந்தா உங்களுக்கு சொல்றம். 

டீல் ஓகே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 21/5/2021 at 23:43, விளங்க நினைப்பவன் said:

உங்களுடையது நல்ல அணுகுமுறை.

அல்லாவுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது. 😁

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

அல்லாவுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது. 😁

அதாவது உங்களிடம் ஒரு நல்ல சிந்தனை தோன்றுமானால் அது ஒரு பகிடியாக தான் இருக்க முடியும். ஒகே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அதாவது உங்களிடம் ஒரு நல்ல சிந்தனை தோன்றுமானால் அது ஒரு பகிடியாக தான் இருக்க முடியும். ஒகே.

சும்மா போங்கையா...என்னாலை இரா சம்பந்தனை மாதிரி  ஒரே பகிடியை சீரியல் மாதிரி விடத்தெரியாது.🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

அல்லாவுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது. 😁

அண்ணை அது அந்தோணியார் எல்லோ?

 

  • கருத்துக்கள உறவுகள்

யாரது? புதிய சட்டமா அதிபர் அந்தோனியாரா?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

நீங்கள் ஊரிலதானே? விசாரிச்சு எங்களுக்கும் சொல்லுறது?

நாங்கள் யூடியூப்ல ஆரும் தகவல் தந்தா உங்களுக்கு சொல்றம். 

டீல் ஓகே?

விசாரிக்குமளவுக்கு பெரிய இடத்து தொடர்புகள் இல்லை. வரும் கால செய்திகள் சொல்லும் தானே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.