Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் பற்றி குறைந்த அளவில் திராவிட கட்சிகள் மக்களிடம் கொண்டு சேர்த்தது ஒன்றும் தற்செயல் அல்ல. அவர்களுக்கு அதை கொண்டு சேர்க வேண்டிய தேவை இல்லை.  

ஆனால் நிச்சயம் சீமான் கொண்டு சேர்ப்பது நல்லெண்ணத்தில் இல்லை என நான் நம்புகிறேன். ஊரில் சூ காட்டுவது என்பார்கள்.

தமிழ் தேசியத்தை தி மு க இப்போ எதிர்ப்பது போல எதிர்க்க வைக்க, அதை ஒரு threat என திமுகவை நினைக்க வைக்க வேண்டும். 

சீமான் வளர்ப்பது வேள்வி ஆடு - இப்போ கத்தியை திமுகவின் கையில் கொடுத்துள்ளார்கள்.

இனி களம் இதுதான்.

போராட்டத்தை வன்முறை வெறியாட்டம் என சித்தரிப்பது -  திமுக +பாஜக+காங்கிராஸ்+அதிமுக.

இதை எதிர்ப்பது - நாத.

இந்த பிரச்சார சண்டையில் நாதக வெல்லாதமாதிரி றோ பார்த்து கொள்ளும்.

ஆனால் இந்த சண்டையே ஒரு தேவையில்லாத ஆணி.

இனி எந்த கட்சியை நாம் தமிழர் விமர்சனம் செய்தாலும் கல் தலைவர் மீதும் போராட்டம் மீதும்தான் எறியப்படும். 

 

  • Replies 275
  • Views 23.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

Dear Natham, 

Sorry to butt in sir, you may well be a business consultant but what you are dishing out here is unsolicited advice.

I can’t remember even a single instance where either Shanthi Acca or Valvai akka or anyone else for that matter, requesting business related advice from you. 
Even if they do - the right thing to do would be to take it away from the common thread and discuss it in a secure environment, where you would be able to ensure your client-confidentiality duty is met.  

Moreover, what you are doing is in no way comparable to the article on snake oil salesmen by Justin anna. He did not offer any advice there. He certainly did not give any advice to any named Yarl forum contributors. 

You may not realise this and I sincerely hope you do after reading this; a lot of us here are quite OK. We have done well in our respective fields of expertise and we will let you know, if we need your advice.

I think sir, with due respect, your are blurring the lines between Yarl, which is a forum for exchanging ideas and your own work environment.

Please keep in mind sir, that none of us here are your clients and until such time we are, any advice you freely give will tantamount to a pain in the back-side. 

Yours sincerely,

Goshan

நிர்வாகத்துக்கு: பலதடவைகள் இதை தமிழில் எடுத்து சொல்லியும், நாதம் இதை விளங்கி கொள்ளாததாலும். அவரே இங்கே ஆங்கிலத்தில் எழுதியமையால் - சிலவேளை இதை ஆங்கிலத்தில் சொன்னால் நமக்குள் ஒரு புரிந்துணர்வு ஏற்படும் என்ற என்ணத்தில் இதை ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன். 

மன்னித்தருள்க.

 

அடேங்கப்பா........ ப்....பா..... தல..... பேய்க்காய்.....

இங்கிலிசிலை கடதாசி போட்டு இருக்குது... தாரிடம் போய் வாசித்து சொல்ல சொல்லி, கேட்க்கிறது....?

கோதாரி விழ.... உதுக்கு தான் சொன்னவயல்... படிச்சு தொலை எண்டு....

எதுக்கும்.... பிரெஞ்சில் ஒண்டும், ஜெர்மனில் ஒண்டும் சொல்லி விட்டிருக்கு... வந்தோன்ன நாமளும், ஓட்டினா... நம்மளையும். பேய்க்காய் எண்டு ஆக்கள் சொல்லுவினம்...

கிடக்கட்டும்... தல...

நான் பதில் போட்டது ஜஸ்டின் அய்யாவுக்கு....

மிருகவைத்தியம் செய்பவராகிய நீங்கள், மனித வைத்தியம் குறித்து எழுதுவதை எப்படி நம்புவது என்று அவர் போக்கிலேயே போய் அவமதிக்காமல், இது நமக்கு பரிச்சயமானது, அறிவுரை சொல்ல தேவையான அனுபவம் உள்ளது என்று காட்டவே அவருக்கு மட்டுமே பதிலாக அளித்தேன்.

உங்களுக்கு சுட்டதன் காரணமும் அறிவேன். உங்களுக்கு திறமை உண்டு அதனை வீணாக்காதீர்கள் என்று நேரடியாக திண்ணையில் சொன்னேன்.

நீங்கள் வேலை எதுவும் செய்யாமல் இங்கேயே கதி என்று இருப்பதனை நான் மட்டுமல்ல பலரும் சுட்டிக் காட்டி உள்ளனர். ரதி அக்கா முக்கியமானவர்.

கொழும்பிலை இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு மாதம் லீவிலை வருவது புரியும். இந்த கொரோனரோ காலத்திலை யாழுக்கு சேவை செய்ய எண்டு யாரும் ஒருமாதம் லீவில வர மாட்டினம்.

அது குறித்து சொன்ன போது, நான் ஒருமாதம் என்று சும்மா சொன்னேன்....என்கிறீர்கள்... நீண்ட காலம் இங்கே இருக்க அடி போட்டுளீர்கள் என்று புரிகிறது.

இது பொது தளம். இங்கே நீங்கள் வருவதை தடுக்க நான் யார். ஆனால் எல்லோரும் சொல்லும் ஒரே அட்வைஸ்... நாலு காசு பார்க்க தான் இங்கே வந்தோம்.... புரிந்தால்  நல்லது.

உங்கள் தனிப்பட்ட விடயங்களை பேசினால், கொந்தளிக்கும் நீங்கள், என்னை.... ஏதோ தூதரகத்துடம் சம்பந்தப்படுத்தும் நோக்கம் கொண்டு எழுதுவது ஏனோ?

****
இப்போதெல்லாம், முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளீர்கள்.

1. உங்கள் நீண்ட விடுமுறைக்கு முன்னர், 'டீச்சர், டீச்சர்... நுள்ளுறார் டீச்சர் என்று ஒருபோதுமே நிர்வாகத்திடம் போனதில்லை இந்த கோசன் என்கிறீர்கள் . இப்போது, திரிக்கு திரி, நியானி வாங்கோ, நிர்வாகம் வாங்கோ, பாருங்கோ... என்று தந்தி அடிக்கிறீர்கள்.

2. unsolicited அட்வைஸ் தராதே என்று அதையே எனக்கு தருகிறீர்கள்.

3. இந்த திரியில், திரி சம்பதமாகவோ, அல்லது சீமான் சம்பந்தமாகவோ நான் விவாதிக்க வில்லையே. நடுநிலைமையாக இருந்தே எனது பார்வையினை சாந்தி அக்காவுக்கு சொன்னேன்.

அடே, கிருபன் ஆரம்பித்த திரி, சார்பாக நாம் களமாடுகிறோம், வந்தவர்களை இவர் கலைகிறார், விடக்கூடாது என்று நீங்கள் நினைத்தால், நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

****

ஒரே ஒரு விடயம் சொல்லி முடிக்கிறேன். இந்த திரியின் நாயகன், சீமான், எப்போதே சம்பந்தப்பட்ட நடிகை விவகாரம், அவரை மீண்டும் வந்து தொந்தரவு கொடுத்தது.

நேற்று ஒரு கிரிக்கெட் வீரர், முன் 20 வயதுகளில் உள்ளார். 16 வயதாக இருக்கும் போது போட்ட இனத்துவேச ட்வீட், அவரத்து கிரிக்கெட் வாழ்வினையே முடிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. 

ஒரு நேர்முகத்தேர்வு, வேலை கிடைத்ததும் சும்மா இருக்காமல், முகப்புத்தகத்தில், பதிவை போட்டார் ஒரு வெள்ளை இளைஞர்..... நேர்முகம் செய்தவர் (bitch ) என்றும், வேலை கிடைக்காது என்று நினைத்தேன். தந்து விட்டாள் என்றும், மாலை பார்ட்டி என்றும் சொல்லி இருந்தார். ஒருமணிநேரத்தில் கம்பெனி offer கான்சல்ட்.

நாம் இணைய வெளியில் சொல்வது ஆபத்தானது என்பதுக்கு உதாரணம்.

சாந்தி அக்கா, கொண்டு வந்து பேசிய விடயங்கள், பண்பே தெரியாத இருவர்: சுந்தரவள்ளி, பழனி. இவர்களது வீடியோக்களை இவர் பார்க்கிறாரோ என்னும் போது, அவரது நேசக்கரம் அமைப்பு பாதிக்கப்படுவது கண்கூடாக தெரிந்தது, சுட்டிக்காட்டினேன். புரிந்து கொண்டார் என்று நினைக்கிறேன்.

சகாரா அக்கா Dr சாலினி யின் பதிவு என்று ஒரு நெளிய வைக்கும் பதிவினை போட்டார். அது குறித்தும் சுட்டி காட்டினேன். உவமை என்று ஒரு நிறுவனத்தினை நடத்தும் அவர் புரிந்து கொண்டார் என்று நினைக்கிறேன்.

ரதி அக்கா அவர், முகமறியாத நிலையில் என்னவும் சொல்லலாம். 

***

ஆகவே, இங்கிலீசிலை கடிதம் போட்டால், அவர்கள், அடே கோசன் லாயர் தானே, அவருக்கு தெரியாததே என்று அவர்கள் வந்து எழுதினால், அவர்கள் விருப்பம்.

***

தல... நல்ல லாயர் ஒருத்தர் இருந்தால் சொல்லுங்கோ.... ஒரு கேஸ் கொடுக்கோணும்...

***

நோ டென்ஷன்... இதுவே எனது கடைசி பதிவு இந்த திரியில். நீங்கள் என்ன பத்தி, பத்தியாக வேலை மினக்கெட்டு எழுதினாலும், இந்த இங்கிலிஷ் கடதாசியை போலவே நான் வாசிக்க போவதில்லை. ஆகவே, பதிலளித்து மினக்கெடவேண்டாம். நன்றி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அடேங்கப்பா........ ப்....பா..... தல..... பேய்க்காய்.....

இங்கிலிசிலை கடதாசி போட்டு இருக்குது... தாரிடம் போய் வாசித்து சொல்ல சொல்லி, கேட்க்கிறது....?

கோதாரி விழ.... உதுக்கு தான் சொன்னவயல்... படிச்சு தொலை எண்டு....

எதுக்கும்.... பிரெஞ்சில் ஒண்டும், ஜெர்மனில் ஒண்டும் சொல்லி விட்டிருக்கு... வந்தோன்ன நாமளும், ஓட்டினா... நம்மளையும். பேய்க்காய் எண்டு ஆக்கள் சொல்லுவினம்...

கிடக்கட்டும்... தல...

நான் பதில் போட்டது ஜஸ்டின் அய்யாவுக்கு....

மிருகவைத்தியம் செய்பவராகிய நீங்கள், மனித வைத்தியம் குறித்து எழுதுவதை எப்படி நம்புவது என்று அவர் போக்கிலேயே போய் அவமதிக்காமல், இது நமக்கு பரிச்சயமானது, அறிவுரை சொல்ல தேவையான அனுபவம் உள்ளது என்று காட்டவே அவருக்கு மட்டுமே பதிலாக அளித்தேன்.

உங்களுக்கு சுட்டதன் காரணமும் அறிவேன். உங்களுக்கு திறமை உண்டு அதனை வீணாக்காதீர்கள் என்று நேரடியாக திண்ணையில் சொன்னேன்.

நீங்கள் வேலை எதுவும் செய்யாமல் இங்கேயே கதி என்று இருப்பதனை நான் மட்டுமல்ல பலரும் சுட்டிக் காட்டி உள்ளனர். ரதி அக்கா முக்கியமானவர்.

கொழும்பிலை இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு மாதம் லீவிலை வருவது புரியும். இந்த கொரோனரோ காலத்திலை யாழுக்கு சேவை செய்ய எண்டு யாரும் ஒருமாதம் லீவில வர மாட்டினம்.

அது குறித்து சொன்ன போது, நான் ஒருமாதம் என்று சும்மா சொன்னேன்....என்கிறீர்கள்... நீண்ட காலம் இங்கே இருக்க அடி போட்டுளீர்கள் என்று புரிகிறது.

இது பொது தளம். இங்கே நீங்கள் வருவதை தடுக்க நான் யார். ஆனால் எல்லோரும் சொல்லும் ஒரே அட்வைஸ்... நாலு காசு பார்க்க தான் இங்கே வந்தோம்.... புரிந்தால்  நல்லது.

உங்கள் தனிப்பட்ட விடயங்களை பேசினால், கொந்தளிக்கும் நீங்கள், என்னை.... ஏதோ தூதரகத்துடம் சம்பந்தப்படுத்தும் நோக்கம் கொண்டு எழுதுவது ஏனோ?

****
இப்போதெல்லாம், முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளீர்கள்.

1. உங்கள் நீண்ட விடுமுறைக்கு முன்னர், 'டீச்சர், டீச்சர்... நுள்ளுறார் டீச்சர் என்று ஒருபோதுமே நிர்வாகத்திடம் போனதில்லை இந்த கோசன் என்கிறீர்கள் . இப்போது, திரிக்கு திரி, நியானி வாங்கோ, நிர்வாகம் வாங்கோ, பாருங்கோ... என்று தந்தி அடிக்கிறீர்கள்.

2. unsolicited அட்வைஸ் தராதே என்று அதையே எனக்கு தருகிறீர்கள்.

3. இந்த திரியில், திரி சம்பதமாகவோ, அல்லது சீமான் சம்பந்தமாகவோ நான் விவாதிக்க வில்லையே. நடுநிலைமையாக இருந்தே எனது பார்வையினை சாந்தி அக்காவுக்கு சொன்னேன்.

அடே, கிருபன் ஆரம்பித்த திரி, சார்பாக நாம் களமாடுகிறோம், வந்தவர்களை இவர் கலைகிறார், விடக்கூடாது என்று நீங்கள் நினைத்தால், நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

****

ஒரே ஒரு விடயம் சொல்லி முடிக்கிறேன். இந்த திரியின் நாயகன், சீமான், எப்போதே சம்பந்தப்பட்ட நடிகை விவகாரம், அவரை மீண்டும் வந்து தொந்தரவு கொடுத்தது.

நேற்று ஒரு கிரிக்கெட் வீரர், முன் 20 வயதுகளில் உள்ளார். 16 வயதாக இருக்கும் போது போட்ட இனத்துவேச ட்வீட், அவரத்து கிரிக்கெட் வாழ்வினையே முடிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. 

ஒரு நேர்முகத்தேர்வு, வேலை கிடைத்ததும் சும்மா இருக்காமல், முகப்புத்தகத்தில், பதிவை போட்டார் ஒரு வெள்ளை இளைஞர்..... நேர்முகம் செய்தவர் (bitch ) என்றும், வேலை கிடைக்காது என்று நினைத்தேன். தந்து விட்டாள் என்றும், மாலை பார்ட்டி என்றும் சொல்லி இருந்தார். ஒருமணிநேரத்தில் கம்பெனி அல்லது, offer கான்சல்ட்.

நாம் இணைய வெளியில் சொல்வது ஆபத்தானது என்பதுக்கு உதாரணம்.

சாந்தி அக்கா, கொண்டு வந்து பேசிய விடயங்கள், பண்பே தெரியாத இருவர்: சுந்தரவள்ளி, பழனி. இவர்களது வீடியோக்களை இவர் பார்க்கிறாரோ என்னும் போது, அவரது நேசக்கரம் அமைப்பு பாதிக்கப்படுவது கண்கூடாக தெரிந்தது, சுட்டிக்காட்டினேன். புரிந்து கொண்டார் என்று நினைக்கிறேன்.

சகாரா அக்கா Dr சாலினி யின் பதிவு என்று ஒரு நெளிய வைக்கும் பதிவினை போட்டார். அது குறித்தும் சுட்டி காட்டினேன். உவமை என்று ஒரு நிறுவனத்தினை நடத்தும் அவர் புரிந்து கொண்டார் என்று நினைக்கிறேன்.

ரதி அக்கா அவர், முகமறியாத நிலையில் என்னவும் சொல்லலாம். 

***

ஆகவே, இங்கிலீசிலை கடிதம் போட்டால், அவர்கள், அடே கோசன் லாயர் தானே, அவருக்கு தெரியாததே என்று அவர்கள் வந்து எழுதினால், அவர்கள் விருப்பம்.

***

தல... நல்ல லாயர் ஒருத்தர் இருந்தால் சொல்லுங்கோ.... ஒரு கேஸ் கொடுக்கோணும்...

***

நோ டென்ஷன்... இதுவே எனது கடைசி பதிவு இந்த திரியில். நீங்கள் என்ன பத்தி, பத்தியாக வேலை மினக்கெட்டு எழுதினாலும், இந்த இங்கிலிஷ் கடதாசியை போலவே நான் வாசிக்க போவதில்லை. ஆகவே, பதிலளித்து மினக்கெடவேண்டாம். நன்றி.

குட் மோனிங் நாதம் சேர்,

அது நான் இங்கிலீசில எழுதின காரணம் தொர இங்கிலீசெல்லாம் பேசினதால, இங்கிலீசில எழுதி போட்டா தொரக்கு விளங்கும் எண்டுதான். வேற ஒண்டும் இல்ல.

நீங்கள் எதை பற்றியும் எழுதுங்கோ நாதம் - அதில் தவறு இருந்தால் சுட்டி காட்டுவது மட்டும் செய்யபடும். அது உங்கள் துறை சார்ந்து இருந்தாலும் இல்லாவிட்டாலும்.

ஜஸ்டின் அண்ணா இங்கே யாரும் அவரை கேட்காமல் அவர்களின் செல்ல பிராணிகளுக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும் என அட்வைஸ் பண்ணி நான் காணவில்லை.

பாம்பு எண்டதும் அது மிருக வைத்திய திரி எண்டு நிணைச்சியல் போல 🤣. அது பாம்பெண்ணை வியாபாரிகள் பற்றிய ஒரு வரலாற்றில் நிகழ்ந்ததன் குறிப்பு. அதை போல் இப்போ வரும் போலிகளையும் நம்பி ஏமாற கூடாது என்றார்.  அது அட்வைஸ் அல்ல. அவரின் கருத்து. அங்கே அவர் மிருக வைத்தியம் பற்றி ஒரு அட்வைசும் வழங்கவில்லை. 

அதுக்கும் நீங்கள் உறுப்பினர்களை பெயர், தொழில் சொல்லி அட்வைஸ் அறுவை, அவர்கள் கேட்காமல் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு.

நான் உங்களுக்கு முன்பே சொல்லி விட்டேன் நாதம், எனது கேளாமல் அட்வைஸ் கொடுப்போர் பற்றிய நிலைப்பாடு என்ன என்று. 

பருத்திவீரன் படத்தில் செவ்வாழை சொல்லும் “கண்டகண்ட….” இதுதான் என் நிலைப்பாடு…ஆகவே நீங்கள் கேளாமல் அட்வைஸ் எனக்கே கொடுத்தால் என் எதிர்வினை அப்படிதான் இருக்கும்.

சரி நீங்கள் இவ்வளவு கேட்பதால் சொல்கிறேன் நாதம் - எனக்கு தேவைக்கு அதிகமாக பணம் இருக்கிறது 🤣🤣🤣. ஊரில் காதால வழியுது என்பார்களே, எனக்கு நவதுவாரங்களிலும் பணம் வழிகிறது🤣🤣🤣

அதனால் நான் வேலைக்கு போவதில்லை. இருக்கும் பணத்தை எப்படி செலவழிப்பது என்று தெரியாமல் அல்லாடிக்கொண்டு இருக்கிறேன். கிட்டதட்ட அருணாச்சலம் ரஜனி போல🤣🤣🤣. டைம் லிமிட்டும் இல்லை. இந்த டென்சனில் இருந்து விடுபட யாழில் வந்து எழுதுகிறேன்.

இப்படி ஒரு வினோதமான பிரச்சனையில் இருக்கும் என்னை நீங்கள் வந்து வேலைக்கு போ, முன்னேறி, காசு பார் எண்டு சொன்னால் எனக்கு கடுப்பாவது நியாயம்தானே🤪🤪🤪.

 நான் இப்போதும் - தனிமனித தாக்குதல் என “நுள்றார்” கேசோட நிர்வாகம் போவதில்லை.

ஆனால் யாழை மஞ்சள் பத்திரிகை ஆக்க வேண்டாம் என நிர்வாகம் பகிரங்கமாக சொல்லும் அளவுக்கு பதிவுகள் பதியபடும் போது, அவை அப்பட்ட விதி மீறலாய் இருக்கும் போது; தரவுப் பிழை இருக்கும் போது அதே திரியில் நியானியிடம் சொல்லி விடுகிறேன்.

தவிர்க்க முடியாத காரணத்தால் நிர்வாகத்துக்கு போவதில்லை என்ற நீண்ட கால கொள்கையை, சில கஞ்சல் பதிவாளர்களின் தொடர் அலுப்பால் மாற்ற வேண்டி வந்தது எனக்கும் கவலைதான்.

நான் மேலே ஆங்கிலத்தில் தந்தது அட்வைஸ் அல்ல நாதம். நான் அட்வைஸ் இலவசமாக தருவதில்லை. ஒரு மணத்தியாலத்துக்கு பெருந்தொகை கேட்பேன் 🤣

நீங்கள் வலுக்கட்டாயமாக அட்வைசை மூக்குக்கால திணிக்க, அட்வைஸ் கொடுக்கப்பட்ட சனம் ஏன் தலைதெறிக்க ஓடுது என்பதையே சுட்டி காட்டினேன்🤣.

புறவு கோஷான் லோயர் எண்டு நீங்களும் நம்பீட்டியளே🤦‍♂️.

நான் முன்பே சொன்னனான் - கோசான் ஒரு ஜட்ஜ் ஆகவும் இருக்கலாம், டவாலியாகவும் இருக்கலாம், அல்லது உன்குழாயில் சில சட்ட வீடியோக்களை பார்த்து விட்டு யாழில் அலப்பறை பண்ணும் consultant ஆகவும் இருக்கலாம் 🤣.

பிகு

நான் ஆங்கிலத்தில் எழுதியதை வாசிக்காமலே அதில் உள்ளதை ஞான திருஸ்டியால் கண்டறிந்து பதில் அளித்ததை போல, இதையும் வாசிக்க மாட்டீர்கள் என ஏலவே சொல்லி விட்டீர்கள்🤣.

இருந்தாலும், நையாண்டி பண்ணும் ஒரு வாய்ப்பை இழக்க நான் விரும்பவில்லை என்பதால் பதில் போடுகிறேன்.

2 hours ago, goshan_che said:

மன்னிக்கவேண்டும்,

நான் எங்கேயும் வலிகளையோ படிப்பினைகளையோ நான் சொல்லி புரியும் நிலையில் நீங்கள் உள்ளீர்கள் என குறிப்பிடவில்லை.

நீங்கள் முஸ்லீம்களையும் தமிழர்களையும் இலங்கையில் சதி செய்து பிரித்து விட்டார்கள் என வருந்தியது போல் இருந்தது.

இதன் அர்த்தம் முஸ்லீம்கள் 100% நல்லவர்கள், அவர்களுக்கும் தமிழருக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை அதை சிங்களம் ஊதி பெருப்பித்தது என்பதல்ல.

முஸ்லீம்கள் தமிழர் இடையே எப்போதும் பிரச்சனைகள் இருந்தன ஆனால் அதை கொதி நிலைக்கு கொண்டு போய் ஆளையாள் வன்மமாக எதிர்க்கும் நிலையை உருவாக்கியதுதான் -சதி.

என்னதான் செய்தாலும் கிழக்கில் முஸ்லீம்களை தவிர்க்க முடியாது எனும் போது அவர்களை நாம் பகைத்து கொண்டதன் விளைவுகள் - நிச்சயம் எமது நீண்டகால மூலோபாய பின்னடைவுகளே.

அதே போல்தான் தமிழ் நாட்டிலும். நிச்சயமாக அங்கே தெலுங்கு பூர்வீக சாதிகளுக்கும், ஏனைய சாதிகளுக்கும் பிரச்சனை உண்டு - ஆனால் அதை வேறு விதமாக கையாண்டு இருக்கலாம். இருக்க வேண்டும். 

எப்படி கிழக்கில் முஸ்லீம்களை தவிர்க்க முடியாதோ அதே போலத்தான் தெலுங்கு சாதிகளை தமிழ்நாட்டிலும் தவிர்க்க முடியாது. அதுவும் திமுக என்பது ஒரு கட்சி மட்டும் அல்ல - அது ஒரு கட்டமைப்பு. ஆகவே கிட்டதட்ட 50% தமிழ் நாட்டில் வாழ்பவர்களை எதிரியாக்கி விட்டு தமிழ் நாட்டில்  மாற்றம் ஏற்படுத்துவோம் என்பதும்- நீண்ட கால மூலோபாய சறுக்கலே.

கிழக்கில் நடந்தது போல் சில குறுகிய கால வெற்றிகள் கூட கிடைக்கலாம் - ஆனால் நீண்ட கால நோக்கில் இலக்கு கானல் நீராகவே இருக்கும்.

ஆனால் நான் சொன்னது போல் இப்போ தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது.

 

கோஷான், அதிக பட்ச பொறுமையுடனும் நிதானத்துடனும்  நீங்கள் கொடுக்கும் விரிவான பதில்களுக்கு நன்றி. ஆனால் உங்கள் விளக்கங்களின் அர்த்தங்களைப் புரிந்தும் புரியாதது போல் நடிப்பவர்கள் தான் இங்கு அதிகம். 

எம்மில் ஒரு பழக்கம் உண்டு எமது சொந்த தனிப்பட்ட விடயம் என்றால் நன்கு சிந்தித்து  ஒருமுறை விட்ட தவறை அடுத்தமுறை விடாமல், பொறுப்புணர்சியுடன் எம்மை பாதிக்கக் கூடிய முடிவுகளை எடுப்பவர்களிடம் நல்லுறவுடன்  நடந்து எமது குடும்ப வாழ்வை சிறப்பாக நடத்த முயற்சிப்போம். ஏனென்றால் அங்கு இழக்கப்படப்போவது எமது சொந்த சொத்து.  தொழில் ஈடுபடுவோர், பொது விடயங்களில் ஈடுபடுவோர் அரசியல் கருத்துக்களை தெரிவித்தால் தொழில் பாதிக்கப்படும் என்று இங்கு அட்வைஸ்களே அதற்கு உதாரணம்.

ஆனால் பொது விடயம் என்று வரும் போது நிலைமை தலைகீழ். தமிழ் தேசியம் என்பதை பொது சொத்தாக கருதுவதால் அது பாதிக்கப்படுவது பற்றி எந்த கவலையோ பொறுப்போ  இல்லை. செய்த தவறையே திரும்ப செய்ய வேண்டும் என்று கூறுவோம். வெளிப்படையாக தவறு என்று  வெள்ளிடை மலையாக  தெரியும் விடயங்களையே அது  தவறே இல்லை என்று குருட்டுத்தனமாக வாதாடுவோம். தேவையில்லாமல் தமிழ் தேசியத்தை ஒரு கட்சி அரசியல் சாக்கடைக்குள் விவாத பொருளாக்குவோம். பல நூற்றாண்டாக எம்முடன் சேர்ந்து  சேர்ந்து வாழும் மக்களை எதிரியாக்கி அவர்களை திட்டி தீர்த்து எதிரயாக்குவோம். தமிழ் தேசியத்தை மூலதனமாக  வைத்து இனவெறி கொண்ட ஒரு கூட்டதை உருவாக்குவோம். ஏனென்றால் பாதிக்கப்படப் போவது எமது தனிப்பட்ட சொந்த சொத்து அல்லவே. 

இங்கு ஒரு புதிய வீடு வாங்கி குடியமர்ந்த பல அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் பலரை எனக்கு தெரியும்.  அயல் வீட்டுக்காருடன் நட்புறவை பேணினால் தான் நாமும் பிள்ளைகளிம் இங்கு மகிழ்சசியாக வாழலாம் என்று  அட்வைஸ் பண்ணிக்கொண்டே சீமானின்  வடுக வந்தேறி போன்ற இனவெறிப்  பேச்சுக்களை தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பர். இவ்வாறாக தனிப்பட வாழ்வில் மிகுந்த பொறுப்புணர்சசியுடனும் தமது சுயவாழ்வில் அக்கறை கொண்டும் வாழ்ந்தும்,   தமிழ் தேசியம் என்று வரும் போது நரம்பு புடைக்க வெறுப்பை வளர்த்து பொறுப்பற்று கருத்து தெரிவிப்பவர்களே  தமிழ் தேசியவாதிகளில் மிக மிக அதிகமாக உள்ளனர். 

இப்படிப்பட்ட தமிழ் தேசியவாதிகளின் உசுப்பேத்தல்களை நம்பி பல ஆயிரக்கணக்கான பணத்தை இவர்களிடம் ஏமாந்த பல தமிழ் மக்கள் அந்தப் பணத்தை வங்கியில் வைப்பில் இட்டிருந்தாலவது இப்போது  இந்த தமிழ் தேசியவாதிகளை போல் மகிழ்வாக வாழ்ந்திருக்கலாம். 

 

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2021 at 00:34, வல்வை சகாறா said:

நீண்டகாலமாக இந்த களத்தில் நீங்கள் எழுதுகிறீர்கள். ஏதோ வாதாடுவதாக நிறையவே சொதப்புவது உங்களுக்கு அத்துப் படி மருது. நீங்கள் ஆதரிக்கும் ஒரு விடயத்தை சரியென்று நிறுவ ஏகப்பட்ட சம்பந்தம் இல்லாதவற்றை பத்தி பத்தியாக எழுதுவதொன்றும் உங்களுக்குப் புதியதல்ல

மருதரின் பந்தி எழுத்துக்களுக்கு நான் விசிறி😁

பின்நவீனத்துவக் கதைகள் போல எதுவும் விளங்காது! ஆனால் ஏதோ விசயம் இருக்கு என்று எப்போதும் புரியாத புதிராகவே இருக்கும்!🙃

தொடர்ந்து படித்தால் ethical hackers குறூப்பில் சேர்ந்து hackers இன் encryptions ஐ உடைக்கும் அளவிற்கு அறிவு வளர்ந்துவிடும்😆

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை அப்படியே கண்முன்பே காட்டியுள்ளீர்கள்.

1 hour ago, tulpen said:

இங்கு ஒரு புதிய வீடு வாங்கி குடியமர்ந்த பல அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் பலரை எனக்கு தெரியும்.  அயல் வீட்டுக்காருடன் நட்புறவை பேணினால் தான் நாமும் பிள்ளைகளிம் இங்கு மகிழ்சசியாக வாழலாம் என்று  அட்வைஸ் பண்ணிக்கொண்டே சீமானின்  வடுக வந்தேறி போன்ற இனவெறிப்  பேச்சுக்களை தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பர். இவ்வாறாக தனிப்பட வாழ்வில் மிகுந்த பொறுப்புணர்சசியுடனும் தமது சுயவாழ்வில் அக்கறை கொண்டும் வாழ்ந்தும்,   தமிழ் தேசியம் என்று வரும் போது நரம்பு புடைக்க வெறுப்பை வளர்த்து பொறுப்பற்று கருத்து தெரிவிப்பவர்களே  தமிழ் தேசியவாதிகளில் மிக மிக அதிகமாக உள்ளனர். 

 

 

அப்படியான கருத்து தெரிவிப்பவர்கள் தீவிர தமிழ் தேசியவாதிகளாக இருப்பதை மட்டுமே நான் கண்டுள்ளேன்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

மருதரின் பந்தி எழுத்துக்களுக்கு நான் விசிறி😁

பின்நவீனத்துவக் கதைகள் போல எதுவும் விளங்காது! ஆனால் ஏதோ விசயம் இருக்கு என்று எப்போதும் புரியாத புதிராகவே இருக்கும்!🙃

தொடர்ந்து படித்தால் ethical hackers குறூப்பில் சேர்ந்து hackers இன் encryptions ஐ உடைக்கும் அளவிற்கு அறிவு வளர்ந்துவிடும்😆

நீங்கள் இரட்டை அர்த்தத்தில் பாராட்டி இருக்குறீர்கள்.. ஆனால் நான் உண்மையிலேயே மருதரின் எழுத்துக்களை விரும்பி வாசிப்பேன்.. வித்தியாசமான ஒரு த்னிப்பாணி மருதருடையது... விவாதங்களை லொஜிக்கலாக முன்வைப்பவர்.. என் முகநூலில் கூட கொப்பிபண்ணி போட்டு லைக்ஸ் எல்லாம் வாங்கி இருக்கிறேன்.. சொல்லாமல் எடுத்ததற்கு மருதர் மன்னிக்கவும்.. ஆனால் யாழின் இணைப்பை கீழே கொடுப்பேன்..

அப்படியே கோசான் @Justin கிருபன் நாதமுனி என்று இன்னும் பட்டியல் நீளும்.. முன்னர் சண்டமுனி இன்னுமொருவன் etc..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

மிருகவைத்தியம் செய்பவராகிய நீங்கள், மனித வைத்தியம் குறித்து எழுதுவதை எப்படி நம்புவது என்று அவர் போக்கிலேயே போய் அவமதிக்காமல், இது நமக்கு பரிச்சயமானது, அறிவுரை சொல்ல தேவையான அனுபவம் உள்ளது என்று காட்டவே அவருக்கு மட்டுமே பதிலாக அளித்தேன்.

 

நாதம், இதை இங்கே என் கடைசிப் பதிலாக எடுத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் இது ஜஸ்ரினின் , நாதத்தின் தொழில் தகுதிகள் பற்றிய திரியாக மாறத் தேவையில்லை (முதலில் அப்படி மாற்றியது நீங்களே, நான் முடித்து வைக்கிறேன்😎😞

1. எனது அடிப்படைக் கல்வி மிருக வைத்தியம் - அதன் பிறகு என் கல்வித் தகுதிகள், பயிற்சிகள் மனித மருத்துவ விஞ்ஞானம் பற்றியது - உங்களுக்கு ஆய்வு மூலம் கிடைக்கிற கலாநிதிப் பட்டம் என்றால் என்ன என்று புரியாதென நினைக்கிறேன், அது இணைய வழியில் சம்பள உயர்வுக்காக எடுக்கிற சான்றிதழ் கல்வியை விட வித்தியாசமானது , எனவே விட்டு விடுங்கள்!

2. உங்களை அவமானப் படுத்தியதாக நினைத்திருக்கிறீர்கள்: நான் நினைக்கவில்லை. உங்கள் தகுதியோ யார் தகுதியோ இங்கே பேசு பொருளேயில்லாத போது உங்கள் தொழில் தகைமையையும் வருமானத்தையும் குறிப்பிட்டு "வர்ணம்" காட்ட வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏற்பட்டது ஏன் என்று தெரியவில்லை. அதன் பின்னால் மறைந்து நின்று கொண்டு உங்கள் அரசியலை முன்னகர்த்தும் நோக்கம் இங்கே எல்லாருக்கும் புரியும், இது மற்றவர்களுக்குப் புரிந்தது தெரியாமல் நீங்கள் இருப்பதே தற்போதைய entertainment இங்கே!

எனவே:

பெண்கள்

முகம் காட்டி எழுதுவோர்

தொழில் முனைவோர்

மட்டுறுத்துனர்கள் (அதிலும் உங்களால் பெயர் வெளியிடப் பட்டோர்),

உங்களிடம் ஆலோசனை கேட்டாலொழிய வலியக் கொடுக்காதீர்கள்! அப்படிக் கொடுப்பதானாலும், உங்கள் அரசியல் நிலை காரணமாக conflict of interest இருக்குமா என்பதையும் ஒரு தடவை யோசித்து விடுங்கள்.

அப்ப நான் வாறன், இதை நீட்டி இன்னும் ஜோக்கராக மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்! self preservation முக்கியம்!😇

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் எல்லோருமே பக்கம் பக்கமாய் எழுதுகிறார்கள் எதை படிப்பது எதை விடுவது ?

🤣

சீமான் பெரிய ஆள் போலத்தான் இருக்கு .

இன்னும் 20 அல்லது 30 வருடங்களில் முதியோர் இல்லத்தில் இருந்து யாழுக்கு வருவம் என்பதை மறந்து எழுதுகிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

மன்னிக்கவேண்டும்,

நான் எங்கேயும் வலிகளையோ படிப்பினைகளையோ நான் சொல்லி புரியும் நிலையில் நீங்கள் உள்ளீர்கள் என குறிப்பிடவில்லை.

நீங்கள் முஸ்லீம்களையும் தமிழர்களையும் இலங்கையில் சதி செய்து பிரித்து விட்டார்கள் என வருந்தியது போல் இருந்தது.

இதன் அர்த்தம் முஸ்லீம்கள் 100% நல்லவர்கள், அவர்களுக்கும் தமிழருக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை அதை சிங்களம் ஊதி பெருப்பித்தது என்பதல்ல.

முஸ்லீம்கள் தமிழர் இடையே எப்போதும் பிரச்சனைகள் இருந்தன ஆனால் அதை கொதி நிலைக்கு கொண்டு போய் ஆளையாள் வன்மமாக எதிர்க்கும் நிலையை உருவாக்கியதுதான் -சதி.

என்னதான் செய்தாலும் கிழக்கில் முஸ்லீம்களை தவிர்க்க முடியாது எனும் போது அவர்களை நாம் பகைத்து கொண்டதன் விளைவுகள் - நிச்சயம் எமது நீண்டகால மூலோபாய பின்னடைவுகளே.

அதே போல்தான் தமிழ் நாட்டிலும். நிச்சயமாக அங்கே தெலுங்கு பூர்வீக சாதிகளுக்கும், ஏனைய சாதிகளுக்கும் பிரச்சனை உண்டு - ஆனால் அதை வேறு விதமாக கையாண்டு இருக்கலாம். இருக்க வேண்டும். 

எப்படி கிழக்கில் முஸ்லீம்களை தவிர்க்க முடியாதோ அதே போலத்தான் தெலுங்கு சாதிகளை தமிழ்நாட்டிலும் தவிர்க்க முடியாது. அதுவும் திமுக என்பது ஒரு கட்சி மட்டும் அல்ல - அது ஒரு கட்டமைப்பு. ஆகவே கிட்டதட்ட 50% தமிழ் நாட்டில் வாழ்பவர்களை எதிரியாக்கி விட்டு தமிழ் நாட்டில்  மாற்றம் ஏற்படுத்துவோம் என்பதும்- நீண்ட கால மூலோபாய சறுக்கலே.

கிழக்கில் நடந்தது போல் சில குறுகிய கால வெற்றிகள் கூட கிடைக்கலாம் - ஆனால் நீண்ட கால நோக்கில் இலக்கு கானல் நீராகவே இருக்கும்.

ஆனால் நான் சொன்னது போல் இப்போ தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது.

 

தலை நான் வலிகளை குறிப்பிட்டு சொல்லவில்லை 
இவ்வாறன பிரிவினைகள் எங்களுக்கு வலிகளால் நிறைந்த அனுபவமாக இருக்கும்போது 
எமது ஒவ்வரு நகர்வும் அதையொட்டி இருக்கவேண்டும் என்று பொருள்படவே எழுதினேன். 

தமிழ் நாட்டை பொறுத்தவரை "நாம் தமிழர்" தவிர்க்க முடியாத சக்தி 
என்றுதான் நான் இப்போதும் நம்புகிறேன் 

நீங்கள் கூறும் பின்னடைவுகள் இவர்களால் உண்டு என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். 

கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் என்ற வாதத்தை இனி முன்வைத்தே 
முன்னேற வேண்டும் என்று எண்ணுகிறேன். 

இதில் சீமான் தெளிவாக இருக்கிறார் என்றுதான் எண்ணுகிறேன் 
நாம் எழுதிக்கொண்டு இருக்கும் திரியே சீமான் ஸ்டாலினை சந்தித்தார் 
என்ற திரிதானே. 

இதில் போதுமான சாணியை சீமான் மீது அடிப்பதுக்கு பலர் முயற்சிக்கிறார்களே தவிர 
எமது இனத்தின் எதிர்கால இருப்பு என்ற தர்க்கம் தகர்ந்துதான் கிடக்கிறது.

நான் முரண்படுவது இந்த இடத்திலேதான்.

சீமானை சீர்திருத்தவேண்டியதுதான் எமது பொறுப்பே தவிர 
சீமான் மீது சாணியடிப்பது என்பது எந்த பலனையும் தரப்போவதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Maruthankerny said:

தலை நான் வலிகளை குறிப்பிட்டு சொல்லவில்லை 
இவ்வாறன பிரிவினைகள் எங்களுக்கு வலிகளால் நிறைந்த அனுபவமாக இருக்கும்போது 
எமது ஒவ்வரு நகர்வும் அதையொட்டி இருக்கவேண்டும் என்று பொருள்படவே எழுதினேன். 

தமிழ் நாட்டை பொறுத்தவரை "நாம் தமிழர்" தவிர்க்க முடியாத சக்தி 
என்றுதான் நான் இப்போதும் நம்புகிறேன் 

நீங்கள் கூறும் பின்னடைவுகள் இவர்களால் உண்டு என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். 

கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் என்ற வாதத்தை இனி முன்வைத்தே 
முன்னேற வேண்டும் என்று எண்ணுகிறேன். 

இதில் சீமான் தெளிவாக இருக்கிறார் என்றுதான் எண்ணுகிறேன் 
நாம் எழுதிக்கொண்டு இருக்கும் திரியே சீமான் ஸ்டாலினை சந்தித்தார் 
என்ற திரிதானே. 

இதில் போதுமான சாணியை சீமான் மீது அடிப்பதுக்கு பலர் முயற்சிக்கிறார்களே தவிர 
எமது இனத்தின் எதிர்கால இருப்பு என்ற தர்க்கம் தகர்ந்துதான் கிடக்கிறது.

நான் முரண்படுவது இந்த இடத்திலேதான்.

சீமானை சீர்திருத்தவேண்டியதுதான் எமது பொறுப்பே தவிர 
சீமான் மீது சாணியடிப்பது என்பது எந்த பலனையும் தரப்போவதில்லை 

இந்த திரியில் நாம் போதுமானவரை உரையாடி விட்டோம் மருதர். ஆகவே சுருக்கமாக முடிக்கிறேன்.

சீமானை சீர்திருத்துவதற்கு கருணாவை சீர்திருத்தலாம்.

ஒருவர் இலங்கையின் முழுக்கட்டுப்பாட்டில், மற்றையவர் இந்தியாவின் முழுக்கட்டுப்பாட்டில்.

யாழில் இப்போதும் கருணா நல்லவர், பொட்டம்மான் தான் சதி செய்து அவரை பிரித்தார் என எழுதுவதற்கும், சீமானை சீர்திருத்துவதற்கும் எனக்கு அதிக வித்தியாசம் தெரியவில்லை.

ஆனாலும் நீங்கள் சீமானை சீர்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்து🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்

இந்திரா...எம.ஜி.ஆர் ..போன்றோர்  தங்கள் சொந்த செல்வாக்கில்  ...பலத்தில்  அரசியல். செய்தார்கள். அவர்களை. நாங்கள்  வளர்த்து விடவில்லை.  எங்களுக்கு. பூரண ஆதரவும் நல்கினார்கள் இலங்கைத்தமிழராகிய நாங்கள்  அவர்களின் பெயரால்  

பிரிந்து நின்று  அடிபடவில்லை  மாறாக. அவர்கள் பெயரில் ஒற்றுமையாக நின்றோம் அவர்கள். துன்பப்பட்டால்....கவலையடைத்தால் ....நாங்களும்.  துன்பமும்...கவலையுமடைத்தோம்.  

இலங்கை  அனிசேரக்கொள்கையைக் கடைப்பிடித்தாதன்  மூலம் தன்னைப்பாதுகாத்துக்கொண்டது..தமிழ்நாட்டு மக்களின்பூரண ஆதரவு அல்லது  ஒட்டுமொத்த  ஆதரவு ஈழத்தமிழருக்கு வேண்டுமென்றால் அனிசேரக்கொள்கை கடைப்பிடிக்கப்படவேண்டும்.    அரசியல் என்றால் என்ன ?என்ற கேளவிக்கு. எல்லோரையும். குழப்பிவிட்டு  தான் மட்டும் சந்தோசமாகயிருப்பது தான் அரசியல் என்ற  ஒரு பதிலுண்டு...அதனைதான் இன்று சீமான் செய்கிறார்...அதற்கு சிறந்த உதாரணம். முதலவரைச் சந்தித்தது ஆகும்.இந்த நிகழ்வின் மூலம் அரசியலில் தெளிவான பார்வை...உறுதியான கொள்கையற்றவன். ...நானென ..சீமான் உறுதிப்படுத்தியுள்ளார்...சீமான்  முதல்வரைச்சந்தித்ததை  யாரும் எதிர்க்கவில்லை ஆனால் ஏன் சந்தித்தேன்  என்பதுக்கு கூறிய காரணம் நகைப்புக்குரியது..

இலங்கையில் ..இலங்கைத்தமிழனுக்கு.  மாநிலசுயாட்சி...அல்லது. தனிநாடு அல்லது  இதுபோன்ற. உறுதியான.  எதாயினுமொரு தீர்வு  கிடைப்பதற்க்கு வலுச்சேர்க்கும். என்ற நம்பிக்கையில்.....எண்ணத்தில்...தமிழ்நாட்டில்  ஒரு கட்ச்சியை  வளர்க்க  முயற்ச்சிப்பதை...ஆதரிப்பதை.  இலங்கை வாழ்தமிழர்கள்.  ஒருபோதும்  விருப்பமாட்டார்கள்  அன்று  இலங்கையில். போராடியவர்கள்  விரும்பியதைச் செய்தோம்...    இன்று. இலங்கையில் வாழும் தமிழர்கள் விரும்பியதைச்செய்வோம்..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

கோஷான், அதிக பட்ச பொறுமையுடனும் நிதானத்துடனும்  நீங்கள் கொடுக்கும் விரிவான பதில்களுக்கு நன்றி. ஆனால் உங்கள் விளக்கங்களின் அர்த்தங்களைப் புரிந்தும் புரியாதது போல் நடிப்பவர்கள் தான் இங்கு அதிகம். 

எம்மில் ஒரு பழக்கம் உண்டு எமது சொந்த தனிப்பட்ட விடயம் என்றால் நன்கு சிந்தித்து  ஒருமுறை விட்ட தவறை அடுத்தமுறை விடாமல், பொறுப்புணர்சியுடன் எம்மை பாதிக்கக் கூடிய முடிவுகளை எடுப்பவர்களிடம் நல்லுறவுடன்  நடந்து எமது குடும்ப வாழ்வை சிறப்பாக நடத்த முயற்சிப்போம். ஏனென்றால் அங்கு இழக்கப்படப்போவது எமது சொந்த சொத்து.  தொழில் ஈடுபடுவோர், பொது விடயங்களில் ஈடுபடுவோர் அரசியல் கருத்துக்களை தெரிவித்தால் தொழில் பாதிக்கப்படும் என்று இங்கு அட்வைஸ்களே அதற்கு உதாரணம்.

ஆனால் பொது விடயம் என்று வரும் போது நிலைமை தலைகீழ். தமிழ் தேசியம் என்பதை பொது சொத்தாக கருதுவதால் அது பாதிக்கப்படுவது பற்றி எந்த கவலையோ பொறுப்போ  இல்லை. செய்த தவறையே திரும்ப செய்ய வேண்டும் என்று கூறுவோம். வெளிப்படையாக தவறு என்று  வெள்ளிடை மலையாக  தெரியும் விடயங்களையே அது  தவறே இல்லை என்று குருட்டுத்தனமாக வாதாடுவோம். தேவையில்லாமல் தமிழ் தேசியத்தை ஒரு கட்சி அரசியல் சாக்கடைக்குள் விவாத பொருளாக்குவோம். பல நூற்றாண்டாக எம்முடன் சேர்ந்து  சேர்ந்து வாழும் மக்களை எதிரியாக்கி அவர்களை திட்டி தீர்த்து எதிரயாக்குவோம். தமிழ் தேசியத்தை மூலதனமாக  வைத்து இனவெறி கொண்ட ஒரு கூட்டதை உருவாக்குவோம். ஏனென்றால் பாதிக்கப்படப் போவது எமது தனிப்பட்ட சொந்த சொத்து அல்லவே. 

இங்கு ஒரு புதிய வீடு வாங்கி குடியமர்ந்த பல அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் பலரை எனக்கு தெரியும்.  அயல் வீட்டுக்காருடன் நட்புறவை பேணினால் தான் நாமும் பிள்ளைகளிம் இங்கு மகிழ்சசியாக வாழலாம் என்று  அட்வைஸ் பண்ணிக்கொண்டே சீமானின்  வடுக வந்தேறி போன்ற இனவெறிப்  பேச்சுக்களை தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பர். இவ்வாறாக தனிப்பட வாழ்வில் மிகுந்த பொறுப்புணர்சசியுடனும் தமது சுயவாழ்வில் அக்கறை கொண்டும் வாழ்ந்தும்,   தமிழ் தேசியம் என்று வரும் போது நரம்பு புடைக்க வெறுப்பை வளர்த்து பொறுப்பற்று கருத்து தெரிவிப்பவர்களே  தமிழ் தேசியவாதிகளில் மிக மிக அதிகமாக உள்ளனர். 

இப்படிப்பட்ட தமிழ் தேசியவாதிகளின் உசுப்பேத்தல்களை நம்பி பல ஆயிரக்கணக்கான பணத்தை இவர்களிடம் ஏமாந்த பல தமிழ் மக்கள் அந்தப் பணத்தை வங்கியில் வைப்பில் இட்டிருந்தாலவது இப்போது  இந்த தமிழ் தேசியவாதிகளை போல் மகிழ்வாக வாழ்ந்திருக்கலாம். 

 

அடுத்தவனுக்கு பாடம் எடுக்காமல் 
முன்னுதாரணமாக நீங்கள் முதலில் உங்களை மாற்றி கொள்ளலாமே?

சீமான் தமிழன்தான் ஆளவேண்டும் 
ஆனால் வந்தோரை வாழவைப்போம் என்றுதான் சொல்கிறார் 
சீமான் மீது சேறு அடிக்க உங்களை போனற்வர்கள்தன இங்கு கட்டு கதைகளை 
அல்லி அடுக்கிறீர்கள் 

தமிழனை தமிழன்தான் ஆழ வேண்டும் என்பது ஒன்றும் 
சீமானின் கண்டு பிடிப்பு அல்ல எல்லா நாட்டிலும் அது சட்டமாகவே இருக்கிறது 
காரணம் அந்த மண்ணை மக்களை புரிந்து கொண்ட ஒருவனே 
அதனை சீர்படுத்த முடியும் 

10-15 வருடம் முன்பு எங்கேனும் ஒரு நாள் சீமான் ஆவேசமா பேசியதை காவி திரியாது 
முதலில் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் பின்பு அடுத்தவனுக்கு பாடம் எடுக்கலாம் 

நாம்தமிழர் கட்சி கொள்கைகள் அறிக்கைகளில் 
உங்களுக்கு முரண்பாடு இருந்தால் அதை 
கொண்டுவந்து நாகரீமாக உங்கள் எதிர் கருத்தை முன்வையுங்கள் 

திரிக்கு திரி விட்ட பிழைகளை திருத்துவது என்று வாய்ப்பன் மாவை வைத்து இழுக்காமல் 
இந்த உலகில் இப்போ உங்கள் கண்ணுக்கு முன்பு இருக்கும் எல்லாமே திருத்தப்பட்ட பிழைகள்தான் 
 
புலிவாந்தி எடுப்பது என்றால் அதை நீங்கள் தாராளமாக தொடர்ந்து செய்யலாம் 
இந்த விட்பிழைகளை திருத்துகிறோம் என்று எங்களுக்கு பம்மாத்து காட்ட தேவையில்லை 

நீஙகள் என்ன முப்படை அமைத்து போர் செய்ய போகிறீர்களா?
நீங்கள் தலைகீழாக நின்றாலும் புலிகளின் வீரத்தில் இலட்ச்சிய வேட்க்கையில் 
இனத்துக்கான அர்பணிப்பில் 0.00000000000000001% வீதம் கூட நெருங்க முடியாது 

அவர்களின் அர்ப்பணிப்பு என்ன என்பதும் அவர்கள் செய்த தியாகம் என்பதும் தெரிந்த 
ஒரே காரணத்தால்தான் உங்களை போன்றவர்களுக்கு நான் இங்கு பதில் எழுதிக்கொண்டே இருக்கிறேன் 
2005இல் இருந்து புலிவாந்திக்கு புது புது பெயர் வைத்துக்கொண்டு களம்  இறங்கிய
பலரை பார்த்துவிட்டேன் 2005 இல் இருந்து அதே பேச்சு அதே எண்ணத்துடன் நான் இங்குதான் இருக்கிறேன் 
அவர்களைத்தான் காணவில்லை  

முதலில் முன்னுதாரணமாக நீங்கள் மாறுங்கள் ......
அடுத்தவன் முதுகில் உள்ள அழுக்கை பின்பு பார்ப்போம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பெருமாள் said:

இந்த திரியில் எல்லோருமே பக்கம் பக்கமாய் எழுதுகிறார்கள் எதை படிப்பது எதை விடுவது ?

🤣

சீமான் பெரிய ஆள் போலத்தான் இருக்கு .

இன்னும் 20 அல்லது 30 வருடங்களில் முதியோர் இல்லத்தில் இருந்து யாழுக்கு வருவம் என்பதை மறந்து எழுதுகிறார்கள் .

அப்பவும் நியாயினி இருப்பா எண்டுறியள்?????? 😂

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

அப்பவும் நியாயினி இருப்பா எண்டுறியள்?????? 😂

அதென்னக்கு தெரியாது, ஆனால் நியானிக்கு வேலை கொடுக்க ஆட்கள் இருப்பினம். என்ன நான் சொல்லுறது சரிதானே அண்ணை🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

அதென்னக்கு தெரியாது, ஆனால் நியானிக்கு வேலை கொடுக்க ஆட்கள் இருப்பினம். என்ன நான் சொல்லுறது சரிதானே அண்ணை🤣

அப்பவும் நியானி  இருப்பினம்  என்றால் தன்ரை கழுத்துக்கு மேல் வெடி வைத்து போனவரின் வார்த்தைகள் தீர்க்க தரிசனமாக 1000 ஆயிரம் ஆண்டுக்கு மேல்  இருக்கும். 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, goshan_che said:

அதென்னக்கு தெரியாது, ஆனால் நியானிக்கு வேலை கொடுக்க ஆட்கள் இருப்பினம். என்ன நான் சொல்லுறது சரிதானே அண்ணை🤣

 கோஷான்! இந்த உலகம் ஒருமித்த கருத்து / சிந்தனையுடன் சுற்றும் என நம்புகின்றீர்களா?

என்ன நான் கேட்டது விளங்குதோ? 😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

 கோஷான்! இந்த உலகம் ஒருமித்த கருத்து / சிந்தனையுடன் சுற்றும் என நம்புகின்றீர்களா?

என்ன நான் கேட்டது விளங்குதோ? 😁

புல்லா விளங்கீட்டு😎

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

மருதரின் பந்தி எழுத்துக்களுக்கு நான் விசிறி😁

பின்நவீனத்துவக் கதைகள் போல எதுவும் விளங்காது! ஆனால் ஏதோ விசயம் இருக்கு என்று எப்போதும் புரியாத புதிராகவே இருக்கும்!🙃

தொடர்ந்து படித்தால் ethical hackers குறூப்பில் சேர்ந்து hackers இன் encryptions ஐ உடைக்கும் அளவிற்கு அறிவு வளர்ந்துவிடும்😆

உங்களின் தனிமனித தாக்குதல் புரிகிறது 

இவ்வாறான தந்திரோபாய தனிமனித தாக்குதலை நான் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன் 
அடிப்பது எனக்காக இருந்தாலும் .. உங்கள் மூளையை பயன்படுத்த்துகிறீர்கள் என்பதனால்.
காய்க்கும்போதே கல்லெறிகளை எதிர்பார்த்தே காய்க்கிறோம் ஆதலால் ஏதும் புதிதாக இல்லை 

நான் தமிழில்தான் எழுதுகிறேன் 
உங்களுக்கு தமிழ் விளக்க குறைபாடு இருப்பின் 
அதை என்னால் நிவர்த்தி செய்ய முடியாது 

எனது கருத்துக்களில் விளங்காத பாகத்தை சுட்டி காட்டினால் 
நான் வேறுவிதமாக அதை திருத்தி எழுதுகிறேன். 

இந்த திரியில் எழுதியதுபோல எங்கும் எழுதும் எண்ணமும் பெரிதாக இல்லை 
இந்த திரியில் எழுதியதே ஒரு துரதிர்ஷ்டாம்தான் ..... வல்வையக்கா சாந்தியாக்க இருவரின் மேலும் 
இருந்த அக்கறையாலும் ..... அதை சிலர் தவறாக புரிந்துகொண்டு நான் எழுதாததை 
எழுத்தியதாக சொல்லிக்கொண்டு மகளீரை காப்பாற்ற ஒரு குடாரப்பு தரை இறக்கத்தை 
செய்ததாலும் ஒரு துரதிர்ஷ்ட்டம் ஏற்றப்பட்டு விட்டது 

இதில் ஒரு பெருத்த பகிடி 
அனந்தி அவர்களை இங்கு சரமாரியாக பொழிந்தவர்கள் தான் இன்று 
முன்னனி தளபதிகளாக தரை இறங்கி இருக்கிறார்கள்.

அனந்தி அவர்கள் இங்கு யாழில் தன்னை ஒரு உறுப்பினராக பதிந்துகொண்டார் 
அந்த திரியிலேயே பல அவதூறுகளுக்கு எதிராக எழுதியவன் நான்தான் 

இப்போ அவர் முன்னாள் போராளியின் மனைவியாகிவிட்டார் 
நாங்கள் பெண்களுக்கு உரிமை மறுப்பாளராகி விடடோம் 
நினைச்சா சிரிப்பு ஆதலால்தான் பழையவற்றை மறந்தே எழுதுகிறேன் 

இங்கு எழுதி வெல்லும் எண்ணம் எனக்கு இப்போ அறவே இல்லை 
நாம் நிலத்தில் வென்றாகவேண்டும் என்பதே இப்போதைய எண்ணம் 
யாழ் களம் ஒரு பொழுதுபோக்கு களம் மட்டுமே.

சீமானை பற்றி திரிவந்தாலே சாணியடிப்பு தொடங்கி இருக்கும் என்று 
நான் திறந்து வாசிப்பதே இல்லை. பாவம் அவர்களும் அவர்களுக்கு தெரிந்ததை தானே 
செய்யமுடியும். 30 வருடம் சாணி அடித்தவனை .... மெழுக சொன்னால் அவனும்தான்  என்ன செய்வான்? 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

உங்களின் தனிமனித தாக்குதல் புரிகிறது 

இவ்வாறான தந்திரோபாய தனிமனித தாக்குதலை நான் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன் 
அடிப்பது எனக்காக இருந்தாலும் .. உங்கள் மூளையை பயன்படுத்த்துகிறீர்கள் என்பதனால்.
காய்க்கும்போதே கல்லெறிகளை எதிர்பார்த்தே காய்க்கிறோம் ஆதலால் ஏதும் புதிதாக இல்லை 

நான் தமிழில்தான் எழுதுகிறேன் 
உங்களுக்கு தமிழ் விளக்க குறைபாடு இருப்பின் 
அதை என்னால் நிவர்த்தி செய்ய முடியாது 

எனது கருத்துக்களில் விளங்காத பாகத்தை சுட்டி காட்டினால் 
நான் வேறுவிதமாக அதை திருத்தி எழுதுகிறேன். 

இந்த திரியில் எழுதியதுபோல எங்கும் எழுதும் எண்ணமும் பெரிதாக இல்லை 
இந்த திரியில் எழுதியதே ஒரு துரதிர்ஷ்டாம்தான் ..... வல்வையக்கா சாந்தியாக்க இருவரின் மேலும் 
இருந்த அக்கறையாலும் ..... அதை சிலர் தவறாக புரிந்துகொண்டு நான் எழுதாததை 
எழுத்தியதாக சொல்லிக்கொண்டு மகளீரை காப்பாற்ற ஒரு குடாரப்பு தரை இறக்கத்தை 
செய்ததாலும் ஒரு துரதிர்ஷ்ட்டம் ஏற்றப்பட்டு விட்டது 

இதில் ஒரு பெருத்த பகிடி 
அனந்தி அவர்களை இங்கு சரமாரியாக பொழிந்தவர்கள் தான் இன்று 
முன்னனி தளபதிகளாக தரை இறங்கி இருக்கிறார்கள்.

அனந்தி அவர்கள் இங்கு யாழில் தன்னை ஒரு உறுப்பினராக பதிந்துகொண்டார் 
அந்த திரியிலேயே பல அவதூறுகளுக்கு எதிராக எழுதியவன் நான்தான் 

இப்போ அவர் முன்னாள் போராளியின் மனைவியாகிவிட்டார் 
நாங்கள் பெண்களுக்கு உரிமை மறுப்பாளராகி விடடோம் 
நினைச்சா சிரிப்பு ஆதலால்தான் பழையவற்றை மறந்தே எழுதுகிறேன் 

இங்கு எழுதி வெல்லும் எண்ணம் எனக்கு இப்போ அறவே இல்லை 
நாம் நிலத்தில் வென்றாகவேண்டும் என்பதே இப்போதைய எண்ணம் 
யாழ் களம் ஒரு பொழுதுபோக்கு களம் மட்டுமே.

சீமானை பற்றி திரிவந்தாலே சாணியடிப்பு தொடங்கி இருக்கும் என்று 
நான் திறந்து வாசிப்பதே இல்லை. பாவம் அவர்களும் அவர்களுக்கு தெரிந்ததை தானே 
செய்யமுடியும். 30 வருடம் சாணி அடித்தவனை .... மெழுக சொன்னால் அவனும்தான்  என்ன செய்வான்? 

வணக்கம் மருதர்,

உங்களில் எனக்கு பிடிக்காதது என்ன தெரியுமா? 

கோஷானுக்கு பதிலை கோஷானை சாடி, கிருபனுக்கு எழுதுவீர்கள்.

கோஷான் வந்து பதில் போட்டால் அது உங்களுக்கு இல்லை என்பீர்கள். 

பரவாயில்லை. இதில் நான் சம்பந்த பட்டதை மட்டும் விளக்கி விடுகிறேன்.

1. அனந்தியை ஒரு அரசியல்வாதியாக ஆதரித்தும் (மாகாணசபை தேர்தல் நேரம்) பின்னர் எதிர்த்தும் நான் எழுதியுள்ளேன். ஆனால் அவரை பற்றி ஒரு போதும் பாலியல் அவதூறை செய்ததில்லை. இங்கே நான் கண்டித்ததும் அவவின் மீதானா பாலியல் அவதூறை காவி வந்தததையும், அதை நியாயப்படுத்தியதையும்தான். இரெண்டுக்கும் பாரிய இடைவெளி உள்ளது.

2. சீமானை பற்றி இங்கே நான் சேறடிக்கவில்லை. இந்தியாவில் இருக்கும் ஒரு அமைப்பு, ரோவின் அனுமதி இன்றி தலைவரின் படத்தை பயன்படுத்தவே முடியாது என்பது மிக எளிதான தர்க்கம். ரோவை பற்றி அறிந்த எவருமே இதை புரிந்து கொள்வார்கள். இதை அடிப்படையாக வைத்து பல நியாமான சந்தேகங்களை, நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து சந்தர்ப சாட்ட்சியங்களின் (circumstantial evidence) அடிப்படையில் அவர் ஒரு றோ ஏஜெண்ட் என்ற குற்ற பத்திரிகையை முன் வைத்துள்ளேன். அக்னியிற்கு நேற்று எழுதிய பதிலில், முதலாவது பதிவில் இதை காணலாம். இது circumstantial evidence அடிப்படையில்தான் உள்ளது. ஏனென்றால் நாம் கதைப்பது ஒரு மறை நடவடிக்கையை பற்றி. இது பற்றிய வெளிப்படையான ஆதாரங்களை ரோவும் தராது சீமானும் தரமாட்டார்.

நான் சீமான் மீது வாசிக்கும் குற்றபத்திரிகையை நீங்கள் ஏற்காமல் இருக்கலாம், இங்கே கருணா குற்றம் செய்தார் என்றும் இன்னும் சிலர் ஏற்பதில்லை - ஆனால் இது சீமான் மீதான சேறடிப்பல்ல. 

இந்த இரெண்டு விடயங்களும் கிருபனை quote செய்து கோஷானுக்கு எழுதியது போல் என் மனதில்பட்டது.  எனவே இந்த பதிலை இடும்படியாகிற்று.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

ஆனால் இது சீமான் மீதான சேறடிப்பல்ல

இந்தத்திரியில்  எவரும் சீமான். ஒரு சிறந்த அரசியல்  தலைவர்......நிச்சயம் அவர் தமிழ்நாட்டை  ஒருகாலத்தில் ஆளவார்.....உலகத்தமிழருக்கு  தலமை தங்குவார்....அவரால் இலங்கைத்தமிழர் பிரச்சனைக்கு  உறுதியான நல்ல தீர்வு ..பெற்றுக்கொடுக்கமுடியும் என்பன போன்ற  விடயங்களுக்கு. உறுதியான  தரவுகளை. வைக்க முடியவில்லை.  காரணம்  சீமானைப் பற்றி பூரணமாக. எதுவும்  அறித்திருக்கவில்லை....தெரித்திருக்கவில்லை..அந்த உண்மையை  எற்றுக்கொள்ளவும்  விருப்புகிறார்களில்லை...மேலும். சீமான் பற்றி  உண்மையான  தரவுகளை  வைப்பவர்களை  சேறடிக்கிறாய்  எனப்பெரிடுகிறார்கள்

இது கருத்துக்களம்  அனைவரும் கருத்து எழுத முடியும்  கருத்து  பிடிக்கவில்லை  அல்லது  எற்றுக்கொள்ள முடியவில்லை.  என்றவுடன். கருத்து எழுதியவருடன் சண்டைபோடக்கூடாது.மாறாக...சகமனிதனாக  நினைத்து  கருத்து எழுதவேண்டும்..எழுதப்பழகவேண்டும்.   என்னைப்பெறுத்தவரை.  எதிர் கருத்து வைப்பவனை. ஆதரிப்பவனும்.  வரவேர்ப்பவனும்  தான். உண்மையான். கருத்தளான். அப்போ தான்  நாங்கள் புதுப்புதுக்கருத்துக்களை  அறியமுடியும்....கற்றுக்கொள்ளமுடியும்...

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2021 at 07:40, shanthy said:

சீமானின் சிங்கப்பூர் சிங்கம் பழனி அனந்தியை வசைபாடியது 2021.

சீமானுக்கு தங்கள் நட்பு வட்டத்தை இணைத்து 2010 - 2012 காலம் வரை சீமானுக்கு உயிர் உடல் ஆவி பொருள் என ஐரோப்பிய நாடொன்றில் இருந்து 2போராளிப்பெண்கள் மாதம் 10 பவுண்ஸ் 10 யூரோ என சேகரித்து அனுப்பிக் கொண்டு இருந்தார்கள்.

அந்தத் தோழிகள் இருவரும் அண்ணன் 🐢 மட்டுமே எங்களுக்கான விடிவெள்ளி சூரியன் என்று யெகோவா சகோதரிகள் போல உபதேசித்துக் கொண்டேயிருப்பார்கள்.

அண்ணன் சீமானுக்கு வேண்டியவர்கள் பலரும் ஐரோப்பாவுக்கு (கல்வி சார்ந்தும்) வரும் பலருக்கு தங்க இடம் சுற்ற பணச்செலவு எல்லாம் செய்தார்கள். 

இடையில் ஒரு தம்பி அண்ணனுக்கு  முகவரானார். 

அந்தத் தோழிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்ற தம்பி தோற்றுவிட்டார். 

உடனடியாக அண்ணனும் அந்த தம்பியும் அவ்விரு தோழிகளையும் விபச்சாரிகள் வரிசையில் சேர்த்து ஒலிப்பதிவு ஒன்றை அண்ணன் 🐢சீமான் குரலில் நண்பர்களுக்கும் பொது வெளியிலும் பகிர்ந்தார்கள். 

அவர்களில் ஒருத்தி 90 கோட்டை சமரில் காலொன்றை இழந்தவள். அவளது கால் பற்றியும் அண்ணன் ஒருபடி மேலே போய் பழனியை விஞ்சும் வகையில் பேசியிருந்தார். 

அதுமட்டுமல்ல அவர்களுக்கு பலருடன் கள்ளத் தொடர்பு என்று புரளியையும் பரப்பிய பெரு(சீ) மான். 

அனந்தி பற்றி பழனி பேசியதைக் கேட்டபோது, 

 சீமானை அண்ணை என்றும் கயலை அண்ணி என்று அழைத்து தன் உரிமை பேணும் தம்பி ஒருவரைக் கேட்டேன். ஏன்ரா தம்பி உன்ர கொண்ணன்ர ஆள் இப்படிக் கதைக்கிறார்? 

அந்தத் தம்பி சொன்னான் "அனந்தி கனபேரோடை கள்ளத்தொடர்பு இருக்கு" பழனி சொன்னது சரிதான். 

சீமான் எனும் பொய் மான் பற்றி கருத்துச் சொன்னால் இப்படித்தான் நடக்கும். 

இப்படி நிறைய கதைகள் இருக்கு. இத்தோடு சீமான் ஒலிபரப்பை நிறுத்திக் கொள்கிறேன். 

வாழ்க சீமான் புகழ்.

வளர்க சீமான் பெருமைகள். 

 

ஒருமாதிரி 7பக்கங்களை இழுத்து கொண்டு வந்தாச்சு. அப்பாடா. 😀

இப்படியான ஆதாரமற்ற ஆயிரம் ஆயிரம் கதைகளை நானும் நீங்களும் நாமெல்லோரும் எழுதலாம்.. கோசான் போன்ற உறவுகள் சீமானை லொஜிக்கலாக விமர்சிக்கிறார்கள்... இப்படி இப்படி நடக்கலாம் அல்லது இப்படி இப்படி இருப்பதால் இதை நான் சந்தேகிக்கிறேன் என்று வாதிடுகிறார்கள்.. அவற்றை நாம் பதில் வாதங்கள் மூலம் மேலும் பேசலாம்.. ஆனால் இது ஒரு ஆதாரமே இல்லாத சேறடிப்பு.. இப்படியான ஆதாரமில்லாத மோசமான குற்றச்சாட்டுக்கள் பொதுவெளியில் உள்ள ஆண்களை அசிங்கப்படுத்த பெண்கள் எடுக்கும் ஆயுதமாக மாறிவிட்டது துரதிஸ்ட வசமானது.. இந்த விடயத்தை சமூகம் பொறுபோடு கையாளவேண்டும்.. இதனால் எத்தனையோ அப்பாவி ஆண்களின் எதிர்காலமே அழிந்து போயுள்ளது.. எத்தனை ஆண்கள் வாழ்வு அழிந்து நாசமாய் போனாலும் பரவாயில்லை ஒரு பெண் சொல்லிவிட்டாள் அதனால் நாம் ஜம்புலன்களையும் இறுக்கி மூடிக்கொண்டு ஆதரவு அளிக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.. இது நாளை உங்கள் வீட்டுக்குள்ளும் வரலாம்.. அப்பொழுதும் இப்படித்தான் கண்ணைமூடிக்கொண்டு ஆதாரம் இல்லா கதைக்கு லைக் அள்ளிபோடுவீர்கள் போல.. இது கணணி மோபைல் யுகம்.. நூற்றுக்கு எழுபது எண்பது வீதமானவை ஆதாரங்களை காட்டக்கூடிய குற்றச்சாட்டுக்கள்.. சாந்தி மேலே குறிப்பிட்ட விடயம் உட்பட.. ஆணால் ஆண்கள் மேல் குற்றச்சாட்டு வைக்கும் பெண்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆதாரங்களை கொடுப்பதில்லை..  குற்றசாட்டு பொதுவெளியில் வைப்பது என்று முடிவெடுத்து விட்டால் பின் ஆதாரத்தை கொடுக்க எல்லாம் தயங்ககூடாது.. 

ஆனந்தியை அந்த பெண்களை எல்லாம் ஆதாரம் இல்லாமல் அந்த தம்பிகள் அசிங்கப்படுத்தியதாக சொல்கிறார் ஆனாலும் தானும் அதையே சீமான்மேல் செய்கிறார் சாந்தி.. அந்த தம்பிகளுக்கும் சாந்திக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.. அவர்கள் பெண்களை பற்றி கிசுகிசு எழுதுகிறார்கள் இவர்கள் ஆண்களை பற்றி கிசுகிசு எழுதுகிறார்கள்.. பேசப்படும் ஆளின் பால்தான் வித்தியாசம்..🥲🥲

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kandiah57 said:

இந்தத்திரியில்  எவரும் சீமான். ஒரு சிறந்த அரசியல்  தலைவர்......நிச்சயம் அவர் தமிழ்நாட்டை  ஒருகாலத்தில் ஆளவார்.....உலகத்தமிழருக்கு  தலமை தங்குவார்....அவரால் இலங்கைத்தமிழர் பிரச்சனைக்கு  உறுதியான நல்ல தீர்வு ..பெற்றுக்கொடுக்கமுடியும் என்பன போன்ற  விடயங்களுக்கு. உறுதியான  தரவுகளை. வைக்க முடியவில்லை.  காரணம்  சீமானைப் பற்றி பூரணமாக. எதுவும்  அறித்திருக்கவில்லை....தெரித்திருக்கவில்லை..அந்த உண்மையை  எற்றுக்கொள்ளவும்  விருப்புகிறார்களில்லை...மேலும். சீமான் பற்றி  உண்மையான  தரவுகளை  வைப்பவர்களை  சேறடிக்கிறாய்  எனப்பெரிடுகிறார்கள்

 

இந்தத்திரியில்  எவரும் சீமான். ஒரு சிறந்த அரசியல்  தலைவர்

அவர் தமிழ்நாட்டை  ஒருகாலத்தில் ஆளவார்

அவரால் இலங்கைத்தமிழர் பிரச்சனைக்கு  உறுதியான நல்ல தீர்வு ..பெற்றுக்கொடுக்கமுடியும்

 

இதுக்கு எல்லாம் சீமான் தயாராக இருந்தாலும் 
நீங்கள் விடவா போகிறீர்கள்?

உங்களால் முடிந்த சேறடிப்பை செய்துகொண்டுதானே இருக்கிறீர்கள்?
ஒரு தமிழன் எழுந்து நிற்க முன்னமே குழிதோண்டி வைக்கவேண்டும் 
என்றுதானே இருக்கிறீர்கள்?

நீங்கள் சீமானின் தர்க்கத்தில் தத்துவத்தில் என்ன  தப்பு காண்கிறீர்கள்?
என்ன ஆரோக்கியமான கருத்தை முன்வைக்கிறீர்கள்? 

எழுதுங்கள் ஒரு வேளை  நாம் தவறாகவே இருக்கலாம் 
விரிவாக விவாதிப்போம் 

என்ன பெரிய உண்மையை இங்கே எழுதுகிறீர்கள் ஏற்றுக்கொள்வதுக்கு?

காந்திமதிக்கும் அஜித்துக்கும் கள்ள தொடர்பு இருக்க வாய்ப்பிருக்கிறது 
இல்லை என்றால் காந்திமதி அஜித்மீது ஒரு வழக்கவது போட்டிருப்பார் 
போன்ற கிசு கிசு தகவலுக்கு என்ன  பதிலை எதிர்பார்க்கிறீர்கள்?

கோசன் சீமான் றோ வின் ஆள் என்றால் 
நாம் என்ன மறுத்து எழுத இருக்கிறது?  .. அப்படி இல்லை என்று 
உண்மை நிலையை எழுதினால் ........ ஆ ஐயோ உண்மையை எழுதிவிட்டார் 
என்று ஏற்றுக்கொள்ளவா போகிறார்? இன்னொரு பந்தி எழுத போகிறார் 

உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு என்றால் தக்காளி சட்னியா?

முதலில் சீமானின் நாம்தமிழரின் கொள்கை தர்க்கம் போன்றவற்றை 
கொண்டுவந்து நாகரீகமாக கருத்தை பதிய முடிந்தால் பகிருங்கள் 
இல்லை என்றால் சேறடிப்பை தொடருங்கள் .............. 

சீமானை தூக்கிவைத்து ஆட நாம் ஒன்று சிறுவர்கள் இல்லை 
சீமான் மீது ஏன் இவர்கள் சேறடிக்கிறார்கள் ஏன் குழுவாதம் செய்கிறார்கள் 
என்பதும் தெரிந்தே இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் பந்தி பந்தியா எழுதுவார் எங்களால் என்ன மறுத்தா எழுதமுடியும்?

அவர் எழுதியது ஒரு சேறடிப்பு என்று அவர் மேலேயே சேற்றை அடிப்போம். 

மொத்தத்தில என் மனசில் சீமான் உத்தமர் என்று படுகிறது. ஆகவே அதுதான் உண்மை. 

அது என்ன அந்த சொல்…ஆ. Right. 

ரைட் என்றால் என்ன? நான் நினைப்பது மட்டும்தான் ரைட். மிச்சதெல்லாம் லெப்ட்.

அவ்வளவுதான். சிம்பிள்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

கோசான் பந்தி பந்தியா எழுதுவார் எங்களால் என்ன மறுத்தா எழுதமுடியும்?

அவர் எழுதியது ஒரு சேறடிப்பு என்று அவர் மேலேயே சேற்றை அடிப்போம். 

மொத்தத்தில என் மனசில் சீமான் உத்தமர் என்று படுகிறது. ஆகவே அதுதான் உண்மை. 

அது என்ன அந்த சொல்…ஆ. Right. 

ரைட் என்றால் என்ன? நான் நினைப்பது மட்டும்தான் ரைட். மிச்சதெல்லாம் லெப்ட்.

அவ்வளவுதான். சிம்பிள்ஸ்.

தலை மன்னித்து கொள்ளுங்கள் !
உங்களுக்கு நான் எந்த இடத்திலும் உதவ போவதில்லை 
ஆனால் உங்கள் உதவி எனக்கு தேவை என்று எண்ணுகிறேன் 

அடுத்தவர்கள் சும்மா வந்து உத்தமருக்கு நடிக்கும்போது 
திரியில் நடப்பதை சுட்டி காட்ட வேண்டி வந்துவிடுகிறது 

இதெல்லாம் தேவை இல்லை என்று  நான் முழுமையாக நம்புகிறேன் 
நான் மறைமுகமாக உங்கள் கருத்துக்களை மேற்கோள் காட்டுவது என்பது 
வெறும் அயோக்கியத்தனம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன் 
நேரடியாக எழுதவேண்டும் இல்லை என்றால் விட வேண்டும் 
ஆனால் நாம் செய்வது சரியானது அல்ல ....

இவை உங்களை சீண்டுவதாக  எண்ணினால் 
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் 

எனது வாதத்தை மெய்பிக்க நான் முனையவில்லை 
சிலர் உத்தமருக்கு நடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இந்த திரியில் இருந்து ஒதுங்குகிறேன்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.