Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
protest-4-750x375.jpg
மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில், முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும், தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள் வரை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

அத்துடன், வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் பெண்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

protest-6-600x338.jpg protest-5-600x338.jpg protest-4-600x338.jpg protest-7-600x338.jpg protest-3-600x338.jpg protest-2-600x338.jpg protest-1-1-600x338.jpg

https://athavannews.com/2021/1229275

 

மலையக சிறுமியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்- கருப்பையா மைதிலி

 
11111-1-720x375.jpg
மலையக சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போமென வீட்டுப் பணிப்பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பான ட்ரொடெக்ட் .அமைப்பின் தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ”சிறுமியின் மரணம் தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை எமது சங்கம் தொடர்ந்து போராடும். இவ்விடத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

குறித்த சிறுமி, தரகர் ஒருவர் ஊடாகவே வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார். சிறாரை எவ்வாறு வேலைக்கு அமர்த்த முடியும்.

அத்துடன் சிறுமியின் மரணம் தொடர்பில் எமக்கு உண்மை தெரிய வரவேண்டும். உண்மையை மூடிமறைக்க எவரும் முயற்சிக்க கூடாது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ஆம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1229263

 

 

ரிஷாட்டின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் – இரா.சாணக்கியன்!

death-sanakiyan-720x375.png
 
 

சிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ரிஷாட்டின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், ”15 வயதான குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும். சிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும். நீதிக்கு மேல் எவரும் இல்லை. இந்த விடயத்தில் சரியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என நம்புகின்றேன்.

இதேபோன்று நாட்டில் எத்தனையோ விடயங்கள் எங்களுக்கு தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது. முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் இந்த விடயம் நடைபெற்றுள்ளமையினாலேயே வெளியில் தெரியவந்துள்ளது.

எனினும் எங்களுக்கு தெரியாமல் எங்கெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் தினந்தினம் நடைபெற்றுகொண்டுதான் இருக்கின்றது. அத்துடன் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படுவதாக தினமும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் விரைந்து முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் அளவும் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவரினாலும் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் என நான் நம்புகின்றேன்.

குறித்த அதிகார சபைக்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இதன்காரணமாக அவர்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அதேபோன்று சிறுவர்களின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதுடன் அவர்கள் பணிக்கமர்த்தப்படுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் தங்களது இளம் வயதிலேயே பணிக்கமர்த்தப்படுகின்றமை காரணமாகவே இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகங்கொடுகின்றனர்.

எனவே முதலில் முகவர்கள் ஊடாக சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுகின்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

சிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1229247

  • Replies 99
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

protest-4-750x375.jpg

ரிஷாட்டின்.... வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட,  மலையக சிறுமியின்... மரணம் தொடர்பாக, உண்மை கண்டறியப்பட வேண்டும்.

 

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில், முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும், தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள் வரை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

அத்துடன், வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் பெண்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

protest-6-600x338.jpg

protest-7-600x338.jpg

protest-3-600x338.jpg

protest-2-600x338.jpg

protest-1-1-600x338.jpg

https://athavannews.com/2021/1229275

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மலையக சிறுமியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்- கருப்பையா மைதிலி

மலையக சிறுமியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்- கருப்பையா மைதிலி

மலையக சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போமென வீட்டுப் பணிப்பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பான ட்ரொடெக்ட் .அமைப்பின் தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ”சிறுமியின் மரணம் தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை எமது சங்கம் தொடர்ந்து போராடும். இவ்விடத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

குறித்த சிறுமி, தரகர் ஒருவர் ஊடாகவே வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார். சிறாரை எவ்வாறு வேலைக்கு அமர்த்த முடியும்.

அத்துடன் சிறுமியின் மரணம் தொடர்பில் எமக்கு உண்மை தெரிய வரவேண்டும். உண்மையை மூடிமறைக்க எவரும் முயற்சிக்க கூடாது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ஆம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1229263

  • தமிழ் சிறி changed the title to ரிஷாட்டின்.... வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட, மலையக சிறுமியின்... மரணத்திற்கு, நீதி கிடைக்க வேண்டும்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் முக்கிய காரணியாவான்....அதுதான் ஹாட் வருத்தம் வந்தது...

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட் பதியுதீன் வீட்டில் இறந்த பெண் பாலியல் கொலையானாரா?

Rishad-Bathiudeen.jpg?resize=895%2C653&ssl=1

ரிஷாட் வீட்டில் எரிகாயத்துடன் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் இறந்து போன 16 வயது பெண், இசாலினி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி இருந்திருக்கிறார் என்று மருத்துவ அறிக்கை வெளிவந்து பெரும் அதிர்ச்சியினை கொடுத்துள்ளது.

தனது வீட்டில் நடந்த நிகழ்வுகளை கேள்விப்பட்ட, ரிஷாட், உடல் நலம் குன்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டும், ஹிஸ்புல்லாவும், அதாவுல்லாவையும் லோக்கல் லெப்பைமாறுகளை மீறி சவூதி வாகாபிசத்தினை புகுத்த நடவடிக்கைகளை எடுத்தார்கள். இதில், முதல் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு இயங்கினர்.

புலிகள் காலத்தில், மகிந்தா வலது கையாக இயங்கிய ரிஷாட், வில்பத்து காடு அழித்து தனது ஆதரவாளர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு பெரும் செல்வாக்குடன் விளங்கினார்.

ஈஸ்டர் குண்டு வெடிப்புடன், இவர்களது ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. 

சுதாகரித்துக்கொண்ட ஹிஸ்புல்லா, பெரும் பணத்தினை, கோடிக்கணக்கில், பசிலுக்கு கொடுத்து தனக்கு பிரச்சனை வராமல் இருப்பதனை உறுதிப்படுத்திக் கொண்டார். அதாவுல்லாவும், தேர்தலில் கோத்தாவுக்கு ஆதரவு என்று வேலை செய்து தப்பிக்கொண்டார்.

ரிஷாட் சிக்கிக்கொண்டார்.

இருவாரங்களுக்கு முன்னர், தன்னை வீட்டு சிறையில் வைக்குமாறு விடுத்த கோரிக்கையினை, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் கோத்தா நிராகரித்து இருந்தார்.

இந்த நிலையில், அவரது வீட்டில் 15 வயது முதல் இந்த சிறு பெண், இசாலினி,  வேலை செய்து வருகிறார் என்றும், அவர் 16 வயது ஆன நிலையில் மரணித்துள்ளார் என்றும் தெரிய வந்த போது, ஒரு முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் சட்ட மீறலில் ஈடுபட்டமை குறித்து, பத்திரிகைகள் எழுதின.

ரிஷாட் மேல் இது குறித்த வழக்கும் பாயும் என்கிற நிலையில், மரணித்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி உள்ளார் என்ற தகவலும் வந்துள்ளது.

மலையகத்தில், பெண் இறப்புக்கு நீதி வேண்டும் என்று போராட்டங்கள் நடந்த நிலையில், பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி இருந்தார் என்ற செய்தி வந்துள்ளது.

பெண், பாலியல் வல்லுறவுக்கு பின்னர், தற்கொலை செய்ய, தீக்குளித்தாரா அல்லது, தடயங்களை அழிக்க எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ரிஷாட் வீட்டில் இருந்த ஆண்கள் யார், என்று விசாரணை செய்யும் பொலிசாரினால் இன்று ஒட்டு மொத்த ரிஷாட் குடும்பமுமே பெரும் சட்ட சிக்கலில் மாட்டி உள்ளது.

அவரது அரசியல் குறித்து பெரும், கண்டனங்கள் இங்கே பதிவு செய்திருக்கின்றோம். ஆயினும், இந்த மரணத்துக்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லை என்ற நிலையில், தனிப்பட்ட ரீதியில், பெரும் சட்ட சிக்கலில் சிக்கி இருக்கும் அவருக்கு மனிதாபிமான ரீதியில் அனுதாபத்தை தெரிவிப்பதை தவிர நாம் ஒன்றும் செய்ய முடியாது. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அவரது அரசியல் குறித்து பெரும், கண்டனங்கள் இங்கே பதிவு செய்திருக்கின்றோம். ஆயினும், இந்த மரணத்துக்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லை என்ற நிலையில், தனிப்பட்ட ரீதியில், பெரும் சட்ட சிக்கலில் சிக்கி இருக்கும் அவருக்கு மனிதாபிமான ரீதியில் அனுதா

என்ன நாதம் வர வர தலிபான் முல்லாக்கள் மாரி எழுதிறியள்😳.

ஒரு பிள்ளை செத்து கிடக்குது. ஏரிச்சு கொலை எண்டுறாங்கள். பாலியல் வன் புணர்வு எண்டுறாங்கள். சாக முதல் என்ன பாடு படுத்தினாங்களோ?

அதுக்கு ஒரு அனுதாபம் இல்லை.

மன்னார் பகுதியில் எமது மக்களை சுரண்டி, மிரட்டி கொழுத்த ரிசாட்டுக்கு அனுதாபம்?

 

பிகு: தமிழ் மக்கள் மீதும், தமிழ் அதிகாரிகள் மீதும் பலமாக உள்ள போது விசத்தை கக்கிய இனவாதி ரிசாத். ஹிஸ்புலா, அதவுலாவுக்கு நிகரானவர்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

என்ன நாதம் வர வர தலிபான் முல்லாக்கள் மாரி எழுதிறியள்😳.

ஒரு பிள்ளை செத்து கிடக்குது. ஏரிச்சு கொலை எண்டுறாங்கள். பாலியல் வன் புணர்வு எண்டுறாங்கள். சாக முதல் என்ன பாடு படுத்தினாங்களோ?

அதுக்கு ஒரு அனுதாபம் இல்லை.

மன்னார் பகுதியில் எமது மக்களை சுரண்டி, மிரட்டி கொழுத்த ரிசாட்டுக்கு அனுதாபம்?

 

பிகு: தமிழ் மக்கள் மீதும், தமிழ் அதிகாரிகள் மீதும் பலமாக உள்ள போது விசத்தை கக்கிய இனவாதி ரிசாத். ஹிஸ்புலா, அதவுலாவுக்கு நிகரானவர்.

நான் இங்கே அவரை மிக மோசமாக கண்டித்து எழுதி உள்ளேன்.

சண்டே லீடர் பத்திரிகையில், அவரது வில்பத்து அடாவடி குறித்த ஆங்கில கட்டுரையினை முழு மொழி பெயர்ப்பு செய்து பதிந்தேன்.

முல்லைத்தீவு மீள்குடியேறுதல் காடழிப்பு அடாவடி குறித்து எழுதி இருக்கிறேன்.

ஆனாலும், அவரது இன்றய நிலை, ஒரு எதிரிக்கு கூட வரக்கூடாது. 🙏

அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு அவர் பொறுப்பில்லை என்ற நிலை நிதர்சனம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

நான் இங்கே அவரை மிக மோசமாக கண்டித்து எழுதி உள்ளேன்.

சண்டே லீடர் பத்திரிகையில், அவரது வில்பத்து அடாவடி குறித்த ஆங்கில கட்டுரையினை முழு மொழி பெயர்ப்பு செய்து பதிந்தேன்.

முல்லைத்தீவு மீள்குடியேறுதல் காடழிப்பு அடாவடி குறித்து எழுதி இருக்கிறேன்.

ஆனாலும், அவரது இன்றய நிலை, ஒரு எதிரிக்கு கூட வரக்கூடாது. 🙏

அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு அவர் பொறுப்பில்லை என்ற நிலை நிதர்சனம். 

ஆனால் ஒரு சிறுமியை வேலைக்கு வைத்துள்ளார். 

அவருக்கு பாலியல் வன்கொடுமை பற்றி வழக்கு வராது (சிறைவாசம்) ஆனால் செய்தவர் அவர் குடும்பத்தில்/வீட்டில் உள்ள ஆண் என்றால் அதனால் அந்த குடும்பத்துக்கு வரும் சோதனையை ஏனைய குடும்பங்கள் போல அவர்களும் எதிர்கொள்ள வேண்டியதுதான்.

ஆனால் இனி ரிச்சர்ட் பட்டெனெ மாறி - இதை ஒன்றுமில்லாமல் ஆக்கவும் கூடும். 

இந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்குமா என்பதுதான் எமது ஆதங்கமாக இருக்க வேண்டுமே ஒழிய, ரிசார்ட் எமக்கு செய்த கெடுதலுக்கு அவர் எக்கேடும் கெடட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்குமா என்பதுதான் எமது ஆதங்கமாக இருக்க வேண்டுமே ஒழிய, ரிசார்ட் எமக்கு செய்த கெடுதலுக்கு அவர் எக்கேடும் கெடட்டும். 

அவர் செய்த கெடுதலுக்கான தண்டனையை அல்லா கொடுப்பார்.

நாம், எமக்குரிய, மனிதாபிமானத்துடன் எழுதவாவது செய்வோம். 

ஏனெனில் அவர் இந்த சிக்கலில் இருந்து மீண்டு அரசியலுக்கு வருவது கடினம் என்றே நினைக்கிறேன். 🤔

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அவர் செய்த கெடுதலுக்கான தண்டனையை அல்லா கொடுப்பார்.

நாம், எமக்குரிய, மனிதாபிமானத்துடன் எழுதவாவது செய்வோம். 

ஏனெனில் அவர் இந்த சிக்கலில் இருந்து மீண்டு அரசியலுக்கு வருவது கடினம் என்றே நினைக்கிறேன். 🤔

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். வராமல் விட்டால் மன்னார் பக்கம் மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அவர் செய்த கெடுதலுக்கான தண்டனையை அல்லா கொடுப்பார்.

நாம், எமக்குரிய, மனிதாபிமானத்துடன் எழுதவாவது செய்வோம். 

ஏனெனில் அவர் இந்த சிக்கலில் இருந்து மீண்டு அரசியலுக்கு வருவது கடினம் என்றே நினைக்கிறேன். 🤔

இலங்கை கட்டிட நிர்மாணத்துறை அமைப்பின் Chairman  ஆக வருவதற்கான தகுதியை அவர் தற்சமயம் அடைந்திருக்கிறார்.

விரைவில் தகவல் எதிர்பார்க்கலாம் ...... 

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட் பதியுதீனின்... வீட்டில் நடந்த,
இந்த  தமிழ்ச்  சிறுமி மீதான பாலியல் வன்கொடுமையும், தீயிட்டு கொன்றதும்...

ஒரு தமிழ் அரசியல் வாதியின்  வீட்டில்... முஸ்லீம் சிறுமிக்கு நடந்திருந்தால்,
காத்தான் குடியிலிருந்து... காலி முகத்திடல் வரை... ஊர்வலம் போய் எதிர்ப்பு காட்டியிருப்பார்கள்.

நாம தான்.... அவர் மறியலில் இருந்த போது, நடந்தது... 
என்று அனுதாபம் காட்டிக் கொண்டு இருக்கின்றோம்.
குழந்தை தொழிலாளியை.... வீட்டில் வேலைக்கு எடுத்த, 
றிசாட் பதியுதீனும்...  இதற்கு பொறுப்பாளி ஆவார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மலையக சிறுமியின் மரணம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு!

மலையக சிறுமியின் மரணம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு!

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸாருடன் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமியை கடந்த வருடம் டயகம பிரதேசத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு வேலைக்கு அழைத்துச் சென்ற நபரிடம் இன்று வாக்குமூலம் பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறுமியின் தாய் மற்றும் ரிசாட் பதியுதீனின் மனைவியினது தந்தை ஆகியோரிடமும் நேற்று மேலதிக வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1229334

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாத் வீட்டிலிருந்த சிறுமி உயிரிழப்பு விவகாரம்; பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானமை பிரேத பரிசோதனையில் உறுதி

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு பணிப்பெண்ணாக பணிபுரிந்து தீக் காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

rishat.jpg

ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு பணிப்பெண்ணாக பணிபுரிந்து தீக்காயகங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி தொடர்பான விசாரணைகளை பொரளை பொலிஸாருடன் இணைந்து கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

குறித்த சிறுமியை பணிக்கு அழைத்து வந்த நபரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. மேலும் உயிரிழந்த சிறுமியின் தாய் மற்றும் ரிஷாத் பதியுதீனுடைய மனைவியின் தந்தை , தாய் ஆகியோரிடம் நேற்று வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

https://www.virakesari.lk/article/109652

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

ரிஷாட் பதியுதீனின்... வீட்டில் நடந்த,
இந்த  தமிழ்ச்  சிறுமி மீதான பாலியல் வன்கொடுமையும், தீயிட்டு கொன்றதும்...

ஒரு தமிழ் அரசியல் வாதியின்  வீட்டில்... முஸ்லீம் சிறுமிக்கு நடந்திருந்தால்,
காத்தான் குடியிலிருந்து... காலி முகத்திடல் வரை... ஊர்வலம் போய் எதிர்ப்பு காட்டியிருப்பார்கள்.

நாம தான்.... அவர் மறியலில் இருந்த போது, நடந்தது... 
என்று அனுதாபம் காட்டிக் கொண்டு இருக்கின்றோம்.
குழந்தை தொழிலாளியை.... வீட்டில் வேலைக்கு எடுத்த, 
றிசாட் பதியுதீனும்...  இதற்கு பொறுப்பாளி ஆவார்.

உங்கள் ஆதங்கம் புரிகிறது....

மனிதர் வெளியில் இருந்தால்.... போட்டுத்தாக்கலாம்.

அவரும் உள்ளுக்கு.... குடும்பமோ சிக்கலில்.... அந்த ஒரு கோணத்தில் ஒரு அனுதாபம் வருகிறது.

அதனை தவிர்த்து பார்க்கும் போது, பெண்ணும், பெண்ணின் குடும்பமும் மிகப்பெரும் அனுதாபத்துக்கு உரியவர்கள்.

மேலும், மலையக பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் இன்னும் தொடர்கிறதே... அந்த அப்பாவி பெண்ணுக்கு, தாய், தந்தை பாதுகாப்பு இல்லாத நிலையிலும் வேறு வீட்டில் அநியாயம் நிகழ்ந்துள்ளது.

ரிஷாட்டின் மனைவியின் தந்தை, அதாவது, மாமனார் தான் வீட்டில் இருந்த இன்னுமொரு ஆண் என்ற ரீதியில், பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டுள்ளார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

உங்கள் ஆதங்கம் புரிகிறது....

மனிதர் வெளியில் இருந்தால்.... போட்டுத்தாக்கலாம்.

அவரும் உள்ளுக்கு.... குடும்பமோ சிக்கலில்.... அந்த ஒரு கோணத்தில் ஒரு அனுதாபம் வருகிறது.

அதனை தவிர்த்து பார்க்கும் போது, பெண்ணும், பெண்ணின் குடும்பமும் மிகப்பெரும் அனுதாபத்துக்கு உரியவர்கள்.

மேலும், மலையக பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் இன்னும் தொடர்கிறதே... அந்த அப்பாவி பெண்ணுக்கு, தாய், தந்தை பாதுகாப்பு இல்லாத நிலையிலும் வேறு வீட்டில் அநியாயம் நிகழ்ந்துள்ளது.

ரிஷாட்டின் மனைவியின் தந்தை, அதாவது, மாமனார் தான் வீட்டில் இருந்த இன்னுமொரு ஆண் என்ற ரீதியில், பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டுள்ளார்.

நீங்கள் எப்படிப்பட்டவராய் இருப்பீர்கள் என்பது இப்படியான உங்கள் கருத்துக்களை பார்க்கும் போது தெரிகிறது .ஒரு சிறுமி பாலியல் வன்புணர்வுக்காகி கொலை செய்யப்பட்டு இருக்கிறால்..ஒரு குடும்பமே சேர்ந்து ஒரு சிறுமியை துடிக்க ,துடிக்க  எரித்து கொலை செய்து இருக்கிறார்கள் 
  .   நீங்கள் றிசாத்திற்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் . அனுதாபப்படுகிறீர்கள்.
அந்த சிறுமி நாட் பட்ட பாலியல் வன்புணவுக்காளாகி இருக்கிறால் என வைத்திய அறிக்கை கூறுகிறது .
அதை விட ஒரு  தமிழனாய் இருந்து கொண்டு, மன்னாரில் எவ்வளவு தமிழ் காணிகளை இவர் ஆட்டையை போட்டு இருப்பார் இருவருக்கு பரிதாபம் பார்க்க உங்களால் எப்படி முடியுது?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

ஒரு  தமிழனாய் இருந்து கொண்டு

கேள்வியின் அடிப்படை பிழை என்றால் வரும் அத்தனை பதில்களும் பிழையாகவே இருக்கும்.

 

ஒரு பாராளுமன்ற உறுப்பினர்  18 வயதுக்கு மேற்பட்ட ஒருவரை வேலைக்கு அமர்த்தி சம்பளம் கொடுக்க முடியாமல் ஒரு 16 வயது சிறுமியை வேலைக்கு அமர்த்தி இருக்கின்றார் என்பதை நம்பமுடியாது.   கண்டிப்பாக மோசமான உள் நோக்கத்துடன் தான் அவர் வேலைக்கு அமர்த்தி இருப்பார். அத்துடன் அச் சிறுமி 16 வயதுக்கும் குறைவானவராக இருக்க சந்தர்ப்பங்களும் அதிகம். வயது குறைந்தவர்களை வேலைக்கு அனுப்பும் முகவர்கள் அனேகமான சந்தர்ப்பங்களில் வயதை குறைத்தே சொல்வர்.

அரசியலில் அறம் இல்லாத ஒருவர் தன் வாழ்க்கையிலும் அறத்தை பேணியிருக்க சந்தர்ப்பங்கள் இல்லை. 

கொலைக் குற்றவாளிக்கு மன்னிப்பு கொடுத்து உயர் பதவிக்கு நியமிக்கும் அரசு ஆட்சியில் இருக்கும் நாட்டில் சிறுமிகளை பாலியலுக்கு பெற்றோரே விற்பதும் பாராளுமன்ற உறுப்பினர் சிறுமிகளை பாலியல் தேவைகளுக்காக வேலைக்கு அமர்த்துவதும் நிகழத்தான் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நீங்கள் எப்படிப்பட்டவராய் இருப்பீர்கள் என்பது இப்படியான உங்கள் கருத்துக்களை பார்க்கும் போது தெரிகிறது .ஒரு சிறுமி பாலியல் வன்புணர்வுக்காகி கொலை செய்யப்பட்டு இருக்கிறால்..ஒரு குடும்பமே சேர்ந்து ஒரு சிறுமியை துடிக்க ,துடிக்க  எரித்து கொலை செய்து இருக்கிறார்கள் 
  .   நீங்கள் றிசாத்திற்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் . அனுதாபப்படுகிறீர்கள்.
அந்த சிறுமி நாட் பட்ட பாலியல் வன்புணவுக்காளாகி இருக்கிறால் என வைத்திய அறிக்கை கூறுகிறது .
அதை விட ஒரு  தமிழனாய் இருந்து கொண்டு, மன்னாரில் எவ்வளவு தமிழ் காணிகளை இவர் ஆட்டையை போட்டு இருப்பார் இருவருக்கு பரிதாபம் பார்க்க உங்களால் எப்படி முடியுது?

நீஙகள் சொல்வதை ஏற்றுக்கொள்ளவதில் தயக்கமில்லை.

மேலே சொல்லியபடி, மிக கடுமையாக இங்கே இந்த மனிதர் அரசியல் குறித்து கண்டித்து எழுதி இருக்கிறேன் என்பதால், நடந்த விடயம் கேள்வி்ப்பட்ட, அவர் தீடீர் இதய நோயால் வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டதால், சிறு அனுதாபமே, அவ்வாறு எழுத வைத்திருக்கலாம். அது நடிப்பாக இருக்க முடியாது. காரணம், சிறையில் நடந்தது.

என்னைப் பொறுத்த வரை, அவர் இந்த சட்ட சிக்கலில் இருந்து மீள்வது கடினம், ஆகவே நாம் திட்டுவதால் ஆகப்போவது எதுவும் இல்லை.

இன்னும் தெளிவாக சொல்வதானால், செத்த அல்ல செத்துக் கொண்டிருக்கும் (விச) ஜந்தை மேலும் தாக்குவது அறமன்று என நினைத்தேன். அது தவறான பார்வை என்று நீஙகள் சொல்னால், மறுக்கப் போவதில்லை.

எனது பார்வை எப்படி இருந்தது என்றால், ஒருவர் வேலையில் பிசியாக இருக்கிறார். மிக முக்கிய தகவல் போனில் வந்தால், என்ன வேலையாயினும் அப்படியே போட்டுவிட்டு ஓடுவார் அல்லவா. இந்த மனிதருக்கு அப்படி தகவல் வந்த போது, ஓடமுடியாத சிறையில்.... பரிதவிப்பு..... இதய தாக்குதல்... வைத்தியசாலை....

இந்த ஓட முடியாத பரிதவி்ப்பை, ஒரு முறை நிலக்கீழ் இரயில் 55 நிமிடம் சிக்கிய போது உணர்ந்தேன். அந்த பீதி தந்த உணர்வே வந்தது, அதுவே சிறு அநுதாபத்துக்கு காரணமாக இருக்கலாம்.

Put yourself in the other person’s shoes and see, என்பார்கள். மனிதம் உணர்வுகளால் ஆனது. அதை தான் மேலே சொன்னேன். அவர் அரசியல் செயல்பாடு தவறு, ஆனாலும் அவரது இன்றைய பரிதவிப்பு, அவரது எதிரிகளுக்கு கூட வரக்கூடாது.

அந்த தங்கைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறுமிகளை.. பெண்களை பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்துவதும் கொலை செய்வதும்.. இந்த முஸ்லிம் கும்பல்களுக்கு புதிதல்லவே.

செம்மணி படுகொலை புகழ் கிருசாந்தி குமாரசாமி முதல் பலரை இந்த இஸ்லாமிய கடும்போக்கு பயங்கரவாத முஸ்லிம்காடைகள் கொன்றிருக்கிறார்கள். அவர்களின் வழியில் வந்தவர் தான் இந்த ரிசாட்டும்.. இப்ப சுருதி மாற்றி வாசிச்சாலும். 

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா ரதி சரியான கண்டணங்களை தெரிவித்திருக்கிறீர்கள்.என்னிடம் விருப்பு புள்ளிகள் முடிவடைந்து விட்டன.

**

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் இந்தப் படுகொலைக்கு இலங்கையில் நீதி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகி நிற்கின்றது .
அதைவிட ஒரு அரசியல்வாதியின் குடும்பம்  இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் நிலைமையை  இன்னும் மோசமாக்கலாம்.

இரு தரப்பினராலும் அரசியல் பழிவாங்கல் என்னும் போர்வையில்
சிறுமியின் இழப்பை  அரசியலாக்கி விடுவார்கள்.

நீதி கேட்பவர்கள் கையில் தான் சிறுமியின் மரணத்திற்கான தண்டனை தங்கியுள்ளது.


வருத்தமான செய்தி. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

எனது பார்வை எப்படி இருந்தது என்றால், ஒருவர் வேலையில் பிசியாக இருக்கிறார். மிக முக்கிய தகவல் போனில் வந்தால், என்ன வேலையாயினும் அப்படியே போட்டுவிட்டு ஓடுவார் அல்லவா. இந்த மனிதருக்கு அப்படி தகவல் வந்த போது, ஓடமுடியாத சிறையில்.... பரிதவிப்பு..... இதய தாக்குதல்... வைத்தியசாலை....

சில சமயங்களில் உங்களுடைய logic விளங்கமுடிவதில்லை..

நீங்கள் நிலக்கீழ் இரயில் 55 நிமிடங்கள் பரிதவித்து இருந்தீர்கள் ஏனென்றால் உங்களை நம்பி வீட்டில் இருப்பவர்களுக்காக - it’s pure and genuine concern 

ஆனால் ரிசாட் போன்றவர்களுக்கு வரும் இந்த heart attack.. ஜயோ குற்றம் செய்த குடும்ப உறுப்பினர் காப்பாற்றமுடியவில்லை என்பதாகவே இருக்கும்.. it’s not pure concern.. 

நீங்கள் இந்த இடத்தில் உங்களது பரிதவிப்பையும் ரிசாட் போன்றவர்களின் பரிதவிப்பையும் ஒன்றாக கருத்தினால் அது உங்கள் மீதான அபிப்பிராயத்தைத்தான் குறைக்கும்.. 

மனிதாபிமானம் இருப்பதில் தவறில்லை, ஆனால் இந்த இடத்தில் உங்களது மனிதாபிமான உணர்வு சரியா தெரியவில்லை

please don’t point out the quote  “Put yourself into other’s shoes”.. in this situation.. it’s not right 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

மலையக சிறுமியின் மரணம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு!

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த 16 வயது மலையகச் சிறுமியின் மரணம் – நீதிமன்றின் உத்தரவு

மலையகச் சிறுமியின் மரணம் குறித்த சம்பவத்தில் சிலரின் தொலைபேசி உரையாடல் தொடர்பான தரவுகளை பொலிஸாருக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது.

இதன்போது சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மேலும் 3 பேருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல் தொடர்பான தரவுகளையும், குறித்த சிறுமியை பணிக்கு அமர்த்திய முகவரின் வங்கி பணப்பரிமாற்ற விபரங்களையும் பொரளை பொலிஸாருக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸாருடன் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1229559

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

ஒருவர் வேலையில் பிசியாக இருக்கிறார். மிக முக்கிய தகவல் போனில் வந்தால், என்ன வேலையாயினும் அப்படியே போட்டுவிட்டு ஓடுவார் அல்லவா. இந்த மனிதருக்கு அப்படி தகவல் வந்த போது, ஓடமுடியாத சிறையில்.... பரிதவிப்பு..... இதய தாக்குதல்... வைத்தியசாலை....

போனில் ஒரு தகவல் வந்தால்.... அந்தத் தகவல் முக்கிய தகவலா! அன்றிச் சாதாரண தகவலா!! என்பதைப்  போனை எடுத்துக் கேட்பதற்குமுன்னரே தெரியப்படுத்தும் தொழில் நுட்பம் கொண்ட போன்கள் எங்கே விற்கப்படுகின்றன? அதன் விலை என்ன.??   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.