Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கண்ணதாசன் விடுதலை-வவுனியா மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணதாசன் விடுதலை-வவுனியா மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

DSC00306 கண்ணதாசன் விடுதலை-வவுனியா மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற வழக்கிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


 

 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, பலவந்தமாக ஆள்களைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டு, 2017ஆம் ஆண்டு அவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்தத் தண்டனையை எதிர்த்து க.கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேன்முறையீட்டு மனு மீது விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், 2020 ஜூலை 22ஆம் திகதி அவரது ஆயுள் தண்டனையை இரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுக்க அனுமதியளித்திருந்தது.


 
இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இ. கண்ணன் முன்னிலையில் இன்று  அழைக்கப்பட்டது. இதன்போது வழக்குத் தொடுனரான சட்டமா அதிபர் சார்பில், குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய அரச சட்டவாதி விண்ணப்பம் செய்தார். அதற்கு எதிரான வாதங்களை கண்ணதாசன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்தனர்.

இதன்போது இந்த வழக்கில் மேலதிக சாட்சிகள் இன்மையால் வழக்கை நிறுத்திக் கொள்வதாக அரச சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் விரிவுரையாளர் கண்ணதாசன் அத்தனை குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கில்  முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ. சுமந்திரன், ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போது, ஏற்கனவே வவுனியா மேல்நீதிமன்றம் அவரை குற்றவாளியாக கண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மேற்முறையிடு ஒன்று செய்திருந்தோம்.


 
அதில் கடந்த வருடம் கொடுக்கப்பட்ட தீர்ப்பு தவறானது என்று அந்த தீர்ப்பும் தண்டணையும் புறமொதுக்கப்பட்டன. ஆனாலும் சட்டமா அதிபர் ஒரு மீள் விசாரணை நடாத்துவதற்கான உரித்தை நீதிமன்றிலே தக்கவைத்திருந்தார். ஆதலால் அந்த தீர்ப்பு புறமொதுக்கப்பட்ட பின்னர் கண்ணதாசன் தனது பணியினை மேற்கொண்டு வந்திருந்தார்.

திரும்பவும் அந்த வழக்கினை விசாரிப்பதற்காக இன்று நீதிமன்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த வகையில் அரச தரப்பு அவருக்கெதிரான குற்றப்பகிர்வு பத்திரிகையை திருத்துவதற்கு நீதிமன்ற அனுமதியினை கோரியிருந்தனர். அப்படியிருந்த நிலையில் ஒரு மீள் விளக்கத்திற்கு மாத்திரம் தங்களது வழக்கை தக்கவைத்த சட்டமா அதிபர் வேறொரு குற்றத்திற்காக அவரை விசாரணை செய்ய முடியாது என்ற வாதத்தை முன்வைத்து நாம் ஆட்சேபனங்களை தெரிவித்தோம்.


 
இரு தரப்பினதும் வாதங்களை செவிமடுத்த நீதிபதி, குற்றப்பகர்வு பத்திரத்தை திருத்தமுடியாது என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவு கொடுக்கப்பட்ட பின்னரே அரசு தரப்பு இதற்கு மேல் அவர் மீது சாட்சியங்களை முன்வைப்பதற்கு சாத்தியம் இல்லை வழக்கை இதோடு நிறுத்திக்கொள்கிறோம் என்று அறிவித்தனர்.

இதன்பேரில் அவர் அத்தனை குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்து நீதிபதி  உத்தரவிட்டார்” என்றார்.

 

 

https://www.ilakku.org/jaffna-university-lecturer-acquittal-from-forced-ltte-recruitment-charges/

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

விரிவுரையாளர் கண்ணதாசனின் விடுதலைக்காக உழைத்த எல்லோருக்கும் பாராட்டுக்கள்.

இதே மாதிரி சிறையில் வாடும் அரசியல் கைதிகளுக்காகவும் வாதாட முன்வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.......!   

  • கருத்துக்கள உறவுகள்

சும் செய்த உருப்படியான வேலைகளில் ஒன்று ....சந்தோசம் 
 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

அரசு தரப்பு இதற்கு மேல் அவர் மீது சாட்சியங்களை முன்வைப்பதற்கு சாத்தியம் இல்லை வழக்கை இதோடு நிறுத்திக்கொள்கிறோம் என்று அறிவித்தனர்.

நினைத்த நேரத்தில் ஒருவரை கைது செய்வதும், வழக்கு தாக்கல் செய்வதும், பின்னர் மீளப்பெறுவதும், அவர்களின் எதிர்காலத்தை வீணடிப்பதுவும் இவர்களுக்கு விளையாட்டாக போய்விட்டது. பாதிக்கப்பட்ட்டவருக்கு தகுந்த நஷ்ட ஈடு பெற்றுக்கொடுப்பதன் முலமே இவ்வாறான சொறிச்சேட்டைகள் குறைய வாய்ப்பிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

பாதிக்கப்பட்ட்டவருக்கு தகுந்த நஷ்ட ஈடு பெற்றுக்கொடுப்பதன் முலமே இவ்வாறான சொறிச்சேட்டைகள் குறைய வாய்ப்பிருக்கு.

உதுகளுக்காகத் தானே பயங்கரவாத தடைச் சட்டத்தை கையிலே வைத்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி. எமது விடுதலை போராட்டத்தில் அவருடைய குடும்பம் இழந்தவை அநேகம், அவருடைய தங்கை கூட ஒரு மாவீரர். 
அம்மாவின் ஆக்கினை காரணமாக சிறிது காலம் கண்ணதாசன் சேரிடம் மிருதங்கம் கற்று இருந்தேன். மிகவும் பண்பானவர், எனக்கு சங்கீத ஞானம் சுத்த சூனியம், அப்படி இருந்தும் எனக்கு மிருதங்கம் கற்பிக்க மிகவும் பிரயாசைப்பட்டார்.
 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

சும் செய்த உருப்படியான வேலைகளில் ஒன்று ....சந்தோசம் 

சரியான..... உண்மை, ரதி.

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றம் விட்டாலும் ஆட்சியாளர்களும் அவர்களின் ஒட்டுக்குழு வால்பிடிகளும் விடனுமே. அவைக்கு எப்ப ஆதாயமோ அப்ப தானே விடுவினம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சரியான..... உண்மை, ரதி.

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் சுமந்திரனுக்கே.

ஆனாலும் ஒரு இனத்தைக் கொலைசெய்தவர்களுக்கும், கொள்ளையடித்தவர்களுக்கும் சார்பாகச் செயல்படுவதானது அதிகமாகத் தூற்றல் செய்யவே சொல்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.