-
Tell a friend
-
Topics
-
Posts
-
முந்தாநாள் கூட ஓபிஎஸ் அவர் வென்று மத்திய அமைச்சர் ஆவது பற்றி ஏதோ சொல்லியிருந்தார். சேர்க்கை சரியில்லை...... சுத்திவர நிற்கின்ற நாலு பேர்கள் 'நீங்கள் அமைச்சர் ஆயிடுவீங்க, அண்ணே....' என்று சொல்லியிருப்பார்கள் போல.
-
மோடி எதிர்பார்த்த தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகக் கூடும் என்கிறது பிபிசி?. காங்கிரஸ் ஆட்சி வர வாய்ப்பிருக்கிறதா? வந்தால் இலங்கையில் சந்தி சந்தியாக வைத்த சிலையையெல்லாம் அகற்ற வேண்டி வருமோ😎?
-
22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) - 1ம் இடம் எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 8 புள்ளிகள் 2)கிருபன் - 8 புள்ளிகள் 3)வாத்தியார் - 8 புள்ளிகள் 4)goshan_che - 6 புள்ளிகள் 5)பாலபத்ர ஓனாண்டி - 6 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 6 புள்ளிகள் 7)ஈழப்பிரியன் - 6 புள்ளிகள் 8)தமிழ்சிறி - 6 புள்ளிகள் 9)கந்தையா57 - 6 புள்ளிகள் 10)நுணாவிலான் - 6 புள்ளிகள் 11)பிரபா - 6 புள்ளிகள் 12)புலவர் - 6 புள்ளிகள் 13)சுவி - 4 புள்ளிகள்
-
பகுதியளவில் சரியான அவதானிப்பு. ஆனால், ட்ரம்ப் ஜனாதிபதியானாலும் கூட மாநில வழக்குகளின் தீர்ப்பில் இருந்து மன்னிப்புப் பெற (தனக்குத் தானே pardon வழங்கிக் கொள்ள) முடியாது. இதனால் தான் இந்த நியூ யோர்க் தீர்ப்பும், ஜோர்ஜியாவின் மாநில வழக்கும் முக்கியமாகப் பார்க்கப் படுகின்றன. ஆனால், தீர்ப்புகளால் அவருக்காகத் "தீக்குளிக்கக் காத்திருக்கும் அடிப்பொடிகள்" அவருக்கு வாக்களிக்காமல் விடப் போவதில்லை. நடு நிலையாக இருக்கும் (படித்தோர், பெண்கள், இளையோர், நம்மைப் போன்ற லிபரல் குடியேறிகள்) ஆட்களின் வாக்குகளைத் தான் ட்ரம்ப் இழப்பார். பென்சில்வேனியா, கொலராடோ போன்ற ஊசலாடும் (swing) மாநிலங்களில் இது நிகழ்ந்தால், தோல்வி வரலாம். எனவே தான், சேர்த்த காசு வெற்றியைத் தீர்மானிக்கும் பாரிய காரணியல்ல. எந்தக் குழுவின் வாக்குகளை தீர்ப்புகள் பாதிக்கும் என்பது தான் காரணியாக இருக்கும். அடுத்த 4 வருடங்களில் பைடனுக்கு ஏதாவது ஆனால், அடுத்த நிலையில் இருக்கும் கமலா ஜனாதிபதியாக வந்து விடுவார் என்ற அச்சம் இருக்கிறதல்லவா? அந்த அச்சம் உண்மையில் பெண் வெறுப்பும், நிறவாதமும் கலந்த துவேஷத்தின் வெளிப்பாடு. இந்த துவேஷம் எங்கள் ஆசிய வம்சாவளி அமெரிக்கர்களிடையேயும் இருப்பது தான் ஆச்சரியமான விடயம். இது தவறு தான் என்றாலும், நீலக்கட்சி இதைக் கணக்கிலெடுத்திருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம்.
-
முழுமையான வர்த்தமானி அறிவித்தல் தமிழில் ஆங்கிலத்தில்
-
-
Our picks
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts