Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக 15 இலங்கையர்கள் மீது இந்தியாவில் குற்றப்பத்திரம் தாக்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக 15 இலங்கையர்கள் மீது இந்தியாவில் குற்றப்பத்திரம் தாக்கல்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு 15 இலங்கையர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் இந்த கடந்த மார்ச் 25ஆம் திகதி அரபிக்கடலில் மீன்பிடிக் கப்பலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.இதன்போது, அவர்களிடமிருந்து போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் சென்னையில் அகதியாக வசித்து வந்த மற்றொரு பிரதிவாதியான சற்குணம் இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாதுகாப்புப் படையில் உறுப்பினராக இருந்ததாகவும் அம்முகவரகம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த கூட்டங்களில் இவர்கள் கலந்துகொண்டதாகவும் இந்தியாவிலும் இலங்கையிலும் அதன் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றதாகவும் இலங்கைக்கு எதிராகப் போரில் ஈடுபட்டதாகவும் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மேலும் இரு நாடுகளிலும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் பயங்கரவாத செயல்களை புரிய தயார்படுத்துவதற்கும் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய புலனாய்வு முகவரகம் தெரிவித்துள்ளது.இதேவேளை இந்தியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட 15 பேருக்கு எதிராகவே இவ்வாறு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.(15)
 

http://www.samakalam.com/புலிகள்-அமைப்பை-மீள்-உரு/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் செய்தி ? 

  • கருத்துக்கள உறவுகள்

 அங்குவாழும் கொஞ்சநஞ்ச தமிழ்ச்சனத்தையும் ஆழிப்பதுக்கு இந்தியாக்காரன் பிளான் போடுறான் .

  • கருத்துக்கள உறவுகள்

றோ ஏதாவது தாக்குதலை சிறிலங்காவுக்கு செய்து புலிகளின் மேல் பழியை போடவும் தயங்காது. சிறிலங்காவை வெருட்ட வேறு வழிகள்  இந்தியாவுக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பிடிபட்ட 15 பேரும் சிங்கள வர்கள் அவர்கள்தான் புலிகளை மீள உருவாக்கினம் கேட்கவே சிரிப்பாய் இருக்குது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முயன்றதாக சிங்களவர்கள் உள்ளிட்ட 15 பேர் மீது குற்றப்பத்திரம் தாக்கல்!

விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முயன்றதாக சிங்களவர்கள் உள்ளிட்ட 15 பேர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியாவிற்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது

செய்யப்பட்ட 15 இலங்கையர்கள் மீது தேசிய புலனாய்வுப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு புத்துயிரூட்ட முயற்சித்ததாகவும், இலங்கைக்கு எதிராக போரில் ஈடுபட்டதாகவும் கூறியே இவர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி அரபிக்கடலில் மீன்பிடிக் கப்பலில் ஒன்றிலிருந்து கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் இலங்கையின் குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திலிருந்து ரவிஹன்சி என்ற மீன்பிடிக் கப்பலில் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் 300 கிலோ ஹெரோயின் மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக கொச்சியில் உள்ள முகவரகத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.வை.நந்தன, ஜனக தேசப்பிரிய, நமேஷ் சுல்லக்க செனரத், திலங்க மதுஷான் ரணசிங்க, தடல்லகே நிஸ்ஸங்க, ஏ.சுரேஷ் ராஜ், எல்.வை.நிஷாந்த சுத்தா, ஏ.ரமேஷ், சற்குணம் ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலராவர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் ஈரான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கொள்வனவு செய்து கடல் வழியாக இலங்கைக்கும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கும் கொண்டு சென்றுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த கூட்டங்களில் இவர்கள் கலந்து கொண்டதாகவும், இந்தியாவிலும் இலங்கையிலும் அதன் செயல்பாடுகளை முன்னெடுத்துச் சென்றதாகவும், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகப் போரில் ஈடுபட்டதாகவும் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஏ.ரமேஷ், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெருந்தொகையாக நிதியையும் சொத்துக்களையும் சேகரித்துள்ளார்.

இரு நாடுகளிலும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் பயங்கரவாத செயல்களை புரிய தயார்படுத்துவதற்கும் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய புலனாய்வு முகவரகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அகதியாக வசித்து வந்த மற்றொரு பிரதிவாதியான சற்குணம், இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்புப் படையில் உறுப்பினராக இருந்ததாகவும் அம்முகவரகம் குறிப்பிட்டுள்ளது.
received_263394369109421.jpeg?6bfec1&6bf

received_340375077499420.jpeg?6bfec1&6bf

received_305791644761464.jpeg?6bfec1&6bf

received_955182115088112-1.jpeg?6bfec1&6

 

https://www.meenagam.com/விடுதலைப்-புலிகளை-மீளுரு/

  • கருத்துக்கள உறவுகள்

இது ஈழத்தின் வடக்கே.. சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஹிந்தியா மேற்கொள்ளும் ஒரு வெற்றிகர நடவடிக்கையாகும். 

போக்கடா.. போக்கத்தப் பயலுகளா. 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

பிடிபட்ட 15 பேரும் சிங்கள வர்கள் அவர்கள்தான் புலிகளை மீள உருவாக்கினம் கேட்கவே சிரிப்பாய் இருக்குது .

தமிழ்ப் புலி, நோர்வே புலி, வெள்ளைப் புலி மாதிரி…. இது சிங்களப் புலி. ஹா.. ஹா…. ஹா…. 🤣🤣🤣🤣🤣 🐆 🐅

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

எல்.வை.நந்தன, ஜனக தேசப்பிரிய, நமேஷ் சுல்லக்க செனரத், திலங்க மதுஷான் ரணசிங்க, தடல்லகே நிஸ்ஸங்க, ஏ.சுரேஷ் ராஜ், எல்.வை.நிஷாந்த சுத்தா, ஏ.ரமேஷ், சற்குணம் ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலராவர்.

 

வேணும் எண்டே சிங்களவரை பிடித்து வழக்கு போட்டு இலங்கைக்கு செய்தி சொல்கிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு பெரிய நாடு.

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுச் சடடிக்குள் குதிரை ஓடும் இந்தியா.

  • கருத்துக்கள உறவுகள்

15 சிங்களவர்களும் நம்பிக்கைய கை விடாதிங்க, நாங்க இருக்கோம்.... போர்..... ஆமாம் போர்...😂😂

  • கருத்துக்கள உறவுகள்

பல மாதங்களுக்கு முன்னரே இலங்கையிலிருந்து கேரளாவுக்கு போதை பொருள் கடத்தி வந்த  சிங்களவர்களை ஏகே துப்பாக்கிகளுடன் கேரள கடற்பரப்பில் கைது செய்ததாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வந்தன, இப்போது அவர்களை புலிகள் மீளுருவாக்கும் படையணியில் சேர்த்திருக்கிறார்கள்.

போரினாலும் அரசியல் எதிர்காலத்தினாலும் பொருளாதாரத்தாலும் பேரழிவை சந்தித்துவிட்ட தமிழர்களே மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை மீளுருவாக்க நினைக்காத தற்கால கட்டத்தில் சிங்களவர்கள் ஏன் உருவாக்கபோகிறார்கள் என்று யாராவது கேட்கமாட்டார்களா?

12 hours ago, கிருபன் said:

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் ஈரான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கொள்வனவு செய்து கடல் வழியாக இலங்கைக்கும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கும் கொண்டு சென்றுள்ளனர்.

புலிகளை அழிக்க இலங்கைக்கு ஈரானும் உதவி செய்தது இந்தியாவும் உதவி செய்தது பாகிஸ்தானும் உதவி செய்தது, இந்த நிலையில் ஹெரோயினை சின்ன படகில் ஏத்தி நாலைஞ்சு ஏகே துப்பாக்கிகளையும் வைத்துக்கொண்டு இலங்கையின் மிக நெருங்கிய இந்த மூண்டு நாடுகளுக்கிடையிலும் வெட்டியோடி புலிகளை மீளுருவாக்க முடியுமா என்று யாரும் கேட்கமாட்டார்களா?

சரி அதைதான் எவரும் கேட்கமாட்டார்கள் என்று வைத்துக்கொண்டாலும், இலங்கையில் புலிகளை மீளுருவாக்க நினைத்த அவர்கள் இலங்கை கொண்டுபோய் சேர்த்த ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் எதுக்கு இலங்கையிலிருந்து மறுபடியும் இந்தியாவுக்கு கடத்த போகிறார்கள் இதுக்கு பேசாமல் பருத்தி குடோன்லயே இருந்திருக்கலாமே என்று யாரும் கேட்கமாட்டார்களா?

முழுக்க முழுக்க ஒரு போதைபொருள் கடத்தல் கும்பலின் கைது நடவடிக்கையை இலங்கையின் வடக்கில் சீன பிரசன்னத்தை அனுமதித்த இலங்கை அரசை மிரட்ட  அப்படியே புலிகளின் மீளுருவாக்கம் என்று திரைகதை வசனம் எழுதி உருட்டிவிடும்  இந்திய உளவுபிரிவுகளின் செயற்பாட்டை பார்த்து இதுக்கு பேசாமல் நாலு தெருவில பிச்சை எடுக்கலாம் என்று யாராவது கேட்கமாட்டார்களா?

யாரும் கேட்கமாட்டார்கள், ஏனென்றால் இதே கேள்வியை காலம் காலமாக எத்தனை தடவைதான் இந்திய அரசை கேட்பது என்று பேசாமல் விட்டுவிடுவார்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.