Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள இனவெறி - உண்மை நிலை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

எந்த நிக்ழ்விலும் யாரும் துண்டு பிரசுரம் கொடுக்கலாம், அதில் தவ்றில்லை.  கூற வந்த விடயம் என்னவென்றால் சிங்களவர்களைப்போலவே தமிழர்களுக்கும் இனவாதமுண்டு, இஸ்லாமியர்களிடமும் உண்டு. அனைவரும் தவறு செய்தவர்கள்தான், ஆனால் அனைவரும் தவறுகளை ஏற்றுகொள்ள முன்வருவதில்லை.

 

நடு நிலையாக சரியான கருத்தை தெரிவித்துள்ளீர்கள். இவ்வாறு நடுநிலையாக கருத்து தெரிவிக்கு துணிவு வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு விதத்தில் நன்மை, அவர் வெளிப்படையாக செய்கிறார். அவ்வளவு பாதிப்பு இல்லை, உடனடி ஆத்திரம், ஏமாற்றம் போன்றவற்றை தவிர.

அனால், சிங்கள கல்விமான்கள், புத்தி ஜீவிகள், மற்றும் திறமை மற்றும் புலமை  சார் கூட்டம், நிறுவன இயக்குனர்கள்   போன்றவர்கள் செய்யும், திட்டமிட்ட தமிழர்களின் பூர்விகத்தை துடைத்து எறிவது எனும் வேலை திட்டத்தை உணர்ந்தால், சிங்களவரில் அப்படி செய்யாத அப்பாவிக்சல் இருப்பினும், முழு சிங்கள இனத்தையும் துடைத்து அழிக்க  வேண் டும் எனும் எண்ணமே வரும்.

மற்றது, ஹிந்தியா எந்த விதத்தில் தடுத்தாலும் சுதந்த்திர அரசு தமிழருக்கு அமைய வேண்டும் என்பதில் தமிழரின் நீண்ட காலா குறி விட்டுப் போகாது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவர் வேறு ஒரு விடையமாக ஒழுங்கு செய்த ஒரு எதிர்ப்பு / கண்டன பேரணியில் வேறொருவர் வேறொரு விடையமான துண்டு பிரசுரங்களை அனுமதி பெறாமல் வழங்குவது எந்த விதத்தில் நியாயமானது?  இது அவர்களின் நோக்கத்தை மற்றவர்கள் திசை மாற்றுவது போன்றதொரு செயல்.
நானாக அதில் இருந்தாலும் அதைத்தான் செய்வேன்

Edited by Sabesh

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இன்று தமிழர் நாம் படும் அவஸ்த்தைக்கு நம் முன்னோர்களே காரணம் என்பேன்.

மலையகத் தமிழரை அன்று திருப்பி அனுப்புவதை நாம் எல்லோரும் சேர்ந்து எதிர்த்து இருந்தால் இன்று இலங்கை சனத்தொகையில் 40 வீதம் தமிழர் இருந்திருப்போம்.

ஒரு நாள் மலையகத் தமிழரை  நாடற்றவர்கள் ஆக்கி கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பும் வீடியோ ஒன்று பார்த்தேன். ஒரு வயசு போன அம்மா தேம்பித் தேம்பி அழுறா.. அந்தக் கண்ணீர் வலிமிகுந்தது..தலைமுறை தாண்டியும் காவு வாங்கும் சக்தி கொண்டது.

எத்தனை வீட்டு  வேலை செய்த மலையக பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் அன்று இறந்து இருப்பார்கள்? இறந்த மகளின் உடலை வாங்க வர பணமில்லாமல் வாழ்ந்து செத்த பெற்றோரின் கண்ணீற்கு என்னை விடை?

இது சம்பந்தமாக ஓரளவுக்கேனும் நாம் யோசிப்பதில்லை, மனம் கசப்பதும் இல்லை.இலகுவாக வேறு ஒருவர் தவறு என்று கடந்து போய் விடுகின்றோம்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

காலம் எங்களுக்கு அதிகாரத்தையும் அந்தஸ்தையும் கொடுத்தபொழுது, அதை எங்கள் சமூகத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களை நசுக்க பயன்படுத்தினோமேயன்றி  அவர்களை தூக்கி விட  என்றும் நாங்கள் நினைத்ததில்லை. 

இவ்வளவத்தையும் செய்து விட்டு இப்பொழுது குத்துதே குடையுதே என்றால்..

 

 

 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பகிடி said:

இலங்கையில் இன்று தமிழர் நாம் படும் அவஸ்த்தைக்கு நம் முன்னோர்களே காரணம் என்பேன்.

மலையகத் தமிழரை அன்று திருப்பி அனுப்புவதை நாம் எல்லோரும் சேர்ந்து எதிர்த்து இருந்தால் இன்று இலங்கை சனத்தொகையில் 40 வீதம் தமிழர் இருந்திருப்போம்.

ஒரு நாள் மலையகத் தமிழரை  நாடற்றவர்கள் ஆக்கி கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பும் வீடியோ ஒன்று பார்த்தேன். ஒரு வயசு போன அம்மா தேம்பித் தேம்பி அழுறா.. அந்தக் கண்ணீர் வலிமிகுந்தது..தலைமுறை தாண்டியும் காவு வாங்கும் சக்தி கொண்டது.

எத்தனை வீட்டு வேலைக்கு வேலை செய்த மலையக பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் அன்று இறந்து இருப்பார்கள்? இறந்த உடலை வாங்க வர பணமில்லாமல் வாழ்ந்து செத்த பெற்றோரின் கண்ணீற்கு என்னை விடை?

இது சம்பந்தமாக ஓரளவுக்கேனும் நாம் யோசிப்பதில்லை, மனம் கசப்பதும் இல்லை.இலகுவாக வேறு ஒருவர் தவறு என்று கடந்து போய் விடுகின்றோம்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

காலம் எங்களுக்கு அதிகாரத்தையும் அந்தஸ்தையும் கொடுத்தபொழுது, அதை எங்கள் சமூகத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களை நசுக்க பயன்படுத்தினோமேயன்றி  அவர்களை தூக்கி விட  என்றும் நாங்கள் நினைத்ததில்லை. 

இவ்வளவத்தையும் செய்து விட்டு இப்பொழுது குத்துதே குடையுதே என்றால்..

 

 

 

எங்கள்  முன்னோர் என்ற எடுபட்ட  கூட்டத்தால் நாம் இப்படி நாடு நாடாய் அலையிரம் அந்த ஆறு லட்சம் மக்களின்  கண்ணீர்தான் இப்படி அலைக்கழிக்குது இந்த உண்மையை யாழ்ப்பானியம் மேட்டுக்குடிகள் என்பவர்கள்  என்று உணருகினமோ  அன்றுதான் எமக்கு  விடிவு .

சும்மா சொல்லக்கூடாது எம்மை  அடிமையாக்கிய பிரிடிஷ் காரனுக்கு சண்டை பிளேன் வாங்கி கொடுத்து பெருமை தேடும் ஆட்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, vasee said:

எந்த நிக்ழ்விலும் யாரும் துண்டு பிரசுரம் கொடுக்கலாம், அதில் தவ்றில்லை.  கூற வந்த விடயம் என்னவென்றால் சிங்களவர்களைப்போலவே தமிழர்களுக்கும் இனவாதமுண்டு, இஸ்லாமியர்களிடமும் உண்டு. அனைவரும் தவறு செய்தவர்கள்தான், ஆனால் அனைவரும் தவறுகளை ஏற்றுகொள்ள முன்வருவதில்லை.

ஈழத்தமிழர் கேட்டது சம உரிமை. தன்னின சுதந்திரம். வேறொன்றுமில்லை.ஈழத்தமிழர்கள் இனக்கலவரம் செய்யவில்லை.தனித்தமிழ் என்றும் கூறவில்லை. சிங்கள மக்களுடன் சேர்ந்தே வாழ விரும்பினார்கள்.

பக்கா இனவாதம் என்றால் முஸ்லீம் மக்களிடம் மட்டுமே உள்ளது. அவர்களுக்கு என்ன பிரச்சனை என இதுவரைக்கும் நானறியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எங்கள்  முன்னோர் என்ற எடுபட்ட  கூட்டத்தால் நாம் இப்படி நாடு நாடாய் அலையிரம் அந்த ஆறு லட்சம் மக்களின்  கண்ணீர்தான் இப்படி அலைக்கழிக்குது இந்த உண்மையை யாழ்ப்பானியம் மேட்டுக்குடிகள் என்பவர்கள்  என்று உணருகினமோ  அன்றுதான் எமக்கு  விடிவு .

சும்மா சொல்லக்கூடாது எம்மை  அடிமையாக்கிய பிரிடிஷ் காரனுக்கு சண்டை பிளேன் வாங்கி கொடுத்து பெருமை தேடும் ஆட்கள் .

சரி தான் ஆனால் இதில் யாழ்ப்பாண மேட்டுக்குடி என்று ஒரு தரப்பாரை மட்டும் வைவது தவறு.. எல்லாரும் மலையக தமிழரை பார்த்த பார்வையில் தவறு இருக்கின்றது 

  • கருத்துக்கள உறவுகள்+

 

Image

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sabesh said:

இன்னொருவர் வேறு ஒரு விடையமாக ஒழுங்கு செய்த ஒரு எதிர்ப்பு / கண்டன பேரணியில் வேறொருவர் வேறொரு விடையமான துண்டு பிரசுரங்களை அனுமதி பெறாமல் வழங்குவது எந்த விதத்தில் நியாயமானது?  இது அவர்களின் நோக்கத்தை மற்றவர்கள் திசை மாற்றுவது போன்றதொரு செயல்.
நானாக அதில் இருந்தாலும் அதைத்தான் செய்வேன்

  ராஜபக்ஷ்ஸாக்கள் பதவி விலகவேண்டும் என்று ஒழுங்கு செய்த பேரணியில் அவர்களுக்கு அதற்கான காரணங்கள் இருந்ததுபோலவே தமிழருக்கும் அவர்கள் பதவி விலகவேண்டும் என்பதற்கு பலமான காரணங்கள் உண்டு. காரணங்கள் வேறாக இருந்தாலும் அவர்கள் பதவி விலகவேண்டும் என்பதில் இருபகுதியும் குறியாய் உள்ளது. இதில் இவருக்கு என்ன வந்தது? இருக்கட்டும், புலம்பெயர்ந்தோர் இனவாத அரசால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துரைக்கும் பேரணிகளில் நுழைந்து, குழப்பி, ஆர்ப்பாட்டம் செய்யும் போது மட்டும் உங்களுக்கு அது சரியென தோன்றுமோ? அப்போ ஏன் நீங்கள் இந்த காரணத்தை கூறவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களிடம் மதவாத வெறி மிகவும் மோசமாக இருக்கிறது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Sabesh said:

இன்னொருவர் வேறு ஒரு விடையமாக ஒழுங்கு செய்த ஒரு எதிர்ப்பு / கண்டன பேரணியில் வேறொருவர் வேறொரு விடையமான துண்டு பிரசுரங்களை அனுமதி பெறாமல் வழங்குவது எந்த விதத்தில் நியாயமானது?  இது அவர்களின் நோக்கத்தை மற்றவர்கள் திசை மாற்றுவது போன்றதொரு செயல்.
நானாக அதில் இருந்தாலும் அதைத்தான் செய்வேன்

கோட்டா கோகம விலேயே இரு போராட்டங்களும் ஒன்றாக நடக்கும்போது அவுஸில் நடப்பதில் என்ன சிக்கல்.
இதிலிருந்து தெரிவதென்ன??

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Eppothum Thamizhan said:

கோட்டா கோகம விலேயே இரு போராட்டங்களும் ஒன்றாக நடக்கும்போது

கோட்டா கோகமவில் இரு போராட்டங்கள் ஒன்றாக நடந்தனவா? பெற்றோல் இல்லை காஸ் இல்லை மின்சாரம் இல்லை ராசபக்சே குடும்பம் நாட்டை கொள்ளை அடித்துவிட்டார்கள் அவர்கள் போய் நல்ல ஒரு தலைவர் இலங்கைக்கு வேண்டும் என்று தானே அதில் பங்கு பற்றிய தமிழர்களும் சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பகிடி said:

எல்லாரும் மலையக தமிழரை பார்த்த பார்வையில் தவறு இருக்கின்றது

மிகவும் சிறுபான்மை இருந்தது, அவர்களை சக உறவுகளாக மதித்தது.

எனது சகோதரம்,  நான் எனக்கு அறியாத குழந்தை பருவத்தில் இருந்து வளர்ந்தது, வளர்க்கப்பட்டது ஓர் மலைநாட்டு தமிழ் பெண்ணால். 

அவரை முதலில் வேலைக்காரி என்று தான் வந்தார் என்றும், பின் குடும்பத்தில் ஒருவராகி விட்டார் என்றும் அறிந்தேன்.

அவர் எம்மை விட்டு போகும் போது, அன்றைய நிலையில் 50,000 (அப்போது அந்த தொகையில் யாழில் காணி வாங்க கூடிய பெறுமதி இருந்தது) அவருக்காக எனது பெற்றோரால் சேமிக்கப்பட்டு, வட்டியில்  இடப்பட்டு கொடுத்ததாக அறிந்தேன். இது அவரின் சம்பளத்தை விட.

சிலகாலம் பின், தனது குடும்பத்தோடு என்னையம், குடும்பத்தையும் பார்ப்பதற்கு வந்தார்.

1995 அழிவுக்கு முதல்,   அவர் எம்முடன் வாழ்ந்த பொது எடுக்கப்பட்ட படங்கள் (Black & White), குடும்பமாகவே எமது குடும்ப அல்பத்தில்  இருந்தது. 

அனால், அந்த வயதில் அவரை வேளைக்கு அமர்த்தியது சரியா, பிழையா என்பதை அந்தக் கால வாழ்க்கை முறையும், அவர்களின் பொருளாதாரமும் தீர்மானித்து இருக்கும்.  

வேறு எவர் அப்படி வந்து இருந்தாலும், அநேகமாக எனது குடும்பத்தில் இப்படி நடந்து இருபதற்கே வாய்ப்புகள்.  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.