Jump to content

கோட்ட பதவி துறப்பு, நாளை கூடுகிறது பாராளுமன்றம், ஏழ நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்வு- சபாநாயகர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் குதித்தார் டலஸ் அழகபெரும (நாதம் நாதம் லுக் ஹியர்😆).

https://www.newsfirst.lk/2022/07/15/dullas-ready-to-contest-for-vacant-post-of-president/

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

மூன்று  தமிழர்கள்.. பிரதமர் பதவிக்கு, போட்டியிடுவது சிறப்பான விடயம். 😜 சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் தான்...   போட்டி இறுக்கமாக இருக்கும் போல் உள்ளது. 🤣 சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி

Nathamuni

யாரு அடுத்து தேர்வாவார் என்பது குறித்த கருத்தாடல்கள், இன்று இலங்கை நேரம் மாலை மூன்று மணிக்கு யாழ் தளத்தில் ஆரம்பமாகும் என்பதை இத்தால் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 👍   1. Ranil 2. Sajith

goshan_che

ராஜபக்சேக்கள் யாரை விரும்புகிறார்களோ அவரே வெல்லகூடும். இது ரணில் அல்லது டலஸ் என நினைக்கிறேன்.   அவர் Sumanthiran எல்லோ அவசரத்தில ஆரோ எண்டு கடந்து போட்டன்😆 சும்மா சுமந்திரன் மட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

https://www.newswire.lk/2022/07/15/slpp-decides-to-vote-for-ranils-presidency-in-parliament/

மொட்டு கட்சி ரணிலை ஆதரிக்கும்!

கங்கிராட்ஸ் நாதம் @Nathamuni😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரியார் வெல்லுவார். காரணம்:

1. இந்திய, மேலை நாடுகள் அழுத்தம்
2. மொட்டுவின் தேர்வு, மகிந்தா ஆதரவு
3. கூட்டமைப்பு, முஸ்லீம் கட்சிகள், இதொக, மற்றும் இதர தமிழ் கட்சிகள் ஆதரவு
4. பிரதமர் பதவி தருகிறேன் எண்டால், சஜித், கட்சி ஆதரவு வரும். ஏனெனில், அவர் ஜனாதிபதியாக போதிய பலம் இல்லை. மேலும், அங்கிருப்பவர்கள் அனைவரும் முன்னாள் ஐதேக காரர்கள். தமது ஆள், ஜனாதிபதியாகும் சந்தர்ப்பத்தை விடமாட்டார்கள்.
5. ஆதரவு தரும் கட்சிக்களுக்கு அமைச்சரவையில் இடம் எண்டால், டக்ளஸ் ஆதரவும் உண்டு.

😜

39 minutes ago, goshan_che said:

https://www.newswire.lk/2022/07/15/slpp-decides-to-vote-for-ranils-presidency-in-parliament/

மொட்டு கட்சி ரணிலை ஆதரிக்கும்!

கங்கிராட்ஸ் நாதம் @Nathamuni😆

 

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

நரியார் வெல்லுவார். காரணம்:

1. இந்திய, மேலை நாடுகள் அழுத்தம்
2. மொட்டுவின் தேர்வு, மகிந்தா ஆதரவு
3. கூட்டமைப்பு, முஸ்லீம் கட்சிகள், இதொக, மற்றும் இதர தமிழ் கட்சிகள் ஆதரவு
4. பிரதமர் பதவி தருகிறேன் எண்டால், சஜித், கட்சி ஆதரவு வரும். ஏனெனில், அவர் ஜனாதிபதியாக போதிய பலம் இல்லை. மேலும், அங்கிருப்பவர்கள் அனைவரும் முன்னாள் ஐதேக காரர்கள். தமது ஆள், ஜனாதிபதியாகும் சந்தர்ப்பத்தை விடமாட்டார்கள்.
5. ஆதரவு தரும் கட்சிக்களுக்கு அமைச்சரவையில் இடம் எண்டால், டக்ளஸ் ஆதரவும் உண்டு.

😜

 

மொட்டு பலமே போதும் ரணில் வெல்ல. நான் நினைக்கவில்லை ஐதேக, சுயாதீன குழு, கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்கும் என. ஆனால் சொல்லமுடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

மொட்டு பலமே போதும் ரணில் வெல்ல. நான் நினைக்கவில்லை ஐதேக, சுயாதீன குழு, கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்கும் என. ஆனால் சொல்லமுடியாது. 

ரணில் இன்று வரை, கோத்தா போகவேண்டும் எண்டு, சொல்லியிருக்கவில்லை. ஆனால், கட்சிக்குள்ள இருந்து கொண்டு டல்லஸ் சொல்லிப்போட்டார். அதால மகிந்த, நமால் இரண்டு முக்கிய மொட்டு எம்பிமாரை கடுப்பேத்திப்போட்டார் 😁

இரண்டாவது விருப்பு வாக்குவில் ரணில் வெல்வார். அதாவது சஜித்துக்கு போடும் ஆட்கள், ரணிலுக்கு இரண்டாவது விருப்பு வாக்கு போடுவர். சஜித் வெல்லார். ஆகவே செக்கன் ரவுண்டு போகும் போது.... ரணில் எகிறுவார். 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ரணில் இன்று வரை, கோத்தா போகவேண்டும் எண்டு, சொல்லியிருக்கவில்லை. ஆனால், கட்சிக்குள்ள இருந்து கொண்டு டல்லஸ் சொல்லிப்போட்டார். அதால மகிந்த, நமால் இரண்டு முக்கிய மொட்டு எம்பிமாரை கடுப்பேத்திப்போட்டார் 😁

இது ரகசிய வாக்கெடுப்பாக நடந்தால் - பல திடீர் திருப்பங்களும் வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இது ரகசிய வாக்கெடுப்பாக நடந்தால் - பல திடீர் திருப்பங்களும் வரலாம்.

ரகசிய வாக்கெடுப்புதானே 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரனிலை உலகம் ஆதரித்தால் நாமும் ஏற்கத்தன் வேணும்.ஏன் என்றால் அவர்கள் தான் தீர்வைத் தர வேணும்.சோறு உட்பட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இது ரகசிய வாக்கெடுப்பாக நடந்தால் - பல திடீர் திருப்பங்களும் வரலாம்.

எல்லாவற்றுக்கும் மேலே..... ரணில் அரசியலில் என்ன செய்வார் என்பதை விடுவோம்.....

அந்த மனிதரின்..... மிக நீண்டகால விடாமுயற்சி ஏதோ ஒரு வகையில் கை கூடிவருவது மகிழ்வுக்குரியது.

Winners never quit and quitters never win !!

போன தேர்தலில் கைகழுவி விடப்பட்ட, இழக்க ஏதுமில்லா ஒருவர். வீட்டையும் கொழுத்தியாச்சு.

ஆக.... இங்கே ஒருவர் சொன்னது போல, மயிரைக் கட்டி மலையை இழுத்தால், வந்தா மலை... போனா மயிர்.

மலை.... அரைவாசி வந்துட்டுது.... இன்னும் கொஞ்சம் தான்... ஓரே இழுவை..... நரியார். ம்...ம்ம்...

இந்த வகையில் மட்டுமே நான் பார்கிறேனே அன்றி, அவர் செய்த, செய்யக்கூடிய அரசியலை வைத்தல்ல என்பதை சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.😁

பிறகு ஏன் சம்பந்தருக்கு ஆதரவு கொடுக்கேல்ல என்று கேட்கிறேல்ல.😜

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, சுவைப்பிரியன் said:

ரனிலை உலகம் ஆதரித்தால் நாமும் ஏற்கத்தன் வேணும்.ஏன் என்றால் அவர்கள் தான் தீர்வைத் தர வேணும்.சோறு உட்பட.

நியாயமான கருத்துத்தான். 

ஆனால் (மேற்கு) உலகம் ரணில் பின்னால் நிற்கிறதா அல்லது அவர் அப்படி பாவ்லா காட்டுகிறாரா?

ஏனென்றால் இப்படி என்றால் அமெரிக்கா கூட்டமைபுக்கு ஒரு சமிக்ஞையாவது கொடுத்திருக்கும் அவர்களும் நல்லாட்ட்சி காலம் போல ரணிலுக்கு முண்டு கொடுத்திருப்பார்கள்.

ஆனால் இப்போ ரணிலோடு முறுக்கி கொண்டு அல்லவா நிற்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

எல்லாவற்றுக்கும் மேலே..... ரணில் அரசியலில் என்ன செய்வார் என்பதை விடுவோம்.....

அந்த மனிதரின்..... மிக நீண்டகால விடாமுயற்சி ஏதோ ஒரு வகையில் கை கூடிவருவது மகிழ்வுக்குரியது.

Winners never quit and quitters never win !!

இது விடா முயற்சி என்பதை நான் ஏற்றுகொண்டாலும், இதற்காக நாட்டை, கட்சியை, வீட்டை, ஏனையோர் உயிரை, வாழ்வாதாரத்தை, தனது கொள்கைகளை விலையாக கொடுத்த இந்த வெற்றி - pyrrhic victory யாகவே எனக்கு படுகிறது.

சிலவேளை முழு அதிகாரம் கைக்கு வந்தபின் சில அற்புதமான செயல்களை கேற்கொண்டு ரணில் வரலாற்றில் தன் பெயரை காப்பாற்றி கொள்ளக்கூடும்.

அப்படி இல்லாமல் தொடர்ந்தும் மொட்டு கட்சியின் கைபொம்மையாக ரணில் இருப்பாராயின், நாடு ஒரு முக்கிய சந்தியில் நின்றபோது தனது அதிகார பசிக்காக நாட்டை தவறானோர் வழியில் கொண்டு போய், பதவிக்கு “பின்கதவால்” வந்த ஒருவர் - என்றே வரலாறு இவரை நினைவில் கொள்ளும்.

அது மட்டும் இல்லாமல் - இனி எடுக்கப்படகூடிய மிக கடுமையான, மக்களின் நலனை பாதிக்க கூடிய முடிவுகள் (அரச வேலை குறைப்பு, ஜனசக்தி குறைப்ப்பு) கூட ரணில் என்கிற “பின் கதவு” ஜனாதிபதியால் எடுக்கப்படும் போது அது நிச்சயம் விமர்சனத்துக்கு, அவருக்கு அதை எடுக்கும் அதிகாரம் உள்ளதா என்பது கேள்விக்கு உள்ளாகும்.

தந்தையை உயிரோடு சுவரில் வைத்து சாந்து பூசிய மன்னன், பிரதானி மகனை உரலில் இட்டு வதைத்தவன், போத்துகேயரின் கைப்பாவையாய் இருந்தவன் என பலரை நெடிய இலங்கை வரலாறு நியாபகம் வைப்பது போல் ரணிலையும் வைக்க கூடும்.

 

https://en.m.wikipedia.org/wiki/Pyrrhic_victory

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

இது விடா முயற்சி என்பதை நான் ஏற்றுகொண்டாலும், இதற்காக நாட்டை, கட்சியை, வீட்டை, ஏனையோர் உயிரை, வாழ்வாதாரத்தை, தனது கொள்கைகளை விலையாக கொடுத்த இந்த வெற்றி - pyrrhic victory யாகவே எனக்கு படுகிறது.

சிலவேளை முழு அதிகாரம் கைக்கு வந்தபின் சில அற்புதமான செயல்களை கேற்கொண்டு ரணில் வரலாற்றில் தன் பெயரை காப்பாற்றி கொள்ளக்கூடும்.

அப்படி இல்லாமல் தொடர்ந்தும் மொட்டு கட்சியின் கைபொம்மையாக ரணில் இருப்பாராயின், நாடு ஒரு முக்கிய சந்தியில் நின்றபோது தனது அதிகார பசிக்காக நாட்டை தவறானோர் வழியில் கொண்டு போய், பதவிக்கு “பின்கதவால்” வந்த ஒருவர் - என்றே வரலாறு இவரை நினைவில் கொள்ளும்.

அது மட்டும் இல்லாமல் - இனி எடுக்கப்படகூடிய மிக கடுமையான, மக்களின் நலனை பாதிக்க கூடிய முடிவுகள் (அரச வேலை குறைப்பு, ஜனசக்தி குறைப்ப்பு) கூட ரணில் என்கிற “பின் கதவு” ஜனாதிபதியால் எடுக்கப்படும் போது அது நிச்சயம் விமர்சனத்துக்கு, அவருக்கு அதை எடுக்கும் அதிகாரம் உள்ளதா என்பது கேள்விக்கு உள்ளாகும்.

தந்தையை உயிரோடு சுவரில் வைத்து சாந்து பூசிய மன்னன், பிரதானி மகனை உரலில் இட்டு வதைத்தவன், போத்துகேயரின் கைப்பாவையாய் இருந்தவன் என பலரை நெடிய இலங்கை வரலாறு நியாபகம் வைப்பது போல் ரணிலையும் வைக்க கூடும்.

 

https://en.m.wikipedia.org/wiki/Pyrrhic_victory

இதையும் குறித்து வைத்துக் கொள்ளுங்க.

இல்லானை இல்லாலும் வேண்டாள், ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்.....

இல்லாத இலங்கையை ஈழத்தமிழனும் வேண்டான், தினவெடுத்துத் திரிந்த சிங்களவனும் வேண்டான்.

ரணில் பொருளாதாரப் போரில் வெல்லாவிடில் அவரே ஒன்றினைந்த இலங்கை.ின் கடைசி ஜனாதிபதி ஆக இருப்பார்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இதையும் குறித்து வைத்துக் கொள்ளுங்க.

இல்லானை இல்லாலும் வேண்டாள், ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்.....

இல்லாத இலங்கையை ஈழத்தமிழனும் வேண்டான், தினவெடுத்துத் திரிந்த சிங்களவனும் வேண்டான்.

ரணில் பொருளாதாரப் போரில் வெல்லாவிடில் அவரே ஒன்றினைந்த இலங்கை.ின் கடைசி ஜனாதிபதி ஆக இருப்பார்.

அப்படி எண்டால் எல்லாரும் ஹேப்பிதானே.

ஆனால் இவர் இலங்கையை மேலும் “பூரண ஆயுசு நித்திய கண்டம்” என இழுத்தபடி, இன ஒடுக்குமுறையை நுணுக்கமாக, வெளியில் தெரியாமல் தொடர்ந்த படி -ராஜபக்சேக்களின் நீட்சியாக கொண்டு சென்று, தேவையான சூழ்நிலையை ஏற்படுத்தி, லகானை நாமலின் கையில் கொடுக்கவே வாய்புகள் அதிகம்.

முன்பே சொன்னது போல - இதில் எவர் வெல்லுவது எமக்கு நல்லம் என என்னால் ஊகிக்க முடியாதிருந்தாலும், ரணிலின் வருகை எமக்கு நல்லது என என் மனதுக்கு படவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

முன்பே சொன்னது போல - இதில் எவர் வெல்லுவது எமக்கு நல்லம் என என்னால் ஊகிக்க முடியாதிருந்தாலும், ரணிலின் வருகை எமக்கு நல்லது என என் மனதுக்கு படவில்லை.

ஒரு முறை சந்திரிகா ஒத்தைக்கண்ணை காட்டி இவர் வெற்றியினை பறித்தார். மறுமுறை... பகிஸ்கரிப்பு.... 

ஆக அவருக்கு உள்ள வழியே இந்த பின்கதவு தான்.

ஜேர் ஜெயவர்த்தனே ஜானதிபதி பதவிக்கு வந்தபோது வயது 73. ரணிலுக்கும் அதே வயது தான்.

அதே போல, அவர் பொருளாதாரப் போரில் வெல்வாராயின், அடுத்த தேர்தலில், மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

இனப்பிரச்சனையும் தீர்த்தால் சிறுபான்மையினரும் வாக்களிப்பார்கள்.

****

தெரிந்த பிசாசு, தெரியாத பேயிலும் பார்க்க நல்லது.

ரணில் என்ன செய்தாலும், எமக்குரிய பாரிய நம்பிக்கை, நாட்டின் இன்றய பொருளாதார நிலைமை.

அதனை மீறி, பழைய இனவாத அரசியல், தினாவெட்டு அரசியல் வேலைக்காகாது என்று பல சிங்களவர்களுக்கு புரிந்திருக்கும்.

வயிரு காஞ்சா.... தலைக் கொழுப்பு இறங்கும்..

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா.. மைத்திரிபால சிறிசேனாவை விட்டு விட்டீர்களே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை புதிய ஜனாதிபதி தெரிவு ; விசேட பாராளுமன்ற அமர்வு நாளை

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பினை எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை நடத்த கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்ப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் 2ஆவது இலக்கத்திற்கமைய ஜனாதிபதி தெரிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 4ஆவது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றம் நாளை (16) காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

1981 ஆம் 2ஆவது இலக்க ஜனாதிபதி தெரிவு (விசேட ஏற்பாடுகள்)சட்டத்தின் 4ஆவது உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியதை தொடர்ந்து மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.

அதற்கமைய 5ஆவது உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளது என்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாராளுமன்றத்திற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பார். நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் முன்னர் தீர்மானித்ததற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி வாக்கெடுப்பின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் 19ஆம் திகதி வேட்பு மனுக்கல் கோரப்பட்டு,எதிர்வரும் 20ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) வாக்கெடுப்பின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு இடம்பெறும். 

ஜனநாயக வரைபிற்குள் சபை நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் சகல உறுப்பினர்களும் செயற்பட வேண்டும் என சபாநாயகர் கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

புதன்கிழமை புதிய ஜனாதிபதி தெரிவு ; விசேட பாராளுமன்ற அமர்வு நாளை | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கட்சிகள் தமிழர் அரசியல்தீர்வை வலியுறுத்தி வேட்பாளர்களுடன் 19ம திகதிக்குமுதல் பேசவேண்டும்.ஒருவரும் எழுத்துமூலமான உறுதிமொழி கொடுக்காவிடில் தமிழ்க்கட்சிகள் தங்களில் ஒருவரை அடையாளத்துக்காக நிறுத்தி தமிழர்அரசியல் தீர்வை முன்னிறுத்தி அவருக்கு வாக்களிக்க வேண்டும்.இது உடனடி வெற்றியைத் தராது.ஆனால் தமிழர்கள் பிரச்சினை வேறு சிங்களவர்பிரச்சினை வேறு என்பதை உலகத்திற்கு உணர்த்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஒரு முறை சந்திரிகா ஒத்தைக்கண்ணை காட்டி இவர் வெற்றியினை பறித்தார். மறுமுறை... பகிஸ்கரிப்பு.... 

ஆக அவருக்கு உள்ள வழியே இந்த பின்கதவு தான்.

ஜேர் ஜெயவர்த்தனே ஜானதிபதி பதவிக்கு வந்தபோது வயது 73. ரணிலுக்கும் அதே வயது தான்.

அதே போல, அவர் பொருளாதாரப் போரில் வெல்வாராயின், அடுத்த தேர்தலில், மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

இனப்பிரச்சனையும் தீர்த்தால் சிறுபான்மையினரும் வாக்களிப்பார்கள்.

****

தெரிந்த பிசாசு, தெரியாத பேயிலும் பார்க்க நல்லது.

ரணில் என்ன செய்தாலும், எமக்குரிய பாரிய நம்பிக்கை, நாட்டின் இன்றய பொருளாதார நிலைமை.

அதனை மீறி, பழைய இனவாத அரசியல், தினாவெட்டு அரசியல் வேலைக்காகாது என்று பல சிங்களவர்களுக்கு புரிந்திருக்கும்.

வயிரு காஞ்சா.... தலைக் கொழுப்பு இறங்கும்..

ரணிலுடன் நாம் இராஜதந்திர சண்டை இட்டு இருக்கவேண்டியது 2005ல். தலைவர் கட்டி எழுப்பிய இராணுவ பலம், பாலா அண்ணையின் மதிநுட்பம் என்ற இரெட்டை துப்பாக்கி எம்மிடம் இருந்த போது.

சிவாஜி, விக்கி, சித்தரையே டீல் பண்ண முடியாத ஆட்கள் சம் & சும். கஜே & கஜே பக்சேகளுக்கு ஆபத்து என்றதும் இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள் 🤣.

நீங்கள் சொல்வது போல பொருளாதாரம் அப்படி எமக்கு கைகொடாது. ரணில் இதை ஒரு வர்க்க போராட்டமாக ஏலவே மாற்ற தொடங்கி விட்டார். இனி நாடு மொத்தமாக தாளவும் மாட்டாது மீளவும் மாட்டாது என்ற நிலையில், வர்க அரசியல், இனவாத அரசியலை தூண்டியபடி - சேவை வழமைக்கு திரும்பி விடும் என்றே படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, புலவர் said:

தமிழ்க்கட்சிகள் தமிழர் அரசியல்தீர்வை வலியுறுத்தி வேட்பாளர்களுடன் 19ம திகதிக்குமுதல் பேசவேண்டும்.ஒருவரும் எழுத்துமூலமான உறுதிமொழி கொடுக்காவிடில் தமிழ்க்கட்சிகள் தங்களில் ஒருவரை அடையாளத்துக்காக நிறுத்தி தமிழர்அரசியல் தீர்வை முன்னிறுத்தி அவருக்கு வாக்களிக்க வேண்டும்.இது உடனடி வெற்றியைத் தராது.ஆனால் தமிழர்கள் பிரச்சினை வேறு சிங்களவர்பிரச்சினை வேறு என்பதை உலகத்திற்கு உணர்த்தும்.

வழமையாக நான் தமிழர் ஜனாதிபதி தேர்தலில் தனியே நிற்பதை எதிர்ப்பவன். 

ஆனால் இந்த முறை ஒரு பெரிய ஆபத்து ரணில் மூலம் வருகிறது. அதுதான் இலங்கையில் இப்போ இருப்பது மிகபெரிய வர்க/பொருளாதார முரண் என்ற தோற்றப்பாடு.

இதன் மூலம் இன ஒழிப்பு, யுத்த குற்றம் மட்டும் அல்ல, காணி பறிப்பு, அரசியல் தீர்வு எல்லாமே அடிபட்டு போய்விட்டது.

இங்கே தப்பி ஓடியது கோட்டா மட்டும் அல்ல, இலங்கையின் பொறுப்புகூறலும்தான்.

ஏலவே பலர் சொன்னது போல பாண் பருப்பை கண்டதும் எம்மை மறந்து பைலா போட போய்கொண்டிருக்கிறார்கள்😆.

ஆகவே எமது மிக அடிப்படையான கோரிக்கைகளை முன்வைத்து, எமது பிரச்சனை தனிதுவமானது என காட்டி - அதை ஏற்போருக்கே எமது வாக்கு அல்லது தமிழ் வேட்பாளருக்கு என சொல்வது நல்ல வழியாகவே படுகிறது.

கூடவே பொறுப்புகூறல் நாட்டுக்கு தொடர்கிறது என்பதை வலியிறுத்தவும் வேண்டும். 

ஆனால்,

சிலவேளை ரகசிய வாக்கெடுப்பில் எதிர்கட்சி பொது வேட்பாளர் வெல்ல கூடிய ஒரு நிலை இருந்தால் - இப்படி செய்வது அதை பாதிக்காதா?

பிகு

தமிழ் தலைவர்கள் நீங்கள் சொன்ன வழியை சீந்தவும் மாட்டார்கள் (தனிப்பட்ட காரணங்களுக்காக). ஆனால் ஒரு கேள்விக்காக கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people sitting, people standing and suit

13.05.2022

May be an image of 3 people, people sitting, people standing and suit

14.07.2022

ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டிச்சாம்.  😂
-ஜனாதிபதியின் செயலாளர், காமினி சேனாரத்... மைண்ட்  வாய்ஸ்.- 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, புலவர் said:

தமிழ்க்கட்சிகள் தமிழர் அரசியல்தீர்வை வலியுறுத்தி வேட்பாளர்களுடன் 19ம திகதிக்குமுதல் பேசவேண்டும்.ஒருவரும் எழுத்துமூலமான உறுதிமொழி கொடுக்காவிடில் தமிழ்க்கட்சிகள் தங்களில் ஒருவரை அடையாளத்துக்காக நிறுத்தி தமிழர்அரசியல் தீர்வை முன்னிறுத்தி அவருக்கு வாக்களிக்க வேண்டும்.இது உடனடி வெற்றியைத் தராது.ஆனால் தமிழர்கள் பிரச்சினை வேறு சிங்களவர்பிரச்சினை வேறு என்பதை உலகத்திற்கு உணர்த்தும்.

இதனை ஒருங்கிணைந்து ஒரு அடையாள நடவடிக்கையாகச் செயற்படுத்தக்கூடிய  தலைவர்கள் யாராவது தமிழர் தரப்பில் இருக்கிறார்களா? உதயசூரியனாகி..... வீடாகி..... சையிக்கிளாகி.... இப்போது கான்ரில் ஒரு பக்கமாகவும் கரியர் ஒருபக்கமாகவும்  போய்கிடக்கிறது எப்படியிவர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people, people sitting, people standing and suit

13.05.2022

May be an image of 3 people, people sitting, people standing and suit

14.07.2022

ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டிச்சாம்.  😂
-ஜனாதிபதியின் செயலாளர், காமினி சேனாரத்... மைண்ட்  வாய்ஸ்.- 🤣

நரியின் மைன்ட் வொய்ஸ்; இது இன்னும் எத்தனை நாளைக்கோ தெரியாது. கடவுளே...என்ர வாழ்நாள் கனவை நனவாக்கப்பா ....🤣

 

😉

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

யாரு அடுத்து தேர்வாவார் என்பது குறித்த கருத்தாடல்கள், இன்று இலங்கை நேரம் மாலை மூன்று மணிக்கு யாழ் தளத்தில் ஆரம்பமாகும் என்பதை இத்தால் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 👍
 

1. Ranil

2. Sajith

3. Sarath

4. Dullas 

5. Peris

6. Sampakka

7. Ratna Siri Thera

8. Harsha de Silva

9. Anura Kumara Disanayaka

10. Sumandren

11. Sambander

12. Dammikka Perera

13. Speaker Yappa

14. Namal Rajapakse 

15. Douglas Devananda

 

ரணில் வருவார், சஜித் உடன் போட்டியாக இருக்கும், டலஸ் இற்கு ஆதரவு கிடைப்பது கடினம் என்று நினைக்கிறேன். சுமந்திரன், சம்பந்தர் போன்றோருக்கு உண்மையிலேயே போட்டி போடும் எண்ணம் உள்ளதா?

Edited by நீர்வேலியான்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நீர்வேலியான் said:

ரணில் வருவார், சஜித் உடன் போட்டியாக இருக்கும், டலஸ் இற்கு ஆதரவு கிடைப்பது கடினம் என்று நினைக்கிறேன்.

அறிய வருவது என்னென்டால், மொட்டுக்கட்சீக்குள், நம்ம ஆளு டல்லஸ் அல்லது வேறு ஒரு நம்மாளை போடலாம் தானே என்று பெரும் அமளிதுமளி.
 

பெரிசு மகிந்தா சூமீலை வந்து.. வீட்டோ பண்ணி..... ரணில் தான் எண்டுட்டாராம்..... நான் ஏன் சும்மா இருக்கிறன் எண்டு நிணைக்கிறீர்கள்? 

நாம கட்சிய காப்பாத்த வேண்டுமென்றா.... கம்மெண்டு இருக்க வேணும்...... நாடு இருக்ககிற நிலையில் சும்மா அலம்பறை பண்ணி அடிவாங்க கூடாது.... எண்டு ஓவ் பண்ணிப் போட்டாராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நியாயமான கருத்துத்தான். 

ஆனால் (மேற்கு) உலகம் ரணில் பின்னால் நிற்கிறதா அல்லது அவர் அப்படி பாவ்லா காட்டுகிறாரா?

ஏனென்றால் இப்படி என்றால் அமெரிக்கா கூட்டமைபுக்கு ஒரு சமிக்ஞையாவது கொடுத்திருக்கும் அவர்களும் நல்லாட்ட்சி காலம் போல ரணிலுக்கு முண்டு கொடுத்திருப்பார்கள்.

ஆனால் இப்போ ரணிலோடு முறுக்கி கொண்டு அல்லவா நிற்கிறார்கள்?

கூத்தமைப்பு பம்முகிறது. தங்கட சனத்தட்ட இருந்து கல்லெறி வேண்ட ஏலாதுதானே..

விமல் வீரவன்ச மாதிரி சுமந்திரன் தப்பி ஓடிவிடுவார். சம்பந்தரால ஏலுமோ 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.