Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு..!

317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு இலங்கையில் இருந்து சென்றதாக கூறப்படும் 317 அகதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த கப்பலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 317 பேர் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கப்பல் தொடர்ந்து பயணிக்க முடியாதா நிலையில் பழுதடைந்ததால் கப்பலை செலுத்திய கப்பல் ஓட்டி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் படையினருக்கு தகவல்

 

 

317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு..! | Ship 317 Srilanka Refugees Adrift Philippines Sea

இதேவேளை கப்பலை மீட்கும் பணியில் புலம் பெயர் சமூகத்தில் உள்ள சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கனடாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/ship-317-srilanka-refugees-adrift-philippines-sea-1667812554

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

306 இலங்கை அகதிகளுடன் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல் 

07 NOV, 2022 | 06:12 PM
image

இலங்கையைச் சோந்த 306 பேருடன் கனடாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த கப்பலொன்று பிலிப்பையன்ஸிற்கும் வியட்நாமிற்கும் இடையிலுள்ள கடல்பரப்பில் சூறாவளி காற்றில் சிக்குண்டு கடலில் முழ்கிவருவதாகவும் கப்பலில் உள்ளவர்களை உடனடியாக காப்பாற்றுமாறும் அந்த கப்பலில் இருந்த ஒருவர் தோலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கப்பலில் சிறுவர்கள் உட்பட 306 இலங்கையைச் சேர்ந்தவர்கள்  இருப்பதாகவும் இவர்களின் உயிரை காப்பாற்றுமாறு ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுக்குமாறும் அந்த கப்பலில் பயணித்துள்ளவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை உடனடி ஆய்வொன்றை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

https://www.virakesari.lk/article/139378

  • கருத்துக்கள உறவுகள்

கனடா  400 ஆயிரம் தொடக்கம் அரை மில்லியன் மக்களை வெளியில் இருந்து எடுப்பதாக அறிந்தேன். இவர்களையும் ஏற்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

கனடா  400 ஆயிரம் தொடக்கம் அரை மில்லியன் மக்களை வெளியில் இருந்து எடுப்பதாக அறிந்தேன். இவர்களையும் ஏற்க வேண்டும். 

பணம் கொடுத்து, ஏஜன்சிகளை நம்பி, இப்படி பாதுகாப்பு இல்லாமல் பயணிப்பது மிக ஆபத்தனதும், முட்டாள் தனமானதும் ஆகும். இவர்களது, முக்கியமாக, பெண்கள், குழந்தைகள், தினசரி இயற்கை அழைப்புகளுக்கே வசதியிருக்காதே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லோருக்கும் எடுப்பார் கைப்பிள்ளையாகிவிட்டோம். 

இந்தியா  இலங்கையை கட்டுக்குள் கொண்டுவர எங்களைப் பயன்படுத்தியது. மேற்கும் இந்தியும் இலங்கையைத் தனது கட்டுக்குள் கொண்டுவர எமது போராட்டத்தை அழித்தது. மீண்டும் இலங்கையைக் கட்டுக்குள் கொண்டுவர, தேவாலயங்களில் குண்டுவெடிப்பைப் பயன்படுத்தியது.

தற்போது மீண்டும் தமது தேவைக்காக மேற்கு எம்மக்களை கடலில் மூழ்கடிக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் அரசு மேற்படி அகதிகளை வியட்நாமில்  பாதுகாப்பாக சேர்த்துள்ளதாம். சிறிலங்கா அரசு பிலிப்பைன்ஸ், வியட்நாம், சிங்கப்பூர் அரசிடம் உதவி கோரி இருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வியட்நாம்-பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையேயுள்ள கடற்பிராந்தியத்தில் சிக்குண்டு தவிக்கும் 306 பேர் சம்பந்தப்பட்டவர்களின் உதவியை நாடி நிற்கின்றனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

பணம் கொடுத்து, ஏஜன்சிகளை நம்பி, இப்படி பாதுகாப்பு இல்லாமல் பயணிப்பது மிக ஆபத்தனதும், முட்டாள் தனமானதும் ஆகும். இவர்களது, முக்கியமாக, பெண்கள், குழந்தைகள், தினசரி இயற்கை அழைப்புகளுக்கே வசதியிருக்காதே.

யாழ் இல் உள்ள போதை பழக்கத்தில் இருந்து தப்ப இவ்வாறு  தப்பிக்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தக் கப்பல் என்டு சொல்லி MV Sun Sea இன்ர நிகழ்படத்தை பரப்புறாங்கள். செய்தியிணைப்போர் கவனமெடுக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகு – இலங்கையர் உட்பட 300 பேர் பாதுகாப்பாக மீட்பு

கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகு – இலங்கையர் உட்பட 300 பேர் பாதுகாப்பாக மீட்பு

சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்து சென்ற குழுவினரின் படகு விபத்துக்குள்ளானதையடுத்து, அதில் இருந்த 300 பேர் அந்நாட்டு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

இந்த படகில் விபத்தில் சிக்கிய இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படையை தொடர்புகொண்டு தானும் தனது குழுவினரும் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்ததையடுத்து, உடனடியாக செயற்பட்ட கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவிகளைக் கோரியுள்ளது.

இதனையடுத்து, படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு தகவல் தெரிவித்துள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

விபத்தின்போது இலங்கையர் ஒருவரே படகில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், படகு வியட்நாமில் தரையிறங்கிய பின்னர், ஏனையவர்களின் அடையாளம் உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1309385

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

300 இலங்கை அகதிகளுடன் நடுக்கடலில் தத்தளித்த கப்பல் மீட்பு

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கப்பல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

300 அகதிகளுடன் பயணித்த கப்பல் ஒன்று மூழ்கும் தறுவாயில் இருந்த நிலையில், அந்த கப்பலில் பயணித்த அகதிகளை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா இதனை பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.

வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை அண்மித்த கடற்பரப்பில், தாம் பயணிக்கும் கப்பல் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக, அந்த கப்பலிலிருந்து தமது கடற்படையின் மீட்பு நிலையத்திற்கு நேற்றைய தினம் தகவலொன்று கிடைத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதையடுத்து, இலங்கை அதிகாரிகள் வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கடற்படையின் மீட்பு நிலையங்களுக்கு தகவலை பரிமாறியுள்ளனர்.

 

இந்த நிலையில், 300 அகதிகளுடன் பயணித்த கப்பலில் இருந்தவர்களை தமது முயற்சியில் மீட்க முடிந்தாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கை கடற்படைக்கு அறிவித்துள்ளனர்.

சிங்கப்பூரை அண்மித்த கடலில் பயணித்த மற்றுமொரு கப்பலின் உதவியுடன், இந்த அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கைக்கு அறிவித்துள்ளனர்.

இந்த கப்பலில் இலங்கையர்கள் பயணிப்பதாக நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் குரல் பதிவொன்று பகிரப்பட்டு வந்தது.

கப்பலில் பயணிக்கும் ஒருவர், தம்மை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கும் குரல் பதிவொன்றை இவ்வாறு பகிரப்பட்டது.

''பிலிப்பைன்ஸ் கடலில் 317 அகதிகளுடன் பயணித்த கப்பலொன்று மூழ்கும் அபாயத்தில் உள்ளது. குழந்தை பிள்ளைகள் இருக்கின்றார்கள். பெண்கள் இருக்கின்றார்கள். வயதானவர்கள் இருக்கின்றார்கள்.

அகதிகளுடன் வந்த கப்பலொன்று மூழ்க போகின்றது என செய்திகளுக்கு அறிவியுங்கள். 317 பேரின் உயிர்களை காப்பாற்றி விடுங்கள். கப்பல் மூழ்குகின்றது. நாங்கள் பிலிப்பைன்ஸிற்கும், வியட்நாமிற்கும் இடையில் நிற்கின்றோம்" என கப்பலில் பயணித்த அகதியொருவர் தொலைபேசியூடாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த கப்பலில் இலங்கையர்கள் இருக்கின்றார்களா என, பிபிசி தமிழ், கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வாவிடம் வினவியது.

 

கப்பல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அகதிகள் இருப்பதாகவே தமக்கு தகவல் கிடைக்கப் பெற்ற போதிலும், அதில் இலங்கையர்கள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் தமக்கு தெரியாது என அவர் பதிலளித்தார்.

மூழ்கும் அபாயத்திலுள்ள கப்பல் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அல்லது இலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பல் கிடையாது என்பது உறுதி எனவும் அவர் கூறினார்.

வெளிநாடொன்றிலிருந்து பயணித்த கப்பலிலேயே இந்த. அகதிகள் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த கப்பலில் இலங்கையர்கள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த சூழ்நிலையில், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கடல்மார்க்கமாக பலர் சட்டவிரோதமாக சென்றுள்ளனர்.

அத்துடன், இலங்கையிலிருந்து அகதிகளாக செல்ல முயற்சித்த பலரை, இலங்கை அதிகாரிகள் கடந்த காலங்களில் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cv29yxdrm7mo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடுக்கடலில் இலங்கை தமிழர்களுடன் தத்தளித்துக்கொண்டிருந்த படகை காப்பாற்றிய ஜப்பான் கப்பல் - வெளியாகின புதிய தகவல்கள்

By RAJEEBAN

08 NOV, 2022 | 12:08 PM
image

நடுக்கடலில் 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுடன் தத்தளித்துக்கொண்டிருந்த  படகை ஜப்பானின் கப்பலொன்றே மீட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் பயணித்துக்கொண்டிருந்த மீன்பிடிப்படகு சேதமடைந்து ஸ்பிராட்லி தீவுகளில் தத்தளித்துக்கொண்டிருந்தது என விஎன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

மியன்மார் கொடியுடன் பயணித்துக்கொண்டிருக்கும் லேடிஆர்3 படகு ஆபத்தில் சிக்கியுள்ளது இந்த படகு 303 இலங்கையர்களுடன் கனடா செல்ல முயல்கி;ன்றது என தகவல் கிடைத்ததாக வியட்நாமின் கடல்சார் மீட்பு மற்றும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கப்பல் தென்கரையோரத்தில் உள்ள வுங் டாவுவில் இருந்து 258 கடல்மைல் தொலைவில் காணப்பட்டது .

படகின் இயந்திர அறைக்குள் நீர் சென்றதால் அந்த கப்பல் தத்தளிக்க தொடங்கியது கடல் கொந்தளிப்பாக காணப்பட்டுள்ளது.

வியட்நாமின் கடல்சார் மீட்பு மற்றும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு நிலையம் கப்பலை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளது,அந்த பகுதியில் உள்ள ஏனைய கப்பல்களிற்கு அவசர சமிக்ஞையை  அனுப்பியுள்ளது.

திங்கட்கிழமை அந்த பகுதியில் ஜப்பான் கொடியுடன் ஹெலியோஸ் லீடர் என்ற கப்பல் காணப்பட்டுள்ளது,படகில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை காப்பாற்றுமாறு அந்த கப்பலிற்கு உத்தரவு வழங்கப்பட்டது.

ஜப்பான் கப்பல் உடனடியாக தத்தளித்துக்கொண்டிருந்த படகைநோக்கி சென்றுள்ளது படகில் இருந்தவர்கள் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டுள்ளனர்.

ஜப்பான் கப்பல் படகில் இருந்தவர்களை மீட்டு அவர்களிற்கு மருத்துவகிசிச்சைகளை வழங்கியுள்ளது.

வியட்நாம் மேலும் ஐந்து கப்பல்களை அந்த பகுதிக்கு அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

20 சிறுவர்கள் 19 பெண்கள் உட்பட 303 பேரும் இன்றும் வுங் டாவுவை சென்றடைவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/139418

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை - அலி சப்ரி

08 NOV, 2022 | 06:10 PM
image

(எம்.மனோசித்ரா)

வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ள 300 க்கும் மேற்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர வியட்நாம் அதிகாரிகளுடன் இராஜதந்திர தொடர்புகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகொன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் நேற்று மீட்க்கப்பட்டனர்.

படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர், இலங்கை கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாகவும் தெரிவித்ததாக கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி அழைத்துச் செல்லப்படுவதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/139487

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிலிப்பைன்ஸ் - வியட்நாம் கடற்பகுதியில் கப்பல் விபத்து: பயணிகளை மீட்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு வைகோ கடிதம்

By RAJEEBAN

08 NOV, 2022 | 12:09 PM
image

பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெறியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலளார் வைகோ எம்.பி. அவர்கள் இன்று 08.11.2022 கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

-பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். விபத்தில் சிக்கிய இந்தக் கப்பலில் 306 இலங்கை அகதிகள் பயணித்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் இருப்பதாகத் தெரிகிறது. கப்பல் சேதமடைந்து உள்ளதால் எந்த நேரத்திலும் மூழ்கும் அபாயம் உள்ளது. அக்கப்பலில் பயணித்தவர்கள் தங்கள் உயிர்களைக் காக்கப் போராடி வருகின்றார்கள்.கப்பல் தொடர்பு எண் 870776789032.எனவே, இந்திய பாதுகாப்புத் துறையுடன் தொடர்புகொண்டு, கடற்படை மீட்புக் கப்பலை அனுப்பி, விபத்துக்குள்ளான பயணிகளை காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

https://www.virakesari.lk/article/139421

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீட்கப்பட்ட இலங்கையர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் - வியட்நாம் ஊடகம் தகவல்

By RAJEEBAN

09 NOV, 2022 | 03:25 PM
image

tuoitre.vn

logo-22-1667968576965275117013.jpg

மூழ்கிக்கொண்டிருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களிற்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என வியட்நாம் ஊடகம் தெரிவித்துள்ளது

வியட்நாம் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது

 

அவர்கள் பதற்றமற்றவர்களாக மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்,

அவர்களிற்கான தங்குமிடம் உணவு போன்றவற்றை அரசாங்கம் மிகவும் கௌரவமான விதத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

முன்னதாக நவம்பர் 8 ம் திகதி இரவும் 9 ம் திகதி அதிகாலையும் இலங்கையர்களை அதிகாரிகள் கரைக்கு கொண்டுவந்து மூன்று இடங்களில்Vung Tau city, district. Xuyen Moc and Dat Do அவர்களை தங்கவைத்துள்ளதுடன் உணவு அடிப்படை வசதிகளை வழங்கியுள்ளனர்.

அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர் பதற்றமின்றி காணப்படுகின்றனர் சிலர் சிகரெட் கூட வாங்கினார்கள் நூறிற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உள்ளனர்.

logo-2-16679686553571715614530.jpg

இன்று அதிகாலை சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் இலங்கையர்களை சென்று பார்த்ததுடன் அவர்களிற்கு உதவுவதற்கு வியட்நாம் அரசாங்கமும் அதிகாரிகளும் அனைத்தையும் செய்வார்கள் என உறுதியளித்தார்.

தாங்கள் அங்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ள இலங்கையர்கள் அரிசி மற்றும் பாண் ஆகிய உணவுகளை குறிப்பிட்டு அவை மிகவும் ருசியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதிகளை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

logo-5-1667968799414833453970.jpg

நவம்பர் ஆறாம் திகதி மதியம் ஹெலியோஸ் லீடர் கப்பல் 303 இலங்கையர்களை காப்பாற்றியவேளை அவர்களுடைய  கப்பல் ஏற்கனவே 40 மணித்தியாலங்கள் செயல் இழந்த நிலையி;ல் காணப்பட்டது.

logo-7-166796887702353039615.jpg

அந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர் ஒருவர் தாங்கள் தங்கள் நாட்டிலிருந்து மியன்மார் சென்று அங்கிருந்து படகு மூலம் பயணித்ததாக  குறிப்பிட்டுள்ளார்.

logo-8-16679691029451681404524.jpg

vietnam_sri1.jpg

புலம்பெயர்விற்கான சர்வதேச அமைப்பு imo வுங் டாவுவில் இலங்கையர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள  இடத்திற்கு சென்று நிலைமையை மதிப்பிட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/139548

  • கருத்துக்கள உறவுகள்

இது முகப் புத்தக🤣ப் பிரதி.இதுவும்..உண்மையோ..அல்லது சம்பந்தர் கொடி பிடித்த மாதிரியோ.. 

 

சமாதானத்திற்கும் சமத்ததுவத்திற்கான கனடா அமைப்பின் சிறந்த பணியை பாராட்டுகிறோம்.
தமிழீழ மண்ணில் தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டதன் விளைவாக மக்கள் நாட்டைவிட்டு உயிர் போனாலும் தப்பித்து மேலைநாடுகளுக்கு ஆபத்தான கடற்பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளுகிறார்கள்.
நவம்பர் 7ஆம்நாள்2022 திங்கட்கிழமை கனடாவை நோக்கி 306 தமிழ் உறவுகள் கப்பலில் புறப்பட்டு நடுக்கடலில் முழ்கும்சூழ்நிலை ஏற்பட்டபோது கப்பலில் இருந்தவர்கள் உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவுமாக கேட்டிருந்தார்கள்.
இச்செய்தி சாமாதானத்திற்கும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் என்ற அமைப்பினர் கடற்பயணத்தில் உள்ள எமது உறவுகளோடு தொடர்பு கொண்டு கப்பல் முழ்குவதற்குள் எமது உறவுகளைக் காப்பபாற்றும் மனிதநேயப் பணியில் சமாதானத்திற்கும் சமத்துவத்திற்குமான கனேடியர்கள் என்ற அமைப்பின் மனிதநேயப்பணியாளர் ரோய் சமாதானம் சிங்கள அரசோடு தொடர்பு கொண்டு தமிழர்களின் உயிரைக் காப்பாற்றுமாறு அன்பு அழைப்பை விடுத்திருந்தார்.
கடற்பயணத்தில் இருந்த எமது உறவுகளோடு சிங்கள அரசும் சிங்கள அரச கடற்படை, சிங்கப்பூர் கடற்படை, வியட்நாம் கடற்படை, பிலிப்பைன் கடற்படை அரசுகளோடு தொடர்பு கொண்டு கடலில் முழ்கிக்கொண்டிருந்த எமது தமிழ் உறவுகள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.
வியட்னாம் கடற்படையின் உதவியோடு வியட்னாம் கரையை எமது உறவுகள் பாதுகாப்பாக சென்றடைந்தார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இலங்கையில் இருந்து சென்றார்களா அல்லது இந்தியாவில் இருந்து சென்றார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் முன்பு ஒரு காலத்தில் யேர்மனியிலிருந்தும் கப்பலில் கனடா போனவர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இவர்கள் இலங்கையில் இருந்து சென்றார்களா அல்லது இந்தியாவில் இருந்து சென்றார்களா? 

தாய்லாந்து என்று செய்திகளில் வாசித்த நினைவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாமில் 306 இலங்கை அகதிகள்: கனடா செல்ல 5,000 டாலர்கள் கொடுத்ததாக தகவல் - முழு விவரம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • இருந்துஇலங்கை
  • 51 நிமிடங்களுக்கு முன்னர்
 

மீட்கப்பட்ட இலங்கையர்கள்

பட மூலாதாரம்,SOCIAL

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்லும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.எ கனடாவை நோக்கி செல்ல முயற்சித்த 306 இலங்கை அகதிகள் நேற்றைய தினம் சிங்கப்பூரின் கடற்படையின் உதவியுடன், ஜப்பான் கப்பலொன்றினால் மீட்கப்பட்டிருந்தனர். சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் வைத்து, இந்த அகதிகள் மீட்கப்பட்டிருந்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட அகதிகள் நேற்றிரவு வியட்நாம் துறைமுகத்தை நோக்கி அழைத்து செல்லப்பட்டதாகவும், அங்குள்ள முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கப்பலில் பயணித்த அகதி ஒருவரின் உறவினர், பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.

என்ன நடந்தது?

இலங்கை அகதிகளுடனான கப்பலொன்று மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை கடற்படை மீட்பு மையத்திற்கு நேற்று முன்தினம் தகவலொன்று கிடைத்துள்ளது. இதையடுத்து, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படை மீட்பு மையங்களுக்கு, இலங்கை கடற்படை தகவல்களை பரிமாறியுள்ளது. இலங்கை கடற்படையின் தகவலை அடுத்து, விரைந்து செயற்பட்ட சிங்கப்பூர் அதிகாரிகள், அகதிகளுடன் மூழ்கும் அபாயத்திலிருந்த கப்பலை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து, இந்த கப்பலுக்கு அருகாமையில் பயணித்த ஜப்பானுக்கு சொந்தமான கப்பலொன்றிற்கு தகவல் பரிமாற்றப்பட்டதை அடுத்து, குறித்த அகதிகள் ஜப்பானுக்கு சொந்தமான கப்பலினால் மீட்கப்பட்டு, வியட்நாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

இலங்கையர்கள் மீட்பு

பட மூலாதாரம்,VNA

அகதிகளை தாம் பாதுகாப்பாக மீட்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கை கடற்படைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்ததாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இவ்வாறு மீட்கப்பட்ட அகதிகளில் 264ற்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அகதிகள் தற்போது வியட்நாமிலுள்ள முகாமொன்றில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு, பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

எங்கிருந்து பயணம் தொடங்கியது?

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், நாட்டில் வாழ முடியாத நிலைமை காரணமாக பலர் வெளிநாடுகளை நோக்கி செல்ல முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த நூற்றுக்கணக்கானோர் கடந்த காலங்களில் இலங்கை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதேபோன்று, பலர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்திருந்த செய்திகளையும் காண முடிந்தது. இந்த நிலையில், ஒரே கப்பலில் அதிகளவிலான இலங்கை அகதிகள் செல்ல முயற்சித்து, நிர்கதிக்குள்ளான செய்தி நேற்றைய தினம் பதிவாகியது.

இந்த அகதிகள் எவ்வாறு கனடா நோக்கி செல்ல தயாராகினார்கள் என்பது குறித்த தகவல்களை, பிபிசி தமிழ் ஆராய்ந்தது. குறிப்பாக இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்த தமிழர்களே, அதிகளவில் இந்த கப்பலில் பயணித்துள்ளதாக, அந்த கப்பலில் பயணித்த இலங்கையர் ஒருவரின் சகோதரன், பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார். அத்துடன், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களும் இந்த கப்பலில் அதிகளவில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த கப்பலில் சென்றவர்கள் தமது பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் விற்பனை செய்து, மீண்டும் இலங்கைக்கு வர விரும்பாத நிலையிலேயே கனடா நோக்கி செல்ல தயாராகியுள்ளனர். அமெரிக்க தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தும் தமிழ் மொழி பேசக்கூடிய பிரதான முகவர் ஒருவரின் உதவியுடன், ஏனைய முகவர்களின் ஒத்துழைப்புடனும் இவர்கள் இவ்வாறு அகதிகளாக கனடாவை நோக்கி செல்ல முயற்சித்துள்ளனர். கனடா செல்லும் அகதி ஒருவரிடமிருந்து தலா 5000 அமெரிக்க டாலர் அறவிடப்பட்டதாக கப்பலில் பயணித்த அகதியின் சகோதரன் பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார். குறித்த இலங்கையர்கள் உரிய வகையில் விஸாக்களை பெற்று, விமானத்தின் மூலம் ஒன்றரை மாதத்திற்கு முன்பாக மியன்மார் நோக்கி பயணித்துள்ளனர். முகவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 5000 அமெரிக்க டாலரின் ஊடாக, விமான பயணச் சீட்டுக்கள், விஸா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துக்கொடுக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார். இந்த நிலையில், மியன்மார் நோக்கி சென்ற இலங்கையர்கள், அங்கிருந்து கடந்த மாதம் 10ம் தேதி கனடா நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

 

இலங்கையர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுமார் 28 நாட்கள் கடல் சீற்றம் உள்ளிட்ட  பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பயணித்த குறித்த கப்பலில், அண்மையில் தூவாரமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, கப்பலுக்குள் நீர் பிரவேசித்துள்ள நிலையில், கப்பல் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அறிய முடிகின்றது. இந்த நிலையிலேயே, குறித்த கப்பலில் பயணித்த அகதிகள், இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். இதையடுத்தே, குறித்த படகில் பயணித்த அகதிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். பாரிய தொகையை செலவிட்டு, கனடா நோக்கி செல்ல முடியாது போனமை குறித்து, உறவினர்களின் நிலைபாடு தொடர்பில், பிபிசி தமிழ், குறித்த கப்பலில் பயணித்த இலங்கை அகதியின் சகோதரனிடம் வினவியது. ''பணம் ஒரு புறத்தில் இருக்க, நாட்டிற்கு மீள வருகைத் தருவது என்பது சாத்தியமற்ற விடயம். நாங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பின்புலத்தை கொண்ட ஒரு சமூகம்.

நாட்டிற்கு திரும்பி வரும் போது, குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் மீண்டும் பிரச்சினை வரும். எமது உறவினர்களும் அகதிகளாக சென்றார்கள் என்பதை வெளியில் சொன்னாலே, எமக்கு பிரச்சினை வரும்.

அதனால், அவர்கள் நாட்டிற்கு வருவதை விட, கனடா இல்லை, வேறொரு நாட்டிற்கு சென்றடைய வேண்டும். நாட்டிற்கு திரும்பி வருவது அவர்களுக்கு பிரச்சினை.

இது தான் இப்போதைய நிலைமை. வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படும் காலப் பகுதியில் தமிழர்களுக்கு சரியான பிரச்சினை வரும் காலம். இந்த நேரத்தில் அவர்கள் மீண்டும் நாட்டிற்கு வந்தால், அவர்கள் மீது வேறு வழியில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது. இவர்கள் நாட்டிற்கு வருகைத் தந்தால், அவர்கள் விடுதலைப் புலிகள் என்ற அடிப்படையில் வழக்கு தொடரக்கூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றது." என அவர் கூறினார். ''சுமார் 300 பேரையும் வலுக்கட்டாயமாக அனுப்பி வைப்பது மனிதாபிமானமற்ற செயல். நாட்டிற்கு அனுப்பினால், நாங்கள் தற்கொலை செய்துக்கொள்வோம் என அங்குள்ள அகதிகள் கூறுகின்றார்கள்.

காணிகளை, சொத்துக்களை விற்பனை செய்து விட்டு, சென்றவர்கள் மீண்டும் இங்கு வந்து என்ன செய்வது. நாட்டிற்கு திரும்பி அனுப்பினால், தற்கொலை செய்துக்கொள்வோம் என காணிகளை விற்பனை செய்து விட்டு போனவர்கள் கூறுகின்றார்கள்.

இதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. தமது பிரஜைகளை நாட்டிற்கு எடுப்பதற்கே இலங்கை முயற்சிக்கும். ஆனால், அவர்களுக்கு அது சிரமமானது. அகதிகளாக சென்ற தமது உறவினர்கள், மீண்டும் நாட்டிற்கு வருவது பாதுகாப்பற்றது என்பதே உறவினர்களின் நிலைப்பாடு.." என அவர் குறிப்பிடுகின்றார்.

 

இலங்கை

 

படக்குறிப்பு,

அலி சாப்ரி, இலங்கை வெளிவிவகார அமைச்சர்

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் வியட்நாம் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அகதிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டால் கைது செய்யப்படுவார்களா? சர்வதேச முகவரி நிறுவனத்தின் ஊடாக, இந்த அகதிகள் நாட்டிற்கு அழைத்து வரப்படும் போது, வெளிவிவகார அமைச்சுக்கும், சர்வதேச முகவர் நிறுவனத்திற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் இணக்கப்பாட்டிற்கு அமையவே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீஸார் தெரிவிக்கின்றனர். இது பெரும்பாலும் அரசாங்கங்களுக்கு இடையிலும், சர்வதேச முகவரி நிறுவனத்திற்கும் இடையில் கொள்கை அடிப்படையிலான இணக்கப்பாட்டிற்கு அமையவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

 

இலங்கையர்

 

படக்குறிப்பு,

நிஹால் தல்துவ, போலீஸ் ஊடகப் பேச்சாளர்

இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, உடனடியாக கருத்து தெரிவிக்க முடியாது எனவும் அவர் கூறுகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்படக்கூடும் என உறவினர்களிடம் காணப்படும் அச்சம் குறித்தும், பிபிசி தமிழ், போலீஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவியது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணிவர்கள் இந்த அகதிகளுக்கு மத்தியில் இருந்தால், சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், அவ்வாறானவர்கள் இல்லையென்றால் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது எனவும் குறிப்பிட்டார். அதேபோன்று, ஆட்கடத்தலுடன் தொடர்புடைவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c2vxwdj8wd1o

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூருக்கு அருகில் விபத்துக்குள்ளான படகு – மீட்கப்பட்ட இலங்கையர்கள் இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைப்பு!

சிங்கப்பூருக்கு அருகில் விபத்துக்குள்ளான படகு – மீட்கப்பட்ட இலங்கையர்கள் இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைப்பு!

சிங்கப்பூருக்கு அருகில் வியட்நாம் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் ஹோசிமினில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதனை வியட்நாம் வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.

மீட்கப்பட்ட அனைவரும் நிலையான உடல்நிலையில் இருப்பதாகவும் அவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அவர்களது குடியுரிமை மற்றும் ஏனைய தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் பின்னர் அவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் 303 இலங்கையர்களுடனான படகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, கப்பலில் இருந்த இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்தை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் அளித்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவிகளைக் கோரியது.

அதன்படி, குறித்த நாடுகள் முன்னெடுத்த நடவடிக்கையில், ஆபத்தில் இருந்த படகுக்கு அருகில் சென்றுகொண்டிருந்த ஜப்பானிய சரக்குக் கப்பல், இலங்கையர்களைக் காப்பாற்றியது.

மீட்கப்பட்டவர்களில் 264 ஆண்களும்19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1309758

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் மீது மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - எஸ்.சிறீதரன்

By DIGITAL DESK 2

10 NOV, 2022 | 10:11 AM
image

(இராஜதுரை ஹஷான்)

 

 

வியட்நாம்  கடற்பகுதியில் கப்பலொன்றில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கை தமிழ் புலம்பெயலாளர்கள் தொடர்பில் ஐ நா அகதிகளுக்கான நிறுவனம் மனிதாபிமான கண்ணோட்டத்தில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) சில வரி திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போதே சிறீதரன் எம்.பி இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

303 தமிழ் புலம்பெயலாளர்களுடன் சென்ற கப்பலொன்று கடலில் இன்று வியாட்நாமிய கடற்படையினரால் மீட்கப்பட்டு நாடொன்றின் எல்லைக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

குழந்தைகள் உள்ளிட்ட 303 பேர் மனித பேரவலத்தில் சிக்கியுள்ளனர். ஆசியாவின் எல்லையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு நிரந்தரமான வாழ்வை வாழ முடியாதுஇ தங்களின் சொத்துக்களை விற்று சென்றுள்ளனர். இந்த மனித பேரவலத்திற்கு மத்தியில் அவர்கள் தங்களை நாடொன்றில் வசிக்க தஞ்சம் கோருகின்றனர்.

முன்னாள் எம்.பி சிறீதரன் கைது செய்யப்படுவார்!

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் இந்த விடயத்தை மனிதாபிமான கண்ணோட்டத்தில் அனுக வேண்டும்.

ஏன் இவர்கள் இங்கிருந்து இடம்பெயர காரணமென்ன? ஏன் இங்கு வாழலாம் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இல்லாது போனமைக்கான காரணம் என்ன? அவர்கள் நம்பக்கூடிய அரசியல் தீர்வை வழங்காமையினாலேயே உயிரை பணயம் வைத்து ஆபாத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் கனடா நோக்கி சென்றதாகவே கூறப்படுகின்றது. இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதுடன் பலர் அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மோசமான காலநிலையிலும் ஏன் இவர்கள் இப்படி போக வேண்டும். இங்குள்ள நிலைமைகளே காரணமாகும். இங்குள்ள அடிப்படை பிரச்சினையாக 40 வருடங்களுக்கு மேலாக இங்கு இனப்பிரச்சினை உள்ளது.

இதன்போது யுத்த தளவாடங்களுக்காக அரசாங்கம் கடன் வாங்கியது. இலங்கை இப்போது கடனில் சிவப்பு எல்லைக்குள்  போயுள்ளது. இதற்கு யுத்தமும் காரணமாக அமைந்துள்ளது.

இப்போது நாட்டின் தலைவர்கள் சிந்தித்தால் தமிழ் தேசிய இனத்தின் அடிப்படையை புரிந்துகொண்டு நியாயமான தீர்வுகளை வழங்கும் போது புலம்பெயர்ந்தவர்களின் பணம் மற்றும் சர்வதேசத்தின் கவனம் மூலம் இந்த நாட்டுக்கு மாற்றங்கள் கிடைக்கும் என்று நம்புகின்றோம். இவ்வாறான சிந்தனை இல்லாமையே இதுபோன்ற நிலைமைகளுக்கு காரணமாக அமைகின்றன என்றார்.

https://www.virakesari.lk/article/139582

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஏராளன் said:

தாய்லாந்து என்று செய்திகளில் வாசித்த நினைவு.

ம்ம் இலங்கைல கடல் கொந்தளிப்பு ஒரு கிழமைக்கு அதிகமாக மழை கிழக்கு வெள்ளம் தற்போது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் இலங்கைல கடல் கொந்தளிப்பு ஒரு கிழமைக்கு அதிகமாக மழை கிழக்கு வெள்ளம் தற்போது

உங்கள் பகுதி எப்படி? பாதுகாப்பாக இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

உங்கள் பகுதி எப்படி? பாதுகாப்பாக இருங்கள்.

மட்டு நகர் முகத்துவாரம் வெட்டியும் மெதுவாக வெள்ளம் பிடிக்கிறது காட்டு வெள்ளம் வந்தால் அதோ கெதிதான் கடல் மட்டம் உயரமாக உள்ளதால் நீர் செல்வது குறைவாக உள்ளது 

கல்லாற்றில் முகத்துவாரம் வெட்டியுள்ளதால் அந்த பகுதி வெள்ளம் குறைவாக உள்ளது இருந்தாலும் வாவிகள் வழிகின்றன 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.