Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக வலையமைப்பை கொண்டிருந்த தமிழர் – அரசியல்வாதிகளுடன் முக்கிய சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக வலையமைப்பை கொண்டிருந்த தமிழர் – அரசியல்வாதிகளுடன் முக்கிய சந்திப்பு!

7-29.jpg

அமெரிக்காவின் மிகப்பெரிய வர்ததக வலயத்தின் நிறுவுனரான தமிழர் சிறிலங்காவின் முக்கிய அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெட்ஜ்-நிதி நிறுவனத்தின் நிறுவுனரான ராஜ் ராஜரத்தினம் என்பவரே இவ்வாறு அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் யாழ். போதனாவைத்தியசாலைக்குச் சென்று அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார்.

இது தொடர்பில் மேலம் தெரியவருகையில்,

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய ஹெட்ஜ்-நிதி, உள் வர்த்தக வலயங்களின் பிரதான வகிபாகத்தை கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படும் இலங்கையில் பிறந்த கேலியன் ஹெட்ஜ் நிதி நிறுவுனர் ராஜ் ராஜரத்தினம் தற்போது சிறிலங்கா வந்துள்ளார்.

இவ்வாறான நிலையில், அவர் எதிர்வரும் நாட்களில் சிறிலங்கா அரசியல்வாதிகள் சிலரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் 2009 ஆம் ஆண்டில், உள் வர்த்தகப் பத்திர மோசடிகளில் குற்றவியல் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சில வருடங்கள் சிறைப்படுத்தலின் பின்னர் விடுவிக்கப்பட்டார். எனினும் தாம் குற்றமற்றவர் என்று கூறி அவர் அண்மையில் ‘சீரற்ற நீதி’ (uneven Justice) என்ற நூலை வெளியிட்டிருந்தார்.

இதேவேளை தமிழர் புனர்வாழ்வு அமைப்புக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் அதிகாரம் இன்றி கிருலப்பனையில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட் வங்கிக் கிளையில் வைப்பு செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் பணத்துடன் ராஜரத்தினம் தொடர்புபட்டிருந்தார் என்றும் கூறப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பெயர் இந்த சட்டவிரோத கொடுக்கல் வாங்கலில் இணைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு, பரிவர்த்தனை கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறி பணச் சலவை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கருணாநாயக்க பின்னர் விடுவிக்கப்பட்டார்.
 

 

https://akkinikkunchu.com/?p=233722

  • Replies 136
  • Views 9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை சேர்ந்த அமெரிக்க பில்லியனர் இலங்கை வந்துள்ளார்  முதலில் எழுதிய கொழும்பு பத்திரிகை பின்னர், அமேரிக்க சரித்திரத்தில், மிகப்பெரிய மோசடி குழுவை வைத்திருந்தவர் இலங்கை வருகை என்று மாத்தி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நான் இந்த தலையங்கத்தை பார்த்துவிட்டு இன்று வருடக்டைசி நாள் என்பதால் பீட்சா வங்கியுள்ளார்கள் கீழே கிச்சனுக்கு போய் ஒருதுண்டு எடுத்துவிட்டு வந்து எழுதுவோம் என்று இருந்தேன் அதற்குள் நாதமுனி எழுதியிருக்கிறீர்கள். 

இவர் அமெரிக்க பங்குச்சந்தையில் மோசடியான insider formation  முறையில் லாபமீட்டிய ஒரி கிறிமினல் அல்லவா? பின்பு ஏன் இப்படி தமிழ் பத்திரிக்கைகள் தலையங்கம் எழுதுகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, colomban said:

 

இவர் அமெரிக்க பங்குச்சந்தையில் மோசடியான insider formation  முறையில் லாபமீட்டிய ஒரி கிறிமினல் அல்லவா? பின்பு ஏன் இப்படி தமிழ் பத்திரிக்கைகள் தலையங்கம் எழுதுகிறார்கள்?

ஏனென்றால், எங்களுக்கு பணம் மட்டும்தான் கண்ணில் தென்படும். அது எப்படி வந்தது என்று தெரிந்தாலும் அது மட்டும் கண்களுக்குத் தெரியாது. 

கருவாடு வித்த காசு மணக்குமா என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, இவர் மிகவும் வெற்றி அடைந்த வெள்ளை அல்லாதவர் என்பதால், சிக்க வைக்கப்பட்டார் என்கிறார். அது விடயத்தில், இன்னோரு ஈழத்தமிழரே உளவு பார்க்க அனுப்பட்டார். இவர் அமெரிக்க நீதித்துறை குறித்து ஒரு புத்தகமே வெளியிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் சட்டம், படித்தவர்களால் (nobles) எழுதப்பட்டது. அமெரிக்க சட்டம் அடிமைகளை வைத்திருந்த வெள்ளை ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களால் எழுதப்பட்டது. அங்கே, அரச வழக்குரைஞர் பொய் சொல்லி தப்பிக்க முடியும். எதிராளி அப்படி அல்ல. ஆகவே, சுமத்தப்பட்ட பொய்யான குற்றசாட்டினை, எதிர்த்தால் நீண்ட சிறை தண்டனை கிடைக்கும் என்பதால், அவுட் ஒப் கோர்ட் செட்டில்மென்ட் முறைமை போலவே, கிரிமினல் விடயங்களில், குற்றசாட்டினை ஏற்றுக் கொள்வதாக சொல்லி, குறைந்த தண்டனையை பெறும் ஒரு கேவலமான முறைமை உள்ளது.

இதனையே இவர் புத்தகம் சொல்லி, அமெரிக்க சட்டம் மாறுதலுக்கு உள்ளாக வேண்டும் என்கிறார்.

13 minutes ago, colomban said:

இப்ப நான் இந்த தலையங்கத்தை பார்த்துவிட்டு இன்று வருடக்டைசி நாள் என்பதால் பீட்சா வங்கியுள்ளார்கள் கீழே கிச்சனுக்கு போய் ஒருதுண்டு எடுத்துவிட்டு வந்து எழுதுவோம் என்று இருந்தேன் அதற்குள் நாதமுனி எழுதியிருக்கிறீர்கள். 

இவர் அமெரிக்க பங்குச்சந்தையில் மோசடியான insider formation  முறையில் லாபமீட்டிய ஒரி கிறிமினல் அல்லவா? பின்பு ஏன் இப்படி தமிழ் பத்திரிக்கைகள் தலையங்கம் எழுதுகிறார்கள்?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

https://www.amazon.com.au/Buy-Side-Street-Traders-Spectacular/dp/0770437176

இந்த புத்தகத்தில் இவரைப்பற்றி பேசப்படுகிறது, தவறான நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பதற்கான சில கருத்துகள் உள்ளது.

தவறு யார் செய்தாலும் தவறுதானே?

இவரது சொத்து கிட்டதட்ட 7 பில்லியனாக அப்போது இருந்தது என கருதுகிறேன்.

உள்வீட்டு தகவலின் அடிப்படையில் வர்த்தகம் செய்யப்பட்ட விடயங்கள் அந்த புத்தகத்தில் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, vasee said:

https://www.amazon.com.au/Buy-Side-Street-Traders-Spectacular/dp/0770437176

இந்த புத்தகத்தில் இவரைப்பற்றி பேசப்படுகிறது, தவறான நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பதற்கான சில கருத்துகள் உள்ளது.

தவறு யார் செய்தாலும் தவறுதானே?

இவரது சொத்து கிட்டதட்ட 7 பில்லியனாக அப்போது இருந்தது என கருதுகிறேன்.

உள்வீட்டு தகவலின் அடிப்படையில் வர்த்தகம் செய்யப்பட்ட விடயங்கள் அந்த புத்தகத்தில் உள்ளது

மேற்கின் இன்சைடர் டீலிங் சட்டப்படி, இவர் சிறை சென்றாலும், இவர் சம்பாதித்த பணம் பறிமுதல் ஆகாது.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  உறவுகளே

இவரது  தந்தையை  நான்  சந்தித்திருக்கின்றேன்

தாயகத்தின்  மிகப்பெரும்  பற்றாளர்  மற்றும்  கொடையாளர்

எதைச்செய்தாலும்  அம்மாவிடம் கேட்டுவிட்டு தருகின்றேன் என்பார்

பாசத்தின் உறைவிடம்.

எனவே  கவனமாக கருத்துக்களை  வையுங்கள்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

வணக்கம்  உறவுகளே

இவரது  தந்தையை  நான்  சந்தித்திருக்கின்றேன்

தாயகத்தின்  மிகப்பெரும்  பற்றாளர்  மற்றும்  கொடையாளர்

எதைச்செய்தாலும்  அம்மாவிடம் கேட்டுவிட்டு தருகின்றேன் என்பார்

பாசத்தின் உறைவிடம்.

எனவே  கவனமாக கருத்துக்களை  வையுங்கள்

நன்றி

அண்ணை பற்றாளர் தந்தையா? இவரா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அண்ணை பற்றாளர் தந்தையா? இவரா?

இவர் யாழ்ப்பாணம் போய் இரண்டு, மூன்று மாதம் இருந்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆவல் என்று சொல்லி தான் வருகிறார். பாதுகாப்பை உறுதி செய்ய, கொழும்பில் அரசியல் தலைவர்களை சந்திக்கக்கூடும்.

விசயம் தெரிந்த நம்மவர்கள், மலேசியா, பிரிட்டன், அவுஸ், கனடாவில் உள்ள இருந்து இவரை ஒன்லைன் மூலம் பங்கு சந்தை நெளிவு சுழிவுகளை சொல்லித் தருமாறு கோரி, அவரும் உதவுகிறார்.

அதனையே இலங்கையில், முக்கியமாக யாழ்ப்பாணத்தில் செய்ய வேண்டும்.

இவர் குறித்த அலம்பறைகளை விடுத்து, பிரயோசனம் மிக்க, அனுபவங்களை பெற்றுக் கொள்வது சிறப்பு.

இவர் மீது, FBI சுமத்திய சார்ஜ் சீட்டில், இயக்கத்துக்கு பணம் கொடுத்து உதவினார் என்பது முக்கியமானது. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

அண்ணை பற்றாளர் தந்தையா? இவரா?

தந்தை தாயார் 

எனவே...?

இன்றைய நிலையில் 

அவர் படும்பாட்டுக்குள் நாம் கதை  பேசவேண்டாமே???

41 minutes ago, Nathamuni said:

இவர் யாழ்ப்பாணம் போய் இரண்டு, மூன்று மாதம் இருந்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆவல் என்று சொல்லி தான் வருகிறார். பாதுகாப்பை உறுதி செய்ய, கொழும்பில் அரசியல் தலைவர்களை சந்திக்கக்கூடும்.

விசயம் தெரிந்த நம்மவர்கள், மலேசியா, பிரிட்டன், அவுஸ், கனடாவில் உள்ள இருந்து இவரை ஒன்லைன் மூலம் பங்கு சந்தை நெளிவு சுழிவுகளை சொல்லித் தருமாறு கோரி, அவரும் உதவுகிறார்.

அதனையே இலங்கையில், முக்கியமாக யாழ்ப்பாணத்தில் செய்ய வேண்டும்.

இவர் குறித்த அலம்பறைகளை விடுத்து, பிரயோசனம் மிக்க, அனுபவங்களை பெற்றுக் கொள்வது சிறப்பு.

இவர் மீது, FBI சுமத்திய சார்ஜ் சீட்டில், இயக்கத்துக்கு பணம் கொடுத்து உதவினார் என்பது முக்கியமானது. 

நன்றி ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் கேலியன் நிறுவன நிறுவுனர் இராஜ் இராஜரட்ணம் இலங்கை விஜயம்

By VISHNU

29 DEC, 2022 | 08:15 PM
image

அமெரிக்காவின் கேலியன் நிறுவன நிறுவுனர் இராஜ் இராஜரட்ணம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்

இதன்படி இராஜ் இராஜரட்ணம் 28 ஆம் திகதி புதன்கிழமை யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலைகள் சேவைகள் பற்றி கலந்துரையாடினர்.

20221229_152959.png

2006 ஆண்டில் இராஜ் இராஜரட்ணம் அவர்களின் நிதி உதவியானது இருதய சரித்திர சிகிச்சை பிரிவு எகோ இயந்திரம் உட்பட பல சேவைகளை புதிதாக  ஆரம்பிக்க பெரும் உதவியாக இருந்ததென யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

20221229_153103.jpg

இராஜ் இராஜரட்ணம் எழுதிய “Uneven Justice” என்னும் நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ” விளைந்த நீதி” என்ற நூல் சில மாதங்களில் யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது.

https://www.virakesari.lk/article/144478

  • கருத்துக்கள உறவுகள்+

இவர் எமது நாட்டின் பற்றாளரும் கூட...

இவரால் வன்னியில் பல திட்டங்கள், நடைமுறையரசின் காலத்தில், தொடங்கப்பட்டிருந்தன. 

ஒரு பெரும் பண்ணையைக் கூடத் தொடங்கியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நன்னிச் சோழன் said:

இவர் எமது நாட்டின் பற்றாளரும் கூட...

இவரால் வன்னியில் பல திட்டங்கள், நடைமுறையரசின் காலத்தில், தொடங்கப்பட்டிருந்தன. 

ஒரு பெரும் பண்ணையைக் கூடத் தொடங்கியிருந்தார்.

நன்றி ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில், ஒரு ஐரோப்பிய வங்கியான பெயரிங் பேங்க்ல் வேலை பார்த்த ஒருவர் நிக் லீசன், இவர் தனது பெண் நண்பியுடன் அங்கே தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். திருமண வேலைகளும் நடந்து கொண்டிருந்தன.

அவர், பங்குசந்தையில், வங்கி அனுமத்திருந்த தொகையிலும் பார்க்க மிக அதிக தொகையை பங்கு சந்தையில் விட (சூதாட்டம் போலவே) அது இழப்பில் முடியப்போகிறது என்றவுடன், இரவோடிரவாக, கிடைத்த விமானத்தில், ஜெர்மனி வந்துவிட்டார். மறு நாள், லண்டன் கிளம்ப முனைந்த போது, சிங்கப்பூர் அரசின் கோரிக்கையில் கைதானார். 

லண்டன் திரும்பிய பெண் நண்பி, சில மாதங்களில் வேறு ஒரு பழைய நண்பரை பிடித்துக் கொண்டது வேறு கதை. இப்படி துரோகம் செய்யலாமா என்று மீடியா கேட்டபோது, அவர் நிக் சிறையில் இருந்து வர நீண்ட காலமாகலாம், அதுவரை காத்திருந்தால் வயதாகி விடும் என்று எடுத்தெறிந்து பேசி இருந்தார்.

அதேவேளை, நிக் ஐரோப்பாவில் இருந்த படியால், அவரை சிங்கப்பூருக்கு அனுப்புவது உடனடி சாத்தியம் இல்லாமல் போனது. சிங்கப்பூர் அரசு அவருடன், திரும்பி வந்து, விசாரணைக்கு உடன்படு. ஒரு வாரத்துக்கு மேல் சிறையில் வைத்திருக்க மாட்டோம். எங்கே தவறு என்று அறிந்து அதனை திருத்தவே முயல்கிறோம் என்று நேரடியாக உடன்பாடு செய்து கொண்டது.

அதன் பேரில் அவரும் சுஜமாக சிங்கப்பூர் சென்று விசாரணைக்கு ஒத்துழைத்து, (அவர் திருடவில்லை என்பது முக்கியமானது) வங்கியின் கட்டுப்பாட்டு முறைமையில் பலவீனம் என்று சிங்கப்பூர் அரசு கண்டறிந்து, அவரை இருவாரங்களில் அனுப்பி வைத்தது.

திரும்பி வந்த அவர், என்ன செய்யக்கூடாது என்பதில், இன்வெட்மென்ட் வங்கிகளுக்கு lecture கொடுத்து பெரும் பணம் சம்பாதித்து, இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அவரது, பெண் நண்பி கவலைப்பட்டிருப்பார். இவரது துரோகம், சுஜநலம் குறித்து பல கட்டுரைகள் வந்தன.

சரி, இந்த செய்தியின் நோக்கம், ராஜ் ராஜரத்தினத்தின், பெரும் அனுபவத்தினை பெற வேண்டுமே அன்றி, அவர் சிறைக்கு போனார் என்பது குறித்து பேசுவது தேவையில்லாத வேலை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இவர் .....பாதுகாப்பை உறுதி செய்ய, கொழும்பில் அரசியல் தலைவர்களை சந்திக்கக்கூடும்.

உண்மையான, நடைமுறைச் சாத்தியமான விடயம் இதுதான்.🖕

ஆனால், இந்த அணுகுமுறை இவருக்கு மட்டுமே பிரத்தியேகமானதா அல்லது புலம்பெயர்ந்த தமிழர் எல்லோருக்கும் பொதுவானதா ? 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

உண்மையான, நடைமுறைச் சாத்தியமான விடயம் இதுதான்.🖕

ஆனால், இந்த அணுகுமுறை இவருக்கு மட்டுமே பிரத்தியேகமானதா அல்லது புலம்பெயர்ந்த தமிழர் எல்லோருக்கும் பொதுவானதா ? 

நீங்கள்,  நல்லூர் திருவிழாவுக்கு… போகின்ற புலம்பெயர் தமிழர்களுக்கும்
பாதுகாப்பு வேண்டும் என்று கேட்கிறீர்களா? 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

உண்மையான, நடைமுறைச் சாத்தியமான விடயம் இதுதான்.🖕

ஆனால், இந்த அணுகுமுறை இவருக்கு மட்டுமே பிரத்தியேகமானதா அல்லது புலம்பெயர்ந்த தமிழர் எல்லோருக்கும் பொதுவானதா ? 

 

9 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள்,  நல்லூர் திருவிழாவுக்கு… போகின்ற புலம்பெயர் தமிழர்களுக்கும்
பாதுகாப்பு வேண்டும் என்று கேட்கிறீர்களா? 🤣

ஆள் பில்லியனனியர்.

உந்த வாழ் வெட்டு கோஸ்ட்டிகள் கைமாத்து, கால்மாத்து எண்டு போய் நிக்க கூடாது கண்டியளே.

அமேரிக்க அலன் தம்பதிகளை கடத்தின டக்ளஸ் இன்னும் அங்கை தானே இருக்கிறார். இவரும் அமெரிக்கர் தான். 🤗

அப்ப பாதுகாப்பு முக்கியம் எல்லோ. 😜

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

வணக்கம்  உறவுகளே

இவரது  தந்தையை  நான்  சந்தித்திருக்கின்றேன்

தாயகத்தின்  மிகப்பெரும்  பற்றாளர்  மற்றும்  கொடையாளர்

எதைச்செய்தாலும்  அம்மாவிடம் கேட்டுவிட்டு தருகின்றேன் என்பார்

பாசத்தின் உறைவிடம்.

எனவே  கவனமாக கருத்துக்களை  வையுங்கள்

நன்றி

நானும் அவருடன் பல தடவைகள் சந்தித்தும் சேர்ந்து பயணம் செய்தும் இருக்கிறேன்.

அவர் எப்போதும் பொதுநலமாகவே பேசுவார்.மாவீரர் தினங்களில் சிறிது உரையாற்றுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நானும் அவருடன் பல தடவைகள் சந்தித்தும் சேர்ந்து பயணம் செய்தும் இருக்கிறேன்.

அவர் எப்போதும் பொதுநலமாகவே பேசுவார்.மாவீரர் தினங்களில் சிறிது உரையாற்றுவார்.

உண்மை அண்ணா

விமான நிலையத்தில் இருந்து வரவேற்று அவரை விடச்சொன்ன ஆடம்பர கோட்டலின் பெயரைக் கேட்டதும் புரிந்தது வருபவரின் பொருளாதாரம். (அதுவரை யாருக்கும் அப்படி இருந்ததில்லை)

ஆனால் ஒரு சிறிய கைப்பையுடன் அவர் வந்த விதம் காருக்குள் எம்முடன் பேசிய விதம் பேசிய விடயங்கள்.............

உண்மையிலேயே உயர்ந்த மனுசன் தான்.🙏

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு முக்கியம் என்பதை ஏற்கனவே ஏற்றுக்கொண்டிருக்கிறேன. அதில் இரண்டாம் கேள்விக்கே இடமில்லை. ஆனால் அவர் அரச தரப்புடன் உரையாடுவது , அவர்களின் ஆதரவுடன் அல்லது சம்மதத்துடன் வேலைத்திட்டங்களைச் செய்வதுதான் சாத்தியமானதுங்கூட. 

ஆனால் எனது கேள்வி, அரச தரப்புடன் வேறு ஆட்கள் இதே நோக்கத்துடன் உரையாட முட்பட்டால் அதனைப் பகிரங்கமாக  ஏற்றுக்கொள்வீர்களா ? (உங்களை அல்ல, பொதுவாகக் கேட்கிறேன். ஏனென்றால் இங்கே பலரும் தங்கள் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துளனர. அதில் எனக்கு உடன்பாடே) 

ஏனென்றால், கடந்த காலங்களில் அரசுடன், அரச அதிகாரிகளுடன் பேசிய பலருக்கு துரோகி முத்திரை குத்தப்பட்டதுதான் வரலாறு. 

3 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள்,  நல்லூர் திருவிழாவுக்கு… போகின்ற புலம்பெயர் தமிழர்களுக்கும்
பாதுகாப்பு வேண்டும் என்று கேட்கிறீர்களா? 🤣

👆

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

இவர் யாழ்ப்பாணம் போய் இரண்டு, மூன்று மாதம் இருந்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆவல் என்று சொல்லி தான் வருகிறார். பாதுகாப்பை உறுதி செய்ய, கொழும்பில் அரசியல் தலைவர்களை சந்திக்கக்கூடும்.-இவர் மீது, FBI சுமத்திய சார்ஜ் சீட்டில், இயக்கத்துக்கு பணம் கொடுத்து உதவினார் என்பது முக்கியமானது. 

 

14 hours ago, Nathamuni said:

இவர் மிகவும் வெற்றி அடைந்த வெள்ளை அல்லாதவர் என்பதால், சிக்க வைக்கப்பட்டார் என்கிறார். அது விடயத்தில், இன்னோரு ஈழத்தமிழரே உளவு பார்க்க அனுப்பட்டார். இவர் அமெரிக்க நீதித்துறை குறித்து ஒரு புத்தகமே வெளியிட்டுள்ளார்.

 

12 hours ago, விசுகு said:

தாயகத்தின்  மிகப்பெரும்  பற்றாளர்  மற்றும்  கொடையாளர்

 

9 hours ago, நன்னிச் சோழன் said:

இவர் எமது நாட்டின் பற்றாளரும் கூட...

இவரால் வன்னியில் பல திட்டங்கள், நடைமுறையரசின் காலத்தில், தொடங்கப்பட்டிருந்தன. 

ஒரு பெரும் பண்ணையைக் கூடத் தொடங்கியிருந்தார்.

 

4 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் அவருடன் பல தடவைகள் சந்தித்தும் சேர்ந்து பயணம் செய்தும் இருக்கிறேன்.

அவர் எப்போதும் பொதுநலமாகவே பேசுவார்.மாவீரர் தினங்களில் சிறிது உரையாற்றுவார்.

@Kapithan
மேலே மேற்கோள் காட்டியவர்களின் கருத்துக்களை வாசித்துப் பார்த்தீர்களானால்….
பலர் அவரை நேரடியாக சந்தித்தும், நீண்ட காலமாக தாயக தொடர்பிலும் இருக்கின்றார்
என்பதை அறிய முடிகின்றது. 

அத்துடன்  தான் வெற்றியடைந்த வெள்ளையர் அல்லாதவர் என்பதால்….
சிக்க வைக்கப் பட்டதாக அவரே தனது புத்தகத்தின் மூலம் தெரிவிக்கின்றார்.

நீங்கள் குறிப்பிடுவது…. அண்மையில் கனடாவில் இருந்து சென்ற தொழிலதிபர்களைப் பற்றி என நினைக்கின்றேன். அவர்களைப் பற்றி நீங்களும், வேறு சிலரும்…. போர் நடந்த காலத்தில்  கூட,   அவர்கள் இலங்கை அரசுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும்… 
மகிந்த, கோத்தா காலத்திலும் அவர்கள் நாட்டுக்கு வந்து அரசுடன் உறவைப் பேணியவர்கள் என்றும் முன்பு வேறொரு தலைப்பில் எழுதியுள்ளார்கள்.

அரசுடன் பல்வேறு கட்டங்களில் தொடர்பிலிருந்தவர்களுடன்
திரு. ராஜ் ராஜரத்தினத்தை ஒப்பிட்டு…
அவர் மனதை நோகடித்து, தாயக மக்களுக்கு செய்ய வரும் உதவியை தடுத்து நிறுத்தாமல்
இருப்பதே தாயக மக்களை நேசிக்கும் எமக்கு அழகு. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ் பற்றிய முன்னைய திரி.

யாரெல்லாம் என்ன கருத்து சொல்லி இருக்கிறார்கள் என பார்க்க இலகுவாக 😝.

என் கருத்து

Rehabilitation of Offenders என்று குற்றம் செய்தவர்களை சமூக வாழ்வில் மீள இணைக்கும் வழக்கம் எங்கும் உளது.

அதுவும் ராஜ் அமெரிகாவிலேயே plea bargain மூலம் குறைந்த தண்டனை பெற்றவர்.

கூடுதலாக இனத்துக்கு உதவியவர்.

ஆனால்…

தனியாக, தானாக வருகிறார் என நினைக்கவில்லை. 

டீல் போடுவது (நிதி அல்லது சட்ட) ராஜுக்கு புதிதல்ல.

யாரோ அனுப்பி இருக்கிறார்கள். அல்லது உத்தரவாதமாவது கொடுத்திருப்பார்கள். 

பரவாயில்லை, ஒரு எச்சரிக்கை சேர் வரவேற்பை (cautious welcome) கொடுத்தே வைப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

 

 

 

 

மேலே மேற்கோள் காட்டியவர்களின் கருத்துக்களை வாசித்துப் பார்த்தீர்களானால்….
பலர் அவரை நேரடியாக சந்தித்தும், நீண்ட காலமாக தாயக தொடர்பிலும் இருக்கின்றார்
என்பதை அறிய முடிகின்றது. 

அத்துடன்  தான் வெற்றியடந்த வெள்ளையர் அல்லாதவர் என்பதால்….
சிக்க வைக்கப் பட்டதாக அவரே தனது புத்தகத்தின் மூலம் தெரிவிக்கின்றார்.

நீங்கள் குறிப்பிடுவது…. அண்மையில் கணடாவில் இருந்து சென்ற தொலதிபர்களைப் பற்றி என நினைக்கின்றேன். அவர்களைப் பற்றி நீங்களும், வேறு சிலரும்…. போர் நடந்த காலத்தில்  கூட,   அவர்கள் இலங்கை அரசுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும்… 
மகிந்த, கோத்தா காலத்திலும் அவர்கள் நாட்டுக்கு வந்து அரசுடன் உறவைப் பேணியவர்கள் என்றும் முன்பு வேறொரு தலைப்பில் எழுதியுள்ளார்கள்.

அரசுடன் பல்வேறு கட்டங்களில் தொடர்பிலிருந்தவர்களுடன்
திரு. ராஜ் ராஜரத்தினத்தை ஒப்பிட்டு…
அவர் மனதை நோகடித்து, தாயக மக்களுக்கு செய்ய வரும் உதவியை தடுத்து நிறுத்தாமல்
இருப்பதே தாயக மக்களை நேசிக்கும் எமக்கு அழகு. 

நன்றி👌

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

 

 

 

@Kapithan
மேலே மேற்கோள் காட்டியவர்களின் கருத்துக்களை வாசித்துப் பார்த்தீர்களானால்….
பலர் அவரை நேரடியாக சந்தித்தும், நீண்ட காலமாக தாயக தொடர்பிலும் இருக்கின்றார்
என்பதை அறிய முடிகின்றது. 

அத்துடன்  தான் வெற்றியடைந்த வெள்ளையர் அல்லாதவர் என்பதால்….
சிக்க வைக்கப் பட்டதாக அவரே தனது புத்தகத்தின் மூலம் தெரிவிக்கின்றார்.

நீங்கள் குறிப்பிடுவது…. அண்மையில் கனடாவில் இருந்து சென்ற தொழிலதிபர்களைப் பற்றி என நினைக்கின்றேன். அவர்களைப் பற்றி நீங்களும், வேறு சிலரும்…. போர் நடந்த காலத்தில்  கூட,   அவர்கள் இலங்கை அரசுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும்… 
மகிந்த, கோத்தா காலத்திலும் அவர்கள் நாட்டுக்கு வந்து அரசுடன் உறவைப் பேணியவர்கள் என்றும் முன்பு வேறொரு தலைப்பில் எழுதியுள்ளார்கள்.

அரசுடன் பல்வேறு கட்டங்களில் தொடர்பிலிருந்தவர்களுடன்
திரு. ராஜ் ராஜரத்தினத்தை ஒப்பிட்டு…
அவர் மனதை நோகடித்து, தாயக மக்களுக்கு செய்ய வரும் உதவியை தடுத்து நிறுத்தாமல்
இருப்பதே தாயக மக்களை நேசிக்கும் எமக்கு அழகு. 

சிறியர்,

1) ராஜ் தொடர்பாக  எனது கருத்தை மிகத் தெளிவாகவே (வரவேற்பதாக) கூறியுள்ளேன். எனவே  அவரைப்பற்றியது அல்ல  எனது கரிசனை. 

2) சிங்களத்துடன் ஆரம்பத்திலிருந்தே சேர்த்து இயங்குபவர்களைப் பற்றி எவருக்குமே கேள்வி எழப்போவதில்லை.

 இனிவரும் காலங்களில், வடக்கு கிழக்கிற்கு உதவ விரும்புவோர் சிங்கள அரசாங்க நிர்வாகிகள்+அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் உதவ முயன்றால், ராஜிற்குக் கிடைக்கும் அதே வரவேற்பு அவர்களுக்கும் கிடைக்குமா என்பதே எனது கேள்வி.  

[ஏனென்றால் சிங்களத்துடன் (நன்நோக்குடன்) தொடர்புகொள்ளும் எல்லோரும் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டதே வரலாறு. ]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.