Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடல் அட்டைப்பண்ணை வேண்டுமென யாழில் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடல் அட்டைப்பண்ணை வேண்டுமென யாழில் போராட்டம்

கடற்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு  கடலட்டை பண்ணைகள்  வேண்டுமென இன்று (30) வெள்ளிக்கிழமை யாழ் கோட்டை பகுதியில் இருந்து யாழ் பஸ் தரிப்பு நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பேரணியில் ஈடுபட்டவர்களால் கடற்தொழில் அமைச்சுக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது. பேரணிகள் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,  கடத்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அட்டை பண்ணைகள் பெரிதும் உதவுகின்றது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நாட்டுக்கும் மக்களுக்கும் அன்னிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு தொழிலாக அட்டைப்பண்ணை காணப்படுகின்றது. சிலர் தமது குறுகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடல் தொழிலும் அட்டப்பண்ணையும் செய்யாதவர்கள் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

யாழில் முறையான அனுமதிகளை உரிய திணைக்களங்கள் ஊடாக பெற்றே அட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளோம். அட்டப்பண்ணைகள் வேண்டுமென பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த மக்களுக்கு பண்ணைகளைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். 

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/கடல்-அட்டைப்பண்ணை-வேண்டுமென-யாழில்-போராட்டம்/175-309867

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈ.பி.டி.பி. கும்பல்... கூலிக்கு ஆட்களை கூட்டிக்  கொண்டு வந்து போராடுது போலுள்ளது.
மண்ணையே திருடி விற்பவர்களுக்கு,  சுற்றுச் சூழலை பற்றிய அக்கறை ஏன் வரப் போகுது.
தமிழ் நிலத்தை... கொள்ளையடித்து, பணம் பார்த்தால் சரி.

போய்.... சிங்களப்  பகுதிகளில் கடலட்டைப்  பண்ணை வேண்டுமென்று கேளுங்கள் பார்ப்போம்.
அவன் உங்களை, வெட்டி கருவாடு போட்டுடுவான்.
இயலாதவன் இடத்தில்தான்... உங்கள் சண்டித்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வரப்போகுது, தன்னை சேர்க்கும்படி குரல் கொடுத்து யாரும் காதில் வாங்கவில்லை, தான் பெரிய ஆள் மாதிரி அறிக்கை விட்டும் பலனில்லை, இதெல்லாம் பழைய நாடகந்தான். ஆட்களை பொய் சொல்லி திரட்டி வெய்யிலில் காயவைத்து தலைகீழாய் சுலோகங்களை பிடிக்கவைத்து படம்பிடித்து சித்து விளையாட்டு காட்டுவது இந்த எத்தனுக்கு புதிதல்லவே! மக்கள் தன்பக்கம், தான் நல்லது செய்கிறேன் என்று மற்றவர்களை கவருகிறாராம். உதில நிக்கிறவையை இரண்டு குடுத்து, அல்லது அவருக்கு மேலால கொடுத்து அவருக்கு எதிரா கோஷம் எழுப்புங்கோ என்றாலும் எழுப்புவார்கள் நாடககோஷ்டி! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஈ.பி.டி.பி. கும்பல்... கூலிக்கு ஆட்களை கூட்டிக்  கொண்டு வந்து போராடுது போலுள்ளது.
மண்ணையே திருடி விற்பவர்களுக்கு,  சுற்றுச் சூழலை பற்றிய அக்கறை ஏன் வரப் போகுது.
தமிழ் நிலத்தை... கொள்ளையடித்து, பணம் பார்த்தால் சரி.

போய்.... சிங்களப்  பகுதிகளில் கடலட்டைப்  பண்ணை வேண்டுமென்று கேளுங்கள் பார்ப்போம்.
அவன் உங்களை, வெட்டி கருவாடு போட்டுடுவான்.
இயலாதவன் இடத்தில்தான்... உங்கள் சண்டித்தனம்.

 

1 hour ago, satan said:

தேர்தல் வரப்போகுது, தன்னை சேர்க்கும்படி குரல் கொடுத்து யாரும் காதில் வாங்கவில்லை, தான் பெரிய ஆள் மாதிரி அறிக்கை விட்டும் பலனில்லை, இதெல்லாம் பழைய நாடகந்தான். ஆட்களை பொய் சொல்லி திரட்டி வெய்யிலில் காயவைத்து தலைகீழாய் சுலோகங்களை பிடிக்கவைத்து படம்பிடித்து சித்து விளையாட்டு காட்டுவது இந்த எத்தனுக்கு புதிதல்லவே! மக்கள் தன்பக்கம், தான் நல்லது செய்கிறேன் என்று மற்றவர்களை கவருகிறாராம். உதில நிக்கிறவையை இரண்டு குடுத்து, அல்லது அவருக்கு மேலால கொடுத்து அவருக்கு எதிரா கோஷம் எழுப்புங்கோ என்றாலும் எழுப்புவார்கள் நாடககோஷ்டி! 

கடல்அட்டைப் பண்ணைக்கு ஆதரவு தெரிவித்தால் அவர்கள் EPDP ஆதரவாளர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் தமிழ்த் தேசிய கட்சிகளின் ஆதரவாளர்களா ? 

ஒரே குழப்பமாக இருக்கிறது. 

😥

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கடல்அட்டைப் பண்ணைக்கு ஆதரவு தெரிவித்தால் அவர்கள் EPDP ஆதரவாளர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் தமிழ்த் தேசிய கட்சிகளின் ஆதரவாளர்களா ? 

ஒரே குழப்பமாக இருக்கிறது. 

😥

Laughing GIFs - Find & Share on GIPHY  Laughing GIFs - Find & Share on GIPHY  Laughing GIFs - Find & Share on GIPHY 

கடல் அலையைப் போல, வாழ்க்கையே ஒரு குழப்பம் தானே... 😂
இதுக்கெல்லாம் கவலைப் படக் கூடாது. 🤣

மேலுள்ள இரண்டு கடலட்டைப் பண்ணை எதிர்ப்புச் செய்திகளும் கடந்த நன்கு மாதங்களுக்கு உட்பட்டது.

என்ன நடக்கிறது ? அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத அறிவுரையின்கீழ் போராட்டம் நடத்துகிறார்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டக்ளஸ் கடற்தொழில் அமைச்சராக இருக்கும் நிலையில் இத்திட்டத்தை அமுல்படுத்த சல்லி வாங்கி இருப்பார். 
அவரின் அடிபொடிகளால்  போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்தக் கடலட்டைப் பண்ணைகளால் சூழல் ஆபத்து, மீன்வளப் பாதிப்பு இருக்கிறதா?    ஆம் எனின், இதைப் பற்றிய சூழல் பாதிப்பு (environmental impact) அறிக்கையைத் தயாரித்தது யார்?

யாழ் பல்கலையில் மீன்/கடல் வளத்துறையோடு தொடர்பான ஒருவர் இருக்கிறார் - அவர் வட மாகாண சபையில் முன்னாள் அமைச்சரெனவும் நினைக்கிறேன். ஏன் இது போன்ற விடயங்களில் வடக்கில் இருக்கும் இரு பல்கலைகளில் ஒன்றான யாழ் பல்கலை ஆய்வுச் சமூகம் மௌனமாக இருக்கிறது?

இதே மௌனம், அரசியல் கூச்சல் என்பன தான் சுன்னாகம் எண்ணைப் படிவிலும், மன்னார் காற்றாலைத் திட்டத்திலும் நிலவுகிறது. அரசியல்வாதிகளைத் தூக்கி ஒரு பக்கம் போட்டு விட்டு விஞ்ஞான ரீதியாக இதை அணுக ஒருவர் கூட யாழ், வவுனியா பல்கலைகளில் இல்லையா? 

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

மக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டக்ளஸ்

இதைத்தான் நானும் நினைத்தேன். கிழக்கிலும் இந்தப்போராட்டம் நடந்ததாக நினைவு.  "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்." கடற்தொழிலாளரை பிளவுபடுத்தி குளிர் காய நினைக்கிறார் போலுள்ளது! இது எல்லாத் துறைகளிலும் பரவும் அபாயமுள்ளது. அதற்காகவே பல தரகர்மார் மும்முரமாக இயங்குகிறார்கள். எப்போதும் தன் இயக்க ஆர்ப்பாட்டக்காரரை படம் எடுத்து தலைகீழாக  காட்டுவார், இந்தமுறை சிக்கவில்லையோ வெறும் செய்திதானா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

மேலுள்ள இரண்டு கடலட்டைப் பண்ணை எதிர்ப்புச் செய்திகளும் கடந்த நன்கு மாதங்களுக்கு உட்பட்டது.

என்ன நடக்கிறது ? அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத அறிவுரையின்கீழ் போராட்டம் நடத்துகிறார்களா ?

உண்மையில் இது ஒரு குழப்பமாக உள்ளது.அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக கடல் அட்டையை எதிர்கிறார்களா? அல்லது அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக கடல் அட்டையை ஆதரிக்கிறார்களா?

2 hours ago, Justin said:

இதே மௌனம், அரசியல் கூச்சல் என்பன தான் சுன்னாகம் எண்ணைப் படிவிலும், மன்னார் காற்றாலைத் திட்டத்திலும் நிலவுகிறது. அரசியல்வாதிகளைத் தூக்கி ஒரு பக்கம் போட்டு விட்டு விஞ்ஞான ரீதியாக இதை அணுக ஒருவர் கூட யாழ், வவுனியா பல்கலைகளில் இல்லையா? 

இருப்பார்கள். ஆனால்   விஞ்ஞான ஆராய்ச்சி உண்மைகள் தமிழ்தேசிய அரசியல்வாதிகளின் கருத்துக்கு எதிராக இருந்தால் அதை சொல்ல முடியாதல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

மக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டக்ளஸ் கடற்தொழில் அமைச்சராக இருக்கும் நிலையில் இத்திட்டத்தை அமுல்படுத்த சல்லி வாங்கி இருப்பார். 
அவரின் அடிபொடிகளால்  போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.

நுணா, உங்களுக்காவது இந்த கடலட்டைப் பண்ணை பற்றிய சூழல் பாதிப்புகள் பற்றித் தெரியுமா? அறிக்கையேதாவது தேடித் தர முடியுமா?

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

நுணா, உங்களுக்காவது இந்த கடலட்டைப் பண்ணை பற்றிய சூழல் பாதிப்புகள் பற்றித் தெரியுமா? அறிக்கையேதாவது தேடித் தர முடியுமா?

 

ஜஸ்டின் தேடிப்போகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இதே மௌனம், அரசியல் கூச்சல் என்பன தான் சுன்னாகம் எண்ணைப் படிவிலும், மன்னார் காற்றாலைத் திட்டத்திலும் நிலவுகிறது. அரசியல்வாதிகளைத் தூக்கி ஒரு பக்கம் போட்டு விட்டு விஞ்ஞான ரீதியாக இதை அணுக ஒருவர் கூட யாழ், வவுனியா பல்கலைகளில் இல்லையா?

நான் நினைக்கிறேன் உங்களது கருத்துப்படியான, அரசியல்வாதிகளை தள்ளி வைத்து விஞ்ஞான ரீதியில்  மக்களின் நன்மை கருதி ஆய்வுகளை மேற்கொள்ளவோ,    அரசியலை தாண்டி Neutral  ஆக பொதுவாக சிந்திக்கவோ  தமிழ் சூழலில் எவருக்கும் அக்கறை இல்லை. இங்கு ஐரோப்பிய நாடுகளில்  கூட நீங்கள் ஒருவர் தான் இப்படி கருத்து தெரிவித்துள்ளீர்கள். மற்றவர்கள் எல்லோரும் அரசியல் வாதிகளுடன் சாக்கடை அரசியல் கதையாடல்களை செய்வதில் தான் 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, island said:

நான் நினைக்கிறேன் உங்களது கருத்துப்படியான, அரசியல்வாதிகளை தள்ளி வைத்து விஞ்ஞான ரீதியில்  மக்களின் நன்மை கருதி ஆய்வுகளை மேற்கொள்ளவோ,    அரசியலை தாண்டி Neutral  ஆக பொதுவாக சிந்திக்கவோ  தமிழ் சூழலில் எவருக்கும் அக்கறை இல்லை. இங்கு ஐரோப்பிய நாடுகளில்  கூட நீங்கள் ஒருவர் தான் இப்படி கருத்து தெரிவித்துள்ளீர்கள். மற்றவர்கள் எல்லோரும் அரசியல் வாதிகளுடன் சாக்கடை அரசியல் கதையாடல்களை செய்வதில் தான் 

தாங்கள் எழுதலாமே என்பது எனது தயவான கோரிக்கை! நாங்கள் என்ன தெரிந்து கொண்டா எழுத மறுக்கிறோம்?

  • கருத்துக்கள உறவுகள்

குடாக்கடலில் சீனர்கள்:
உண்மையில் நடப்பதென்ன?
 - யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார


கெளதாரிமுனை கிராமசேவகர்
பிரிவிற்குள் வரும் கல்முனை பந்தலடி என்ற பகுதியில் அமைந்திருக்கும் கடலட்டைப் பண்ணையில்
சீனர்கள் காணப்பட்டமை சர்ச்சைகளைத்
தோற்றுவித்திருக்கிறது.
அக்கடலட்டைப் பண்ணை பற்றிய
விவரத்தை முதலில் வெளிப்படுத்தியது
கிளிநொச்சியை மையமாகக் கொண்டியங்கும் ஒரு
செய்தியாளர்தான். அப்பகுதியில் சீனர்கள் கடந்த
இரண்டரை மாதங்களாக கடலட்டை வளர்ப்பில்
ஈடுபட்டு வருவது தொடர்பான தகவல்கள்
அச்செய்தியாளருக்கு கிடைத்தன. மீனவர் சங்கத்தின்
சில முக்கியஸ்தர்கள் சீனர்களோடு இணைந்து
செயற்படுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
தனக்குக் கிடைத்த தகவலை
உறுதிப்படுத்துவதற்காக கல்முனை பந்தலடிக்கு
மேற்படி செய்தியாளர் சென்றிருக்கிறார். அங்கிருந்த
சீனர் கடல் வழியாகப் படகின் மூலம் அந்த
இடத்தைவிட்டு நீங்கிச் செல ;வதை கண்டிருக்கிறார்.
அந்த படகில் கியூலன் புரடையn (Pஎவ) டுவன பிரைவேட்
லிமிடெட் என்று எழுதப்பட்டிருக்கிறது.
அரியாலை கிழக்கில் ஏற்கனவே இயங்கி
வரும் கடலட்டைப் பண்ணையிலிருந்து அவர்கள்
படகுகள் மூலமாகவே கல்முனை பந்தலடிக்கி
வந்து போகிறார்கள். ஊடகங்களில் அந்த இடம்
கெளதாரிமுனை என்று குறிப்பிடப்பட்டாலும்
அது கல்முனை பந்தலடி என்பதே சரி.கல்முனை
கடலில் வெற்று பிளாஸ்டிக் பரல்களை பரப்பி
அவற்றின்மீது குடில் ஒன்றை அமைத்து சீனர்கள்
அதில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் பூநகரிப்
பகுதியூடாக அதாவது தரை வழிப் பாதை ஊடாக
அந்தப் பகுதிக்கு செல்வதில்லை. மாறாக கடல்வழிப்
பாதை ஊடாக அரியாலை கிழக்கில் இருந்து
அங்கே வருகிறார்கள். கல்முனை பந்தலடியிருந்து
கிழக்கு அரியாலை இருபது நிமிடங்களுக்கு குறையாத கடற்பயணத் து}ரம்.
அரியாலை கிழக்கில் ஏற்கனவே
ஒரு கடலட்டைப் பண்ணையை அவர்கள்
வைத்திருக்கிறார்கள். அந்தப்பண்ணை 2011ஆம்
ஆண்டு ஒரு தென்னிலங்கையைச் சேர்ந்த
சிங்களக் குடிமகனின் பெயரில் பதியப்பட்டுள்ளது.
அவர்தான்2018இல் சீனர்களை அங்கே கொண்டு
வந்தார். சீனர்களோடு தமிழர்களும் வேலை
செய்கிறார்கள். முகாமையாளராக இருப்பவர் ஒரு
தமிழர். உதவியாளர்களாகவும் தமிழர்கள் உண்டு.
அப்பண்ணை கடற்கரையில் ஒரு தனியாருக்கு
சொந்தமான காணியில் அமைக்கப்பட்டிருக்கிறது.
கடற்கரையில் 16 சீமெந்துத் தொட்டிகளை
உருவாக்கி அந்த தொட்டிகளில் கடற் சூழலை
செயற்கையாக ஏற்படுத்தி அதற்குள் கடலட்டைக்
குஞ்சுகளை உற்பத்தி செய்கிறார்கள். இந்த
கடலட்டைக் குஞ்சுகளைத்தான் சம்பந்தப்பட்ட
திணைக்களங்களும் உட்பட பெரும்பாலான
கடலட்டை வளர்ப்பவர்கள் விலைக்கு
வாங்குகிறார்கள். அப்பண்ணையைத்தான்
கல்முனை கடலை நோக்கி அவர்கள் விஸ்தரிக்க
முயன்றதாக கருதப்படுகிறது.
ஆனால் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
அதைத்தொடர்ந்து கல்முனை பந்தலடி பகுதியைச் சேர்ந்த விநாயகர் கடற்றொழிலாளர்
சங்கத்தின் பெயரால் இரண்டு ஏக்கர் காணியில்
கடலட்டைப் பண்ணை ஒன்றை உருவாக்குவதற்கு
குறிப்பிட்ட துறைசார் திணைக்களத்திடம் அனுமதி கோரப்பட்டிருக்கிறது. எனினும் அனுமதி
இதுவரையிலும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால் சீனர்கள் கடற்றொழிலாளர் சங்கத்தின்
முக்கியஸ்தர்கள் சிலருடைய அனுசரணையோடு
அங்கே கடலட்டை வளர்ப்பை தொடங்கிவிட்டார்கள்
என்று கூறப்படுகிறது.
கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக தமிழ்
கடற்பகுதிகளில் கடலட்டை பண்ணைகள்
உருவாக்கப்பட்டு வருகின்றன. சுமார் 15
கடலட்டைகளைக் கொண்ட ஒரு கிலோ கடலட்டை
கிட்டத்தட்ட 20>000 ரூபாய்க்கு போகிறது. இது
சீனாவில் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துக்கு
விற்கப்படும் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும்
கடலட்டையில் பெரும்பகுதியை சீன நிறுவனங்களே
கொள்வனவு செய்கின்றன.
அரியாலை கிழக்கில் சீனர்கள்
தங்கியிருக்கும் பண்ணை அமைந்திருக்கும் இடம் 
யாழ் குடா நாட்டின் வரைபடத்தில் குடாக்கடலை
நோக்கி துருத்திக்கொண்டு தெரியும் ஒரு ஒப்நிலத்
துண்டு ஆகும். அப்படித்தான் கல்முனை பந்தலடியும்.
பெரு நிலப்பரப்பிலிருந்து கடலை நோக்கி
துருத்திக்கொண்டு தெரியும் ஒரு நிலத்துண்டு
அது. இவ்விரண்டு நிலத் துண்டுகளிலும் நிலை
கொண்டிருப்பவர்கள் குடாக்கடலின் மீது தமது
கண்காணிப்பை வைத்திருக்கலாம். கல்முனையில்
இருந்து குறுக்காக கிட்டத்தட்ட 48 கிலோமீட்டர்
தொலைவில் நெடுந்தீவு காணப்படுகிறது.
நெடுந்தீவில் இருந்து குறுக்காக ஏறக்குறைய
50கிலோ மீட்டர் தொலைவிலேயே தமிழகம்
காணப்படுகிறது.
நெடுந்தீவும் உட்பட யாழ் குடாநாட்டின் மூன்று
தீவுவுகளில் சீனா மீளப் புதுப்பிக்கப்படும் எரிசக்தி
திட்டம் ஒன்றை நிறுவ இருக்கிறது. அதற்குரிய
காணிகள் சுவீகரிக்கப்பட்டு வேலியிடப்பட்டு
அவற்றில் இது மின்சார சபைக்கு சொந்தமான
இடம் இதற்குள் யாரும் நுழையக்கூடாது என்று
அறிவித்தல் பலகை நடப்பட்டிருக்கிறது.
எனவே கிழக்கு அரியாலை>
கல்முனையில் பந்தலடி> நெடுந்தீவுமுட்பட மூன்று
தீவுகள் ஆகியவற்றை இணைத்து குடாக்கடல்
உள்ளடங்களாக பாக்கு நீரிணையில் நெருக்கமான
ஒரு வலைப்பின்னலை உருவாக்கலாம்.
அப்படிப்பார்த்தால் இதை வெறுமனே கடலட்டை
விவகாரமாக மட்டும் பார்க்கலாமா என்ற
சந்தேகங்களும் உண்டு.
ஆனால் சீனர்கள் உலகம் முழுவதும் தாங்கள்
சந்தைகளைத்தான் திறப்பதாக கூறுகிறார்கள்.
தங்களுடைய பிராந்தியத்துக்கு வெளியே உலகில் எந்த ஓரிடத்திலும் தாங்கள் போர்முனையைத்
திறக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். சீன
விரிவாக்கம் எனப்படுவது முழுக்க முழுக்க சந்தை
விரிவாக்கம்தான். உட்கட்டுமான அபிவிருத்திதான்
இந்த உட்கட்டுமான அபிவிருத்திகள் அனைத்தும்
சீனாவை நோக்கி மூலப்பொருட்களை கொண்டு
செல்லும் அதே சமயம் சீனாவில் இருந்து உற்பத்தி
செய்யப்பட்ட பொருட்களை வெளிச் சந்தைக்கு
கொண்டு வரும் நோக்கிலானவை. எனவே சீனா
உலகம் முழுவதும் முதலீடுகளை மட்டுமே நகர்த்தி
வருவதாக கூறிக் கொள்கிறது.
மாறாக மேற்கு நாடுகள் படைகளை
நகர்த்துகின்றன. உலகின் பல்வேறு இடங்களில்
மேற்கு நாடுகள் படைத்தளங்களைப் பேணி
வருகின்றன. ஆனால் சீனா பொதுவாக
முதலீடுகளைத்தான் நகர்த்தி வருகிறது. அது
ஆக்கிரமிப்பு நோக்கிலானது அல்ல என்று சீனாவை ஆதரிப்பவர்களும் சீன முதலீடுகளை
ஊக்குவிப்பவர்களும் கூறிவருகிறார்கள்.
சீனாவுக்கு எதிராக தேவையற்ற பயம்
ஒன்றை உலகம் முழுவதிலும் உள்ள ஒரு பகுதி
விமர்சகர்கள் மற்றும் ராஜதந்திரிகள் கட்டி எழுப்பி
வருவதாக சீனாவின் ஆதரவாளர்கள் குற்றம்
சாட்டுகிறார்கள். இது ஒருவித அச்ச நோய்.
அதாவது சீனா போபியா என்றும் அவர்கள்
கூறுகிறார்கள்.
ஆனால் இது தனிய முதலீடு மட்டுமல்ல
இதுவும் ஒரு ஆக்கிரமிப்புத்தான் என்று சீனாவை
சந்தேகத்தோடு பார்ப்பவர ;கள் கூறுகிறார்கள்.
பலமான ஒரு பொருளாதாரம் நிதி ரீதியாக நலிவுற்ற
பொருளாதாரங்களின் மீது மேற்கொள்ளும்
ஆக்கிரமிப்பு இதுவென்றும் தேவைகளை
அடிப்படையாக வைத்து இயலாமையைச் சுரண்டி
ஒரு சந்தை ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்படுகிறது
என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இதுவும்
கத்தியின்றி ரத்தமின்றி நிகழும் ஒரு யுத்தம்தான்
என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இது சீனாவின் கடன் பொறி அல்லது சந்தை குண்டு
என்றும் அவர்கள் அழைக்கிறார்கள்.
மேலும் சீனப் பெருந்தலைவர் மாவோ
சே துங் முன்பு கூறிய ஒரு கதையை அவர்கள்
நினைவுபடுத்துகிறார்கள். பெரிய மீனும் சிறிய
மீனும் வசிக்கும் ஒரு கடலில் பெரிய மீன் சிறிய
மீன்களை தனக்கு உணவாகச் சாப்பிட்டு வந்தது.
ஒரு கட்டத்தில ; சிறிய மீன்கள் பெரிய மீனிடம்
போய் முறையிட்டன. அப்பொழுது பெரிய மீன்
கூறியது இங்கு எல்லோருமே சமம். அவரவர்
அவரவருக்கு விருப்பமானதை சாப்பிடலாம் என்று.
ஆனால் சிறிய மீன்களால் அவற்றின் சிறிய
வாயால் எப்படி பெரிய மீனைச் சாப்பிடுவது?
நாடுகளுக்கிடையே நிதி ரீதியாக  

ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் போது பலம் தொடர்பில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் போது எல்லோரும் ஒன்று தான் எல்லோரும் ஒன்றையே செய்யலாம் என்று கூறுவதைப் போன்றது தான் வறிய நாடுகள் மீதான் சீனாவின் முதலீடுகளும் என்று சீனாவை விமர்சிக்கும் தரப்பினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இப்படிப்பட்ட வாதப்பிரதிவாதங்களின்
பின்னணியில்தான் இலங்கைத் தீவிலும் சீன
முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. ஒருபுறம்
அந்த முதலீடுகளை விமர்சிப்பவர்கள் விமர்சித்துக்
கொண்டேயிருக்க இன்னொருபுறம் சீனர்கள்
தென்னிலங்கையை தாண்டி தமிழ் பகுதிகளுக்கும்
பரவி வருவதைத்தான் கல்முனைக்கடலில்
அனுமதி பெறப்படாத கடலட்டைப் பண்ணை
உணர்த்தியிருக்கிறதா?

https://uthayannews.ca/wp-content/uploads/2020/12/July_2_2021.pdf

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

தாங்கள் எழுதலாமே என்பது எனது தயவான கோரிக்கை! நாங்கள் என்ன தெரிந்து கொண்டா எழுத மறுக்கிறோம்?

சாத்தான், நான் கூறியதன் பிரதான கருப்பொருள், இவ்வாறான மக்கள் பிரச்சனைகளில் கூட தமது அரசியல் செய்யும்  எமது அரசியல்வாதிகளின் மனப்பாங்கு பற்றியது.

இங்கு எழுதுவது என்பதை,  உதாரணமாகவே குறிப்பிட்டேன். இந்த மனப்பாங்கு  அரசியல்வாதிகளை தொற்றிக்கொண்டாதே மக்காகிய நம் எல்லோருடம் இருந்தே. பொது நலத்திட்டங்களில் அரசியலை நுழைக்காமல் சிந்தித்தால் நம் எல்லோருக்கும் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கடல் அட்டைப் பண்ணை அமைக்க தடை என்று, 
இங்கு இணைக்கப் பட்டிருந்த செய்தி ஒன்றில் வாதித்தேன்.

செய்தி உண்மையானால்.....

இந்தியா தனது நாட்டில் தடை செய்துவிட்டு,  
இங்கு கடல் அட்டை  குஞ்சுகளை  மீனவர்களுக்கு கொடுப்பது ஏன்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒருவருக்கும் மீனவர்களின் பிரச்சனைகள் கண்ணில் தெரியவில்லை. எல்லோரும் அரசியல்வாதிகளையும் சீனர்க்ளைப்பற்றியுமே பேசுகிறார்கள். 

கடலட்டைப் பண்ணைகளுக்கான தேவை என்பது மீனவர்களின் தேவை என்ன என்பதிலிருந்துதான் பிறக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, island said:

இங்கு ஐரோப்பிய நாடுகளில்  கூட நீங்கள் ஒருவர் தான் இப்படி கருத்து தெரிவித்துள்ளீர்கள். மற்றவர்கள் எல்லோரும் அரசியல் வாதிகளுடன் சாக்கடை அரசியல் கதையாடல்களை செய்வதில் தான் 

அவர்  ஐரோப்பிய நாடுகளில் இல்லை அமெரிக்காவில் வசிக்கிறார்
ஆனால் நீங்கள் சொன்ன அரசியலை தாண்டி சரியாக சிந்திப்பது என்பது ஏகாதிபத்திய சுரண்டல் மேற்குலகநாடுகளில் வாழ்கின்ற பெரும்பான்மை தமிழர்களிடம் கிடையாது என்பது உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

வந்தாலும் பிரச்சினை வராவிட்டாலும் பிரச்சனை ஆக மொத்தத்தில் பிரச்சினையை வைத்தே பினாமிகள் வாழ்கிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கடல் அட்டைகள், மக்கள் உண்ணும் உணவாக பயன்படுகிறதா?

தமிழ் நாட்டில் நான் இவற்றை எந்த மீன்கடைகளிலும் பார்த்ததே இல்லையே? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

இந்த கடல் அட்டைகள், மக்கள் உண்ணும் உணவாக பயன்படுகிறதா?

தமிழ் நாட்டில் நான் இவற்றை எந்த மீன்கடைகளிலும் பார்த்ததே இல்லையே? 🤔

இலங்கையிலும் இதனை உண்பதில்லை. 
சீனர்கள் இதனை விரும்பி உண்பதால்,   ஏற்றுமதி மூலம் அதிக பணம் கிடைக்கும்,
என்பதால் இதனை வளர்க்க இதன் பின் புலத்தில் சிங்கள முதலாளிகளும், சீனர்களும்,
அரசியல்வாதிகளும் பின் நின்று உள்ளூர் மீனவர்களை தூண்டி விட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2022 at 19:27, தமிழ் சிறி said:

இந்தியா தனது நாட்டில் தடை செய்துவிட்டு,

அங்கு தடை செய்யப்படுவதெல்லாம், பயனற்றது என தள்ளி வைப்பதெல்லாம், கொடையாக இங்கே தள்ளப்படும். நன்கொடை, உதவியென கணக்கு வைக்கப்படும்!

2 hours ago, தமிழ் சிறி said:

இதனை வளர்க்க இதன் பின் புலத்தில் சிங்கள முதலாளிகளும், சீனர்களும்,
அரசியல்வாதிகளும் பின் நின்று உள்ளூர் மீனவர்களை தூண்டி விட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.

இந்தத் தொழிலை சிங்கள மீனவருக்கு கற்றுக்கொடுத்ததே நம்ம மீனவர்தான்!

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ராசவன்னியன் said:

இந்த கடல் அட்டைகள், மக்கள் உண்ணும் உணவாக பயன்படுகிறதா?

தமிழ் நாட்டில் நான் இவற்றை எந்த மீன்கடைகளிலும் பார்த்ததே இல்லையே? 🤔


நாங்களும் இலங்கை சென்ற போது சாப்பாட்டுகடைகளில் மீன், நண்டு, இறால், Octopus-கணவாய்  கண்டோம். இதை மட்டும் காணவில்லை. வெளிநாடுகளுக்கு அதிக விலையில் விற்கமுடியும் என்றபடியால் கடல் அட்டைகளை உற்பத்தி செய்கிறார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, இடப்பெயர்வுகளுக்குமுன் சிலவேளைகளில் பெற்றோர் நம்மை கடலுக்கு அழைத்துச்செல்வார்கள். ஓரளவு ஆழத்திற்கு அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு கடலில் நடக்கும்போது காலில் நழுக்கென்று ஏதோ மிதிபடும் அந்த உணர்ச்சி காலில் கூச்சத்தை உண்டாக்கும், குனிந்து பாத்தால் கறுப்பாக தரையில் நாம் காணும் பேனா அட்டை வடிவில் தடித்த கொழுத்த உருவில் கிடக்கும், அப்போ அப்பா சொன்னார் அது கடல் அட்டையென்று, அது சரியாக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அப்போது யாரும் கடலட்டை பற்றி அறிந்திருக்கவில்லை, பேசவில்லை. மீண்டும் நாம் சொந்த இடத்திற்கு வந்தபோது தென்னிலங்கையர் இந்த தொழிலில் நம்ம கடற்பிராந்தியத்தில் ஈடுபடுவதாகவும், நம்ம கடற்தொழிலாளரே அவற்றை அவர்களுக்கு அறிமுகம் செய்து, பயிற்றுவித்ததாகவும் அதைத்தொடர்ந்து அவர்கள் கடலோரங்களை சுற்றி குடியேறியதும் அதற்கு எதிராக போராட்டங்களும் தொடர்கின்றன. சீனரின் வருகையால் இது பிரபல்யம் அடைந்திருக்கலாம். இதை ஏன் சொல்கிறேனென்றால்; எங்கள் பிரதேசங்களில் எத்தனையோ இயற்கை வளங்கள் கவனிப்பாரற்று, ஊக்குவிக்கப்படாமல், அறியாமல், அறிமுகப்படுத்தாமல், இனங்காணாமல் கொட்டிக்கிடந்தன, கிடக்கின்றன ஆனால்அவற்றை தென்னிலங்கையும் அந்நிய நாட்டினரும் உதவி, அபிவிருத்தி என்கிற பெயரில் வந்து இனங்கண்டு சுரண்டிக்கொண்டு போகிறார்கள்.  நாங்கள் இன்னும் அரசியல்வாதிகள் ஊழல் செய்வதற்கும், அவர்களின் தரகுப்பணத்திற்கும் தெருக்களில் நின்று கூக்குரலிட்டு கொண்டிருக்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.