Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sasi_varnam said:

இது போன்ற அபத்த "தீவிர தமிழ் தேசிய கருத்துக்களை" 2023 யிலும் வாசிக்கவேண்டி இருக்கிறதே. கொடுமை!!!  இந்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் பெருமாள் 

நன்றி வணக்கம் உங்கள் கருத்துக்கு .

  • Replies 148
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் பிரதேசவாதத்தை முதலில் கையில் எடுத்தது கரு தான்...அவர் திரும்ப ,திரும்ப மீரா,சாத்தான் போன்றவர்கள் சாணக்கியன் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்ற படியால் எதிர்க்கிறார்கள் என்று எழுதின படியால் தான் இங்கால இவர்களும் சாணக்கியனது பரம்பரையை கிண்ட தொடங்கினார்கள் ...இவர்கள் எழுதினது எவ்வளவு பிழையோ அதை விட பெரிய பிழை கரு தேவையில்லாமல் பிரதேசவாதத்தை கையில் எடுத்தது 
படித்தவர்கள் பலருக்கு பிரதேசவாதம் கண்ணில் படாதது ஆச்சரியமே !

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

இந்த திரியில் பிரதேசவாதத்தை முதலில் கையில் எடுத்தது கரு தான்...அவர் திரும்ப ,திரும்ப மீரா,சாத்தான் போன்றவர்கள் சாணக்கியன் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்ற படியால் எதிர்க்கிறார்கள் என்று எழுதின படியால் தான் இங்கால இவர்களும் சாணக்கியனது பரம்பரையை கிண்ட தொடங்கினார்கள் ...இவர்கள் எழுதினது எவ்வளவு பிழையோ அதை விட பெரிய பிழை கரு தேவையில்லாமல் பிரதேசவாதத்தை கையில் எடுத்தது 
படித்தவர்கள் பலருக்கு பிரதேசவாதம் கண்ணில் படாதது ஆச்சரியமே !

4 பக்கம் ஓடிய திரிக்குள் இது தான் பொருள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2023 at 09:38, குமாரசாமி said:

அன்ரன் பாலசிங்கம் அண்ணர் மட்டக்களப்பா?

திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தன்னை மட்டக்களப்பாராய் காட்டிக் கொண்டதில்லை...தெரிந்திருந்தால், கருணாவுக்கு முதல் இவருக்கு துரோகி பட்டம் கிடைத்திருக்கும் 😇
 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரதி said:

இந்த திரியில் பிரதேசவாதத்தை முதலில் கையில் எடுத்தது கரு தான்...அவர் திரும்ப ,திரும்ப மீரா,சாத்தான் போன்றவர்கள் சாணக்கியன் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்ற படியால் எதிர்க்கிறார்கள் என்று எழுதின படியால் தான் இங்கால இவர்களும் சாணக்கியனது பரம்பரையை கிண்ட தொடங்கினார்கள் ...இவர்கள் எழுதினது எவ்வளவு பிழையோ அதை விட பெரிய பிழை கரு தேவையில்லாமல் பிரதேசவாதத்தை கையில் எடுத்தது 
படித்தவர்கள் பலருக்கு பிரதேசவாதம் கண்ணில் படாதது ஆச்சரியமே !

சிறி திருத்தம் சாணக்கியவின் பரம்பரை தொடர்பாக நான் எதுவும் எழுதவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

4 பக்கம் ஓடிய திரிக்குள் இது தான் பொருள்.

சாமிவோவ்,

இதையேதான் சாமியோவ் நான் 3ம் பக்கத்தில சொல்லி இருக்கன்.

சில்லறைய பூரா அக்காவின் தட்டில் போடாமல் என் தண்டிலும் கொஞ்சம் போடுங்க சாமியோவ்🤣

2 hours ago, ரதி said:

இந்த திரியில் பிரதேசவாதத்தை முதலில் கையில் எடுத்தது கரு தான்...அவர் திரும்ப ,திரும்ப மீரா,சாத்தான் போன்றவர்கள் சாணக்கியன் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்ற படியால் எதிர்க்கிறார்கள் என்று எழுதின படியால் தான் இங்கால இவர்களும் சாணக்கியனது பரம்பரையை கிண்ட தொடங்கினார்கள் ...இவர்கள் எழுதினது எவ்வளவு பிழையோ அதை விட பெரிய பிழை கரு தேவையில்லாமல் பிரதேசவாதத்தை கையில் எடுத்தது 
படித்தவர்கள் பலருக்கு பிரதேசவாதம் கண்ணில் படாதது ஆச்சரியமே !

கரு ஆதாரம் இல்லாமல் பிரதேசவாதம் என கூறியது தவறேதான். 

ஆனால் அதற்கு வந்த பதில்? 

நீங்களும் ஒரு பக்கத்தை மட்டும் நோவதாக படுகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தன்னை மட்டக்களப்பாராய் காட்டிக் கொண்டதில்லை...தெரிந்திருந்தால், கருணாவுக்கு முதல் இவருக்கு துரோகி பட்டம் கிடைத்திருக்கும் 😇
 

இங்கே நீங்களே கரு சொன்னதை போலதானே சொல்கிறீர்கள்?

கரு சாணாக்கியனின் மீதான தாக்குதலுக்கு அவரின் மட்டகளப்பு அடையாளம் காரணம் என்கிறார். 

நீங்கள் பாலா அண்ணை தன் மட்டகளப்பு என்பதை சொல்லி இருந்தால் அவருக்கும் அதுவே நடந்திருக்கும் என்கிறீகள்?

உங்கள் நிலைப்பாடு ஏறுக்குமாறாக இருக்கிறதே ?

பிகு

இங்கே பலருக்கு அடிமனதில் யாழ் மையவாதம் இருப்பதாக நான் முன்பே சந்தேகித்தே உள்ளேன்.

ஆனால் இந்த திரியில் அது வெளிப்பட்டதாக நான் உணரவில்லை.

ஆனால் பலரின் மதவாதம் மிக கொச்சையாக பல்லிளித்தது.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

சாமிவோவ்,

இதையேதான் சாமியோவ் நான் 3ம் பக்கத்தில சொல்லி இருக்கன்.

சில்லறைய பூரா அக்காவின் தட்டில் போடாமல் என் தண்டிலும் கொஞ்சம் போடுங்க சாமியோவ்🤣

சரி சரி உங்க தட்டிலும் போட்டிருக்கு.

இந்த பிச்சைக்காரர் தொல்லை தாங்க முடியலை.(பகிடிக்கு)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

பலருக்கு பிரதேசவாதம் கண்ணில் படாதது ஆச்சரியமே !

எனக்கு இலங்கை தமிழர்கள் என்பது மட்டுமே தெரியும். யாழ்பாணத்து அரசியல்வாதியையோ அல்லது கிழக்கு மாகாணத்து அரசியல்வாதியையோ பெயர், மதம், காதலி, எந்த நாட்டவர்களுடன் வாழ்கிறார் என்று சொல்லி தாக்குவதை ஏற்றுகொள்ள முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

சரி சரி உங்க தட்டிலும் போட்டிருக்கு.

இந்த பிச்சைக்காரர் தொல்லை தாங்க முடியலை.(பகிடிக்கு)

நீங்க நல்லாருக்கணும் சாமியோவ் 🤣

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

எனக்கு இலங்கை தமிழர்கள் என்பது மட்டுமே தெரியும்.

உங்களுக்கு மட்டும் அல்ல எமது எதிரிக்கும் அப்படித்தான்.

அடிக்கும் போது நீ புரட்ஸ்தாந்தா, கத்தோலிக்கமா, சைவமா எண்டு கேட்கவில்லை - தமிழனா - தூக்கி போடு தார்பீப்பாவில் என்பதே நடந்தது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/1/2023 at 21:15, satan said:

உண்மையாகவே பாலா அண்ணா எந்த இடம் என்பது இன்றுவரை எனக்கு தெரிந்திருக்கவில்லை, அதற்கான தேவையுமில்லை. நாம் எல்லோரும் ஒரு நோக்கத்திற்காக ஏதோ ஒருவகையில் எமது பங்களிப்பை எமக்கு முடிந்தவகையில் செய்திருக்கிறோம். நாம் ஒரு அடக்கப்பட்ட இனம் அவ்வளவே. இதில் எந்த வாதத்திற்கும் இடமில்லை.

இந்த திரியின் நிதர்சன கருத்து. 👍🏼

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2023 at 21:45, பெருமாள் said:

அப்படியா அவர் தமிழ் மக்களுக்கு இதுவரை செய்த ஒரு நாலு விடயத்தை இங்கு எழுதமுடியுமா ?

வரும் தேர்தலுக்கு ராகுல் (உண்மை பெயரால் அழைப்போம்) புதிய மொந்தையில் பழைய 'கள் அவ்வளவே .

எனக்கு ஒரு கேள்வி பதில் கிடைக்குமா ?

😃

  • கருத்துக்கள உறவுகள்

ஹாய் கோஷான்! அக்காச்சி களமிறங்கியாச்சு, ஆடிப்பாருங்கோ முடிந்தால். நீங்கள்தானே வருந்தி அழைத்தீர்கள் அவாவை. பாப்போம் பாப்போம் உங்கள் வாய் வீரத்தை!

8 hours ago, goshan_che said:

இங்கே பலருக்கு அடிமனதில் யாழ் மையவாதம் இருப்பதாக நான் முன்பே சந்தேகித்தே உள்ளேன்.

ஆனால் இந்த திரியில் அது வெளிப்பட்டதாக நான் உணரவில்லை.

ஐயா! நீங்கள் ஒரு முற்றுந்துறந்த இல்லை முக்காலமும் அறிந்த ஞானி.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

ஹாய் கோஷான்! அக்காச்சி களமிறங்கியாச்சு, ஆடிப்பாருங்கோ முடிந்தால். நீங்கள்தானே வருந்தி அழைத்தீர்கள் அவாவை. பாப்போம் பாப்போம் உங்கள் வாய் வீரத்தை!

ஐயா! நீங்கள் ஒரு முற்றுந்துறந்த இல்லை முக்காலமும் அறிந்த ஞானி.

உம்மை உடான்ஸ்சாமியார் ஆசீர்வதிக்கிறார்!

நீங்கள் ஏன் என்னிடம் வந்து 8 நாள் உடான்ஸ்-யோகா பயிலக்கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

உம்மை உடான்ஸ்சாமியார் ஆசீர்வதிக்கிறார்!

நீங்கள் ஏன் என்னிடம் வந்து 8 நாள் உடான்ஸ்-யோகா பயிலக்கூடாது?

வரலாந்தான், யோகாவை விட தேகம் முக்கியம்! அதென்ன எட்டுநாள் கணக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

வரலாந்தான், யோகாவை விட தேகம் முக்கியம்! அதென்ன எட்டுநாள் கணக்கு?

யோகா பட்டறை முடிவில் நீங்களாகவே ஓடி போய் கிணற்றில் குதிக்கும் அளவுக்கு உங்களை தயார் பண்ணி எடுப்போம். அதுக்கு 8 நாள் தேவைப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ முடிவோடதான் பொம்பிளைக்கூட்டத்தோட கம்பு சுத்துறீங்கள், வேண்டி முறியாமல் இருந்தால் தொடருகிறேன், அதுவரை விலகியிருந்து ஆட்டத்தை ரசிக்க முடிவெடுத்துவிட்டேன்! அங்காலைஅக்காச்சி தேடுறா உங்களை.

கூப்பிட்டுவிட்டு ஒளித்து விட்டீர்கள் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

"கரு" என்ற பெயரை அவர் வைத்திருப்பதால் அவர் அப்படித் தான் இருப்பார் என்று நீங்கள் சொன்னது என்ன அர்த்தத்தில்? பெயரில் என்ன இருக்கிறது?, முக்கியமாக எல்லோரும் அவதாரப் பெயரில் உலவும் யாழில் பெயருக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது? நீங்கள் எப்போதும் தமிழன் என்று பெயர் வைத்திருப்பதால் நீங்கள் "தமிழராகி" விட்டீர்களா? இல்லையல்லவா?

அவர் எடுத்தவுடனேயே பிரதேசவாதத்தை கையிலெடுத்ததால்தான் அவரது முகப்பெயர்பற்றி குறிப்பிட்டேன். மற்றும்படி அவர் யார், எப்படிப்பட்டவர் என்றெல்லாம் அறியும் தேவை எனக்கில்லை.
நான் தமிழனென்பதால்தான் முகப்பெயரை அப்படி வைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

இவை தான் என் கேள்விகள்.

தீவிர தமிழ் தேசியர்களின் அடிப்படை இயல்பு எல்லோரையும் பகைத்துத் தள்ளி வைத்து விடுவது. வாழ் நாள் முழுவதும் தமிழுக்கும், இனத்திற்கும் ஏதாவது செய்து கொண்டிருப்பவனையும் ஒரு சிறு சர்ச்சையில் தாக்கி விலகிப் போகச் செய்து விடுவது. இது எப்படி தமிழினத்திற்கு நன்மை தரும் என நினைக்கிறீர்கள்?

ஏற்கனவே குறுகித் தறித்து தெருவில் நிற்கிறோம், இந்த லட்சணத்தில் பெயர், மதம், கட்டின இடம் இதெல்லாம் பார்க்க luxury இருக்கிறதா எங்களுக்கு?

ஒருவர் கூட்டமைப்பில் சேர வாய்ப்புக்கிடைக்கவில்லை என்பதால் எதிரி கட்சியில் சேர்ந்து எல்லா ஆட்டமும் போட்டுவிட்டு, இப்போ கூட்டமைப்பில் சேர்ந்தவுடன் எமது இனத்திற்கு நன்மை செய்வார் என்று எப்படி எதிர்பார்ப்பது. இதனால்தான் எதிர்கருத்து வைக்கப்பட்டதேயொழிய அவரது பெயர், மதம், பிரதேசம் என்பதற்காக அல்ல. எல்லாம் சுமந்திரனால் கிடைத்த பட்டறிவு.

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் மதம் கட்டின இடமெல்லாம் பெரிசா தெரிந்தவர்களுக்கு பிரதேசவாதம் கண்ணுக்க தெரியவில்லை. அதுக்க கவிஞர் என்ற பட்டம் வேற கொடுக்கினம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Eppothum Thamizhan said:

ஒருவர் கூட்டமைப்பில் சேர வாய்ப்புக்கிடைக்கவில்லை என்பதால் எதிரி கட்சியில் சேர்ந்து எல்லா ஆட்டமும் போட்டுவிட்டு, இப்போ கூட்டமைப்பில் சேர்ந்தவுடன் எமது இனத்திற்கு நன்மை செய்வார் என்று எப்படி எதிர்பார்ப்பது. இதனால்தான் எதிர்கருத்து வைக்கப்பட்டதேயொழிய அவரது பெயர், மதம், பிரதேசம் என்பதற்காக அல்ல. எல்லாம் சுமந்திரனால் கிடைத்த பட்டறிவு.

இங்கே மதம், குலம் கோத்திரம் பற்றி நான் குறிப்பிட்டவை பெருமாளுக்கு மட்டுமான பதில்கள். அவரது பெயர் பற்றிய என் கருத்து மட்டுமே உங்களுக்கானது. நீங்கள் தமிழன் என்பதால் இந்த அவதார் பெயர் வைத்திருக்கிறீர்கள், கரு வின் பெயருக்கும் ஒரு காரணம் இருப்பதை அறிவேன், ஆனால் பெயரில் என்ன இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

பெயர் மதம் கட்டின இடமெல்லாம் பெரிசா தெரிந்தவர்களுக்கு பிரதேசவாதம் கண்ணுக்க தெரியவில்லை. அதுக்க கவிஞர் என்ற பட்டம் வேற கொடுக்கினம்.

 

கரு ஒரு கவிஞரும், தமிழறிவாளரும் தான்: யாழுக்கு உள்ளேயும், வெளியேயும். இதைச் சொல்வதில் என்ன தயக்கம் வேண்டியிருக்கிறது?

பிரதேசவாதம் தெரிந்தது, ஆனால் அதற்கு பெருமாளின் பதில் மிகக் கீழ்த்தரமாக இருந்ததால் எதிர்வினை தேவைப் பட்டது.

கவனித்தீர்களானால், பின்னர் வந்து பிரதேச வாதத்தைக் கண்டித்த இருவர் பெருமாளின் மதவாதக் கருத்தைக் கண்டு கொள்ளவேயில்லை - அதுவும் சாதுவான "வாதக் குணம்" தான், இது இங்கே சிலரிடம் அவ்வப்போது வெளிப்படும்!😂

நேரடியாக, ஒருமை விளிப்பில் சொல்லப் பட்ட விதத்தைப் பொறுத்தவரையில் கருவின் பிரதேசவாதக் கருத்தை விட பெருமாளின் கருத்து கீழ்த்தரமானது

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2023 at 22:45, பெருமாள் said:

அப்படியா அவர் தமிழ் மக்களுக்கு இதுவரை செய்த ஒரு நாலு விடயத்தை இங்கு எழுதமுடியுமா ?

வரும் தேர்தலுக்கு ராகுல் (உண்மை பெயரால் அழைப்போம்) புதிய மொந்தையில் பழைய 'கள் அவ்வளவே .

அவர் மக்களுக்கு என்ன செய்தார் என்பதை, அவரை தெரிவு செய்த மக்கள் தான் கூற வேண்டும். அவர் மக்களுக்கு ஏதும் செய்யமால் விட்டால், அவரை தெரிவு செய்த மக்கள் அடுத்தமுறை அவரை நிராகரிப்பர். அதுவே ஜனநாயகம்.

 என்னாலும் உங்களாலும் எங்கோ தூர தேசத்தில் இருந்து புலம்ப மட்டுமே  முடியும். 

காலப்போக்கில் றிமோட் கொன்றோல்கள் பற்றரி வீக்காகி, ஒவ்வொன்றாக பழுதடைந்து டிஸ்போஸ் ஆகிவிடும். அதுவே நல்லது நடப்பதற்கான அறிகுறி. 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

"கரு , நான் அறிந்த வரையில், ஒரு தமிழறிஞர்,"
ஒரு தமிழறிஞரிடம் இருந்து வரும் இந்தக்கருத்தை நிஞாயப்படுத்தும் உங்களுக்கு இது அதிகமாக தெரியவில்லை?
"பெருமாள், உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது வெட்கம், சுரணை என்பவை கிடையாதா?"

இதை நான் சொல்லவில்லை சொன்னது நீங்கள். அப்படியான ஒருவரிடமிருந்து தமிழறிஞருக்கு மேலான கருத்தை எதிர்பார்ப்பது எப்படி? ஆள் தகுதி பாத்து சாயும் உங்களது அளவுகோல் சரியானதா எனப் பாக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
 "நாங்கள் நடுநிலைமையைக் கடைப்பிடிக்காத நேரம் கண்டிருந்தால் சுட்டிக் காட்டாமல் அப்பவும் கடந்து போயிருந்தீங்களோ? எப்ப அப்படிக் கடந்து போனீங்கள்?"

நீங்கள் வரவேயில்லை இல்லை என்கிறேன் நான், கடந்து போனிங்களா குதித்துபோனீங்களா? என்கிறீர்கள். அப்போ வரவேண்டும் என்று தோன்றவில்லை இப்போ வந்து கேள்வி கேட்க்கிறீர்கள்.

. கோஷான், யஸ்ரின்! நீங்கள் எதுவேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள், நான் எந்த வாதத்தையும் ஊக்குவிக்கவுமில்லை நிஞாயப்படுத்தவுமில்லை. எனக்கு வந்த பதிலுக்கு பதில் இட்டு பின் தொடர்வது வழக்கம் எல்லாம் பக்குவமாக போய்க்கொண்டிருந்தது பிரதேசவாதம், மலம் எல்லாம் வந்தது ஆனால் ஒரு  ஆதரவாளனுக்கு, தமிழ் அறிஞருக்கு இவ்வளவு வாதமிருந்தால் தலைவருக்கு எவ்வளவு இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்! இது ஒன்றும் திடுதிப்பென்று வரும்  வெறுப்பல்ல கருத்தல்ல. ஆழ்மனதில் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து கக்கி விடப்பட்டது. ஒரு அறிஞரிடமிருந்து இந்தக்கருத்தை ஏற்று நிஞாயப்படுத்தும் நீங்கள்  பெருமாளை எந்தத்தகுதியில் வைத்துக்கொண்டு அவரிடம் இருந்து இப்படிதான் எழுதியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் இருவரும் என்னை நோக்கி விரல் நீட்டியபின்னே நேரம் எடுத்து ஒவ்வொரு கருத்தாக வாசிக்கும் போது அந்தக்கருத்தை நான் காணக்கூடியதாக இருந்தது. அதன் பின் வந்து நான் சரியென்று வாதிட விரும்பவில்லை. எத்தனைக்கு பிறகு அவர் அதை பதிந்தார் என்பதையும் பாக்கவேண்டும். "எய்தவன் இருக்க அம்பை நோக முடியாது." அதைவிட ஒவ்வொருவர் தமக்கு சாதகமான ஆயுதத்தை எடுப்பது இயல்பு இது எனது கருத்து. ஆனால் பெருமாள் அதற்கான விளக்கத்தை கொடுத்துவிட்டார். 

அது யாரப்பா பெருமாளுக்கு பச்சை குத்தியது? அறிவு கெட்ட பசங்களா! வஞ்சகமில்லாமல் பெருமாளுக்கும் குத்தியிருக்க வேண்டாமோ? மனுஷன் வாழ்நாளெல்லாம் குத்திக்காட்டிக்கொண்டிருக்கப்போறார்.

நான் இனி எங்கட மணிக்குஞ்சை திட்டி, புடமிட்டு எதிர்காலத்தில் வைரமாய் மிளிர வைக்கப்போறேன். எப்பவும் எங்கட கையிலுள்ளதே எங்களுக்கு சொந்தம்!
            

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

"கரு , நான் அறிந்த வரையில், ஒரு தமிழறிஞர்,"
ஒரு தமிழறிஞரிடம் இருந்து வரும் இந்தக்கருத்தை நிஞாயப்படுத்தும் உங்களுக்கு இது அதிகமாக தெரியவில்லை?
"பெருமாள், உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது வெட்கம், சுரணை என்பவை கிடையாதா?"

இதை நான் சொல்லவில்லை சொன்னது நீங்கள். அப்படியான ஒருவரிடமிருந்து தமிழறிஞருக்கு மேலான கருத்தை எதிர்பார்ப்பது எப்படி? ஆள் தகுதி பாத்து சாயும் உங்களது அளவுகோல் சரியானதா எனப் பாக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
 "நாங்கள் நடுநிலைமையைக் கடைப்பிடிக்காத நேரம் கண்டிருந்தால் சுட்டிக் காட்டாமல் அப்பவும் கடந்து போயிருந்தீங்களோ? எப்ப அப்படிக் கடந்து போனீங்கள்?"

நீங்கள் வரவேயில்லை இல்லை என்கிறேன் நான், கடந்து போனிங்களா குதித்துபோனீங்களா? என்கிறீர்கள். அப்போ வரவேண்டும் என்று தோன்றவில்லை இப்போ வந்து கேள்வி கேட்க்கிறீர்கள்.

. கோஷான், யஸ்ரின்! நீங்கள் எதுவேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள், நான் எந்த வாதத்தையும் ஊக்குவிக்கவுமில்லை நிஞாயப்படுத்தவுமில்லை. எனக்கு வந்த பதிலுக்கு பதில் இட்டு பின் தொடர்வது வழக்கம் எல்லாம் பக்குவமாக போய்க்கொண்டிருந்தது பிரதேசவாதம், மலம் எல்லாம் வந்தது ஆனால் ஒரு  ஆதரவாளனுக்கு, தமிழ் அறிஞருக்கு இவ்வளவு வாதமிருந்தால் தலைவருக்கு எவ்வளவு இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்! இது ஒன்றும் திடுதிப்பென்று வரும்  வெறுப்பல்ல கருத்தல்ல. ஆழ்மனதில் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து கக்கி விடப்பட்டது. ஒரு அறிஞரிடமிருந்து இந்தக்கருத்தை ஏற்று நிஞாயப்படுத்தும் நீங்கள்  பெருமாளை எந்தத்தகுதியில் வைத்துக்கொண்டு அவரிடம் இருந்து இப்படிதான் எழுதியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் இருவரும் என்னை நோக்கி விரல் நீட்டியபின்னே நேரம் எடுத்து ஒவ்வொரு கருத்தாக வாசிக்கும் போது அந்தக்கருத்தை நான் காணக்கூடியதாக இருந்தது. அதன் பின் வந்து நான் சரியென்று வாதிட விரும்பவில்லை. எத்தனைக்கு பிறகு அவர் அதை பதிந்தார் என்பதையும் பாக்கவேண்டும். "எய்தவன் இருக்க அம்பை நோக முடியாது." அதைவிட ஒவ்வொருவர் தமக்கு சாதகமான ஆயுதத்தை எடுப்பது இயல்பு இது எனது கருத்து. ஆனால் பெருமாள் அதற்கான விளக்கத்தை கொடுத்துவிட்டார். 

அது யாரப்பா பெருமாளுக்கு பச்சை குத்தியது? அறிவு கெட்ட பசங்களா! வஞ்சகமில்லாமல் பெருமாளுக்கும் குத்தியிருக்க வேண்டாமோ? மனுஷன் வாழ்நாளெல்லாம் குத்திக்காட்டிக்கொண்டிருக்கப்போறார்.

நான் இனி எங்கட மணிக்குஞ்சை திட்டி, புடமிட்டு எதிர்காலத்தில் வைரமாய் மிளிர வைக்கப்போறேன். எப்பவும் எங்கட கையிலுள்ளதே எங்களுக்கு சொந்தம்!
            

முதலில் நான் யாழில் தொடர்ந்து இருந்து வரும் ஒரு ஆளல்ல என்பதை நீங்கள் அவதானித்தீர்களோ தெரியாது. வாசகனாகக் கூட நான் வராமல் இருந்த காலத்தில் நடந்ததை நீங்கள் கேட்டால் , நான் வரவில்லைத் தான்! ஏனெனில் நான் பெருமாள் எடுத்துக் கொண்ட "தகுதிப் பொலிஸ்" உத்தியோகம் போல எதையும் வைத்துக் கொண்டு யாழில் நிரந்தரமாக உலவவில்லை, நேரம் இருந்தால் வருவேன், ஏதாவது எழுத நினைத்தால் எழுதுவேன். அவ்வளவு தான்.

அடுத்தது, பெருமாளிடம் வெட்கம் , சுரணை இல்லையா என்று கேட்ட பாதி வசனத்தை மட்டும் வாசிக்காமல், அதன் முன்பகுதியையும் வாசித்து அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயலுங்கள். பெருமாளுக்குப் புரிந்திருக்கிறது என்பது அடுத்த அவரது பதில்களிலேயே வெளிப்பட்டிருக்கிறது. உங்களுக்குப் புரிய வைக்க எனக்கு அவசியமில்லை.

கரு பிரதேசவாதம் பேசினால், இங்கே களத்திலேயே இல்லாத சாணக்கியனை மதம் , குலம் கோத்திரம், பெயர் என்று ஒருமையில் விமர்சித்தது  எப்படி கருவின் பிரதேச வாதத்திற்குப் பதிலாகும் என்கிறீர்கள்? நியாயமாக கரு வுக்கு அல்லவா பதில் சொல்லியிருக்க வேண்டும்? அதை இருவர் சுட்டிக் காட்டிய பின்னரும், பெருமாள் ஒருமையில் விளித்த அந்தக் கருத்தை  அகற்றவில்லையென்பது மட்டுமல்ல, மேலும் மேலும் தன் "வாதக் குணத்தை" உறுதி செய்த பின்னரே, நான் எழுதினேன்.

உங்கள் பிரச்சினை, அரசியலில் , கொள்கையில் ஒத்த கருத்துள்ள ஒருவரின் கீழ்த்தரமான கருத்துக்களைக் கண்டிக்க அச்சப் படுகிறீர்கள். இந்தப் பிந்திய கருத்தின் மூலம், அப்படிப் பெருமாளின் மதவாத விஷக் கருத்தில் "ஒன்றுமே தீமையில்லை" என்று பூசி மெழுகவும் முயல்கிறீர்கள். உங்களைப் போல பலர் யாழ் களத்தில் "நம்ம ஆளு, வுட்றா வுட்றா" மன நிலையில் இருப்பதால் தான், பெருமாள் எழுதியது போன்ற விஷக் கருத்துகள் மேலும் மேலும் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஏனெனில், இதையெல்லாம் நீங்கள் normalize செய்து விடுகிறீர்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.