Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடைந்தது தமிழரசுக்கட்சி?? தகப்பனை திட்டித்தீர்த்த மாவையின் மகன்!! கூட்டத்தில் பரபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடைந்தது தமிழரசுக்கட்சி?? தகப்பனை திட்டித்தீர்த்த மாவையின் மகன்!! கூட்டத்தில் பரபரப்பு

4-26.jpg

இன்று காலை யாழ்பாணம் மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தொகுதி கிளைச் செயலாளர்களின் மாநாட்டில், வளமைக்கு மாறாக பரபரப்பு ஏற்பட்டதாகவும், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின் மகன் அமுதன் ஆவேசம் கொண்டு கட்சியின் தலைமைக்கு எதிராக கொட்டித்தீர்த்துவிட்டதாகவும் மாநாட்டில் கலந்துகொண்ட பலர் தெரிவிக்கின்றார்கள்.

வழமையாகவே இதுபோன்ற தமிரசுக்கட்சியின் கூட்டங்களில் தலைவர் பேசுவார்.. அல்லது தன்னைப் பேச்சாளர் என்று சொல்லித்திரிகின்ற ‘முந்திரிக்கொட்டை’ பேசுவார்.. அல்லது எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் 200 வார்த்தைகளை புகுத்தி தனக்கும் விளங்காமல் மற்றவர்களுக்கும் புரியாமல் பேசுகின்ற சில பெரிசுகள் உளறுவார்கள்.அவ்வளவுதான் நடக்கும்.

மற்றவர்கள் ஒப்புக்கு ஓரிரண்டு வார்த்தைகளை உதிர்த்துவிட்டு, சிரிச்சுக்கொண்டு வீடு திரும்பி முகப்புத்தகத்தில அரசியல்செய்யத் தொடங்கிவிடுவார்கள்.

வளமைக்கு மாறாக இன்று நடந்த கூட்டத்தில் மாவையின் மகனும் தமிழரசுக்கட்சி இளைஞரணியின் முக்கியஸ்தருமான அமுதன் தந்தை என்றும் பார்க்காமல் கட்சியின் தலைமையை வெளுத்துவாங்கிவிட்டாராம்.

யாழ் மேயர் பதவிக்கு யாழ் வர்த்தகர் சங்கம் ஒரு நபரை சிபாரிசு செய்வதற்காக மாவையை அணுகியபொழுது, அதற்கு மாவை தமிழரசுக்கட்சியின் முந்திரிக்கொட்டையின் பெயரைக் கூறி ‘அவரிடம்தான் கேட்கவேண்டும்’ என்று கூறியதாகவும், அதனால் தமிழரசுக்கட்சியின் தலைமை மீது அதிருப்தியடைந்த யாழ் வர்த்தகர் சங்கம் வேறு கட்சியின் பக்கம் போய்விட்டதாகவும் சுட்டிக்காண்பித்த அமுதன், மாவையின் அந்த செயலை பகிரங்கமாகக் கண்டித்ததாக தெரியவருகின்றது.

ஓன்று ‘ஆம்’ என்று தலைமை பதில் கூறியிருக்கவேண்டும்.. அல்லாவிட்டால் ‘இல்லை’ என்று மறுத்திருக்கவேண்டும்.. இரண்டையும் செய்யாமல் எதற்காக கட்சியில் தீர்மாணிக்கும் பதவியெதனையும் வகிக்காத மற்றொருவர் மீது கைகாண்பித்தீர்கள்?’ என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

கட்சித் தலைமையின் பலவீனத்தைச் சுட்டிக்காண்பித்த அமுதன் , ‘கட்சி தொடர்ந்து இவ்வாறே வழிநடாத்தப்படுமாக இருந்தால், கட்சியைவிட்டு தான் உட்பட பல இளைஞர்களும் வெளியேறவேண்டி ஏற்படும்’ என்றும் எச்சரிக்கைவிடுத்தார்.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் கட்சிக்கு விரோதமாக ‘தமிழரசுக்கட்சியின் முந்திரிக்கொட்டை’ நடந்துகொண்ட விதங்கள் பற்றியும், அதற்கு மறைமுகமாக கட்சியின் தலைமை துணைபோவதுபற்றியும் விமர்சித்ததாகத் தெரியவருகின்றது.

இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சி இரண்டுபட்டு உடைந்து சந்திசிரித்து நிற்பதற்கு முந்திக்கொட்டையையும், கட்சியின் தலைமையையும் குற்றம்சுமத்தினார்கள்.

இன்று நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பருத்தித்துறைத் தொகுதி செயலாளரும், தென்மாராட்சித் தொகுதிச் செயலாளரும் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரியவருகின்றது.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் கூட்டம் முடிந்தபின்னர் தமக்குள் பேசிக்கொண்ட வாக்கியங்கள் இவைதான்:

‘தமிழசுக்கட்சி கிட்டத்தட்ட இரண்டாகப் பிளவடைந்துவிட்டது. கொழும்பில் இருந்து அந்த ‘முந்திரிக்கொட்டை எதற்காக அனுப்பப்பட்டாரோ அந்த வேலையை சரியாகச் செய்துமுடித்துவிட்டார். முதலில் கூட்டமைப்பை உடைத்துவிட்டு, கடைசியில தமிழரசுக்கட்சியையும் உடைத்துவிட்டார்.

 

https://akkinikkunchu.com/?p=236733

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கொழும்பில் இருந்து அந்த ‘முந்திரிக்கொட்டை எதற்காக அனுப்பப்பட்டாரோ அந்த வேலையை சரியாகச் செய்துமுடித்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

யோகசுவாமியின் அடியார்களால் “மகாவாக்கியங்கள்” என்று கூறப்படும் அவை வருமாறு:

எப்பவோ முடிந்த காரியம்
நாம் அறியோம்
ஒரு பொல்லாப்பும் இல்லை
முழுதும் உண்மை

 

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஊடக அறம் , தர்மம்.. பலம் ..பலவீனம் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த எழுத்துமுறை

 உபயம் .......அக்கினிக்குஞ்.......சூ.  😀

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

புதிய ஊடக அறம் , தர்மம்.. பலம் ..பலவீனம் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த எழுத்துமுறை

 உபயம் .......அக்கினிக்குஞ்.......சூ.  😀

😂👍

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kapithan said:

புதிய ஊடக அறம் , தர்மம்.. பலம் ..பலவீனம் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த எழுத்துமுறை

 உபயம் .......அக்கினிக்குஞ்.......சூ.  😀

 

 

உண்மை  தான்

‘தமிழரசுக்கட்சியின் முந்திரிக்கொட்டை’ 

ஊடகங்கள் தமது அபிலாசைகளை  மக்கள் மீது திணிக்கக்கூடாது...

 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விசுகு said:

 

 

உண்மை  தான்

‘தமிழரசுக்கட்சியின் முந்திரிக்கொட்டை’ 

ஊடகங்கள் தமது அபிலாசைகளை  மக்கள் மீது திணிக்கக்கூடாது...

 

ஊடகங்களுக்கு பொறுப்பு அதிகம். நாகரீகமாக எழுதலாம். எங்கள் சமூகத்தில் பொறுப்பின்மை அதிகரித்துச் செல்வதற்கு இது நல்ல உதாரணம். 

chatbox ல் வாந்தி எடுப்பதைப்போல ஊடகங்கள் எழுத முடியாதல்லவா 😉

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

வழமையாகவே இதுபோன்ற தமிரசுக்கட்சியின் கூட்டங்களில் தலைவர் பேசுவார்.. அல்லது தன்னைப் பேச்சாளர் என்று சொல்லித்திரிகின்ற ‘முந்திரிக்கொட்டை’ பேசுவார்.. அல்லது எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் 200 வார்த்தைகளை புகுத்தி தனக்கும் விளங்காமல் மற்றவர்களுக்கும் புரியாமல் பேசுகின்ற சில பெரிசுகள் உளறுவார்கள்.அவ்வளவுதான் நடக்கும்.

இந்த ஒரு பந்தி போதும் .

அக்னிகுஞ்சு எல்லாவற்றையும் கொட்டை கொட்டையாக எழுதிவிட்டு

முந்திரிகொட்டையை யாரென்றே எழுதவே இல்லையே?

மாவையின் மகன் கட்சியை விட்டு பிரிந்து விட்டதாக அண்மையில்    @தமிழ் சிறிகூறியிருந்தாரே பொய்யா கோப்பாலு?

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஆரம்பம் தேவை. தமிழரசுக்கட்சியின் தேவை தமிழ் மக்களுக்கு தேவை இல்லை என நினைக்கிறேன். இந்த உள்ளூராட்சி தேர்தலோடு மக்கள் இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுகிறேன். இளைஞர்களை உள்வாங்காத கட்சியும் தமிழ்மக்களுக்கு தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

புதிய ஆரம்பம் தேவை. தமிழரசுக்கட்சியின் தேவை தமிழ் மக்களுக்கு தேவை இல்லை என நினைக்கிறேன். இந்த உள்ளூராட்சி தேர்தலோடு மக்கள் இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுகிறேன். இளைஞர்களை உள்வாங்காத கட்சியும் தமிழ்மக்களுக்கு தேவை இல்லை.

முந்திரிகொட்டை வந்த வேலை முடிஞ்சுதா சார்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்த ஒரு பந்தி போதும் .

அக்னிகுஞ்சு எல்லாவற்றையும் கொட்டை கொட்டையாக எழுதிவிட்டு

முந்திரிகொட்டையை யாரென்றே எழுதவே இல்லையே?

மாவையின் மகன் கட்சியை விட்டு பிரிந்து விட்டதாக அண்மையில்    @தமிழ் சிறிகூறியிருந்தாரே பொய்யா கோப்பாலு?

தமிழரசு கட்சியில்… சுமந்திரன் என்ற ஒரு முந்திரி கொட்டைதான் இருக்கு.
மற்றது…பிலாக் கொட்டை. 😁

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

தமிழரசு கட்சியில்… சுமந்திரன் என்ற ஒரு முந்திரி கொட்டைதான் இருக்கு.
மற்றது…பிலாக் கொட்டை. 😁

 

இரண்டும் அலரிகொட்டை.

எல்லோரையும் கொல்லுது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

மாவையின் மகன் கட்சியை விட்டு பிரிந்து விட்டதாக அண்மையில்    @தமிழ் சிறிகூறியிருந்தாரே பொய்யா கோப்பாலு?

@தமிழ் சிறிஅண்ணா இதை எனக்குத்தான் பதிலாக எழுதுதினவர்.

Refund please 🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

@தமிழ் சிறிஅண்ணா இதை எனக்குத்தான் பதிலாக எழுதுதினவர்.

Refund please 🤣

No refund 
No exchange.

25 minutes ago, goshan_che said:

@தமிழ் சிறிஅண்ணா இதை எனக்குத்தான் பதிலாக எழுதுதினவர்.

Refund please 🤣

திரும்ப சேரும்போது  @தமிழ் சிறி க்கு சொல்லாமல் கொள்ளாமல் சேர்ந்துட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

முந்திரிகொட்டை வந்த வேலை முடிஞ்சுதா சார்?

கெதியில முடிந்துவிடும்போல் இருக்கிறது எல்லோரின் மவுனத்தையும் பாக்கும்போது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

@தமிழ் சிறிஅண்ணா இதை எனக்குத்தான் பதிலாக எழுதுதினவர்.

Refund please 🤣

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

No refund 
No exchange.

திரும்ப சேரும்போது  @தமிழ் சிறி க்கு சொல்லாமல் கொள்ளாமல் சேர்ந்துட்டார்.

பதில் மேலே உள்ளது கோசான். 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்

2009க்கு பிற‌க்கு இல‌ங்கை செய்திக‌ள் வாசிப்ப‌து இல்லை ,

ஆனால் போர் நின்றும் ப‌ல‌ ம‌க்க‌ள் இப்ப‌வும் வ‌றுமையோடும் க‌ண்ணீரோடு வாழுகின‌ம்

ம‌க்க‌ளால் தேர்ந்தெடுக்க‌  ப‌ட்ட‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து செய்த‌ மாதிரி தெரிய‌ வில்லை 

த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் கூட‌ ம‌க்க‌ளை வ‌றுமை இப்ப‌டி போட்டு  வாட்டின‌து கிடையாது 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன், @goshan_che கவனித்தீர்களா….
மீண்டும், மாவையின் மகனின் கோபத்திற்கு…. சுமந்திரன் தான் காரணம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

@ஈழப்பிரியன், @goshan_che கவனித்தீர்களா….
மீண்டும், மாவையின் மகனின் கோபத்திற்கு…. சுமந்திரன் தான் காரணம். 🤣

எங்கிருந்து ஆரம்பிக்கிறதோ அங்கு முடியும் முடிவுதான் சரியானது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

எங்கிருந்து ஆரம்பிக்கிறதோ அங்கு முடியும் முடிவுதான் சரியானது.

எனக்கு…. இந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது.
தாயக மக்கள் என்ன தீர்ப்பை கொடுக்கிறார்கள் என பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

@ஈழப்பிரியன், @goshan_che கவனித்தீர்களா….
மீண்டும், மாவையின் மகனின் கோபத்திற்கு…. சுமந்திரன் தான் காரணம். 🤣

ஓம்…மாவையின் மகன் ரவிராஜின் மருமகன் என்பது உண்மையா ?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கு…. இந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது.
தாயக மக்கள் என்ன தீர்ப்பை கொடுக்கிறார்கள் என பார்ப்போம்.

மக்கள் தீர்ப்பு கொடுத்தாலும், தில்லு முல்லு பண்ணி 
வெக்கம் இல்லாமல்  மாத்தியமைச்சுப்போடுவதில் வல்லவர்கள். வேப்பிலை அடிச்சுத்தான் இவர்களை கலைக்கவேணும். இவர்களது பங்காளிகள் இவர்களது குரைப்புக்கு பதில், விளக்கம் கொடுக்காமல் கடுமையாக, உண்மையாக உழைக்கவேண்டும்!

2 minutes ago, goshan_che said:

ஓம்…மாவையின் மகன் ரவிராஜின் மருமகன் என்பது உண்மையா ?

இதுவரையில் தேடியறியாமலே இருக்கிறீர்களா? இல்லை பரிசோதிக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

ஓம்…மாவையின் மகன் ரவிராஜின் மருமகன் என்பது உண்மையா ?

அப்படித்தான் கேள்விப் பட்டேன்.
மாமனிதர் ரவிராஜின் செல்வாக்கை வைத்து,  
மாவை… தனது மகனை, அரசியலில் நிறுத்த…
ரவிராஜ் வீட்டில் திருமண சம்பந்தம் செய்து கொண்டதாக சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
51 minutes ago, goshan_che said:

ஓம்…மாவையின் மகன் ரவிராஜின் மருமகன் என்பது உண்மையா ?

இது  தெரியாமலா உலக அரசியலிலும் ஈழத்து அரசியலிலும் இங்கே கருத்து எழுதுகின்றீர்கள்?!?!?!?!?!?

“சேம்.. சேம் பப்பி சேம்”   :bl:

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, satan said:

மக்கள் தீர்ப்பு கொடுத்தாலும், தில்லு முல்லு பண்ணி 
வெக்கம் இல்லாமல்  மாத்தியமைச்சுப்போடுவதில் வல்லவர்கள். வேப்பிலை அடிச்சுத்தான் இவர்களை கலைக்கவேணும். இவர்களது பங்காளிகள் இவர்களது குரைப்புக்கு பதில், விளக்கம் கொடுக்காமல் கடுமையாக, உண்மையாக உழைக்கவேண்டும்!

இதுவரையில் தேடியறியாமலே இருக்கிறீர்களா? இல்லை பரிசோதிக்கிறீர்களா?

இல்லை…இது வரை கேள்வி படவில்லை. சிறி அண்ணா இன்னொரு திரியில் சொல்லும் வரை.

23 minutes ago, தமிழ் சிறி said:

அப்படித்தான் கேள்விப் பட்டேன்.
மாமனிதர் ரவிராஜின் செல்வாக்கை வைத்து,  
மாவை… தனது மகனை, அரசியலில் நிறுத்த…
ரவிராஜ் வீட்டில் திருமண சம்பந்தம் செய்து கொண்டதாக சொன்னார்கள்.

நன்றி அண்ணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.