Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

On 11/4/2023 at 12:07, suvy said:

சுமேயின் மைண்ட் வொய்ஸ்:

Vadivelu Tamil GIFs | Tenor

இது உங்கள் மைண்ட் வொய்ஸ் போலயல்லோ இருக்கு

On 11/4/2023 at 17:05, சுவைப்பிரியன் said:

ச்சா சப்பென்டு போட்டுது.😃

நான்என்ன கதையா எழுதிறன். 😂

On 11/4/2023 at 17:44, ஈழப்பிரியன் said:

அத்தாரிடம் ஆட்டையை போட்டது எவ்வளவுங்கோ?

உது எல்லாம் கேட்கப்படாது.

21 hours ago, யாயினி said:

எண்டாலும் கதை எழுத சுவியண்ணாட்ட வகுப்பு எடுக்க வேணும்..🤭.நாம்.😄👌

அதெண்டா உண்மைதான்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
Link to comment
Share on other sites

  • Replies 378
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

மெசொபொத்தேமியா சுமேரியர்

இலங்கையில் ஆறு மாதங்கள்    நீண்ட நாட்களாகவே எம்மூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை என்னை அலைக்கழித்தபடியே இருந்ததுதான். அதிலும் ஆறு மாதங்களாவது நின்மதியாய் கணவர் பிள்ளைகளின் தொல்லைகள் இன்றி ந

மெசொபொத்தேமியா சுமேரியர்

இரண்டு   என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும்

மெசொபொத்தேமியா சுமேரியர்

பன்னிரண்டு    முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

கையில் கொண்டு செல்ல நாங்கள் நினைத்திருக்கும் சிறிய luggage ஐ நான் கொடுப்பதில்லை காரணம் அதில் தான் முக்கியமான பொருட்களை வைத்திருபப்து.  சும்மா கைய விசுக்கி கொண்டு சிறிய பாக் பேக் உடன் போக விருப்பமென்றாலும், எது எங்கே வைத்திருக்கிறோம் என்றே தெரியாது என்பதால் கொடுக்க விரும்புவதில்லை.
உங்களின் பதிவின் பின்னர், அதையும் செக்கின் பண்ண தயாராக செல்ல வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பம்பாய் கொழும்பு  இல்  உங்கள் போன் ஐபாட் தப்பி வந்தது பெரிய விடையம் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2023 at 12:57, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடைக்குட்டி

மொத்தமாக எத்தனை......🤣 கடுப்பாகமால். பதில் கிடைக்கும் என நினைக்கிறேன்......சும்மா ஒரு பொது அறிவுக்கு  தான் 🤣

Link to comment
Share on other sites

On 9/4/2023 at 16:33, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கணனியை எதற்கு கொண்டு செல்கிறாய் ?

 

:அது என் கணனி 

 

:மடிக்கணனி தானே கொண்டு செல்வார்கள்? 

 

:அது அவர்கள் பிரச்சனை

 

:இத்தனை பாரமாக இருக்கிறதே 

 

:அதனால் உனக்கு ஏதும் பிரச்சனையா ?

 

:நோ நோ நோ என்று சிரித்து மழுப்புகிறான். 

யாருட்டை விடுகிறீர்கள் உங்கள் விளையாட்டை. சுமேவா கொக்காவா!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sabesh said:

கையில் கொண்டு செல்ல நாங்கள் நினைத்திருக்கும் சிறிய luggage ஐ நான் கொடுப்பதில்லை காரணம் அதில் தான் முக்கியமான பொருட்களை வைத்திருபப்து.  சும்மா கைய விசுக்கி கொண்டு சிறிய பாக் பேக் உடன் போக விருப்பமென்றாலும், எது எங்கே வைத்திருக்கிறோம் என்றே தெரியாது என்பதால் கொடுக்க விரும்புவதில்லை.
உங்களின் பதிவின் பின்னர், அதையும் செக்கின் பண்ண தயாராக செல்ல வேண்டும்

அதையும் கொடுத்துவிட்டால் நின்மதியாய் செல்லலாம்

4 hours ago, Sabesh said:

பம்பாய் கொழும்பு  இல்  உங்கள் போன் ஐபாட் தப்பி வந்தது பெரிய விடையம் தான்

அன்று காலை நான்கு மணி மட்டில் தான் விமானம் தரையிறங்கியது. மழை வேறு தூறிக்கொண்டு இருந்தது. அதனால்த்தான் தப்பியிருக்கும் என நினைக்கிறேன். இரண்டு மணிநேரம் என்பதானாலும் இருக்கலாம்.

3 hours ago, Kandiah57 said:

மொத்தமாக எத்தனை......🤣 கடுப்பாகமால். பதில் கிடைக்கும் என நினைக்கிறேன்......சும்மா ஒரு பொது அறிவுக்கு  தான் 🤣

மொத்தம் மூன்று 😀

2 hours ago, nunavilan said:

யாருட்டை விடுகிறீர்கள் உங்கள் விளையாட்டை. சுமேவா கொக்காவா!!!

😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

யாருட்டை விடுகிறீர்கள் உங்கள் விளையாட்டை. சுமேவா கொக்காவா!!!

இங்கிலிசு ரி ராஜேந்தர் ஸ்ரைல்ல சும்மா தணல் பறந்திருக்கும் எண்டுறியள்?? :rolling_on_the_floor_laughing:

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இங்கிலிசு ரி ராஜேந்தர் ஸ்ரைல்ல சும்மா தணல் பறந்திருக்கும் எண்டுறியள்?? :rolling_on_the_floor_laughing:

எனக்கு அந்த மோட்டர் சைக்கிள் கதை மட்டும் சஸ்பென்ஸ் தாங்காது இருக்கிறன்சாமியார் கொஞ்சம் சொல்லிவிடுங்க அத்தரிடம் அவர் ரகசிமாய் படத்தை போடட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இங்கிலிசு ரி ராஜேந்தர் ஸ்ரைல்ல சும்மா தணல் பறந்திருக்கும் எண்டுறியள்?? :rolling_on_the_floor_laughing:

சீச்சீ நான் அவனைத் திட்டவில்லையே. கதைச்சனான்  🤣

8 hours ago, பெருமாள் said:

எனக்கு அந்த மோட்டர் சைக்கிள் கதை மட்டும் சஸ்பென்ஸ் தாங்காது இருக்கிறன்சாமியார் கொஞ்சம் சொல்லிவிடுங்க அத்தரிடம் அவர் ரகசிமாய் படத்தை போடட்டும் .

வேற வழியில்லை. நான் படம் போடுமட்டும் தலை வெடிக்காமல் பார்த்து கொள்ளுங்கோ 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து

 

 

கணவர் சொல்லிவைத்த வான் வந்துவிட்டதா என்று பார்த்துக்கொண்டிருக்க நானும் மகளும் இரு வண்டில்களில் பொதிகளை வைத்தபடி இருக்கிறோம். செப்டெம்பர் மாதமாகையால் பெரிதாக வெய்யிலின் உக்கிரம் இருக்கவில்லை. ஆனாலும் ஒருவித புழுக்கம் வந்து அப்பிக்கொள்கிறது. பலரும் வந்து எங்கே மடம் போகணும். எங்கள் வண்டியில் வாருங்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்க இவ்வளவு தூரம் வருகிறோம். வாகனம் ஒழுங்கு செய்யாமலா வருவோம் என்னும் எரிச்சல் எழுகிறது. சிறிது நேரத்தில் எமக்குரிய வான் வர ஏறி அமர்ந்தபின் தான் அப்பாடா என்று இருக்கிறது. 

 

கணவர் முன்னால் இருந்து சாரதியுடன் கதைத்தபடி வருகிறார். நானும் மகளும் இரு மருங்கும் புதினம் பார்த்தபடி வருகிறோம். அப்படியே தூங்கியும் விட்டோம். நிவேதா நிவேதா என்று அன்பொழுக கணவரின் அழைப்பு மெதுவாகக் கேட்க கண்விழித்தால் வாகனம் ஒரு உணவகத்துக்கு முன்னால் நிற்கிறது. இது நல்ல உணவகமாம். உனக்குத்தான் அடிக்கடி பசிக்குமே. இங்கேயே சாப்பிட்டிட்டுப் போவம் என்கிறார். அவர் சொன்னவுடன் எனக்கும் பசிப்பது போல இருக்க சரி சாப்பிடுவம் என்றுவிட்டுக் கீழே இறங்குகிறேன்.  இது எந்த இடமென்று சாரதியிடம் கேட்க மாதம்பை முருகன் கோவில் இது என்கிறார். கோயிலின் கோபுரத்தின் முன் பெரிய பெரிய தலைகளின் உருவங்கள் காணப்படுகின்றன. 

 

ஓரளவு பெரிய உணவகம் தான். இருந்தாலும் உணவு எப்படி இருக்குமோ என்னும் யோசனையும் எழுகிறது. சாரதியும் கணவரும் இடியப்பம்  சொல்ல நானும் மகளும் தோசையும் உழுந்து வடையும் ஓடர் செய்ய எல்லாருக்கும் உழுந்துவடை கொண்டுவாங்கோ என்கிறார் மனிசன். சாப்பிட முதல் டீ குடிப்பம் என்று அதற்கும் சொல்கிறார். ஒரு ஐந்து நிமிடங்களில் மசாலா போட்ட தேநீர் வர, இத்தனை விரைவாக வந்துவிட்டதே சூடாய் இருக்கோ என நான் வாயில் வைத்துப் பார்க்க கடும் சூடு. வாயில் தேனீர் சுட்டுவிட, என்ன அவதி கொஞ்சம் ஆறட்டுமன் என்றுவிட்டு, தான் எடுத்துக் குடிக்கிறார். சிறிது நேரத்தில் வடைகள் வருகின்றன. நல்ல பெரிதாக பார்ப்பதற்கு நன்றாக இருக்க எடுத்து உண்கிறேன். அந்த நேரப் பசிக்கோ  என்னவோ மிகவும் சுவையாக இருக்கிறது. தோசையும் யாழ்ப்பாணச் சம்பலும் வரும் என்று பார்க்க சட்னியும் சாம்பாரும் வருகிறது. இடியப்பத்துக்கு அந்தச் சம்பல் வர எனக்கும் கேட்போமா என ஒரு செக்கன் எண்ணிவிட்டு இதுவும் சுவையாக இருக்குத் தானே என்று எண்ணியபடி உண்கிறேன். 

 

அப்போதுதான் பார்க்கிறேன். சில்வர் தட்டின் மேல் ஒரு மெல்லிய பொலிதீன் போடப்பட்டு அதில் உணவு வைக்கப்பட்டிருக்கு. என்ன இவங்கள் ஏன் பொலிதீன் போட்டிருக்கிறார்கள். பார்க்க அரியண்டமாக இருக்கு என்று கூற, இங்கு எல்லாக் கடையிலும்  இப்ப இதுதான் என்கிறார் சாரதி. வாழையிலைக்குத் தட்டுபாடோ என்கிறார் மனிசன். கழுவிற பஞ்சிக்காண்டி இதுதான். ஆனால் வேளைக்கு உக்கிப்போயிடுமாம் என்கிறார். உண்டு முடிய கணவர் எனக்கு இன்னொரு தேநீர் குடிக்கவேணும். வேற யாருக்கும் வேணுமோ என்று கேட்க நான் எனக்கும் என்கிறேன். சாரதியும் மகளும் தமக்கு வேண்டாம் என்கின்றனர். நான் வானுக்குள் இருக்கிறேன். வாங்கோ என்றுவிட்டு சாரதி செல்ல எம் தேநீர் வருகிறது. நல்ல சாயமும் சீனியும் போட்டு நல்ல சுவையாக இருக்கு. வடை ஏதும் கட்டிக்கொண்டு போவமோ என்கிறேன் நான். இவ்வளவு சாப்பிட்டது பத்தாதே. இன்னும் நாலு மணித்தியாலத்தில வீட்டை போயிடலாம். தங்கச்சி சமைச்சு வச்சிட்டுப் பார்த்துக்கொண்டிருப்பாள். அதுக்கிடையில எங்காவது கடைகள் வரும்தானே என்கிறார். 

 

நாங்கள் சென்று அமர்ந்ததும் பிரயாணம் தொடங்குகிறது. பார்க்கும் இடம் எங்கும் சிற்றோடைகள், ஆறுகள். சிங்களப் பகுதி நல்ல செழிப்பானதுதான் என நான் எண்ணிக் கொள்கிறேன். ஒரு ஒருமணிநேரம் ஓடியதும் வீதியில் இளநீர் வித்துக்கொண்டிருப்பது தெரிய இளநீர் குடிப்பம் என்றவுடன் கணவர் சாரதியை நிறுத்தச் சொல்கிறார். சாரதி வேண்டாம் என்று மறுக்க குடியுங்கோ என்று அவரிடம் நீட்டுகிறார். கன காலத்தின் பின் இளநீர் சுவையாக இருக்கிறது. இங்க 50 ரூபா. யாழ்ப்பாணத்தில 100 ரூபா என்கிறார் சாரதி. வானுக்குள்ள இடம் இருக்குத் தானே. ஒரு குலையை இங்கேயே வாங்கிக் கொண்டு போவம் என்கிறேன். சரி என்று கணவர் கூற குலை வானுக்குள் ஏறுகிறது. 

 

சாரதி மிக நிதானமாக வாகனத்தை ஓட்டுகிறார். அப்பப்ப அங்கே நிக்கிறாங்கள். இங்கே நிக்கிறாங்கள் என்று போனில் கதைத்தபடி வர, யார் நிக்கிறாங்கள் என்று சொல்கிறீர்கள் என்று கேட்கிறேன். உவங்கள்தான் என்று அவர் கூற, போலீஸ் காரர் ஒருவர் கைகாட்டி எமது வானை நிறுத்துகிறார். சாரதி போலீசைக் கடந்து வந்து வானை நிப்பாட்டிவிட்டு நிற்கிறார். லைசென்சைப் பார்ப்பான்களோ என்று கணவர் கேட்க இன்சூரன்ஸ் இருக்கோ என்றும் பார்ப்பினம் என்றுவிட்டு தொடர்ந்து இறங்காமல் இருக்க, எல்லாம் இருக்குத்தானே? கெதியா இறங்கிப்போய் காட்டிப்போட்டு வாங்ககோவன் என்கிறார் மனிசன். அவர் தானே மறிச்சவர். அவரே வரட்டும் . நான் என்ன களவே எடுத்தனான் உவைக்குப் பயப்பட என்று சாரதி கூற எனக்கு சிறிது பயமாக இருக்க நான் கண்ணாடியில் பார்க்கிறேன் அந்தப் போலீஸ் எம்மை நோக்கி நடந்து வருவது தெரிகிறது. வரும்போதே யன்னலால் உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு சிங்களத்தில் ஏதோ கேட்க சாரதியும் தன் ஆவணங்களை எடுத்துக் காட்டிவிட்டு உள்ளே வைக்க நானும் எமது கடவுச் சீட்டுகளை வெளியே எடுக்கிறேன். எங்கிருந்து வருகிறீர்கள் என்று கணவரைப் பார்த்துக் கேட்க யூக்கே என்றுவிட்டு உடனேயே லண்டன் என்கிறார். அவன் பாஸ்போட்டைக் கேட்காமல் அப்பால் நகர நான் அவற்றை மீண்டும் கைப்பையுள் வைக்கிறேன். 

 

இன்னும் கொஞ்ச நேரத்தில் புத்தளம் வந்துவிடும் என்கிறார் சாரதி. அதற்குள் என்மகள் அதன்பின் அனுராடபுரவோ என்று கேட்க, என்னடா எனக்கே தெரியாது இவள் எப்படிச் சொல்கிறாள் என எண்ணியபடி அனுராதபுரமோ என்று அவளைத் திருப்பிக் கேட்க தன் போனைத் தூக்கிக் காட்ட அதில் இலங்கை மப் தெரிகிறது. நான் மீண்டும் கண்ணசந்துவிட்டேன். நல்ல தூக்கம். இம்முறை மகள் என்னை எழுப்புகிறாள்.  இது எந்த இடம் என்று கேட்க முறிகண்டி வந்திட்டுது, கும்பிட்டிடிட்டுப் போவம் என்று கணவர் கூற நான் இறங்குகிறேன்.  

 

கால்களையும் முகத்தையும்  கழுவிவிட்டு செருப்புகளைக் கழற்றி வைத்து விட்டு வெறும் காலில் நடக்க நிலம் பயங்கரச் சூடு. குறுணிக் கற்களும் குத்துகின்றன. ஏதோ சுற்றிக் கும்பிட்டுவிட்டு வந்தால் ஏதும் சாப்பிடுவோமா என்கிறார் கணவர். ஒரு கடைக்குள் சென்றால் இரண்டு மேசையும் வாங்குகளும்  போடப்பட்டிருக்கு. எனக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. ஆனாலும் தேநீருக்காக இருக்கிறேன்.  கணவர் ரோள்சும் வடையும் சொல்ல ஒரு தட்டில் உழுந்துவடை, கடலைவடை, சமோசா, றோள்ஸ் எல்லாம் கொண்டுவந்து வைக்க நாம் இவ்வளவும் கேட்கவில்லையே என்கிறேன். நீங்கள் சாப்பிடுவதற்கு மட்டும்தான் காசு எடுப்ம் என்றபடி வேலையாள் நகர்கிறார். 

 

நான் ஒரு றோள்ஸ் எடுத்து உண்கிறேன். சரியான எண்ணையாக இருக்கிறது. அரைவாசி கடித்தபடி கணவரிடம் கொடுக்கிறேன். மேற்கொண்டு எதுவும் உண்ணப் பிடிக்கவில்லை. தேநீரை மட்டும் அருந்திவிட்டு வெளியே வந்து மற்றக்  கடைகளை வேடிக்கை பார்க்கிறேன்.  எதற்கும் டாய்லெட் போவோம் என எண்ணியபடி பையை மகளிடம் கொடுத்துவிட்டுப் போய்  நின்றால் கட்டணம் 5 ரூபாய்கள் என்று கூறுகிறார் வாசலில் நிர்ப்பவர். மீண்டும் வந்து கணவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு போய் கொடுத்துவிட்டு உள்ளே சென்றால் மணம் தாங்க முடியவில்லை. யாழ்ப்பாணம் போகுமட்டும் அடக்கேலாது என்று மூக்கைப் பொத்திக்கொண்டு கடனை முடித்து வந்தாயிற்று. நானும் போட்டு வரட்டோ என்கிறாள் மகள். நீர் சமாளிப்பீரோ தெரியேல்லை. போய்ப் பாரும் என்கிறேன்.   

 

  • Like 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகப் போகிறது கதை, தொடருங்கள்........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

 

நான் ஒரு றோள்ஸ் எடுத்து உண்கிறேன். சரியான எண்ணையாக இருக்கிறது. அரைவாசி கடித்தபடி கணவரிடம் கொடுக்கிறேன். மேற்கொண்டு எதுவும் உண்ணப் பிடிக்கவில்லை. தேநீரை மட்டும் அருந்திவிட்டு வெளியே வந்து மற்றக்  கடைகளை வேடிக்கை பார்க்கிறேன்.  எதற்கும் டாய்லெட் போவோம் என எண்ணியபடி பையை மகளிடம் கொடுத்துவிட்டுப் போய்  நின்றால் கட்டணம் 5 ரூபாய்கள் என்று கூறுகிறார் வாசலில் நிர்ப்பவர். மீண்டும் வந்து கணவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு போய் கொடுத்துவிட்டு உள்ளே சென்றால் மணம் தாங்க முடியவில்லை. யாழ்ப்பாணம் போகுமட்டும் அடக்கேலாது என்று மூக்கைப் பொத்திக்கொண்டு கடனை முடித்து வந்தாயிற்று. நானும் போட்டு வரட்டோ என்கிறாள் மகள். நீர் சமாளிப்பீரோ தெரியேல்லை. போய்ப் பாரும் என்கிறேன்.   

 

முறிகண்டில மட்டும் பொதுக் கழிப்பறையை பாவிக்கக் கூடாது, காசும் வாங்கிற்று சரியான பராமரிப்புச் செய்வதும் இல்லை. எங்கட அம்மா ரொம்ப அவஸ்தைப்பட்டவ.

 வாகனச் சாரதிகளுக்குத் தெரியும் நல்ல உணவகங்களில் ஓரளவு சுகாதாரமான கழிப்பறைகள் இருக்கும், அங்கே நிறுத்தினால் இரண்டு நன்மைகள். ஒன்று தரமான உணவு மற்றது கழிப்பறை வசதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

முறிகண்டில மட்டும் பொதுக் கழிப்பறையை பாவிக்கக் கூடாது, காசும் வாங்கிற்று சரியான பராமரிப்புச் செய்வதும் இல்லை. எங்கட அம்மா ரொம்ப அவஸ்தைப்பட்டவ.

 வாகனச் சாரதிகளுக்குத் தெரியும் நல்ல உணவகங்களில் ஓரளவு சுகாதாரமான கழிப்பறைகள் இருக்கும், அங்கே நிறுத்தினால் இரண்டு நன்மைகள். ஒன்று தரமான உணவு மற்றது கழிப்பறை வசதி.

உண்மை தான் கட்டணம் அறவிடுகிறார்கள் ஆனால் துளியும் துப்பரவு இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்கிருந்து வருகிறீர்கள் என்று கணவரைப் பார்த்துக் கேட்க யூக்கே என்றுவிட்டு உடனேயே லண்டன் என்கிறார். அவன் பாஸ்போட்டைக் கேட்காமல் அப்பால் நகர நான் அவற்றை மீண்டும் கைப்பையுள் வைக்கிறேன்

யூகே எண்டவுடனை பொலிஸ்காரன் பயந்து போனான்? :beaming_face_with_smiling_eyes:

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகப் போகிறது கதை, தொடருங்கள்........!  👍

இன்கிருக்கும்ட்டும் அதுகென்றே பயிற்சி எடுப்பது உண்டு 2௦௦9 பிறகு அதெல்லாம் கிடையாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சீச்சீ நான் அவனைத் திட்டவில்லையே. கதைச்சனான்  🤣

வேற வழியில்லை. நான் படம் போடுமட்டும் தலை வெடிக்காமல் பார்த்து கொள்ளுங்கோ 😂

பறவா இல்ல படங்களைப் போடுங்கோ..இணையங்களில் உலாவினால் எல்லா கன்றாவியையும் சகிச்சுட்டுத் தானே போகனும்..என்ன மிஞ்சிப் போனா ஆறுமாதமா தைச்ச  சட்டைப்படம்.ஸ்கூட்டியில புழுதி பறக்க விட்டது வேற............✍️

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

நன்றாகப் போகிறது கதை, தொடருங்கள்........!  👍

நன்றி அண்ணா

20 hours ago, ஏராளன் said:

முறிகண்டில மட்டும் பொதுக் கழிப்பறையை பாவிக்கக் கூடாது, காசும் வாங்கிற்று சரியான பராமரிப்புச் செய்வதும் இல்லை. எங்கட அம்மா ரொம்ப அவஸ்தைப்பட்டவ.

 வாகனச் சாரதிகளுக்குத் தெரியும் நல்ல உணவகங்களில் ஓரளவு சுகாதாரமான கழிப்பறைகள் இருக்கும், அங்கே நிறுத்தினால் இரண்டு நன்மைகள். ஒன்று தரமான உணவு மற்றது கழிப்பறை வசதி.

யாரும் அதுபற்றி ஒருவரிடமும் முறைப்பாடு செய்வதில்லை.

14 hours ago, Sabesh said:

உண்மை தான் கட்டணம் அறவிடுகிறார்கள் ஆனால் துளியும் துப்பரவு இல்லை

முன்பு சென்றபோது இடையில் கிளிநொச்சியில்  ஒரு இடம். இருவர் வெளியே இருக்கின்றனர். 100 ரூபாய் தரும்படி கேட்க எதுவும் கதைக்காமல் காசைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றால் வயிற்றைக் குமட்டிக்கொண்டுவர வெளியே வந்ததும் இவ்வளவு காசை வாங்கிக்கொண்டு இதில சும்மா இருக்கிறியள். தண்ணி அடித்துக் கழுவினால் என்ன என்று திட்டிவிட்டுத்தான் வந்தது.

7 hours ago, குமாரசாமி said:

யூகே எண்டவுடனை பொலிஸ்காரன் பயந்து போனான்? :beaming_face_with_smiling_eyes:

வெளிநாட்டுக் காரருடன் பெரிதாகப் பிரச்சனைப் படுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

நன்றாகப் போகிறது கதை, தொடருங்கள்........!  👍

இன்கிருக்கும்ட்டும் அதுகென்றே பயிற்சி எடுப்பது உண்டு 2௦௦9 பிறகு அதெல்லாம் கிடையாது .

எனக்குப் புரியும்படி கூறுங்கள்। என்ன பயிற்சி ???

6 hours ago, யாயினி said:

பறவா இல்ல படங்களைப் போடுங்கோ..இணையங்களில் உலாவினால் எல்லா கன்றாவியையும் சகிச்சுட்டுத் தானே போகனும்..என்ன மிஞ்சிப் போனா ஆறுமாதமா தைச்ச  சட்டைப்படம்.ஸ்கூட்டியில புழுதி பறக்க விட்டது வேற............✍️

நான் இம் முறை பெரிதாகப் படங்கள் எடுக்கவே இல்லை. நீங்கள் பார்த்த ஆம்புட்டும் தான் 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குப் புரியும்படி கூறுங்கள்। என்ன பயிற்சி ???

கீழே உட்கார்ந்து விட்டு எதையும் பிடிக்காமல் கால்களின் பலத்தில் எழுந்து நிற்கணும் .

ஊர் போனால் தரையில் உட்கார்ந்து சாப்பிடவேணும் அல்லவா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2023 at 10:37, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

இது உங்கள் மைண்ட் வொய்ஸ் போலயல்லோ இருக்கு

நான்என்ன கதையா எழுதிறன். 😂

 

இனி ஊர் போய் வாறவேன்ட இந்த லக்கேஜ் கதைகளை வாசிக்க கூடா என்று உறுதி எடுக்க வேண்டி இருக்கு.✍️திரும்ப திரும்ப பிளாஸ்பாக் தானே வருகிறது...🖐️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு

 

தகப்பனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றவள் சிறிது நேரத்தில் வருகிறாள். குந்தி இருக்க சரியான கஸ்டம் அம்மா. எல்லா இடமும் இப்பிடியான ரொய்லெட் தான் இருக்கா? பெரும்பாலும் இதுதான். ஆனால் கோட்டல்களில் வெஸ்டர்ன் டாய்லெட் தான். கூடுதலான வீடுகளிலும் இப்ப இருக்கு. ஆனால் சுத்தமாக  வச்சிருக்கினமோ தெரியாது என்கிறேன். ரொய்லெட் சரியில்லை எண்டால் நான் மாமி வீட்டை அல்லது அம்மம்மா வீட்டிலயோ நிக்கமாட்டான் என்கிறாள். என் கணவரின் தங்கை வீட்டில் புதிதாக எல்லாம் செய்திருப்பதனால் நீர் கோட்டலில் தங்கவேண்டி இராது என்கிறேன்.

 

மீண்டும் பிரயாணம் தொடர இருபக்கமும் பரந்த நிலங்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. முன்பு தலைகளற்று நின்ற பனை மரங்கள் ஒன்றையும் காணவில்லை. சிறிய பனைகள் ஆங்காங்கே தெரிகின்றன. 2003 இல் சென்றபோது எத்தனை பரபரப்பாக இருந்த வீதி இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாகனங்கள் தெரிகின்றன. கிளிநொச்சியை நெருங்க சிறிது வாகன நெரிசல் தெரிகிறது. கணவரின் ஊர் இணுவில் என்றாலும் அவரின் தந்தை கிளிநொச்சியில் வேலை பார்த்ததால் சிறு வயதுமுதல் இருபது வயதுவரை அங்கேயே இருந்தார். கிளிநொச்சியைப் பார்த்தவுடன் சிறு பிள்ளைபோல் “இதால போனால் நாங்கள் இருந்த வீட்டுக்குப் போகலாம், இதுதான் நான் படிச்ச பள்ளிக்கூடம்” என ஒவ்வொன்றையும் மகளுக்குக் காட்டி மகிழ்ந்தபடியே வந்தார். அவரின் குதூகலத்தைப் பார்த்து இதில கொஞ்ச நேரம் நிப்பாட்டட்டா அண்ணை என்றார் சாரதி. சீச்சீ நீங்கள்  தொடர்ந்து ஒடுங்கோ, பிறகு இங்க வருவம்தானே என்கிறார்.

 

மக்கள் தொகை குறைந்து விட்டதையும் வாகனங்கள் அதிகரித்து விட்டதையும் மின்வெட்டு, பெற்றோல் தட்டுப்பாடு, பொருட்களின் விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு போன்றவவை பற்றியும் கணவரும் சாரதியும் பேசியபடி வருகின்றனர். ஆனையிறவைக் கடந்தபின் பாழடைந்த நிலையில் இரசாயானத் தொழிற்சாலை தெரிய அதன் நிலை பார்க்க மனதைப் பிசைகிறது. பழைய நினைவுகளும் எழுகின்றன. 80 களில் எமது பாடசாலையில் எம்மை அங்கு தொழிற்சாலையைப் பார்ப்பதற்காகக் கூட்டிவந்தனர். சுற்றிப் பார்த்தபின் சிறிது நேரம் எம் கடன்களைத் தீர்க்க வேலை செய்வோர் தங்கியிருந்த தங்குமிடத்தில் விட்டனர். ரொய்லெட் போய்விட்டு நாம் உடனே வெளியே வரவில்லை. அங்கிருந்த சீப்பை எடுத்து காற்றுக்குக் கலைந்து போயிருந்த தலைகளை  இழுத்துச் சரிசெய்துகொண்டிருந்தபோது எங்கள் மிஸ் வந்துவிட்டார். "ஆற்றையன் பொருளை எப்படி எடுப்பீர்கள்? அது முதல் அன் கையீனிக். எல்லாரும் முதல்ல வெளியே வாங்கோ" என  ஏசியது நினைவில் வந்து போக ஏதோவொரு உணர்வு என்னை ஆட்கொண்டது. 

இருமருங்கும் நிலங்கள் கேட்பாரற்றுக் கிடந்தன. சில வயல்கள் உழுதபடியும் சிலது அப்படியேயும் இருந்தது. வயல் விதைக்க இன்னும் நாளிருக்கு என்றார் மனிசன். மண்ணெண்ணைத் தட்டுப்பாட்டினால் பலர் இப்ப தோட்டங்களையே செய்யாமல் கை விட்டுட்டினம் என்கிறார் சாரதி. யாழ்ப்பாணத்தை நெருங்க நெருங்க கட்டட நெரிசலும் அதிகரிக்க கிட்ட வந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

 

2003 இல் நான் என் குடும்பத்துடன் இலங்கை சென்றபோது என் பெற்றோரும் ஒரு சகோதரியும் இரு வாரங்கள் செல்ல அங்கு வர இருந்தபடியால் எனக்கு எந்தப் பிரசனையும் என்  சித்தியால் ஏற்படவில்லை. நானும் கணவரும் 2017 இல் சென்றபோது தன் வீட்டிலேயே முதலில் வந்து இறங்கவேண்டும்  என என் சித்தி ஒரே ஆர்ப்பாட்டம். என் கணவரின் தாய் இருந்தபடியால் என் அம்மா வீட்டுக்குத்தான் போகவேண்டும் எனக் கணவர் கண்டிப்புடன் சொன்னது மட்டுமன்றி அதுதானே நியாயமும் கூட என நானும் சம்மதித்துவிட என் மச்சாள் வீடிலேயே போய் இறங்கியாச்சு. இரண்டு நாட்களாய் சித்தி என்னுடன் கதைக்கவே இல்லை. நான் பிறந்து வளர்ந்த “நிவேதகிரி” என்ற பெயரைத் தாங்கி இன்றுவரை நிற்கும் வீடுதான் அது என்றாலும் கணவருடன் வரும்போது அவருடன் தானே நிற்பது முறை. இத்தனைக்கு இரு வீடுகளுக்கும் இடையில்  ஐந்து நிமிட நடை. 

 

அதன்பின்னர் 2019 இல் நான் தனியாக வந்தபோது என் மச்சாளிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டு சித்தி இருக்கும் எங்கள் வீட்டிலேயே தங்கினேன். அதை எண்ணிப்பார்த்துவவிட்டு, முதலில் என் சூட்கேஸ்களை என் சித்தி  வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு மிகுதியை உங்கள் தங்கை வீட்டில் இறக்கவேண்டும் என்கிறேன். கணவரும் சரி என்று கூற என் வீட்டின் முன் வான் நிற்கிறது. 

 

என் பொதிகளை எல்லாம் இறக்கியவுடன் நீங்கள் அங்கே போய் பொதிகளை இறக்கிவிட்டு வாங்கோ என்கிறேன். சாரதியிடம் நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் நில்லுங்கோ என்றுவிட்டு என் பொதிகளை மகளும் கணவரும் உள்ளே கொண்டுவர உள்ளே இருந்து சித்தி வருகிறா. அவவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.  எங்கே சித்தி இவற்றை வைக்கிறது என்று நான் கேட்க, முன்னால் உள்ள அறையைக் காட்டுகிறா. அதற்குள் பொதிகளை வைத்தவுடன் இதுமட்டும் தானோ என்கிறா. மூன்று பேர் எப்படி இந்த அறையில் தங்கமுடியும். அதனால் இவர்கள் இருவரும் தங்கை வீட்டில். நான் மட்டும் தான் இங்கே என்கிறேன். 

 

அதுவும் சரிதான் என்று கூற நாம் வெளியே வந்து அமர்கிறோம். இரு கதிரைகள் மட்டும் இருக்கின்றன. என்ன சித்தி. இரண்டு கதிரைகளை வாங்கிப் போடுவதற்கு என்ன என்கிறேன். முன்னர் நான் வந்தபோதும் இதே இரண்டு கதிரைகள் இருக்க நான்கு கதிரைகளை வாங்கிப் போட்டிருந்தேன். அவை எங்கே என்று கேட்க எண்ணிவிட்டு உடனே நிறுத்திவிட்டேன். ஏனெனில் உன் சித்தியிடன் காசு இல்லை என்று நீ வாங்கிப் போட்டானியோ என அப்பப்போ திட்டுவார் கணவர். அதனால் பின்னர் கேட்போம் என்று பேசாமல் இருந்துவிட்டேன். 

 

  • Like 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.....என்னமா யோசித்து சித்தியையும் சரிக்கட்டி புருஷனையும் சமாளித்து, சா......சொல்லி வேல இல்ல.....இதெல்லாம் பெண்களுடன் கூடவே பிறந்து வருகிறது போல...... தொடருங்கள்......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா கட்டுநாயக்காவில் இருந்து வரும்போது பரந்தனுக்குப் பிறகு தான் ஆனையிறவு வரும். 

தொடருங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2023 at 11:57, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒருவாறு பொதிகள் வர ஆரம்பிக்க எனது பொதி பத்தாவதாய் வர உடனே எடுத்து சிப்பைத் திறந்து பார்க்கிறேன். என்  போனும் ஐபாடும் இருக்க மனதில் பெரும் நிம்மதி ஏற்படுகிறது. 

அப்பாடா!

spacer.png

Link to comment
Share on other sites

தொடருங்கள் சுமே. உங்கள் குறிப்பை தவிர அநேகமான உங்களை பற்றிய தகவல்களை  சேகரித்து விட்டோம். சும்மா...🙂

images-2.jpg

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்டுமரத்தின் கபடநாடகம்.
    • மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
    • இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02     தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -   "யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"   என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.   இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.   தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.   எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.   இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என   "..... எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"   என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.   இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.   மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .   இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 03 தொடரும்           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.