இலங்கையில் ஆறு மாதங்கள்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
எப்படி சிங்கப்பூரில் அரசின் கொள்கையை நடைமுறையை எதிர்த்து செயல்பட முடியாதோ.......அதே கொள்கைதான் ரஷ்யாவிலும் உண்டு.நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும் என நினைக்கின்றேன். ஆனால் யதார்த்தம் அதுதான். ரஷ்யாவிலும் அரசியல் கொள்கை நடைமுறைகள் உண்டு எல்லோ? கண்டத்திற்கு கண்டம் நாட்டுக்கு நாடு தனிமனித சுதந்திர எல்லைகள் வேறுபடும்.
-
பொதுமகன்கள் அமோகமாக தேர்ந்தெடுத்த அரசியலில் கூட எவ்வித முன்னேற்றமும் கிடைக்காத தமிழ் அவையில் தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதாவது ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும் சேர்ந்து தமிழர்விடுதலை கூட்டணிக்கு வாக்களித்து தமிழர் ஒருவர் சிங்கள இனவாத பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரும் வாய்ப்பை கொடுத்தனர். அந்த காலங்களில் இனக்கலவரங்களைதவிர இயக்கங்களின் தாக்குதல்கள் சொல்லுமளவிற்கு இல்லை. அந்த காலங்களிலேயே தமிழர்களின் அடிப்படை பிரச்சனை தீர்க்க முடியவில்லை எனில்....இனி எக்காலமும் இல்லை. பொதுமகன் வாக்களித்து தோல்வியடைந்த பூமி அது.
-
ஐ எம் எப் நேரடியாக தனியார் முதலீட்டாளர்களுடன் இலங்கைக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில்லை என நினைக்கிறேன் ஆனால் பாரிஸ் கிளப் (கடன் வழங்கும் நாடுகள்) உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது அதில் எட்டப்படும் உடன்பாடுகள் நேரடியாக முதலீட்டாளர்களை வததடைகிறது. ஐ எம் எப் இலங்கை கடனை மீள செலுத்துவதற்கான புறச்சூழலை உருவாக்குகிறது அதற்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. இலங்கை அரசு தற்போது இணங்கிய 30 கடன் தள்ளுபடியினை மேலும் அதிகரிக்க வலியுறுத்துகிறது இலங்கையின் GDP 80 பில்லியனுக்கு கீழ் செல்லும்போது மேலும் 20% கடன் தள்ளுபடியினை வலியுறுத்தியுள்ளது(Haircut) அதாவது மொத்தமாக 50 விகித கடன் தள்ளுபடி(55 பில்லியன்? கடனில் பாதியளவினைதான் இலங்கை திருப்பி செலுத்தும்). ஆனால் இலங்கை அரசு பொதுத்துறை சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதனை ஒரு அலகாக ஐ எம் எப் கடன் வழங்குனர் வலியுறுத்துகிறார்கள், பொருளாதார வளர்ச்சியுடன்(GDP) அதன் வளர்ச்சி விகிதத்திற்கு ஏற்ப வரிவிகித கணிப்பில் ஊழல் கண்காணிப்பினை ஒரு அலகாக இணைக்கிறார்கள்(Governance linked bond). இந்த நடாவடிக்கையால் நேரடியாக பாதிப்படைவது அரசியல்வாதிகளும் பொதுத்துறை ஊழல்வாதிகளும்தான் ஆனாலும் அதிகரித்த வரி விகித அதிஅகரிப்பு பொதுத்துறை ஊழியர்கள் பணிநீக்கம் என்பவற்றால் மக்களும் [பாதிப்படைவார்கள். அண்மையில் இலங்கை அன்னிய செலாவணியில் நிகர வருமானம் பெற்றதாக செய்தி வாசித்த நினைவுள்ளது அது போல பொருளாதார வளர்ச்சி தொடர்பான தகவலை திரித்து வெளியிட்டு மேலதிக கடன் தள்ளுபடி செய்ய முயன்றால் ஆர்ஜென்ர்ரினா அரசு போல் அபராத தொகை செலுத்தவேண்டும். பெரும்பாலும் ஐ என் எப் இன் நடவடிக்கையினால் இலங்கைக்கு நன்மைதான் ஏற்படும் வரி விகித அதிகரிப்பினால் மக்கள் பாதிப்படையக்கூடும் நீண்டகாலத்தில் அது ஒரு பிர்ச்சினையாக இருக்காது என கருதுகிறேன்.
-
சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மனித உரிமைகள் மற்றும் நீதி போன்ற விடயங்களில் எந்த அழுத்தங்களையும் கொடுக்காதவை. தமிழரை எதிரியாக பார்ப்பவை. ஆனால் மேற்குலகு சில அழுத்தங்களை வைக்கும். எனவே சிறீலங்கா சீன இந்திய கால்களை தான் குளிப்பாட்டும்.
-
தமிழனுக்கு கஞ்சி குடிக்கவே சுதந்திரம் இல்லையென்று தெரியிது....இதிலை நம்ம ஆறுமதக் கேசுகள் சம்மருக்கு அங்கைபோய் இறங்கினவுடனேயே ..நம்மநாடு தேனும் பாலும் ஓடுது என்று படம் காட்டிகினம்...கனடாவிலை சொந்தம் தேர்தலில் நிற் கையில் கையில் தமிழீழப் படம் காட்டல் வேறை...
-
-
Our picks
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
narathar posted a topic in பேசாப் பொருள்,
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
-
- 5 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.