Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

சீச்சீ.... அவ ஆந்திரா. நான் தமிழ்.   animiertes-gefuehl-smilies-bild-0091.gif

தொழிலதிபர் இந்திரன் வழியில் இருக்குமோ!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

பறையாது….மாட்லாடும்

செப்பும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைத்ததற்கு பாரட்டலாம். மாணவர்களிடம் அதிகம் பணம் அறவிடாமல் நியாயமான பணத்தைப் பெற்று நடத்தினால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

தொழிலதிபர் இந்திரன் வழியில் இருக்குமோ!

இந்திரன்…ரம்பா…

சே….தேவையில்லாமல்….கோஷான்…கீஷான் எண்டு கொண்டு…

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இந்திரன்…ரம்பா…

சே….தேவையில்லாமல்….கோஷான்…கீஷான் எண்டு கொண்டு…

அண்ணை உங்களுக்கும் சொந்தம் போல!🤪

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கோயில் புத்தனின் கோயில் அல்லவா!...ரம்பாவுக்கு சொந்தமாகிட்டார் புத்தன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2023 at 13:55, ஏராளன் said:

ரம்பா திறந்து வைத்த தனியார் பல்கலைக்கழகம்!

நடிகை ரம்பா திறந்து வைத்த தனியார் பல்கலைக்கழகம்!

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் பல்கலைக்கழகமான நொதேர்ன் யுனி (Nothern uni) கட்டடத்துக்கான கிரக பிரவேச பூஜை நேற்று (14) இடம்பெற்றது.

நொதேர்ன் யுனியின் நிறுவுனரான இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் முயற்சியாக யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியில் நொதேர்ன் யுனி தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளை தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட நொதேர்ன் யுனியில் கிரக பிரவேச பூஜை இடம்பெற்றது.

இதில், நொதேர்ன் யுனியின் நிறுவுனர் இந்திரகுமார், அவரது மனைவியான தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் நொதேர்ன் யுனி பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

https://thinakkural.lk/article/284767

@Nathamuni நாதமுனி நீங்கள் இன்னும் இந்தச் செய்தியை பார்க்கவில்லைப் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2023 at 23:15, குமாரசாமி said:

கேடு கெட்ட பிக்பாஸ் பிரபலங்கள் ஈழ விஜயம் செய்யும் போது ஏன் இந்த கேள்வி உங்களிடம் வரவில்லை. ஓ அவர்கள் தியாகிகளோ?

அண்ண.. ஊரில் வாழ்ந்த காலத்திலும் சரி.. கொழும்பு.. தாயகத்துக்கு வெளியில் வாழ்ந்த காலத்திலும் சரி.. இந்த சினிமாச் சிங்காரங்களின் நிகழ்வுகள் எதற்கும் போவதில்லை. அதேவேளை போறவையை குறை சொல்வதும் இல்லை. தாயகத்தில் தேனிசை செல்லப்பா.. சொர்ணலதா வந்த போது தாயக முத்தமிழ் விழாவில் இவர்களை கண்டதன் பின்.. மேற்கு நாடு ஒன்றில்.. பொங்குதமிழ் நிகழ்வில்.. தேனிசை செல்லப்பாவை கண்டதுதான் கடைசி. அவர் சினிமா பிரபல்யம் கிடையாது. அது வேற. 

ஆனால்.. ரம்பாவுக்கு இந்திரனின் மனைவி என்பதை தவிர.. யாழில் ஒரு உயர்கல்விக் கூடத்தை திறந்து வைக்க வேறு எந்த தகுதியும் இருப்பதாகத் தெரியவில்லை. ரம்பா திறந்து வைத்தது என்பது.. குறித்த கல்விக்கூடம் குடும்பச் சொந்துப் போல் இருக்கும்.. சமூகத்துக்கான உருப்படியான ஒரு கல்விக் கூடமாக இருக்குமா என்ற சந்தேகத்தை வலுப்படுத்திச் செல்கிறது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, nedukkalapoovan said:

அண்ண.. ஊரில் வாழ்ந்த காலத்திலும் சரி.. கொழும்பு.. தாயகத்துக்கு வெளியில் வாழ்ந்த காலத்திலும் சரி.. இந்த சினிமாச் சிங்காரங்களின் நிகழ்வுகள் எதற்கும் போவதில்லை. அதேவேளை போறவையை குறை சொல்வதும் இல்லை. தாயகத்தில் தேனிசை செல்லப்பா.. சொர்ணலதா வந்த போது தாயக முத்தமிழ் விழாவில் இவர்களை கண்டதன் பின்.. மேற்கு நாடு ஒன்றில்.. பொங்குதமிழ் நிகழ்வில்.. தேனிசை செல்லப்பாவை கண்டதுதான் கடைசி. அவர் சினிமா பிரபல்யம் கிடையாது. அது வேற. 

ஆனால்.. ரம்பாவுக்கு இந்திரனின் மனைவி என்பதை தவிர.. யாழில் ஒரு உயர்கல்விக் கூடத்தை திறந்து வைக்க வேறு எந்த தகுதியும் இருப்பதாகத் தெரியவில்லை. ரம்பா திறந்து வைத்தது என்பது.. குறித்த கல்விக்கூடம் குடும்பச் சொந்துப் போல் இருக்கும்.. சமூகத்துக்கான உருப்படியான ஒரு கல்விக் கூடமாக இருக்குமா என்ற சந்தேகத்தை வலுப்படுத்திச் செல்கிறது. 

நெடுக்கர்! இங்கு அல்லது வேறு ஊடகங்களில் கருத்து எழுதுபவர்கள் எல்லாம் களத்தில் நேர் முகமாக பார்த்து எழுதுபவர்கள் அல்ல.

எமக்கு எவர் எந்த நல்லதை செய்தாலும் நஞ்சு விதைக்காமல் செய்தால் சந்தோசம். நஞ்சை கூட அடையாளம் கண்டு பிடித்து சொல்ல நம்மிடம் எவரும் இல்லை என்பது ஈழத்தமிழனின் துர்ப்பாக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2023 at 17:57, nedukkalapoovan said:

அண்ண.. ஊரில் வாழ்ந்த காலத்திலும் சரி.. கொழும்பு.. தாயகத்துக்கு வெளியில் வாழ்ந்த காலத்திலும் சரி.. இந்த சினிமாச் சிங்காரங்களின் நிகழ்வுகள் எதற்கும் போவதில்லை. அதேவேளை போறவையை குறை சொல்வதும் இல்லை. தாயகத்தில் தேனிசை செல்லப்பா.. சொர்ணலதா வந்த போது தாயக முத்தமிழ் விழாவில் இவர்களை கண்டதன் பின்.. மேற்கு நாடு ஒன்றில்.. பொங்குதமிழ் நிகழ்வில்.. தேனிசை செல்லப்பாவை கண்டதுதான் கடைசி. அவர் சினிமா பிரபல்யம் கிடையாது. அது வேற. 

ஆனால்.. ரம்பாவுக்கு இந்திரனின் மனைவி என்பதை தவிர.. யாழில் ஒரு உயர்கல்விக் கூடத்தை திறந்து வைக்க வேறு எந்த தகுதியும் இருப்பதாகத் தெரியவில்லை. ரம்பா திறந்து வைத்தது என்பது.. குறித்த கல்விக்கூடம் குடும்பச் சொந்துப் போல் இருக்கும்.. சமூகத்துக்கான உருப்படியான ஒரு கல்விக் கூடமாக இருக்குமா என்ற சந்தேகத்தை வலுப்படுத்திச் செல்கிறது. 

இது சமூகத்துக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும் 
இதை எமது சமூகம் சரியான முறையில் பயன்படுத்துமா என்றுதான் தெரியவில்லை 
தவிர சிங்கள அரசின் அடாவடித்தனம் இல்லாமல் இருக்கவும் வேண்டும் 

ஒரு வழி பாதை என்று இருக்கும் சமூகத்துக்கு 
பல வழிகளை திறப்பது மிகவும் பயன் தர கூடியதே 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மக்களின் அன்பு அளப்பரியது - ரம்பா தெரிவிப்பு!

19 DEC, 2023 | 05:45 PM
image
 

யாழ்ப்பாண மக்களின் அன்பு அளப்பரியது என தென்னிந்திய நடிகை திருமதி ரம்பா இந்திரகுமார் இன்று செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி தேவஸ்தானத்தின் நல்லையம்பதி அலங்கார கந்தனின் சண்முக அர்ச்சனையினை முன்னிட்டு நடிகை திருமதி ரம்பா இந்திரகுமார் தனது குடும்பத்துடன் வருகைத்தந்தார் . 

விஷேட வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருவது இதுதான் முதற்தடவை மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. யாழ்ப்பாணம் அழகான ஒரு மாவட்டம். 

அடிக்கடி நாங்கள் வருவோம். தற்போது பிள்ளைகளுக்கான பொழுது போக்குக்காக வந்ததோம்.

ஹரிகரனின் இசை நிகழ்ச்சிறயானது எதிர்வரும் டிசம்பர் 21 அன்று நடத்தவிருந்த நிலையில் வளிமண்டத்தில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக  நடைபெறமால் போய் விட்டது. 

அது மிகவும் கஷ்டமாக இருக்கு அதற்காக கவலை அடையவில்லை. எதிர்வரும் மாசி மாதம் 09.02.2024 அன்று வரயிருக்கின்றோம். 

இந்திய பிரபலங்கள் வளிமண்டத்தில் ஏற்பட்ட தாழ்யழுக்கம் காரணமாக அடுத்ததடவை வருவார்கள் என்று நம்புகின்றேன்.

இந்த வருடம் கொழும்பு, யாழ்ப்பாணம் மட்டும்தான் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளோம். பின்னர் டுபாய்க்கு சுற்றுலா விடுமுறையினை கழிக்க போகின்றோம். அதுபிள்ளைகளின் பயணமாக இருக்கின்றது. என்றார்.

மேலும் இதுதொடர்பாக நோத் யூனியின் தலைவரும் தொழிலதிபருமான ப.இந்திரகுமார் கருத்து தெரிவிக்கையில், கல்விக்கான நிறுவனத்தை ஆரம்பித்து இருக்கின்றோம். எதிர்வரும் காலத்தில் 10,000 மாணவர்களுக்கான கல்வியினை வழங்க எதிர்பார்த்து இருக்கின்றோம்.

வசதிகுறைந்த மாணவர்களும் படிப்பதற்கான லோன் அடிப்படையில் கல்வியினை கற்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இங்க கற்றவர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

எங்களுக்கு உழைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை? எங்களது சந்தயினருக்கு தேவையான வசதி வாய்ப்புக்கள் எங்களிடம் இருக்கிறது. 

அது வட அமெரிக்கா, இந்தியாவிலும், இருக்கிறது. அதுவும் வடக்கு மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற நோக்கில் தான் நாங்கள் வந்துள்ளோம் என்றார்.

VideoCapture_20231219-111947.jpg

VideoCapture_20231219-123307.jpg

IMG-20231219-WA0089.jpg

IMG-20231219-WA0080.jpg

https://www.virakesari.lk/article/172080

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லூசுத் தலைப்பை என்ன சொல்லுறது?

புரிசன்ற ஊர்ப் பக்கம் வந்திருக்குது மனிசி,  பிள்ளையளோட!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2023 at 15:13, தமிழ் சிறி said:

@Nathamuni நாதமுனி நீங்கள் இன்னும் இந்தச் செய்தியை பார்க்கவில்லைப் போலுள்ளது.

நடிகை ரம்பா இன்  செய்திகள் அனைத்தும் முக்கியத்துவம் கொடுத்து பார்க்கப்படுகிறது 🤣😂 ஆனால்   கத்தர்மடத்தை   கவனித்துப் பார்ப்பதில்லை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 18/12/2023 at 07:09, Maruthankerny said:

இது சமூகத்துக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும் 
இதை எமது சமூகம் சரியான முறையில் பயன்படுத்துமா என்றுதான் தெரியவில்லை 
தவிர சிங்கள அரசின் அடாவடித்தனம் இல்லாமல் இருக்கவும் வேண்டும் 

ஒரு வழி பாதை என்று இருக்கும் சமூகத்துக்கு 
பல வழிகளை திறப்பது மிகவும் பயன் தர கூடியதே 

இன்றுள்ள இனவாத அரசியல் சூழ்நிலையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை மாற்றுக்கருத்துக்கள் வைக்காமல் பயன்படுத்தினாலே பாதி பிரச்சனைகள் குறையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

நடிகை ரம்பா இன்  செய்திகள் அனைத்தும் முக்கியத்துவம் கொடுத்து பார்க்கப்படுகிறது

யாழ்பாணத்து மக்களின் அன்பு அளப்பரியது என்று அவா சொல்லிவிட்டா அண்ணா 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இந்த லூசுத் தலைப்பை என்ன சொல்லுறது?

புரிசன்ற ஊர்ப் பக்கம் வந்திருக்குது மனிசி,  பிள்ளையளோட!

மாமியார் வீட்டுக்கு வந்தவவை....இப்படி நியூச்சாக்கி....மிரட்டுறாங்கள்....கற்காலம் நோக்கி தடம் புரளும் எம்மினம்..

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக சீரியாக இருந்தால் சரிப்பட்டு வராது😎.....எனவே
யாழ்ப்பாணத்து மருமகனும் மருமகளும் எண்டு ஒரு திரி தொடங்கோணும் போல கிடக்கு.....🤣

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ramba-01.jpg?resize=700,375&ssl=1

நல்லூர் ஆலயத்திற்கு சென்ற நடிகை ரம்பா : நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி!

யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ள தென்னிந்திய நடிகை ரம்பா நேற்றைய தினம் காலை நல்லூர் ஆலயத்திற்கு தனது குடும்பத்துடன் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

அதேவேளை நடிகை ரம்பாவின் கணவரின் நொர்தேன் யுனி கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் 21ஆம் திகதி நடைபெறவிருந்த இசை நிகழ்வு யாழில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் பெப்ரவரி 09ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.