Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!

adminAugust 8, 2024
Tamil-candidate6-1170x658.jpg

தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா. அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தனர்.

அவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (08.08.24) கூடி தமிழ் பொது வேட்பாளரை அறிவித்துள்ளனர்.

அதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரது பெயர்களும் இறுதிப் பட்டியலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil-candidate1-800x450.jpgTamil-candidate2-800x450.jpgTamil-candidate3-800x450.jpgTamil-candidate4-800x450.jpgTamil-candidate5-800x450.jpg

 

https://globaltamilnews.net/2024/205696/

  • Replies 77
  • Views 5.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    இதைத்தான் மக்களை ஏமாற்றும், புளுத்துப் போன, பழைய அரசியலின் நீட்சி என்கின்றேன். இவ்வாறு நீங்கள் சொல்லும் உறுதிப்படும், வட்டுக்கோட்டை தீர்மானத்திலேயே உறுதியாக நிற்கின்றார்கள் என்று சர்வதேசத்துக்கு

  • அதி உத்தம  ஜனாதிபதி  பா. அரியநேந்திரன் நிச்சயமாக தமிழர் பிரச்சனைக்கு நீதியான தீர்வை காண்பார்.  இவரே முப்படைகளின் பிரதம தளபதியாகவும் எதிர்காலத்தில் இருக்க போவதால் முப்படைகளையும் உபயோகித்து அதிரடியாக சு

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுக்கேனையள்.. ஒண்டில் வீராவசனம் பேசுவாங்கள் இல்லாட்டி இப்பிடி ஏதாவது விளங்காத வேலை செய்வாங்கள்.. இவங்கள் செய்ததில் ஒரு வெளிநாடாவது எங்களுக்கு ஏதாவது செய்ததா தீர்வை நோக்கி இத்தனை தேர்தல்களில் நின்றிர

  • கருத்துக்கள உறவுகள்

அதி உத்தம  ஜனாதிபதி  பா. அரியநேந்திரன் நிச்சயமாக தமிழர் பிரச்சனைக்கு நீதியான தீர்வை காண்பார்.  இவரே முப்படைகளின் பிரதம தளபதியாகவும் எதிர்காலத்தில் இருக்க போவதால் முப்படைகளையும் உபயோகித்து அதிரடியாக சுயாட்சியுடனான அரசியல் தீர்வை காண்பார். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

அதி உத்தம  ஜனாதிபதி  பா. அரியநேந்திரன் நிச்சயமாக தமிழர் பிரச்சனைக்கு நீதியான தீர்வை காண்பார்.  இவரே முப்படைகளின் பிரதம தளபதியாகவும் எதிர்காலத்தில் இருக்க போவதால் முப்படைகளையும் உபயோகித்து அதிரடியாக சுயாட்சியுடனான அரசியல் தீர்வை காண்பார். 

இது தான் தமிழரின் சாபம்.

எதையாவது ஒருவர் செய்ய முனைந்தால் ஆமாம் இவர் கிழிச்சுடுவார். எங்களுக்கு தெரியாததா?? என்று முளையிலேயே ......???

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

அதி உத்தம  ஜனாதிபதி  பா. அரியநேந்திரன் நிச்சயமாக தமிழர் பிரச்சனைக்கு நீதியான தீர்வை காண்பார்.  இவரே முப்படைகளின் பிரதம தளபதியாகவும் எதிர்காலத்தில் இருக்க போவதால் முப்படைகளையும் உபயோகித்து அதிரடியாக சுயாட்சியுடனான அரசியல் தீர்வை காண்பார். 

லூசுக்கேனையள்.. ஒண்டில் வீராவசனம் பேசுவாங்கள் இல்லாட்டி இப்பிடி ஏதாவது விளங்காத வேலை செய்வாங்கள்.. இவங்கள் செய்ததில் ஒரு வெளிநாடாவது எங்களுக்கு ஏதாவது செய்ததா தீர்வை நோக்கி இத்தனை தேர்தல்களில் நின்றிருக்கிறார்கள்.. தீர்வை நோக்கி அல்லது மக்கள் வாழ்வாதார அன்றாட பிரச்சினைகள் சம்பந்தமாக ஏதாவது செய்தோம் என்று இவர்களால் ஒன்றை சொல்ல முடியுமா..? மக்களுக்கு நல்லது செய்தால் அதை பேசி மக்களிடம் ஓட்டு கேட்கலாம் அதை செய்யாததால்தான் காசுகுடுத்து ஓட்டு போடவைக்கின்றனர் தமிழ்நாட்டில்.. இவர்கள் தீர்வை பெற்றுதருவதாக பேய்க்காட்டி ஓட்டு வாங்குகின்றனர்.. கஞ்சன் ஊறுகாய் முடிந்துபோம் என்று சாப்பிடும் இடத்தில் ஒரு நூலில் ஊறுகாய்ப்பையை கட்டித்தூக்கிவிட்டு அதை பார்த்து பார்த்து ஊறும் எச்சிலில் சாப்பிட்டானாம் அதைப்போல் தீர்வை சொல்லியே வயிறுவளர்க்கும் கூட்டம் இது.. இவர்களைவிட கொலைகாரன் டக்ளசிடம் மக்களிற்கு செய்தேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல நிறைய இருக்கு.. ஆனால் இவர்கள் மக்களுக்காக ஒரு குண்டூசியைகூட தூக்கிப்போட்டதில்லை இன்றுவரை.. ஒருத்தன் கொலைகாரன் என்றால் மற்றவன் ஏமாற்றுப்பேர்வழி.. இரண்டுமே தமிழர் தேசத்துக்கு தேவையற்ற ஆணிகள்.. அர்ச்சனாபோல பல புதிய இளைஞர்கள் புதியகட்சிகள் வரவேணும்.. அவர்களின் சரிபிழைகளை அப்புறம் பேசலாம்.. ஆனால் இந்த பழைய பஞ்சாங்கங்களை அடித்து துரத்தவேணும்…

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேன்; தமிழ் தேசியத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் - தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன்

Published By: DIGITAL DESK 3   08 AUG, 2024 | 04:26 PM

image

(எம்.நியூட்டன்)

தமிழ்தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேன் தமிழ்தேசியத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் பொதுவேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழ்தேசியபொதுக்கட்டமைப்பின் பெதுவேட்பாளரை  அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு  யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று வியாழக்கிழமை (08) இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசியத்தின் குறியீடாக மாத்திரமே நான் இருப்பேன் இலங்கை சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக வருவதற்காக அல்ல. தமிழ்த்தேசிய மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட இனமாக நாங்கள் இருக்கின்றோம் எங்களுக்கான உரிமை கிடைக்கவேண்டும் என்பதற்காக சர்வதேசத்திற்கும் தென்னிலங்கைக்கும் வலியுறுத்துகின்ற அடையாளமாக இந்தத் தேர்தலில் பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். எனது பணி செப்டம்பர் 22 ஆம் திகதி மட்டுமே இருக்கும் அதற்கு பிற்பாடான பணிகளை தமிழ் பொதுக்கட்டமைபே எடுக்கும்.

தந்தை செல்வா காலம் தலைவர் பிரபாகரன் காலம் அதற்குப் பின்னர் சம்பந்தன் தலைமையின் கீழ் வழிநடத்தப்பட்டோம். இதில் பலர் இருந்திருந்தாலும் தந்தை செல்வாவின் போராட்டம் அகிம்சை ரீதியாக பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும் பல ஏமாற்றங்களை கண்டிருந்தது பின்னர் ஆயுதப்போராட்டம் அது மௌனிக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் நடைபெற்று வந்தபோதும் ஏமாற்றங்களே எமக்கு மிஞ்சியது.

சர்வதேச ரீதியாக நாங்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்றபோது சர்வதேசம் ஒரு குரலில் வரவேண்டும் என்பதைத்தான் நமக்கு கூறியது இவ்வாறாக அனைத்து விடையங்களை நாங்கள் சீர்தூக்கிப் பார்க்கும் போது ஒரு குரலில் ஒருமித்த கருத்துக்களை முன்கொண்டு செல்வதற்காக நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டு அதற்கான ஆதரவை வாக்குகளாக செலுத்துகின்றபோது தமிழ் மக்களின்  இனப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாது உள்ளது அவை  தீர்க்கப்படவேண்டும் என்பதை வெளிக்காட்டுகின்ற முயற்சியே இந்த பொதுவேட்பாளர்  முயற்சியாகும்.

பொதுக் கட்டமைப்பு சார்பில் பலரையும் ஆராய்ந்த பின்னர் இறுதியாக சட்டத்தரணி தவராசாவும் எனது பெயரையும் இறுதித் தெரிவில் இருந்தது. நாங்கள் இருவரும் நண்பார்களாகவே இருக்கின்றோம். எவ்வாறாயினும் நானே அவரோ எவ்விதமான சர்ச்சைகளும் இல்லாமல் என்னை தெரிவு செய்தார்கள். இதனால் தமிழ்தேசியத்தின் அடையாளமாக நான் இருப்பேன்.  இவ்வாறான சூழலில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எத்தகையவர்கள் போட்டடியிடுகின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த விடையம் மிக முக்கியமாக போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளராக இருக்கின்றவர்கள் விடுதலைப்புலிகளை நான் தான் பிரித்தேன், கட்சிகளை  பிரித்தேன்,என்னை மாற்றமாட்டேன்  என்று போட்டிபோட்டு செல்லும் நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் மக்களை பிரித்தாளுகின்றவர்களுக்கு வாக்குகளை வழங்கப்போகின்றோமா? வடக்கில் ஒன்று தெற்கில் ஒன்று கதைப்பவர்களுக்கு வாக்குகளை வழங்கப்போகின்றோமா? வடக்கு கிழக்கை பிரித்தவர்களுக்க வாக்குகளை வழங்கப்போகின்றோமா? என்பதை தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும். தமிழ்த்தேசிய இனத்தின் விடிவுக்காக பல இலட்சம் மக்களையும் போராளிகளையும் இழந்துள்ள நாம் உரிமையற்றவர்களாக இருக்கும் நிலையில் பல ஜனாதிபதிகளைக் கண்டு ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில் இன்னும் பேரம் பேசத்தான் போகின்றோமா? இவை தொடர்பில் சிந்திக்கவேண்டும். இவற்றுக்காகத்தான் பொது வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளேன். எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எங்கள் விடிவுக்காக வாக்களிக்கவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/190586

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஏராளன் said:

தந்தை செல்வா காலம் தலைவர் பிரபாகரன் காலம் அதற்குப் பின்னர் சம்பந்தன் தலைமையின் கீழ் வழிநடத்தப்பட்டோம்.

சம்பந்தன் தலைமையின் கீழ் வழிநடாத்திய விடயங்களையும் கொஞ்சம் எடுத்துவிடலாமே?

சம்பந்தரை வெளிநாடுகளும் உள்நாட்டுக்காரரும் தான் வழிநடாத்தினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

தமிழ் தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேன்; தமிழ் தேசியத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் - தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன்

Published By: DIGITAL DESK 3   08 AUG, 2024 | 04:26 PM

image

(எம்.நியூட்டன்)

தமிழ்தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேன் தமிழ்தேசியத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் பொதுவேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழ்தேசியபொதுக்கட்டமைப்பின் பெதுவேட்பாளரை  அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு  யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று வியாழக்கிழமை (08) இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசியத்தின் குறியீடாக மாத்திரமே நான் இருப்பேன் இலங்கை சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக வருவதற்காக அல்ல. தமிழ்த்தேசிய மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட இனமாக நாங்கள் இருக்கின்றோம் எங்களுக்கான உரிமை கிடைக்கவேண்டும் என்பதற்காக சர்வதேசத்திற்கும் தென்னிலங்கைக்கும் வலியுறுத்துகின்ற அடையாளமாக இந்தத் தேர்தலில் பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். எனது பணி செப்டம்பர் 22 ஆம் திகதி மட்டுமே இருக்கும் அதற்கு பிற்பாடான பணிகளை தமிழ் பொதுக்கட்டமைபே எடுக்கும்.

தந்தை செல்வா காலம் தலைவர் பிரபாகரன் காலம் அதற்குப் பின்னர் சம்பந்தன் தலைமையின் கீழ் வழிநடத்தப்பட்டோம். இதில் பலர் இருந்திருந்தாலும் தந்தை செல்வாவின் போராட்டம் அகிம்சை ரீதியாக பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும் பல ஏமாற்றங்களை கண்டிருந்தது பின்னர் ஆயுதப்போராட்டம் அது மௌனிக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் நடைபெற்று வந்தபோதும் ஏமாற்றங்களே எமக்கு மிஞ்சியது.

சர்வதேச ரீதியாக நாங்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்றபோது சர்வதேசம் ஒரு குரலில் வரவேண்டும் என்பதைத்தான் நமக்கு கூறியது இவ்வாறாக அனைத்து விடையங்களை நாங்கள் சீர்தூக்கிப் பார்க்கும் போது ஒரு குரலில் ஒருமித்த கருத்துக்களை முன்கொண்டு செல்வதற்காக நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டு அதற்கான ஆதரவை வாக்குகளாக செலுத்துகின்றபோது தமிழ் மக்களின்  இனப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாது உள்ளது அவை  தீர்க்கப்படவேண்டும் என்பதை வெளிக்காட்டுகின்ற முயற்சியே இந்த பொதுவேட்பாளர்  முயற்சியாகும்.

பொதுக் கட்டமைப்பு சார்பில் பலரையும் ஆராய்ந்த பின்னர் இறுதியாக சட்டத்தரணி தவராசாவும் எனது பெயரையும் இறுதித் தெரிவில் இருந்தது. நாங்கள் இருவரும் நண்பார்களாகவே இருக்கின்றோம். எவ்வாறாயினும் நானே அவரோ எவ்விதமான சர்ச்சைகளும் இல்லாமல் என்னை தெரிவு செய்தார்கள். இதனால் தமிழ்தேசியத்தின் அடையாளமாக நான் இருப்பேன்.  இவ்வாறான சூழலில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எத்தகையவர்கள் போட்டடியிடுகின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த விடையம் மிக முக்கியமாக போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளராக இருக்கின்றவர்கள் விடுதலைப்புலிகளை நான் தான் பிரித்தேன், கட்சிகளை  பிரித்தேன்,என்னை மாற்றமாட்டேன்  என்று போட்டிபோட்டு செல்லும் நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் மக்களை பிரித்தாளுகின்றவர்களுக்கு வாக்குகளை வழங்கப்போகின்றோமா? வடக்கில் ஒன்று தெற்கில் ஒன்று கதைப்பவர்களுக்கு வாக்குகளை வழங்கப்போகின்றோமா? வடக்கு கிழக்கை பிரித்தவர்களுக்க வாக்குகளை வழங்கப்போகின்றோமா? என்பதை தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும். தமிழ்த்தேசிய இனத்தின் விடிவுக்காக பல இலட்சம் மக்களையும் போராளிகளையும் இழந்துள்ள நாம் உரிமையற்றவர்களாக இருக்கும் நிலையில் பல ஜனாதிபதிகளைக் கண்டு ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில் இன்னும் பேரம் பேசத்தான் போகின்றோமா? இவை தொடர்பில் சிந்திக்கவேண்டும். இவற்றுக்காகத்தான் பொது வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளேன். எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எங்கள் விடிவுக்காக வாக்களிக்கவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/190586

குறியீடு என்று அவர் கூறுவது இருக்கலாம், 😁

18 hours ago, விசுகு said:

இது தான் தமிழரின் சாபம்.

எதையாவது ஒருவர் செய்ய முனைந்தால் ஆமாம் இவர் கிழிச்சுடுவார். எங்களுக்கு தெரியாததா?? என்று முளையிலேயே ......???

அது என்ன ""முளையிலேயே""??????

தமிழ்ப் பொது வேட்பாளர் எனும் முயற்சி, முளைக்காத, நாட்பட்ட, சப்பை  விதை என்று தெரிந்தே விதைக்கப்படும் ஒரு பதரை எப்படித் தாங்கள் முழைத்ததுபோல காட்டலாம்?

🤨

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

குறியீடு என்று அவர் கூறுவது "தற்குறி" த்தனத்தையாக இருக்கலாம், 😁

அது என்ன ""முளையிலேயே""??????

தமிழ்ப் பொது வேட்பாளர் எனும் முயற்சி, முளைக்காத, நாட்பட்ட, சப்பை  விதை என்று தெரிந்தே விதைக்கப்படும் ஒரு பதரை எப்படித் தாங்கள் முழைத்ததுபோல காட்டலாம்?

🤨

சிங்களம் பலமிழந்து தமக்குள் பிரிந்து நிற்கும் இன்றைய சூழலில் தமிழர் ஒற்றுமையாக தமது பலத்தை காட்டுவதற்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று அங்குள்ளவர்கள் ஒன்று கூடி முடிவு செய்திருக்கிறார்கள். அதனை தமிழர்கள் ஒற்றுமையாக வழி மொழிதல் நடைபெற்றால் மட்டுமே அதன் பயனை அடைய முடியும். ஆனால் எம்மவர் எந்த பொறுப்பும் அற்று எடுத்தவுடன் கவுட்டுப்போடுவது எமது சாபக்கேடே. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

1) சிங்களம் பலமிழந்து தமக்குள் பிரிந்து நிற்கும் இன்றைய சூழலில் தமிழர் ஒற்றுமையாக தமது பலத்தை காட்டுவதற்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது

என்று அங்குள்ளவர்கள் ஒன்று கூடி முடிவு செய்திருக்கிறார்கள். அதனை தமிழர்கள் ஒற்றுமையாக வழி மொழிதல் நடைபெற்றால் மட்டுமே

2) அதன் பயனை அடைய முடியும்.

3) ஆனால் எம்மவர் எந்த பொறுப்பும் அற்று எடுத்தவுடன் கவுட்டுப்போடுவது எமது சாபக்கேடே. 

1) ஒற்றுமையாக எமது பலத்தை காட்டி என்ன பயன்? 

2) என்ன பலன்? ⁉️

3) ஒற்றுமை இன்மை எமது சாபக்கேடே  100%

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kapithan said:

1) ஒற்றுமையாக எமது பலத்தை காட்டி என்ன பயன்? 

2) என்ன பலன்? ⁉️

3) ஒற்றுமை இன்மை எமது சாபக்கேடே  100%

1) சிங்கள அரசியல்வாதிகளை ஆதரித்து இதுவரை என்ன பயன்?

2) அந்த சாபக்கேட்டை போக்க மட்டுமாவது இதனை பாவித்தால் என்ன குறைந்து போய் விடும்??

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

1) சிங்கள அரசியல்வாதிகளை ஆதரித்து இதுவரை என்ன பயன்?

2) அந்த சாபக்கேட்டை போக்க மட்டுமாவது இதனை பாவித்தால் என்ன குறைந்து போய் விடும்??

1) முஸ்லிம்களுக்கு முடியும் என்றால்  ஏன் எங்களால்  முடியாது?

2) உந்தத் தேர்தலில் நிற்பதால் ஏதாவது பயனைத்தானும் நாம் பெறுவோம் என்று உங்களால் கூற முடியுமா? 

யார் சொல்லி இந்தத் தேர்தலில் நிற்கிறார்கள்? இந்தியாதானே? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

1) ஒற்றுமையாக எமது பலத்தை காட்டி என்ன பயன்? 

2) என்ன பலன்? ⁉️

3) ஒற்றுமை இன்மை எமது சாபக்கேடே  100%

என்ன சொல்ல வருகிறீர்கள்??   

ஒற்றுமை. இல்லை என்றால் சாபக்கேடு.   உண்மை தான்   அதேநேரம்  ஒற்றுமையால்.  எனபலன்  ?? என்றும் கேட்கிறீர்கள்     

24 minutes ago, விசுகு said:

1) சிங்கள அரசியல்வாதிகளை ஆதரித்து இதுவரை என்ன பயன்?

2) அந்த சாபக்கேட்டை போக்க மட்டுமாவது இதனை பாவித்தால் என்ன குறைந்து போய் விடும்??

உண்மை நிச்சியமாக   சிறந்த கேள்விகள் 

3 minutes ago, Kapithan said:

2) உந்தத் தேர்தலில் நிற்பதால் ஏதாவது பயனைத்தானும் நாம் பெறுவோம் என்று உங்களால் கூற முடியுமா? 

பலன் இல்லை  போட்டி இட்டாலும். அல்லது போட்டு இடா. விட்டாலும்      இரண்டுமே ஒன்று தான்    எதை செய்தாலும் ஒன்று தான்     எனவேதான் போட்டு இடுவதை குறை கூற முடியாது  

  • கருத்துக்கள உறவுகள்

பல கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். இவ்வளவு காலமும் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்து என்ன பயனை தமிழர்கள் பெற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு போடும் வாக்கு வீணான வாக்குகள்தானே . இந்த முறை தமிழ்ப் பொது வேட்பாளருக்குப் போடுவதால்  புதியதாக நாம் எதனையும் இழந்து விடப்போவதில்லை. ஆனால் தமிழ்மக்கள் ஒரு வாக்கை மட்டும்.பொது வேட்பாளர்களுக்கு அளிக்க வேண்டும். 2வது 3வது தெரிவைச் செய்வது பொது வேட்பாளர் நிறுத்தியதற்கு அர்த்தமில்லாமல் செய்து விடும். இதுபற்றி இன்னும் இந்த பொதுவேட்பாளரை நிறுத்திய குழுவினர் இது தொடர்பாக கள்ள மெளனம் சாதிப்பது நல்லதல்ல.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, புலவர் said:

பல கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். இவ்வளவு காலமும் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்து என்ன பயனை தமிழர்கள் பெற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு போடும் வாக்கு வீணான வாக்குகள்தானே . இந்த முறை தமிழ்ப் பொது வேட்பாளருக்குப் போடுவதால்  புதியதாக நாம் எதனையும் இழந்து விடப்போவதில்லை. ஆனால் தமிழ்மக்கள் ஒரு வாக்கை மட்டும்.பொது வேட்பாளர்களுக்கு அளிக்க வேண்டும். 2வது 3வது தெரிவைச் செய்வது பொது வேட்பாளர் நிறுத்தியதற்கு அர்த்தமில்லாமல் செய்து விடும். இதுபற்றி இன்னும் இந்த பொதுவேட்பாளரை நிறுத்திய குழுவினர் இது தொடர்பாக கள்ள மெளனம் சாதிப்பது நல்லதல்ல.

ஆமாம் ... ஒரு வாக்கு மட்டுமே போட வேண்டும்    நல்ல கருத்துகள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

) ஒற்றுமையாக எமது பலத்தை காட்டி என்ன பயன்? 

2) என்ன பலன்? ⁉️

இவருக்கு கொர்னோ போல் சுமத்தி வைரஸ் காய்ச்சல் பிடித்து விட்டது யாழ் வாசகர்கள் குழம்ப வேண்டாம் தேர்தல் முடியமுன் அமரிக்காவில் இருந்து வைத்தியர்களை கொண்டு அவரின் காய்ச்சல் இல்லாமல் ஆக்கப்படும் .😃

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

சிங்களம் பலமிழந்து தமக்குள் பிரிந்து நிற்கும் இன்றைய சூழலில் தமிழர் ஒற்றுமையாக தமது பலத்தை காட்டுவதற்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று அங்குள்ளவர்கள் ஒன்று கூடி முடிவு செய்திருக்கிறார்கள். அதனை தமிழர்கள் ஒற்றுமையாக வழி மொழிதல் நடைபெற்றால் மட்டுமே அதன் பயனை அடைய முடியும். ஆனால் எம்மவர் எந்த பொறுப்பும் அற்று எடுத்தவுடன் கவுட்டுப்போடுவது எமது சாபக்கேடே. 

இதுக்கு நான் 100 வீத ஆதரவு...இங்குள்ள சிலர் எப்பவுமே சகுனப் பிழைகாரர்தான்...வென்று சனாதிபதி ஆகமுடியாது... என்பது உண்மை.. எம்முடைய நிலையில் சாண் போனாலென்ன முழம்போனாலென்ன..

என்னிடம் இருக்கும் மூன்று கேள்விகள்:

1. இவ்வாறு தமிழ் மக்கள் இவருக்கே பெருமளவுக்கு வாக்களித்தால் (ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் போடும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை விட),  அதனால் சர்வதேச சமூகம் என்ன வகையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் உதவும்?

2. அவ்வாறு உதவுமா அல்லது, வெற்றியடைந்த சிங்கள வேட்பாளருடன் / சனாதிபதியுடன் இணைந்து பணியாற்றி,  இலங்கை அரசினால் அடையக்கூடிய தம் நலன்களை தொடர்ந்து பேண முயலுமா?

3. ஒரு வேளை தமிழ் மக்களின் வாக்குகளில் சொற்ப வீதமே இவருக்கு கிடைப்பின், தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரிக்கின்றார்கள் என அது எடுத்துக் கொள்ளப்படுமா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

என்ன சொல்ல வருகிறீர்கள்??   

ஒற்றுமை. இல்லை என்றால் சாபக்கேடு.   உண்மை தான்   அதேநேரம்  ஒற்றுமையால்.  எனபலன்  ?? என்றும் கேட்கிறீர்கள்     

உண்மை நிச்சியமாக   சிறந்த கேள்விகள் 

பலன் இல்லை  போட்டி இட்டாலும். அல்லது போட்டு இடா. விட்டாலும்      இரண்டுமே ஒன்று தான்    எதை செய்தாலும் ஒன்று தான்     எனவேதான் போட்டு இடுவதை குறை கூற முடியாது  

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,......கண்ணைக் கட்டுதே 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,......கண்ணைக் கட்டுதே 

🤣

வயோதிபர்களுக்கு   அப்படி தான் இருக்கும் 🤣🤣🤣🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இவருக்கு கொர்னோ போல் சுமத்தி வைரஸ் காய்ச்சல் பிடித்து விட்டது யாழ் வாசகர்கள் குழம்ப வேண்டாம் தேர்தல் முடியமுன் அமரிக்காவில் இருந்து வைத்தியர்களை கொண்டு அவரின் காய்ச்சல் இல்லாமல் ஆக்கப்படும் .😃

பெருசு, 

ஏதாவது ஒரு வகையில் சிறிதேனும் பலனளிக்கக்கூடிய ஒரு MP தேர்தல்  அல்லது மாகாண சபைத் தேர்தல்  போன்றவைகளில் ஒற்றுமையாகப் போட்டியிட்டு கூரையேற முடியாத ஊனமுற்றவர்கள், எந்தப் பிரயோசனமும் அற்ற வைகுண்டம் போகும் வழியைப் பற்றி பீத்தினால் பின்பக்கக்கத்தால் சிரிக்கத்தான் முடியும். 🤣

உந்தக் கூத்தை நீங்கள், அல்வாயன், விசுகர் போன்ற முரட்டுக் காளைகள் எல்லோரும்  பார்த்து ரசியுங்கள் என்னால் முடியாது.

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

பெருசு, 

ஏதாவது ஒரு வகையில் சிறிதேனும் பலனளிக்கக்கூடிய ஒரு MP தேர்தல்  அல்லது மாகாண சபைத் தேர்தல்  போன்றவைகளில் ஒற்றுமையாகப் போட்டியிட்டு கூரையேற முடியாத ஊனமுற்றவர்கள், எந்தப் பிரயோசனமும் அற்ற வைகுண்டம் போகும் வழியைப் பற்றி பீத்தினால் பின்பக்கக்கத்தால் சிரிக்கத்தான் முடியும். 🤣

உந்தக் கூத்தை நீங்கள், அல்வாயன், விசுகர் போன்ற முரட்டுக் காளைகள் எல்லோரும்  பார்த்து ரசியுங்கள் என்னால் முடியாது.

உங்களுக்கு விளங்கவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது,.......

இந்த பொது வேட்பாளர் நியமனம் மூலம்   .....போர் குற்ற விசாரணை செய்கிறோம். 

காணமால். ஆக்கப்பட்டோரை தேடுகிறோம்.  

பறிகொடுத்த. நிலத்தை காணி கோருகிறோம்.  

சிறையில். 20ஆண்டுகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருப்போரை. விடுவிக்க கோருகுறோம் 

மாகாண சபை தேர்தலை நடத்த வலி உறுத்துகிறோம் 

சுயாட்சி கோருகிறோம்.  

ஐனதிபதி பதவிக்காக தேர்தலில் போட்டி இடவில்லை 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

உங்களுக்கு விளங்கவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது,.......

இந்த பொது வேட்பாளர் நியமனம் மூலம்   .....போர் குற்ற விசாரணை செய்கிறோம். 

காணமால். ஆக்கப்பட்டோரை தேடுகிறோம்.  

பறிகொடுத்த. நிலத்தை காணி கோருகிறோம்.  

சிறையில். 20ஆண்டுகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருப்போரை. விடுவிக்க கோருகுறோம் 

மாகாண சபை தேர்தலை நடத்த வலி உறுத்துகிறோம் 

சுயாட்சி கோருகிறோம்.  

ஐனதிபதி பதவிக்காக தேர்தலில் போட்டி இடவில்லை 

 

முதலில் கூரை ஏறுங்கள் மிகுதியை பின்னர் பார்ப்போம்,..😏

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

முதலில் கூரை ஏறுங்கள் மிகுதியை பின்னர் பார்ப்போம்,..😏

ஒரே ஒருவர் தான் ஐனதிபதி     இல்லையா?? அப்படியென்றால்  ஏன் பல சிங்களவர் போட்டிஇடுகிறார்கள்.......???  இந்த அரியேத்திரன். ஒரு சிங்களவன்.  என்று கற்பனையில் இருங்கள்’  உங்கள் வருத்தம் தீர்ந்து விடும்    தேர்தலில் எவரும் போட்டி இடலாம்  நீங்கள் வெல்ல முடியாது   போட்டி இடாதீர்கள்  என்பது   அடிப்படை உரிமை மீறிய செயல் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

பெருசு, 

ஏதாவது ஒரு வகையில் சிறிதேனும் பலனளிக்கக்கூடிய ஒரு MP தேர்தல்  அல்லது மாகாண சபைத் தேர்தல்  போன்றவைகளில் ஒற்றுமையாகப் போட்டியிட்டு கூரையேற முடியாத ஊனமுற்றவர்கள், எந்தப் பிரயோசனமும் அற்ற வைகுண்டம் போகும் வழியைப் பற்றி பீத்தினால் பின்பக்கக்கத்தால் சிரிக்கத்தான் முடியும். 🤣

உந்தக் கூத்தை நீங்கள், அல்வாயன், விசுகர் போன்ற முரட்டுக் காளைகள் எல்லோரும்  பார்த்து ரசியுங்கள் என்னால் முடியாது.

என்னென்டு அய்யா முடியும்...ஒருநாளும் எந்த விசயத்தையும் ஆதரிப்பதில்லையே..ஏனென்றால்.....

  • கருத்துக்கள உறவுகள்

எறும்பூர கற்குழியும். 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.