Jump to content

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு

புதிய இணைப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) அறிவித்துள்ளது.

வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று (01) இடம்பெற்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் இன்றைய கூட்டத்தில் அரியநேத்திரனுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும், தமது கட்சியைச் சேர்ந்த அரியநேத்திரன் தமிழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக அதிலிருந்து விலக வேண்டும் என்றும், சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் மூன்று தீர்மானங்களை தமிழரசுக் கட்சி நிறைவேற்றியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்காக தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் கூடியுள்ளது.

குறித்த கூட்டமானது, வவுனியா (Vavuniya) இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (01) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

  

கட்சியின் தலைவர்

இந்தநிலையில், குறித்த கூட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) வருகைத் தரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு | Itak Central Committee Meeting Today

மேலும், இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் (R. Shanakyan), த.கலையரசன், எஸ்.குகதாசன் (Kuagadhasan), எம்.எ.சுமந்திரன் (M.A Sumanthiran), சட்டத்தரணி கே.வி. தவராசா, கே.சிவஞானம், செயலாளர் ப.சத்தியலிங்கம் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://ibctamil.com/article/itak-central-committee-meeting-today-1725172608

Link to comment
Share on other sites

  • Replies 151
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

குறித்த கூட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) வருகைத் தரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் (R. Shanakyan), த.கலையரசன், எஸ்.குகதாசன் (Kuagadhasan), எம்.எ.சுமந்திரன் (M.A Sumanthiran), சட்டத்தரணி கே.வி. தவராசா, கே.சிவஞானம், செயலாளர் ப.சத்தியலிங்கம் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்திற்கு மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன் போன்றவர்கள் சமூகமளிக்கவில்லை. 
இது... சுமந்திரன் குரூப்பின், மற்றுமொரு  தில்லாலங்கடி வேலை. 😎
கட்சியை நடுத் தெருவில் வைத்து,  நாறப் பண்ணிக் கொண்டு இருக்கிறாங்கள். 😂
எல்லாம்.. அந்த சம்பந்தனுக்கு, சமர்ப்பணம். 🤣

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

சஜித்தின் தோல்வியை இனி எவராலும் தடுக்க முடியாது!

  • Like 2
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) அறிவித்துள்ளது.

சாணக்கியனுக்கு ரணில் கொடுத்த பணமெல்லாம் வேஸ்டா கோப்பாலு?

1 hour ago, தமிழ் சிறி said:

இந்தக் கூட்டத்திற்கு மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன் போன்றவர்கள் சமூகமளிக்கவில்லை. 
இது... சுமந்திரன் குரூப்பின், மற்றுமொரு  தில்லாலங்கடி வேலை. 😎
கட்சியை நடுத் தெருவில் வைத்து,  நாறப் பண்ணிக் கொண்டு இருக்கிறாங்கள். 😂
எல்லாம்.. அந்த சம்பந்தனுக்கு, சமர்ப்பணம். 🤣

ரணிலுக்கு முதுகில் குத்திட்டாங்களே.

வழமையா அந்தாள் தானே எல்லோருக்கும் ஆப்பு வைக்கும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) அறிவித்துள்ளது.

large.IMG_6968.jpeg.ef0f543f11835ee4f8ff

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

சாணக்கியனுக்கு ரணில் கொடுத்த பணமெல்லாம் வேஸ்டா கோப்பாலு?

ரணிலுக்கு முதுகில் குத்திட்டாங்களே.

வழமையா அந்தாள் தானே எல்லோருக்கும் ஆப்பு வைக்கும்.

ரணிலின்… 60 கோடியை அமுக்கி  விட்டார்கள்.
தற்செயலாய் ரணில் வென்றால்… சாணக்கியனும், சுமனும் நாட்டை விட்டு தப்பி ஓட வேண்டி வரும். 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ரணிலின்… 60 கோடியை அமுக்கி  விட்டார்கள்.
தற்செயலாய் ரணில் வென்றால்… சாணக்கியனும், சுமனும் நாட்டை விட்டு தப்பி ஓட வேண்டி வரும். 😂

 

இதிலே ரணிலுக்கு நஸ்டம் ஏதுமில்லை சிறி.

ஏற்கனவே கட்சியை பிழந்ததற்கே பணம் கொடுக்கப்பட்டது.

அவர்களும் இலவசமாக செய்யவா முடியும்.

இன்னமும் நாட்கள் இருக்கின்றன.

ஐயா விக்கியருக்கு ரணில் மேல ஒரு கண்ணு.ஆனாலும் நேரே சொல்ல முடியாமல் விக்கித் தவிக்கிறார்.

இங்கேயும் வாக்கில்லாத பலருக்கு ரணில் மேல ஒரு கண்ணு.

பொதுவேட்பாளர் தரப்பில் இரண்டாவது வாக்கை யாரக்கு போட சொல்கிறார்களோ?

பெட்டிகள் கைமாறும் போது மனங்களும் மாறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவை இது செல்லாது என்றும் இது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு என்றும் அறிவுத்துள்ளதாக அறிய முடிகிறது..

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“இலங்கை தமிழரசுக் கட்சிக்கு நன்றி” - சஜித்

01 SEP, 2024 | 07:00 PM
image
 

ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி தனக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நன்றியை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகத்தில்  இதனை பதிவு செய்துள்ள அவர், நாங்கள் இணைந்து அனைவரும் வெற்றிபெறும், இனவெறியில்லாத  பாரபட்சம் இல்லாத எதிர்காலத்தை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார்.

ஐக்கியம் வலு பகிர்ந்துகொள்ளப்பட்ட நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்காலத்தை உருவாக்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/192590

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஏராளன் said:

ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி தனக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நன்றியை தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிந்த பின்பும் இதே மனநிலையில் இருந்தால் சந்தோசம்.

Link to comment
Share on other sites

 சாணக்கியனும் சுமந்திரனும் சஜித்துக்கு வாக்கை போட சொன்ன படியால் தமிழ் மக்கள் நான் முந்தி  நீ முந்தி என வாக்களிக்க போகிறார்கள். 
மிக முக்கியமாக தமிழருக்கு தீர்வொன்று வர போகிறது. மேற்கு நாடுகளுக்கும் ஒரு செய்தியை சொல்ல போகிறோம்.

  • Like 1
  • Haha 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

மாவை இது செல்லாது என்றும் இது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு என்றும் அறிவுத்துள்ளதாக அறிய முடிகிறது..

மாவையின் முடிவை மாவையே கேட்பதில்லையே.

வருங்கால தலைவர் சிறிதரனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு உள்ளூரில் காய்களை நகர்த்துகிறார்களே?

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

இந்தியன் நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமே சுமந்திரனும் அவர் சார்ந்த தமிழரசு கட்சியின் சஜித்துக்கு ஆதரவு நிலைப்பாடு ஆகும். ரணிலை விலக்கி அனுரவிக்கு எதிராக சஜித்தை தனிப்பெரும் வேட்பளராக்குவது என்பது தற்பொழுது ராஜதந்திர/அரசியல் வடடாரங்களின் பேசுபொருளாக உள்ளது. அனுராவுக்கு இருப்பது மக்கள் அலை அல்ல அது சுனாமியாகும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nunavilan said:

 சாணக்கியனும் சுமந்திரனும் சஜித்துக்கு வாக்கை போட சொன்ன படியால் தமிழ் மக்கள் நான் முந்தி  நீ முந்தி என வாக்களிக்க போகிறார்கள். 

சுமந்திரனே.... செல்லாக் காசு.
அவரே... திருமதி ரவிராஜின் வெற்றியை தட்டிப் பறித்து பாராளுமன்றம் போனவர்.
இதுக்குள்ளை... அவர் சஜித்துக்கு போடச் சொல்லி சிபாரிசு பண்ணுகிறாராம். 😂
இவங்களின் அலப்பறை தாங்க முடியவில்லை.  🤣

  • Thanks 2
  • Haha 1
Link to comment
Share on other sites

45 minutes ago, ஈழப்பிரியன் said:

மாவையின் முடிவை மாவையே கேட்பதில்லையே.

வருங்கால தலைவர் சிறிதரனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு உள்ளூரில் காய்களை நகர்த்துகிறார்களே?

சிறிதரன் வெளிநாட்டில் காய்(சு)களை நகர்த்த  உள்ளூர் காய்கள் உள்ளூரில் காய்களை நகர்த்துகிறார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

இந்த முடிவிற்கும் இந்திய பாதுகாப்பு செயலாளரது இலங்கை விஜயத்துக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கும்.

சஜித்தையும் ரணிலையும் ஒற்றுமை ஆக்க இந்தியா முயன்றது. ஆனால் சரிவரவில்லை. எனவே சஜித்தை முன்னிலைக்கு கொண்டு வர முயல்கிறது.

எஜமானின் உத்தரவுக்கமை பிரேதசந்திரன் பொது வேட்பாளர் விடயத்தில் ஒதுங்கி இருப்பார் என நினைக்கிறேன்.  குத்துக்கரணம் அடித்தாலும் ஆச்சரியமில்லை.

அரியத்திற்கான ஆதரவான  பிரச்சாரம் இனி குறையும். நிலாந்தனும் சோதி மாஸ்ரரும் மூக்குடைபடப் போகின்றனர்.

 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, நிழலி said:

இந்த முடிவிற்கும் இந்திய பாதுகாப்பு செயலாளரது இலங்கை விஜயத்துக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கும்.

சஜித்தையும் ரணிலையும் ஒற்றுமை ஆக்க இந்தியா முயன்றது. ஆனால் சரிவரவில்லை. எனவே சஜித்தை முன்னிலைக்கு கொண்டு வர முயல்கிறது.

எஜமானின் உத்தரவுக்கமை பிரேதசந்திரன் பொது வேட்பாளர் விடயத்தில் ஒதுங்கி இருப்பார் என நினைக்கிறேன்.  குத்துக்கரணம் அடித்தாலும் ஆச்சரியமில்லை.

அரியத்திற்கான ஆதரவான  பிரச்சாரம் இனி குறையும். நிலாந்தனும் சோதி மாஸ்ரரும் மூக்குடைபடப் போகின்றனர்.

 

இப்போதும் எப்போதும் முப்போதும்   இந்தியாவின் எதிரி JVP அல்லவா,..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/v/z8B8KtB8jSchn6UW/

வெளியான சுமந்திரனின் தில்லுமுல்லு விளையாட்டு! 

கட்சி உறுப்பினர்களுக்கு முறையாக அறிவிக்காமல் திட்டமிட்டு சுமந்திரன் எடுத்த தீர்மானம் என யோகேஸ்வரன் ஐயா வெளிப்படுத்தியிருக்கிறார். 

இன்று 1ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில் நடைபெறும் என்று 28/08/2024 திகதியிடப்பட்ட கடிதம் 29 ஆம் திகதி அன்று அனைத்து மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் கிடைக்கப்பெற்றது. கட்சியின் யாப்பின் படி மத்தியகுழு கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன் எழுத்துமூல அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது யாப்பு விதி. 

1) யாப்பு விதியை மீறி நடாத்தப்பட்ட கூட்டம் செல்லுபடியற்றது. அதுமட்டுமின்றி அங்கு எடுத்த தீர்மானமும் செல்லுபடியற்றது. 

2) 26 ஆம் திகதி கட்சி தலைவர் மாவை ஐயாவை சந்தித்த சிறீதரன் எம்பி “நான் 29 ஆம் திகதி இங்கிலாந்து செல்கிறேன், 6ஆம் திகதி தான் திரும்ப வருவேன். அதற்கிடையில் முக்கிய கூட்டங்களை தவிர்க்குமாறு” கேட்டிருந்தார்.

3) சிறீதரன் எம்பியின் கோரிக்கையை ஏற்ற மாவை ஐயா 8ஆம் திகதியில் இருந்து 10ஆம் திகதிக்கிடையில் தான் கூட்டம் போடுவம் சிறீ என்று உறுதியளித்திருந்தார். 

இன்று நடந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரன் MP, வன்னி MP சார்ள்ஸ், யோகேஸ்வரன், ஶ்ரீநேசன், சரவணபவன், ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா போன்ற முக்கிய தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்குபற்றவில்லை. 

46 மத்திய குழு உறுப்பினர்களில் 25 பேர் தான் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அதில் 6 பேர் தமிழ் பொது வேட்பாளருக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். ஆக சுமந்திரன் அணியின் 19 பேர் எடுத்த தனித்தீர்மானம் தான் சஜித்தை ஆதரவளிப்பது என்பது. 

மட்டக்களப்பை சேர்ந்த சிறீநேசன், யோகேஸ்வரன் ஆகியோருக்கு இன்றைய கூட்டம் தொடர்பில் இதுவரை எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை. 

இந்த நிலையில் தான் பலமான தரப்பை உள்ளீர்க்காமல் சுமந்திரன் அணியால் திட்டமிட்டு தனித்து சஜித்திற்கு ஆதரவு என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிவில் மக்கள் பதில் சொல்வார்கள். 

இந்த முடிவு தமிழரசுக்கட்சியின் முடிவு இல்லை என்பதை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உறுதிப்படுத்தியிருக்கிறார்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வரலாற்றில் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக  உலக ஜதார்த்தத்தை புறந்தள்ளி தனி ஆவர்தன வீர அரசியல் செய்து, உள்ளதும் போச்சையா நொள்ளைக்கண்ணா  என்ற  கதையாய் தமிழர் அரசியல் தொடர்கிறது.  

படிப்படியாக அங்குலம் அங்குலமாக  தமது அரசியல் தந்திரோயபம்  மூலம் பெரிய கட்சிகளுக்குள் ஊடுருவி தமது சமுதாயத்தை ஶ்ரீலங்காவில் பலப்படுத்திய  முஸலீம் அரசியல்வாதிகளின் தந்திரோபங்களைக் கூட தமிழ் அரசியலில் ஈடுபடும் தாயக/  புலம் பெயர் தமிழ் தேசிய  அரசியல்வாதிகளால் செய்ய முடியவில்லை.  இன்றைய நிலையில் தமிழரின் பொருளாதார சமூக கட்டமைப்புகளை வட கிழக்கில்  பலப்படுத்த தேவையான கோரிக்கைகளை வைத்து பேரம் பேசி அதை நிறைவேற்றி தமது அரசியலைத் தொடர்ந்திருக்கலாம்.   அதை விடுத்து பொது வேட்பாளர் என று ஒரு கோமாளிக்கூட்டம் கூத்தாட  இப்போது எந்த பயனும் அற்ற முடிவையே தமிழரசுக் கட்சியும் எடுத்துள்ளது என்றே நினைக்கிறேன்.  தமது வெற்று கோஷங்களை வைத்து தமிழ் தேசிய வெறித்தன அரசியலை செய்து மிக விரைவில் இரண்டாவது பெரும்பான்மை என்ற நிலையில் இருந்து மூன் றாவது சிறுபான்மை இனம் என்ற நிலைக்கு தமிழரை கொண்டுவந்துவிட்டே புலம் பெயர் / தாயக தமிழ் தேசிய வெறியர்கள் தமது கண்களை மூடுவார்கள். 

  • Like 4
Link to comment
Share on other sites

தமிழரசு கட்சியில் இருந்து பொது வேட்பாளராக  அரியநேந்திரன் போட்டியிட்டது கட்சிக்கு விரோதமானது என்றனர். இப்போ சஜித்துக்கு ஆதரவு என்று ஒரு சிலர் அக்கட்சியில் இருந்து  அறிவித்து இருப்பது கட்சிக்கு விரோதமானதில்லையா??
முஸ்லிம்களும்  ஜனாதிபதி வேட்பாளர்களாக உள்ளனர்? எம்மை மாதிரி குடும்பி பிடி சண்டை இல்லையே? ஏன்? அவர்களும் சிறுபான்மையினர். அதே போல் மலையகத்தின் இருந்தும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் உள்ளார். யாரும் அவருக்கு சேறடித்ததாக தெரியவில்லை.

 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, nunavilan said:

சிறிதரன் வெளிநாட்டில் காய்(சு)களை நகர்த்த  உள்ளூர் காய்கள் உள்ளூரில் காய்களை நகர்த்துகிறார்கள்.

நிலத்தையும் புலத்தையும் சேர்த்துக் குழைத்து முறுக்குச் சுட தமிழரசுக் கட்சியின் சில தலைகள் முயல்வது தெரிகிறது. புலத்திற்கு பணத்தால் சுடும் தகுதி இருந்தாலும்… நிலம் மானத்தால் சுடும் என்று நம்பலாம். சிங்களத்துடன் பேரம்பேச ஒரு தன்மானத் தமிழனை உருவாக்குவது அவசியம்.🤔

 

  • Like 1
Link to comment
Share on other sites

1 minute ago, Paanch said:

 

நிலத்தையும் புலத்தையும் சேர்த்துக் குழைத்து முறுக்குச் சுட தமிழரசுக் கட்சியின் சில தலைகள் முயல்வது தெரிகிறது. புலத்திற்கு பணத்தால் சுடும் தகுதி இருந்தாலும்… நிலம் மானத்தால் சுடும் என்று நம்பலாம். சிங்களத்துடன் பேரம்பேச ஒரு தன்மானத் தமிழனை உருவாக்குவது அவசியம்.🤔

 

மொத்தத்தில் தமிழரசு கட்சியையே மக்கள் நிராகரிக்க வேண்டும். எரியும் நெருப்பில் கொள்ளி பொறுக்குபவர்களாக உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

https://www.facebook.com/share/v/z8B8KtB8jSchn6UW/

வெளியான சுமந்திரனின் தில்லுமுல்லு விளையாட்டு! 

கட்சி உறுப்பினர்களுக்கு முறையாக அறிவிக்காமல் திட்டமிட்டு சுமந்திரன் எடுத்த தீர்மானம் என யோகேஸ்வரன் ஐயா வெளிப்படுத்தியிருக்கிறார். 

இன்று 1ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில் நடைபெறும் என்று 28/08/2024 திகதியிடப்பட்ட கடிதம் 29 ஆம் திகதி அன்று அனைத்து மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் கிடைக்கப்பெற்றது. கட்சியின் யாப்பின் படி மத்தியகுழு கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன் எழுத்துமூல அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது யாப்பு விதி. 

1) யாப்பு விதியை மீறி நடாத்தப்பட்ட கூட்டம் செல்லுபடியற்றது. அதுமட்டுமின்றி அங்கு எடுத்த தீர்மானமும் செல்லுபடியற்றது. 

2) 26 ஆம் திகதி கட்சி தலைவர் மாவை ஐயாவை சந்தித்த சிறீதரன் எம்பி “நான் 29 ஆம் திகதி இங்கிலாந்து செல்கிறேன், 6ஆம் திகதி தான் திரும்ப வருவேன். அதற்கிடையில் முக்கிய கூட்டங்களை தவிர்க்குமாறு” கேட்டிருந்தார்.

3) சிறீதரன் எம்பியின் கோரிக்கையை ஏற்ற மாவை ஐயா 8ஆம் திகதியில் இருந்து 10ஆம் திகதிக்கிடையில் தான் கூட்டம் போடுவம் சிறீ என்று உறுதியளித்திருந்தார். 

இன்று நடந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரன் MP, வன்னி MP சார்ள்ஸ், யோகேஸ்வரன், ஶ்ரீநேசன், சரவணபவன், ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா போன்ற முக்கிய தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்குபற்றவில்லை. 

46 மத்திய குழு உறுப்பினர்களில் 25 பேர் தான் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அதில் 6 பேர் தமிழ் பொது வேட்பாளருக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். ஆக சுமந்திரன் அணியின் 19 பேர் எடுத்த தனித்தீர்மானம் தான் சஜித்தை ஆதரவளிப்பது என்பது. 

மட்டக்களப்பை சேர்ந்த சிறீநேசன், யோகேஸ்வரன் ஆகியோருக்கு இன்றைய கூட்டம் தொடர்பில் இதுவரை எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை. 

இந்த நிலையில் தான் பலமான தரப்பை உள்ளீர்க்காமல் சுமந்திரன் அணியால் திட்டமிட்டு தனித்து சஜித்திற்கு ஆதரவு என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிவில் மக்கள் பதில் சொல்வார்கள். 

இந்த முடிவு தமிழரசுக்கட்சியின் முடிவு இல்லை என்பதை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கனடா டொரண்டோ வில் சுமத்திரனுக்கு இரண்டாவது குடியிருப்பு தொகுதி சொந்தமாகியிருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரனும் சாணக்கியனும் சஜஸத்தை ஆதரித்து சஜித்தின் வெற்றிவாய்ப்பைதட்டிப் பறித்து ரணிலிடம் கொடுக்கப் டபோகிறார்கள் போல் தெரிகிறது. அது சரி கஜித் சுயாட்சித் துpர்வுக்கு எழுத்து மூல உத்திரவாதம் அளித்து விட்டாரா?. சிறிதரன் தெரிஞ்சு கொண்டுதான் வெளிநாட்டுக்குப் போய் விட்டார். நான் இல்லாத சநரமாய் பார்த்து இந்த விசயம் நடந்திட்டுது. நான் இருந்திருந்தால் நிலைமைமே தலகீழாக மாறியிருக்கும். என்று தேர்தல் முடிந்த பின்னர் விளக்கம் கொடுப்பார். கழுவுற மீனில நழுவுற மீன் அவர்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 10 பேரடங்கிய குழுவை தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தியது சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு Published By: DIGITAL DESK 3   14 SEP, 2024 | 08:33 PM (நா.தனுஜா) சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு 10 பேரடங்கிய அதன் தேர்தல் கண்காணிப்புக்குழுவை இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மிகமுக்கிய தருணத்தில் நடைபெறும் இம்முறை ஜனாதிபதித்தேர்தல் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும் எனவும் அவ்வமைப்பு எதிர்வுகூறியுள்ளது.   நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுப்பதற்காக வழமைபோன்று இம்முறையும் ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு மற்றும் ஏனைய சர்வதேச நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்பட்டது. அதற்கமைய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் இரண்டு குழுக்கள் ஏற்கனவே நாட்டை வந்தடைந்ததுடன், அவை நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை ஆரம்பித்துள்ளன. அதேபோன்று சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனி ஃபோர் தலைiயிலான 13 பேரடங்கிய பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக்குழு இன்றைய தினம் (15) நாட்டை வந்தடையவுள்ளது. அதுமாத்திரமன்றி பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பின் (சார்க்) அங்கத்துவ நாடுகளையும், ரஷ்யாவையும் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் அவர்களது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர். இவ்வாறானதொரு பின்னணியில் சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு அதன் தேர்தல் கண்காணிப்பாளர்களைக் கடந்த 11 ஆம் திகதி முதல் இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது. இக்கண்காணிப்பாளர்களில் தேர்தல் செயன்முறை ஆய்வாளர்கள் உட்பட 10 பேர் உள்ளடங்குகின்றனர். அவர்கள் நாடளாவிய ரீதியில் 7 மாகாணங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன், 14 பிரதான நகரங்களையும், அவற்றைச் சூழவுள்ள ஏனைய பிரதேசங்களையும் இலக்காகக்கொண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இதன்போது தேர்தல் செயன்முறையுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ள அவர்கள், தேர்தல் பிரசார நடவடிக்கைகள், வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் செயன்முறை, தேர்தலுக்குப் பின்னரான நிலைவரம் என்பவற்றைப் பரந்துபட்ட அளவில் கண்காணிக்கவுள்ளனர். அதன்படி இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு, 'பொருளாதார ஸ்திரமின்மை, உயர் பணவீக்கம், மக்கள் மத்தியிலான அதிருப்தி ஆகியவற்றுக்கு நாடு முகங்கொடுத்திருந்த நிலையில், தீர்மானம் மிக்கதொரு தருணத்தில் இந்த ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தல் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் மிகமுக்கிய பங்காற்றும்' எனத் தெரிவித்துள்ளது.  https://www.virakesari.lk/article/193691
    • ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடந்த 9ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மைதானத்தில் நீர் தேங்கியது. இதனால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. மைதானத்தில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தேங்கிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியவில்லை. தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலையில் 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மைதான ஊழியர்கள் போராடி 3வது நாளான நேற்று முன்தினம் தண்ணீரை வெளியேற்றினர். ஆனால் மீண்டும் கிரேட்டர் நொய்டாவில் மழை பெய்ததன் காரணமாக இந்த போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் 91 வருடங்களில் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஒரு டெஸ்ட் போட்டி கைவிடப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த 1933 முதல் இதற்கு முன் இந்தியாவில் நடைபெற்ற எந்த டெஸ்ட் போட்டியும் இப்படி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதில்லை. இந்த போட்டி ரத்தான நிலையில், இந்திய வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. https://thinakkural.lk/article/309436
    • தேர்தல் பிரசார நிறைவின் பின் சமூக வலைத்தளங்களை 48 மணித்தியாலங்கள் முடக்க தீர்மானம்? ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரசாரங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில், 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் எவ்வித தேர்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடாத நிலையில் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் பிரச்சாரம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக ஊடக குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அமைதியான காலத்தில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399461
    • தமிழ்ப் பொது வேட்பாளர்  ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கிறார் - வட, கிழக்கு நீதிக்கும் சமாதானத்திற்குமான குருக்கள் ஒன்றியம் Published By: DIGITAL DESK 3   15 SEP, 2024 | 10:21 AM (எம்.நியூட்டன்) தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கிறார் எனவே அவரையே தமிழ்மக்கள் தெரிவு செய்யவேண்டும் என வடக்கு கிழக்கு நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு நாடு தயாராகிக்கொண்டு இருக்கின்றது. இச் ஜனாதிபதி தேர்தல் பற்றிய அல்லது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய அரசியல் அறிவு, அவர்களது தனி- கூட்டு அரசியல் இறந்தகால வரலாற்றுடன்தான் எமக்கு முன்னுள்ள தெரிவாக முன்வைக்கப் பட்டுள்ளது. இது எவ்வளவு நம்பிக்கை தருவதாக இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய தேவையில்லை. இந்த ஜனாதிபதி தேர்தலும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் உள்ள சட்டகத்திற்குள் இருந்தே நடாத்தப்படுகின்றது என்ற உண்மையை கூறாமல் இருக்க முடியாது. தற்போதுள்ள சனநாயக முறைமை எண்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது என்ற உண்மை பொது அறிவுக்குட்பட்டது. வாக்குகளின் எண்ணிக்கையை மையப்படுத்திய ஜனாதிபதி ஜனநாயக தெரிவில் ஈழத்தமிழ் மக்களுடையதும் ஏனைய சிறுபான்மை இனக் குழுக்களினதும் வாக்குகள் செல்வாக்கு செலுத்துவது வரையறுக்கப்பட்டுள்ளது.  தெற்கிலிருந்து சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கள பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரச்சார மேடைகளை அலங்கரிக்கின்றார்கள்.  ஈழத்தமிழ் மக்களுடைய கூட்டு அரசியல் வேணாவாவையும் தமிழின அழிப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற அரசியல் கோட்பாட்டுச் சூழலில் தெற்கில் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒன்றுபட்டிருக்கின்றார்கள்.  அதேநேரத்தில் தமிழின அழிப்பில் நீதி கோருவதை மறுப்பதோடல்லாமல் ஸ்ரீலங்காவின் படைக் கட்டுமானம் சிங்கள தேச விடுதலைக் கட்டுமானத்தில் ஆற்றிய பங்களிப்பை கதாநாயக சொல்லாடலுக் கூடாகவே கட்டமைக்கின்றார்கள். தமிழர் தாயகம் தொடர்ந்து ஈழ தமிழ்த்தேசிய நீக்கத்துக்குள் வலிந்து தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இது வெவ்வேறு வடிவங்களை/பரிமாணங்களை கொண்டுள்ளது. உதாரணமாக, ஈழத்தமிழர் ஒருங்கிணைந்த தாயகத்தை துண்டாடல், தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கச் செறிவை அதிகரித்தல், ஈழத்தமிழர் தாயகம் தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உட்பட்ட தேசமாகவே உள்ளது. ஈழத்தமிழர் நிலங்கள் வலிந்து பறிக்கப்படுகின்றன.  சிங்கள மயமாக்கல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. ஒட்டுமொத்தத்தில் ஈழத்தமிழர் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறான அரசியல் சூழமைவில் அரசியல் அறத் தெரிவாக தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக நமக்குமுன் நிறுத்தப்பட்டுள்ளார். இம்முக்கியமான காலகட்டத்தில் தமிழ் மக்களின் தெரிவு, ஈழத்தமிழரின் அரசியல் வேணவாவை வலுப்படுத்தும் என்பது எமது ஆழமான நம்பிக்கை என்றுள்ளது. https://www.virakesari.lk/article/193690
    • இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடக்க இன்னும் ஒரு கிழமை உள்ள நிலையில்.... ஸ்ரீலங்காவின் ஆணழகன் யார்.... என நடக்கும் போட்டி. 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.