Jump to content

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

49 minutes ago, கிருபன் said:

வருகின்ற எலக்சனில் அம்பிகா ஆன்ரி பாராளுமன்றம் போகவேண்டும். ☺️

அரியம் மட்டக்களப்பில் முழுக்க முழுக்க தமிழர்கள் உள்ள பட்டிருப்புத் தொகுதியில் கூட நான்காவதாகத்தான் வந்தார்! கிழக்கு மாகாணத்தில் தமிழ்த்தேசியம் முற்றாகவே காணாமல் போய்விட்டது. வன்னியிலும், வடக்கிலும் ஊசலாடுகின்றது. இப்போதைய அரசியல் தலைமை எப்படியும் விரைவில் கொள்ளி வைத்துவிடுவார்கள்.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த தேர்தலில் பிள்ளையான் அமோக வெற்றி பெற்றார் இந்த தேர்தலில் ரணிலுக்கு வாக்கு போடும் படி பிரச்சாரம் செய்தார் ஆனால் சஜித் வெற்றி பெற்றுள்ளார்....சஜித்தின் வெற்றி தமிழ் தேசியத்தின் வெற்றியாகவும் எடுக்கலாம் ...

ஜெ.வி.பி என்ற கட்சி கூட தனது பெயரை இழந்து , 50 வருடங்களுக்கு பின்பு புதுப் பெயருடன் தான் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.. ஆகவே ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையில்லாத ஆணி 2.25 இலட்சம் வாக்குகளை பிரிச்சுக்கிட்டு போயிட்டு.

ரணில் நரியாரின் பிரித்தாளும் தந்திரமே அவரின் தோல்விக்கும் காரணமாகி விட்டது.

அடிப்படையில் ரணில்- சஜித் கூட்டாக.. பெற்ற மொத்த வாக்குகள் அனுரவை விட அதிகம். 

ராஜபக்ச செல்வாக்கு அடியோடு காணாமல் போய் விட்டது.

சரத்தின் குண்டு துளைத்த கார்.. செல்லாக் காசாகி விட்டது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த தேர்தலில் பிள்ளையான் அமோக வெற்றி பெற்றார் இந்த தேர்தலில் ரணிலுக்கு வாக்கு போடும் படி பிரச்சாரம் செய்தார் ஆனால் சஜித் வெற்றி பெற்றுள்ளார்....சஜித்தின் வெற்றி தமிழ் தேசியத்தின் வெற்றியாகவும் எடுக்கலாம் .

தமிழ் பிரதேசங்களில் சஜித்தின் வெற்றி தமிழ் தேசியத்தின் வெற்றியா? 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த தேர்தலில் பிள்ளையான் அமோக வெற்றி பெற்றார் இந்த தேர்தலில் ரணிலுக்கு வாக்கு போடும் படி பிரச்சாரம் செய்தார் ஆனால் சஜித் வெற்றி பெற்றுள்ளார்....சஜித்தின் வெற்றி தமிழ் தேசியத்தின் வெற்றியாகவும் எடுக்கலாம் ...

ஜெ.வி.பி என்ற கட்சி கூட தனது பெயரை இழந்து , 50 வருடங்களுக்கு பின்பு புதுப் பெயருடன் தான் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.. ஆகவே ...

நான் தங்கள் கருத்தை பார்த்தவுடன் யோசித்தேன், சிறிலங்கா தேசியவாதிகள் வினா எழுப்புவர் என்று...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, island said:

தமிழ் பிரதேசங்களில் சஜித்தின் வெற்றி தமிழ் தேசியத்தின் வெற்றியா? 

2 hours ago, கிருபன் said:

 

 

அப்படித்தான் நான் கருதுகிறேன் ...தமிழரசு கட்சி சொன்ன ஆளுக்கு தானே வாக்கு போட்டிருக்கின்றனர்...ஏன் ரணிலுக்கு போடவில்லை ....டக்கிளஸ் அங்கஜன் போன்றோர் ரணிலுக்கு பிரச்சாரம் செய்த் பொதும் 

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தும்புக்கட்டு -சங்கு -குப்பைக்கூடை…..! 

தும்புக்கட்டு -சங்கு -குப்பைக்கூடை…..! (வெளிச்சம்:010)

 — அழகு குணசீலன் —

அ: அகிம்சை.

ஆ: ஆயுதம்.

இ: இராஜதந்திரம்.

அன்றோருநாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தமிழ்ப்பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் கூறிய அ,ஆ,இ…. அரிவரி அரசியல் வரிகள் இவை. அந்த வரிசையில் வந்ததுதான் இந்த பொதுவேட்பாளர் எண்ணக்கருவும்,  தமிழர் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு காட்டுகின்றதுமான இந்த “இ” : அரசியலும். 

இப்போது தமிழ் மக்கள் தங்கள் அபிலாஷை என்ன? என்பதை  தேர்தல் முடிவுகள் மூலம்  தெட்டத்தெளிவாக சர்வதேசத்திற்கு காட்டியுள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒட்டுமொத்த தமிழர் பெரும்பான்மை தமிழ்த்தேசிய  தீவிர அரசியலை நிராகரித்திருக்கிறது. சிங்கள தேசிய சக்திகளுடன் இணக்க அரசியல் செய்வதற்கான விருப்பத்தை வெளிக்காட்டியிருக்கிறது. அரங்கம் அரசியல் ஆய்வுகள் பலவும் ஆரம்பத்தில் இருந்தே குறிப்பிட்டது போல் தமிழ்த்தேசியம் அம்மணமாக சர்வதேசத்தின் முன்னால் நிற்கிறது.  இதை விடவும் பொதுவேட்பாளர் கச்சையை உரிந்து  சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு இன்னும் என்ன இருக்கிறது. 

அதேபோன்றே தேர்தல் பகிஷ்கரிப்பு கோரிக்கையை முன்வைத்த தமிழ்க்காங்கிரசும் அம்பலப்பட்டு நிற்கிறது. தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியின் டெலிபோன் ஒலி வடக்கு கிழக்கு மக்களின் காதுகளில் சங்கு ஒலியை விடவும் ஓங்கி ஒலித்திருக்கிறது.

ஜே.வி.பி. அ -னாவில் இல்லாமல் ஆ -வன்னாவில் ஆரம்பித்து இ- னாவுக்கூடாக அ -வை எட்டியிருக்கிறது. கிழக்கில் இருந்து களமிறக்கப்பட்ட  பொதுவேட்பாளர் அரியநேந்திரன் மூன்று மாவட்டங்களிலும்  மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் அனைத்திலும்  அநுரகுமாரவினால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு,கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்ப்பொதுவேட்பாளர் தமிழ்மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் உட்பட எந்த ஒரு தேர்தல் மாவட்டத்திலும் அரியநேந்திரனுக்கு அதிகூடிய வாக்குகளைப் பெறமுடியவில்லை. அதிலும் வெட்கக்கேடு தனது சொந்த மாவட்டமான மட்டக்களப்பில்  அனுரகுமார திசாநாயக்கா  இரண்டாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை மேலதிகமாக பெற்று அரியநேந்திரனை தோற்கடித்திருப்பது. பொதுவேட்பாளர் அரியநேந்திரன் பெற்ற வாக்குகள் 36,905, தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார பெற்ற வாக்குகள் 38,832. 

   தமிழர் அடையாள அரசியலில் எந்தத் தும்புக்கட்டையை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெறுவோம் என்ற தமிழ்த்தேசிய அரசியலை அதே தும்புக்கட்டைக்கொண்டு மக்கள் துடைத்து துப்பரவு செய்திருக்கிறார்கள்.

மேலும் பொதுவேட்பாளர் அரியநேந்திரனின் சொந்த தொகுதி மட்டும் அன்றி, தனித்தமிழ் தொகுதி என்ற பெயரைக் கொண்ட பட்டிருப்பில் பொது வேட்பாளர் ஆக 12,356 வாக்குகளை (13%) மாத்திரமே பெற்றுள்ளார். மாறாக சஜீத்பிரேமதாச (40%), ரணில் விக்கிரமசிங்க (29%), அநுரகுமார திசாநாயக்க (07%) வாக்குகளை பெற்றுள்ளனர். இதன்படி அரியநேத்திரன் சொந்த தொகுதியிலும் சிங்கள தேசியத்தினால் (76%) தோற்கடிக்கப்பட்டுள்ளார். தமிழரசுக்கட்சியின் சாணக்கியன் அணி சஜீத்பிரேமதாசவையும், ரி.எம்.வி.பி. ரணில் விக்கிரமசிங்கவையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆதரித்திருந்தன.

இது பாராளுமன்றத் தேர்தல் அல்ல வாக்குகள் பல்வேறு தமிழ் கட்சிகள், வேட்பாளர்களுக்கு இடையே பிரிந்து போவதற்கு. தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பினர் வார்த்தைகளில் சொன்னால் பொதுவேட்பாளர் ஒட்டு மொத்த தமிழினத்தின் அடையாளம். அரியநேத்திரன் வாயில் அவர் தமிழ் தேசியத்தின் “குறியீடு” அது உண்மையெனில்  வடக்கு, கிழக்கில் இந்த வாக்களிப்பு எப்படி அமைந்திருக்க வேண்டும்?. தமிழ் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் அரியநேத்திரன் சிங்கள தேசிய வேட்பாளர்களை தோற்கடித்து முன்னணியில் நின்றிருக்க வேண்டும் அல்லவா?  அம்பாறையிலும், திருகோணமலையிலும் ஆகக்குறைந்தபட்சம் மொத்த தமிழர் வாக்குகளில் அதிகமானவற்றை பெற்றிருக்கவேண்டாமா? தமிழ்த்தேசியப் போர் தொடுக்க சங்கை எடுத்து சங்கை கெட்டு நிற்கிறது தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பு. கடிதத்தலைப்பு 83 அமைப்புக்களும், 7 கட்சிகளும்.சங்கே முழங்கு என்று மூச்சடக்கி  சங்கூதிய  தமிழ்த்தேசியத்தின் ‘திரட்சி’ ஊடகவியலாளர்களுக்கு  மூச்சு திணறலை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் மக்கள்  காத்திருந்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினர் கட்சிகளான தமிழ்த்தேசிய கட்சிகளும்,  முஸ்லீம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சிகளும் பிளவின்றி ஒரே அணியாக தென்னிலங்கையின் மூன்று வேட்பாளர்களுள் ஒருவரை ஆதரிக்க தீர்மானித்லிருந்தால் அவர்கள் மேடைக்கு மேடை கூவிய தாங்கள் தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி என்பதை நனவாக்கி இருக்க முடியும். அநுரகுமார திசாநாயக்கவின் வாய்ப்பை தட்டிப்பறித்திருக்கவும் முடியும். வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் முஸ்லீம் வாக்குகள் சஜீத், ரணில், அரியம் என்று பிரிந்ததால் அதன் இறுதி நன்மையை அடைந்தவராகிறார் அநுரகுமார. இல்லையேல் குறைந்தது பத்து இலட்சம் வாக்குகளால்  சஜீத் அல்லது ரணிலை ஜனாதிபதியாக்கியிருக்க முடியும். அப்போது அவர்கள் கூறிய ஜனாதிபதி யார்? என்பதை நிர்ணயித்தல் சாத்தியமாகியிருக்க வாய்ப்பு இருந்தது.

இப்போது தமிழ்த்தேசிய சஜீத் ஆதரவு அணி தோற்றது. தமிழ்த்தேசிய ரணில் ஆதரவு அணி தோற்றது. தமிழ்த்தேசிய பகிஷ்கரிப்பு அணி தோற்றது. வடக்கு கிழக்கு சஜீத், ரணில் ஆதரவு முஸ்லீம் கட்சிகளும், அணிகளும் தோற்றன. ரணில் ஆதரவு இணக்க அரசியல் ஈ.பி.டி.பியும், ரி.எம்.வி.பி.யும் தோற்றுப் போயினர். சஜீத்தையும், ரணிலையும் ஒன்றிணைக்க முனைந்த தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் தோற்றுப் போயினர். பொதுவேட்பாளரை  நிறுத்த முயன்ற தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸும்  தோற்றன. சுமந்திரன் அணியை தன்பக்கம் இழுப்பதில் தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பும் தோற்றது.

சஜீத் தோற்றார். ரணில் தோற்றார். அரியநேந்திரனும் தோற்றார். 

 சிறுபான்மையினர் கட்சிகள் அனைத்தும் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சிபார்சுகளை செய்தவை. அந்த சிபார்சு அரசியலை மக்கள் ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டாலும், ஆனால் அது மக்களுக்கு நன்மையற்ற வகையில் தோற்றுப்போயிருக்கிறது. ஆக, வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லீம் மக்கள் பொதுவாகவும், சிறப்பாக பொது வேட்பாளருக்கு அளித்த வாக்குகளும் ஜனநாயக அரசியலில் ஆயுதமாகவோ, , இராஜதந்திரமாகவோ அன்றியும் அகிம்சை அரசியலுக்கும் பயனற்று குப்பை கூடைக்குள் வீசப்பட்டுள்ளன.

கடந்த பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்புடன் ஒப்பிடுவதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு ஏற்பட்டுள்ள படுதோல்வியை கோடிட்டுக் காட்டமுடியும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளை விடவும் ஆக சுமார் மூவாயிரம் வாக்குகளை பொதுவேட்பாளர் மேலதிகமாக பெற்றுள்ளார்.  இது பகிஷ்கரிப்பு கோரிக்கையை நிராகரித்தவர்களின் வாக்காக இருக்க வாய்ப்புண்டு. 

வடக்கு, கிழக்கின் மற்றைய மாவட்டங்கள் அனைத்திலும் பொதுவேட்பாளர் 2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளை விடவும் குறைவாகவே பெற்றுள்ளார். குறைவு என்பது ஒருசில ஆயிரம் வாக்குகள் அல்ல. வன்னி, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் பொது வேட்பாளர் சுமார் 50 வீதம் வாக்குகளை குறைவாகப் பெற்றுள்ளார். அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வீழ்ச்சி சுமார் 75 வீதமாக இருக்கிறது. இதனால்தான் அநுரகுமார அரியத்தாரை மட்டக்களப்பு மாவட்டத்தில் முந்தக்கூடியதாக இருந்தது. இது முயலும், ஆமையும் நடாத்திய ஓட்டப்பந்தயத்தை நினைவூட்டும்  பொதுவேட்பாளர் அரசியல்  கோமாளித்தனம்.

ஆக, பொதுவேட்பாளர் கோமாளி வேடம் போட்டு தமிழ்த்தேசியம் சர்வதேசத்திற்கு மக்கள் வாக்கெடுப்பின் மூலம் காட்டியிருப்பது என்ன?

* வட்டுக்கோட்டை பிரகடனத்தை மக்கள் நிராகரித்து இருக்கிறார்கள். அல்லது காலத்திற்கு பொருத்தமற்ற காலாவதியான ஒன்று என்று மீளப்பெற்றிருக்கிறார்கள்.

* இதன்மூலம் தமிழர் தாயகக்கோட்பாடு,  தேசிய இனம், சுயநிர்ணய உரிமை, சமஷ்டி, இணைந்த வடக்கு கிழக்கு  அனைத்தும் மக்கள் மத்தியில் பலவீனமான கருத்தாடல்களாகிவிட்டன என்பது சர்வதேசத்திற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

*வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குள்,ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் என்பதற்கும் அப்பால் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் இணக்கமாக வாழவிரும்புகின்றனர்.

*ஒரு நாடு, ஒரே மக்கள் இலங்கையில் எவரும் எங்கும் வாழலாம் எந்தப் பிரிவினருக்கும் என்று தனியான பிரதேசங்கள் இல்லை என்ற கோத்தபாயவின்  நிலைப்பாட்டிற்கு ஜே.வி.பி. வடிவம் கொடுக்க  வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சுமார் இரண்டரை இலட்சம் மக்கள்  அநுரகுமாரவுக்கு வாக்களித்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

* மேலும் தமிழ்த்தேசிய மக்கள் திரட்சி, தாராள பொருளாதாரக் கொள்கை, பொருளாதார அபிவிருத்தி வேண்டி நின்ற தொடர்ச்சி, இந்திய, அமெரிக்க மேலாண்மை போன்ற வற்றையும் நிராகரித்து இருக்கிறார்கள் தமிழ்மக்கள் .

* சுமந்திரன் அணி தமிழ்த்தேசியத்தை சிதைக்கிறது என்று தும்புக்கட்டுக்கு குஞ்சம் கட்டப்போய் தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பும், பொதுவேட்பாளரும் மூக்குடைபட்டு நிற்கிறார்கள்.

இனி என்ன?. வீழ்ந்தாலும் மீசையில் மண்ஒட்டாத அறிக்கைகள் நாளைவரும்……!
 

 

https://arangamnews.com/?p=11267

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

நிச்சமாக வாக்காளர் எண்ணிக்கையில் தமிழ் தேசியம் உயிர்ப்புடன் இல்லை என்பது எனது நிலைப்பாடு..
இனவாத நாட்டில் 5ஒ வருடமாக தமிழ்தேசியம் நிலைத்து நிற்பது பெரிய சாதனை

தேசியம் என்பது உணர்வு சார்ந்தது. சரியான தலைமை வெளிப்படும்போது மக்கள் அதற்கு எதிர்வினை ஆற்றுவார்கள். 

வடக்கு கிழக்கிலும் அதுதான் நிலைமை. 

புலம்பெயர் ஸ் சொல்லுகிறார்கள, TNA சொல்லுகிறது  என்பதற்காகவெல்லாம் தேசிய உணர்வை வெளிக்காட்ட முடியாது. 

அங்கேயுள்ள மக்களை முட்டாள்களாக எண்ணுவதையும்  புலம்பெயர்ஸ் எல்லோரும் புத்திசாலிகள் என்று எண்ணுவதையும்  முதலில் நிறுத்துங்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

தமிழ் பிரதேசங்களில் சஜித்தின் வெற்றி தமிழ் தேசியத்தின் வெற்றியா? 

புலம்பெயர் ஸ் தாங்கள் ஏதோ வேற்று உலகத்தில் இருந்து வந்தவர்கள் என்ற நினைப்பு,.... டமில் தேசீயத்தின் ஒட்டுமொத்த குத்தகையையும் இவர்கள் எடுத்திருக்கிறார்கள்,.🤣

ஜனநாயக முறைப்படி வடக்கு கிழக்கு  மக்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அதைக்கூட இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை என்னவென்று சொல்வது? 

 

 

36 minutes ago, nochchi said:

நான் தங்கள் கருத்தை பார்த்தவுடன் யோசித்தேன், சிறிலங்கா தேசியவாதிகள் வினா எழுப்புவர் என்று...

 

19 minutes ago, கிருபன் said:

 

தும்புக்கட்டு -சங்கு -குப்பைக்கூடை…..! 

தும்புக்கட்டு -சங்கு -குப்பைக்கூடை…..! (வெளிச்சம்:010)

 — அழகு குணசீலன் —

அ: அகிம்சை.

ஆ: ஆயுதம்.

இ: இராஜதந்திரம்.

அன்றோருநாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தமிழ்ப்பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் கூறிய அ,ஆ,இ…. அரிவரி அரசியல் வரிகள் இவை. அந்த வரிசையில் வந்ததுதான் இந்த பொதுவேட்பாளர் எண்ணக்கருவும்,  தமிழர் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு காட்டுகின்றதுமான இந்த “இ” : அரசியலும். 

இப்போது தமிழ் மக்கள் தங்கள் அபிலாஷை என்ன? என்பதை  தேர்தல் முடிவுகள் மூலம்  தெட்டத்தெளிவாக சர்வதேசத்திற்கு காட்டியுள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒட்டுமொத்த தமிழர் பெரும்பான்மை தமிழ்த்தேசிய  தீவிர அரசியலை நிராகரித்திருக்கிறது. சிங்கள தேசிய சக்திகளுடன் இணக்க அரசியல் செய்வதற்கான விருப்பத்தை வெளிக்காட்டியிருக்கிறது. அரங்கம் அரசியல் ஆய்வுகள் பலவும் ஆரம்பத்தில் இருந்தே குறிப்பிட்டது போல் தமிழ்த்தேசியம் அம்மணமாக சர்வதேசத்தின் முன்னால் நிற்கிறது.  இதை விடவும் பொதுவேட்பாளர் கச்சையை உரிந்து  சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு இன்னும் என்ன இருக்கிறது. 

அதேபோன்றே தேர்தல் பகிஷ்கரிப்பு கோரிக்கையை முன்வைத்த தமிழ்க்காங்கிரசும் அம்பலப்பட்டு நிற்கிறது. தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியின் டெலிபோன் ஒலி வடக்கு கிழக்கு மக்களின் காதுகளில் சங்கு ஒலியை விடவும் ஓங்கி ஒலித்திருக்கிறது.

ஜே.வி.பி. அ -னாவில் இல்லாமல் ஆ -வன்னாவில் ஆரம்பித்து இ- னாவுக்கூடாக அ -வை எட்டியிருக்கிறது. கிழக்கில் இருந்து களமிறக்கப்பட்ட  பொதுவேட்பாளர் அரியநேந்திரன் மூன்று மாவட்டங்களிலும்  மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் அனைத்திலும்  அநுரகுமாரவினால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு,கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்ப்பொதுவேட்பாளர் தமிழ்மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் உட்பட எந்த ஒரு தேர்தல் மாவட்டத்திலும் அரியநேந்திரனுக்கு அதிகூடிய வாக்குகளைப் பெறமுடியவில்லை. அதிலும் வெட்கக்கேடு தனது சொந்த மாவட்டமான மட்டக்களப்பில்  அனுரகுமார திசாநாயக்கா  இரண்டாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை மேலதிகமாக பெற்று அரியநேந்திரனை தோற்கடித்திருப்பது. பொதுவேட்பாளர் அரியநேந்திரன் பெற்ற வாக்குகள் 36,905, தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார பெற்ற வாக்குகள் 38,832. 

   தமிழர் அடையாள அரசியலில் எந்தத் தும்புக்கட்டையை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெறுவோம் என்ற தமிழ்த்தேசிய அரசியலை அதே தும்புக்கட்டைக்கொண்டு மக்கள் துடைத்து துப்பரவு செய்திருக்கிறார்கள்.

மேலும் பொதுவேட்பாளர் அரியநேந்திரனின் சொந்த தொகுதி மட்டும் அன்றி, தனித்தமிழ் தொகுதி என்ற பெயரைக் கொண்ட பட்டிருப்பில் பொது வேட்பாளர் ஆக 12,356 வாக்குகளை (13%) மாத்திரமே பெற்றுள்ளார். மாறாக சஜீத்பிரேமதாச (40%), ரணில் விக்கிரமசிங்க (29%), அநுரகுமார திசாநாயக்க (07%) வாக்குகளை பெற்றுள்ளனர். இதன்படி அரியநேத்திரன் சொந்த தொகுதியிலும் சிங்கள தேசியத்தினால் (76%) தோற்கடிக்கப்பட்டுள்ளார். தமிழரசுக்கட்சியின் சாணக்கியன் அணி சஜீத்பிரேமதாசவையும், ரி.எம்.வி.பி. ரணில் விக்கிரமசிங்கவையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆதரித்திருந்தன.

இது பாராளுமன்றத் தேர்தல் அல்ல வாக்குகள் பல்வேறு தமிழ் கட்சிகள், வேட்பாளர்களுக்கு இடையே பிரிந்து போவதற்கு. தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பினர் வார்த்தைகளில் சொன்னால் பொதுவேட்பாளர் ஒட்டு மொத்த தமிழினத்தின் அடையாளம். அரியநேத்திரன் வாயில் அவர் தமிழ் தேசியத்தின் “குறியீடு” அது உண்மையெனில்  வடக்கு, கிழக்கில் இந்த வாக்களிப்பு எப்படி அமைந்திருக்க வேண்டும்?. தமிழ் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் அரியநேத்திரன் சிங்கள தேசிய வேட்பாளர்களை தோற்கடித்து முன்னணியில் நின்றிருக்க வேண்டும் அல்லவா?  அம்பாறையிலும், திருகோணமலையிலும் ஆகக்குறைந்தபட்சம் மொத்த தமிழர் வாக்குகளில் அதிகமானவற்றை பெற்றிருக்கவேண்டாமா? தமிழ்த்தேசியப் போர் தொடுக்க சங்கை எடுத்து சங்கை கெட்டு நிற்கிறது தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பு. கடிதத்தலைப்பு 83 அமைப்புக்களும், 7 கட்சிகளும்.சங்கே முழங்கு என்று மூச்சடக்கி  சங்கூதிய  தமிழ்த்தேசியத்தின் ‘திரட்சி’ ஊடகவியலாளர்களுக்கு  மூச்சு திணறலை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் மக்கள்  காத்திருந்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினர் கட்சிகளான தமிழ்த்தேசிய கட்சிகளும்,  முஸ்லீம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சிகளும் பிளவின்றி ஒரே அணியாக தென்னிலங்கையின் மூன்று வேட்பாளர்களுள் ஒருவரை ஆதரிக்க தீர்மானித்லிருந்தால் அவர்கள் மேடைக்கு மேடை கூவிய தாங்கள் தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி என்பதை நனவாக்கி இருக்க முடியும். அநுரகுமார திசாநாயக்கவின் வாய்ப்பை தட்டிப்பறித்திருக்கவும் முடியும். வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் முஸ்லீம் வாக்குகள் சஜீத், ரணில், அரியம் என்று பிரிந்ததால் அதன் இறுதி நன்மையை அடைந்தவராகிறார் அநுரகுமார. இல்லையேல் குறைந்தது பத்து இலட்சம் வாக்குகளால்  சஜீத் அல்லது ரணிலை ஜனாதிபதியாக்கியிருக்க முடியும். அப்போது அவர்கள் கூறிய ஜனாதிபதி யார்? என்பதை நிர்ணயித்தல் சாத்தியமாகியிருக்க வாய்ப்பு இருந்தது.

இப்போது தமிழ்த்தேசிய சஜீத் ஆதரவு அணி தோற்றது. தமிழ்த்தேசிய ரணில் ஆதரவு அணி தோற்றது. தமிழ்த்தேசிய பகிஷ்கரிப்பு அணி தோற்றது. வடக்கு கிழக்கு சஜீத், ரணில் ஆதரவு முஸ்லீம் கட்சிகளும், அணிகளும் தோற்றன. ரணில் ஆதரவு இணக்க அரசியல் ஈ.பி.டி.பியும், ரி.எம்.வி.பி.யும் தோற்றுப் போயினர். சஜீத்தையும், ரணிலையும் ஒன்றிணைக்க முனைந்த தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் தோற்றுப் போயினர். பொதுவேட்பாளரை  நிறுத்த முயன்ற தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸும்  தோற்றன. சுமந்திரன் அணியை தன்பக்கம் இழுப்பதில் தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பும் தோற்றது.

சஜீத் தோற்றார். ரணில் தோற்றார். அரியநேந்திரனும் தோற்றார். 

 சிறுபான்மையினர் கட்சிகள் அனைத்தும் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சிபார்சுகளை செய்தவை. அந்த சிபார்சு அரசியலை மக்கள் ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டாலும், ஆனால் அது மக்களுக்கு நன்மையற்ற வகையில் தோற்றுப்போயிருக்கிறது. ஆக, வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லீம் மக்கள் பொதுவாகவும், சிறப்பாக பொது வேட்பாளருக்கு அளித்த வாக்குகளும் ஜனநாயக அரசியலில் ஆயுதமாகவோ, , இராஜதந்திரமாகவோ அன்றியும் அகிம்சை அரசியலுக்கும் பயனற்று குப்பை கூடைக்குள் வீசப்பட்டுள்ளன.

கடந்த பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்புடன் ஒப்பிடுவதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு ஏற்பட்டுள்ள படுதோல்வியை கோடிட்டுக் காட்டமுடியும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளை விடவும் ஆக சுமார் மூவாயிரம் வாக்குகளை பொதுவேட்பாளர் மேலதிகமாக பெற்றுள்ளார்.  இது பகிஷ்கரிப்பு கோரிக்கையை நிராகரித்தவர்களின் வாக்காக இருக்க வாய்ப்புண்டு. 

வடக்கு, கிழக்கின் மற்றைய மாவட்டங்கள் அனைத்திலும் பொதுவேட்பாளர் 2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளை விடவும் குறைவாகவே பெற்றுள்ளார். குறைவு என்பது ஒருசில ஆயிரம் வாக்குகள் அல்ல. வன்னி, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் பொது வேட்பாளர் சுமார் 50 வீதம் வாக்குகளை குறைவாகப் பெற்றுள்ளார். அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வீழ்ச்சி சுமார் 75 வீதமாக இருக்கிறது. இதனால்தான் அநுரகுமார அரியத்தாரை மட்டக்களப்பு மாவட்டத்தில் முந்தக்கூடியதாக இருந்தது. இது முயலும், ஆமையும் நடாத்திய ஓட்டப்பந்தயத்தை நினைவூட்டும்  பொதுவேட்பாளர் அரசியல்  கோமாளித்தனம்.

ஆக, பொதுவேட்பாளர் கோமாளி வேடம் போட்டு தமிழ்த்தேசியம் சர்வதேசத்திற்கு மக்கள் வாக்கெடுப்பின் மூலம் காட்டியிருப்பது என்ன?

* வட்டுக்கோட்டை பிரகடனத்தை மக்கள் நிராகரித்து இருக்கிறார்கள். அல்லது காலத்திற்கு பொருத்தமற்ற காலாவதியான ஒன்று என்று மீளப்பெற்றிருக்கிறார்கள்.

* இதன்மூலம் தமிழர் தாயகக்கோட்பாடு,  தேசிய இனம், சுயநிர்ணய உரிமை, சமஷ்டி, இணைந்த வடக்கு கிழக்கு  அனைத்தும் மக்கள் மத்தியில் பலவீனமான கருத்தாடல்களாகிவிட்டன என்பது சர்வதேசத்திற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

*வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குள்,ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் என்பதற்கும் அப்பால் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் இணக்கமாக வாழவிரும்புகின்றனர்.

*ஒரு நாடு, ஒரே மக்கள் இலங்கையில் எவரும் எங்கும் வாழலாம் எந்தப் பிரிவினருக்கும் என்று தனியான பிரதேசங்கள் இல்லை என்ற கோத்தபாயவின்  நிலைப்பாட்டிற்கு ஜே.வி.பி. வடிவம் கொடுக்க  வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சுமார் இரண்டரை இலட்சம் மக்கள்  அநுரகுமாரவுக்கு வாக்களித்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

* மேலும் தமிழ்த்தேசிய மக்கள் திரட்சி, தாராள பொருளாதாரக் கொள்கை, பொருளாதார அபிவிருத்தி வேண்டி நின்ற தொடர்ச்சி, இந்திய, அமெரிக்க மேலாண்மை போன்ற வற்றையும் நிராகரித்து இருக்கிறார்கள் தமிழ்மக்கள் .

* சுமந்திரன் அணி தமிழ்த்தேசியத்தை சிதைக்கிறது என்று தும்புக்கட்டுக்கு குஞ்சம் கட்டப்போய் தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பும், பொதுவேட்பாளரும் மூக்குடைபட்டு நிற்கிறார்கள்.

இனி என்ன?. வீழ்ந்தாலும் மீசையில் மண்ஒட்டாத அறிக்கைகள் நாளைவரும்……!
 

 

https://arangamnews.com/?p=11267

உள்ளதையும் கெடுத்தானாம் கொள்ளிக் கண்ணன் நிலைக்குப் போயிருக்கிறது புலம்பெயர்ஸ்ஸின் நிலை. 

இனிமேல் இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் இவர்கள் பார்வையில் துரோகிகளே,......😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கிருபன் said:

* சுமந்திரன் அணி தமிழ்த்தேசியத்தை சிதைக்கிறது என்று தும்புக்கட்டுக்கு குஞ்சம் கட்டப்போய் தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பும், பொதுவேட்பாளரும் மூக்குடைபட்டு நிற்கிறார்கள்.

இனி என்ன?. வீழ்ந்தாலும் மீசையில் மண்ஒட்டாத அறிக்கைகள் நாளைவரும்……!
 

எங்களது நாட்டில், அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களைப் புகழ்வதும் பாராட்டுவதும் வழமை.  இதேவேளை தோற்றுப் போனால்,  அவர்கள் மக்களை கணக்கில் எடுப்பதில்லை. தோற்றுப் போனவர்கள் மக்கள் மத்தியில் வருவதைக் கூட பெரிதும் தவிர்த்து விடுவார்கள். அடுத்த நாளோ அடுத்த வாரமோ ஒரு அறிக்கை வரும். அவ்வளவுதான்.

யேர்மனியில் நடைமுறை வேறுவிதம். அநேகமாக மேற்கத்திய நாடுகளிலும் அப்படித்தான் இருக்கும். தோற்றுப் போனாலும் மக்கள் மத்தியில் அவர்கள்  உடனடியாகவே வந்து நிற்பார்கள். தங்களுக்கு ஆதரவு தந்தவர்களுக்கு நன்றி சொல்வார்கள்.

நாங்கள் எங்கள் குறிக்கோளை எட்டவில்லை. எங்களது வெற்றியை அடைய முடியவில்லை. அதற்கான காரணத்தை நாங்கள் கண்டறிந்து, செயல்களில் மாற்றம் ஏற்படுத்தி எங்களது வெற்றிக்காகப் பயணிப்போம். உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி….” என்ற பாணியில் பேசுவார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அவர்களுக்காக உழைத்தவர்கள், வாக்குப் போட்டவர்களுக்கு ஆறுதலும், நன்றியும் பொதுக்கட்டமைப்பிடம் இருந்து வரவில்லை.

அந்த மக்களின் சேவையை செல்லாக் காசாக்கி இருக்கிறார்கள்.

பொதுத் தேர்தல் காத்திருக்கிறது

large.IMG_7070.jpeg.fbe36bd7248dfd8205ef

 

  • Like 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 

தும்புக்கட்டு -சங்கு -குப்பைக்கூடை…..! 

தும்புக்கட்டு -சங்கு -குப்பைக்கூடை…..! (வெளிச்சம்:010)

 — அழகு குணசீலன் —

அ: அகிம்சை.

ஆ: ஆயுதம்.

இ: இராஜதந்திரம்.

அன்றோருநாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தமிழ்ப்பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் கூறிய அ,ஆ,இ…. அரிவரி அரசியல் வரிகள் இவை. அந்த வரிசையில் வந்ததுதான் இந்த பொதுவேட்பாளர் எண்ணக்கருவும்,  தமிழர் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு காட்டுகின்றதுமான இந்த “இ” : அரசியலும். 

இப்போது தமிழ் மக்கள் தங்கள் அபிலாஷை என்ன? என்பதை  தேர்தல் முடிவுகள் மூலம்  தெட்டத்தெளிவாக சர்வதேசத்திற்கு காட்டியுள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒட்டுமொத்த தமிழர் பெரும்பான்மை தமிழ்த்தேசிய  தீவிர அரசியலை நிராகரித்திருக்கிறது. சிங்கள தேசிய சக்திகளுடன் இணக்க அரசியல் செய்வதற்கான விருப்பத்தை வெளிக்காட்டியிருக்கிறது. அரங்கம் அரசியல் ஆய்வுகள் பலவும் ஆரம்பத்தில் இருந்தே குறிப்பிட்டது போல் தமிழ்த்தேசியம் அம்மணமாக சர்வதேசத்தின் முன்னால் நிற்கிறது.  இதை விடவும் பொதுவேட்பாளர் கச்சையை உரிந்து  சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு இன்னும் என்ன இருக்கிறது. 

அதேபோன்றே தேர்தல் பகிஷ்கரிப்பு கோரிக்கையை முன்வைத்த தமிழ்க்காங்கிரசும் அம்பலப்பட்டு நிற்கிறது. தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியின் டெலிபோன் ஒலி வடக்கு கிழக்கு மக்களின் காதுகளில் சங்கு ஒலியை விடவும் ஓங்கி ஒலித்திருக்கிறது.

ஜே.வி.பி. அ -னாவில் இல்லாமல் ஆ -வன்னாவில் ஆரம்பித்து இ- னாவுக்கூடாக அ -வை எட்டியிருக்கிறது. கிழக்கில் இருந்து களமிறக்கப்பட்ட  பொதுவேட்பாளர் அரியநேந்திரன் மூன்று மாவட்டங்களிலும்  மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் அனைத்திலும்  அநுரகுமாரவினால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு,கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்ப்பொதுவேட்பாளர் தமிழ்மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் உட்பட எந்த ஒரு தேர்தல் மாவட்டத்திலும் அரியநேந்திரனுக்கு அதிகூடிய வாக்குகளைப் பெறமுடியவில்லை. அதிலும் வெட்கக்கேடு தனது சொந்த மாவட்டமான மட்டக்களப்பில்  அனுரகுமார திசாநாயக்கா  இரண்டாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை மேலதிகமாக பெற்று அரியநேந்திரனை தோற்கடித்திருப்பது. பொதுவேட்பாளர் அரியநேந்திரன் பெற்ற வாக்குகள் 36,905, தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார பெற்ற வாக்குகள் 38,832. 

   தமிழர் அடையாள அரசியலில் எந்தத் தும்புக்கட்டையை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெறுவோம் என்ற தமிழ்த்தேசிய அரசியலை அதே தும்புக்கட்டைக்கொண்டு மக்கள் துடைத்து துப்பரவு செய்திருக்கிறார்கள்.

மேலும் பொதுவேட்பாளர் அரியநேந்திரனின் சொந்த தொகுதி மட்டும் அன்றி, தனித்தமிழ் தொகுதி என்ற பெயரைக் கொண்ட பட்டிருப்பில் பொது வேட்பாளர் ஆக 12,356 வாக்குகளை (13%) மாத்திரமே பெற்றுள்ளார். மாறாக சஜீத்பிரேமதாச (40%), ரணில் விக்கிரமசிங்க (29%), அநுரகுமார திசாநாயக்க (07%) வாக்குகளை பெற்றுள்ளனர். இதன்படி அரியநேத்திரன் சொந்த தொகுதியிலும் சிங்கள தேசியத்தினால் (76%) தோற்கடிக்கப்பட்டுள்ளார். தமிழரசுக்கட்சியின் சாணக்கியன் அணி சஜீத்பிரேமதாசவையும், ரி.எம்.வி.பி. ரணில் விக்கிரமசிங்கவையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆதரித்திருந்தன.

இது பாராளுமன்றத் தேர்தல் அல்ல வாக்குகள் பல்வேறு தமிழ் கட்சிகள், வேட்பாளர்களுக்கு இடையே பிரிந்து போவதற்கு. தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பினர் வார்த்தைகளில் சொன்னால் பொதுவேட்பாளர் ஒட்டு மொத்த தமிழினத்தின் அடையாளம். அரியநேத்திரன் வாயில் அவர் தமிழ் தேசியத்தின் “குறியீடு” அது உண்மையெனில்  வடக்கு, கிழக்கில் இந்த வாக்களிப்பு எப்படி அமைந்திருக்க வேண்டும்?. தமிழ் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் அரியநேத்திரன் சிங்கள தேசிய வேட்பாளர்களை தோற்கடித்து முன்னணியில் நின்றிருக்க வேண்டும் அல்லவா?  அம்பாறையிலும், திருகோணமலையிலும் ஆகக்குறைந்தபட்சம் மொத்த தமிழர் வாக்குகளில் அதிகமானவற்றை பெற்றிருக்கவேண்டாமா? தமிழ்த்தேசியப் போர் தொடுக்க சங்கை எடுத்து சங்கை கெட்டு நிற்கிறது தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பு. கடிதத்தலைப்பு 83 அமைப்புக்களும், 7 கட்சிகளும்.சங்கே முழங்கு என்று மூச்சடக்கி  சங்கூதிய  தமிழ்த்தேசியத்தின் ‘திரட்சி’ ஊடகவியலாளர்களுக்கு  மூச்சு திணறலை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் மக்கள்  காத்திருந்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினர் கட்சிகளான தமிழ்த்தேசிய கட்சிகளும்,  முஸ்லீம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சிகளும் பிளவின்றி ஒரே அணியாக தென்னிலங்கையின் மூன்று வேட்பாளர்களுள் ஒருவரை ஆதரிக்க தீர்மானித்லிருந்தால் அவர்கள் மேடைக்கு மேடை கூவிய தாங்கள் தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி என்பதை நனவாக்கி இருக்க முடியும். அநுரகுமார திசாநாயக்கவின் வாய்ப்பை தட்டிப்பறித்திருக்கவும் முடியும். வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் முஸ்லீம் வாக்குகள் சஜீத், ரணில், அரியம் என்று பிரிந்ததால் அதன் இறுதி நன்மையை அடைந்தவராகிறார் அநுரகுமார. இல்லையேல் குறைந்தது பத்து இலட்சம் வாக்குகளால்  சஜீத் அல்லது ரணிலை ஜனாதிபதியாக்கியிருக்க முடியும். அப்போது அவர்கள் கூறிய ஜனாதிபதி யார்? என்பதை நிர்ணயித்தல் சாத்தியமாகியிருக்க வாய்ப்பு இருந்தது.

இப்போது தமிழ்த்தேசிய சஜீத் ஆதரவு அணி தோற்றது. தமிழ்த்தேசிய ரணில் ஆதரவு அணி தோற்றது. தமிழ்த்தேசிய பகிஷ்கரிப்பு அணி தோற்றது. வடக்கு கிழக்கு சஜீத், ரணில் ஆதரவு முஸ்லீம் கட்சிகளும், அணிகளும் தோற்றன. ரணில் ஆதரவு இணக்க அரசியல் ஈ.பி.டி.பியும், ரி.எம்.வி.பி.யும் தோற்றுப் போயினர். சஜீத்தையும், ரணிலையும் ஒன்றிணைக்க முனைந்த தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் தோற்றுப் போயினர். பொதுவேட்பாளரை  நிறுத்த முயன்ற தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸும்  தோற்றன. சுமந்திரன் அணியை தன்பக்கம் இழுப்பதில் தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பும் தோற்றது.

சஜீத் தோற்றார். ரணில் தோற்றார். அரியநேந்திரனும் தோற்றார். 

 சிறுபான்மையினர் கட்சிகள் அனைத்தும் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சிபார்சுகளை செய்தவை. அந்த சிபார்சு அரசியலை மக்கள் ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டாலும், ஆனால் அது மக்களுக்கு நன்மையற்ற வகையில் தோற்றுப்போயிருக்கிறது. ஆக, வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லீம் மக்கள் பொதுவாகவும், சிறப்பாக பொது வேட்பாளருக்கு அளித்த வாக்குகளும் ஜனநாயக அரசியலில் ஆயுதமாகவோ, , இராஜதந்திரமாகவோ அன்றியும் அகிம்சை அரசியலுக்கும் பயனற்று குப்பை கூடைக்குள் வீசப்பட்டுள்ளன.

கடந்த பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்புடன் ஒப்பிடுவதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு ஏற்பட்டுள்ள படுதோல்வியை கோடிட்டுக் காட்டமுடியும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளை விடவும் ஆக சுமார் மூவாயிரம் வாக்குகளை பொதுவேட்பாளர் மேலதிகமாக பெற்றுள்ளார்.  இது பகிஷ்கரிப்பு கோரிக்கையை நிராகரித்தவர்களின் வாக்காக இருக்க வாய்ப்புண்டு. 

வடக்கு, கிழக்கின் மற்றைய மாவட்டங்கள் அனைத்திலும் பொதுவேட்பாளர் 2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளை விடவும் குறைவாகவே பெற்றுள்ளார். குறைவு என்பது ஒருசில ஆயிரம் வாக்குகள் அல்ல. வன்னி, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் பொது வேட்பாளர் சுமார் 50 வீதம் வாக்குகளை குறைவாகப் பெற்றுள்ளார். அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வீழ்ச்சி சுமார் 75 வீதமாக இருக்கிறது. இதனால்தான் அநுரகுமார அரியத்தாரை மட்டக்களப்பு மாவட்டத்தில் முந்தக்கூடியதாக இருந்தது. இது முயலும், ஆமையும் நடாத்திய ஓட்டப்பந்தயத்தை நினைவூட்டும்  பொதுவேட்பாளர் அரசியல்  கோமாளித்தனம்.

ஆக, பொதுவேட்பாளர் கோமாளி வேடம் போட்டு தமிழ்த்தேசியம் சர்வதேசத்திற்கு மக்கள் வாக்கெடுப்பின் மூலம் காட்டியிருப்பது என்ன?

* வட்டுக்கோட்டை பிரகடனத்தை மக்கள் நிராகரித்து இருக்கிறார்கள். அல்லது காலத்திற்கு பொருத்தமற்ற காலாவதியான ஒன்று என்று மீளப்பெற்றிருக்கிறார்கள்.

* இதன்மூலம் தமிழர் தாயகக்கோட்பாடு,  தேசிய இனம், சுயநிர்ணய உரிமை, சமஷ்டி, இணைந்த வடக்கு கிழக்கு  அனைத்தும் மக்கள் மத்தியில் பலவீனமான கருத்தாடல்களாகிவிட்டன என்பது சர்வதேசத்திற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

*வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குள்,ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் என்பதற்கும் அப்பால் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் இணக்கமாக வாழவிரும்புகின்றனர்.

*ஒரு நாடு, ஒரே மக்கள் இலங்கையில் எவரும் எங்கும் வாழலாம் எந்தப் பிரிவினருக்கும் என்று தனியான பிரதேசங்கள் இல்லை என்ற கோத்தபாயவின்  நிலைப்பாட்டிற்கு ஜே.வி.பி. வடிவம் கொடுக்க  வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சுமார் இரண்டரை இலட்சம் மக்கள்  அநுரகுமாரவுக்கு வாக்களித்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

* மேலும் தமிழ்த்தேசிய மக்கள் திரட்சி, தாராள பொருளாதாரக் கொள்கை, பொருளாதார அபிவிருத்தி வேண்டி நின்ற தொடர்ச்சி, இந்திய, அமெரிக்க மேலாண்மை போன்ற வற்றையும் நிராகரித்து இருக்கிறார்கள் தமிழ்மக்கள் .

* சுமந்திரன் அணி தமிழ்த்தேசியத்தை சிதைக்கிறது என்று தும்புக்கட்டுக்கு குஞ்சம் கட்டப்போய் தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பும், பொதுவேட்பாளரும் மூக்குடைபட்டு நிற்கிறார்கள்.

இனி என்ன?. வீழ்ந்தாலும் மீசையில் மண்ஒட்டாத அறிக்கைகள் நாளைவரும்……!
 

 

https://arangamnews.com/?p=11267

அரியநேந்திரனின் தோல்வி தமிழ்தேசியத்தின் தோல்வியும் அல்ல பொதுக்கூட்டமைப்பு தமிழ்தேசியவாதிகளும் அல்ல.. இது தவறான கட்டுரை.. 

இலங்கையில் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினை தீரும் வரை தமிழ்தேசியம் வாழும்.. தமிழ் நாட்டிலையே வாழும்போது தமிழ் ஈழத்தில் ஒரு போதும் வீழாது பிரச்சினைகள் தீரும்வரை..

இங்கு பிரச்சினை தங்கள் வயிறு வளர்க்க தமிழ்தேசியத்தை காட்டி பேய்க்காட்டுபவர்கள்தான்.. தமிழ்தேசியம் அல்ல..

உண்மையான தமிழ்தேசியவாதிகள் என்றும் சாதி மதம் கடந்து தமிழர்களும் தமிழ் மொழியும் வாழணும் பெருகணும் அழியக்கூடாது என்று நினைப்பார்கள்..

நானும் ஒரு தமிழையும் தமிழ்மக்களையும் என் மண்ணையும் என் தலைமுறையையும் நேசிக்கும் தமிழ்த்தேசியவாதிதான்.. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

உண்மையான தமிழ்தேசியவாதிகள் என்றும் சாதி மதம் கடந்து தமிழர்களும் தமிழ் மொழியும் வாழணும் பெருகணும் அழியக்கூடாது என்று நினைப்பார்கள்..

நானும் ஒரு தமிழையும் தமிழ்மக்களையும் என் மண்ணையும் என் தலைமுறையையும் நேசிக்கும் தமிழ்த்தேசியவாதிதான்.. 

நன்றி சகோ

உங்களைப் போன்றவர்கள் இன்று உலகமெல்லாம் பரவிக்கிடக்கிறார்கள். இவர்கள் அனைவரையும்  இணைக்கும் புள்ளி ஒன்றே ஒன்று தான் அது தமிழ்த்தேசியம். 

இதற்குள் புகுந்து தாயகம் புலம்பெயர் தேசம் என பிரிவினைகளை பிரித்தாளும் தந்திரங்களை தொடர்ந்து எழுதுவோர் மிகவும் ஆபத்தானவர்கள்  தமிழ்த்தேசியத்தை உணராதவர்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அரியநேந்திரனின் தோல்வி தமிழ்தேசியத்தின் தோல்வியும் அல்ல பொதுக்கூட்டமைப்பு தமிழ்தேசியவாதிகளும் அல்ல.. 

அரியம் மற்றும் பொதுக்கட்டமைப்பின் பின் நின்று செயற்படும் போலிகள் தமிழ்த்தேசியத்தை சிதக்கும் நயவஞ்சகர்கள்!

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

எங்களது நாட்டில், அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களைப் புகழ்வதும் பாராட்டுவதும் வழமை.  இதேவேளை தோற்றுப் போனால்,  அவர்கள் மக்களை கணக்கில் எடுப்பதில்லை. தோற்றுப் போனவர்கள் மக்கள் மத்தியில் வருவதைக் கூட பெரிதும் தவிர்த்து விடுவார்கள். அடுத்த நாளோ அடுத்த வாரமோ ஒரு அறிக்கை வரும். அவ்வளவுதான்.

யேர்மனியில் நடைமுறை வேறுவிதம். அநேகமாக மேற்கத்திய நாடுகளிலும் அப்படித்தான் இருக்கும். தோற்றுப் போனாலும் மக்கள் மத்தியில் அவர்கள்  உடனடியாகவே வந்து நிற்பார்கள். தங்களுக்கு ஆதரவு தந்தவர்களுக்கு நன்றி சொல்வார்கள்.

நாங்கள் எங்கள் குறிக்கோளை எட்டவில்லை. எங்களது வெற்றியை அடைய முடியவில்லை. அதற்கான காரணத்தை நாங்கள் கண்டறிந்து, செயல்களில் மாற்றம் ஏற்படுத்தி எங்களது வெற்றிக்காகப் பயணிப்போம். உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி….” என்ற பாணியில் பேசுவார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அவர்களுக்காக உழைத்தவர்கள், வாக்குப் போட்டவர்களுக்கு ஆறுதலும், நன்றியும் பொதுக்கட்டமைப்பிடம் இருந்து வரவில்லை.

அந்த மக்களின் சேவையை செல்லாக் காசாக்கி இருக்கிறார்கள்.

பொதுத் தேர்தல் காத்திருக்கிறது

large.IMG_7070.jpeg.fbe36bd7248dfd8205ef

 

தீவளாவிய மக்கள் விரும்பிய முறைமை மாற்றம் (system change )என்ற அடிப்படையில் அந்த எண்ணக்கருவிற்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாக புதிய சனாதிபதியாக தேர்வாகி உள்ள திருமிகு அனுரா குமார திசாநாயக்க ஆகிய தேசிய மக்கள் சக்தி அபேட்சகராகிய தங்களிற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் வாழ்த்துகள்.

உங்கள் பாரபட்சமற்ற சமத்துவ இடதுசாரி சிந்தனைகளை கொண்ட ஊழலை கட்டுப்படுத்தும் அதீத சாராயக்கடை உரிமங்களை இரத்து செய்யும், போதையை ஒழிக்கும் இளைஞரின் வேலைவாய்ப்பை அதிகரித்து புலம்பெயர்வை கட்டுபடுத்தும் வியத்தகு மாற்றமிக்க ஆட்சியை தீவு மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

அதே நேரம் தீவின் தேசிய மக்கள் குழுமமாகிய வடகிழக்கு வாழ் தமிழ் மக்களாகிய நாம் நீண்டகால எம் அபிலாசைகளை வடகீழ் மாகாணத்தில் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான உரித்தையும் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு பரிகார நீதி வழங்கலையும் உறுதிப்படுத்த வேண்டூம்.

திட்டமிட்ட இனப்பரம்பலை
மாற்றியமைக்கும் குடியேற்றங்கள் முற்றாக நிறுத்தப்பட்ட சூழலில் தமிழ் மொழி கலாசார உரிமைகள் சரிநிகர் சமானமாக வழங்கப்பட தங்கள் ஆட்சி காலத்தில் வழி ஏற்படுத்தி இந்த தீவில் நிரந்திர அமைதியையும் உண்மையான இனங்களுக்கு இடையேயான சமத்துவத்தை கொண்டு வருவீர்கள் என நம்புகின்றோம்

இதனை வடகிழக்கில் மிக குறுகிய காலத்தில் குறுகிய வளங்களோடு தமிழ்சிவில் சமூகத்தினால் முன்னெடுக்கபட்ட தமிழ் பொது வேட்பாளர் கருத்திட்டம் ஊடாக தாங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள் என நம்புகின்றோம்

எம் தமிழர்களின் பொது வேட்பாளர் திருமிகு அரியனேந்திரன் நீதியை எதிர்பார்த்து நிற்கும் மக்கள் குழுமத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வடகிழக்கு மாகாணத்தில் பரவலான மக்கள் ஆதரவை பெற்று இருப்பதையும் பொதுக் கட்டமைப்பாக தமிழ் சிவில் அமைப்புக்களும் கணிசமான தமிழ் தேசிய கட்சிகளும் அணி திரண்டு இருப்பதையும் தாங்கள் முன்னதாகக் கூறியது போல மிக ஆழமான கரிசனைக்கு எடுப்பீர்கள் என நம்புகின்றோம்

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவும் இன்னும் யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகியும் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவும் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள அனைத்து வடகிழக்கின் காணிகள் விடுவிக்கப்படவும் அதீத இராணுவ பிரசன்னம் குறைக்கப்படவும் வழி ஏற்படுத்தி உண்மையான தமிழ் மக்கள் மீதான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி எம் புலம்பெயர் உறவுகளின் முதலீட்டை இத்தீவின் மீது ஈர்த்து பொருளாதார சுபிட்சங்களை இலங்கையர்களிற்கு வழங்குவீர்கள் முதற்கண் எதிர்பார்க்கின்றோம்.

போராட்ட பாதையிலே அடித்தள மக்களின் உணர்வுகளோடு புரட்சிகர சித்தாந்தத்தோடு ஆட்சிக்கு வந்திருக்கும் தாங்கள் வலிகள் நிறைந்த தியாக வேள்வியை கடந்து வந்திருக்கும் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள் என நாம் ஆழமாக நம்புகின்றோம்.

இந்த அழகிய தீவில் இரு மொழி பேசும் மக்களும் ஆனந்தமாக கூட்டுணர்வோடு வாழ இனப் பிரச்சனைக்கான நிரந்திர தீர்வு எட்டப்பட தாங்கள் முழு முயற்சிகளை முன்னெடுக்கவும் அவை வெற்றி பெறவும் அதனூடாக இலங்கையர் கனவு காணும் மறுமலர்ச்சி யுகம் தங்கள் ஆட்சியில் மலரவும் வாழ்த்தி நிற்கின்றோம்.

-ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு

On the basis of system change desired by the people of the island, congratulations of the united Tamil structure to President Anura Kumara Dissanayake

People are looking forward to a regime of dramatic change, with your impartial egalitarian left-wing ideals that curb corruption, revoke excessive liquor licensees, fight drug addiction, increase youth employment and curb immigration

At the same time, we, the North-Eastern Tamil people, the national people group of the island, must affirm our long-term aspirations of the right to live in the North-East Province with the right to self-determination and the provision of reparative justice for the atrocities committed.

We hope that you will bring lasting peace and true inter-racial equality to this island by making way for equal provision of Tamil language and cultural rights during your tenure in an environment where planned trans-ethnic migrations have been completely halted.

We hope that you will understand this through the Tamil public candidate concept which was carried out by the Tamil civil society in a very short period of time with limited resources in the North-East.

Common candidate of Tamils Mr.P.Arianendran to express the sentiments of a group of people who are waiting for justice. We hope that you will take into consideration the widespread support of the people in the North-Eastern Province and the fact that Tamil civil organizations and significant Tamil National Parties have come together as a general structure, as you have said earlier.

Making way for the total abolition of the Anti-Terrorism Act, the complete release of political prisoners who are still languishing in prisons 15 years after the end of the war, the liberation of all the North-Eastern lands in the High Security Zones, and the reduction of excessive military presence, We expect that you will show goodwill towards the real Tamil people and attract investment from our diaspora relations to the island and provide economic benefits to the Sri Lankans.

We deeply believe that you will understand the sentiments of the Tamils who have come to power with a revolutionary ideology along with the sentiments of the grassroots people on the path of struggle and have gone through a painful sacrifice.

We wish the people who speak two languages to live happily in this beautiful island and to achieve a permanent solution to the ethnic problem.

On Behalf of  Tamil Common Candidate

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொதுவேட்பாளருக்காக உழைத்த எல்லோருக்கும் பாராட்டுக்கள்.

இத்தோடு காணாமல் போகாமல் இதை ஒரு அரசியல் கட்சியாக்கி எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு அடுத்த அடுத்த தேர்தல்களில் இளைஞர்களை களமிறக்க வேண்டும்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இதற்குள் புகுந்து தாயகம் புலம்பெயர் தேசம் என பிரிவினைகளை பிரித்தாளும் தந்திரங்களை தொடர்ந்து எழுதுவோர் மிகவும் ஆபத்தானவர்கள்  தமிழ்த்தேசியத்தை உணராதவர்கள் 

பதட்டப்படாதீர்கள் விசுகர். 

நீங்கள் வியாபாரி என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். 

😁

21 minutes ago, ஈழப்பிரியன் said:

 இதை ஒரு அரசியல் கட்சியாக்கி எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு அடுத்த அடுத்த தேர்தல்களில் இளைஞர்களை களமிறக்க வேண்டும்.

நேராகவே  இந்தியாவிற்காக உழைத்த எல்லோருக்கும் நன்றி, அத்துடன் இந்தியாவின் சொல்லுக்கு அரோகரா என்று கூவுங்கள் என்று கூறுங்களேன். நேர விரயம் தடுக்கப்படும். 

😏

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

பதட்டப்படாதீர்கள் விசுகர். 

நீங்கள் வியாபாரி என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். 

😁

நேராகவே  இந்தியாவிற்காக உழைத்த எல்லோருக்கும் நன்றி, அத்துடன் இந்தியாவின் சொல்லுக்கு அரோகரா என்று கூவுங்கள் என்று கூறுங்களேன். நேர விரயம் தடுக்கப்படும். 

😏

அப்படியே தொழில் அடிப்படையில் சாதிகளையும் இணைத்து விடுங்கள். உங்கள் பணிகள் இலகுவாகும். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அப்படியே தொழில் அடிப்படையில் சாதிகளையும் இணைத்து விடுங்கள். உங்கள் பணிகள் இலகுவாகும். 

 

பிரித்து வைத்தல் எனது வழக்கம் அல்ல.  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

அடிப்படையில் ரணில்- சஜித் கூட்டாக.. பெற்ற மொத்த வாக்குகள் அனுரவை விட அதிகம். 

ஆமாம் ரணில். போட்டி இடமால்.  இருந்தால்  சஜித் வெற்றி அடைத்திருப்பார். 🙏

Link to comment
Share on other sites

1 minute ago, Kandiah57 said:

ஆமாம் ரணில். போட்டி இடமால்.  இருந்தால்  சஜித் வெற்றி அடைத்திருப்பார். 🙏

தன் ஒரு கண் போனாலும் பரவாயில்லை ,  எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என ரணில் திட்டம் போட்டு செய்துள்ளார்.  சஜித் வர வேண்டும் என்பதற்காக இவரையும் சஜித்தையும் ஒன்றாக்க இந்தியா இறுதி வரைக்கும் முயன்றது. ஆனால் வழக்கம் போல இதிலும் இந்தியா தோற்று விட்டது.

தமிழர்களின் நலன்களை  அழிப்பதில் ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும் இந்தியா, மறு வளமாக சிங்களத்துடன் ஒவ்வொரு முறையும் தோற்று கொண்டே போகின்றது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, island said:

அரியத்தின் வாக்குகளை சஜத்தும் ரணிலும் திருடி அவரை தோற்கடித்துவிட்டார்கள் என்று உருட்டினாலும் உருட்டுவார்கள். 😂  எலாக்கட்டத்தில் அப்படி உருட்டுவதும் வாடிக்கை தான். 😂😂

உருட்டாலில்லை   உண்மை அது தான்   

எனக்கு இலங்கையில் வாக்கு. இருந்து இருந்தால்    சஜித் க்கு போட்டிருப்பேன்.   

ஏன் அரியத்துக்கு போடவில்லை  ??   அவரால் எடுக்கக்கூடிய. மொத்த வாக்கு. கிட்டத்தட்ட 17.  லட்சம் மட்டுமே   அவர் ஒருபோதும் ஐனதுபதியாக முடியாது   

அவர் ஐனதிபதி ஆகும் வாய்ப்புகள் இருந்தால்  அவருக்கு தான் எனது வாக்கு  ...    வாய்ப்புகள் இல்லை எனவேதான் அவருக்கு போடமாட்டேன்.   சஜித் போட்டபடியால். எனது வாக்கு   தமிழ் தேசியத்துக்கு எதிரானது இல்லை   

ஏன் சஜித்க்கு போட்டேன்???   

ரணில் ஐனதிபதியாவதை விரும்பவில்லை   

அனுர ஐனதிபதியாவதை விரும்பவில்லை  இவர்கள் இருவரும் வெற்றியை தடுக்க சஜித்க்கு போடுவது தான் ஒரே வழி   

ஆகவே தான் அரியத்துக்குப். போடவில்லை  ஆனால் பொது தேர்தலில் எனது வாக்கு அரியத்துக்கு தான்   கண்டிப்பாக போடுவேன்   🙏 

குறிப்பு,...   அரசியலை    விளங்கி.  கொள்ளுங்கள்   பாராளுமன்ற தேர்தல் உங்களுக்கு படிப்பிக்கும்.  பதில் தரும். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும்" [ஆசை திருப்தியடையாது] / இலங்கையில் அரசு மாறும் இந்த தருணத்தில்      "ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும் ஆபரணம் ஆக்கித் தன்னை அலங்கரிக்கிறான் ஆகாயம் வரை சேர்க்க அல்லும்பகலும் ஆரவாரத்துடன் ஓய்வு மறந்து ஓடுகிறான் !"     "நேசிக்கிறான், வெறுக்கிறான், பகுத்தறிவு மறந்து நேர்த்தி அற்ற செயல்களில் ஈடுபடுகிறான் நேசக்கரம் மறந்து பண்பு தொலைத்து நேராராகி செல்வத்தில் மட்டும் குறியாயிருக்கிறான் !"     "விருப்பம் மட்டும் வாழ்வு இல்லை விஞ்ஞான உண்மைகளைப் புரிந்து கொள் விரைந்து விரைந்து செல்வம் குவிக்காதே விருந்தோம்பல் உடன் அன்பையும் வளர் !"     "மகிழ்ச்சி என்பது மனிதனின் கட்டமைப்பு மலர்ந்து மடியும் ஒரு எண்ணக்கரு மந்தக்காற்றில் பறக்கும் பட்டம் போல் மடிந்து விடும் ஒரு நேரத்தில் !"     "மகிமையான வாழ்வை பெருமையாக அனுபவி மகிழ்வுடன் துன்பமும் கலந்தவன் மனிதன் மந்திரம் தந்திரம் மகிழ்வைத் தரா மழலையின் முகத்தில் உண்மையை அறி !"     "செல்வம் நிலையான நிலை அற்றது செவியில் அதை ஏற்று மனிதா செண்ணச் சிவிகையுந் தேரும் வையமும் செத்துவிடும் ஒருநாள் நினைவில் கொள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     1] நேரார் - பகைவர் 2] செண்ணச் சிவிகையுந் தேரும் வையமும் - ஒப்பனை செய்யப்பட்ட சிவிகையும் தேரும் வண்டியும்     
    • அவர்களின் உலுப்பலில்.... யார் முதல் அம்பிடுகின்றார்கள் என்று அறிய ஆவலாக உள்ளது. அனுர... மட்டக்களப்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், பிள்ளையானை ஒரு பிடி பிடித்திருந்தார். கிழக்கில் சில இடங்களில் அவர்கள் ஆயுதத்துடன் நடமாடுவது பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றார்.   தான் ஆட்சிக்கு வந்தால்... துணை இராணுவக் குழுக்களிடம் உள்ள ஆயுதம் எல்லாம் உடனடியாக களையப்  படும் என தெரிவித்து இருந்தார்.     அப்ப... டக்ளசும், தனது ஒட்டுக்குழு தோழர்களிடம் உள்ள ஆயுதங்களையும் கொடுக்க வேண்டி வரும். 😂
    • ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியில் இந்தியா பற்றிய அவரது பேச்சு கவனிக்கத்தக்கதாக இருந்தது. தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் இலங்கையில் அதானி குழும முதலீட்டில் உருவாகும் காற்றாலை மின் திட்டம் ரத்து செய்யப்படும் என்றார். அந்தத் திட்டம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று அவர் குறிப்பிட்டார். இவையெல்லாம் சேர்ந்து, அநுரவை இந்தியாவுக்கு சாதகமற்ற ஜனாதிபதி என்ற தோற்றத்தைஇந்தத் திட்டத்தை முதலில் இரத்துச் செய்ய வேண்'டும். அரசியல் பொருளாதார விடயத்திலும் பார்க்க நீண்ட கால சூழலிலியல் பிரச்சினைகளும் இருக்கின்றன. ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தத் திட்டத்தை முதலில் இரத்துச் செய்ய வேண்'டும். அரசியல் பொருளாதார விடயத்திலும் பார்க்க நீண்ட கால சூழலிலியல் பிரச்சினைகளும் இருக்கின்றன.
    • இவர் அநுரவின் roommate ஆக பல்கலையில் இருந்தவர் என்கின்றனர். இதையே தான் கோதபாயாவும் செய்தவர்............... நியமனங்கள் நண்பர்கள் என்ற வகையில் மட்டும் இருந்தால், எதிர்பார்க்கப்படும் எந்த மாற்றமும் வரப் போவதில்லை............
    • ஜேவிபி தனது முத்திரையை குத்த வேண்டுமென்றால் கொஞ்ச பேரை உலுப்பியே தீரவேண்டும். மக்களையும் மகிழ்விக்கத் தானே வேண்டும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.