Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஐக்கிய மக்கள் சக்தி(SJB) மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஆகியவை ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம், தேசிய மக்கள் சக்தி எவ்வாறு அரசாங்கத்தை அமைக்கும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சாகர காரியவசம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிப்பீர்களா என பொது ஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்திடம்(sagara kariyawasam)  கொழும்பு ஊடகமொன்று வினவியபோது,

அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள் | Slpp Sjb Slfp Veto Backing Npp

அவர் அவ்வாறு செய்ய மாட்டோம் என்று உறுதியாகக் கூறினார். “அவர்களை ஆதரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஒரு கட்சியாக, நாங்கள் ஒரு தனித்துவமான கொள்கைகளை கடைப்பிடிக்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரண்டும் எங்களுடைய கொள்கைகளிலிருந்து வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டுள்ளன. வேறு சிலரைப் போலல்லாமல், அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக மட்டுமே அவர்களை ஆதரிக்க நாங்கள் தயாராக இல்லை என்றார்.

மகிந்த அமரவீர

தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சருமான மகிந்த அமரவீரவிடம்(mahinda amaraweea), தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவது பற்றி அவர்கள் பரிசீலிப்பார்களா கேட்டபோது,

அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள் | Slpp Sjb Slfp Veto Backing Npp

"நாங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆதரிப்போம் என்று நம்பவில்லை."என்றார்.

திஸ்ஸ அத்தநாயக்க

இதே கேள்விக்கு பதிலளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க(tissa attanayake),

அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள் | Slpp Sjb Slfp Veto Backing Npp

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க திட்டமிடவில்லை அல்லது தேசிய மக்கள் சக்தி எந்த நோக்கத்தையும் தெரிவிக்கவில்லை என்பதால், கூட்டணி அரசாங்கத்தைப் பற்றி விவாதிப்பதில் அர்த்தமில்லை என்று கூறினார்.

“ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவுக்கு கிடைத்த ஆணைகள் வேறுபட்டவை. திஸாநாயக்கவுடன் முன்னோக்கிச் செல்ல நாங்கள் தயாரா என்று யாராவது எங்களிடம் கேட்டால், அவ்வாறான தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி அத்தகைய திட்டம் எதையும் குறிப்பிடவில்லை. எனவே, அதைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை” என்றார்.

https://ibctamil.com/article/slpp-sjb-slfp-veto-backing-npp-1727077375

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு அநுர தலைமையிலான கட்சிக்கு ஆதரவளிக்கிறதா?

14 minutes ago, nunavilan said:

தமிழ் தேசிய கூட்டமைப்பு அநுர தலைமையிலான கட்சிக்கு ஆதரவளிக்கிறதா?

அவர்களுக்கு / அனுரவுக்கு ஏன் இவர்களின் ஆதரவு தேவை?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

தமிழ் தேசிய கூட்டமைப்பு அநுர தலைமையிலான கட்சிக்கு ஆதரவளிக்கிறதா?

1u3r.gif

அப்பவும், இப்பவும்.... அவர்கள் தோற்கிற குதிரைக்குத்தான் ஆதரவளிப்பார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய மக்கள் சக்தி அநுரவிற்கு தேவைப்படும் வேளைகளில் ஆதரவு வழங்கும் என்று சஜித் சொல்லியிருக்கின்றார்.

https://www.dailymirror.lk/latest-news/SJB-will-support-Anura-whenever-needed-Sajith/342-292218#

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளையடிக்க முடியாதென்றால் எப்படி ஏன் ஒட்ட வேண்டும்.விலகியே இருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

கொள்ளையடிக்க முடியாதென்றால் எப்படி ஏன் ஒட்ட வேண்டும்.விலகியே இருப்பம்.

இதுவரை காலமும்  கொள்ளையடித்ததை பாதுகாக்க வேண்டும் என்றால்,
ஒட்டித்தான் இருக்க வேண்டும். 
ஆனால், வழமையாக எல்லா இடமும் அவியும் பருப்பு...
ஜே.வி.பி.யிடம் அவியுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. 😂

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

இதுவரை காலமும்  கொள்ளையடித்ததை பாதுகாக்க வேண்டும் என்றால்,
ஒட்டித்தான் இருக்க வேண்டும். 
ஆனால், வழமையாக எல்லா இடமும் அவியும் பருப்பு...
ஜே.வி.பி.யிடம் அவியுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. 😂

ஜேவிபி தனது முத்திரையை குத்த வேண்டுமென்றால் கொஞ்ச பேரை உலுப்பியே தீரவேண்டும்.

மக்களையும் மகிழ்விக்கத் தானே வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

ஜேவிபி தனது முத்திரையை குத்த வேண்டுமென்றால் கொஞ்ச பேரை உலுப்பியே தீரவேண்டும்.

மக்களையும் மகிழ்விக்கத் தானே வேண்டும்.

அவர்களின் உலுப்பலில்.... யார் முதல் அம்பிடுகின்றார்கள் என்று அறிய ஆவலாக உள்ளது. அனுர... மட்டக்களப்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், பிள்ளையானை ஒரு பிடி பிடித்திருந்தார். கிழக்கில் சில இடங்களில் அவர்கள் ஆயுதத்துடன் நடமாடுவது பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றார்.   தான் ஆட்சிக்கு வந்தால்... துணை இராணுவக் குழுக்களிடம் உள்ள ஆயுதம் எல்லாம் உடனடியாக களையப்  படும் என தெரிவித்து இருந்தார்.   

 அப்ப... டக்ளசும், தனது ஒட்டுக்குழு தோழர்களிடம் உள்ள ஆயுதங்களையும் கொடுக்க வேண்டி வரும். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அவர்களின் உலுப்பலில்.... யார் முதல் அம்பிடுகின்றார்கள் என்று அறிய ஆவலாக உள்ளது. அனுர... மட்டக்களப்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், பிள்ளையானை ஒரு பிடி பிடித்திருந்தார். கிழக்கில் சில இடங்களில் அவர்கள் ஆயுதத்துடன் நடமாடுவது பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றார்.   தான் ஆட்சிக்கு வந்தால்... துணை இராணுவக் குழுக்களிடம் உள்ள ஆயுதம் எல்லாம் உடனடியாக களையப்  படும் என தெரிவித்து இருந்தார்.   

 அப்ப... டக்ளசும், தனது ஒட்டுக்குழு தோழர்களிடம் உள்ள ஆயுதங்களையும் கொடுக்க வேண்டி வரும். 😂

அந்த உலுப்பலில்.  விமலும். அகப்பட்டு விடுவார் எனவே   நாங்கள் விமலை ஜேர்மனியில் கூப்பிட்டு பாதுகாப்போம் 🙏🤣 

ஜேர்மனியில் இருக்கும் யாழ் கள உறவுகளை ஒருக்கால். கேட்டுப் பாருங்கள்   ஆதரவு தருப்படி   

பலரது வங்கி கணக்குகளும். முடக்கப்படும் அந்த பணத்தை கொண்டு இலங்கையின் கடனை அடைக்கலம்   முக்கியமாக ராஜபக்ஷ குருப்      கருணா அம்மன் ... ....போன்றவர்களிடமுள்ள.  சட்டத்துக்கு புறம்பான சொத்துக்கள் பணம்   முழுவதும் துடைத்து வழிக்க. வேண்டும்   

இனிமேல் அரசியலில் தொடர முடியாதபடி   🙏

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாழ் இணையத்தில் உள்ள பலரின் கூற்றுப்படி இந்தியாவிடமும் இலங்கை அரசிடமும் பெட்டிபெட்டியாக பணம் பெற்ற சுமந்திரனிடம் உள்ள பணமும் பறிமுதல் செய்யப்படவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

முக்கியமாக ராஜபக்ஷ குருப்      கருணா அம்மன் ... ....போன்றவர்களிடமுள்ள.  சட்டத்துக்கு புறம்பான சொத்துக்கள் பணம்   முழுவதும் துடைத்து வழிக்க. வேண்டும்............

🙃...........

ஒரு தனிநபரிடமும் இருந்து ஒரு சல்லிக்காசு கூட பறிமுதல் செய்யப்படமாட்டாது....... ஆள் அடையாளத்துடன் இங்கே ஊழல் செய்தவர்களோ அல்லது கொள்ளை அடித்தவர்களோ கிடையாது.

இந்தியாவில் மோடியும் இப்படித்தான்........ கறுப்பு பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் 15 இலட்சம் ரூபாய்கள் கொடுக்கப் போகின்றேன் என்றார்........... இன்னும் ஒரு 15 சதம் கூட அவர் கொடுக்கவும் இல்லை, ஒரு கறுப்பு பணத்தையும் மீட்கவும் இல்லை........😀

  • கருத்துக்கள உறவுகள்

 

3 hours ago, நிழலி said:

அவர்களுக்கு / அனுரவுக்கு ஏன் இவர்களின் ஆதரவு தேவை?

சஜித்துக்கு என்ன ஆதரவு தேவை என ஆதரவு வழங்கினார்களோ அதே ஆதரவு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

🙃...........

ஒரு தனிநபரிடமும் இருந்து ஒரு சல்லிக்காசு கூட பறிமுதல் செய்யப்படமாட்டாது....... ஆள் அடையாளத்துடன் இங்கே ஊழல் செய்தவர்களோ அல்லது கொள்ளை அடித்தவர்களோ கிடையாது.

இந்தியாவில் மோடியும் இப்படித்தான்........ கறுப்பு பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் 15 இலட்சம் ரூபாய்கள் கொடுக்கப் போகின்றேன் என்றார்........... இன்னும் ஒரு 15 சதம் கூட அவர் கொடுக்கவும் இல்லை, ஒரு கறுப்பு பணத்தையும் மீட்கவும் இல்லை........😀

வாங்க வாங்க,....... 🙏🙏🙏.  அமெரிக்கர்கள் தாங்கள் நினைத்த. நேரம் பேசுவார்கள்.   அதேமாதிரி பேச்சுவார்த்தை வேண்டாம் என்றும் விடுவார்கள் 😂🤣🤪

மோடி கிழவன் 

அனுர இளைஞர்  எப்படி ஒப்பிடலாம்?? 

மோடியின் நண்பர்கள் தான் கருப்பு  பணம் வைத்திருத்தார்கள்.  எப்படி பறிக்க முடியும்?? 

அனுரவின். நண்பர்களிடம் கருப்பு பணம் இல்லை   எதிரிகளுடன் தான் உண்டு   எனவே பறிமுதல் செய்யலாம் 

அனுர தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டுமாயின் இந்த பணமுதலைகள். பிச்சைகாரர். ஆக்க வேண்டும்  இவர்கள் குனிந்து வளைந்து வேலை செய்து உழைக்கப்போவதில்லை 

இதற்கு மக்களின் ஆதரவுமிருக்கும்.  அனுரவின் செல்வாக்கு அரசியலில் கூடும்   🙏

1 hour ago, nunavilan said:

 

சஜித்துக்கு என்ன ஆதரவு தேவை என ஆதரவு வழங்கினார்களோ அதே ஆதரவு தான்.

நுணா,

வாக்குகளை பெற்றுக் கொடுக்க ஆதரவு தேவைப்படுவதும்,  ஆட்சியில் தொடர்வதற்கு ஆதரவு தேவைப்படுவதும் ஒன்றா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் த.தே.கூ தனது ராசதந்திரத்தைப் பாவிக்கும் நேரம் நெருங்கியுள்ளது. 3ஜே.வி.பி ஆசனங்களுடன் 10த.தே.கூ ஆசனங்களையும் சேர்த்து மேலும் ஏனைய கட்சிகளில் விரும்புவோரை இணைத்து ஒரு காபந்து அரசை நிறுவிவிட்டு, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைப்பதே தற்போதைய சனாதிபதி மெதித்துமாவுக்கு ஆட்சியைத் தொடர வாய்ப்பாக இருக்கும். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nochchi said:

நான் நினைக்கிறேன் த.தே.கூ தனது ராசதந்திரத்தைப் பாவிக்கும் நேரம் நெருங்கியுள்ளது. 3ஜே.வி.பி ஆசனங்களுடன் 10த.தே.கூ ஆசனங்களையும் சேர்த்து மேலும் ஏனைய கட்சிகளில் விரும்புவோரை இணைத்து ஒரு காபந்து அரசை நிறுவிவிட்டு, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைப்பதே தற்போதைய சனாதிபதி மெதித்துமாவுக்கு ஆட்சியைத் தொடர வாய்ப்பாக இருக்கும். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

த.தே.கூ. வுக்கு… ராஜதந்திரமா?  வாய்ப்பில்லை ராஜா…. 😂 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, nochchi said:

நான் நினைக்கிறேன் த.தே.கூ தனது ராசதந்திரத்தைப் பாவிக்கும் நேரம் நெருங்கியுள்ளது.

த.தே.கூவிற்கு ராச தந்திரம் ராசாத்தி தந்திரம் எல்லாம் தெரிஞ்சிருந்தால் தமிழர்களுக்கு இவ்வளவு  தரித்திரங்கள் வந்திருக்காது. 😎

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

த.தே.கூவிற்கு ராச தந்திரம் ராசாத்தி தந்திரம் எல்லாம் தெரிஞ்சிருந்தால் தமிழர்களுக்கு இவ்வளவு  தரித்திரங்கள் வந்திருக்காது. 😎

அவர்களுக்கு இவ்வளவு காலமும் நல்ல சிறிலங்கா தேசிய தலைவர் கிடைக்கவில்லை ....இப்பொழுது கிடைத்து விட்டார் இனி பாருங்கோவன் நம்ம கூட்டமைப்பின் ராஜதந்திரத்தை

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

நுணா,

வாக்குகளை பெற்றுக் கொடுக்க ஆதரவு தேவைப்படுவதும்,  ஆட்சியில் தொடர்வதற்கு ஆதரவு தேவைப்படுவதும் ஒன்றா?

வாக்குகளை பெற்று கொடுத்து ஆதரவை மக்களிடம் பெற்று ஆட்சியை கைப்பற்ற உதவி அதன் மூலம் தமக்கு தேவையானவற்றை பெறுதல் .
அக்கட்சி தோல்வி அடையும் இடத்து வெற்றி பெற்ற கட்சிக்கு ஆதரவை கொடுத்து அங்கும் தமக்கு தேவையானவற்றை பெறல்.
ஒரு சமாந்தரம் இருக்கல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்கட்சிகளின் சாணக்கியத்தால் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களால் புறக்கணிக்கப்பட்ட அனுர  கடந்தகால ஆட்சியாளர்கள்போல் டக்ளசையும், பிள்ளையான் கோஷ்டியையும் மீண்டும் அழைத்து பதவிகள் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜனாதிபதி பதவி ஏற்பில் அநுர பேசும்போது தனக்கு வாக்களித்தவர்களை மட்டுமல்ல தனக்கு வாக்களிக்காதவர்களையும் மனசில் கொண்டுள்ளேன் என்று கூறியிருக்கிறான், என்ன அர்த்தமோ இறைவனுக்கே வெளிச்சம்.

மதில்மேல் பூனையாக இருந்த முஸ்லீம்கள் அனுர வென்றதும் தெய்வமே நீங்களே வரவேண்டுமென்று நாங்கள் எல்லோருமே வாக்களித்தோம் அதுவே நடந்துபோச்சு இறைவனுக்கு நன்றி என்கிறார்கள். எல்லாம் ஒரு நம்பிக்கைதான் அனுரபோய் வாக்குபெட்டிகளை செக் பண்ணியா பார்க்க போகிறார் என்று.

ஒரு பேச்சுக்கு,

பேசாமல் பொது தேர்தலில் வடகிழக்கு மக்கள் அனுரகட்சிக்கு வாக்களித்து என்னதான் செய்கிறார் என்று பார்க்கலாம்.

அரை நூற்றாண்டுகளுக்கு மேலாய் இந்த தமிழ்கட்சிகள் பேச்சை கேட்டு இதுவரை எதுவுமே நடந்ததில்லை, ஆக குறைந்தது அநுரவோடு ஒத்துபோயாவது  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்தே அழுத்தங்கள் கொடுத்து பார்க்கலாம். ஆளும்கட்சிக்குள்ளிருந்தே குடைச்சல் கொடுத்து சர்வதேசத்துக்கு எமது பிரச்சனையின் தாக்கத்தை வெளிப்படுத்தலாம்.

ஆக குறைந்தது எமது பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைவாய்ப்புகள் கல்விக்கு முக்கியத்துவம் கோரலாம்.

சந்தர்ப்பம் சூழ்நிலைகள் கருதி ஒரு மாறுதலுக்காக ஓடுகிற குதிரையில் பணம் கட்டி பார்க்கலாம்,  மாற்றம் எதுவும் இல்லையென்றால் அடுத்த தேர்தலில்  மறுபடியும் தமிழ்கட்சிகளின் பேச்சை கேட்டு நடந்துக்கலாம்.

இது சிங்களவனிடம் பிச்சை எடுக்குறமாதிரி தோன்றலாம், தமிழ்கட்சிகளிடமிருந்து பிச்சைகூட கிடைக்கவில்லையென்பதே யதார்த்தம்.

இது அநுரவுக்கானதோ அல்லது சிங்களவனுக்கான ஆதரவோ என்று பார்க்காமல் தமிழ்கட்சிகளின்மீதான வெறுப்புனும் நோக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கட்சிகள் ஆதரவு வழங்கினால் என்ன விட்டால் என்ன.. ஆனால் தமிழ் கட்சிகள் என்பன.. ஜே வி பியிடம் இருந்தும் அனுரவிடம் இருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமது இயக்க தலைவரை கொன்று இயக்கத்தை தடை செய்து.. பயங்கரவாதிகளாக.. காட்டி நின்றவர்கள் முன்.. இன்று மக்கள் சனாதிபதியாக வரும் வரை கடந்து வந்த துரோகங்கள்.. காட்டிக்கொடுப்புகள்.. எல்லாம் தாண்டி... ஒரு சிறிய ஒற்றுமைக்குள் வளர்ந்த விதம் என்பது..

தமிழர்களுக்கு ஒரு பாடம். 

14 hours ago, ரசோதரன் said:

ஐக்கிய மக்கள் சக்தி அநுரவிற்கு தேவைப்படும் வேளைகளில் ஆதரவு வழங்கும் என்று சஜித் சொல்லியிருக்கின்றார்.

https://www.dailymirror.lk/latest-news/SJB-will-support-Anura-whenever-needed-Sajith/342-292218#

அப்பர் பிரேமதாச பயங்கரவாதிகள் என்று கொன்று குவித்தவர்களுக்கு.. இன்று மகன்... அதே பயங்கரவாதிகலுக்கு.. ஆதரவு. 

காலம் எப்படி மாறிக்கிடக்குது.

தமிழர்கள் பாடம் படிக்க வேண்டிய பகுதி. புலிகள் மீதான தடை நீக்கத்தின் பயன் என்ன என்று கேட்கும் முட்டாள் தமிழர்களுக்கும் சேர்த்தே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார், எல்லா கட்சிகளுடனும் கலந்தாலோசித்து இருக்கிறோம் எல்லோரும் எமது கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் வெல்லும் கட்சியுடன்  இணைந்து செயற்படுவோம் என்றார். என்ன..... கொஞ்சம் கூட எதிர்பார்ப்பார். எப்போ அனுரா கூப்பிடுவாரென காத்திருக்கிறார்கள்,  அனுரா கூப்பிடுவாரோ தெரியவில்லை. சஜித், தான் ஒத்துழைப்பு வழங்குவேனென கூறியிருக்கிறார். நாமலும் அதையே கூறியிருக்கிறார். அவர் பெரும் பதவி எதிர்பார்ப்பார். ரணில் தனது குழந்தையை ஒப்படைப்பதாக நாத்தழுதழுத்தார்.. பதுக்கல் பேர்வழிகள் தப்பியோடவும்முடியாது, விசாரணைகளில் இருந்து தப்பவும் முடியாது, தானாகவே விழுவார்கள். இல்லையேல் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டோமே என பின்னாளில்  அங்கலாய்ப்பர். சிலர்  தலைமைக்கு தெரியாமல் ரகசிய டீலும் போடலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.