Jump to content

மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அதெப்படி ??

அப்படியானால் அவர் இங்கே சொல்வது ஊருக்கு உபதேசமா???

மாற்றம் எதுவாயினும் நம்மிடம் இருந்தே ஆரம்பிக்கவேண்டும். 

 

கந்தையர் மனதில் மாற்றம் வந்துவிட்டது. குத்துகல்லாட்டம் கிடந்த மயிலிட்டி இராணுவத்தை நிபந்தனை இல்லாமல் எழுப்பிபோட்டார். அநுரவுக்கு புள்ளடி போட வேண்டும் என மாற்றம் ஒன்றை தன்னில் இருந்து ஆரம்பிக்கின்றார்.

  • Haha 2
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நியாயம் said:

 

கந்தையர் மனதில் மாற்றம் வந்துவிட்டது. குத்துகல்லாட்டம் கிடந்த மயிலிட்டி இராணுவத்தை நிபந்தனை இல்லாமல் எழுப்பிபோட்டார். அநுரவுக்கு புள்ளடி போட வேண்டும் என மாற்றம் ஒன்றை தன்னில் இருந்து ஆரம்பிக்கின்றார்.

இந்த பிரச்சனைகளை சொல்லி சொல்லி  தொடர்ந்தும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் போய் என்ன பிரயோஜனம் ??அதாவது  தமிழ் மக்களுக்கு என்ன லாபம்?? 

இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை சாட்டாக வைத்து 

பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியை பெற்று வசதியாக வாழ்கிறார்கள்  தொடர்ந்தும் வாழ்கிறார்கள் 

நல்ல ஆட்சியை எவர் தருகிறதோ அவருக்கு வாக்கு போடலாம் 

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள்  வரும் தேர்தலில் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகளை நிராகரித்து  அநுர கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும்.  அங்கு உள்ளவர்களுடன் பேசியபோது அப்படி தான் நடக்கும் போல. உள்ளதாக தெரிவித்தார்கள். தமிழ் தேசியத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் தமிழரசு கட்சி, கஜே கும்பல் ஆகியவற்றை மக்கள் நிராகரிக்க வேண்டும். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

220px-Logo_of_the_National_People%27s_Power.svg.png

அனுரவின்... தேசிய மக்கள் சக்தி கட்சி, நாளை 29.09.2024 அன்று புலம் பெயர் தமிழர்களுடன் இணையவழி (Zoom meeting)  சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது. 


கேள்வி பதில் அரங்கு.

பங்கு கொள்வோர்...
# இராமலிங்கம் சந்திர சேகர். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்)
# சிவா சிவப்பிரகாசம். (மலையக தேசியக்குழு உறுப்பினர்)
# எம்.ஜே.எம். பைசல்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்)
# ஜனகா செல்வராஜ்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்)

வழிப்படுத்தல்: எம். பெளசர்.

காலை 10:00 மணி - கனடா.
மதியம் 2:00 மணி ஐரோப்பா.
மதியம் 3:00 இங்கிலாந்து.
மாலை 7:30 இலங்கை நேரப்படி இந்த சந்திப்பு நிகழும்.

Meeting ID : 831 9644 1969
Pass Code: 660804

Contact - Fauzer
0776613739 (Mob.)
0044 7817262980 (WhatsApp)

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இந்த பிரச்சனைகளை சொல்லி சொல்லி  தொடர்ந்தும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் போய் என்ன பிரயோஜனம் ??அதாவது  தமிழ் மக்களுக்கு என்ன லாபம்?? 

இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை சாட்டாக வைத்து 

பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியை பெற்று வசதியாக வாழ்கிறார்கள்  தொடர்ந்தும் வாழ்கிறார்கள் 

நல்ல ஆட்சியை எவர் தருகிறதோ அவருக்கு வாக்கு போடலாம் 

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள்  வரும் தேர்தலில் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம் 🙏

 

புதிய ஜனாதிபதி அநுரவின் கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் வடக்கு/கிழக்கில் வரும் பொதுதேர்தலில் கிடைக்கலாம். ஆனால் அவை ஆசனத்தை பெறுவதற்கு போதுமானதாக அமையுமா என்பது சந்தேகமே.

Edited by நியாயம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியறிவுள்ள, பல்வேறு தொடர்புகளுள், ஆழுமையுள்ளசுமந்திரனும் சாணக்கியனும் TNA க்குத் தலைமை தாங்கி  வழிநடாத்த வேண்டும்,...👍

3 hours ago, நியாயம் said:

 

கந்தையர் மனதில் மாற்றம் வந்துவிட்டது. குத்துகல்லாட்டம் கிடந்த மயிலிட்டி இராணுவத்தை நிபந்தனை இல்லாமல் எழுப்பிபோட்டார். அநுரவுக்கு புள்ளடி போட வேண்டும் என மாற்றம் ஒன்றை தன்னில் இருந்து ஆரம்பிக்கின்றார்.

ஏனப்பா,.. ஒரு குசும்புக்கு எழுதினாலும் விசுகர் தடியோடதான் நிக்கிறார் கண்டியளோ,..🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

அடுத்த தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகளை நிராகரித்து  அநுர கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும்.

நிலைமையை பார்த்தால் தேர்தலுக்கு அனுரகுமார திசாநாயக்க யாழ்பாணத்தில் கூட்டம் வைத்து தமிழ் பொது வேட்பாளர் கோஷ்டி போன்று பிரசாரம் எல்லாம் செய்ய வேண்டியது இல்லை. வெளிநாட்டில் வாழ்கின்ற கடும்போக்கு தமிழ்தேசியவாதியான  கந்தையா அண்ணாவே மாறியிருக்கும் போது இலங்கையில் உள்ள தமிழர்கள் நிலைமை எப்படி  இருக்கும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

களையெடுப்பு 10 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

களையெடுப்பு 10 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும்.

விளைச்சல் முழுவதும் களையாக இருந்தால் ...எப்படி களையெடுப்பது....வீட்கில்லர் அடிச்சு காணியை துப்பரவு செய்து போட்டு நல்ல நாற்றுக்களை நடவேண்டும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, putthan said:

விளைச்சல் முழுவதும் களையாக இருந்தால் ...எப்படி களையெடுப்பது....வீட்கில்லர் அடிச்சு காணியை துப்பரவு செய்து போட்டு நல்ல நாற்றுக்களை நடவேண்டும்....

 அந்த கெட்ட களைகள் ஒரு குறிப்பிட்ட காலங்களில் முளைக்காமல் இருந்ததின் மர்மம் என்னவோ? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 அந்த கெட்ட களைகள் ஒரு குறிப்பிட்ட காலங்களில் முளைக்காமல் இருந்ததின் மர்மம் என்னவோ? :cool:

பயம்.... ஆயுதத்தை பார்த்து பயந்தனர் .... அதுதான் அவர்கள் ஜனநாயகம் ஜனநாயகம் என கூக்குரல் எழுப்பி கொண்டு திரிஞ்சவையள் .....ஜனநாயகம் என்றால் மக்களுக்கும் பயப்பட தேவையில்லை ஆயுத்தத்திற்கும் பயப்பட தேவையில்லை தாங்கள் நினைத்ததை  செய்யலாம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

சாத்தான்... வேதம் ஓதுகின்றது.  எங்களை நம்பட்டாம். 😂
சுமந்திரன் பதவி விலகினால்... பக்கத்தில் உள்ள தேவாலயத்தில் 10 மெழுகு திரி கொழுத்துவேன்.animiertes-kerzen-bild-0046.gif 

உங்களுக்கு அந்தச் சிரமத்தை வைக்காட்டார் என்றே நம்புகின்றேன். 
நட்பரர்ந்த நன்றியுடன்
நொச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

களையெடுப்பு 10 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும்.

உண்மை. ஆனால் மக்களிடம் இருந்த தேசியத்தின் மீதான பற்று இனஅழிப்புக்குத் துணைபோன ஈனர்களையெல்லாம் தேசியத் தலைவர் சொன்னார் என்பதற்காக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால்,(2024) கடந்த தேர்தல் எல்லாத் தமிழ் அரசியல்வாதிகளையும், அவர்களது அரசியல் சடுகுடு ஆட்டங்கள் அம்மணமாக்கிவிட்டுள்ளது. தமிழ்த்தேசியத்தை நாடாளுமன்றத்திலிருந்து ஐ.நா வரை எப்படிப் குளிதோண்டிப் புதைப்பார்கள் என்பதை ஐயத்திற்கிடமின்றி நிரூபித்துவிட்டார்கள். இனி மக்கள் கiளையெடுப்பார்கள் என்பதேசூழலாக மாறிவருகிறது. 
நட்பரர்ந்த நன்றியுடன்
நொச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

உங்களுக்கு அந்தச் சிரமத்தை வைக்காட்டார் என்றே நம்புகின்றேன். 
நட்பரர்ந்த நன்றியுடன்
நொச்சி

  images?q=tbn:ANd9GcRhEBZ3aB6tM4YKfrKWm6O  M._A._Sumanthiran.jpg

ஒன்றாக இருந்த  தமிழ் தேசியக் கூட்டமைப்பை...
கடந்த உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பு வந்த நேரம்.... தமிழரசு கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவிப்பு செய்து, மற்றைய கட்சிகளை வெளியே அனுப்பியவர்  தான் சுமந்திரன்.

ஜனாதிபதி தேர்தலுடன்...  மக்கள் அவர்களுக்கு கொடுத்த  அடியுடன்  மிரண்டு போய்... எல்லோரையும் ஒன்றாக வந்து இணையும் படி அழைப்பு விடுகின்றார். இந்த யோசனை இவருக்கு முன்பே வரவில்லையா... அல்லது அதனை கணிக்கும்,  "தூர நோக்குப் பார்வை" அறவே இல்லையா?

இப்போ.... இருந்த  பாராளுமன்ற கதிரைகள் பறி போய்விடும் என்ற அச்சத்தில், ஒற்றுமையை பற்றி கவலைப் படுகின்றார். அரசியல்வாதிகள் ரோசம் கெட்டவர்களாக  இருக்கலாம். மக்களும்  அப்படி இருப்பார்கள் என்று  எதிர் பார்க்கின்றார்கள் போலுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் முடிய.... வர இருக்கும் உள்ளுராட்சி தேர்தல்களில், மீண்டும் தமிழரசு கட்சி  தனித்துப் போட்டி என்று மற்றவர்களை வெளியே அனுப்புவார்கள். இவர்களின் குறி கதிரைகளே தவிர, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நலன் அல்ல.

"இன்னுமா... இந்த ஊர், நம்மளை நம்புது" என்ற வடிவேலுவின் நகைச்சுவை தான் நினைவிற்கு வருகின்றது. 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொது வேட்பாளர் பெற்ற வெற்றிகள் – நிலாந்தன். பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியமை என்பதே முதலாவது வெற்றி. ஏனெனில் ஓர் அரசுடைய தரப்பு வைக்கும் தேர்தலை அரசற்ற தரப்பு எப்படி படைப்புத்திறனோடும் புதுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் எதிர்கொள்ள முடியும் என்பதற்கு பொது வேட்பாளர் ஒரு முன்னுதாரணம். அரசற்ற தரப்பு ஒன்று அரசாங்கம் நடத்தும் ஒரு தேர்தலை தன்னுடைய கூட்டு விருப்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாக பயன்படுத்தியது ;அத்தேர்தல் களத்தைத் தேசத்தைத் திரட்டும் ஒரு பயில் களமாகாகக் கையாண்டமை என்பது முதலாவது வெற்றி. இரண்டாவது வெற்றி, பொது வேட்பாளர் தமிழ் மக்களை ஐக்கியப் படுத்துவதில் முதற்கட்டத் திரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அரியநேத்திரன் பெற்ற வாக்குகள் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரம்.அது கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளில் அரைவாசியை விட அதிகம். இந்த அடிப்படையில் அவர் பெற்றது ஒரு தொடக்க வெற்றி. அது ஒரு பிரகாசமான வெற்றி இல்லைத்தான். ஆனாலும் வெற்றி. பொது வேட்பாளரை தமிழ் மக்கள் பொருட்படுத்தவில்லை என்று சுமந்திரன் கூறுகிறார். இரண்டு லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்களை அவர் பொருட்படுத்தத் தேவையில்லாத ஒரு கணக்கு என்று கருதுகின்றாரா? இரண்டு லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கொடுக்கும் மதிப்பு அதுதானா? மூன்றாவது வெற்றி, பொது வேட்பாளர் தாயகத்தில் உள்ள மக்களை கட்சி கடந்து ஒன்று திரட்டியது மட்டுமல்ல, புலம்பெயர்ந்த தமிழர்களையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒன்று திரட்டியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகம் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையீடு செய்த ஒரு தேர்தல் இது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பொது வேட்பாளரை நோக்கி ஒப்பீட்டளவில் அதிகமாக ஒன்று குவிந்தார்கள். இது மூன்றாவது வெற்றி. நாலாவது வெற்றி, கிழக்கில் இருந்து வந்த ஒரு வேட்பாளர் வடக்கில் பெற்ற வாக்குகள்.வடக்கையும் கிழக்கையும் சட்டரீதியாக ஏற்கனவே பிரித்து விட்டார்கள் நிர்வாக எல்லைகளின் மூலமும் குடியேற்றங்களின் மூலமும் கிழக்கில் கிழக்கு மையக் கட்சிகளை வளர்த்தெடுப்பதன் மூலமும் வடக்கையும் கிழக்கையும் பிரிக்க முற்படும் சக்திகள் வெற்றி பெற்று வரும் ஒரு காலகட்டத்தில்,கிழக்க்கில் இருந்து ஒரு வேட்பாளர் பொது வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டார்.அவருக்கு வடக்கில் கிடைத்த ஆதரவு என்பது வடக்கையும் கிழக்கையும் உணர்வுபூர்வமாக பிரிக்க முடியாது என்பதனை உணர்த்தி இருக்கிறது.அதுவும் வடக்கு கிழக்கை சட்ட ரீதியாகப் பிரித்த கட்சியின் தலைவர் அரசுத் தலைவராகத் தெரித்தெடுக்கப்படட ஒரு தேர்தலில். இது ஒரு மகத்தான வெற்றி ஐந்தாவது வெற்றி, ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. சங்குச் சின்னத்தின் கீழ் ஏழு கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டன. மக்கள் அமைப்பு ஒன்றும் கட்சிகளும் இணைந்து அவ்வாறு தேர்தல் நடவடிக்கைகள் ஈடுபட்டமை தமிழ் அரசியல் பண்பாட்டில் ஒரு புதிய போக்கு. அது ஒரு புதிய பண்பாடு. அது ஒரு புதிய பரிசோதனையும் கூட. அந்த ஜனநாயகப் பரிசோதனையில் தமிழ் மக்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு சித்தி பெற்றிருக்கிறார்கள். பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது ஜூலை 29 ஆம் தேதி. ஜனாதிபதி தேர்தல் நடந்தது செப்டம்பர் 21 ஆம் தேதி. இடைப்பட்ட சுமார் 50 நாட்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு மிகவும் புதிய ஒரு சின்னத்தை சங்குச் சின்னத்தை வெற்றிச் சின்னமாக மாற்றியது என்பதில் ஒரு செய்தி இருக்கிறது.தமிழ் மக்கள் கூட்டுணர்வோடு வாக்களிக்கும் பொழுது எந்த ஒரு புதிய சின்னத்தையும் ஸ்தாபிக்கலாம் என்பதுதான் அது. இது ஏற்கனவே தமிழ் மக்கள் உதயசூரியன் சின்னத்தை நிராகரித்த பொழுது நிரூபிக்கப்பட்டது. அதன் பின் ஈரோஸ் இயக்கம் சுயேட்சையாகப் போட்டியிட்ட பொழுது கிடைத்த வெற்றியும் அதனை நிரூபித்தது. இப்பொழுது சங்குக்கு கிடைத்த வெற்றியும் அத்தகையதுதான். முற்றிலும் புதிய ஒரு சின்னத்தை 50 நாட்களில் ஸ்தாபிக்க முடிந்தமை என்பது ஒற்றுமையின் விளைவு. ஒற்றுமையின் பலமும் தான். ஆனால் இந்த ஒற்றுமை இப்பொழுதும் பலவீனமானதாகவே காணப்படுகிறது பொதுக் கட்டமைப்பு ஒரு பலமான இறுகிப் பிணைந்த கூட்டாக இன்னமும் உருவாகவில்லை. ஒரு ஜனாதிபதித் தேர்தலை நோக்கி கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து செயல்பட்டன. இதே இணைந்த செயல்பாடு தொடர்ந்து வரும் தேர்தலிலும் இருக்குமா என்ற கேள்வி உண்டு. கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் நடந்த கூட்டத்தில் அது அது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் காணப்படும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பானது தொடர்ந்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக தனது கருத்தை தெரிவிப்பதற்கு சில நாட்கள் அவகாசத்தை கேட்டுள்ளது. அந்த மக்கள் அமைப்பு அதன் பொதுச்சபையைக் கூட்டி அது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஒரு மக்கள் அமைப்பு தொடர்ச்சியாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து அந்த அமைப்பிடம் தயக்கம் காணப்படுவதாக தெரிகின்றது.தேர்தல் முடிந்த கையோடு தமிழ் மக்கள் பொதுச்சபை ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் தேசத்தைக் கட்டியெழுப்பும் வழியில் தேர்தல் ஒரு பகுதியே தவிர தேர்தல்கள் மூலம் மட்டும் தேசத்தைக் கட்டி எழுப்ப முடியாது என்று தெளிவாகத் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலை தமிழ் ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவதற்கான ஒரு களமாக பயன்படுத்துவது என்று கூறிப் பொதுகட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பொதுக் கட்டமைப்பு எனப்படுவது தமிழ் ஐக்கியத்தின் ஆகப் பிந்திய முயற்சி. கட்சிகள் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தயாராகிவிட்டன.பொதுக் கட்டமைப்புக்குள் அங்கமாக உள்ள ஏழு கட்சிகளும் அது தொடர்பில் கூடி முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது. ஆனால் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பானது அது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் கூடி முடிவெடுக்க விருப்பதாகத் தெரிகிறது. ஒரு ஜனாதிபதித் தேர்தலை கையாள்வது வேறு, ஏனைய தேர்தல்களை கையாள்வது வேறு என்ற விளக்கம் பொதுச் சபையிடம் காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலை ஒரு தேர்தலாக அல்லாது தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்கான ஒரு பயில் களமாகவே பொதுச்சபை பார்த்தது. அந்த அடிப்படையில்தான் பொதுச்சபை பொதுக் கட்டமைப்புக்குள் இணைந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் முழு அளவுக்கு ஈடுபட்டது. ஆனால் ஏனைய தேதர்கள் அவ்வாறானவை அல்ல. எனவே அந்த தேர்தல் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு பொதுச் சபை கால அவகாசத்தை கேட்டது. பொதுச்சபை எனப்படுவது ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி உதயமாகிய ஒரு கட்டமைப்பு. அதற்கு ஐந்து மாதங்கள் தான் வயது.5 மாத வயதான ஒரு கட்டமைப்பு அடுத்தடுத்து வரும் தேர்தல்களுக்கு பதில் வினை ஆற்ற வேண்டியது அவசியமா என்ற கேள்விக்கு விடை இன்று இரவுக்குள் தெரிய வந்து விடும். https://athavannews.com/2024/1401614
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.