Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த நினைவஞ்சலிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_7289.jpeg.f132cd19e1bf15cc02e6

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு அப்புறம் உலகின் அனைத்து அரச அடக்குமுறைக்கு எதிரான  போராட்ட இயக்கங்களிற்கும் பயங்கரவாத இயக்கங்கள் என்றும் அவை அழிக்கப்படவேண்டியவை என்றும் முத்திரை குத்தி அமெரிக்கா வாள் தூக்கியதால் உலகின் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போர் புரிந்த அனைத்து இயக்கங்களும் பேரழிவின் விளிம்புக்கு அப்போது வந்தன.

போராட்ட சக்திகளுக்கெதிரான உலகின் அக்கால போக்கை சமாளிக்க உருவாக்கப்பட்டதே தேசிய கூட்டமைப்பு.  அதில் புலிகளாலும் மக்களாலும் வெறுக்கப்பட்ட / ஒதுக்கப்பட்ட முன்னாள் ஆயுத அரசியல் குழுக்கள் இயக்கங்கள் இருந்தன.

அவர்கள் எவரையும் மனதார எமது போராட்ட சக்திகள் என்று மக்களோ புலிகளோ ஏற்றுக்கொண்டதில்லை, அப்படி ஏற்றுக்கொண்டிருந்தால் புலிகள் அரசு பேச்சு வார்த்தையில் சர்வதேச மட்டத்திலிருந்து உள்நாடுவரை அவர்களும் அடக்கப்பட்டிருப்பார்கள்.

ஒருதடவை புலிகள் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது கஜேந்திரன் தலைவர் முன்னாடியே பிரேமச்சந்திரனின் பிரசன்னத்தை விமர்சித்திருந்தார் , அதற்கு அனைவரையும் அணைத்துபோவது காலத்தின் கட்டாயம் என்ற பாணியில் தலைவர் அவரை அமைதி படுத்தியிருந்தார்.

ஆம் அது உலகத்துக்கு ஒப்புக்கு காண்பிக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைப்பு, ஒரு காலபகுதியில் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிராக நின்றவர்களை தலைவர் மறந்திருப்பாரென்று நாம் எண்ணிக்கொண்டால் அது ஒரு தவறான வரலாற்று தொகுப்பு.

உலகிற்கு ஒப்புக்கு காண்பிக்கப்பட்ட விடயம் உங்களுக்கு விளங்கியது போல் உலகிற்கு விளங்கவில்லை…

இப்படி கீழ்த்தரமாக எழுதி புலிகளை மலினப்படுத்தாதீர்கள்..

புலிகளால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவர்கள் அவர்கள்.

9 hours ago, நிழலி said:

புலிகள் வரவேற்றதால், தலைவர் வரவேற்றதால் மட்டும் அவர் புனிதராகி விடமாட்டார்.

ஏற்கனவே யாழில் எழுதியது தான். தலைவர் மண்டையன் குழு தலைவனுக்கு அருகில் நின்ற  கொடுமையை கூட பார்த்தனாங்கள் என்று.

உங்களையும் புலிகள் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமைதிப்படையென வந்து தமிழின அழிப்புப்படையாகித் தாயக மண்ணில் பல்வேறு படுகொலைகளை அரங்கேற்றிய இந்தியப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் நினைவேந்திய இரங்கல் வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, MEERA said:

உலகிற்கு ஒப்புக்கு காண்பிக்கப்பட்ட விடயம் உங்களுக்கு விளங்கியது போல் உலகிற்கு விளங்கவில்லை…

இப்படி கீழ்த்தரமாக எழுதி புலிகளை மலினப்படுத்தாதீர்கள்..

புலிகளால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவர்கள் அவர்கள்.

முதலில் தனியொருவனாக புலிகளை மலினபடுத்தாமல் உயர்வாய் வைத்திருக்கும் உங்களுக்கு வணக்கங்கள்.

ஒரு பொது கருத்து தளத்தில் தனிமனித தாக்குதலின்றி  கருத்துக்கு கருத்து எழுதும்போது கீழ்தரம் மேல்தரம் எல்லாம் இல்லை, உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் எழுதுகிறீர்கள் எனக்கு புரிந்ததை நான் எழுதுகிறேன்.

புலிகளால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது எப்போது? தேசிய கூட்டமைப்பு தோற்றத்திற்கு முன்னா பின்னா?

அறிந்துகொள்ள ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

 

புலிகளால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவர்கள் அவர்கள்.

 

ஆதாரம் ஏதும் இருக்கிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்

நினைவேந்தல் நிகழ்வு சம்பந்தமான திரியில் சிலவற்றை தவிர்த்து வேண்டுமானால் வேறு ஒரு திரி திறந்து இவை பற்றி விவாதிக்கலாமே..

  • கருத்துக்கள உறவுகள்

குழு

On 21/10/2024 at 17:54, Kavi arunasalam said:

‘ திராவிடம்’ என்ற சொல்லைச் சேர்த்துப் பாடவில்லை என்பதற்காக  தமிழகத்தில் ஆளுனரிடம் சண்டைக்குப் போகிறார்கள். நாங்கள் எங்களுக்குள்ளேயே குத்தி முறிந்து கொண்டிருக்கின்றோம். குறைந்த பட்சம் தூதராலயத்துக்கு  முன் படங்களை வைத்தாவது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். 

சிறிய நாடு. அதற்கு இரண்டு இந்தியத் தூதராலயம்.

நன்றாக சொன்னீர்கள். திராவிடம் என்ற சொல்லை சேர்க்கவில்லை  என்பதற்காக  தமிழ்நாட்டில் மக்கள் இந்திய அரச பிரதிநிதியுடன் சண்டைக்கு போகின்றார்கள். ஆனால் இங்கேயோ படுகொலை செய்த இந்த இந்திய அரசுக்கு  எதிராக  எந்த எதிர்ப்பும் இல்லை பதிலாக காந்தி நினைவு தினம் இந்தியாவுக்காக தமிழர்களை மண்டையில் போட்டு கொலை செய்தகுழு  தலைவர் இப்போதும் இந்திய ஆதரவு அறிக்கை விடுகின்றார். அடைகலநாதன் யாழ்பாண பல்கலைகழக மாணவர்கள் என்று இந்திய அரசுக்கு ஆதரவான அறிக்கைகள்  தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வருடா வருடம் ரஜினி திரணகம கொலையை சொல்லி அழும் நாய்களும் நரிகளும் இந்த கொலைகளுக்கு வருத்தமும் அனுதாபமும் தெரிவிக்க மாட்டார்கள் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.