Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

ஏன்? இதுவரை கட்டி முடித்து அபிஷேகம் செய்த விகாரைகளை அடித்து நொறுக்கி விட்டீர்களாக்கும். கூரை மீதேறி கோழி பிடிக்க தெரியாதவர் வானமேறி வைகுண்டம் போனாராம்.

இதுவரை கட்டினதை எவரும் தடுக்க முடியவில்லை.

ஆனால் இனித்தான் உங்கள் நவீன கெளதம புத்தன் அனுரவின் 2/3 ஆட்சியாயிற்றே…

இனி நீங்கள் எப்படி கோழி பிடிக்கிறீர்கள் என்பதை பார்க்க நாங்கள் ரெடி.

  • Replies 909
  • Views 78.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

பியதாசவுக்கு போடேக்கையே அலர்ட் ஆகி இருக்கோணும்🤣

யாழ்ப்பாணத்தவர்கள் பெரும் கட்சிகளுக்கு வாக்களிக்கா விட்டாலும்    தமிழ் சுயேட்சை வாக்காளருக்கு வாக்களித்து தமது அதிருப்தியை தெரிவித்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

யாழ்ப்பாணத்தவர்கள் பெரும் கட்சிகளுக்கு வாக்களிக்கா விட்டாலும்    தமிழ் சுயேட்சை வாக்காளருக்கு வாக்களித்து தமது அதிருப்தியை தெரிவித்திருக்கலாம்.

மாத்தையா எனக்கும் சிங்களம் டிக்கக் டிக்கக் புழுவாங்..

வெளிக்கிடடி வீரெகெட்டியவுக்கு🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

இனி எங்கயாவது விகாரை கட்டுறான் எண்டு தூக்கி கொண்டு வந்தியள் எண்டா கெட்ட

😂

அனுரகுமார திசநாயக்க என்றால் தாராளமாக விகாரை கட்டலாமே
அவர் கட்டினா அது இலங்கையில் மதநல்லிணக்கத்தை அல்லவா பிரதிபலிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

😂

அனுரகுமார திசநாயக்க என்றால் தாராளமாக விகாரை கட்டலாமே
அவர் கட்டினா அது இலங்கையில் மதநல்லிணக்கத்தை அல்லவா பிரதிபலிக்கும்

🤣 கேட்டால் இதுவரை கட்டினதை தடுத்தீர்களா என்கிறார்.

இல்லை…ஆனால் கட்டியவனுக்கு எதிராக வாக்களித்தோம்..

நீங்கள் வாக்களித்தவனே கட்டினால்?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

மாத்தையா எனக்கும் சிங்களம் டிக்கக் டிக்கக் புழுவாங்..

அப்ப இனி டிக்கக் டிக்கக் புளுவாங் இல்லாட்டி கோவிந்தா தான்.....
எண்டாலும் எங்கட இண்டிஷ் கோவிந்தன் கைவிட மாட்டான் 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயம் சொல்ல வேண்டும்.

இங்கே அருச்சுனாவின் லூசு கதைகளால் அவர் எம் பி யாக பொருத்தம் இல்லை என நக்கல் அடிக்கும் @கிருபன்@நிழலி க்கு தெரியுமோ தெரியாது…..

அனுர குமாரவின் உண்மையான பெயர் அரவிந்த திசாநாயக்க….இவர் தனது தாயின் இளைய சகோதரியைத்தான் மணம் முடித்துள்ளார் ( எங்கேயும் கூட்டி வருவதும் இல்லை).

இப்படி லூசு வேலை செய்தவர் ஜனாதிபதி ஆகும் போது, லூசு மாரி கதைக்கும் அருச்சுனா எம்பி ஆகலாம்தானே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, goshan_che said:

அனுர குமாரவின் உண்மையான பெயர் அரவிந்த திசாநாயக்க….இவர் தனது தாயின் இளைய சகோதரியைத்தான் மணம் முடித்துள்ளார் ( எங்கேயும் கூட்டி வருவதும் இல்லை).

இந்த விடயம் வெளியே அரசியல் ரீதியாக வெளியே தெரியமாட்டாது என நான் நினைத்திருந்தேன்.

11 minutes ago, goshan_che said:

இங்கே அருச்சுனாவின் லூசு கதைகளால் அவர் எம் பி யாக பொருத்தம் இல்லை என நக்கல் அடிக்கும்

அப்படி பார்த்தால் நாங்கள் பழம்பெரும் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியே இழுக்கவேண்டி வரும் கண்டியளோ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

 

அனுர குமாரவின் உண்மையான பெயர் அரவிந்த திசாநாயக்க….இவர் தனது தாயின் இளைய சகோதரியைத்தான் மணம் முடித்துள்ளார் ( எங்கேயும் கூட்டி வருவதும் இல்லை).

இப்படி லூசு வேலை செய்தவர் ஜனாதிபதி ஆகும் போது, லூசு மாரி கதைக்கும் அருச்சுனா எம்பி ஆகலாம்தானே.

அரவிந்த என்பது அநுரவின் இயக்க பெயராகும், முதியன்சலாகேநுர குமார திசாநாயக்க என்பது அவரது முழு இயற்பெயராகும். ஜேவிபி உறுப்பினர்கள் தமது குடுப்ப உறுப்பினர்களை முதன்மை படுத்துவதில்லை குறிப்பாக அவர்களின் மனைவிமாரை, அநுர மாத்திரம் அல்ல ஜேவிபி எவருமே தமது மனைவிமாரை பொது வைபவங்களுக்கு அழைத்து செய்வதில்லை. அநுர தனது தாயாரின் இளைய சகோதரியை மணம் முடித்துள்ளார் என்பது இட்டுக் கட்டிய கதையாகும்.

அவரின் சின்னம்மாவின் உண்மையான கதையை கீழுள்ள காணொளியில் அநுர கூறியதை கேக்கலாம்.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதுவரை கட்டினதை எவரும் தடுக்க முடியவில்லை.

ஆனால் இனித்தான் உங்கள் நவீன கெளதம புத்தன் அனுரவின் 2/3 ஆட்சியாயிற்றே…

இனி நீங்கள் எப்படி கோழி பிடிக்கிறீர்கள் என்பதை பார்க்க நாங்கள் ரெடி.

உங்களிடம் முறையிட வர மாடடோம் அதுமட்டும் நிட்சயம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

யாழில் 1, வன்னியில் 1, மட்டு 1

இதுதான் ஆக கூடியது என நினைத்தேன்.

யாழில் 3, அதுவும் தேர்தல் மாவட்டமே போச்சு எண்டதும்….

“தலை சுத்திடிச்சு”…..

பியதாசவுக்கு போடேக்கையே அலர்ட் ஆகி இருக்கோணும்🤣

உங்கடை கொதி விழங்குது.😄ஆனால் உண்மையில் எனக்கு விழங்காதது தமிழ் அரசியல் வாதிகளால் தான் எமக்கு இந்த அவலங்கள் இவங்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னது சரி.அப்படி வீட்டுக்கு அனப்பினாலும் ஏச்சு விழுகுது.🤐

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

பின்வருவனவற்றில் உங்கள் நிலைப்பாடு பற்றி சொல்லுங்கோ.

1. காணாமல் போனோர் விடயம். 

2. போர் குற்ற விசாரணை

3. மாகாண சபைக்கு காணி அதிகாரம்

4. மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம்

5. மாகாண சாபைக்கு நேரடி வெளிநாட்டு முதலீட்டை இணைக்க கூடிய நிதியம் (இலங்கை திறைசேரி கண்காணிப்பில்).

6. தமிழர் நிலத்தில் புத்த கோவில்

இந்த 6 இல் எதை நீங்கள் இப்போ கை விட்டு விட்டீர்கள்?

இந்த 6 இல் எதை ஐ அனுர தருவார் என நினைக்கிறீர்கள்?

 

இவற்றில் எதையும் தருவேன் என்று அனுரா சொல்லவில்லை, தரமாட்டேன் என்று உறுதியளிக்கவுமில்லை. இதை தாருங்கள் அதை கைவிடுகிறோமென மக்கள் கூறவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை. இலங்கை முழுக்க உள்ள எத்தனையோபேர் எச்சரித்திருந்தும் மக்கள் அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் மாற்றத்தை எதிர்பார்த்து அனுராவை நம்பி தெரிந்தெடுத்தார்கள். அவர்களின் வேணவா அனுராவுக்கு புரியும், தன்னாலியன்றதை முயற்சித்து செய்வார். முன் இருந்த ஆட்சியாளர்கள் எத்தனையோ சொன்னார்கள், செய்தார்களா? சொல்பவர் செய்வதில்லை செய்பவர் சொல்வதில்லை. பொறுத்திருங்கள், மக்களின் தெரிவை எள்ளி நகையாடாதீர்கள். இதெல்லாம் சுமந்திரனை தூக்கியெறிந்த மக்கள் மேல் உள்ள வக்கிரம் அனுராவை வசை பாடுகிறார்கள். சரி அனுராவை தெரிந்தது பிழையென்றால், உங்கள் தெரிவு யாராக இருந்திருக்க வேண்டுமென்று சொல்லித்தான் தொலையுங்களேன்! இன்னொரு சிங்களவர்தானே, அரியம் நின்றபோதும் நகைத்தீர்கள். அனுராவை தெரிந்தபோதும் வசை பாடுகிறீர்கள். இதைத்தான்  மனதுக்குள் உள்ளதை வெளியிட விரும்பாமல் வெதும்புவது என்பது.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் புதிய முகங்கள் மூவர்: மிக குறைந்த வாக்கு பெற்ற செல்வம்

image

பாராளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் புதிய முகங்களாக மூவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கின்றார்கள்.

தேசிய மக்கள் சக்தி சார்பில் செ.திலகநாதன் எனப்படுகின்ற சக்தி டொக்டர் மிருக வைத்தியராவார்.

கடந்த முறை இவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஊடாக தேர்தலில் பங்கேற்று அதிக விருப்பு வாக்குகளை பெற்றிருந்த போதிலும் பாராளுமன்றத்துக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டிருந்தது. இவர் தற்போது தேசிய மக்கள் சக்தியின் ஊடாக தேர்தலில் போட்டியிட்டு 10652 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருக்கின்றார்.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெளிவாகியுள்ள ம.ஜெகதீஸ்வரன் ஆசிரிய சேவா சங்கத்தின் வடமாகாண தலைவராகவும் தேசியமட்ட உப தலைவராகவும் செயற்பட்ட நிலையில் கடந்த அரசாங்கங்களுக்கு எதிராக ஆசியர்கள் சார்பான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று ஆசிரியர்களுடைய கோரிக்கைகளை முன் வைத்து இருந்தார். இவர் தற்போது 9280 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெளிவாகியுள்ளார்.

மற்றையவர் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரவிகரன். இவர் பல்வேறு மக்கள் சார் போராட்டங்களில் பங்கேற்று இருந்ததோடு குருந்தூர்மலை உட்பட வடக்கில் மேற்கொள்ளப்பட்ட பல போராட்டங்களில் முன்னின்று செயல்பட்ட ஒருவராக காணப்பட்ட நிலையில் பல தடவை பாதுகாப்பு தரப்பினரோடு முரண்பட்டு பல வழக்குகளையும் சந்தித்து இருக்கின்றார். இவர் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினராகவும் செயல்பட்டிருந்தார். இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 11215 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இதேவேளை பழைய முகங்களாக ரிசார்ட் பதியுதீன் இம்முறை 21,018 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருந்த போதிலும் கடந்த முறை 28 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு சென்றிருந்தார். இவரின் தற்போதைய வாக்கு வீதம் சரிந்து இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

கே. கே மஸ்தான் கடந்த இரண்டு தடவைகள் பாராளுமன்றத்திற்கு சென்று ராஜாங்க அமைச்சராக இருந்த போதிலும் தற்போது புதிய சின்னமாக இலங்கை தொழிலாளர் கட்சியினூடக கங்காரு சின்னத்தின் ஊடாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருக்கின்றார். 

மஸ்தானை பொறுத்தவரை குறித்த கட்சியையும் சின்னத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பாரிய சிரமத்தை எதிர்கொண்ட நிலையிலும் கூட அவருடைய பிரசாரத்தின் யுக்தியின் அடிப்படையில் அவர் வெற்றி வாய்ப்பை அடைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை 13511 க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாக இருப்பதோடு கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அவர் இதே அளவான விருப்பு வாக்குகளை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து செல்வம் அடைக்கலநாதன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினூடாக போட்டியிட்டு வடக்கு கிழக்கில் ஒரே ஒரு ஆசனத்தின் ஊடாக பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கின்றார்.

இவர் 25 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தற்போது மீண்டும் 5 வருட பாராளுமன்ற உறுப்புரிமையை அலங்கரிப்பதற்காக செல்கின்றார்.

எனினும் சடுதியான வாக்கு சரிவை சந்தித்து 5695 வாக்குகளை பெற்று இம்முறை பாராளுமன்றம் செல்லும் இவர், அகில இலங்கை ரீதியில் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவானோரில் மிகக் குறைந்த வாக்குகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/198892

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இப்படி லூசு வேலை செய்தவர் ஜனாதிபதி ஆகும் போது, லூசு மாரி கதைக்கும் அருச்சுனா எம்பி ஆகலாம்தானே.

எதுக்கெடுத்தாலும் Facebook Live இல் போகும் பைத்தியருக்கு புலம்பெயர் அபிமானிகள் பலர் உள்ளனர். அதிலும் பெண்கள் அதிகம்! சீரியல் பார்த்தும், கொசிப் கதைத்தும் சந்தோசத்தை அடைபவர்களுக்கு அருச்சுனா ஒரு தெரிவுதான்! இவர் தன்னை மாற்றாவிட்டால், காலம்பூராவும் வழக்குகளில் இழுபட்டுக்கொண்டிருப்பார். அவற்றை விடுப்புப் பார்க்கும் கூட்டத்திற்கு நல்ல தீனி கிடைக்கும்!

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

எதுக்கெடுத்தாலும் Facebook Live இல் போகும் பைத்தியருக்கு புலம்பெயர் அபிமானிகள் பலர் உள்ளனர். அதிலும் பெண்கள் அதிகம்! சீரியல் பார்த்தும், கொசிப் கதைத்தும் சந்தோசத்தை அடைபவர்களுக்கு அருச்சுனா ஒரு தெரிவுதான்!

போகிற போக்கில் தமிழ்நாட்டு அரசியலை நாங்கள் மிஞ்சி விடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

யாழில் 1, வன்னியில் 1, மட்டு 1

இதுதான் ஆக கூடியது என நினைத்தேன்.

யாழில் 3, அதுவும் தேர்தல் மாவட்டமே போச்சு எண்டதும்….

“தலை சுத்திடிச்சு”…..

பியதாசவுக்கு போடேக்கையே அலர்ட் ஆகி இருக்கோணும்🤣

தொடர்ச்சியாக சவாகச்சேரி மக்களை ஏமாற்றியதன் விளைவு,

அருந்தவபாலனை விரும்பினார்கள், சசிகலாவை கொஞ்சம் விரும்பினார்கள், சரிவாராத பொழுது வித்தியாசமாக அர்ச்சனாவுக்கு போட்டு இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

466464973_972550694909903_39361376518064

 

May be an image of text

 

466831273_972557138242592_27011359045039

 

No photo description available.

 

May be an image of text

 

466828512_972105404954432_43244564029555

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கிருபன் said:

எதுக்கெடுத்தாலும் Facebook Live இல் போகும் பைத்தியருக்கு புலம்பெயர் அபிமானிகள் பலர் உள்ளனர். அதிலும் பெண்கள் அதிகம்! சீரியல் பார்த்தும், கொசிப் கதைத்தும் சந்தோசத்தை அடைபவர்களுக்கு அருச்சுனா ஒரு தெரிவுதான்! இவர் தன்னை மாற்றாவிட்டால், காலம்பூராவும் வழக்குகளில் இழுபட்டுக்கொண்டிருப்பார். அவற்றை விடுப்புப் பார்க்கும் கூட்டத்திற்கு நல்ல தீனி கிடைக்கும்!

 

இன்றைய உலக அரசியலில் ஊடக விளம்பரம் மிக முக்கியமாக இருக்கின்றது. இதற்கு பேஸ்புக்,யூரியுப்,டிவிட்டர் போன்ற வலைத்தளங்களை அரசியலுக்கு பயன்படுத்துகின்றார்கள்.அமெரிக்க தேர்தலிலும் பொது வலைத்தளங்களே முக்கிய பங்கு வகித்தது.😎

இதெல்லாம் பூமர் அங்கிள்மாருக்கு தெரிய/விளங்கிக்கொள்ள சந்தர்ப்பங்கள் குறைவு.☹️
எப்பபாத்தாலும் வீரகேசரி,,தினகரன் தினபதி சிந்தாமணி பேப்பர் எண்டு அலையிறவைக்கு என்னத்த சொல்லேலும்.😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இன்றைய உலக அரசியலில் ஊடக விளம்பரம் மிக முக்கியமாக இருக்கின்றது. இதற்கு பேஸ்புக்,யூரியுப்,டிவிட்டர் போன்ற வலைத்தளங்களை அரசியலுக்கு பயன்படுத்துகின்றார்கள்.அமெரிக்க தேர்தலிலும் பொது வலைத்தளங்களே முக்கிய பங்கு வகித்தது.😎

இதெல்லாம் பூமர் அங்கிள்மாருக்கு தெரிய/விளங்கிக்கொள்ள சந்தர்ப்பங்கள் குறைவு.☹️
எப்பபாத்தாலும் வீரகேசரி,,தினகரன் தினபதி சிந்தாமணி பேப்பர் எண்டு அலையிறவைக்கு என்னத்த சொல்லேலும்.😂

சமூகவலைத் தளங்களில் இருந்து துரித அறிவைப் பெற்றுக்கொள்ளலாம் என்பவர்களை நினைத்தால் ஆசான் பாஷையில் நகுகவேண்டியதுதான்!

spacer.png

 

இணையக்குப்பை

spacer.png

 

பதிவில் இருந்து சில பகுதிகள்

 

 

சில அடிப்படைகளை நான் சொல்லமுடியும்

. ஊடகம் என்பது நமக்கு அறிவூட்டுவது அல்ல, நமக்கு கேளிக்கை அளிப்பது அல்ல, நம் செயற்களமும் அது அல்ல. இந்த தெளிவை நாம் முதலில் அடையவேண்டும். அது நம்மை அடிமைப்படுத்துவது, அது நம்மை வாங்கவைக்கும் விளம்பரத்துக்கான கருவி, அதற்கப்பால் ஒன்றும் அல்ல.

. நமக்கான ஒரு செயற்களத்தைக் கண்டடையவேண்டும். அது வெறும் சொற்களால், சிந்தனைகளால் ஆனதாக இருக்கலாகாது. புறவயமான செயலாக இருக்கவேண்டும். அது எதுவானாலும் சரி. சமூகப்பணி, அறிவுப்பணி, கலைப்பணி, வேளாண்மை, கைத்தொழில். அதில் மட்டுமே முழுமையாக ஈடுபடவேண்டும்.

. அந்தச் செயற்களத்திற்கு தேவையான அளவுக்கு மட்டும் ஊடகத்தைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஊடகத்தை பயன்படுத்துவதற்கு நாமே நமக்கு ஓர் எல்லையை வகுத்துக்கொண்டு அதை கறாராக பின்பற்றவேண்டும்.

. நம் செயல்பாடுகள் தனித்தவையாக இருக்கலாகாது. அவை நீடிக்காது. நம்மைப்போன்றவர்களுடன் தொடர்புகொள்ளவேண்டும். ஒரு சிறு துணைச்சமூகமாக நாம் நம்மை திரட்டிக்கொள்ளவேண்டும். நம்முடைய சோம்பல், அகங்காரம், சில்லறைப்பூசல்களால் ஒருபோதும் அந்த சமூகத்தில் இருந்து பிரியக்கூடாது. அச்சமூகம் உடைய வழிவகுக்கலாகாது. அது இருந்தால்தான் நாம் இருப்போம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

கவனச்சிதைவு என்பது மிகையின் இன்னொரு வடிவம். ஒன்று செய்யவேண்டிய இடத்தில் நூறு செய்யவேண்டியிருந்தால் கவனம் சிதறுகிறது. ஒன்று தேவையான இடத்தில் ஆயிரம் அளிக்கப்பட்டால் கவனம் சிதறுகிறது. ஒரு டம்ளர் நீரை ஓர் அறைமுழுக்க பரப்பினால் ஒரே நிமிடத்தில் அது ஆவியாகும். நமக்கு இருக்கும் நேரம், கவனம், நினைவு மூன்றும் ஒரு டம்ளர் நீர் போல எல்லைக்குட்பட்டவை. அவற்றை மிகக்கவனமாக செலவிட்டாகவேண்டும்.

அதற்கான வழிமுறைகள்

. நம் செயற்களம் வரையறுக்கப்படவேண்டும். அதற்கு வெளியே நாம் எதையும் கவனிக்கவேண்டியதில்லை. எந்த மனிதனும் உலகை முழுக்க கவனிக்க முடியாது. எல்லா துறைகளையும் கவனிக்க முடியாது. எல்லாருடனும் விவாதிக்கமுடியாது.

. செயல் இல்லாத நிலையிலேயே கவனம் சிதறுகிறது. ‘ஓய்வு நேரம் என ஒன்று தேவையில்லை. நம் வேலை ஒரு களம் என்றால் இன்னொன்றாக நமக்கான தனிப்பட்ட ரசனைக்கான களத்தை வைத்துக் கொள்வோம். அங்கே செயலாற்றுவோம். செயலாற்றும்போது கவனம் குவிந்தே ஆகவேண்டும். ‘சும்மா இருக்கையில்தான் கவனம் சிதறுகிறது.

. எதையாவது உருவாக்காத, எதையாவது கற்காத எல்லா கேளிக்கைகளையும் முழுமையாகத் தவிர்த்துவிடுவோம். வெற்றுக்கேளிக்கைதான் நம்மை சிதறடிக்கிறது.

 

 

https://www.jeyamohan.in/206616/

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

இது தேர்தல்க் கணக்கு,

தமிழரசுக் கட்சி   63327 +
சங்கு                         22513
மாம்பழம்               7496
                                ---------------  
                                    93336   
                                ---------------

       இவைகளுடன் சுயெட்சை கட்சி 17 க்குச் (ஊசிச்சின்னம்) சென்ற வாக்குகள் சேர்ந்தால்

                             ஊசி + 93336
  121322 வாக்குகள்

மேற்கூறிய 121322 வாக்குகளுடன் சைக்கிள் கட்சி பெற்ற வாக்குகள் சேர்த்தால் 149308 வாக்குகள்

இந்த வாக்குகள் யாவும் சிந்தாமல் சிதறாமல் தமிழ்த்தேசிய அரசியலை நல்ல நேர்மையான முறையில் கடைப்பிடித்தால் யாழ் தேர்தல் மாவட்டத்தில்  149308 வாக்குகளைப் பெறலாம்.

இலங்கைத் தேர்தலில் விகிதாசார நடைமுறையின்மூலம் தேசியக்கட்சிகள் பெற்றுக்கொள்ளக்குடிய வபாராளுமன்ற உறுப்புரிமையை ஒன்றுடன் மட்டுப்படுத்தியிருக்கலாம். தவிர இமூறை எதிர்கொண்ட அனுர அலையை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கலாம்.

 

அனுர தரப்புக்கு கிடைத்த வாக்குகள் அனைத்தும் அதாவது அங்கஜன் டக்ளஸ்  மற்றும் விஜயகலா ஆகியோர் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளைலிருந்து இம்முறை அங்கஜன் டக்ளஸ் ஆகிய இருவரும் பெற்ற வாக்குகளைக கழித்து வரும் வாக்குகளின் கூட்டுத்தொகையே இம்முறை அனுர தரப்புப் பெற்றுக்கொண்டது.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:
13 hours ago, goshan_che said:

இப்படி லூசு வேலை செய்தவர் ஜனாதிபதி ஆகும் போது, லூசு மாரி கதைக்கும் அருச்சுனா எம்பி ஆகலாம்தானே.

எதுக்கெடுத்தாலும் Facebook Live இல் போகும் பைத்தியருக்கு புலம்பெயர் அபிமானிகள் பலர் உள்ளனர். அதிலும் பெண்கள் அதிகம்! சீரியல் பார்த்தும், கொசிப் கதைத்தும் சந்தோசத்தை அடைபவர்களுக்கு அருச்சுனா ஒரு தெரிவுதான்! இவர் தன்னை மாற்றாவிட்டால், காலம்பூராவும் வழக்குகளில் இழுபட்டுக்கொண்டிருப்பார். அவற்றை விடுப்புப் பார்க்கும் கூட்டத்திற்கு நல்ல தீனி கிடைக்கும்!

யாரும் விரும்பினால் என்ன விரும்பாவிட்டாலும் என்ன லூசு பைத்தியம் இப்படி என்ன வேணுமானாலும் சொல்லலாம்.

இனிமேல் எம்பி என்ற தோரணையில் அதுவும் பொலிஸ் பாதுகாப்புடன் எந்த வைத்தியசாலைகளுக்கும் எத்தனை மணிக்கும் போகலாம்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்பு என்று சொல்லும் பலர் திரும்ப திரும்ப டாக்ரரை பைத்தியம் பைத்தியம் என்பது ஏதொ ஒரு விதத்தில் கஸ்டமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

எதுக்கெடுத்தாலும் Facebook Live இல் போகும் பைத்தியருக்கு புலம்பெயர் அபிமானிகள் பலர் உள்ளனர். அதிலும் பெண்கள் அதிகம்! சீரியல் பார்த்தும், கொசிப் கதைத்தும் சந்தோசத்தை அடைபவர்களுக்கு அருச்சுனா ஒரு தெரிவுதான்! இவர் தன்னை மாற்றாவிட்டால், காலம்பூராவும் வழக்குகளில் இழுபட்டுக்கொண்டிருப்பார். அவற்றை விடுப்புப் பார்க்கும் கூட்டத்திற்கு நல்ல தீனி கிடைக்கும்!

 

சில புலம்பெயர் ஆட்களின் பின்னணியிலேயே இவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றலாகி வந்ததாக கூறுகிறார்கள். இங்கு பிரபல்யமான இரெண்டெழுத்து வைத்தியரும் உள்ளடக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குப் போட்ட மக்களை தேடிச் சென்று நன்றி சொல்லும் டாக்ரர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தல் முடிவின் பின்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.