Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நீங்கள் எப்போதும் ஏழை, பணக்காரன் என்ற வர்க்க பார்வையோடு பல விடயங்களை அணுகியதை பல தடவை யாழில் கண்டுள்ளேன்.

காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சசலாம். இது நீங்கள் என்மேல்கொண்டுள்ள தப்பபிப்பிராயம். தனிப்பட்ட முறையில் நாம் ஒருவரை ஒருவர் அறியோம், களத்தில் நான் எழுதிய பதிவுகளை கொண்டு அனுமானிக்கிறீர்கள். ஆனால் வேறொரு கள உறவும் இப்படி என்னை அனுமாய்க்கவில்லை. ஆகையால் இது உங்களின் தனிப்பட்ட கருத்து. இதற்கு நான் பொறுப்பாளியல்ல.  

  • Replies 909
  • Views 78.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நாதாயோ…

நாதாயோ….

அபி லங்கா பெள ழே 

நாதாயோ 🤣

————-

@Nathamuni எங்க சாமி போய்டீங்க…

யாழில் 90% ஆட்கள் உங்கள் வழிக்கு வந்து விட்ட இந்த அரிய காட்சியை வந்து பாருங்க தெய்வமே.

———

சிறு வயதில் பைபிளை பிரட்டும் போது வாசித்த ஒரு விடயம் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்தது.

தனது கைதுக்கு முன் யேசு தன் 12 சீடரையும் பார்த்து சொல்வாராம்…

நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்து வரும் நாட்களில் என்னை 3 தரம் மறுதலிப்பீர்கள் என.

இது தமிழ்தேசியத்தின் மறுதலிப்பு காலம் போலும்.

இதுவும் கடந்து போகும். 

🤣புரூடாஸ் நீயுமா?

  • கருத்துக்கள உறவுகள்

348 வாக்குகளால் பாராளுமன்ற ஆசனத்தை தவறவிட்ட மஹிந்தானந்த : அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பு

image

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே 348 வாக்குகளால் பாராளுமன்ற ஆசனத்தை தவறவிட்டதையடுத்து, தான் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். 

கண்டி மாவட்ட தேர்தல் முடிவுகளின்படி, சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட மகிந்தானந்த அலுத்கமகேயை விட 348 வாக்குகளை அதிகமாக பெற்று அனுராத ஜயரத்ன பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இத்தோல்வியை அடுத்து மஹிந்தானந்த அலுத்கமகே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் நேற்று சனிக்கிழமை (16) தமது கட்சி ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

நாவலப்பிட்டிய தொகுதியில் இருந்து மத்திய மாகாண சபை மற்றும் பாராளுமன்றம் என்பவற்றுக்கு பல முறை தெரிவான இவர் மாகாண சபை அமைச்சராகவும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சராகவும் பல முறையும் தெரிவான ஒருவர். நாவலப்பிட்டிய பிரதேசத்தில் அலுத்கமகே குடும்பம் நீண்டகால அரசியல் செய்ததாகவும் தற்போது பொதுமக்கள் தம்மை நிராகரித்துள்ளதால் தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் விவசாய அமைச்சராக இருந்து பாரிய அளவில் பேசப்பட்டவரும் விமர்சிக்கப்பட்டவருமான மஹிந்தானந்த அலுத்கமகே இரசாயனப் பசளை தடை தொடர்பாக அதிகளவு உருவப் பொம்மை எரிக்கப்பட்ட ஒருவராகவும் பேசப்பட்டவர் ஆவார்.

மேலும், கடந்த காலத்தில் இரண்டு முறை பாராளுமன்றம் சென்ற வேலுகுமாரின் வாக்கு வங்கி 7539ஆக வீழ்ச்சியடைந்து அவரும் தோல்வியடைந்தார்.

அதேவேளை முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜெய்னுல் ஆப்தீன் லாபிர் ஹாஜியாருக்கு 3442 விருப்பு வாக்குகள் மட்டுமே கிடைத்து அவரும் தோல்வியடைந்தார்.

https://www.virakesari.lk/article/198967

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு.

கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது.

அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

 

சரோஜா பால்ராஜ் மிகவும் பிரபலமும் பரிட்சயமுமான ஒரு தொழில் சங்கவாதி 20 வருடங்களாகளுக்கு மேலாக மக்கள் பிரச்சினைகளை பேசிவருபவர். 

மாத்தறை தமிழர்கள் குறைந்த அளவில் வாழ்ந்தாலும்,  அனுரா அலையில்  இன வேறுபாடின்றி ஓட்டுகள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினர்களாக இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்ட பெண்களின் விபரம். 

 

 தமிழ் பிரதேசங்களில் எல்லாக் கட்சிகளிலும் பெண்கள் போட்டியிட்ட போதிலும்  அக்கட்சிகளுக்கெல்லாம் வாக்களித்த மக்கள் பெண்களை தெரிவு செய்ய வில்லை.  வன்னி மாவட்டதில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட  யுத்ததில் அங்கவீனமுற்ற பெண் போராளியை கூட மக்கள் தெரிவு செய்ய வில்லை. 

யுத்தத்தில் களப்பலியாகவும் கரும்புலியாகவும் போக  பெண்கள் தேவைப்பட்ட தமிழ் மக்களுக்கு தலைமை வகிக்க பெண்கள் தேவையில்லை போல் உள்ளது. 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, island said:

தமிழ் பிரதேசங்களில் எல்லாக் கட்சிகளிலும் பெண்கள் போட்டியிட்ட போதிலும்  அக்கட்சிகளுக்கெல்லாம் வாக்களித்த மக்கள் பெண்களை தெரிவு செய்ய வில்லை.

ஜேவிபியின் ஒரு தலைவர்  ரில்வின் சில்வா வடக்கு தமிழர்கள் இனவாதத்தை நிராகரித்து போட்டார்கள் என்று சொல்லியுள்ளாராம்
தங்களது சிங்கள அண்ணாமாரை பின்பற்றி அடுத்த தேர்தலில் இவர்களும் பெண்களை தெரிவு செய்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

இலங்கையின் 3 ஆவது பலமிக்க அரசியல் கட்சியாக தமிழரசு

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் 8 ஆசனங்களைக் கைப்பற்றியதன் மூலம் இலங்கையின் 3 ஆவது பலமிக்க அரசியல் கட்சி என்ற இடத்தி இலங்கை தமிழரசுக்கட்சி பிடித்துள்ளது.

நடைபெற்று முடிந்த   பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமையிலான தேசிய மக்கள் சக்தி  68,63,186 வாக்குகளை பெற்று 141 நேரடி ஆசனங்கள்  18 தேசிய பட்டியல்  ஆசனங்கள் என 159 ஆசனங்களைக் கைப்பேரறி  மூன்றி இரண்டு பெரும்பான்மை பலத்தை நிலைநாட்டியுள்ளது.

அதற்கு அடுத்தாக ஐக்கிய மக்கள் சக்தி 19,68,716 வாக்குகளை பெற்று 35  நேரடி ஆசனங்கள், 5 தேசியப்பட்டியல் ஆசனங்கள் என 40 ஆசனங்களைக்  ஆசனங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் எதிர்கட்சியாகயாகவும்  உருவாகியுள்ளது.

மூன்றாம் இடத்தில் இலங்கை தமிழரசு கட்சி 2,57,813 வாக்குகளை பெற்று மட்டக்களப்பில் 3 ஆசனங்களையும், அம்பாறையில் 1 ஆசனத்தையும், திருகோணமலையில் 1 ஆசனத்தையும், வன்னியில் 1 ஆசனத்தையும், யாழ்ப்பாணத்தில் 1 ஆசனத்தையும் என 7 நேரடி ஆசனங்கள். தேசியப்பட்டியல் ஆசனம் என 8 ஆசனங்களைக்கைப்பற்றி  3 ஆவது பலமிக்க அரசியல்  கட்சியாக உருவாகியுள்ளது.

இதேவேளை புதிய ஜனநாயக முன்னணி 5 ஆசனங்களையும், கடந்தமுறை 145 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி புரிந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெர முன 3 ஆசனங்களையும், முஸ்லிமும் காங்கிரஸ்  3 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 1 ஆசனத்தையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி  1 ஆசனத்தையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும், அகில இலங்கை மக்கள்  காங்கிரஸ் 1 ஆசனத்தையும், சுயேச்சை குழு 17 ஒரு ஆசனத்தையும் இலங்கைத் தொழிலாளர் கட்சி 1 ஆசனத்தையும், சர்வஜன அதிகாரம் கட்சி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

https://thinakkural.lk/article/312180

இவர்கள் வேறு விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றபடி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

சரோஜா பால்ராஜ் மிகவும் பிரபலமும் பரிட்சயமுமான ஒரு தொழில் சங்கவாதி 20 வருடங்களாகளுக்கு மேலாக மக்கள் பிரச்சினைகளை பேசிவருபவர். 

மாத்தறை தமிழர்கள் குறைந்த அளவில் வாழ்ந்தாலும்,  அனுரா அலையில்  இன வேறுபாடின்றி ஓட்டுகள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

அவர் பெயரவில்தான் தமிழர். மற்றும்படி அவர் ஒரு முழு நேர இடது சாரி. அவருக்கு விழுந்த வாக்குகள் இதற்காக விழுந்தவையே தவிர வேறெதூக்கும் அல்ல.

தமது தமிழ் அடையாளத்தை விடுத்து இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்கும் எந்த தமிழரையும் சிங்களவர் எப்போதும் தம்மில் ஒருவராக ஏற்று கொண்டே வந்துள்ளனர்.

கதிர்காமர் மாத்தறையில் கேட்டிருந்தால் முதலாவதாக வந்திருப்பார்.🤣

1 hour ago, விசுகு said:

இவர்கள் வேறு விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றபடி.

தமிழகத்தில் அண்ணன் காட்டிய வழியில், இலங்கையில் அப்புகாத்துகள்🤣.

#மூன்றாம் பெரிய கட்சி

#யாழ்பாணத்தில் ஒத்தை ரோசா 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஜேவிபியின் ஒரு தலைவர்  ரில்வின் சில்வா வடக்கு தமிழர்கள் இனவாதத்தை நிராகரித்து போட்டார்கள் என்று சொல்லியுள்ளாராம்

இதுதான் இனி இலங்கை அரசின் சர்வதேச பிரச்சாரத்தொனி….

அதாவது தமிழர் 1948 இல் இருந்து கேட்டது இனவாத கோரிக்கை…

இப்போ மனம் திருந்தி நல் வழிக்கு வந்து விட்டார்கள்….

இனி எமக்குள் பிரச்சனை இல்லை…

நீங்கள் (வெளிநாடுகள், புலம்பெயர் தமிழர்) இதில் தலையிட தேவையில்லை.

இதை பாவித்து எமது சகல கோரிக்கைகள், விசாரணைகளை எப்படி அடுத்த 5 வருடத்தில் அடித்து நூத்து ஒன்றும் இல்லாமல் ஆக்குகிறார்கள் என்பதை உக்காந்து பாருங்கள்.

4 hours ago, island said:

யுத்தத்தில் களப்பலியாகவும் கரும்புலியாகவும் போக  பெண்கள் தேவைப்பட்ட தமிழ் மக்களுக்கு தலைமை வகிக்க பெண்கள் தேவையில்லை போல் உள்ளது. 

இதற்கு முன் பல தமிழ் பெண் எம்பிக்கள் இருந்துள்ளார்கள்.

அனந்திக்கு மா.சபை தேர்தலில் கிடத்க வெற்றி நியாபகம் இருக்கும்.

இப்போது கூட பல பழுத்த தலைவர்களை விட கெளசல்யா வாங்கிய விருப்பு வாக்கு அதிகம்.

சுமந்திரன், கஜன், ஶ்ரீ போன்றோர் தமக்கு போட்டியாக வந்து விடக்கூடாது என்பதால் ஒண்டுக்கும் உதவா பெண்களை போட்டியில் இறக்கினர் ஆகவே மக்கள் வாக்களிக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 15/11/2024 at 16:11, கிருபன் said:

அப்பா "தனக்கெடாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்" என்று சின்ன வயதிலேயே சொன்னதால் எனக்கு சிங்களமும் தெரியாது. சிங்கள நண்பர்களும் கிடையாது. ராத்திரித்தான் Google Translate துணையுடன் “தோழர் அநுர” என்றால் “அநுர சகோதரய” என்று அறிந்தேன்😊

ஆகவே, அநுர சகோதரயவுடன் X தளத்தில் இணையவுள்ளேன்!

மெல்ல மெல்ல சிங்களம் பழகுவோம்☺️

 

அநுர சகோதரயவை X தளத்தில் பின்தொடர்கின்றேன்! சமூகவலைத் தளங்களில் நான் இணைத்துக்கொண்ட முதலாவது சிங்களவர்!

large.IMG_9579.png.6c3d4b7e6220424fe7567f5dc749d0b0.png

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sasi_varnam said:
17 hours ago, நிழலி said:

மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு.

கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது.

அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

 

Expand  

சரோஜா பால்ராஜ் மிகவும் பிரபலமும் பரிட்சயமுமான ஒரு தொழில் சங்கவாதி 20 வருடங்களாகளுக்கு மேலாக மக்கள் பிரச்சினைகளை பேசிவருபவர். 

மாத்தறை தமிழர்கள் குறைந்த அளவில் வாழ்ந்தாலும்,  அனுரா அலையில்  இன வேறுபாடின்றி ஓட்டுகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

தமிழ் வாக்குகள் முகம்களுக்கு தான் விழுகிறது.

என்பிபி வாக்குகள் கட்சிக்கே முதன்மை பெறுகிறது.

இந்த பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கினர் முகமறியாதவர்களே.

57 minutes ago, goshan_che said:

இதுதான் இனி இலங்கை அரசின் சர்வதேச பிரச்சாரத்தொனி….

அதாவது தமிழர் 1948 இல் இருந்து கேட்டது இனவாத கோரிக்கை…

இப்போ மனம் திருந்தி நல் வழிக்கு வந்து விட்டார்கள்….

இனி எமக்குள் பிரச்சனை இல்லை…

நீங்கள் (வெளிநாடுகள், புலம்பெயர் தமிழர்) இதில் தலையிட தேவையில்லை.

இதை பாவித்து எமது சகல கோரிக்கைகள், விசாரணைகளை எப்படி அடுத்த 5 வருடத்தில் அடித்து நூத்து ஒன்றும் இல்லாமல் ஆக்குகிறார்கள் என்பதை உக்காந்து பாருங்கள்.

இனப் பிரச்சனை தீர்வு என்ற ஒன்றை ஐஎம்எவ் வைத்துள்ளதே?

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஈழப்பிரியன் said:

இனப் பிரச்சனை தீர்வு என்ற ஒன்றை ஐஎம்எவ் வைத்துள்ளதே?

அது உள்ளூராட்சி சபையாகவும் இருக்கலாம், அதை தமிழ் மக்களால் தெரிவு செய்த எம்பிகள், மாகாண சபை ஆதரிக்கும் என்றால் ஐ எம் எவ் அல்ல ஆண்டவனே எதுவும் செய்ய முடியாது.

புலிகள் மிகவும் முயன்று பாதியளவு வெற்றியடைந்த விடயம் எமது பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது.

நாமே என் பி பி எம்பிகளை தேர்ந்து அனுப்புவது - அதை அப்படியே ரிவர்ஸ் ஆக்கி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அது உள்ளூராட்சி சபையாகவும் இருக்கலாம், அதை தமிழ் மக்களால் தெரிவு செய்த எம்பிகள், மாகாண சபை ஆதரிக்கும் என்றால் ஐ எம் எவ் அல்ல ஆண்டவனே எதுவும் செய்ய முடியாது.

புலிகள் மிகவும் முயன்று பாதியளவு வெற்றியடைந்த விடயம் எமது பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது.

நாமே என் பி பி எம்பிகளை தேர்ந்து அனுப்புவது - அதை அப்படியே ரிவர்ஸ் ஆக்கி விடும்.

பார்ப்போம்.காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பலர் 28 தமிழ் எம்பிக்கள் போகிறார்கள் என குதூகலிக்க்கிறார்கள்.

இன்னும் சிலர் வாய்ப்பளித்த என் பி பி, வாக்களித்த சிங்கள மக்கள் நெஞ்சை நக்காத குறை….

ஆனால் இதில் 14 எம் பி க்கள் தவிர மிச்சம் எல்லாம் ஒவ்வொரு கதிர்காமர், டமாரா குணநாயகம் என்பது போக போக விளங்கும்.

திட்டமிட்டே தெற்கில் கூட என் பி பி தமிழ் எம்பிக்களை இறக்கி வென்றுள்ளது.

பிஸ்கோத்து திட்டத்தை திணிக்கும் போது -பார்தீர்களா எத்தனை மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ் எம்பிகள் இதை ஆதரிக்கிறனர் என பிரசாரம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

Sorry to say this, சிங்களவன் எப்பவும் உங்களை விட ஒரு அடி முன்னால் யோசிப்பவன். இப்போதும் இதுதான் நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che  ஒரு உதாரணம் மட்டுமே. இப்படியான தமிழ

 தேசியத்தை விட அநுரவுக்கு வாக்களிப்பது தவறா? 

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

பார்ப்போம்.காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

காலம் கட்டாயம் பதில் சொல்லும்.

சதுரங்க்க ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் வைத்த பொறியில் நாம் கச்சிதமாக வீழ்ந்தோம் என.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

 

👆 மேலே  உள்ள இரு தலைப்புகளும், இந்தத் திரியுடன் சம்பந்தப் பட்டுள்ளதால்... இங்கு  இணைத்துள்ளேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, island said:

@goshan_che  ஒரு உதாரணம் மட்டுமே. இப்படியான தமிழ

 தேசியத்தை விட அநுரவுக்கு வாக்களிப்பது தவறா? 

 

 

என் நிலைப்பாடு

1. இதில் தலைவர் பற்றிய எழுச்சி இயக்கப்பாடல் பாடி வெற்றியை கொண்டாடுகிறார்கள். 

2. செல்வம் = பிரபாகரன் என யாரும் சொல்லவில்லை. ஆனால் செல்வத்துக்கு பக்கதில் நிற்கும் கோமாளியின் அங்க சேட்டை அப்படி ஒரு தொனியை கொடுக்கிறது. செல்வம் அவரை தடுத்திருக்க வேண்டும்.

3. ஆனால் செல்வத்துக்கு அருகில் நிற்கும் கோமாளியின் செயலுக்காக தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்காமல் விட முடியாது.

பிகு

தலைவர் இருக்கும் போதே அவரை துதிக்கு பாடுவதில் எனக்கு உடன்பாடிருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

என் நிலைப்பாடு

1. இதில் தலைவர் பற்றிய எழுச்சி இயக்கப்பாடல் பாடி வெற்றியை கொண்டாடுகிறார்கள். 

2. செல்வம் = பிரபாகரன் என யாரும் சொல்லவில்லை. ஆனால் செல்வத்துக்கு பக்கதில் நிற்கும் கோமாளியின் அங்க சேட்டை அப்படி ஒரு தொனியை கொடுக்கிறது. செல்வம் அவரை தடுத்திருக்க வேண்டும்.

3. ஆனால் செல்வத்துக்கு அருகில் நிற்கும் கோமாளியின் செயலுக்காக தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்காமல் விட முடியாது.

பிகு

தலைவர் இருக்கும் போதே அவரை துதிக்கு பாடுவதில் எனக்கு உடன்பாடிருக்கவில்லை.

நானும் இதனைத் தான் நினைத்தேன். இதனால் செல்வம் மேலும் மேலும் தன்னை இழப்பது தான் நடக்கும். ஆனால் தலைவருக்கோ தமிழ்த் தேசியத்துக்கோ இதனால் எந்த பாதிப்பும் இல்லை. இந்த கோமாளித்தனம் கூட அவற்றை மேலும் பேச வைக்கும் வளரவைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அநுர சகோதரயவை X தளத்தில் பின்தொடர்கின்றேன்! சமூகவலைத் தளங்களில் நான் இணைத்துக்கொண்ட முதலாவது சிங்களவர்!

large.IMG_9579.png.6c3d4b7e6220424fe7567f5dc749d0b0.png

கனடா ஹைகொமிசனர் உங்கள் தோழருக்கு கிட்டதட்ட உறுதி.

உங்களுக்கு லாங்காஸ்டர் ரோட்டில் வாழ அதிஸ்டம் உள்ளதோ யார் கண்டார்?

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

என் நிலைப்பாடு

1. இதில் தலைவர் பற்றிய எழுச்சி இயக்கப்பாடல் பாடி வெற்றியை கொண்டாடுகிறார்கள். 

2. செல்வம் = பிரபாகரன் என யாரும் சொல்லவில்லை. ஆனால் செல்வத்துக்கு பக்கதில் நிற்கும் கோமாளியின் அங்க சேட்டை அப்படி ஒரு தொனியை கொடுக்கிறது. செல்வம் அவரை தடுத்திருக்க வேண்டும்.

3. ஆனால் செல்வத்துக்கு அருகில் நிற்கும் கோமாளியின் செயலுக்காக தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்காமல் விட முடியாது.

பிகு

தலைவர் இருக்கும் போதே அவரை துதிக்கு பாடுவதில் எனக்கு உடன்பாடிருக்கவில்லை.

எனக்கும் உங்கள் கருத்தில் உடன் பாடு உண்டு.

தனிநபர் துதி பாடலும் தனிநபர்  அவதூறும் தான்  75 வருடங்களாக தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் மிக முக்கிய அம்சமாக இருந்து,  இன்றும் அது தொடர்கிறது. 

அரச்சுனாவுக்கு செல்லப்பா இரண்டாவது துதிப் பாடலையும் பாடியுள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அநுர சகோதரயவை X தளத்தில் பின்தொடர்கின்றேன்! சமூகவலைத் தளங்களில் நான் இணைத்துக்கொண்ட முதலாவது சிங்களவர்!

large.IMG_9579.png.6c3d4b7e6220424fe7567f5dc749d0b0.png

இவ‌ரின் பெய‌ரில் யூடுப் ச‌ண‌லும் இருக்கு பெரிய‌ப்பு

 

அதில் நான் சில‌ காணொளிக‌ள் பார்ப்ப‌து உண்டு.......................

  • கருத்துக்கள உறவுகள்

முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள்

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் பெறுபேறுகளுக்கமைய தேசிய மக்கள் சக்தியில் (NPP) இருந்து கல்விமான்கள் பலர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

முதன் முறையாக வைத்தியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், வழக்கறிஞர்கள் ஆகிய துறைசார் வல்லுநர்கள் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

துறைசார் வல்லுநர்கள்

அதன்படி, தேசிய மக்கள் சக்தியில் இருந்து 15 வைத்தியர்கள் நாடாளுமன்றம் செல்கின்றனர்.

அந்த வகையில், வைத்தியர். நளிந்த ஜயதிஸ்ஸ,  வைத்தியர். நிஹால் அபேசிங்க,  வைத்தியர். ரிஸ்வி சாலிஹ், வைத்தியர்.பிரசன்ன குணசேன,  வைத்தியர். நாமல் சுதர்ஷன,  வைத்தியர். நிஷாந்த சமரவீர,  வைத்தியர்.தம்மிகா படபெந்தி,  வைத்தியர்.சுசில் ரணசிங்க,  வைத்தியர்.ஹன்சக விஜேமுனி,  வைத்தியர்.எஸ். திலகநாதன்,  வைத்தியர்.மதுர செனவிரத்ன,  வைத்தியர்.ஜனக சேனாரத்ன,  வைத்தியர்.சண்டருவன் மதரசிங்க,  வைத்தியர்.ஜகத் விக்கிரமரத்ன,  வைத்தியர்.ஜகத் குணவர்தன.

முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள் | New Sri Lankan Parliament Mps Are Educated

அத்துடன், தேசிய மக்கள் சக்தியில் இருந்து ஆசிரியர்கள் உட்பட அதிபர்கள் 21 பேர் நாடாளுமன்றம் செல்கின்றனர்.

அந்த வகையில், சாந்த பத்மகுமார, மஞ்சுள சுரவீர ஆராச்சி, பத்மசிறி பண்டார, ரத்னசிறி சுனில், சுஜீவ திசாநாயக்க, சந்தன தென்னகோன், சஞ்சீவ ரணசிங்க, நந்த பண்டார, மஞ்சுளா ரத்நாயக்க, ருவன் விஜேவீர, சதுரி கங்கானி, ஆறுமுகம் ஜெகதீஸ்வரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, ரொஷான் அக்மீமன, முனீர் முலாஃபர், ஹேமாலி வீரசேகர, உபுல் கித்சிறி, டி.கே ஜெயசுந்தர, எஸ்.பிரதீப், அரவிந்த செனரத், ருவன் மாபலகம.

முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள் | New Sri Lankan Parliament Mps Are Educated

மேலும், தேசிய மக்கள் சக்தியில் இருந்து 16 வழக்கறிஞர்களும் நாடாளுமன்றம் செல்கின்றனர். 

அந்த வகையில், சுனில் வதகல, ஹர்ஷன நாணயக்கார, சுசந்த தொடவத்த, நிலாந்தி கோட்டஹச்சி, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, ஹசர கம்மன லியனகே, உபுல் அபேவிக்ரம, அனுஷ்கா தர்ஷனி, கீதா ஹேரத், சாகரிகா அத்தாவுடா, பாக்ய ஸ்ரீ ஹேரத், துஷாரி ஜயசிங்க, பிரியந்த விஜேரத்ன, சரத் குமார, நிலுஷா கமகே, ஹிருனி விஜேசிங்க.

இதேவேளை, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 10ஆவது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த சென்ற 21 பெண்களில் 19 பேர் தேசிய மக்கள் சக்தியில் இருந்தும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

https://ibctamil.com/article/new-sri-lankan-parliament-mps-are-educated-1731851634

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஏராளன் said:

இதேவேளை, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 10ஆவது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த சென்ற 21 பெண்களில் 19 பேர் தேசிய மக்கள் சக்தியில் இருந்தும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

ஆகக்கூடிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா வரலாற்றில் இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

https://lankasara.com/news/record-breaking-womens-representation-in-sri-lankas-new-parliament/

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 16 people and text

தேர்தலில் தோல்வியுற்ற பிரபலங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.