Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 JAN, 2025 | 06:07 PM
image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் தொடர்பான உண்மைகளை உடன் வெளியிடுங்கள். இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்று வருகிறது. 

நாட்டில் அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதிகரித்த மதுபான பாவனையால் நேற்றும் பருத்தித்துறையில் வாள்வெட்டு, கத்திக் குத்து இடம்பெற்றுள்ளன. 

மன்னாரில் இன்று நீதிமன்றின் முன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான நிலை நாட்டுக்கு நல்லதல்ல.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்த காலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

இலஞ்சத்தை ஒழிப்போம், மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை. இவர்களும் இலஞ்சத்துக்கு துணை போனவர்களாகத்தான் பார்க்க முடியும். நாம் சவால் விடுகிறோம், முடிந்தால் மதுபானசாலைகளுக்கான அனுமதி தொடர்பான உண்மைகளை உடன் வெளியிடுங்கள். இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான். 

இலங்கை விடயம் சம்பந்தமாக தி.மு.க கனிமொழியை சந்தித்து கலந்துரையாடினோம்.  மத்திய அரசில் தமிழ் மக்கள் தொடர்பில் கரிசனை குறைந்துள்ளது.  

இலங்கை தமிழர்கள் தீர்வு விடயத்தில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்துக்கு மூன்று ஆண்டுகள் தேவை என்று கூறுகிறது. அவ்வாறு தேவையில்லை. ஏற்கனவே இணங்கிக்கொண்ட விடயம். எனவே இவ்வளவு காலம் தேவையில்லை. காலத்தை இழுத்தடிப்பது அதை இல்லாமல் செய்வதற்கான ஒரு திட்டம்.

தமிழ் அரசு தலைமை தொடர்பிலும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ச.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் பேச வருகிற விடயம் மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதி மத்திய குழு கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம் என்று சுமந்திரன் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/204001

  • கருத்துக்கள உறவுகள்

பார் குறூப் ஸ்டார்ட்பண்ணப்போகுதுகள்!😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்த காலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

large.IMG_8020.jpeg.0adbdf4d59c3930c5b1f

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் இன்னும் பொறுக்க முடியாது, நான் பாராளமன்றம் போகவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, RishiK said:

என்னால் இன்னும் பொறுக்க முடியாது, நான் பாராளமன்றம் போகவேண்டும். 

கொஞ்சம் பொறுங்கோ இப்ப தான் ஆள் தனக்குத் தெரிஞ்ச மொழி பேசிவிட்டு வந்திருக்கு. டாஸ்மாக் லைசன்ஸ் கூட எடுத்துத் தருவார்!😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

கொஞ்சம் பொறுங்கோ இப்ப தான் ஆள் தனக்குத் தெரிஞ்ச மொழி பேசிவிட்டு வந்திருக்கு. டாஸ்மாக் லைசன்ஸ் கூட எடுத்துத் தருவார்!😂

இதுக்குத்தான்..சிறிக்கு விமான நிலையத்தில்..தடுக்குப்பட வைச்சிட்டு ..முதல் பிளைட் எடுத்தவையோ🙃

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேலும் காத்து கொண்டு இருப்பது அனுரா அரசாங்கத்தின் பலவீனமே முடிந்தால் மகிந்தா ஐய்யா விடம் கடம் பாய்கிரறது அப்ப நம்புகிரம் 😀

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஓநாய் மக்களுக்காகவா அழுகிறது? சிறியரை கட்சியை விட்டு விரட்டுவதற்கு வழிதேடுகிறார். கட்சிக்காக மக்களில்லை, மக்களுக்காகவே கட்சி. மதுபானசாலை விவகாரத்தை தூக்கிப்பிடித்து, தான் புனிதன் என்பது போல் எங்கள் கைகள் சுத்தம் என்று சொல்லி தொண்டை கிழிய பிரச்சாரம் செய்தார். விழுந்தது சிறிதரனுக்கு வாக்கு. இன்னும் உணராமல் கத்துகிறார் என்றால் இவரின் அறிவை வியக்காமல் இருக்க முடியவில்லை. இவர் சிறியரை விழுத்த எடுக்கும் ஒவ்வொரு படியும், இவரை இன்னும் தாழ்த்திக்கொண்டு போகும். சிறியர் இவர் எடுக்கும் படியால் மேல்  ஏறி இவருக்கு முன்னுக்கு போய் விடுவார். 

எல்லோருக்கும் தெரியும் தான் மக்களால் நிராகரிக்கப்பட்ட புழுக்கத்தில் புலம்புகிறாரென்று. 

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்!!!

  • கருத்துக்கள உறவுகள்

மேலே சொன்னத்தில், சொன்னது சுமந்திரன் என்பதை தவிர வேறு எந்த பிழையும் இல்லை.🤣

தாம் உத்தமர்கள், ஊழல் கறை படியாதவர் என என் பி பி ஆட்சிக்கு வந்து இத்தனை மாதம் ஆகிறது - வெறுமனே பார் லைசன்ஸ் பெற்றவர் விபரம் மட்டுமே வெளிவந்துள்ளது.

உடந்தையாக இருந்த சிபாரிசு செய்த அரசியல்வாதிகள் பெயரை வெளியிட ஏன் தயக்கம்?

அண்டர் த டேபிள் டீலிங்?

இங்கே சுமனை அடிப்பதாக போக்கு காட்டியபடி, சிறியும் அவரது அடிபொடிகளும், அனுரா காவடிகளும் ஒரே நேர்கோட்டில் வருவது புலனாகிறது.

சிறியை காப்பாற்ற தமிழர் உரிமையை விலையாக கேட்கிறதா என் பி பி?

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சிறியை காப்பாற்ற தமிழர் உரிமையை விலையாக கேட்கிறதா என் பி பி?

அப்படியெல்லாம் நேரடியாக நெஞ்சில் சுடுவது போல் கேட்கக்கூடாது. இப்படிக் கேட்டால் பள்ளிக்கூட வாத்தியாரின் ரசிகர் குஞ்சுகளாம் தீவிர தமிழ் தேசியவாதிகளின் திடீர் மாரடைப்புக்கு நீங்கள் காரணமாகி விடுவீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2025 at 06:00, ஏராளன் said:

இலஞ்சத்தை ஒழிப்போம், மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை. இவர்களும் இலஞ்சத்துக்கு துணை போனவர்களாகத்தான் பார்க்க முடியும். நாம் சவால் விடுகிறோம், முடிந்தால் மதுபானசாலைகளுக்கான அனுமதி தொடர்பான உண்மைகளை உடன் வெளியிடுங்கள். இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான். 

இதை ஏன் ரணிலிடம் கேட்கக் கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் தொடர்ந்து இதையே தூக்கி கொண்டு திரிவதை பார்த்தால் ஏதோ இருக்கிறது.

ஆனால் தன்னை தெரிவு செய்த மக்கள் பிரச்சினைகளுக்கு கூட இந்தளவுக்கு காவியதோ தேடியதோ கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இந்தாள் தொடர்ந்து இதையே தூக்கி கொண்டு திரிவதை பார்த்தால் ஏதோ இருக்கிறது.

ஆனால் தன்னை தெரிவு செய்த மக்கள் பிரச்சினைகளுக்கு கூட இந்தளவுக்கு காவியதோ தேடியதோ கிடையாது.

இந்த பாரில் இருக்கும் ஆர்வம் தமிழ் மக்களின் பிரச்சனையில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த மாட்டுப்பட்டாலும் சிறியரை ஊழலில் சிக்கவைக்க முடியாது அவ்வளவு தொழில் சுத்தம், அது சுமத்திரனுக்கு தெரியாமல் இருக்காது, இருந்தாலும் ஏன் இப்படி அடிக்கடி மதுபான சாலைகளுக்கான அனுமதி விசாரணை வேணும் என கோருகிறார்?

 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ஈழப்பிரியன் said:

இதை ஏன் ரணிலிடம் கேட்கக் கூடாது?

அதானே..குடுத்தவர் அவர்..கூடநின்று குடுபித்தவர்  இவர்...பிறகேன் அனுரவை இழுக்க வேண்டும்..கனிமொழியோட கதைத்தது..கண்ண கட்டுதோ

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த பாரில் இருக்கும் ஆர்வம் தமிழ் மக்களின் பிரச்சனையில் இல்லை.

அதில் இருப்பது குழி பறிப்பு மட்டுமே. 

இதே வேகத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு ஆதாரங்களை தேடி இருந்தால் இன்று இந்த நிலையில் இவரை தமிழ் மக்கள் விட்டிருக்க மாட்டார்கள்.  

அதைவிடுத்து இன்றும் ஆதாரம் இல்லை ஆதாரம் காணாது என்றபடி. ஆனால் ஒரு ஆதாரத்தையாவது இந்த பதவிக்காலத்தில் சேர்த்ததாக இதுவரை சொல்லவில்லை செய்யவில்லை சேர்க்கவில்லை.

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இதை ஏன் ரணிலிடம் கேட்கக் கூடாது?

ரணில் இப்போ ஆட்சியில் இல்லை.

தவிர அவர் செய்த இலஞ்சத்தை வெளிகொணரும்படி அவரையே கேட்டு என்ன பயன்.

3 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த பாரில் இருக்கும் ஆர்வம் தமிழ் மக்களின் பிரச்சனையில் இல்லை.

பாரும் தமிழ் மக்கள் பிரச்சனைதான்.

2 hours ago, alvayan said:

அதானே..குடுத்தவர் அவர்..கூடநின்று குடுபித்தவர்  இவர்...பிறகேன் அனுரவை இழுக்க வேண்டும்..கனிமொழியோட கதைத்தது..கண்ண கட்டுதோ

சுமந்திரன் மீதுள்ள கடுப்பில், எமது தலையில் நாமே மண்ணை வாரி கொட்ட கூடாது.

யார் கேட்டாலும், டக்ளசே கேட்டாலும் -பார் உரிமை பற்றிய கேள்வி நியாயமானது, மிக தேவையானது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

கனிமொழியோட கதைத்தது..கண்ண கட்டுதோ

இந்தியாவில் ஸ்ராலினோடு நின்று சுயபடம் எடுத்து முகநூலில் விளம்பரம் செய்தது வெறும் புலுடா. அங்கு விருந்தினர்களாக வந்தவர்களை சுற்றி, அவர்களுக்கு வாழ்த்துச்சொல்லி கொண்டுவரும்போது, படம் எடுக்க விருபியவர்களின் தொலைபேசியை வாங்கி அவர்களோடு  சேர்த்து படம் எடுத்து ஸ்ராலினே கொடுத்தாராம். அங்கு வந்திருந்த அனைவருமே அவரோடு நின்று சுயபடம் எடுத்துக்கொண்டார்களாம். படம் எடுத்தால்; இவர்களை அழைத்து கதைத்தார் என்று பொருள் இல்லை. இதிலிருந்து முன்பு வெளிநாட்டு தூதுவர்களோடு நின்று எடுத்து வெளிவந்த படங்களும், அதுசார்ந்த செய்திகளும், விளக்கங்களும் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன. இதற்கான, பதில் அனுராவோடு படம்  எடுத்து விளம்பரம் செய்த   போதே கொடுக்கப்பட்டு விட்டது. இனிவருங்காலத்தில், இவர் வெளியிடும் பிரமுகர் படங்கள், அறிக்கைகள், செய்திகள் இவரின் மதிப்பை கூட்டப்போவதில்லை. தனது  தவறுகளையும்  குழிபறிப்புகளையும் மறைப்பதற்கு இவ்வாறான பிரச்சனைகளை ஊதிப்பெருபிப்பதை தவிர இவருக்கு வேறு வேலையில்லை. மதுபான சாலைகளை மூடுங்கள் என்று கேட்டால்; அது நிஞாயம். அதைவிட்டு, ஆட்களை வெளிப்படுத்துங்கள் என்று அடம் பிடிப்பது; இவரின் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இவரே வெளிப்படுத்திவிட்டு, இப்போ தனது இந்திய பயணம், குழிபறிப்பு பற்றிய  கேள்வியை தவிர்ப்பதற்காக பயன்படுத்தும் சவால் இது. தான் தோற்ற பின்னும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இப்படி முட்டாளாக, மக்களை முட்டாள்களாக்க செயற்படுகின்றாரே. சிறியர் தன்னை தெரிந்தெடுத்த மக்களுக்காக  அதிக சேவை செய்து   மக்களின் பாராட்டைபெற வேண்டும். இப்போது சுமந்திரனுக்கு உள்ள ஒரே சவால் சிறிதரன் மட்டுமே. அவரை விலக்கி விட்டால் தான் நினைத்தது போல், நீதிமன்ற செயற்பாடுகளை தான்நினைத்ததுபோல் மீளப்பெற்று, சர்வாதிகாரியாக செயற்படலாமென நினைக்கிறார். ஆனால் சிறிதரனின் பொறுமை, இவரை பைத்திய நிலைக்கு இட்டுச்செல்கிறது. இவர் ரொம்ப அவமானப்படுத்தப்படப்போகிறார். இதோடு தனது ஆட்டதை முடித்து ஒதுங்கிக்கொள்வது இவருக்கு நல்லது! 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

ரணில் இப்போ ஆட்சியில் இல்லை.

 

யார் கேட்டாலும், டக்ளசே கேட்டாலும் -பார் உரிமை பற்றிய கேள்வி நியாயமானது, மிக தேவையானது.

இந்த லிஸ்டு வருவதில்  எனக்கும் விருப்பம்..என்னுடைய கேள்வி என்னவென்றால்..ரணில் கொடுத்தவர்..

இவர் அவருடன் கூட இருந்து வாங்கிகொடுத்தவர்..இவருக்கு  தெரியும் ... இவர் ஏன் இப்ப பலூன் ஊதவேண்டும் என்பதே

  • கருத்துக்கள உறவுகள்

மக்களிடம் இழந்துபோன தன் மதிப்பை  இதன் வழியாக உயர்த்தலாமென நினைக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் ஒன்றை உணர மறுக்கிறார், சிறிதரனை பார் சிறியர் என்று பலகாலமாக பேச்சு அடிபடுகிறது, அவரை பெரும்பாலான மக்கள் அழைப்பதும் அப்படியே. இருந்தும் தேர்தல் காலத்தில் உச்சஸ்தாயில் கத்தி வெளிப்படுத்தினவரும் இவர்தான். ஆனால் மக்கள் அவரையே தம் பிரதிநிதியாக தெரிந்தெடுத்துள்ளனர். இவரை நிராகரித்து மக்கள் சொல்லும் செய்தி; இதைவிட பெரிய, மன்னிக்க முடியாத துரோகி சுமந்திரன் என்பதை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். அது அவருக்கு விளங்கவில்லை, அவ்வளவு பதவியாசை, அதிகார வெறி அறிவை மயக்கி வைத்திருக்கிறது. அது தெளிய வேண்டுமானால்: மக்கள் இவரை சிறப்பு விருந்தினராகவோ, விருந்தினராகவோ எங்கும் அழைக்கக்கூடாது, ஊடகங்கள் இவரை பேட்டியெடுப்பதை தவிர்க்க வேண்டும், நீதிமன்றம் இவர் தொடுத்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்போது; கட்சியை முடக்கி, செயற்படாமல் தடுத்ததற்காக இவரை எச்சரிக்க வேண்டும். அப்போது கொஞ்சம் சுய நினைவு வர வாய்ப்புண்டு.     

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

அதில் இருப்பது குழி பறிப்பு மட்டுமே. 

இதே வேகத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு ஆதாரங்களை தேடி இருந்தால் இன்று இந்த நிலையில் இவரை தமிழ் மக்கள் விட்டிருக்க மாட்டார்கள்.  

அதைவிடுத்து இன்றும் ஆதாரம் இல்லை ஆதாரம் காணாது என்றபடி. ஆனால் ஒரு ஆதாரத்தையாவது இந்த பதவிக்காலத்தில் சேர்த்ததாக இதுவரை சொல்லவில்லை செய்யவில்லை சேர்க்கவில்லை.

முள்ளிவாய்க்காலில் தப்பிப் பிழைத்து வந்த மக்களுக்குச் செய்த துரோகம்தான் இந்த Bar License. 

 

  • கருத்துக்கள உறவுகள்

யார் கொடுத்தால் என்ன யார் வாங்கினால் என்ன எல்லா பார்களையும் ஒட்டு மொத்தமாக இழுத்து முடாமல் விட்டால் சரி.😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

இவர் ஏன் இப்ப பலூன் ஊதவேண்டும் என்பதே

இவர் தன் சொந்த அரசியல் லாபத்துக்காக பலூன் ஊதுகிறார். அது வெள்ளிடமலை.

ஆனால்…இது ஊதப்படவேண்டிய பலூன்.

 

6 hours ago, சுவைப்பிரியன் said:

யார் கொடுத்தால் என்ன யார் வாங்கினால் என்ன எல்லா பார்களையும் ஒட்டு மொத்தமாக இழுத்து முடாமல் விட்டால் சரி.😂

🤣 ஒரு குடிமகனுக்குரிய நியாயமான கவலை.

அப்படி பூட்டினால்  சட்டென்று பிளைட்டை பிடித்து டாஸ்மாக்கில் ஏத்தி கொண்டு வரவேண்டியதுதான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

இந்தாள் தொடர்ந்து இதையே தூக்கி கொண்டு திரிவதை பார்த்தால் ஏதோ இருக்கிறது.

ஆனால் தன்னை தெரிவு செய்த மக்கள் பிரச்சினைகளுக்கு கூட இந்தளவுக்கு காவியதோ தேடியதோ கிடையாது.

அவர் இந்த தோல்வியை எதிர்பார்க்கவில்லை சிங்களம் எப்படியும் சுத்து மாத்து பண்ணி தன்னை வெல்ல வைத்து விடும் என்று கடைசி வரை நம்பி இருந்தார் ஆனால் தமிழ் மக்களின் முழு ஆதரவை இழந்த இவருக்கு உதவி செய்வதால் தமது அரசியலுக்கு ஆபத்து என்று அனுரா தரப்பு புரிந்து வைத்து இருக்கு அதனால் தமிழ் சிங்கள தரப்புஇரண்டு பக்கமும் கைவிடப்பட்ட அரசியல் அனாதையாகி விட்டார் கடைசியில் ஸ்டாலினின் செல்பியும் ஊத்தி கொண்டு விட்டது ஒரு இன அழிப்பை இல்லை என்று அவரின் சுத்து மாத்துகளால் நிறுவலாம் ஆனால் அந்த உண்மையிலே அழிந்து போன ஆத்மாக்கள் மன்னிக்க மாட்டார்கள் காலம் ஒரு பாட சாலை போன்றது யராவது மகிந்த குடும்பம் சிங்களவர்களால் திரத்தபடும் என்று 2௦௦9களில் சொன்னால் நம்பி இருப்பார்களா ?

அதே போன்று இந்த சுத்து மாத்து சுமத்திரனின் கடைசி கால வாழ்க்கையும் இருக்கும் .

Edited by பெருமாள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.