Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூனைக்கு அனுமதி; எனக்கில்லையா? பாடகர் ஜேசுதாஸ் ஆதங்கம்மதத்தை காரணம் காட்டி, கடம்புழா தேவி கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருவனந்தபுரம்: "மதத்தை காரணம் காட்டி, கடம்புழா தேவி கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது மிகவும் வருத்தமாக உள்ளது," என பிரபல பாடகர் ஜேசுதாஸ் கூறினார்.

திருவனந்தபுரத்தில் உள்ள இசைக் கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் பிரபல பாடகர் ஜேசுதாஸ் பேசியதாவது:கேரளா, மலப்புரம் மாவட்டம் கடம்புழாவில் உள்ள தேவி கோவிலில் வழிபாடு நடத்த வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். இதை நிறைவேற்றுவதற்காக சமீபத்தில் கடம்புழா கோவிலுக்கு சென்றிருந்தேன். ஆனால், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவன் என்பதற்காக என்னை கோவிலுக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாக அதிகாரிகள் மறுத்து விட்டனர். அங்குள்ள எலி, பூனை போன்றவை கூட கடவுளுக்கு அருகில் செல்கின்றன. ஆனால், நான் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை.

மதத்தை காரணம் காட்டி, கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்தது, மிகவும் வருத்தம் அளிக்கிறது. கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகா கோவில், சபரிமலை ஆகியவற்றுக்கு சென்றுள்ளேன். அங்கு எனக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. கடம்புழாவில் அனுமதி மறுத்தது ஏமாற்றம் அளிக்கிறது.இவ்வாறு ஜேசுதாஸ் கூறினார்.இது பற்றி கடம்புழா தேவி கோவில் நிர்வாக அதிகாரி நாராயண குட்டி கூறியதாவது:கோவிலுக்கு வழிபாடு நடத்த வருவதாக வேறு ஒருவர் மூலம் எங்களுக்கு தகவல் ஜேசுதாஸ் தெரிவித்திருந்தார். ஆனால், இந்து மதத்தை சேராத ஒருவர் கோவிலுக்குள் நுழைய விதி முறைகள் தடையாக இருப்பதாக அவருக்கு முன் கூட்டியே தெரிவித்திருந்தோம். அவர் ஏமாற்றம் அடையக் கூடாது அந்த ஏற்பாடு. இருந்தாலும், ஜேசுதாஸ் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது, அவருக்கு மரியாதைக் குறைவு ஏற்படும் வகையிலான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. அவரை அன்புடன் வரவேற்றோம். கோவிலுக்குள் நுழைய சட்ட விதிகள் இடம் தரவில்லை என்பதை அவரிடம் எடுத்துக் கூறினோம். அதை அவர் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார். இது போன்ற சம்பவம், குருவாயூரிலும் தனக்கு ஏற்பட்டதாக அவர் கூறினார். நாங்களும் ஜேசுதாசின் ரசிகர்கள் தான். அதற்காக, கோவிலுக்கு உரிய விதிமுறைகளை மீற முடியாது.இவ்வாறு நாராயண குட்டி கூறினார்.

கடம்புழா கோவில் வட்டாரங்கள் கூறுகையில்,`கோவிலில் பல்வேறு வழிபாடுகளை நடத்துவதற்கு உரிய கட்டணங்களை ஜேசுதாஸ் செலுத்தியிருந்தார். குறிப்பாக தடைகள் நீங்குவதற்காக நடத்தப்படும் `முட்டு அறுங்கல் வழிபாடு' நடத்துவதற்கு கட்டணம் செலுத்தியிருந்தார். பிற மதத்தை சேர்ந்தோரை, வழிபாடு நடத்த அனுமதிக்கும் இடம் வரை, ஜேசுதாசுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோவிலை விட்டு கிளம்புவதற்கு முன்பாக, கைகளை கூப்பி பிரார்த்தித்து விட்டுச் சென்றார்,' என்றனர்.

கடந்த ஆண்டு குருவாயூர் கோவிலிலும், ஜேசுதாசுக்கு இது போன்ற கசப்பான அனுபவம் ஏற்பட்டது. கேரள தேவசம் போர்டு அமைச்சர் சுதாகரன் நாயரும், இந்து மதத்தை சேர்ந்த சில அமைப்புகளும், ஜேசுதாசுக்கு கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தின. தற்போது கடம்புழாவிலும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியான செயற்பாடுகளால் கேவலப்படுவது ஜேசுதாஸ் அல்ல. இந்துமதம் தான் என்பதை கோவில் நிர்வாகத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். கோவிலில் வழிபாடு நடத்த ஒருவர் விரும்பினால் அவர் எந்த மதம் சார்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அவரை வழிபட விடுவதே மதத்திற்கும் மதம் சார்ந்தவர்களுக்கும் பெருமையாக அமையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம். உண்மை தான் வசம்பு

இந்துக்கள் என்று பட்டியல் இடப்பட்டுள்ள கோடிக் கணக்கான மக்களுக்கே இன்னமும் எத்தiனேயோ இந்துக் கோயில்களில் வழிபாடு செய்ய அனுமதி கிடைக்கவில்லை.

முதலில் தன்னுடைய மதத்தவர்கள் என்று உரிமை கோருபவர்களுக்கு இந்து மதம் கோயில் கதவுகளை திறந்து விடட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் .....ஒருதரம் :lol: சபேசன்..... இரண்டுதரம் :wub::lol: சபேசன்....... மூண்டுதரம் :):):)

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் .....ஒருதரம் :lol: சபேசன்..... இரண்டுதரம் :wub::lol: சபேசன்....... மூண்டுதரம் :):):)

சபேசனை ஏலமா போடுறிங்க சாத்திரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவிலுள்ள இந்துமதவழிபாட்டு தலங்களின் நடைமுறைகள் மற்றும் அவர்களின் கொள்கைகள் யாவரும் அறிந்ததே.அவர்களின் இப்படியான நடவடிக்கைகளை வைத்து ஒட்டுமொத்த இந்துகோயில்களிலும் இப்படித்தான் நடக்கின்றது என கணிப்பிட முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரைத்த மாவை அரைக்க தொடங்குவோமா?

இந்தியாவை விட்டுத்தள்ளுங்க....

ஏன்...தமிழ் நாட்டில தமிழுக்கே இடமில்லை :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவை விட்டுத்தள்ளுங்க....

ஏன்...தமிழ் நாட்டில தமிழுக்கே இடமில்லை :lol:

இவர்கள்தான் தமிழ்ப்புது வருடம் எப்போது வரவேண்டுமென்பதை நிர்ணயிப்பார்களாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரைத்த மாவை அரைக்க தொடங்குவோமா?

இல்லை :lol: இந்த மா இன்னும் நல்லவடிவாய் அரைபடேல்லை இன்னுமொருக்கால் திருப்பி அரைச்சுப்பாப்பம் :wub:

எல்லாத்துக்கும் இந்து சமயம்னு தூக்கிப் பிடிக்காதையுங்கோ.. பிறப்பால் கத்தோலிக்கராகப் பிறந்தாலும்.. அவர் கத்தோலிக்க தேவாலயத்தில் ஞானஸ்நானம் எடுக்காவிட்டால்.. அவரது வீட்டில் நடக்கும் வைபவங்களுக்கான தேவாலயக் கிரியைகளைச் செய்ய எந்த ஒரு கத்தோலிக்க மதகுருவுமே முன்வர மாட்டார்கள்.. இவ்வாறு எல்லா மதங்களிலுமே கட்டுப்பாடுகள் உண்டு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவருக்கு கிறிஸ்தவ தேவாலயம் செல்வதுக்குக்கூட திருச்சபையால் அனுமதி மறுக்கப்பட்டது.

இவரின் பிள்ளைக்குக்கூட ஞானஸ்நானம் வழங்க அத் திருச்சபை மறுத்து விட்டது.

காரணம் இவர் பிறமத பக்திபாடல்களை பாடியபடியால் தான் என் கூறப்பட்டது.

Edited by குமாரசாமி

:(கு.சா சும்மா டூப் தானே விடுறீங்க..................... :(:(:(:(
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:(கு.சா சும்மா டூப் தானே விடுறீங்க..................... :(:(:(:(

இல்லை இது உண்மை விசாரித்துப்பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு கிறிஸ்தவ தேவாலயம் செல்வதுக்குக்கூட திருச்சபையால் அனுமதி மறுக்கப்பட்டது.

இவரின் பிள்ளைக்குக்கூட ஞானஸ்நானம் வழங்க அத் திருச்சபை மறுத்து விட்டது.

காரணம் இவர் பிறமத பக்திபாடல்களை பாடியபடியால் தான் என் கூறப்பட்டது.

என்ன கு.சா, ஒரு பக்கம் காசு கொடுத்து மதம் மாத்துறாங்கள் எண்டு கத்துறாங்கள்.நீங்கள் என்னடாவெண்டால் இவர் விரும்பியும் சேர்க்க மாட்டம் எண்டு போட்டாங்கள் எண்டுறியள்? அப்ப அது பொய்யா இல்ல இது புருடாவா? அல்லது கத்தோலிக்க திருச்சபையும் சாதி பார்த்து ஆட்கள் சேர்க்கிற சிஸ்டம் கொண்டு வந்திட்டினமோ?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்துக்கும் இந்து சமயம்னு தூக்கிப் பிடிக்காதையுங்கோ.. பிறப்பால் கத்தோலிக்கராகப் பிறந்தாலும்.. அவர் கத்தோலிக்க தேவாலயத்தில் ஞானஸ்நானம் எடுக்காவிட்டால்.. அவரது வீட்டில் நடக்கும் வைபவங்களுக்கான தேவாலயக் கிரியைகளைச் செய்ய எந்த ஒரு கத்தோலிக்க மதகுருவுமே முன்வர மாட்டார்கள்.. இவ்வாறு எல்லா மதங்களிலுமே கட்டுப்பாடுகள் உண்டு..

சரி தான் சோலியன், ஞானஸ்நானம் எடுத்திரா விட்டால் வேறெந்த கிறிஸ்தவச் சடங்கும் செய்ய மாட்டார்கள். ஆனால் ஞானஸ்நானம் எடுக்காதவரும் ஆலயத்திற்குத் தடையின்றிச் செல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை விட்டுத்தள்ளுங்க....

ஏன்...தமிழ் நாட்டில தமிழுக்கே இடமில்லை :(

சில மாதங்களுக்கு முன்பு சிதம்பரம் கோவிலில் சிலர் தேவாரம் பாடிய போது அக்கோவில் நிர்வாகிகள் தேவாரம் பாடவிடாமல் செய்தார்கள். தமிழ்ப்பாடல்களான தேவாரத்தை சிதம்பரம் கோவிலில் பாடக்கூடாது என்று சொன்னதற்கு அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

நாம் ஈழவரா? தமிழரா? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் ஈழவரா? தமிழரா? unsure.gif

முதலில் மனிதர்கள்... :(

என்ன கு.சா, ஒரு பக்கம் காசு கொடுத்து மதம் மாத்துறாங்கள் எண்டு கத்துறாங்கள்.நீங்கள் என்னடாவெண்டால் இவர் விரும்பியும் சேர்க்க மாட்டம் எண்டு போட்டாங்கள் எண்டுறியள்? அப்ப அது பொய்யா இல்ல இது புருடாவா? அல்லது கத்தோலிக்க திருச்சபையும் சாதி பார்த்து ஆட்கள் சேர்க்கிற சிஸ்டம் கொண்டு வந்திட்டினமோ?

அட அறிவுக் கொழுந்துகள், இந்து சமயத்தில எப்பிடி பல பிரிவுகள் இருக்கோ அது போல தான்பா கிறிஸ்தவர்களிடமும் இருக்கும் இந்து சமயத்துக்துக்கெதிரான பௌத்தறிவு வாதிகள் ஓட என்றதால அது பற்றி அடிககடி கதை அடிபடுது பட் கிறிஸ்தவ மதத்தை பற்றி எல்லாம் பேசலாமே வெள்ளையள் எல்லாம் கிறிஸ்hயன் எல்லோ...

அதால அங்க எங்க அறிவு எல்லாம் சொல்லுபடியாகாது...

நாம் ஈழவரா? தமிழரா? :(

எம் குறைகளைக் கவனியாது, அடுத்தவர்களின் குறைகளை மட்டுமே ஆராய்ந்து கொண்டிருக்கும் ஈனத்தமிழர்.

  • கருத்துக்கள உறவுகள்

எம் குறைகளைக் கவனியாது, அடுத்தவர்களின் குறைகளை மட்டுமே ஆராய்ந்து கொண்டிருக்கும் ஈனத்தமிழர்.

:(:(:(:(

அட...அட....அட ஜேசுதாசே எவ்வளவு அமைதியா போயிட்டார் நம்ம யாழ்கள மெம்பர்ஸ் விடமாட்டீனம் போல இருக்கு :( ...அது எல்லாம் இருகட்டும் நான் கூட ஒரு பள்ளிவாசலிற்கு போனனான் போய் வாசலில தான் தெரியும் (கட்) பண்ணிணா தான் உள்ளுகுள்ள விடுவீனம் என்று :( ...பிறகு நான் தப்பினா காணும் என்று ஓடி வந்துட்டேன் என்றா பாருங்கோவேன்!! :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அட...அட....அட ஜேசுதாசே எவ்வளவு அமைதியா போயிட்டார் நம்ம யாழ்கள மெம்பர்ஸ் விடமாட்டீனம் போல இருக்கு :( ...அது எல்லாம் இருகட்டும் நான் கூட ஒரு பள்ளிவாசலிற்கு போனனான் போய் வாசலில தான் தெரியும் (கட்) பண்ணிணா தான் உள்ளுகுள்ள விடுவீனம் என்று :( ...பிறகு நான் தப்பினா காணும் என்று ஓடி வந்துட்டேன் என்றா பாருங்கோவேன்!! :(

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு.. அப்ப தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் எண்டு சொல்லுங்கோ..! :(

ஜம்மு.. அப்ப தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் எண்டு சொல்லுங்கோ..! :(

பின்னே டங்குவார் அண்ணா ஒரு கணம் உயிரே நின்று வந்தது என்றா பாருங்கோவேன்!! :(

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.