Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒதுங்கிக் கொள்கிறேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. ஏற்கனவே சொன்னது போல இக்களத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்கின்றேன். தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொள்ள விரும்புவர்கள் yarlthuyawan@hotmail.com என்பதூடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி

  • Replies 71
  • Views 9.6k
  • Created
  • Last Reply

என்னாச்சு திடீரென? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன், தனிப்பட்ட ரீதியில் விலகிக்கொள்கிறீர்களா? ***

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

அடுத்தவர்கள் விலகிக் கொள்வதாக அறிவித்தபோது அதை கேலியும், கிண்டலும் செய்த நீங்களே இன்று அதே முடிவிற்கு வந்திருப்பது துரதிஷ்டவிதமானது. ஆனாலும் உங்கள் முடிவை மீள்பரிசோதனை செய்வதே நல்லது.

இது தேவையற்றது என்று நினைக்கிறேன். உறக்கத்தில் கூட சண்டை போடும் மனிதர்கள் வாழும் உலகத்தில் முரண்பாடுகள் சகஜம் தான்.

வேண்டும் என்றே விதண்டாவாதம் செய்பவர்களின் கேள்விகளை தவிர்த்துவிடுங்கள். வாசகர்கள் புரிந்து கொள்வார்கள். எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வணக்கம் போக முதல் அடுத்ததாய் என்ன பெரிலை வருவீங்கள் எண்டும் சொல்லிட்டு போனால் நாங்களும் கஸ்ரப்படாமல் இருப்பம்

பகுத்தறிவு மிக்க முடிவு!

வாழ்த்துக்கள்! :rolleyes:

நன்றி வணக்கம் போக முதல் அடுத்ததாய் என்ன பெரிலை வருவீங்கள் எண்டும் சொல்லிட்டு போனால் நாங்களும் கஸ்ரப்படாமல் இருப்பம்

என்ன இருந்தாலும் எத்தினயோ பேரோட இணையத்தில பகிரங்கமா மல்லுப்பிடிச்ச, மல்லுப் பிடிக்கின்ற, மற்றும் மல்லுப் பிடிக்கப்போகும் சாத்திரி அண்ணை யாழில இருந்து தான் ஒதுங்கிக்கொள்ளுறன் எண்டு சொல்லாமல் இருக்கிறத நினைக்க எனக்கு பெருமையா இருக்கிது.

நான் ஒரு வருசம் சேர்ந்து... இதுவரை யாழைவிட்டு ஓட வெளிப்படையாக ஒரு தடவையும், மறைமுகமாக பல தடவைகளும் முயற்சி செய்து இருக்கிறன். சாத்திரி அண்ணை இப்ப மூண்டு வருசமா சுடலை வைரவர் மாதிரி யாழை விட்டு ஓடாமல் நிக்கிறார் எண்டால் அது பெருமைக்குரிய விசயமே... இல்லாட்டிக்கு சாத்திரி அண்ணை, நீங்கள் தான் மோகன் அண்ணையோ? ஹாஹா..

தூயவன்,

உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். போய் வேறு பெயரில் வர வேண்டாம். வந்தால் கண்டுபடித்து விடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் வளர்ந்து வரும் தற்பெருமையற்ற, விளம்பர நோக்கமற்ற, தாயக மற்றும் தமிழ் தேசியப் பற்றுள்ள ஒரு நல்ல கருத்தாளன்.

- - -

நாம் எமது கருத்தை முன் வைப்பதற்கு எவருக்கும் அஞ்சத் தேவையில்லை. யாழ் களத்தில் உள்ள சில பேருடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கு யாழ் களம் பொறுப்பாக முடியாது.

எனினும் உங்கள் தனிப்பட்ட காரணங்களை யாழுக்காக கொஞ்சம் மாற்றி அமைக்க முடியும் என்றால் அமைக்க கேட்டுக் கொள்கின்றேன்.

ஒரு வளர்ந்து வரும் இளம் கருத்தாளனை இழப்பது என்பது மனவருத்தத்துக்குரிய ஒன்று..! :rolleyes:

Edited by வலைஞன்
நீக்கப்பட்டுள்ளது.

தூ.... யவன்..!

நெடுக்கு சொல்லுறதை கேளுங்கோ... அதைதான் நானும் சொல்ல விரும்புகிறேன்...!!

எதையாவது உண்மைக்கு ஒவ்வாதவை நடக்கிறதா...?? அதை தீவிரமாக எதிர்க்க வேண்டும்...!

- - -

Edited by வலைஞன்
நீக்கப்பட்டுள்ளது

தற்பெருமையற்ற, விளம்பர நோக்கமற்ற, தாயக மற்றும் தமிழ் தேசியப் பற்றுள்ள..

அப்பிடி எண்டால் என்ன என்பதை விளக்கமாகக் கூறமுடியுமா நெடுக்காலபோவான்?

எனினும் உங்கள் தனிப்பட்ட காரணங்களை யாழுக்காக கொஞ்சம் மாற்றி அமைக்க முடியும் என்றால் அமைக்க கேட்டுக் கொள்கின்றேன்.

மாற்றி அமைக்கும் வேலைகளை நீங்கள் செய்யத் தேவையில்லை. நான் இப்ப என்ன சொல்ல வாறன் எண்டு கொஞ்சம் மேல கீழ பாத்து யோசிச்சால் விளங்கும்.. ஹாஹா.. :rolleyes:

ஒரு வளர்ந்து வரும் இளம் கருத்தாளனை இழப்பது என்பது மனவருத்தத்துக்குரிய ஒன்று..! :unsure:

ஏதோ யாழில எழுதினால்தான் கருத்தாளன் எண்டமாதிரி அல்லோ இருக்கிது உங்கட கதை? ஏன் தூயவன் தண்ட கருத்துக்கள தான் ஒரு புள்ளி நிறுவனத்தில சொல்ல ஏலாதோ?

  • கருத்துக்கள உறவுகள்

தற்பெருமையற்ற, விளம்பர நோக்கமற்ற, தாயக மற்றும் தமிழ் தேசியப் பற்றுள்ள..

என்னால் முடியும். ஆனால் அதற்கு இங்கு இடமில்லை..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி எண்டால் என்ன என்பதை விளக்கமாகக் கூறமுடியுமா நெடுக்காலபோவான்?

மாற்றி அமைக்கும் வேலைகளை நீங்கள் செய்யத் தேவையில்லை. நான் இப்ப என்ன சொல்ல வாறன் எண்டு கொஞ்சம் மேல கீழ பாத்து யோசிச்சால் விளங்கும்.. ஹாஹா.. :rolleyes:

ஏதோ யாழில எழுதினால்தான் கருத்தாளன் எண்டமாதிரி அல்லோ இருக்கிது உங்கட கதை? ஏன் தூயவன் தண்ட கருத்துக்கள தான் ஒரு புள்ளி நிறுவனத்தில சொல்ல ஏலாதோ?

சக கருத்தாளனா.. எனக்குரிய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். நான் அவருடன் கூட சில வாதங்களில் எதிர்வாதம் செய்திருக்கிறேன். அது வாதத்தோடு தலைப்போடு முடிந்துவிட்டவை. அவற்றை அதற்கு அப்பால் அவரும் காவவில்லை.. நானும் காவவில்லை. அது அவரின் கருத்தாளன் என்ற பண்பை எடுத்துக் காட்டுகிறது..

யாழில் எழுதினால் தான் கருத்தாளன் என்பதல்ல. யாழில் எழுதுவதாலும் கருத்தாளன் என்பதால் சொல்கிறேன். :unsure:

மனவுளைச்சலையோ...இல்லை கருத்துமுரண்பாட்டையோ.. எண்ணி நீங்கள் விலகத் தீர்மானித்தால் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள்.. இரண்டு நாள் கழிச்சு வந்தால் சரியாய்விடும்..

மனுசியோட புடுங்கல் எண்டால் விறாந்தேல படுக்கலாம் பாருங்கோ.. அதுக்கு போய் காசியில படுப்பன் எண்டால் வீடுமில்ல விறாந்தயுமில்ல.. என்ன நான் சொல்லுறது....

உலகத்தில பிடிக்காதவையெண்ட யாருமில்ல.. ஏதோ சில முரணாண கருத்துகள்.. பிழையான சம்பவங்களால ஏற்படக்கூடிய தப்பஅபிப்ராயங்கள் வெறுப்புகள்..

சண்டையில இருக்கிறவையோட...கூட்டணி போடற ஆட்கள்.. கூட்டணிகள் பெருக்க... பிரதான குழுக்கள்.. எதிரிக்குழுக்கள்..ஒட்டுக்குழ

ுக்கள் எண்டு ஒரே குழப்பம்தானே பாருங்கோ...

சந்தோசமா சமாளிச்சுக்கொண்டு எல்லாரும் ஒற்றுமையா யாழில எண்டாலும் இருப்பம் தயவு செய்து தூயவன்..துல்லியமா.. துணிவா எங்களோடேயே இருங்கோ...

பலபேர் பாக்கிற களமெண்டதால பல வரையறைகள்.. தேவை.. பொறுப்பானவர்கள் பல பேருப்பும் பல விசயத்திற்கும் பதில் சொல்ல வேணும்..

அது நேரம்..எழுதுறவை புண்பட்டாலும் வாசிக்கிறவை மனம் புண்படாமல் இருக்கவேண்டும்.. நாங்கள் எப்பயும் உணர்ச்சி பூர்வமா இருக்கிறப்போ முடிவெடுக்ககூடாது... அறிவுபூர்வமா முடிவெடுக்கோணும்..நீங்க எப்பயும் போல வாங்கோ சகோதரம்..

நான் இப்ப போயிட்டு வாறன் என்ன.

அவற்றை அதற்கு அப்பால் அவரும் காவவில்லை.. நானும் காவவில்லை.

அது என்ன நெடுக்காலபோவான் காவிறது, அதற்கு அப்பாலும் காவுறது?

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன நெடுக்காலபோவான் காவிறது, அதற்கு அப்பாலும் காவுறது?

ஒரு குழப்பகரமான சூழல் இங்கு நிலவுகிற இவ்வேளையில் இவற்றை கருத்துப்பகிர்வுக்கு உட்படுத்துவதால் எந்தப் பயனும் இல்லை என்று நினைக்கிறேன். அதனால் இவற்றுக்குப் பதிலிறுப்பதைத் தவிர்த்து நல்ல சகோதரத்துவம் இங்கு வளர எல்லோரும் ஒத்துழைக்க முயற்சிக்க வேண்டிக் கொள்கின்றேன்..! :rolleyes:

அன்பின் உறவுகளே இங்குதான் எனது முதல்பதிவுனுாடாக உறவுகளுடன் எனது உறவை ஆரம்பித்தேன். இப்பொது விடை பெறுவதற்கும் இந்த பகுதியையே தேர்வு செய்கின்றேன்.

***

நல்லது நெடுக்காலபோவான்.... மேல பாருங்கோ... இங்கும் ஒரு சகோதரம்.. ரெண்டு நாளைக்கு முன்னம் ஒதுங்கி உள்ளார். யாராவது குரல் கொடுத்தீர்களா? ஆனால் நான் குரல் கொடுத்து இருந்தேன்.

நான் ஏற்கனவே இதுபற்றி விளங்கி இருந்தமையால் தான் அண்மையில எனது புள்ளி நிறுவனத்தை ஆரம்பித்து இருந்தேன். யாழுக்கு வருவதும் வராதுவிடுவதும் தூயவனின் விருப்பம். ஆனால் என்னைமாதிரி ஒருபுள்ளி நிறுவனத்தை பக் அப்பாக வச்சுக்கொண்டு ஒதுங்குகின்றேன் என்று அறிவித்து இருந்தால் அது புத்திசாலித்தனமான செய்கையாக இருந்து இருக்கும்.

தூயவன் யாழுக்காக ஒரு காலக் கண்ணாடியையாவாது செய்து தராது ஒதுங்குவதை நினைக்கத்தான் எனக்கு கவலையாக இருக்கின்றது. (தூயவன் சும்மா பகிடிக்கு கோவிக்ககூடாது..)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நெடுக்காலபோவான்.... மேல பாருங்கோ... இங்கும் ஒரு சகோதரம்.. ரெண்டு நாளைக்கு முன்னம் ஒதுங்கி உள்ளார். யாராவது குரல் கொடுத்தீர்களா? ஆனால் நான் குரல் கொடுத்து இருந்தேன்.

நான் ஏற்கனவே இதுபற்றி விளங்கி இருந்தமையால் தான் அண்மையில எனது புள்ளி நிறுவனத்தை ஆரம்பித்து இருந்தேன். யாழுக்கு வருவதும் வராதுவிடுவதும் தூயவனின் விருப்பம். ஆனால் என்னைமாதிரி ஒருபுள்ளி நிறுவனத்தை பக் அப்பாக வச்சுக்கொண்டு ஒதுங்குகின்றேன் என்று அறிவித்து இருந்தால் அது புத்திசாலித்தனமான செய்கையாக இருந்து இருக்கும்.

தூயவன் யாழுக்காக ஒரு காலக் கண்ணாடியையாவாது செய்து தராது ஒதுங்குவதை நினைக்கத்தான் எனக்கு கவலையாக இருக்கின்றது. (தூயவன் சும்மா பகிடிக்கு கோவிக்ககூடாது..)

வன்னியனின் தலைப்பை பார்ப்பதற்கிடையில் அது தலைமறைவாகி விட்டது. அது தொடர்பாக நாம் எங்கும் கருத்தெழுத முடியாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ள நிலையில்.. அது தொடர்பாக எழுத முடியவில்லை என்பதே யதார்த்தம்.

தூயவனோ வன்னியனோ.. எவராகினும் இங்கிருக்கும் வரை எமது கருத்துக்கள உறவுகளே. அவர்கள் வெளியேறுவதை நான் தனிப்பட்ட வகையில் விரும்புவதில்லை. அவர்கள் போனால் போகலாம்.. இல்ல வேறு பெயரில் வரலாம் என்று அபிப்பிராயம் சொல்வதையும் நான் விரும்புவதில்லை. அவர்கள் தங்களின் கருத்துக்கள அடையாளத்துடன் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை.............. காரணம் மற்றையவர்களின் கருத்ததை வாசித்து அது விளங்கு முன்னமே பதில் எழுத துடிப்பவர் நீங்கள் அதற்கு ஆதாராம் உங்கள் கருத்துக்களே.

இருப்பினும் ஏன் இவ்வாறன ஒரு முடிவை எடுக்கவேண்டும் என்பது எனக்கு படவில்லை! எல்லோரிடமும் ஏதோ ஒரு குறைபாடு இருக்க்லாம் இது களத்தில் இருக்கும் மற்றைய உறவுகளால் நிவர்த்தி செய்யப்படலாம்...... அதற்கு நாம் களத்தில் உலவரவதுதானே ஓரே வழி. நான் இந்த களத்திற்கு வந்தபின்தான் எவ்வளவோ விடயங்களை அறிந்திருக்கிறேன். சில வேளைகளில் சிலருடன் கருத்துவிழங்காது முரண்பட்டும் இருக்கிறேன் பின்பு அவர்களின் பதில் விளங்கும்படியாக இருக்கும் பட்சத்தில் எனது தவறை உணர்ந்து மன்னிப்பும் கேட்டிருக்கிறேன்...... சிலவேளைகளில் சில இடங்களில் இந்த புரிந்துணர்வு இல்லாமலிருக்கலாம்.... அந்த அறிவு எனக்கு இன்னமும் வரவில்லை என்பதே அதன் பொருள்ளாகும். அது வரும் பட்சத்தில் அவர்களிடமும் எனது குறையை சொல்ல நான் காத்திருக்கிறேன்!

நீங்கள் களத்தில் இருந்து விலகுவது ஒரு ...... (சில முரண்பாடு காரணமாக) நல்ல முடிவாக தெரியவில்லை!

உற்சாகத்தை இழப்பதும் ஒரு வகையில் மரணம் போலதான்

தோற்கடிக்கபடுவதற்கு முன்பே தோல்வியை ஒப்புகொள்வது போன்றது அது!

அதை ஏன் உங்களை போன்ற ஒரு இளைஞன் செய்யவேண்டும் என்பது எனக்கு புரியவில்லை?

தூயவன் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தூயவன்...

ஏன் இந்த முடிவு? உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ தெரியாது... முன்னர் சில கருத்துகள் மற்றும் கருத்தாளர்களுடைய விதண்டாவாதத்திற்கு பதிலளித்து ஏன்உங்களின் நேரத்தை விரையம் பண்ணுகிறீர்கள் என நான் கேட்டதற்கு, "உண்மைகள் புதைந்து விடக் கூடாது" என்பதற்காக பதில் அளிப்பதாக கூறியிருந்தீர்கள். இப்போது அதைத்தானே செய்ய முனைகிறீர்கள். நெடுக்ஸ் கூறியது போல நானும் உங்களை ஒரு நல்ல கருத்தாளனாகத்தான் பார்க்கிறேன். முடிந்தால் உங்கள் முடிவை மாற்றவும்.

நன்றி,

சபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் தூயவன். நாம் எல்லோரும் முகம் தெரியாத உறவுகள் என்பதனை மறக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனோ வன்னியனோ.. எவராகினும் இங்கிருக்கும் வரை எமது கருத்துக்கள உறவுகளே. அவர்கள் வெளியேறுவதை நான் தனிப்பட்ட வகையில் விரும்புவதில்லை. அவர்கள் போனால் போகலாம்.. இல்ல வேறு பெயரில் வரலாம் என்று அபிப்பிராயம் சொல்வதையும் நான் விரும்புவதில்லை. அவர்கள் தங்களின் கருத்துக்கள அடையாளத்துடன் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

எனது விருப்பமும் கூட . வன்னியனோ அல்லது தூயவனோ உங்கள் முடிவுகளை மாற்றி யாழில் தொடர்ந்து இணைந்திருங்கள்.***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. ஏற்கனவே சொன்னது போல இக்களத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்கின்றேன். தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொள்ள விரும்புவர்கள் yarlthuyawan@hotmail.com என்பதூடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி

தூயவன் ஏனிந்த முடிவு? தொடர்ந்து யாழ்களத்தில் உங்களின் பங்களிப்பை செய்யவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.