Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடியார்களே... நான் பசியாய் இருக்கிறேன், எனக்கு சாப்பாடு தாருங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1.jpg

2.jpg

  • Replies 125
  • Views 11.9k
  • Created
  • Last Reply

அருமையான கருத்து... :wub: இதன் கருத்து கனருக்கு விளங்காது.... விளங்கியும் விளங்காததுபோல் இருப்பர்.... :) அருமையான தேங்காய் அடிதான்... அதுவும் புலத்து தமிழுக்கு.... முக்கியமாக பிரான்ஸ் ஈழதமிழருக்கோ... இந்த (தேங்கா)அடி... :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனைக்குட்டியாரே இது உங்களுடைய முயற்சியா? பாராட்டுக்கள்

மக்கள்மனங்களை இலகுவில் தொடக்கூடியதால் உள்ளது.

என்ன ஒரு குறைபாடுதான் உண்டு, உங்கள் விண்ணப்பம் கடவுள் பக்தர்களை நோக்கி இருக்கிறது,

அது இரக்கம் குறைந்தவர்களின் கூட்டம் அல்லவா?

தேங்காய் உடைப்பதும், அரிச்சனைகள் செயவதும் சொந்தநலனின் பொருட்டே செயபவர்கள்தானே அவர்கள்!

Edited by தேவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது யாருடைய படைப்போதெரியவில்லை?இருந்தாலும் பலருக்கு உறைக்கிற மாதிரி சொல்லப்பட்டுள்ளது.இப்படியான முயற்சிகள் வரவேற்கத்தக்கதே

இருப்பினும் தியானத்தில் இருக்கும் எமது பக்த அடியார்களுக்கு இந்தச்செய்தி ஒருகாதால் நுழைந்து மறுகாதால் எவ்வித தங்குதடையுமின்றி வெளியேறிவிடும்.

இந்த விளம்பரம் தமிழ்நாதத்திலும் வெளிவந்திருந்தது http://www.tamilnaatham.com/advert/2008/aug/20080829/KOVIL/

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்து . கோயில் வாசலில் போடால் நன்று. யாழ் களத்தில் இன்னும் பங்களிப்பு செய்யாதவர்கள் உண்டா? அவர்களுக்கு உறைக்கும் நல்ல கருத்து ..

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தேங்காயை வெளிநாட்டில் டொலர் , பவுண்ஸ் என்று காசு கொடுத்து வாங்கி தெருவில் போட்டு அடிப்பதை அந்த கடவுள் கூட விரும்பமாட்டார் .

அருமை! அருமை!! அருமை!!!

மணியடிப்பதால் மட்டும் மருந்து கிடைத்து விடும் என நினைக்கும் மரமண்டைகளுக்கும்

மரத்துப் போய் விட்ட சில ஜென்மங்களுக்கும் இதை பார்த்த பின்பாவது உறைக்கட்டும்

நாடே பற்றி எரியும் போது அதில் கொஞ்சம் நெருப்பை எடுத்து கடவுளுக்கு கற்பூர ஆரத்தியாக்கி சப்பரமும் இழுத்தால், நீங்கள் இழுக்கும் சப்பரத்தை அந்த இறைவனே குப்புற புரட்டி விடுவான் கூர்மதி கெட்டவர்களே!!!

அத்தோடு உங்கள் சந்ததிகளின் வாழ்வும் குப்புற புரண்டுவிடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்!!!

மாபெரும் வீரராய் ஆகத்தான் எங்களால் முடியவில்லை, ஓடிவந்து விட்டோம்.

குறைந்த பட்சம் தாயகத்தின் மானம் காக்கவும்

இந்த பிஞ்சுகளின் பசிப்பிணி போக்கவுமாவது உதவுவோம்.

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

தெரு தேங்காயை பிள்ளையாருக்கு அடிக்கிறான் என்று ஊரில சொல்லுவார்கள்....

புலத்தில தெரு தேங்காயை(கோயில் பணம் பல ஆயிரம் டொலர்)எடுத்து ஜயருக்கு அடிக்கிறாங்கள்(அன்பாளிப்பா கொடுகிறாங்கள்)...

பசிக்கிறவனுக்கு கொடுப்பார்களா?அந்த முருகணுக்கு தான் வெளிச்சம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனைக்குட்டியாரே இது உங்களுடைய முயற்சியா? பாராட்டுக்கள்

மக்கள்மனங்களை இலகுவில் தொடக்கூடியதால் உள்ளது.

என்ன ஒரு குறைபாடுதான் உண்டு, உங்கள் விண்ணப்பம் கடவுள் பக்தர்களை நோக்கி இருக்கிறது,

அது இரக்கம் குறைந்தவர்களின் கூட்டம் அல்லவா?

தேங்காய் உடைப்பதும், அரிச்சனைகள் செயவதும் சொந்தநலனின் பொருட்டே செயபவர்கள்தானே அவர்கள்!

இல்லயண்ணா........... நான் உத செய்யல..... உது இங்க பிரான்சில தமிழ்க் கடையள் கூட இருக்கிற லா சப்பலில நோட்டீஸ் நிறைய ஒட்டிக் கிடந்தது............... அதான் போட்டன்............... உத தைரியமா செஞ்ச ஆக்கள பாராட்டத்தான் வேணும்.............. ஆனா உந்த நோட்டீசுகள கோயில் காரரோ அல்லாட்டி கடைக்காரரை கிழிச்சுப் போடுகினம்........................... இந்த நோட்டிச ஒட்டின தைரியசாலிகள் நாட்டில அக்கறையுள்ளவங்களாத்தனர் இருப்பாங்கள்............... அவை நாளைக்கு இங்க பிள்ளையார் கோயில் தேர் இழுக்கேக்க அங்கயும் நோட்டீச மக்களிட்ட குடுக்கோணும்................... இந்த நோட்டீச பாத்தாபிறகும் நாளைக்கு எந்த விசுக்கோத்துகளாவது தேங்காய் உடைச்சுதுகளெண்டால்....... :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி

அந்த தேங்காயை இறைவன் ஏற்று கொள்வான என்பதில் சந்தேகம் தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படங்கள் சரி.. ஆனால் இதனை இணைத்தவர் இதில் முரண்படுகிறாரே.

ஏனெனில்.. அவர் நல்லூர் கந்தன் திருவிழா தொடர்பில் எழுதப்பட்ட கருத்தில் முரண்பட்டவர். அதுமட்டுமன்றி.. நேசக்கரத்தின் அழைப்புக்களை கூட ஏற்றுக் கொள்ளும் பங்குவமற்ற நிலையில்.. தன்னையும் அடியார்கள் வரிசையில் நிறுத்தி இதனை கூறி இருப்பின்.. நியாயமானதே..!

அண்மையில் புலம்பெயர் நாடொன்றில் ஒரு கோவில் திருவிழாவுக்கு ஒரு தொண்டனாகச் சென்றிருந்தேன். அவர்கள் தங்களது வருமானத்தில் குறிப்பிடத்தக்க தொகையை வன்னியில் உள்ள மக்களுக்காக தாயகத்தில் நலிவுற்றுள்ள மக்களுக்கு அனுப்பி வருவதையும் அறியத்தந்தார்கள்.

ஆக அடியார்கள் பங்களிப்பு செய்வது.. தெரிந்தோ தெரியாமலோ நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது போதாது. அதற்கு இவ்வாறான விளம்பரங்கள் ஒரு ஊக்கமாக இருக்கும். ஆனால் போஸ்ரர் ஒட்டிறவர்கள்.. தாங்கள் எப்படி நடந்துக்கிறார்கள் என்பதை.. தங்கள் மனச்சாட்சிப் பிரகாரம் முடிவு செய்யவும் வேண்டும்..! போஸ்ரர் ஒட்டுறது அல்ல முக்கியம்.. அடியார்களுக்கு முன் மாதிரியா திகழ வேண்டியவர்கள் இவர்கள்..! ஆனால்...???! :D:o

Edited by nedukkalapoovan

சிறீலங்கா தூதரகத்தின் முழமையான ஆதரவுடன் நாளை பாரிசில்; ஒரு கோவில் தேர் திருவிழா நடைபெறவுள்ளது.பல்லாயிரக் கணக்கான தேங்காய்கள் நாளை ரா சப்பல் தெருவை பதம் பார்கக்ப் போகின்றன.மக்களின் உணர்வுகளை திசை திருப்புவதற்கு நடக்கும் இந்த நிகழ்வை நேரஞ்சல் செய்யப் போவதாக ஒரு வலைக்காட்சி பெருமையுடன் சொல்லிக் கொள்கிறது.தமிழ் தேசிய தொலைக்காட்சியுடன் அல்லது புலிகளின் குரலுடன் அல்லது அனைத்துலகத் தொடர்பகத்தின் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொண்டு வன்னி மக்களின் இடப் பெயர்வை அங்குள்ள அவலங்களை நேரஞ்சல் செய்தால் இங்குள்ள மக்கள் உணர்வு பெற்று தேங்காய்களை தெருவில் உடைக்காமல் தாயக உறவுகளுக்கு கொடுத்துவிடுவார்கள் பாருங்கள்.வாழ்க இவர்களின் திருப்பணி.மேன்மை கொள் தேர் திருவிழா நீதி விளங்குக உலக மெல்லாம்.

Edited by athiyan

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா தூதரகத்தின் முழமையான ஆதரவுடன் நாளை பாரிசில்; ஒரு கோவில் தேர் திருவிழா நடைபெறவுள்ளது.பல்லாயிரக் கணக்கான தேங்காய்கள் நாளை ரா சப்பல் தெருவை பதம் பார்கக்ப் போகின்றன.மக்களின் உணர்வுகளை திசை திருப்புவதற்கு நடக்கும் இந்த நிகழ்வை நேரஞ்சல் செய்யப் போவதாக ஒரு வலைக்காட்சி பெருமையுடன் சொல்லிக் கொள்கிறது.தமிழ் தேசிய தொலைக்காட்சியுடன் அல்லது புலிகளின் குரலுடன் அல்லது அனைத்துலகத் தொடர்பகத்தின் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொண்டு வன்னி மக்களின் இடப் பெயர்வை அங்குள்ள அவலங்களை நேரஞ்சல் செய்தால் இங்குள்ள மக்கள் உணர்வு பெற்று தேங்காய்களை தெருவில் உடைக்காமல் தாயக உறவுகளுக்கு கொடுத்துவிடுவார்கள் பாருங்கள்.வாழ்க இவர்களின் திருப்பணி.மேன்மை கொள் தேர் திருவிழா நீதி விளங்குக உலக மெல்லாம்.

அப்போ நிமிர்த்த முடியாது என்கிறீர்கள்

அப்போ நிமிர்த்த முடியாது என்கிறீர்கள்

நிமிர்த்தவே முடியாது. இருந்து பாருங்கள் நாளைக்கு சில பக்த கேடிகள் உடைக்க தான் போகிறார்கள்(தேங்காயை)

தேங்காய் உடைப்பதன் தத்துவம்

கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.

தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.

இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.

ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

சமயச் சடங்கு, ஆலய வழிபாடு என்பவற்றிற்கு நம்மவர் செய்யும் செலவு ஒப்பீட்டளவில் மிகச்சொற்பமே.

மேலும் தெய்வ வழிபாடு குதூகலத்திற்காக செய்யப்படும் ஒன்றல்ல.

மக்கள் தம் துன்பதின் வடிகாலாக நம்பியிருப்பது ஆலயம் ஒன்றைதான்.

நம்மவர் மது, party என்பவற்றிற்கு செய்யும் சேலவுகளை பாருங்கள், இதை குறை சொல்வார் யாரும் இல்லை. ஒரு தேங்காயில் செய்யும் செலவை குறைப்பதன் மூலம் வன்னியின் பட்டினியை தவிர்க்கலாமா? மேலும் ஆலய வழிபாடு செய்வோர் மூடர்களும் அல்ல, சுயனலம் பிடித்தோரும் அல்ல. தாயக நிலமை எண்ணி வருந்துவோரும் உ தவுவோரும் அவர்களாவர்.

ஆலயம் செல்வோரை குறை கூருவோர், ஆலயம் செல்லாதோர் என்ன உடல், பொருள்,இன்பம், ஆவி எல்லவற்றையும் வன்னி மக்களுக்கு கொடுத்துவிட்டு கோவணத்துடன் உலா வருபவர்கள் என்றா புகட்ட நினைக்கிறார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

இதில தேங்காய் உடைப்பதில் குறை காணுபவர்கள் பொழுது போக்காக படம் பார்க்க போவார்கள், பாருக்கு போவார்கள், கிளப்புக்கு போவார்கள், இல்லை வீட்டில தண்ணி அடிப்பார்கள், பிள்ளையளுக்கு பொழுது போக்க வீடியோ கேம் வாங்கி கொடுப்பார்கள்.

எனக்கும் தேங்காய் உடைப்பதில் துளிஅளவும் விருப்பம் இல்லை ஆனால் ஒரே சமூகத்தை விழுந்து விழுந்து வாருறத விட்டுட்டு உருப்படியா ஏதாவது செய்யலாம்.

உதாரணத்துக்கு எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம் சொல்றேன்.

நானும் நண்பனும் யூனி பாரில ஒரு பிச்சர் பீர் ($12) எடுத்து அடிச்சிட்டு இருக்க தேசிய விரும்பியான ஒரு நபர் அந்த பக்கமாக வந்தார் (அவர் சமூக அந்தஸ்து கருதி குடிப்பதில்லை). வந்து ஒரே லெக்சர். அந்த 12 டொலரை அனுப்பினா அங்கை 12 குடும்பம் ஒரு நேரம் சாப்பிடுமாம். அந்தாளுக்கு பதில் சொல்ல எனக்கு இன்னுமொரு பிச்சர் வேணுமெண்டு போட்டு பதில் ஒண்டும் சொல்லாமல் விட்டுட்டேன். அன்று மாலையே வேறொரு இடத்துக்கு போகும் போது தியேட்டருக்கு பக்கத்தில அதே நபர் தனது நண்பருடன் படம் பார்க்க பொப்கோணுடன் நின்றார். எனக்கு கடுப்பாகிட்டுது. நேரா போய் உந்த காசை (2 பட அனுமதி $20, பெப்கோர்ன் $5) அனுப்பினால் 25 குடும்பம் ஒரு நேரம் சாப்பிடும் எண்டு சொல்ல அவருக்கு மூஞ்சையெல்லாம் கறுத்திட்டுது. அவருது நண்பர் ரென்சனாகி என்னோட ஏதோ கதைக்க வெளிக்கிட இவர் சமாளிச்சு தடுத்திட்டார்.

இதில என்ன சொல்ல வாறேன் எண்டால்:

தேங்காய் உடைக்கிறதில ஒரு பிரயோசனமும் இல்லை. 100 தேங்காய் உடைக்க 100 டொலர் முடியும்.

ஆனால் ஒருநாள் நண்பர்களுடன் வெளியே போனால் 100 - 200 எண்டு போகும்

குடும்பத்துடன் படம் பார்க்க போனால் 50 - 100 எண்டு வேணும் (இப்பவும் ரொறன்ரோ போய் தமிழ் தியேட்டர் வளிய பாத்தா சனம் முண்டியடிச்சுகொண்டு தான் நிக்குது)

பிள்ளைக்கு வீடியோ கொன்சோல் வாங்கி கொடுத்தால் 300 - 400 எண்டு வேணும்

அந்த வீடியேக்கு கேம் வாங்கி குடுத்தால் 60 - 70 எண்டு வேணும்

எல்லாத்துக்கும் மேலால புலம்பிற ஆக்கள் தாங்கள் இருக்கிற 400 000 - 600 000 எண்டு வீட்டை வாங்கி, வங்கி காறனுக்கு மோர்கேச்சுக்கு 800 - 1000 எண்டு வட்டி கட்டுறத விட ஒரு சாதாரண வீட்டை வாங்கி 200 - 300 ஜ் வட்டியா கட்டி மிச்ச 500 - 700 ஊருக்கு அனுப்பினாலும் சனத்தின்ர கஸ்டத்தை கொஞ்சம் தீர்கலாம்.

இப்பிடி மாதம் மாதம் 500$ - 1000$ எண்டு மிச்சம் பிடிச்சு அனுப்பிறத விட்டுட்டு வருடத்தில 100 டொலருக்கு கேங்காய் அடிக்கிறான் எண்டு புலம்புறிங்கள். இங்கு சிலருக்கு தேங்காய் அடிக்கிறது பிரச்சனை இல்லை.... சைவ சமூகத்தில் குற்றம் காணுவதே பிரச்சனையாக உள்ளது. :D:o

அண்ணா ஆலயம் சொல்வதை குறை சொல்வதல்ல இங்கே பிரச்சனை சிலங்கா அரசின் பின்புலத்தோடு மக்களின் உணர்வுகளை மழுங்கடிப்பதற்காக விழா எடுப்பத தான் பிரச்சனை.அங்கே எங்கள் உறவுகள தாய் நாட்டின் விடுதலைக்காக தங்கள் உயிரைNகொடக்கிறார்கள்.

இங்கே ஒருதேங்காய் அடிக்க வேண்டாம் என்று கெட்டால் உங்களுக்கு தன்மானம் பொததுக் கொண்டு வருகிறது.அது சரி பாரிசல்சிறீலங்கா அரசின் துணையோடு நடக்கம் பிள்iளார்தான் அருள்பாலிப்பாரா.

  • கருத்துக்கள உறவுகள்

சமயச் சடங்கு, ஆலய வழிபாடு என்பவற்றிற்கு நம்மவர் செய்யும் செலவு ஒப்பீட்டளவில் மிகச்சொற்பமே.

மேலும் தெய்வ வழிபாடு குதூகலத்திற்காக செய்யப்படும் ஒன்றல்ல.

மக்கள் தம் துன்பதின் வடிகாலாக நம்பியிருப்பது ஆலயம் ஒன்றைதான்.

நம்மவர் மது, party என்பவற்றிற்கு செய்யும் சேலவுகளை பாருங்கள், இதை குறை சொல்வார் யாரும் இல்லை. ஒரு தேங்காயில் செய்யும் செலவை குறைப்பதன் மூலம் வன்னியின் பட்டினியை தவிர்க்கலாமா? மேலும் ஆலய வழிபாடு செய்வோர் மூடர்களும் அல்ல, சுயனலம் பிடித்தோரும் அல்ல. தாயக நிலமை எண்ணி வருந்துவோரும் உ தவுவோரும் அவர்களாவர்.

ஆலயம் செல்வோரை குறை கூருவோர், ஆலயம் செல்லாதோர் என்ன உடல், பொருள்,இன்பம், ஆவி எல்லவற்றையும் வன்னி மக்களுக்கு கொடுத்துவிட்டு கோவணத்துடன் உலா வருபவர்கள் என்றா புகட்ட நினைக்கிறார்கள் ?

நீங்களும் எனது கருத்தையே எழுதி இருக்கிறீர்கள். உங்கள் கருத்தை பார்பதற்கு முன்னரே, தலைப்பு மற்றும் முதல் 3-4 கருத்தை, பார்ததுமே எழுதணும் போல இருந்து எழுதிட்டேன். நீங்கள் சொன்னது போல ஆலய வளிபாட்டிற்கு செலவளிப்பது மிகச் சொற்பமே. ஒரு பழமொழி: ஊசி போறது தேடுறோம் உலக்கை போறது தெரியாமல்

அண்ணா ஆலயம் சொல்வதை குறை சொல்வதல்ல இங்கே பிரச்சனை சிலங்கா அரசின் பின்புலத்தோடு மக்களின் உணர்வுகளை மழுங்கடிப்பதற்காக விழா எடுப்பத தான் பிரச்சனை.அங்கே எங்கள் உறவுகள தாய் நாட்டின் விடுதலைக்காக தங்கள் உயிரைNகொடக்கிறார்கள்.

இங்கே ஒருதேங்காய் அடிக்க வேண்டாம் என்று கெட்டால் உங்களுக்கு தன்மானம் பொததுக் கொண்டு வருகிறது.அது சரி பாரிசல்சிறீலங்கா அரசின் துணையோடு நடக்கம் பிள்iளார்தான் அருள்பாலிப்பாரா.

ஏன் மற்ற சமயத்தவர் நாடு நாடா போய் இலங்கை அரசின் ஆதரவோடு தான் சமய பிரச்சாரம் எண்ட போர்வையில் செய்யிற பிரச்சாரம் ஒண்டும் தெரியாது கோயில்ல தேர் இழுக்கிறது தான் உங்களுக்கு பொத்துக்கொண்டு வருகுதோ?

அது சரி அவர்களின் சமய பிரச்சாராம்(?) மூடிய சுவருக்குள் நடப்பதால் பாதிப்பு இல்லையாக்கும். இவர்கள் வெளியா தேர் இழுத்து தேங்காய் உடைக்கிறது தான் கண்ணுக்கை குத்துது போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் தூயவன் களத்தில இல்லாத தைரியம்தான்! வேறென்ன சொல்ல!

ஐயா நெருப்பு தேனி இணையத்தளங்களும் உங்கள் கருத்தை பிரதிபலித்து தான் கருத்;து வெளிட்டிருக்கின்றன.பெருமைப்

அண்ணா டக்கிளசு மாமா? இங்க வந்து பிரான்சில் புலிகளின்ரை அதரவு தளத்தை சிதைக்கிறதுக்க என்ன செய்யலாம் என்று கெட்ட போது இந்த தெர் திருவிhழவை பயன்படுத்த வேநண்டும் என்று ஆர் அர் ஆலோசனை சொன்னவை எண்டது எங்களுக்குத் தெரியும்.டக்கிளஸ் அதுக்கு பொறப்புக் கொடுத்த குகன் மாமா இப்ப உள்ளை இருக்கிறாராம்?

தேரும் திருவிழாவும் தமிழர் பண்பாட்டின் அழகிய அம்சங்கள் தான் மறுக்கவில்லை. தமிழர் பண்பாட்டில் சைவத்திற்கும் இறைவணக்கத்திற்கும் உள்ள பெரும்பங்கை நேர்மையாக சிந்திக்க தெரிந்தவர்கள் எவரும் மறுக்கவும் முடியாது

ஆனால் அதே நேரத்தில் தாயகத்தில் இந்துக்களின் வணக்கத்தலங்களின் மேல் குண்டுமழை பொழிந்தும் இராணுவ முகாம்களாக்கியும் இறைநிந்தனை செய்யும் சிங்கள இனவாத அரசு, ஐரோப்பாவில் அதே இந்துக்களின் கோயில் திருவிழாக்களுக்கு அனுசரனையாளராக செயற்பட முனைவது ஏன்?

இந்த திருவிழாக்களுக்கு சிங்கள அரசு அனுசரனையாளராக செயற்படுதல் என்பது, தமிழர் பிரதேசங்களில் தான் கட்டவிழ்த்து விட்டுள்ள இராணுவ அட்டூழியங்களை மறைத்து, தமிழர்களின் மதசுதந்திரத்தை மதிக்கும் ஒரு அரசாக தன்னை வெளியுலகிற்கு காட்ட சிங்களம் போடும் சர்வதேச நாடகத்தின் ஒரு அங்கமே ஆகும்

சிங்களத்தின் இந்த கபட எண்ணத்திற்கு துணை போகும் கோவில் நிர்வாகங்களையும் அவர்கள் நடத்தும் விழாக்களையும் புறக்கணிப்பது இன்றைய காலத்தின் தேவையாகும். இதை புலம்பெயர் தமிழர்கள் செய்ய முன்வரவேண்டும்.

சிங்கள பயங்கரவாத அரசு தமிழ் மக்களின் தலைகளில் குண்டுமழை பொழிந்து விட்டு அதே இரத்தம் தோய்ந்த கைகளுடன் வந்து பாலாபிசேகத்திற்கும் அனுசரனை செய்யும் திருவிழாக்களை தமிழர்கள் புறக்கணிப்பதே மிகச்சிறந்த இறைவணக்கம் ஆகும்.

அதுவே தர்மமும் ஆகும்!

தர்மத்தின் பக்கம் நிற்பவர்களுக்கு இறை ஆசீர்வாதம் வீடு தேடி வரும்!!

அவர்களுக்கு வேறு பூசைகளும் திருவிழாக்களும் தேவையில்லை!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

தேரும் திருவிழாவும் தமிழர் பண்பாட்டின் அழகிய அம்சங்கள் தான் மறுக்கவில்லை. தமிழர் பண்பாட்டில் சைவத்திற்கும் இறைவணக்கத்திற்கும் உள்ள பெரும்பங்கை நேர்மையாக சிந்திக்க தெரிந்தவர்கள் எவரும் மறுக்கவும் முடியாது

ஆனால் அதே நேரத்தில் தாயகத்தில் இந்துக்களின் வணக்கத்தலங்களின் மேல் குண்டுமழை பொழிந்தும் இராணுவ முகாம்களாக்கியும் இறைநிந்தனை செய்யும் சிங்கள இனவாத அரசு, ஐரோப்பாவில் அதே இந்துக்களின் கோயில் திருவிழாக்களுக்கு அனுசரனையாளராக செயற்பட முனைவது ஏன்?

இந்த திருவிழாக்களுக்கு சிங்கள அரசு அனுசரனையாளராக செயற்படுதல் என்பது, தமிழர் பிரதேசங்களில் தான் கட்டவிழ்த்து விட்டுள்ள இராணுவ அட்டூழியங்களை மறைத்து, தமிழர்களின் மதசுதந்திரத்தை மதிக்கும் ஒரு அரசாக தன்னை வெளியுலகிற்கு காட்ட சிங்களம் போடும் சர்வதேச நாடகத்தின் ஒரு அங்கமே ஆகும்

சிங்களத்தின் இந்த கபட எண்ணத்திற்கு துணை போகும் கோவில் நிர்வாகங்களையும் அவர்கள் நடத்தும் விழாக்களையும் புறக்கணிப்பது இன்றைய காலத்தின் தேவையாகும். இதை புலம்பெயர் தமிழர்கள் செய்ய முன்வரவேண்டும்.

சிங்கள பயங்கரவாத அரசு தமிழ் மக்களின் தலைகளின் குண்டுமழை பொழிந்து விட்டு அதே இரத்தம் தோய்ந்த கைகளுடன் வந்து பாலாபிசேகத்திற்கும் அனுசரனை செய்யும் திருவிழாக்களை தமிழர்கள் புறக்கணிப்பதே மிகச்சிறந்த இறைவணக்கம் ஆகும்.

அதுவே தர்மமும் ஆகும். தர்மத்தின் பக்கம் நிற்பவர்களை இறை ஆசீர்வாதம் வீடு தேடி வரும். அவர்களுக்கு வேறு பூசைகளும் திருவிழாக்களும் தேவையில்லை

இத்தோடு சைவ சமயத்துக்கு எதிராக கதைச்சுக் கொண்டு திரிய செலவு செய்யுற நேரத்தையும் பணத்தையும் தாயக உறவுகளுக்கு அனுப்பி வைத்தும் உதவலாம்..! :D:o

இத்தோடு சைவ சமயத்துக்கு எதிராக கதைச்சுக் கொண்டு திரிய செலவு செய்யுற நேரத்தையும் பணத்தையும் தாயக உறவுகளுக்கு அனுப்பி வைத்தும் உதவலாம்..! :D:o

நீங்கள் சொல்வது சிந்திக்கத் தக்கதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதும் தான்.

இதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து தாயக பணிக்காக அனைவரும் ஒன்று திரண்டு உழைக்கும் வண்ணம் தங்கள் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வார்கள் என்று நம்புவோம்!!!

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.