Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணத்தை மத்திய வங்கி அரசுடமையாக்கியுள்ளது :

Featured Replies

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணத்தை மத்திய வங்கி அரசுடமையாக்கியுள்ளது :

http://www.globaltamilnews.net/tamil_news....=2320&cat=1

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணத்தை மத்திய வங்கி அரசுடமையாக்கி உள்ளதாக மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 71 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை இலங்கை மத்திய வங்கி முடக்கி வைத்திருந்தது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் குறித்த அமைப்பு விடுதலைப் புலிகளுக் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை புலனாகியுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சந்தேகத்தின் பேரில் முடக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 71 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 71 மில்லியன் பணத்தை தமிழர்களை அழிக்க சிறிலங்கா அரசு உபயோகிக்கப்போகிறது.

புகலிட நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களது பரம்பரைச் சொத்துகள்.. அவர்கள் வாங்கிக் கொண்டிருக்கும் சொத்துகள்.. எல்லாமே மறைமுகமாக அரசுடமை ஆகிக் கொண்டிருக்கிறது.. இது தற்போது அரசுடமையாகிறது என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.

இவ்வளவு பெருந்தொகை பணத்தை சேகரித்து, சிரிலங்கா அரசிடம் கையளித்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரை தமிழர் ஏமாளிகள் கழகம் என்று பெயர்மாற்றுவதே சரி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது அவர்களின் கைக்கு எப்படி போனது ? தமிழர் புனர்வாழ்வு கழகம் என்ற பெயரிலையே வைப்பிலிட்டிருந்தர்களா?

சுப்பண்ண

தமிழர் புணர்வாழ்வு கழகத்தின் கொடுக்கல் வாங்கல் யாரும் எதிர்பாராத தருணத்தில் அரசாங்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.இது நடஙந்தது சமாதான காலத்தில்.நான் கூட வங்கிகளுக்கு வந்த அந்த கடிதத்தை வாசித்துள்ளேன்.இது நடந்து 1 மாதத்துக்குள் வெலிக்கந்தையில் வைத்து புணர்வாழ்வு கழகத்தின் வண்டியுடன் சேர்த்து ஊழியர்களையும் கடத்தினார்கள்.இப்போது அதை சிங்கள அரசாங்கம் ஒத்தியோகபூப்வமாக களவாடியுள்ளது.

கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், பாலியல் வல்லுறவு இவை எல்லாவற்றையும் தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்கள பயங்கரவாத அரசு

இதுவரை வங்கிக் கொள்ளை மட்டும் செய்யவில்லை என்ற ஒரு குறை இருந்தது!

தமிழர் புனர்வாழ்வு கழகம் வைப்பிலிட்டுருந்த 71 மில்லியன் ரூபாய்களை கொள்ளை அடித்ததன் மூலம்

தற்போது சிங்கள பயங்கரவாத அரசு வங்கிக் கொள்ளையையும் நடத்தி விட்டது!!

கெடுகுடி சொல் கேளாது என்பதற்கு சிங்கள அரசு சீக்கிரமே ஒரு நல்ல உதாரணமாகி விடும்!!!

Edited by vettri-vel

சந்தேகமே இல்லை இலங்கை அரசாங்கம் ஒரு முடிச்சவிக்கிதான்....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பேரினவாத சிவில் நிர்வாகத்தை நம்பியதற்கான விளைவை.. தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் உலகத்தமிழினமும் தகுந்த பாடத்தை மீள புதிய சந்ததிக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

இதில் சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசு செய்த பகற்கொள்ளை. இதையே கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் டக்கிளசும் சங்கரிக்கும் பங்குபோட்டால் போச்சு..!

ஏமாளிகள் மூடர்கள் சிங்களவர்கள் அல்ல. 5 வருடம் சமாதானம் என்று போய் எல்லா வகையிலும் ஏமாந்தது தமிழர்கள் தான்..! :unsure:

களனிதிச மின்னிலையத்துக்கு ஏற்பட்ட சேதத்தை ஈடு கட்டியாச்சு....!!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் உதவிகளுக்கும் இதே கதிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெருந்தொகை பணத்தை சேகரித்து, சிரிலங்கா அரசிடம் கையளித்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரை தமிழர் ஏமாளிகள் கழகம் என்று பெயர்மாற்றுவதே சரி!

சரி

இவர் வெளிக்கிட்டார் கரிச்சுக்கொட்ட

அவர்கள் எவ்வளவு அவதானமாக இருந்திருப்பார்கள்

முக்கிய கொடுக்கல்வாங்கல்கள் நடக்கும்போது

இந்த நரிகள் எல்லாம் சேர்ந்து செய்து போட்டுதுகள்

கவலைப்படும் நேரமல்ல

அதை ஈடுசெய்ய முடியாதா எம்மால்???

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணத்தை மத்திய வங்கி அரசுடமையாக்கியுள்ளது :

மத்திய வங்கியின்ரை தலையில இடி விழ , :(

நம்பி போட்ட காசை சுருட்டலாமோ ............... :)

  • கருத்துக்கள உறவுகள்

எய்தவன் இருக்க

அம்பை நோவான் ஏன்????

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ..... எய்தவன்ரை தலையில இடி விழ .

  • கருத்துக்கள உறவுகள்

குட்.....

உலகம் முழுக்க ஆயிரத்தெட்டு வங்கிகள் இருக்க என்ன மயிருக்கு சிலோன் பாங்கில் காசோட்டம் பன்னினவை.... :rolleyes:

ஒரு நாளைக்கு ஒரு ஈரோ என்று கேட்டு விரும்பி கொடுத்த காசு இப்படி சிங்களவன் பறிச்சு கொண்டு போட்டனே...

உதுகளும், லண்டனுக்கு வந்து தமிழ்கடையில் ஜீன்ஸ் வாங்கும் நம்மட சோறுகளும் ஒண்டுதான்!

உந்த காசை அரசு ஒரு வருடத்துக்கு முதலே எடுத்து செலவளித்து இருக்கும்... இப்பதான் சட்டமூலம் ஆக்கி இருக்கிறார்கள்....!!

துரோப்பாரி...

ஒரு நாளைக்கு ஒரு ஈரோ என்று கேட்டு விரும்பி கொடுத்த காசு இப்படி சிங்களவன் பறிச்சு கொண்டு போட்டனே...

சுனாமி சுனாமி எண்டு பினாமி பேரில குடுத்தகாசை எனிமி அடிச்சுகொண்டு போட்டானே....

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெருந்தொகை பணத்தை சேகரித்து, சிரிலங்கா அரசிடம் கையளித்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரை தமிழர் ஏமாளிகள் கழகம் என்று பெயர்மாற்றுவதே சரி!

ஏமாளிகள் மூடர்கள் சிங்களவர்கள் அல்ல. 5 வருடம் சமாதானம் என்று போய் எல்லா வகையிலும் ஏமாந்தது தமிழர்கள் தான்..!

உலகம் முழுக்க ஆயிரத்தெட்டு வங்கிகள் இருக்க என்ன மயிருக்கு சிலோன் பாங்கில் காசோட்டம் பன்னினவை....

ஒரு நாளைக்கு ஒரு ஈரோ என்று கேட்டு விரும்பி கொடுத்த காசு இப்படி சிங்களவன் பறிச்சு கொண்டு போட்டனே...

உதுகளும், லண்டனுக்கு வந்து தமிழ்கடையில் ஜீன்ஸ் வாங்கும் நம்மட சோறுகளும் ஒண்டுதான்!

சுனாமி சுனாமி எண்டு பினாமி பேரில குடுத்தகாசை எனிமி அடிச்சுகொண்டு போட்டானே....

ஐயாமாரே,

இந்தப் பணம் வெளிநாட்டு அரசுசார், அரசுசாரா நிறுவனங்கள் த.பு.கழகத்திற்கு சுனாமி நிதியாகக் கொடுத்த பெருந்தொகையில் ஒரு சிறு பகுதி. கொழும்பில் பொருட்கள் வாங்குவதற்காக கிளிநொச்சியில், வங்கியில் வைப்பிலிட்ட 20 கோடியில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருக்கும் போது வைப்பிலிருந்ததுதான் இந்த 7 கோடியும்.

தயவுசெய்து ஏன் கொழும்பிலதான் சாமான் வாங்கவேணுமோ எண்டோ, இல்லாட்டி வங்கியிலதான் போடவேணுமே ஏன் மடியில கட்டிக்கொண்டு போயிருக்கலாம் தானே எண்டு என்னட்டை கேக்காதையுங்கோ

தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் வங்கி கணக்குகள் இலங்கையில் முடக்கம் தொடர்பாக அவர்களினால் பல தடவைகள் விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்களின் அறிக்கைகளை படிக்கமால் பணமுடக்கம் தொடர்பான செய்தியை மட்டும் மையமாக கொண்டு கருத்து எழுத முனைவது ஆபத்தனது. நீங்களும் குழப்பமான விளக்கங்களுடன் மற்றவர்களையும் குழப்பமடைய செய்யும். எனக்கு தெரிந்த சில விடையங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

முதலாவதாக வங்கிக் கணக்கில் இருந்த நிதி முழுவதும் புலம் பெயர்ந்த மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி அல்ல. அவற்றில் பெரும்பகுதியான நிதி சர்வதேச தொண்டு அமைப்புகளினால் வழங்கப்பட்டவை.

இரண்டவதாக தமிழர் புனர்வாழ்வு கழகம் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம். பெருமளவு நிதியினை உடனடியாக வங்கி கணக்கில் இருந்து எடுக்க முடியாது. அத்துடன் சர்வதேச தொண்டு அமைப்புகளினால் குறிப்பிட்ட திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிதியினையும் எடுக்க முடியாது.

தமிழர் புனர்வாழ்வு கழகம் சமதான உடன்படிக்கையின் பின்புதான் இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்டதான் நோக்கம் சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டு அமைப்புகள், வெளி நாடுகளிடமிருந்து உதவியினை பெற்று வடகிழக்கில் புனர்வாழ்வு அபிவிருத்தி வேலைகளை செய்வதற்காகும். பதிவு செய்யப்படதாவிடின் அவர்களினால் சர்வதேச தொண்டு அமைப்புகளிடமிருந்து உதவிகளை பெற முடியாது.

பதிவு செய்யப்பட்டதினால் குறுகிய காலத்தில் அவர்கள் அடைந்த இலாபம் மிக கணிசமாணவை. முடக்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடும் போது அது ஆயிரம் மடங்குகளிலும் அதிகமாகும்.

2004 ஆண்டு சுனாமி எற்பட்ட போது அது இலங்கையில் பதிவு செய்யப்பட்டு அங்கு வங்கிக்கணக்கு வைத்திருந்தபடியால் அதனால் பெருமளவு உதவிகளை பெறமுடிந்தது. 2005 ஆண்டில் மட்டும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தினால் பிற நிறுவனங்களுடன் இனைந்து அதனால் செய்யப்பட்ட திட்டங்களின் பெருமதி இரண்டாயிரம் (2000) மில்லியன் ரூபா.

சுனாமி மீள்காட்டுமான கட்டமைப்பு நிதிமன்றத்தினால் நிறுத்தப்பட்டு வடகிழக்குக்கு வெளி நாட்டு உதவி கிடைப்பது நிறுத்தப்பட்டது. இதனால் சில வெளி நாடுகள் கூட தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஊடாக வடக்கு கிழக்குக்கு உதவி புரிந்தன. தமக்கு ஊடாக வர வேண்டிய நிதி தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு சென்றதுதான் இலங்கை அரசுக்கு அதன் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் புலிகளையே தடை செய்யதா அரசாங்கம் தமிழர் புனர்வாழ்வு கழகத்தினை தடைசெய்து தமிழ் மக்களுக்கு சென்றடைய கூடிய உதவிகளை நிறுத்தியது.

சுனாமி பேரழிவின் தமிழர் புனர்வாழ்வு கழகத்தினால் 154 கொள்கலங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. அவற்றில் பல இறக்குமதி வரி, சுங்க வரி இல்லமால் விடுவிக்கப்பட்டது. அவர்களினால் பல வாகனங்களும் வரி இல்லமால் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது. அப்போதைய அரசின் அமைச்சினால் நிதி கூட வழங்கப்பட்டது. இவற்றைவிட அவர்களினால் வங்கிகளுக்கு கட்ட வேண்டிய கடன் (Loan) முடக்கப்பட்ட தொகையிலும் அதிகம்.

இவற்றை எல்லாம் கூடி பார்த்தால் முடக்கப்பட்ட பணத்தின் பெருமதியின் அடிப்படையில் அவர்களுக்கு எந்த நட்டமும் இல்லை. ஆனால் அவர்கள் அங்கு தடைசெய்யப்பட்டமையினால் தான் தமிழருக்கு பெரும் பதிப்பு. வெளி நாடுகளிடமிருந்தே சர்வதேச தொண்டு நிறுவனங்களிடம் இருந்தே உதவி பெறமுடியாது. வெளிப்படையாக செயற்பாட முடியாது.

தற்போது தமிழர் புனர்வாழ்வு கழகம் தமது சேவைகளை செய்வதற்கு புலம் பெயர்ந்த மக்கள்தான் உதவி செய்ய வேண்டும். அவர்கள் இப்பவும் பல இடர்களுக்கு மத்தியில் தம்மால் இயன்ற சேவைகளை செய்கிறார்கள். இதைவிடுத்து புலம் பெயர்ந்த மக்களின் காசை அரசாங்கத்திற்கு கொடுத்து விட்டினம், எப்படி இவைகள் காசு அனுப்புவினம் என்று ஒரு சிலர் தங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம். விளக்கம் இல்லாதவார்கள் விளங்கி கொள்ளவும்.

Edited by உமை

தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் வங்கி கணக்குகள் இலங்கையில் முடக்கம் தொடர்பாக அவர்களினால் பல தடவைகள் விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்களின் அறிக்கைகளை படிக்கமால் பணமுடக்கம் தொடர்பான செய்தியை மட்டும் மையமாக கொண்டு கருத்து எழுத முனைவது ஆபத்தனது. நீங்களும் குழப்பமான விளக்கங்களுடன் மற்றவர்களையும் குழப்பமடைய செய்யும். எனக்கு தெரிந்த சில விடையங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

முதலாவதாக வங்கிக் கணக்கில் இருந்த நிதி முழுவதும் புலம் பெயர்ந்த மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி அல்ல. அவற்றில் பெரும்பகுதியான நிதி சர்வதேச தொண்டு அமைப்புகளினால் வழங்கப்பட்டவை.

இரண்டவதாக தமிழர் புனர்வாழ்வு கழகம் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம். பெருமளவு நிதியினை உடனடியாக வங்கி கணக்கில் இருந்து எடுக்க முடியாது. அத்துடன் சர்வதேச தொண்டு அமைப்புகளினால் குறிப்பிட்ட திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிதியினையும் எடுக்க முடியாது.

தமிழர் புனர்வாழ்வு கழகம் சமதான உடன்படிக்கையின் பின்புதான் இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்டதான் நோக்கம் சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டு அமைப்புகள், வெளி நாடுகளிடமிருந்து உதவியினை பெற்று வடகிழக்கில் புனர்வாழ்வு அபிவிருத்தி வேலைகளை செய்வதற்காகும். பதிவு செய்யப்படதாவிடின் அவர்களினால் சர்வதேச தொண்டு அமைப்புகளிடமிருந்து உதவிகளை பெற முடியாது.

பதிவு செய்யப்பட்டதினால் குறுகிய காலத்தில் அவர்கள் அடைந்த இலாபம் மிக கணிசமாணவை. முடக்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடும் போது அது ஆயிரம் மடங்குகளிலும் அதிகமாகும்.

2004 ஆண்டு சுனாமி எற்பட்ட போது அது இலங்கையில் பதிவு செய்யப்பட்டு அங்கு வங்கிக்கணக்கு வைத்திருந்தபடியால் அதனால் பெருமளவு உதவிகளை பெறமுடிந்தது. 2005 ஆண்டில் மட்டும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தினால் பிற நிறுவனங்களுடன் இனைந்து அதனால் செய்யப்பட்ட திட்டங்களின் பெருமதி இரண்டாயிரம் (2000) மில்லியன் ரூபா.

சுனாமி மீள்காட்டுமான கட்டமைப்பு நிதிமன்றத்தினால் நிறுத்தப்பட்டு வடகிழக்குக்கு வெளி நாட்டு உதவி கிடைப்பது நிறுத்தப்பட்டது. இதனால் சில வெளி நாடுகள் கூட தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஊடாக வடக்கு கிழக்குக்கு உதவி புரிந்தன. தமக்கு ஊடாக வர வேண்டிய நிதி தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு சென்றதுதான் இலங்கை அரசுக்கு அதன் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் புலிகளையே தடை செய்யதா அரசாங்கம் தமிழர் புனர்வாழ்வு கழகத்தினை தடைசெய்து தமிழ் மக்களுக்கு சென்றடைய கூடிய உதவிகளை நிறுத்தியது.

சுனாமி பேரழிவின் தமிழர் புனர்வாழ்வு கழகத்தினால் 154 கொள்கலங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. அவற்றில் பல இறக்குமதி வரி, சுங்க வரி இல்லமால் விடுவிக்கப்பட்டது. அவர்களினால் பல வாகனங்களும் வரி இல்லமால் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது. அப்போதைய அரசின் அமைச்சினால் நிதி கூட வழங்கப்பட்டது. இவற்றைவிட அவர்களினால் வங்கிகளுக்கு கட்ட வேண்டிய கடன் (Loan) முடக்கப்பட்ட தொகையிலும் அதிகம்.

இவற்றை எல்லாம் கூடி பார்த்தால் முடக்கப்பட்ட பணத்தின் பெருமதியின் அடிப்படையில் அவர்களுக்கு எந்த நட்டமும் இல்லை. ஆனால் அவர்கள் அங்கு தடைசெய்யப்பட்டமையினால் தான் தமிழருக்கு பெரும் பதிப்பு. வெளி நாடுகளிடமிருந்தே சர்வதேச தொண்டு நிறுவனங்களிடம் இருந்தே உதவி பெறமுடியாது. வெளிப்படையாக செயற்பாட முடியாது.

தற்போது தமிழர் புனர்வாழ்வு கழகம் தமது சேவைகளை செய்வதற்கு புலம் பெயர்ந்த மக்கள்தான் உதவி செய்ய வேண்டும். அவர்கள் இப்பவும் பல இடர்களுக்கு மத்தியில் தம்மால் இயன்ற சேவைகளை செய்கிறார்கள். இதைவிடுத்து புலம் பெயர்ந்த மக்களின் காசை அரசாங்கத்திற்கு கொடுத்து விட்டினம், எப்படி இவைகள் காசு அனுப்புவினம் என்று ஒரு சிலர் தங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம். விளக்கம் இல்லாதவார்கள் விளங்கி கொள்ளவும்.

விளக்கத்திற்கு நன்றி உமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.