Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உயிரை உருக்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிரை உருக்கி

நெய்யாக வார்த்தவர்கள்!

மாவீரர்கள்! யார் இவர்கள்?

தன்னலம் கருதாத தியாகிகள்!

தமிழ்நலம் கருதிய ஞானிகள்!

எங்களுக்காக தங்கள்

உயிரையே துறந்த துறவிகள்!

தமிழர் இதயங்களில் என்றும்

நிலைத்து வாழும் தெய்வங்கள்!

கடலிலும் தரையிலும் காற்றிலும்

கலந்து இருப்பவர்கள்!

எங்கள் சுவாசத்தினூடக

எம் உதிரத்தில் கலந்து

எம் உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்கள்!

விடுதலைத் தீ அணைந்து போகாமல்

தம் உயிரை உருக்கி

நெய்யாக வர்த்தவர்கள்!

தாம் உருகி உலகத்திற்கு

ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்திகள்!

கல்லறைக்குள் உறங்குகின்ற

கார்த்திகைப் பூக்கள்!

சொல்லால் விளக்க முடியாத புதிர்கள்!

தூங்கிக் கொண்டிருந்த தமிழனின்

துயில் எழுப்பி!

துயிலும் இல்லங்களில்

மீளாத் துயில் கொள்பவர்கள்!

தமிழர் இதயங்களில்

ஒளியேற்றிக் கொண்டிருக்கும்-என்றும்

அணையாத நந்தா விளக்குகள்!

உலகத்தின் மனச்சாட்சியை

உலுப்பி விட்ட உத்தமர்கள்!

சாவுக்கு தேதி குறித்த

சாகா மறவர்கள்!

தமிழன் என்றொரு இனமுண்டு!

தனியே அவர்கொரு குணமுண்டு!-என்று

தரணிக்கு உணர்த்திய

தாயகப் புதல்வர்கள்!

உலகத் தமிழனை உயர்த்தி வைத்த

உன்னத மறவர்கள்!

இவர்களுக்கு முதல் உண்டு!-ஆனால்

முடிவில்லை………..

ஆம் மாவீரன் சங்கரிலே

தொடங்கியது தியாகம்!

ஈழம் விடிந்த பின்பும்

முடியுமா இவர்களின் ஈகம்!

காத்து நிற்பார்கள் ஈழத்தின்

எல்லையை காலாகாலம்!

மாவீரர்களே! உங்கள்

கல்லறைகள் கருத்தரிக்கும்!

அதில் இருந்து ஆயிரமாயிரம்!

வேங்கைகள் தோன்றுவார்கள்!

அவர்களால் உங்கள்

தாகங்கள் தீர்க்கப்படும்!

உங்கள் தியாகத்திற்கு!

நீங்கள் நிர்ணயித்த

விலைதான் பேசப்படும்!

தமிழர் உரிமைகளைப் பேரம் பேச

நாங்கள் தயாரில்லை!

உங்கள் எண்ணங்கள் நிறைவேற்றப்படும்!

இது உங்கள் கல்லறைகள் மேல்

நாம் செய்யும் சத்தியம்!!!

தினமும் உங்கள் உணர்வுகளோடு

பேசிக் கொண்டிருக்கும் எம் தலைவன்

இதைச் சாதித்தே தீருவார்!

ஓவ்வொரு கார்த்திகை இருபத்தியேழிலும்!

உங்கள் துயிலும் இல்லங்களுக்கு

பூக்களோடும் பாக்களோடும்! வரும் நாம்!

மிக விரைவில் வருவோம்!

வெற்றிச் செய்தியோடு!

ஐக்கிய நாடுகள் சபையிலே!

புலிக்கொடி பறக்கும்!

தமிழ் குடி சிறக்கும்.

“தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்”

நாரந்தனையூர் கவிநயன்!

Edited by pulavar

  • கருத்துக்கள உறவுகள்

உயிரை உருக்கி ...........நல்லதொரு ,ஆக்கம் .தொடருங்கள் மேலும் .வாழ்த்துக்கள்.

வணக்கம் நண்பரே

உங்கள் கவிதையினை மாவீரர் நாளன்று நோர்வே தமிழ்முரசம் வானொலியில் ஓலிபரப்பும் சந்தாப்பம் கிடைத்தது. உங்கள் பெயருடன் அந்த கவிதையை ஒலிபரப்பினேன். அதற்கு நன்றிகள். . .

நட்புடன் பரணீதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் பரணிக்கு நன்றி!

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைக்கு வித்தாகி வீழந்த மாவீரர்களுக்கு என் வீரவணக்கங்கள்.காலத்தின் தேவை கருதி மீண்டும் இந்தக் கவிதைப் பூக்களைக் காணிக்கையாக்குகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னகம் காக்க பாடுபடுவோர் பலரிங்கு

தாயகம் காக்கப்புறப்பட்ட வீரரே!

உங்களை வணங்குகின்றோம்

உயிரை உருக்கி வார்த்த வரிகள்.

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது மாவீரர் வாரம்!!!!!!!!!!!காலத்தின் தேவை கருதி மீண்டும் இக் கவிதை புதுப்பிக்கப்படுகிறது.

காலத்தால் அழியாத மாவீரர் இலட்சியம் நிச்சயம் வெல்லும்.

மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள்!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான எண்ணங்கள் அழுதழுது நனைகிறேன், வாழ்த்துக்கள் புலவர்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்துக்கு நன்றி சுவி.

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவை கருதி இத் திரி மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.

மாவீரர்களுக்கு வீரவணக்கம்!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், புலவரே!

மாவீரர் தினங்கள், வருடா வருடம் வந்து போகின்றன!

நிஜங்கள் மட்டும், தினம் தினம், மாவீரர்களின் இல்லாமையை, நினைவு படுத்துகின்றன!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை தோழர் புலவர்..

நன்றி புலவரே!

மாவீரர்கள் பெருமையை வரிகளில் உதிர்த்த வார்த்தைக்கள் அத்தனையும் அருமை!

மிக்க நன்றிகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் எழுதிய அனைவருக்கும் நன்றிகள்!!!!!!!!!

நன்றி புலவரே!

மாவீரர்கள் பெருமையை வரிகள் அத்தனையும் அருமை!

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்!!!!!

காலத்தின் தேவை கருதி இத்திரி புதுப்பிக்கப்படுகிறது.,

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கம்!!!!!!!

உயிரை உருக்கி

நெய்யாக வார்த்தவர்கள்!

மாவீரர்கள்! யார் இவர்கள்?

தன்னலம் கருதாத தியாகிகள்!

தமிழ்நலம் கருதிய ஞானிகள்!

எங்களுக்காக தங்கள்

உயிரையே துறந்த துறவிகள்!

தமிழர் இதயங்களில் என்றும்

நிலைத்து வாழும் தெய்வங்கள்!

கடலிலும் தரையிலும் காற்றிலும்

கலந்து இருப்பவர்கள்!

எங்கள் சுவாசத்தினூடக

எம் உதிரத்தில் கலந்து

எம் உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்கள்!

விடுதலைத் தீ அணைந்து போகாமல்

தம் உயிரை உருக்கி

நெய்யாக வர்த்தவர்கள்!

தாம் உருகி உலகத்திற்கு

ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்திகள்!

கல்லறைக்குள் உறங்குகின்ற

கார்த்திகைப் பூக்கள்!

சொல்லால் விளக்க முடியாத புதிர்கள்!

தூங்கிக் கொண்டிருந்த தமிழனின்

துயில் எழுப்பி!

துயிலும் இல்லங்களில்

மீளாத் துயில் கொள்பவர்கள்!

தமிழர் இதயங்களில்

ஒளியேற்றிக் கொண்டிருக்கும்-என்றும்

அணையாத நந்தா விளக்குகள்!

உலகத்தின் மனச்சாட்சியை

உலுப்பி விட்ட உத்தமர்கள்!

சாவுக்கு தேதி குறித்த

சாகா மறவர்கள்!

தமிழன் என்றொரு இனமுண்டு!

தனியே அவர்கொரு குணமுண்டு!-என்று

தரணிக்கு உணர்த்திய

தாயகப் புதல்வர்கள்!

உலகத் தமிழனை உயர்த்தி வைத்த

உன்னத மறவர்கள்!

இவர்களுக்கு முதல் உண்டு!-ஆனால்

முடிவில்லை………..

ஆம் மாவீரன் சங்கரிலே

தொடங்கியது தியாகம்!

ஈழம் விடிந்த பின்பும்

முடியுமா இவர்களின் ஈகம்!

காத்து நிற்பார்கள் ஈழத்தின்

எல்லையை காலாகாலம்!

மாவீரர்களே! உங்கள்

கல்லறைகள் கருத்தரிக்கும்!

அதில் இருந்து ஆயிரமாயிரம்!

வேங்கைகள் தோன்றுவார்கள்!

அவர்களால் உங்கள்

தாகங்கள் தீர்க்கப்படும்!

உங்கள் தியாகத்திற்கு!

நீங்கள் நிர்ணயித்த

விலைதான் பேசப்படும்!

தமிழர் உரிமைகளைப் பேரம் பேச

நாங்கள் தயாரில்லை!

உங்கள் எண்ணங்கள் நிறைவேற்றப்படும்!

இது உங்கள் கல்லறைகள் மேல்

நாம் செய்யும் சத்தியம்!!!

தினமும் உங்கள் உணர்வுகளோடு

பேசிக் கொண்டிருக்கும் எம் தலைவன்

இதைச் சாதித்தே தீருவார்!

ஓவ்வொரு கார்த்திகை இருபத்தியேழிலும்!

உங்கள் துயிலும் இல்லங்களுக்கு

பூக்களோடும் பாக்களோடும்! வரும் நாம்!

மிக விரைவில் வருவோம்!

வெற்றிச் செய்தியோடு!

ஐக்கிய நாடுகள் சபையிலே!

புலிக்கொடி பறக்கும்!

தமிழ் குடி சிறக்கும்.

“தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்”

நாரந்தனையூர் கவிநயன்!

 

அற்புதமான படைப்பு, நன்றிகள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கம்!!!!!!

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்!!!!! காலத்தின் தேவை கருதி இத்திரி புதுப்பிக்கப்படுகிறது.,

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ற நல்லதொரு கவிதை. மாவீரர் காலத்தால் அழியாதவர்கள். நன்றிகள் புலவர்.

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்!!!!! காலத்தின் தேவை கருதி இத்திரி புதுப்பிக்கப்படுகிறது.,

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் அழியாத காவிய நாயகா்களுக்கு எம் வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலைக்காக தமதுயிரை ஆகுதியாக்கிய அனைத்துப் போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் எனது வீரவணக்கங்களும், கண்ணீர் அஞ்சலிகளும் !!!!

 

உங்களின் தியாகங்கள் வீண்போய்விடக் கூடாது என்று இறைவனை இறைஞ்சுகிறேன் !

 

உங்களின் ஆத்மாக்கள் சாந்தியடைவதாக !

Edited by ragunathan

மண்ணிற்காய், எமக்காய் உங்கள் உயிரை கொடுத்த தியாக தீபங்களே உங்களை  நாம் என்றும் மறவோம்!!!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.