Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் சாவு பெப். 14 இல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

red-rose-tall1.jpg

நேற்றுத்தான் மொட்டானேன்..

ஆயிரம் கனவுகள் தாங்கி

விடிகாலை சூரியத் தழுவலில்..

பூவானேன்..!

பனிக் குளியலில்

மலர்ந்த என் தளிருடல்..

கூவி வரும்

சிங்களத்தான் வீசும்

செல்லுக்குக் கருகிய

ஈழத்தமிழ் பிஞ்சாய்..

பெப். 14 நாளில் கசங்கிக் கருகிப்போகும்.

மனித விதி சமைத்த வேளை வரும்

பரிசுப் பொருளாக

பறித்துப் பரிமாற

பாடையேறும் என் உடல்..!

சோடி சோடியாய் அலையும்

மனிதப் பதர்களின்

கரங்கள் கசக்க.. கால்களில் மிதிபடும்..!

மனசெல்லாம் கள்ளம் வைத்து

நடக்கும்

காதல்.. குத்தாட்டம்

என் இறுதி யாத்திரையில்…!

அது தான் வலண்டைன்ஸ் டே

என் சாவுக்கு குறித்த நாள்..!!

எங்கோ ஒரு மூலையில்..

எனக்காயும்..

இதயம் கிழிந்து

விழிகள் நீர் சொரிய

ஏக்கமே வாழ்வாகிப் போன..

ஓர் உயிர் இருக்கும்..!

அது காதலின் பெயரால்…

ஏமாந்து

வாழ்வைத் தொலைத்த

நடைப்பிணமாய் இருக்கும்..!

Thanks: http://kuruvikal.wordpress.com/

Edited by nedukkalapoovan

யோவ் நெடுக்ஸ் உங்களுக்கே இது ஓவரா தெரியேல்லையா?? :lol:

ஏதோ மற்ற நாட்களில் யாரும் ரோசாப்பூவை பறிக்காதமாதிரியும், காதலர்தினத்தன்று மட்டும் ரோசாப்பூவை வாங்குவது போலவும் கதை விடுறீங்கள்!!

உலகெங்கும் ஒவ்வொரு நாளும் பறிக்கப்படும் பூக்கள் எத்தனை லட்சங்கள் இருக்கும்.. வந்துட்டாரய்யா வந்துட்டாரு பூவுக்கு இரங்கல் பா வடிக்க.. :lol:

சொல்லமறந்திட்டன் உங்கடை கவிதை அழகாய் இருக்கு! :rolleyes:

எங்கோ ஒரு மூலையில்..

எனக்காயும்..

இதயம் கிழிந்து

விழிகள் நீர் சொரிய

ஏக்கமே வாழ்வாகிப் போன..

ஓர் உயிர் இருக்கும்..!

அது காதலின் பெயரால்…

ஏமாந்து

வாழ்வைத் தொலைத்த

நடைப்பிணமாய் இருக்கும்..!

அது நீங்கள் தானே? :D

Edited by வசி_சுதா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யோவ் நெடுக்ஸ் உங்களுக்கே இது ஓவரா தெரியேல்லையா?? :lol:

ஏதோ மற்ற நாட்களில் யாரும் ரோசாப்பூவை பறிக்காதமாதிரியும், காதலர்தினத்தன்று மட்டும் ரோசாப்பூவை வாங்குவது போலவும் கதை விடுறீங்கள்!!

உலகெங்கும் ஒவ்வொரு நாளும் பறிக்கப்படும் பூக்கள் எத்தனை லட்சங்கள் இருக்கும்.. வந்துட்டாரய்யா வந்துட்டாரு பூவுக்கு இரங்கல் பா வடிக்க.. :lol:

சொல்லமறந்திட்டன் உங்கடை கவிதை அழகாய் இருக்கு! :rolleyes:

அது நீங்கள் தானே? :D

ஆடு வெட்ட.. மாடு வெட்ட.. கோழி வெட்ட இரக்கம் காட்டிறவை.. மனிசனை வெட்டிறதெண்டா.. கூடி நின்று கூத்தடிப்பாங்க. அதுபோலத்தான் ரோஜாப் பூவின் வாழ்க்கையும்..! வெட்டுப்படுறது அறியாமலே அழிஞ்சு போகுது. அதைச் சொல்ல சரியான நேரம் வேணாமோ. அதுதான் இப்ப சொல்லி இருக்குது என்று நினைக்கிறன்.

நான் காதலில் ஏமாறமாட்டனே...! ஏன்னா என்னை யாரும் உண்மையாவே காதலிக்கல்லையே. அப்படிக் காதலிக்க கிட்டவும் விடவும் மாட்டன்..! :lol:

ஆனால் உண்மையா காதலிச்சு ஏமாறிறவைக்கு.. ரோஜாப் பூவின் வலி விளங்காட்டிலும்.. அதைப் பறிச்சுக் கொடுத்த .. காசு கொடுத்து வாங்கிக் கொடுத்த நினைவுகள்.. வலியா இருக்குமில்ல..! அதுதான் ரோஜாப் பூ அப்படிச் சொல்லுது போல. நான் இல்ல. அதுமட்டுமல்ல.. இவ்வரிகளுக்கு நான் சொந்தக்காரனில்ல.

எப்படியோ.. காதலர் தினத்துக்கு ரோஜாப் பூ வாங்கிறவையிட எண்ணத்தில.. ஈழத்தில வாடிப்போன பிஞ்சு முகங்கள் தெரியனும்.. அதுதான்.. இதை எழுதியவரும்..

ஈழத்துப் பிஞ்சாய்.. கசங்கிக் கருகிடுவேன்.. என்றிருக்கிறார் போல..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனுசனை ஆரோ நல்லாய்த்தான் ஆசைகாட்டி வெறுப்பேத்திப்போட்டாளவை :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனுசனை ஆரோ நல்லாய்த்தான் ஆசைகாட்டி வெறுப்பேத்திப்போட்டாளவை :D

கு.சா.. இப்படிச் சொல்லக் கூடாது. அழுகை அழுகையா வருகுது..! :rolleyes::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ்

காதலர் தினத்தன்று மடியப்போகும் ரோஜாவின் கதையுடன் எங்கள் சோகத்தையும் கலந்த விதம் மிக அழகு......

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

காதலர் தினத்தன்று மடியப்போகும் ரோஜாவின் கதையுடன் எங்கள் சோகத்தையும் கலந்த விதம் மிக அழகு......

இளங்கவி

நானும் ரசித்தேன்.. அதனால் பகிர்ந்து கொண்டேன். ரோசாப்பூ வாங்க செலவு செய்யிற பணத்தை மிஞ்சம் பண்ணி.. அதை ஈழத்துப் பிஞ்சுகளுக்கு பங்களிப்பாக்கினால் நன்றாக இருக்கும்.. என்ற அறிவிப்பையும் சொல்லிவிடுதல் நன்று. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கவிதை அழகு ஏன் இவ்வளவு சோகம்

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் ரணமாகி கருகும் ரோஜாக்களை நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ ஒரு மூலையில்..

எனக்காயும்..

இதயம் கிழிந்து

விழிகள் நீர் சொரிய

ஏக்கமே வாழ்வாகிப் போன..

ஓர் உயிர் இருக்கும்..!

அது காதலின் பெயரால்…

ஏமாந்து

வாழ்வைத் தொலைத்த

நடைப்பிணமாய் இருக்கும்..!

கவிதை நல்லாயிருக்குது அழுகை அழுகையாய் வருது... அழுதுடுவன்...........

உங்களை நினைக்க பாவமாயிருக்குது நெடுக்ஸ் (தேடி எடுத்தாலும் பொருத்தமாய்தான் தேடியிருக்கிறீர்கள்) அனுபவமொழிகள் போன்று இருக்கின்றன கடைசி வரிகள்.

ரோஜாப் பூவுக்கும் இரங்கல்பா பாடும் உங்களைப் போன்ற சிலரால்தான் பிளாஸ்டிக் ரோஜாப் பூக்களின் மவுசு கூடிவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அண்ணை இந்தக்கவிதை வரிகள் நீங்கள் எழுதினதுதானோ? . ஒரு வகையில் பார்த்தால் நியாயம் தான் தினமும் பறிக்கப்படுகிற பூக்கள் என்றாலும் காதலர் தினமன்று பல பூக்களுக்கு ஆயுள் சரி.

ஈழத்து வேதனையில் 'காதலர் தினத்தை நினைக்க யாருக்கு நேரமிருக்கு?"!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லாயிருக்குது அழுகை அழுகையாய் வருது... அழுதுடுவன்...........

உங்களை நினைக்க பாவமாயிருக்குது நெடுக்ஸ் (தேடி எடுத்தாலும் பொருத்தமாய்தான் தேடியிருக்கிறீர்கள்) அனுபவமொழிகள் போன்று இருக்கின்றன கடைசி வரிகள்.

ரோஜாப் பூவுக்கும் இரங்கல்பா பாடும் உங்களைப் போன்ற சிலரால்தான் பிளாஸ்டிக் ரோஜாப் பூக்களின் மவுசு கூடிவிட்டது.

சொல்லாமல்.. அழுது தீர்த்திடுங்கோ. அப்பதான் மனசில உள்ள கவலைகள் கலையும்.. மனசும் தெளியும்..!

பிளாஸ்ரிக்கை விட கடதாசி.. பருத்தி போன்ற துணியால் செய்த ரோஜாப் பூக்களே இயற்கைக்கு ஆபத்தற்றவை..! :D

நெடுக்ஸ் அண்ணை இந்தக்கவிதை வரிகள் நீங்கள் எழுதினதுதானோ? . ஒரு வகையில் பார்த்தால் நியாயம் தான் தினமும் பறிக்கப்படுகிற பூக்கள் என்றாலும் காதலர் தினமன்று பல பூக்களுக்கு ஆயுள் சரி.

ஈழத்து வேதனையில் 'காதலர் தினத்தை நினைக்க யாருக்கு நேரமிருக்கு?"!

ஈழத்து வேதனை.. ஒராயிரம் பேருக்குள் என்றால்.. காதலர் தினம்.. நூறாயிரம் பேருக்குள்.. குடியிருக்குதே..! :) :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்து வேதனை.. ஒராயிரம் பேருக்குள் என்றால்.. காதலர் தினம்.. நூறாயிரம் பேருக்குள்.. குடியிருக்குதே..! :) :)

சரி சரி உங்கட கஷ்டம் விளங்குது!! உதுக்கேன் கவலைப்படுறியள்?!!. உங்களுக்கு கிடைக்கிறது கிடைக்காமல் விடாது. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி உங்கட கஷ்டம் விளங்குது!! உதுக்கேன் கவலைப்படுறியள்?!!. உங்களுக்கு கிடைக்கிறது கிடைக்காமல் விடாது. :)

இதென்ன அநியாயமா இருக்குது. தத்துவமா பேசுறீங்க. தத்துவம் எல்லாம் வேணாம்.. மக்கள் நிம்மதியா வாழ அடிப்படை உரிமை கிடைச்சாலே பெரிய காரியம்..! காதலர் தினத்தை சிவப்பு ரோஜைப் பூவைப் பறிச்சு கொண்டாடுறதால் இப்ப அது கிடைக்கப் போறதில்ல.. என்ற கவலை தான்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் காதலில் ஏமாறமாட்டனே...! ஏன்னா என்னை யாரும் உண்மையாவே காதலிக்கல்லையே. அப்படிக் காதலிக்க கிட்டவும் விடவும் மாட்டன்..! :)

என்ன தம்பி யாரவது உங்களை பொய்க்கு காதலித்து ஏமாற்றிப் போட்டாங்களா அவ்வளவு சோகம் கவலைப் படாதிங்கோ உங்களுக்கு ஏற்ற உங்களை விரும்பும் பொருத்தமான பொண்ணு கிடைப்பா.மற்றபடி கவிதை அருமை வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தம்பி யாரவது உங்களை பொய்க்கு காதலித்து ஏமாற்றிப் போட்டாங்களா அவ்வளவு சோகம் கவலைப் படாதிங்கோ உங்களுக்கு ஏற்ற உங்களை விரும்பும் பொருத்தமான பொண்ணு கிடைப்பா.மற்றபடி கவிதை அருமை வாழ்த்துகள்.

உலகமே ஒரு மாயை.. அதில வாழ்க்கை ஒரு போலி நாடகம்.. அதில பொய்யான காதல் இல்லாமல்.. எதுதான் மெய்யா இருக்கப் போகுது. பொய்யோட.. பொய்யா வாழ்ந்திட்டுப் போக வேண்டியதுதான். மெய்யா இருக்கிறது என்றதும்.. பொய்.. மெய்யை எதிர்பார்க்கிறதும் பொய்..! தேவைகள் நிறை வேறும் வரை பொய் மெய் என்று போலியா தோற்றம் காட்டப்படுவதுதான் உலக வழமையாகிட்டுது..! இதைச் சொல்லுறது என் அனுபவமல்ல.. அவதானம்..! :) :)

Edited by nedukkalapoovan

nedukkalapoovan Posted Today, 10:38 PM

உலகமே ஒரு மாயை.. அதில வாழ்க்கை ஒரு போலி நாடகம்.. அதில பொய்யான காதல் இல்லாமல்.. எதுதான் மெய்யா இருக்கப் போகுது. பொய்யோட.. பொய்யா வாழ்ந்திட்டுப் போக வேண்டியதுதான்.

இப்பிடியெல்லாம் சொல்லப்படாது.... ம்....... எனன்னதான் இருந்தாலும் விரக்தி அடையக் கூடாது.

சரிசரி கண்ணீரை கொஞ்சம் துடையுங்கோ.

சொல்ல மறந்திட்டன் கவிதை சூப்பர்

Edited by nige

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நேரத்தில் நல்ல கவிதை நெடுக்ஸ்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற பிரச்சனைக்குள்ள இது வேற :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற பிரச்சனைக்குள்ள இது வேற :huh:

இப்ப இருக்கிற பிரச்சனைக்காக நீங்கள் கலியாணம் கட்டாமல்.. பிள்ளை குட்டி பெறாமலா இருக்கீங்க. இல்ல ஊரில உலகத்தில தான் அப்படி இருக்கினமா..! ஒரு சில நூறு இலட்சியவாதிகளை விட..! :lol::icon_idea:

  • 5 months later...

நீங்கள் எழுதிய கவிதையோ நெடுக்காலபோவான்? அனுபவப்பகிர்வு உணர்வுபூர்வமாய் இருக்கிது. சொந்தமாக அனுபவப்படாமல் கைக்கு வந்தபடி கற்பனையில இப்படி கவிதை எழுத இயலாது என்று நினைக்கிறன். விரைவில் கவிதை எழுதியவரின் காயப்பட்ட இதயத்துக்கு மருந்து தடவ ஓர் இனியவள் வந்து வாய்ப்பாள் என்று பிரார்த்தனை செய்வோம். யாருண்டையோ துன்பியல் அனுபவத்தை சூப்பரான கவிதை என்று சொல்லி பாராட்ட முடியவில்லை. இணைப்பிற்கு நன்றி!

red-rose-tall1.jpg

நேற்றுத்தான் மொட்டானேன்..

ஆயிரம் கனவுகள் தாங்கி

விடிகாலை சூரியத் தழுவலில்..

பூவானேன்..!

பனிக் குளியலில்

மலர்ந்த என் தளிருடல்..

கூவி வரும்

சிங்களத்தான் வீசும்

செல்லுக்குக் கருகிய

ஈழத்தமிழ் பிஞ்சாய்..

பெப். 14 நாளில் கசங்கிக் கருகிப்போகும்.

மனித விதி சமைத்த வேளை வரும்

பரிசுப் பொருளாக

பறித்துப் பரிமாற

பாடையேறும் என் உடல்..

சோடி சோடியாய் அலையும்

மனிதப் பதர்களின்

கரங்கள் கசக்க.. கால்களில் மிதிபடும்..

மனசெல்லாம் கள்ளம் வைத்து

நடக்கும்

காதல்.. குத்தாட்டம்

என் இறுதி யாத்திரையில்…

அது தான் வலண்டைன்ஸ் டே

என் சாவுக்கு குறித்த நாள்..!!

எங்கோ ஒரு மூலையில்..

எனக்காயும்..

இதயம் கிழிந்து

விழிகள் நீர் சொரிய

ஏக்கமே வாழ்வாகிப் போன..

ஓர் உயிர் இருக்கும்..!

அது காதலின் பெயரால்…

ஏமாந்து

வாழ்வைத் தொலைத்த

நடைப்பிணமாய் இருக்கும்..!

Thanks: http://kuruvikal.wordpress.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதிய கவிதையோ நெடுக்காலபோவான்? அனுபவப்பகிர்வு உணர்வுபூர்வமாய் இருக்கிது. சொந்தமாக அனுபவப்படாமல் கைக்கு வந்தபடி கற்பனையில இப்படி கவிதை எழுத இயலாது என்று நினைக்கிறன். விரைவில் கவிதை எழுதியவரின் காயப்பட்ட இதயத்துக்கு மருந்து தடவ ஓர் இனியவள் வந்து வாய்ப்பாள் என்று பிரார்த்தனை செய்வோம். யாருண்டையோ துன்பியல் அனுபவத்தை சூப்பரான கவிதை என்று சொல்லி பாராட்ட முடியவில்லை. இணைப்பிற்கு நன்றி!

உண்மைச் சொன்னால்.. அது எனது கவிதையல்ல. ஆனால் நானும் காதலிச்சிருக்கிறேன். மனிதரை அல்ல.. மலரை.. மலர்களை..! அந்த மலருக்கு.. இவ்வளவு கஸ்டமா என்று கண்டவுடன்.. பதிவு செய்தேன்..! :(

  • கருத்துக்கள உறவுகள்

என் சாவு பெப். 14 இல்.

கவிதைத் தலைப்பை பாா்த்துட்டு ஓடோடி வந்தேன். நம்ம நெடுக்குக்கு நாள் குறிச்சிட்டினமோ எண்டு பதைபதைச்சிட்டேன்.

உங்கள் கவிதை அழகு.

வரிகள் அழகு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைத் தலைப்பை பாா்த்துட்டு ஓடோடி வந்தேன். நம்ம நெடுக்குக்கு நாள் குறிச்சிட்டினமோ எண்டு பதைபதைச்சிட்டேன்.

உங்கள் கவிதை அழகு.

வரிகள் அழகு.

இயற்கையையும் என்னையும் தவிர அவ்வளவு இலகுவாக எனக்கு நாள் குறிக்க அனுமதிப்பனா என்ன..??! வாழ ஆசைப்பட்டுத்தானே தாய் மண்ணை அந்நியனுக்கு விட்டுக் கொடுத்திட்டு வந்திருக்கிறன்..! :(:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயற்கையையும் என்னையும் தவிர அவ்வளவு இலகுவாக எனக்கு நாள் குறிக்க அனுதிப்பனா என்ன..??! வாழ ஆசைப்பட்டுத்தானே தாய் மண்ணை அந்நியனுக்கு விட்டுக் கொடுத்திட்டு வந்திருக்கிறன்..! :(:lol:

வாழ ஆசை பட்டு என்று - அது எல்லாருமே தானாக தனக்காக சுயமாய் விரும்பி எடுக்கும் முடிவு இல்லையே?

சிலருக்கு அந்த முடிவு மற்றவர்களால் எடுக்க படுகிறது.

இருந்தும் அந்த பிஞ்சு வயதிலேயே ஊரை விட்டுட்டு வர மனம் வரவில்லை. தேசிய உணர்வு என்ற விளக்கம் அன்றில்லை ஆனால்-

அம்மமா, அப்பப்பா, அன்ரிமகள், எழுத்து கூட்டி வாசிச்ச புத்தகங்கள், வெறும்மேலுடன் ஏறி இருந்த வாசல் சுவர், கூடி விளையாடும் பக்கத்து வீட்டு குண்டாஸ், குண்டடிக்கு மட்டும் இல்லை கோவம் வந்தாலும் ஓடி போய் ஒளிந்திருக்கும் பங்கர், வீட்டு முற்றம் கோயில் முற்றம் பள்ளிகூட முற்றம் என்று பொறுக்கி சேர்த்த சன்னங்கள், ஒரு நாள் நானும் இதில காத்தை கிழிச்சு கொண்டு பறப்பன் என்று ஸ்டாண்ட் இல நிக்க வச்சு ஓடி பழகின அண்ணாட சைக்கிள் -

- இவை எல்லாத்தையும் விட்டுட்டு வர நேர்ந்ததும் ஒரு விதத்தில காதல் தோல்வி போல தான் :lol: ......

காலப் போக்கில் யாரையும் கட்டி கொண்டு மாறுகிற காதல் போல நான் திரும்பி போனாலும் - எனது ஊர் எனக்கு சொந்தம் இல்லை என்ற நிலை! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.