Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல ஆறடிப் புலி

Featured Replies

அந்நியர் வந்து பாத்திடும்போது அதிசயம் தானே பூத்ததடா!

கவி சொன்னவர் பலர் பார்த்திடும் போது ஆகாயம் தானே பார்த்ததடா

புலி ஆகாயம் தானே பாய்ந்ததடா

வென்றிடும் களம் நாடிச்சென்றதில்லை அங்கே

குன்றிடும் மனம் என்றும் இருந்ததில்லை

சென்றிடும் வீரர் கொன்றிடும் வரையிலும் ஓய்ந்ததில்லை

களம் என்றிடும் வீட்டினில் கண் தூங்கவில்லை

வெடித்திடும் குண்டும் பயம் கொடுக்கவில்லை

பாயும் துப்பாக்கிச்சன்னமும் கூட துளைக்கவில்லை

சாயும் வேங்கைகள் என்றுமே நமைவிட்டுப் போகவில்லை

பாயும் கரும்புலிகூட சிரிக்கத் தவறவில்லை

சென்றிடும் போதும் சிரித்திடும் முகம்

பகை கொன்றிடும் போது கலங்குது மனம்

என்றிவர் மனமாறுமோ, களம் தீருமோ

கண் கொண்டவர் மீதினில் சதிராடுமோ?

காற்றுக்கூட முகவரி மறந்தது

மழையும் கூட வீடுகள் தேடுது

மேகமும் கூட புலிக் காற்றுக்காய் ஏங்குது

நிலங்களும் கூட தோள்வெடிப்பேற்குது

துப்பாக்கிச் சன்னமும் சோம்பேறியாகுது

துர்ப்பாக்கிய நிலையான வவுனியா முகாமிலே

கிளியில் கிளிகளின் கதறல்கள் கேக்குது

மாங்குளத்திலே தமிழ் யாழிகளின் இரத்தமோ பாயுது

அழுதிடும் குழந்தையும் ஆதரவு தேடுது

அன்னையர் இன்றி அது தானே சாகுது

அணைத்திட இருக்கும் புலி பயங்கரவாதி பெயர் வாங்குது

ஆதரவு கொடுத்திட நாமோ தயக்கம் காட்டுது

நிலம் வாங்கவேணும்

புலத்தில் நகை வாங்கவேணும்

கழுத்தில் அதைப்போடவேணும்

ஈழத்தில் கழுத்தறுபடுகுது

பிசாஎண்டால் தான் கழுத்துக்க இறங்குமாம்

மக் டோனால்ஸ் எண்டாத்தான் சாப்பாடு செமிக்குமாம்

சிவாஸ் அடிச்சாத்தான் வெறியும் கூடுமாம்

சிவாவோ அங்கே கஞ்சியின்றி சாகிறான்

பொறுத்தது போதும், இழந்தவை போதும் என்றும் நிலைத்திட வேணும்

தமிழ் வாழ்ந்திடவேணும், கண் விழித்திடவேணும்

அட்டிலில் இருக்கும் விட்டில்கள் அல்ல எங்கள் உறவுகள்

ஆதரவின்றித் தவிக்கும் சிட்டுக்கள்

இரத்தம் ஆறாய் ஓடுது

இந்துமாகடல் கூட செந்நிறமாகுது

இன்னம் சிறிதுகாலம் தான் புலியை அழிக்க இல்லை

ஒட்டுமொத்த தமிழை அழிக்கவென்று கூவுது சிங்களம்

பாடிடும் வேங்கையும் பணியவேண்டுமாம்

கோடிட்டுக்காட்டுது இனவெறியரசு

புலம் தனில் களமாடிடும் வேங்கையும் பணிந்திடவேண்டுமாம்

அடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல

ஆறடிப் புலி என்று உரக்கவே சொல்லுவோம்…………

http://www.nilavan.tk

Edited by யாழ்நிலவன்

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த மண் வீரம்யாழ் நிலவனை கவி எழுத வைக்குது ...புலிகொடிஎறும்,

மாண்ட வீரர் கனவு பலிக்கும் .......மகிழ்ச்சிக்கடலில் தமிழ் மண் சிலிர்க்கும் ..நம்பியிருப்போம் .

  • தொடங்கியவர்

நிலாமதி அக்கா எப்பிடித்தான் ஒரு ஆக்கம் போட்டு 1நிமிசம் கூட ஆகாது முதலாவது பதில் உங்கட இருக்கும் எப்படித்தான் கண்டு பிடிக்கின்றீர்களோ?

Edited by யாழ்நிலவன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்த பக்கம் தல .....காட்ட வேணாம் என்று ..........சொலுரீங்க்களோ ?

.9.01............க்கு பதிந்தீர்கள் நான் ..9.12.........க்கு தானே பதில் போடனான் பிடிக்கலை என்றால் சொல்லுங்கோ .

...நான் உங்க பக்கம் தலை காட்ட இல்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழுதிடும் குழந்தையும் ஆதரவு தேடுது

அன்னையர் இன்றி அது தானே சாகுது

அணைத்திட இருக்கும் புலி பயங்கரவாதி பெயர் வாங்குது

ஆதரவு கொடுத்திட நாமோ தயக்கம் காட்டுது

நிலம் வாங்கவேணும்

புலத்தில் நகை வாங்கவேணும்

கழுத்தில் அதைப்போடவேணும்

ஈழத்தில் கழுத்தறுபடுகுது

பிசாஎண்டால் தான் கழுத்துக்க இறங்குமாம்

மக் டோனால்ஸ் எண்டாத்தான் சாப்பாடு செமிக்குமாம்

சிவாஸ் அடிச்சாத்தான் வெறியும் கூடுமாம்

சிவாவோ அங்கே கஞ்சியின்றி சாகிறான்

அட்டிலில் இருக்கும் விட்டில்கள் அல்ல எங்கள் உறவுகள்

ஆதரவின்றித் தவிக்கும் சிட்டுக்கள

காலத்தின் பதிவுகள்.

நிறைய பேருக்கு இன்னும் புரியலை

புரியும் போது யாரும் இருக்கப்போவதில்லை..........

  • கருத்துக்கள உறவுகள்

பிசாஎண்டால் தான் கழுத்துக்க இறங்குமாம்

மக் டோனால்ஸ் எண்டாத்தான் சாப்பாடு செமிக்குமாம்

சிவாஸ் அடிச்சாத்தான் வெறியும் கூடுமாம்

சிவாவோ அங்கே கஞ்சியின்றி சாகிறான்

நன்றி யாழ்நிலவன். அன்றொருவரோடு கதைக்கும் போது சிவாஸோ என்னமோ அடிச்சிப்போட்டு சொல்கிறார் "அது பெடியள் பாத்துக்கொள்ளுவாங்களாம்." எப்ப இதுகள் திருந்தி .......... இவர்களில் நம்பிக்கை போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாழ்நிலவன். நல்ல கவிதை!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்நிலவனுக்கு (புலவனுக்கு) வாழ்துக்கள்...கவிதைகள் தொடரட்டும்....ஈழமும் பிறக்கட்டும்... அமைதி தொடரட்டும்...

  • தொடங்கியவர்

காலத்தின் பதிவுகள்.

நிறைய பேருக்கு இன்னும் புரியலை

புரியும் போது யாரும் இருக்கப்போவதில்லை..........

நன்றி பிரசாந்த் உங்கள் கருத்துக்கு,

நன்றி யாழ்நிலவன். அன்றொருவரோடு கதைக்கும் போது சிவாஸோ என்னமோ அடிச்சிப்போட்டு சொல்கிறார் "அது பெடியள் பாத்துக்கொள்ளுவாங்களாம்." எப்ப இதுகள் திருந்தி .......... இவர்களில் நம்பிக்கை போய்விட்டது.

எதை அடித்தாலும் தமிழை மறக்காமல் இருந்தாச்சாரி

நன்றி யாழ்நிலவன். நல்ல கவிதை!!!

கருத்துக்கு மிக்க நன்றி

நிலவன்

ஓம் நான் தான். சொல்லுங்கோ......... ஏதோ வில்லங்கமான சிரிப்புப் போல கிடக்குது

  • தொடங்கியவர்

யாழ்நிலவனுக்கு (புலவனுக்கு) வாழ்துக்கள்...கவிதைகள் தொடரட்டும்....ஈழமும் பிறக்கட்டும்... அமைதி தொடரட்டும்...

நன்றி சியா. ஏன் புலம்புவனைப் புலவன் பட்டம் கொடுத்து அப்பட்டத்தினை கேவலப்படுத்துகின்றீர்கள்???

  • கருத்துக்கள உறவுகள்

நிலவன் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்நிலவன்

அற்புதமான வரிகளால் மக்கள் மனதை விழிப்புக்கொள்ளவும் எழுச்சியடையவும் வைத்திருக்கிற வரிகள். பாராட்டுக்கள் .....

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்நிலவன் உங்கள் கவிதை அழகு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நிலம் வாங்கவேணும்


புலத்தில் நகை வாங்கவேணும்


கழுத்தில் அதைப்போடவேணும்


ஈழத்தில் கழுத்தறுபடுகுது

ம்... உண்மை நிலையை அப்படியே சொன்னீர்கள்

நல்லாயிருக்குது கவிதை

  • தொடங்கியவர்

ம்... உண்மை நிலையை அப்படியே சொன்னீர்கள்

நல்லாயிருக்குது கவிதை

நன்றி தீயா

யாழ்நிலவன் உங்கள் கவிதை அழகு வாழ்த்துக்கள்

நன்றி கு.சா

ஆனா நீங்க பொய் சொல்லுறீங்களோ எண்டு தோண்டுது கு.சா

  • தொடங்கியவர்

யாழ்நிலவன்

அற்புதமான வரிகளால் மக்கள் மனதை விழிப்புக்கொள்ளவும் எழுச்சியடையவும் வைத்திருக்கிற வரிகள். பாராட்டுக்கள் .....

இளங்கவி

இது ஒன்றும் விளிப்பே அல்ல, இவைதான் என் மனதிற் தோன்றியவை, விளிப்பு என்பது விழிக்கும் விரைவில் அப்போது கூறுங்கள். இளங்கவி, நான் உண்மையிற் கவிஞனல்லன் ஏதோ நாலுவரி கிறுக்கத் தெரிந்த பரதேசி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கு.சா

ஆனா நீங்க பொய் சொல்லுறீங்களோ எண்டு தோண்டுது கு.சா

பாம்பின்கால் பாம்பறியும் எண்டது உண்மை போலை கிடக்கு :wub:

  • தொடங்கியவர்

பாம்பின்கால் பாம்பறியும் எண்டது உண்மை போலை கிடக்கு

கிகிகி அதுதானே அண்ணை

  • கருத்துக்கள உறவுகள்

நிலவன் :lol:

வார்த்தை முட்டுது வசிக்கு :lol:

நிலவன் :lol:

<_<

நிலம் வாங்குவதில் இன்னும் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கும் தமிழர் மும்முரமாகத்தானே இருக்கிறார்கள் நிலவன்.

புலத்தில் நகைவாங்க இப்பவும் கன கடைகள் புதிபுதிதாக திறக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசக்கணக்கில்.

கவிதைக்குப் பாராட்டுக்கள் நிலவன்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
கவிதைக்குப் பாராட்டுக்கள் நிலவன்
.நன்றி சாந்தி.
  • 1 year later...
  • தொடங்கியவர்

அந்நியர் வந்து பாத்திடும்போது அதிசயம் தானே பூத்ததடா!

கவி சொன்னவர் பலர் பார்த்திடும் போது ஆகாயம் தானே பார்த்ததடா

புலி ஆகாயம் தானே பாய்ந்ததடா

வென்றிடும் களம் நாடிச்சென்றதில்லை அங்கே

குன்றிடும் மனம் என்றும் இருந்ததில்லை

சென்றிடும் வீரர் கொன்றிடும் வரையிலும் ஓய்ந்ததில்லை

களம் என்றிடும் வீட்டினில் கண் தூங்கவில்லை

வெடித்திடும் குண்டும் பயம் கொடுக்கவில்லை

பாயும் துப்பாக்கிச்சன்னமும் கூட துளைக்கவில்லை

சாயும் வேங்கைகள் என்றுமே நமைவிட்டுப் போகவில்லை

பாயும் கரும்புலிகூட சிரிக்கத் தவறவில்லை

சென்றிடும் போதும் சிரித்திடும் முகம்

பகை கொன்றிடும் போது கலங்குது மனம்

என்றிவர் மனமாறுமோ, களம் தீருமோ

கண் கொண்டவர் மீதினில் சதிராடுமோ?

காற்றுக்கூட முகவரி மறந்தது

மழையும் கூட வீடுகள் தேடுது

மேகமும் கூட புலிக் காற்றுக்காய் ஏங்குது

நிலங்களும் கூட தோள்வெடிப்பேற்குது

துப்பாக்கிச் சன்னமும் சோம்பேறியாகுது

துர்ப்பாக்கிய நிலையான வவுனியா முகாமிலே

கிளியில் கிளிகளின் கதறல்கள் கேக்குது

மாங்குளத்திலே தமிழ் யாழிகளின் இரத்தமோ பாயுது

அழுதிடும் குழந்தையும் ஆதரவு தேடுது

அன்னையர் இன்றி அது தானே சாகுது

அணைத்திட இருக்கும் புலி பயங்கரவாதி பெயர் வாங்குது

ஆதரவு கொடுத்திட நாமோ தயக்கம் காட்டுது

நிலம் வாங்கவேணும்

புலத்தில் நகை வாங்கவேணும்

கழுத்தில் அதைப்போடவேணும்

ஈழத்தில் கழுத்தறுபடுகுது

பிசாஎண்டால் தான் கழுத்துக்க இறங்குமாம்

மக் டோனால்ஸ் எண்டாத்தான் சாப்பாடு செமிக்குமாம்

சிவாஸ் அடிச்சாத்தான் வெறியும் கூடுமாம்

சிவாவோ அங்கே கஞ்சியின்றி சாகிறான்

பொறுத்தது போதும், இழந்தவை போதும் என்றும் நிலைத்திட வேணும்

தமிழ் வாழ்ந்திடவேணும், கண் விழித்திடவேணும்

அட்டிலில் இருக்கும் விட்டில்கள் அல்ல எங்கள் உறவுகள்

ஆதரவின்றித் தவிக்கும் சிட்டுக்கள்

இரத்தம் ஆறாய் ஓடுது

இந்துமாகடல் கூட செந்நிறமாகுது

இன்னம் சிறிதுகாலம் தான் புலியை அழிக்க இல்லை

ஒட்டுமொத்த தமிழை அழிக்கவென்று கூவுது சிங்களம்

பாடிடும் வேங்கையும் பணியவேண்டுமாம்

கோடிட்டுக்காட்டுது இனவெறியரசு

புலம் தனில் களமாடிடும் வேங்கையும் பணிந்திடவேண்டுமாம்

அடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல

ஆறடிப் புலி என்று உரக்கவே சொல்லுவோம்…………

http://www.nilavan.tk

யாரங்கே! கொடுங்கள் சாட்டையடி . எனக்கு இப்படிக் கவிதை எழுத தெரியாததற்கு.வாழ்த்துக்கள் யாழ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.