Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா கொடுத்த நச்சுக் குண்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கொடுத்த நச்சுவாயு புதுக்குடியிருப்பு மோதலில் சிறிலங்கா படையினர் பாவிக்கப்பட்டது அம்பலம்.

விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் சிறிலாங்கா இராணுவம் கூறியிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்ச்சண்டை பிடித்துக் கொண்டிருந்தமையால்....

இராணுவத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது. அவ்வேளையில் தான் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் நச்சுக்குண்டை ஏவியிருக்கின்றார்கள்.

அதனால்,அங்கு நின்ற போராளிகள் மயக்கமுற்று கீழே வீழ்ந்ததாகவும். பின் இராணுவம் முன்னேறிச்சென்று மயக்கமுற்றவர்களை சுட்டுக்கொன்றதாகவும் அறியமுடிகின்றது.

இச்சம்பவத்தில் தப்பி வந்தவர்களில் சிலருக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்று, வாந்தி போன்றன ஏற்பட்டதாகவும் கூறினார்கள்.

இராணுவத்தின் தொலைத்தொடர்பு உரைகளை ஒட்டுக் கேட்கப்பட்டபோது இவ் நச்சுக்குண்டை பாவிப்பதற்கு முன் வேறு சில அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டதாகவும், அவ்விடத்தில் நின்ற இராணுவத்திற்கு முகத்திற்கு அணியும் முகமூடி(மாஸ்க்) கொடுக்கப்பட்டதாகவும், இராணுவத்தை சற்று பின் நகர்த்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

மேலும் இவ் நடவடிக்கையால் இராணுவத்தினரும் மயக்கமுற்று பாதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

உலகிலே தடை செய்யப்பட்ட அயுதங்களை பாவித்தாவது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியாவும், சிறிலங்கா கொடிய அரசும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. அதற்கு சர்வதேசத்தின் ஆசியும் கிடைத்திருக்கின்றது.

தமிழ்வின்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அனியாயங்களை எப்படியும் அம்பலப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழனை கொல்ல இன்னும் எதையெல்லாம் வழங்கபோகுதோ இந்த .................நாடு :(:(

  • கருத்துக்கள உறவுகள்

நச்சுக் குண்டு பாவிக்கப்படதை யாராவது வன்னித் தகவல்கள் ஊடாகப் பெற்றுத் தயவுசெய்து இணைப்பீர்களா?

ஏனென்றால் இதில் முக்கியமான இரண்டு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

1) தமிழினத்தின் பாதுகாப்புக் கவசங்களால் இனி எந்த வழியிலும் போராட முடியாதென்று புலம் பெயர் தமிழர்களுக்கு உணர்த்துவது

2) இந்த நடவடிக்கையூடாக தமிழினத்தை தளர்வுறச் செய்து போராட்டத் திறனை நசுக்குவதூடாக வெளிநாடுகளில் ஏற்பட்டவரும் கருத்தியல் மாற்றத்தை நீர்த்துப் போகச் செய்தல்.என்பனவும் இந்த இந்திய - சிறிலங்கா அரசுகளின் பயங்கரவாத நடவடிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் உறவுகளிடம் தெளிவும் உறுதியும் மிக அவசியமானது. நாம் சோர்வடையாது எமது பணிகளை வேகப்படுத்தவதோடு, இந்த நச்சுக் குண்டுப் பாவனையை சர்வதேச அரங்கிலே அம்பலப்படுத்துவோம். நாம் வாழும் நாட்டு மக்களிடம் முன்வைப்போமானால் பலன் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த உறவுகள் இன்னும் வேகமாக .........நிறையவே செய்ய வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த அனியாயங்களை எப்படியும் அம்பலப்படுத்த வேண்டும்.

யாருக்கண்ண அம்பலப்படுத்திறது. எல்லாரும் ஒன்றுகூடி திட்டம் போட்டுச் செய்யுறாங்கள். அப்படி இருக்க நாங்கள் யாருக்கு அம்பலப்படுத்தி.. யாரு என்ன செய்திடப் போறான். இவ்வளவு சனங்கள் இறக்கவும் பார்த்து பரிகசித்துக் கொண்டிருக்கிற உலகம்.

இத்தாலியை உலுக்கினது போல பெரிய பூகம்பங்கள் உலுக்கி இந்த உலகமே அழிஞ்சால் உண்டு. மற்றும்படி இவர்களுக்கு தண்டனை வழங்குவது இயலாத காரியம்..! :(

எரி காயங்களுக்குட்பட்டவாறு போராளிகளின் உடலங்களை காணும் போதே, இத்தகைய தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது. ஆனால் இப்படித்தான் நடந்திருந்தால் நிச்சயம் புலிகள் உத்தியோகபூர்வமாக கண்டன அறிக்கை வெளியிட்டு இருப்பார்கள்.

யாருக்கண்ண அம்பலப்படுத்திறது. எல்லாரும் ஒன்றுகூடி திட்டம் போட்டுச் செய்யுறாங்கள். அப்படி இருக்க நாங்கள் யாருக்கு அம்பலப்படுத்தி.. யாரு என்ன செய்திடப் போறான். இவ்வளவு சனங்கள் இறக்கவும் பார்த்து பரிகசித்துக் கொண்டிருக்கிற உலகம்.

இத்தாலியை உலுக்கினது போல பெரிய பூகம்பங்கள் உலுக்கி இந்த உலகமே அழிஞ்சால் உண்டு. மற்றும்படி இவர்களுக்கு தண்டனை வழங்குவது இயலாத காரியம்..! :(

ஆம் நெடுக்ஸ்... மிக கசப்பானதாக இருந்தாலும், இது தான் உண்மை.

இந்த செய்தி வந்ததுலை இருந்து என்னால நிம்மதியாய் கூட இருக்க முடிய வில்லை... இது ஒரு பொய் செய்தியாயும் இருக்கலாம் இல்லையா? ஏன் உள்ளுக்கு போனவர்களை புடித்து கொன்று போட்டு படம் போட்டு இருக்க கூடாது.. ஆனால் நாம் தளர்ந்து போய் இட கூடாது.. எல்லாரும் ஒன்று பட வேணும்... நாம் ஒன்று பட்டு விரைவாய் உலகத்துக்கு எடுத்து சொல்லணும் அங்க நடக்குற அனியாத்தை... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேதனையான விடயம் தான் இது கடவுளே இந்திய நாய்கள் இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறதோ :(

இந்த விஷயத்தை நேற்றே போட்டோ வெளிவந்ததும் யாரோ ஒரு யாழ் நண்பர் இணைத்து இருந்தார் . ஆனால் யாரும் கண்டுகொள்ள வில்லை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=55351

ஆனால் பெரும்பாலும் ஒட்டு மொத்த உலக ஊடகங்களும் இன்று வெளிவிட்ட ( நானூறு புலிகள் பலி ). செய்திக்கான மறுப்போ அல்லது விளக்கமோ இன்னும் எவரிடம் இருந்தும் வரவில்லை . அதுதான் குழப்பியடிக்கிறது .

ஏற்கனவே புதுக்குடியிருப்பை பிடித்து விட்டதாக பத்து முறைக்கும் மேல் ராணுவம் சொன்னதால் மட்டுமே எனக்கு இந்த செய்தி மேல் நம்பிக்கை இல்லை

மேலும் இன்னும் சில நாட்களில் மீண்டும் புதுக்குடியிருப்பை ராணுவம் பிடித்ததாக செய்திகள் வெளிவரும் என எதிர்நோக்கலாம்.

Edited by tamil paithiyam

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கொடுத்த நச்சுவாயு புதுக்குடியிருப்பு மோதலில் சிறிலங்கா படையினர் பாவிக்கப்பட்டது அம்பலம்.

இராணுவத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது. அவ்வேளையில் தான் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் நச்சுக்குண்டை ஏவியிருக்கின்றார்கள்.

தமிழ்வின்.கொம்

கோழைகள்.. நேருக்கு நேர் மோத தைரியம் இல்லாத பயந்தான் பீச்சான் கோழியல் போக்க விட்டு பின்னால குத்துதுவள் :( ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளை வெல்ல முடியாது என்று தெரியும் அதற்காக எத்தனை குறுக்கு வழியிலும் குரூர புத்தியுடனும் இந்தியாவும் சிங்களமும் செயல்படுகுது?!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ என்னால் இதை பாக்க முடியவில்லை!

எனது போராளிகள் இப்படி போவதா?

கோழைகள்...நல்லா இருப்பாங்களா...

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்த விடயம்!

இதன் விளைவும் பாராதூரமாக இருக்கும்.

இந்த அவலத்தை அவர்களுக்கு திருப்பித்தரப்படவேண்டும்.... முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களால் நச்சு குண்டைத்தான் கொடுக்கமுடிகிறது ஆனால் சந்தர்ப்பம் வரும்போது தமிழர்களே குண்டாக மாறி எம் மாவீரர்களினதும் எம் மக்களினதும் தாகம் தீர்ப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால் நச்சு குண்டைத்தான் கொடுக்கமுடிகிறது ஆனால் சந்தர்ப்பம் வரும்போது தமிழர்களே குண்டாக மாறி எம் மாவீரர்களினதும் எம் மக்களினதும் தாகம் தீர்ப்பார்கள்

மாம்ஸ் உவங்கள் செய்யிற துரோகம் கொஞ்ச நஞ்சம் இல்லை. சொல்லிட்டே போக்கலாம்.... :blink:

இனி வார ஆர்பாட்டங்களிள உவங்கட தேசிய கொடியயும் எரிக்க வேனும் :wub:

காந்தி தேசம்மாம் காந்தி‍.... நாய்க்கு ... தேசம் :wub:

Edited by kuddipaiyan26

நச்சுவாயு புதுக்குடியிருப்பு மோதலில் சிறிலங்கா படையினரால் பாவிக்கப்பட்டது அம்பலம்

[ வா.கி.குமார் ]

செவ்வாய், 07 ஏப்ரல் 2009 08:29

விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் சிறிலாங்கா இராணுவம் கூறியிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்ச்சண்டை பிடித்துக் கொண்டிருந்தமையால் இராணுவத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது.

அவ்வேளையில் தான் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் எரி நச்சுக்குண்டை ஏவியிருக்கின்றார்கள்.

அதனால் அங்கு நின்ற போராளிகள் அவ் எரி நச்சுக்குண்டு பட்டு எரிந்த நிலையில் கீழே வீழ்ந்ததாகவும். பின் இராணுவம் முன்னேறிச்சென்று இவ்வீரர்களின் உடலங்களைக்க் கைப்பற்றியதாகவும் அறியமுடிகின்றது.

இவ் எரி நச்சுவாயுவை சுவாசித்து தப்பி வந்தவர்களில் சிலருக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்று, வாந்தி போன்றன ஏற்பட்டதாகவும் கூறினார்கள்.

இராணுவத்தின் தொலைத்தொடர்பு உரைகளை ஒட்டுக் கேட்கப்பட்டபோது இவ் நச்சுக்குண்டை பாவிப்பதற்கு முன் வேறு சில அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டதாகவும், அவ்விடத்தில் நின்ற இராணுவத்திற்கு முகத்திற்கு அணியும் முகமூடி(மாஸ்க்) கொடுக்கப்பட்டதாகவும், இராணுவத்தை சற்று பின் நகர்த்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

மேலும் இவ் நடவடிக்கையால் இராணுவத்தினரும் மயக்கமுற்று பாதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

உலகிலே தடை செய்யப்பட்ட அயுதங்களை பாவித்தாவது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியாவும்,சிறிலங்கா கொடிய அரசும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. அதற்கு சர்வதேசத்தின் ஆசியும் கிடைத்திருக்கின்றது.

ஆதாரம் சுவிஸ்முரசம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.