Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி.

Featured Replies

தாயக மீட்புப் போரில் இதுவரை தமது இனிய இளைய உயிர்களை ஆகுதியாக்கிய அனைத்துப் போராளிகளினதும் பொதுமக்களினதும் கனவை நனவாக்க தலைவர் காட்டிய வழியில் எனது இறுதி மூச்சுவரை உழைப்பேன்.

மகிழ்ச்சியோ டொருநாள் எங்கள்

மண்ணிலே விடியல் தோன்றும்

புகழ்ச்சியோ அல்ல.... எங்கள்

புலிப்படை வென்றே தீரும்.

  • Replies 65
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த வருடங்களில் கரும்புலிகள் சொன்ன கடைசி வார்த்தைகள்...'அண்ணை கவனம்....அண்ணை கவனம்'.....

அண்ணனின் கனவை நனவாக்க ஒவ்வொரு தமிழனும் புலத்திலிருந்து போராடுவோம்...

அண்மைக்காலங்களில் நாம் ஒற்றுமையை இருந்ததுபோல் தொடர்ந்து நமது ஒற்றுமையை பேணி நமது ஈழத்தை வென்றெடுப்போம்.....

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் வழி செல்வோம். தமிழர் உரிமையை வென்றெடுப்போம். என்னாலான அனைத்து பங்களிப்பையும் வழங்குவேன். இது உறுதி.

33 வருடங்களாக தனி ஒரு மனிதனாக தமிழினத்தை தாங்கி நிண்ட தலைவருக்கு ஒட்டு மொத்தமாக கிழர்ந்து எழுந்து உறுதுணையாக நிற்காமல் பார்வையாளர்களாகவும் வேறு வேலைகளை முக்கியமாக கொண்டு இருந்த தமிழினம் ரோட்டோரம் நாயை போல அடிபட்டு சாக வேண்டும்.. ( அதில் நானும் அடக்கம்)

முடிந்த அளவு காசு சேர்த்து தாயகத்தில் இருக்கும் உறவுகளை வெளியே எடுப்பது மட்டுமே எனது முழுமையான குறிக்கோள்...

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடங்களில் கரும்புலிகள் சொன்ன கடைசி வார்த்தைகள்...'அண்ணை கவனம்....அண்ணை கவனம்'.....

அண்ணனின் கனவை நனவாக்க ஒவ்வொரு தமிழனும் புலத்திலிருந்து போராடுவோம்...

அண்மைக்காலங்களில் நாம் ஒற்றுமையை இருந்ததுபோல் தொடர்ந்து நமது ஒற்றுமையை பேணி நமது ஈழத்தை வென்றெடுப்போம்.....

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்...

பழந்தமிழிக்காகவும், தமிழர் நலன் காத்திடவும் என்றும் துணைபுரிவேன்

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்காக உயிர் நீத்த மாவீரர்கள், மக்கள் மீது ஆணை. எனது இறுதி மூச்சு வரை எனது தாய் நாட்டுக்காக என்னாலான பங்களிப்பை செய்வேன். தலைவா எங்கிருந்தாலும் வாழ்க.

எமது ஒற்றுமையை ஆயுதமாக்கி, புலத்திலும் தாய் நிலத்திலும் எமது எதிரிக்கெதிரான போரை அனைத்து சாத்தியமான வழிகளுடாக மேற்கொண்டு எமது தேசியத் தலைவர் அவர்களும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் கண்ட இலட்சியக் கனவினை நனவாக்குவோமென உறுதி செய்கிறேன்.

தமிழீழக் கனவுடன் விதையான நம் மாவீரர்களின் கனவுகள் நிச்சயம் ஒருநாள் நனவாகும். அவர்களின் தியாகங்கள் வீண் போகாது.

அதற்காக நிச்சயம் நாம் தொடர்ந்து போராட வேண்டும்.

இறுதிவரை போராட நான் உறுதி.

மிஞ்சியுள்ள என் வாழ்நாள் ஒவ்வொன்ரும் உங்கள் நினைப்பிலேயே நகரும்.

என் தெய்வங்களே, உங்கள் கனவை நனவாக்கப் பாடு படுவேன்.

இது சத்தியம்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காற்றினை யாரும் கைது செய்ய முடியாது- கடலலையாய் யாரும் வலையில் அள்ள முடியாது! இலட்சிய வீரர்கள் தோள்களின் வலிமையில் சுமந்திடும் விடுதலைக்காக அத்தனை முயற்சிகளிலும் என் முன்னெடுப்பும் பங்களிப்பும் இருக்கும்.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்!

தமிழீழத்தில் சந்திப்போம்.

'கண்ணில் வழியும் நீரைத்துடைத்தே வாருங்கள் - எங்கள்

காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்"

இழிவாக வாழோம் தமிழ் ஈழப்போரில்

இனிமேலும் ஓயோம் உறுதி!.

எம் தேசத்தின் சுதந்திரத்துக்காய் என்னால் இயன்ற பங்களிப்பை தொடர்ச்சியாக வழங்குவேன்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

சர்வதேசக்காவல் துறையால் தேடப்படும் நபர் இப்போது உள்ள நிலையில் தலைவராக இருப்பது பொருத்தமாக இல்லை.

தலைவர் இருக்கிறார் அந்த சக்தி எம்மை ஒருங்கிணைக்கும் நாம் உறுதியாக செயல்படுவேம். இன்றுள்ள தேவை வதைமுகாங்களில் இருக்கும் எல்லோரையும்காப்பது.

இது நம் ஒவ்வொருவரின் வரலாற்று கடமை நான் என்றும் தலைவர்வழியில் உறுதியாக இருப்பேன்

ஈழம் தான் என்றும் எங்கள் தேசம் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தானைத் தலைவன் வழி நெடுகே

தமிழ்த்தாயின் துயர்தீர்க்க

களமாடிய மாவீரர்கள் வழி

எம் தமிழீழத் தாயகத்தை வென்றெடுக்கும் வரை என்னுயிர் நீத்தேனும் களமாடுவேன்

நன்றியுடன் புதியவன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழத்தின் விடிவுக்காய் .......சுதந்திர காற்றை சுவாசிக்க என்னால் முடிந்தவரை ........நானும் உங்களுடன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்

எம் தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காக எத்தனை ஆயிரம் மாவீரர்கள்... எத்தனை ஆயிரம் அப்பாவி மக்கள்... எத்தனை மீளப்பெற முடியாத இழப்புகள்....

எம் சுதந்திர மண்ணின் மீட்பிற்காக என்னால் இயன்றவரை என் வரலாற்று கடமையை நான் தொடர்ந்தும் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!!

Edited by குட்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழுக்கு என் உயிர்கொடுப்பேன் நான் சாகுமட்டும் எனது வாயில் தமிழ் தமிழ் தமீழம்

தமிழீழத்தை தவிர வேறு வழியில்லை..நூறு வீதம் தலைவர் பிரபாகரன் வழியில் நானும் தொடர்ந்து மேலதிக பணிகளை முன்னெடுக்க உறுதி எடுக்கிறேன்..

குழுவாக நீங்கள் எடுக்கும் எல்லா ஆக்கபுர்வமான முயற்சிகளுக்கு தயவுசெய்து தொடர்புகொள்ளுங்கள்

நன்றி.

துரோகங்களாலும், வஞ்சனைகளாலுமே நிரம்பி இருக்கும் ஒற்றுமையற்ற இனத்தில் எல்லோரும் அதிசயிக்கத்தக்க விதத்தில் ஒழுக்கத்தினாலும், தியாயகத்தாலும் பேரியக்கத்தினை கட்டினான் தலைவன் பிரபாகரன். அவன் வாழ்ந்த காலத்தில் வாழும் பாக்கியம் கிடைத்ததே என மகிழ்ந்து இருந்த காலத்தில் தான் அவனின் சாவையும் எதிர் கொள்ள வேண்டிய மிக துரதிஸ்டமான நாளும் வாழ்வில் வந்துவிட்டது. வெறும் விசைப் பலகையில் வீரமும், இடைக்கிடையில் ஒரு சில கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொள்வதுமாய் நகைப்புக்கிடமான விதத்தில் இதுவரைக்கும் பங்களிப்பு செய்து கொண்டு இருந்த நான் இனியாவது காத்திரமான வழியில் கெளரவமான தீர்வொன்றினை பெறும் அளவிற்கேனும் பணியாற்ற முயல வேண்டும் என தீர்மானம் எடுக்கின்றேன்

என்னால எல்லா வகையிலும் நாட்டுக்காக உழைப்பேன்... நானும் உங்களுடன் இணைந்து இருப்பேன்.... தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!!

  • கருத்துக்கள உறவுகள்

துரோகங்களாலும், வஞ்சனைகளாலுமே நிரம்பி இருக்கும் ஒற்றுமையற்ற இனத்தில் எல்லோரும் அதிசயிக்கத்தக்க விதத்தில் ஒழுக்கத்தினாலும், தியாயகத்தாலும் பேரியக்கத்தினை கட்டினான் தலைவன் பிரபாகரன். அவன் வாழ்ந்த காலத்தில் வாழும் பாக்கியம் கிடைத்ததே என மகிழ்ந்து இருந்த காலத்தில் தான் அவனின் சாவையும் எதிர் கொள்ள வேண்டிய மிக துரதிஸ்டமான நாளும் வாழ்வில் வந்துவிட்டது. வெறும் விசைப் பலகையில் வீரமும், இடைக்கிடையில் ஒரு சில கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொள்வதுமாய் நகைப்புக்கிடமான விதத்தில் இதுவரைக்கும் பங்களிப்பு செய்து கொண்டு இருந்த நான் இனியாவது காத்திரமான வழியில் கெளரவமான தீர்வொன்றினை பெறும் அளவிற்கேனும் பணியாற்ற முயல வேண்டும் என தீர்மானம் எடுக்கின்றேன்

மீிண்டும் சொல்கிறேன்.நிழலி சொன்ன மாதிதிரி எந்த துக்கம் எனது மனதையும் தொண்டையையூம் அடைத்தாலும் எம் தலைவன் காட்டடிய வழியில் தொடர்ந்து எனது பங்ளிப்பு இருக்கும்.

என்னால் செய்யக்கூடியவற்றை நானும் செய்துகொண்டேயிருக்கின்றேன். இங்கு யாழ் கருத்துகளத்தில் எனது கையெழுத்தாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே உறுதியெடுத்துவிட்டேன் "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.