Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நாடு கடந்த தமிழீழ அரசு" நடவடிக்கையுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தொடர்புபடவில்லை ஸ்ரீகாந்தா எம்.பி. சொல்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நாடுகடந்த தமிழீழ அரசு" என்ற விடயத் தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந் தச்சம்பந்தமும் கிடையாது என்று நாடாளு மன்ற உறுப்பினர்சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளி யிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக் கப்பட்டிருப்பவை வருமாறு:

நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு ஆச்சரி யம் அளிக்கின்றது.

இந்த நடவடிக்கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு விதத்திலும் தொடர்புபட மாட்டாது.

எவரும் எந்தவொரு நிகழ்ச்சி நிரலையும் எம்மீது திணிக்க முடியாது.

எமது இனத்தின் மிக நெருக்கடியான காலகட்டத்தில் பொறுப்புணர்வோடு செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை வென்றெடுக்கும் ஒரே குறிக்கோளையே கொண்டிருக்கின்றது.

இலங்கைத் தீவு ஓரே நாடு என்ற அரசியல் வரையறைக்குள் தமிழினத்தின் அரசியல் அபிலாஷைகளை அங்கீகரிக்கும் அரசியல் தீர்வு ஒன்றை எட்டும் வரை எமது அரசியல் போராட்டம் தொடரும்.

இந்த அரசியல் போராட்டத்தில் பொது வழிமுறைகளையும் அணுகுமுறைகளையும் நாமே தீர்மானிப்போம் என்று கூறப்பட்டுள்ளது.

உதயன்

Edited by ஜீவா

அவர் அப்படித்தான் அறிக்கை விட வேண்டும் .அப்பதான் அந்த மக்களுக்கு செய்ய வேண்டிய வேலைகளை ஒழுங்காக செய்ய முடியும்.அரசியல் சாணக்கியம்,ஈழத்தில் வாழும் எம்மவருக்கு உபத்திரம் கொடுக்காமல் புற நிலை செயற்பாடுகள் இருக்க வேண்டும்

இப்பத்தான் ஒரு பூதம் வெளிக்கிட்டிருக்கு....

இன்னும் எத்தினைவருமோ? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

"நாடு கடந்த தமிழீழ அரசு" நடவடிக்கையுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தொடர்புபடவில்லை ஸ்ரீகாந்தா எம்.பி. சொல்கிறார்

ஸ்ரீ காந்தா சரியாகத்தான் சொல்லியுள்ளார். அந்த அமைப்பின் பெயரே " நாடு கடந்த தமிழீழ அரசு " என்பதாக இருக்கும் போது .......

ஸ்ரீ காந்தா சரியாகத்தான் சொல்லியுள்ளார். அந்த அமைப்பின் பெயரே " நாடு கடந்த தமிழீழ அரசு " என்பதாக இருக்கும் போது .......

சிறி,

அது அமைப்பு அல்ல

ஒரு கட்டமைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி,

அது அமைப்பு அல்ல

ஒரு கட்டமைப்பு.

நாடுகடந்த தமிழீழ அரசில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபெறும் சாத்தியம் இல்லை. அது இலங்கை அரசியல் சட்டத்தை மீறும் செயலாகிவிடும். இலங்கையின் ஒருமைப்பட்டுக்கு எதிரான செயல்களை (அவை அரசியல் ரீதியிலானவையாக இருந்தாலும்கூட) அடக்கும் உரிமை இலங்கை அரசியல் சட்டத்திலேயே உள்ளது.

தமிழீழ அரசில் பங்குபெற்றுவது என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பை இலங்கையில் தடைசெய்வதிலேயே சென்று முடியும்..!

டங்குவார்,

அதுசரி

அடுத்த தேர்தலுக்குப்பின் கூட்டமைப்பு இருக்குமோ தெரியாது.

நான் சொன்ன வந்தது அமைப்புக்கும் கட்டமைப்புக்கும் இடையில் நிறைய வித்தியாசம் உள்ளது.

கூட்டமைப்பால் தனிய முடியுமாக இருந்திருந்தால் நாங்கள் ஏன் நாங்கள் ஏன் நாடு நாடா அலையவேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

இது சிறீகாந்தாவின் நிலைப்பாடு. கூட்டமைப்பின் ஒட்டுமொத்த நிலைப்பாடு இதுவா என்பது தெரியவில்லை.

இன்றைய தாயக அரசியல், இராணுவச் சூழலில் சிறீகாந்தாவின் நிலைப்பாடுகள் சில தவறல்ல.

ஆனால் மீண்டும் ஐக்கிய இலங்கைக்குள் என்று வாய்ப்பாட்டுப் பாடுவதுதான்.. தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளுக்கு ஒத்துவராததாக உள்ளது. கூட்டமைப்பின் அரசியல் கொள்கைக்கு முரணானதாகவும் இருக்கிறது.

கூட்டமைப்பு தமிழர் தாயக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட ஒரு அரசியல் கட்சியாகும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

இது சிறீகாந்தாவின் நிலைப்பாடு. கூட்டமைப்பின் ஒட்டுமொத்த நிலைப்பாடு இதுவா என்பது தெரியவில்லை.

இன்றைய தாயக அரசியல், இராணுவச் சூழலில் சிறீகாந்தாவின் நிலைப்பாடுகள் சில தவறல்ல.

ஆனால் மீண்டும் ஐக்கிய இலங்கைக்குள் என்று வாய்ப்பாட்டுப் பாடுவதுதான்.. தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளுக்கு ஒத்துவராததாக உள்ளது. கூட்டமைப்பின் அரசியல் கொள்கைக்கு முரணானதாகவும் இருக்கிறது.

கூட்டமைப்பு தமிழர் தாயக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட ஒரு அரசியல் கட்சியாகும்..! :icon_idea:

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் நெடுக்கு

இருந்தாலும் அங்கே முகாம்களிலும் திறந்த வெளிச்சிறைச்சாலைகளிலும் வாடும் சனங்களுக்கு முடிந்த அளவு விரைவாக ஒரு விடிவு வேண்டும். அல்லது அவர்கள் வாழ்க்கை முடிந்தளவுக்கு சகஜ நிலைக்கு கொண்டுவரப்படவேண்டும் அதுக்கு இப்ப உள்ள நிலமையில் முரண்டு பிடிச்சா இருக்கிறது இல்லாமல் போடும்.

ஆடுறமாட்டை ஆடிக்கறக்கவேண்டும், பாடுறமாட்டை பாடிக்கறக்கவேண்டும்.

இது சிறீகாந்தாவின் நிலைப்பாடு. கூட்டமைப்பின் ஒட்டுமொத்த நிலைப்பாடு இதுவா என்பது தெரியவில்லை.

இன்றைய சூழலில் கூட்டமைப்பினர் எல்லோரும் ஜக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்ற நிலைப்பாட்டைத்தான் எடுப்பார்கள் ,அப்பதான் அங்கு அரசியல் நடத்தலாம்.

தீபத்தில் சீனா ஆக்கிரமித்துள்ளது,தாலே லாமா இந்தியாவில் இருந்து போரடுரார் அப்படியான நிலமை எமக்கு வேண்டாம்.

Edited by Jil

மிக சரியானது, அப்படியே தொடருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிங்கள் உங்கள் வேலைகளை செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி,

அது அமைப்பு அல்ல

ஒரு கட்டமைப்பு.

ஒகே சூறாவளி ,

அதனை சொல்வதில் கொஞ்சம் என் நாக்கு கொஞ்சம் பிரண்டு போட்டுது .

  • கருத்துக்கள உறவுகள்

சூழ்நிலைகளை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைக்கின்றேன். சிறிலங்கா தேசத்தில் இருந்து கொண்டு, எனி வரும் நாட்களில் தனிநாடு பற்றிக் கதைக்க முடியாது. அது தன் இறையாண்மையைப் பாதிக்கும் என்று சிறிலங்கா அரசு கொடுமைப்படுத்தும். அதனால் தான் புலம்பெயர் மக்களிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மனங்களில் நிச்சயம் அதற்கான உணர்வைத் தாங்குவார்கள். ஆனால் வெளிப்படுத்த வேண்டியது, ஒவ்வொரு புலம்பெயர் தமிழனின் பொறுப்பாகும்.

தொடர்ச்சியாக நடக்கின்ற மனிதவுரிமை மீறல்கள் பற்றி மின்னஞ்சல் தொடங்கி எல்லா செயற்பட்டையும் செய்யுங்கள். அது சிறிலங்கா அரசு செய்கின்ற படுகொலைகளையும், வதைகளையும் குறைப்பதற்கு வழி செய்யும்.

தோற்கின்ற இனமாக நாம் என்றைக்கும் இருக்கக் கூடாது. அத்தோடு இப்படி மக்கள் படுகொலைகளைப் புரிகின்ற ஒரு கொடுரமான, இனவெறி கொண்ட நாட்டோடு என்றைக்குமே நாம் வாழ முடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று சந்திக்கும் மிக இக்கட்டான சூழ்நிலையில் இந்த நிலைப்பாடுதான் அவர்களை, அவர்களின் உயிரையும் அவர்கள் கட்சி நடத்துவதற்கான ஆகக் குறைந்த பாதுகாப்பையும் தரும்.

.. அத்தோடு இப்படி மக்கள் படுகொலைகளைப் புரிகின்ற ஒரு கொடுரமான, இனவெறி கொண்ட நாட்டோடு என்றைக்குமே நாம் வாழ முடியாது.

அதனால் தான் நாம் வெளிநாடு வந்துவிட்டோம்.

இனியும் சேர்ந்து வாழ்வதா அல்லது மேலும் இழப்புகளை தாங்கிக் கொண்டு அதற்கெதிராக போராடுவதா என்பதை அந்த மக்கள் தான் தீர்மானிப்பர். உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமை கூட நிராகரிக்கப் பட்டு, எந்த நிமிடத்திலும் எவனும் எதுவும் செய்து விட முடியும் எனும் சூழ்நிலைக்குள் வாழும் மக்கள் எடுக்கும் எந்த விதமான முடிவுக்கும் நாம் மதிப்பளிப்பதுதான் நாம் அவர்களுக்கு செய்யும் பெரிய உதவி

  • கருத்துக்கள உறவுகள்

ஓடி வந்த தவற்றை நீக்க வேண்டும் என நினைக்கின்றேன். அம்மக்கள் தான் போராட வேண்டும் என்று சுமத்தவில்லை. நாங்களும் தயாராக இருக்க வேண்டும் என்பதே அவா

  • கருத்துக்கள உறவுகள்

சூழ்நிலைகளை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைக்கின்றேன். சிறிலங்கா தேசத்தில் இருந்து கொண்டு, எனி வரும் நாட்களில் தனிநாடு பற்றிக் கதைக்க முடியாது. அது தன் இறையாண்மையைப் பாதிக்கும் என்று சிறிலங்கா அரசு கொடுமைப்படுத்தும். அதனால் தான் புலம்பெயர் மக்களிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மனங்களில் நிச்சயம் அதற்கான உணர்வைத் தாங்குவார்கள். ஆனால் வெளிப்படுத்த வேண்டியது, ஒவ்வொரு புலம்பெயர் தமிழனின் பொறுப்பாகும்.

தொடர்ச்சியாக நடக்கின்ற மனிதவுரிமை மீறல்கள் பற்றி மின்னஞ்சல் தொடங்கி எல்லா செயற்பட்டையும் செய்யுங்கள். அது சிறிலங்கா அரசு செய்கின்ற படுகொலைகளையும், வதைகளையும் குறைப்பதற்கு வழி செய்யும்.

தோற்கின்ற இனமாக நாம் என்றைக்கும் இருக்கக் கூடாது. அத்தோடு இப்படி மக்கள் படுகொலைகளைப் புரிகின்ற ஒரு கொடுரமான, இனவெறி கொண்ட நாட்டோடு என்றைக்குமே நாம் வாழ முடியாது.

தூயவன் , -------- ---- ---------- ; ------------------ --- ? ------------- -------- .

இங்கு பல நாட்களாக எல்லோரும் அறிவுரையும் , அறிக்கையும் தான் விடுகின்றார்கள் .

பூனைக்கு மணி கட்டுவதா இல்லையா ? அப்படி கட்டினாலும் ....... அந்த மணியை யார் கட்டுவது என்னும் விவாதம் , இன்னும் ...... ரொம்ப நாளைக்கு நீடிக்கும் போலுள்ளது .

இது நிச்சயம் வரவேற்கத் தக்கதல்ல .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசு என்பதும், சிங்கள அரசோடு சேர்ந்து வாழமுடியாததின் வெளிப்பாடாகும்

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரிக்கிறோமா இல்லையா என்று சொல்லாமல் மௌனமாக இருந்திருக்கலாம் தானே.அதை விட்டுவிட்டு கூட தேவையில்லாத ஒரு கூற்றாக இலங்கை என்ற ஒரே நாட்டிற்குள் தான் தீர்வு வேணுமென்றால் உலக நாடுகள் என்ன சொல்லும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி சேர்ந்து வாழ்வோம் என்று சொல்லும் பொழுது உங்கட நாடு கடந்த தமிழீழத்தை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ளுவோம் என்று கேட்கமாட்டார்களா? தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான் என்று இருந்தால்.அங்கு இருக்கும் மற்றைய எம்பிக்களும் சூழ் நிலைக்கைதிகள் தான் அவர்கள் ஒன்றும் பேசாமல் இருக்க தலை இருக்க வாலாடுவது நல்லதாகப் படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரிக்கிறோமா இல்லையா என்று சொல்லாமல் மௌனமாக இருந்திருக்கலாம் தானே.அதை விட்டுவிட்டு கூட தேவையில்லாத ஒரு கூற்றாக இலங்கை என்ற ஒரே நாட்டிற்குள் தான் தீர்வு வேணுமென்றால் உலக நாடுகள் என்ன சொல்லும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி சேர்ந்து வாழ்வோம் என்று சொல்லும் பொழுது உங்கட நாடு கடந்த தமிழீழத்தை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ளுவோம் என்று கேட்கமாட்டார்களா? தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான் என்று இருந்தால்.அங்கு இருக்கும் மற்றைய எம்பிக்களும் சூழ் நிலைக்கைதிகள் தான் அவர்கள் ஒன்றும் பேசாமல் இருக்க தலை இருக்க வாலாடுவது நல்லதாகப் படவில்லை.

தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று சொல்லுவாங்க. அப்புறம் வெளிநாட்டில் போய் 3 மாதம் போய் விடுமுறையை கழிப்பாங்க. கூட்டணியை மோட்டணி என்று சொல்ல வேணுமுங்க.

அவர் சொன்னதில பிழை இல்லை என நினைக்கிறேன். அவர்கள் இனி இந்தியா சார்ந்து தான் நிற்பார்கள். இதுக்கு மூச்சு விடாம இருந்து விட்டு. பிறகு யாரும் கேட்டாப்பிறகு அறிக்கை விடுகிறத பார்க்கிலும் முதலில் தங்கள் பதிலை கொடுத்டுள்ளார்கள்.

அவர்கள் ஒரு பக்கம் அரசியல் தீர்வுக்கு முயற்சிக்கட்டும் .நாங்க நம்ம வேலையை பார்ர்பம்

இவர்களும் நாடு கடந்த அரசுக்கு சம்மதம் என்றா இந்தியா பிறகு டக்கிளஸ் ட்ட போயிடும்.

உள்நாட்டு அரசியல் தேவைகளுக்குக் கூட்டமைப்பு நாடுகடந்த தமிழ் அரசினை இப்போதைக்கு நம்பியிருக்க முடியாது. இந்திய ஆதரவைத் திரட்டுவதில் கூட்டமைப்பிருக்குத்தான் நிறையப் பங்குகள் உண்டு. கடந்த காலத் தேர்தல்களில் யாழ்குடாநாட்டில் விடுதலைப்புலிகளின் பலம் ஒடுக்கப்பட்டிருந்தபோதே கூட்டமைப்பினர் அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தனர். எத்தனையோ சோதனைகளுக்கு மத்தியிலும் கிழக்கிலும் அதிக இடங்களைப் பெற்றனர்.

இன்றைய காலத்தில் தமிழர் பலம் அடக்கப்பட்டிருக்கும் நிலையிலும் தமிழர் உணர்வுகள் நசுக்கப்பட்டிருக்காது. ஆகவே கூட்டமைப்பினர் தேர்தலில் போட்டியிடுவதுடன் நாடுகடந்த அரசில் பங்குபற்றாமல் இருப்பதே நல்லது.

உள்நாட்டு அரசியல் தேவைகளுக்குக் கூட்டமைப்பு நாடுகடந்த தமிழ் அரசினை இப்போதைக்கு நம்பியிருக்க முடியாது. இந்திய ஆதரவைத் திரட்டுவதில் கூட்டமைப்பிருக்குத்தான் நிறையப் பங்குகள் உண்டு.

இன்றைய காலத்தில் தமிழர் பலம் அடக்கப்பட்டிருக்கும் நிலையிலும் தமிழர் உணர்வுகள் நசுக்கப்பட்டிருக்காது.

ஆகவே கூட்டமைப்பினர் தேர்தலில் போட்டியிடுவதுடன் நாடுகடந்த அரசில் பங்குபற்றாமல் இருப்பதே நல்லது.

:(:lol::lol:

கூட்டமைப்பினர் தேர்தலில் போட்டியிடுவதுடன் நாடுகடந்த அரசில் (தற்போதைக்கு) பங்குபற்றாமல் இருப்பதே நல்லது

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது அங்கு எமது மக்களுக்கான செயற்பாடுகள் முடக்கப்பட்டதால் தான் புலம்பெயர் நாடுகளில் உருவாக்கப்பட்டது. இதற்கு தமிழ்தேசிய கூட்டணி ஆதரவு அளிக்க கூடாது. மேலும் அவர்களின் அரசியல் நிலை திரிசங்கு நிலையாக உள்ள போது தமக்கு தொடர்பு இல்லை என்று கூறுவது தான் சரி.இதன் மூலம் அரசு கூறும் புலிகளிசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

உள்நாட்டில் ஜனநாயக ரீதியாக செயற்பட தம்மை ஸ்தீரணப்படுத்த வேண்டும். குறிப்பாக இடம்பெயர்ந்து வாழும் வடக்கு கிழக்கு அகதிகள் பற்றியது. தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் எந்த அரசு பிரதிநிதிகளுடனும் பேசக்கூடிய நிலைமையில் தங்களை வைத்திருக்க வேண்டும். கடந்த காலங்களில் இவர்களை புலிகளின் வால்கள் என்று பல வெளிநாட்டு பிரதிநிதிகள் சந்திக்காமல் விட்டு சென்றது நினைவு கூரத்தக்கது. உ+மாக கூட்டமைப்பின் பலருக்கு கனடாவிற்கு விசா வழங்கப்படுவதில்லை. ஈழவேந்தன் விதிவிலக்கு என நினைக்கிறேன்.

ஆதரிக்காமல் விடலாம் என்ற புலவரின் கூற்று தொடர்ந்து புலிவால்கள் என்ற அரசின் பிரச்சாரம் தொடர்ந்து செல்ல வாய்ப்பளித்து விடும்.மகிந்த அரசை சனநாயக ரீதியாக வீழ்ச்சி அடைய செய்ய வேண்டுமெனில் மிக சாதுரியமாக தான் நாம் செயற்பட வேண்டும்.நீண்ட கால போக்கில் தான் இதன் பெறுபேறுகள் எமக்கு சாத்தியமாகும். சுடுகுது மடிய பிடி என்றால் சரிவராது.

தமிழ் சிறி, நாம் எப்போதும் கால் வைக்காத புதிய பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளோம். நிதானமாக அடியெடுத்து வைப்பது தான் புத்திசாலித்தனமானது.

அதனால் தான் நாம் வெளிநாடு வந்துவிட்டோம்.

இனியும் சேர்ந்து வாழ்வதா அல்லது மேலும் இழப்புகளை தாங்கிக் கொண்டு அதற்கெதிராக போராடுவதா என்பதை அந்த மக்கள் தான் தீர்மானிப்பர். உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமை கூட நிராகரிக்கப் பட்டு, எந்த நிமிடத்திலும் எவனும் எதுவும் செய்து விட முடியும் எனும் சூழ்நிலைக்குள் வாழும் மக்கள் எடுக்கும் எந்த விதமான முடிவுக்கும் நாம் மதிப்பளிப்பதுதான் நாம் அவர்களுக்கு செய்யும் பெரிய உதவி

மக்கள் மீது யாரும் எந்த கருத்தையும் திணிக்கவில்லை. ஒரு சில மாதங்களில் அவர்களின் வாழ்கை நிலை இப்படி ஆக்கப்பட்டு விட்டது துரதிஸ்டமானது. ஆனால் அவர்களின் தற்போதைய நிலையில் எந்த முடிவும் எடுக்க கூடிய நிலையில் இல்லை. அப்படி எடுக்கப்பட்டாலும் அது பலோத்காரமாக அவர்களிடம் புகுத்தப்பட்டதாகவே இருக்கும். எனவே அவர்களின் மீள்குடியேற்றத்துக்கு பாடுபடுவோம்.அவர்களை சுயமாக சிந்திக்க விடுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.