Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த்தூ….. மண்ணாங்கட்டிகளே! குந்தியிருந்து மணிக்கணக்காப் பேசுக.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலம் எழுதியின் கவனப்பிழை

60938main_ozone_hole.jpg

தேடற்கவியின் உழல்வை

இதயக்குழி உள்வாங்க

உயிர்ப்பின் மூச்சு

ஓசோன் ஓட்டையாக…

காலம் எழுதியின் கவனப்பிழை

கருப்பைச் சுவர்களில் விசமுட்களாய்…

தரித்த குளவியின் பாதி உடல்

சீழ்கட்டிப் போய் சிகிலமாக…

பிணவாடை, கொள்ளை கோமாரி

ஐயோ….

பச்சை உடம்புக்காரி படுக்கையிலே….

காலம் எழுதியை அழைத்து வருவீர்.

வனையும் சூட்சுமத்தை வசீகரித்து

கால் செருப்பாக்கி

கொப்பளிக்கும் கானல் வெளியில்

கிடந்துழலும் மனிதர்களின்

வேதனையை உணர்த்த வேண்டும்.

பாழும் உலகிடையே வாழக் கேட்டு

வெட்கங்கெட்டுக் கிடக்கும் ஆறாம் அறிவு

தேவையற்றதாகத் தீர்மானிக்கப்பட்டாயிற்று.

த்தூ…..

மண்ணாங்கட்டிகளே! குந்தியிருந்து

மணிக்கணக்காப் பேசுக.

எங்கே எவர் தலையில்

குண்டுகளைக் கொட்டலாம்?

இன்னும் குற்றுயிராய், குலையுயிராய்

துடிதுடிக்க வதைத்தழித்து

மந்தைப் பட்டிக்குள் போட்டு மேய்க்க

எந்தச் சனியனுக்குத் திட்டமிருக்கோ

அங்கின போய்க் கொஞ்சிக் குலவுக.

பொட்டைடைக்கண்களுக்கு

அசோக மலர்களிடம் அடங்காத ஆசையோ?

இத்தொப்பி எவருக்கென்று

தொல்பொருள் ஆராய்ச்சி தேவையில்லை

காலம் எழுதிதான் கவனப்பிழை விட்டானென்றால்

கந்தறுந்த மனிதமுமா கண் கெட்டுக் கிடக்கிறது?

கோல விளக்கொளியில் கோலோச்சி வந்த மக்கா!

ஆட்சிக் கதிரைக்கு ஆளாய் பறந்து

அன்னை தமிழுக்கு ஆலவிசம் தந்தனையே….

போதுமப்பு உன் நடிப்பு.,

எல்லை தாண்டி வந்த கேடி

உயிரறுத்து துவசம் செய்தான்.

பள்ளி முதல் பங்கர்வரை

பாழ்படுத்திப் போனான்.

உயிர் கிடந்து உழன்றதனால்

ஊனத்துடன் அழுதலைந்தோம்.

விட்டானா?...

கந்தகக்குண்டுகளில் நஞ்சிருத்தி

கொன்றொழித்தான்

சந்ததி முழுவதையும்

சகதிக்குள் புதைய வைத்தான்.

மந்தைகளாய் அடைத்துள்ளான்.

அவன் சமபந்தி வைப்பானாம்.

சந்தர்ப்பம் பார்த்து சர்ப்பங்கள் ஆடுகின்றன.

வெந்து கிடக்கிறது உள்ளம்.

மீளத் தெளிவு

மிடுக்கெடுத்த நிமிர்விற்காய்

காலமுட்கள் கைநீட்டுகின்றன.

உயிர்த்தெழுக.

பீனிக்ஸ்ஸின் பிறப்புக்கு நாள் குறித்தாயிற்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

60938main_ozone_hole.jpg

வெந்து கிடக்கிறது உள்ளம்.

மீளத் தெளிவு

மிடுக்கெடுத்த நிமிர்விற்காய்

காலமுட்கள் கைநீட்டுகின்றன.

உயிர்த்தெழுக.

பீனிக்ஸ்ஸின் பிறப்புக்கு நாள் குறித்தாயிற்று.

வல்வைசஹாரா அக்கா... உள்ளதை உள்ளபடி சொல்லி இருக்கிறிங்க

அருமையான வரிகள்.

வலியோடு வாழ்பவர்க்கு வலியின் கொடுமை புரியும்.. வலிகளிலிருந்து மீண்டு எழுவோம்

சாம்பல் மேட்டிலிருந்து வரும் பீனிக்ஸ் பறவை போல..

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா மிகவும் நன்றி உங்களின் கவிதைக்கு.நாம் எல்லோரும் எமக்காய் ஒரு சுதந்திர பூமி உதயமாகும் வரை எங்கள் பேனாக் களினலாவது போர் செய்வோம்.பீனக்ஸ் பறவை எமக்கான சுதந்திரத்தோடு பிறக்கட்டும்.

பிரியமுடன்:யாயினி கனா.

சகாராக்கா.........ஒவ்வொரு தமிழனும் மனதில் நினைப்பதை அழகாக கவிதை வடிவில் வடித்துள்ளீா்கள்........பீனிக்ஸ் பறவைகள் போல் நாமும் உயிா்த்தெழும் காலம் வெகு தொலைவில் இல்லை.....

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை...வித்தியாசமான தலைப்பு...வாழ்த்துகள்.

அனைத்துத் தமிழ் மக்களின் உணர்விற்கும் வரி வடிவம் கொடுத்திருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிர்த்தெழுக.

பீனிக்ஸ்ஸின் பிறப்புக்கு நாள் குறித்தாயிற்று.

அருமையான வரிகள்......

எல்லாம் நடந்தாகி விட்டது... மறுபடியும் இனி என்ன நடக்க வேண்டுமென்பதையும் எதிரியே தீர்மானித்துக்கொண்டிருக்கி

தலைப்பை பார்த்துப்போட்டு என்னைத்தான் பேசுறீங்களோ என்று பயந்துபோனன். நல்லகாலம் அப்பிடி ஒன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை. நன்றி சகாரா.

கவிதை நன்றாகவுள்ளது ஆனால் கருப்பொருள் மீண்டும் ஆயுதமா ?

  • கருத்துக்கள உறவுகள்

எளிமையான உரைநடையில் ஆக்ரோசமான அழைப்பு .........பீனிக்ஸ் பறவையாய் எழுக.

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வைசஹாரா அக்கா... உள்ளதை உள்ளபடி சொல்லி இருக்கிறிங்க

அருமையான வரிகள்.

வலியோடு வாழ்பவர்க்கு வலியின் கொடுமை புரியும்.. வலிகளிலிருந்து மீண்டு எழுவோம்

சாம்பல் மேட்டிலிருந்து வரும் பீனிக்ஸ் பறவை போல..

நன்றி ஜீவா.,

வலியில்லாமல் வாழ்க்கை இல்லை. பிறப்பிலிருந்து இறப்புவரை வலி அதிகரிக்கும்போதுதான் வளர்ச்சி முகம் காட்டுகிறது. சாதாரணமாக ஒரு மழலைக்கு பல் முளைப்பதாக இருந்தாலும் சரி குட்டான்(குடல்) பெருப்பதாய் இருந்தாலும் சரி வலியையும், அவதியையும் அந்தக் குழந்தை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் இது இயற்கையின் நியதி. உடனடிப் பார்வைக்கு வலிகள் எம்மை நோகடித்தாலும் வைரம் பாய்ச்சும் சக்தி வாய்ந்தன.

சகாரா அக்கா மிகவும் நன்றி உங்களின் கவிதைக்கு.நாம் எல்லோரும் எமக்காய் ஒரு சுதந்திர பூமி உதயமாகும் வரை எங்கள் பேனாக் களினலாவது போர் செய்வோம்.பீனக்ஸ் பறவை எமக்கான சுதந்திரத்தோடு பிறக்கட்டும்.

பிரியமுடன்:யாயினி கனா.

நன்றி யாயினி கனா.,

வாளினும் கூரியன பேனாமுனைகள். அவற்றை உபயோகிக்கும் இலட்சியவாதிகளாலேயே அவை மேன்மையுறும்.

சகாராக்கா.........ஒவ்வொரு தமிழனும் மனதில் நினைப்பதை அழகாக கவிதை வடிவில் வடித்துள்ளீா்கள்........பீனிக்ஸ் பறவைகள் போல் நாமும் உயிா்த்தெழும் காலம் வெகு தொலைவில் இல்லை.....

நன்றி.

நன்றி ஈழமகள்.

உயிர்த்தெழும் காலம் நாளையல்ல இன்றே என்பதாய் இருக்கவேண்டும்.

அருமையான கவிதை...வித்தியாசமான தலைப்பு...வாழ்த்துகள்.

நன்றி ரதி.,

வித்தியாசமாக இருந்தாலே எவ்விடயமும் கவனத்தில் எடுக்கப்படும்.

அனைத்துத் தமிழ் மக்களின் உணர்விற்கும் வரி வடிவம் கொடுத்திருக்கிறீர்கள்.

நன்றி மணிவாசகன்.,

இப்போது எல்லாத்தமிழ் மக்களின் உணர்வுகளும் ஒரு திசையை நோக்கியதாகத்தானே உள்ளன. எழுத என்று உட்கார முடியாமல் உள்ளம் திணறித் தவிக்கிறது. அழகுக் கவிதைகளை உருவாக்க முடியாமல், எண்ணங்கள் ஒரு நீரோட்டமாக இல்லாமல் அலைபாய்ந்து கிடக்கின்றன. எழுதும் வரிகள் எல்லைகள் மீறி ஆவேசமாகவே வெளிப்படுகின்றன. எங்கள் உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்தால் உக்கிர வரிகள்தான் மிஞ்சும் மணிவாசகன்.

அருமையான வரிகள்......

எல்லாம் நடந்தாகி விட்டது... மறுபடியும் இனி என்ன நடக்க வேண்டுமென்பதையும் எதிரியே தீர்மானித்துக்கொண்டிருக்கி

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

அருமை!நாங்கள் எழுதிக் கொண்டிருப்போம்.துயில் கொள்பவர்கள் விழித்ததும் வாசிக்கட்டும்.

எமக்கு வைத்த கொள்ளியல்ல அவர்கள் அசோகமலருக்கு அவர்களே வைத்த கொள்ளி.எமக்கு விடியல் இல்லையேல் அவர்களுக்கே ஆபத்து உணர்வார்களா?

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மூஞ்சில துப்புரிங்க?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமை!நாங்கள் எழுதிக் கொண்டிருப்போம்.துயில் கொள்பவர்கள் விழித்ததும் வாசிக்கட்டும்.

எமக்கு வைத்த கொள்ளியல்ல அவர்கள் அசோகமலருக்கு அவர்களே வைத்த கொள்ளி.எமக்கு விடியல் இல்லையேல் அவர்களுக்கே ஆபத்து உணர்வார்களா?

 

புலவர் காலம் பதில் சொல்ல ஆரம்பித்திருக்கிறது.

ஏன் மூஞ்சில துப்புரிங்க?

 

யாருடைய முகத்தில் காறி உமிழ்ந்தேன் என்று சொல்லுங்கள் சுண்டல். :)

த்தூ….. மண்ணாங்கட்டிகளே! குந்தியிருந்து மணிக்கணக்காப் பேசுக.

த்தூ….. மண்ணாங்கட்டிகளே! குந்தியிருந்து மணிக்கணக்காப் பேசுக.

வண்டு இன்னும் தின்னைப்பிரச்சனை தீரலைப்போல ......... :D  :D 

 

வண்டு இன்னும் தின்னைப்பிரச்சனை தீரலைப்போல ......... :D  :D 

 

 

உலகம் அழியப்போகுதாம். :D

கவிதை நன்றாகவுள்ளது ஆனால் கருப்பொருள் மீண்டும் ஆயுதமா ?

வெளிநாட்டுப் பேனா என்னத்தைத் தான் விரும்பாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.