Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா "உதயன்" பத்திரிகை மீது கோழைகளின் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் போராளிகளும் மக்களும் உயிரைக்கொடுத்து நாட்டுக்காக போராடிக்கொண்டிருந்த அந்த வேளையில்(என்ன இப்பமட்டும் குறைச்சலா?)பலர் புலம் பெயர் நாடுகளில் அதை வியாபாரமாக்கி சொத்துச்சேர்த்தார்கள். இன்னும் சிலர் சந்தர்ப்ப தேசியவாதிகளாக மாறி எமது மக்களின் துன்பங்களிலேயே குளிர்காய்ந்து இன்பத்தைக்கண்டார்கள். இன்று புலிகளின் வீழ்ச்சிக்குப்பின்னர் இவர்களது உண்மைமுகம் வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது. பொது நோக்கற்ற இந்த மனிதர்கள் ஆண்டாண்டு காலமாக பாசாங்கிற்கு புலிகளின் ஆதரவாளர்களாக நடித்து சாமரம் வீசினார்கள். பணம் பண்ணுவதையே குறியாகக் கொண்ட இவர்கள் ஒருபோதும் ஓயவே மாட்டார்கள். அதுதான் இன்று சிறிலங்கா செல்லும் இவர்கள் மகிந்தவை கண்ணில் ஒற்றிக்கொண்டு வரும் காரணம்.

ஊடக சுதந்திரம் வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை ஆனால் பத்திரிகைகள் தாங்கள் என்றும் நடுநிலையான கொள்கையை கடைப்பிடிப்பதாக கூறிக்கொள்வது வெறும் சுத்துமாத்து. அப்படியொரு பத்திரிகை நடத்தவும் சாத்தியமில்லை. ஒரு நாஸ்திகனும் கருத்தளவில் ஒரு ஆஸ்திகன்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நடுநிலையான பத்திரிகை என்பது மக்களுக்குத் தேவையான ஒரு கற்பனைச் சரக்கு. இதை மக்களுக்கு வழங்குவதாக சொல்லும் பத்திரிகைகள் தமது பக்கச்சார்பான கொள்கைகளை தேனில் மருந்தைக்குழைத்து ஊட்டுவதுபோல காரியமாற்றுவதற்கு வசதியாக தமக்கென ஒரு சௌகரியமான பாதையை வகுத்துக்கொண்டு தொழில் செய்வர். எந்த நிறுவனமும் - பத்திரிகைத் தொழிலையும் சேர்த்துத்தான் - தமது வியாபாரத்தை எப்படி தக்கவைப்பது என்பது தான் முதல் கரிசனையாக எடுப்பார்கள். அதற்கு ஆபத்து வரும்போது நிச்சயமாக வளைந்து கொடுத்தே ஆகவேண்டும்.

  • Replies 92
  • Views 11.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதால ஒன்றும் குடீ மூழ்க்கி போகல்ல. பசங்களுக்கு கோபம் வந்திட்டு போல அதான் சும்மா தட்டிப்பாத்திருப்பாங்க...

உங்கட வாதப்பிரதி வாதங்களுக்கு நான் வரல்ல அதே நேரம் உதயன் பத்திரிகை எப்பவாவது தமிழ்த் தேசியத்துக்காக பணியாற்றினது என்று நீங்கள் சொன்னா நம்புறதுக்கு நான் கேணபயலத்தான் இருக்கனும்.

எனக்கு தெரிஞ்ச காலத்தில இருந்து கனடா உலகத்தமிழருக்குள்ள ஏற்ப்பட்ட, தமிழீழ சங்கத்துக்குள்ள ஏற்ப்பட்ட சில கருத்து முரண்பாடுகளை ஊதிப்பெரிதாக்கி தேசியத்தின் பலத்தை கனடாவில குறைக்க முற்ப்பட்டதில உதயன்ர பங்கு அதிகம். குறைப்பட்டுக்கொண்டவர்களை வைச்சு மற்றவர்களின், தேசியம் தொடர்பான செயற்ப்பாட்டாளர்களின் தனிப்பட்ட விடையங்களை வைச்சு பத்திரிகை ஓட்டின உதயனும்..

ஓசி ரிக்கற்றில ஊடகவியலாளர் என்ற பெயரில உள்ள நுழையிற அதன்ர ஆசிரியர் லோகேந்திரலிங்கமும் என்னத்தை சாதிச்சவை!

இதைப்போய் கோழைத்தனம் என்று சொல்லதீங்க.. கொஞ்சமாவது இனப்பற்றுள்ள மானா ரோசமுள்ள... மாவீரர்களை மதிக்கிற பசங்கள் எமக்குள்ளையும் இருக்கிறாங்க என்று சந்தோசப்படுங்க..

பலம் ஒன்றே விடிவைத்தரும் அந்த பலத்தின் அவசியம் புலத்தில் பல மட்டங்களில் வெளிக்காட்டப்படுகின்றது...!

உந்த பத்திரிகையை பற்றியோ, அதன் பின் புலம் பற்றியோ எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது.

ஆனால், எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற பாணியில் அவசரப்பட்டு ஒரு பத்திரிகையை தாக்கும், இனத்திற்கு கருப்பு புள்ளி தேடித் தரும், தமிழினத்தை மற்றவர்கள் கேவலமாக நினைக்க வைக்கும் அளவிற்கு எம்மவர்கள் மூடர்களாக இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். உண்மையான வீரர்கள் விவேகத்துடன் செயல் படுவார்கள்.

இதனால் இறுதியில் தமிழ் சமூகத்துக்குத்தான் கேட்ட பெயர்.

தமிழனுக்கு இழுக்கு தரும் இக்காரியத்தை, உண்மையில் சிங்கள - இந்திய பயங்கரவாதிகள் அல்லது அவர்கள் வால்கள் தான் செய்திருப்பார்கள்.

எனவே சிங்கள - இந்திய பயங்கரவாதிகளின் கூடு சதி வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

சிங்கள, இந்திய போலி ஜனநாயக நாடுகளை, பயங்கரவாத நாடுகளாக பிரகடனம் செய்ய வேண்டும்.

உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதால ஒன்றும் குடீ மூழ்க்கி போகல்ல. பசங்களுக்கு கோபம் வந்திட்டு போல அதான் சும்மா தட்டிப்பாத்திருப்பாங்க.

தட்டிப்பார்க்கிறதுக்கு இது என்ன மேளமா? :wub: தமிழ்த்தேசியத்துக்கு உதவுவது, உதவாதது ஒருபுறம் இருக்க கனடா நாட்டை பொருத்த அளவில உதயன் பத்திரிகை ஓர் மக்கள் ஊடகம். அது விளம்பரத்தை மையப்படுத்தியதாக இருக்கிது, தனிநபர் புராணம் பாடுது என்பது எல்லாம் ஊடகவியல் ரீதியாக பார்க்கும்போது ஒரு பொருட்டு அல்ல.

கனடா நாட்டில் கனடா நாட்டு சட்டதிட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்காமல் சண்டித்தனம் காட்டினால் அதனால் பாதிப்பு கடைசியில தமிழ்ச்சமூகத்துக்குத்தான்.

கடைசியில இப்ப என்ன நடந்து இருக்கிது தெரியுமா? உதயன் பத்திரிகைக்கு அந்த கோவக்கார பசங்கள் இலவசமாக விளம்பரம் செய்து இருக்கிறாங்கள். குளோப் அன் மெயில் ஸ்டார், 680 தொடக்கம் எல்லா கனேடிய ஊடகங்களிலையும் இது ஓர் முக்கிய செய்தி. சேதம் சுமார் 12,000 டாலராம். 12,000 டாலர் கொடுத்து செய்யமுடியாத விளம்பரத்தை பசங்க சும்மா தட்டிப்பார்த்து செய்து இருக்கிறாங்க.

இதனால யாருக்கு லாபம்? ஒன்று தமிழ்ச்சமூகத்துக்கு கெட்ட பெயர், ரெண்டு உதயன் பத்திரிகைக்கு இலவச விளம்பரம் + அங்கீகாரம்.

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அடிவருடி நாடுகள் பேசும் ஜனநாயகம் என்பது மிகப் போலியானது என்பதை நாங்கள் அனுபவத்தால் கண்டுவிட்டோம். இருந்தாலும் நாங்கள் கண்டதை உணர்ந்ததை உலகம் ஏற்கச் செய்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல. காரணம் அடிவருடித்தனம் மிகுந்த உலகில் போலித் தோற்றங்களே ஆட்சி செய்கின்றன.

வன்னியில் புலிகளின் குரல் தாக்கப் பட்ட போதும் சரி ஈழநாதம் சுக்குநூறாக்கப்பட்ட போதும் சரி யாழ்ப்பாணத்தில் உதயன் தாக்கப்பட்ட போதும் சரி பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட போதும் சரி இந்த அமெரிகக் ஜனநாயகம் பேசும் அடிவருடிகள் எதனையும் திடகாத்திரமாக செய்ய முன்வரவில்லை.

ஆனால் தங்கள் தேசங்களில் ஏதோ ஜனநாயகம் கொடிகட்டிப் பறப்பதாகக் காட்ட இவ்வாறான சம்பவங்களுக்கு வன்முறைவாத முலாம் பூசி முன்னுரிமை கொடுப்பதை ஜனநாயகம் என்று பீற்றிக் கொள்வார்கள். எனவே அந்த பீற்றுகைக்கு இடம் கொடாமல்.. அவர்கள் உச்சரிக்கும் ஜனநாயகத்தை நாமும் போலியாக உச்சரித்துக் கொண்டு அதன் வழி இந்தப் பத்திரிகைகளை மக்கள் இன உணர்வோடு புறக்கணிக்க வேண்டுமே அன்றி.. ஜனநாயகம் என்று ஏதோ பேசுவோர் எம்மை வன்முறைவாதிகள் என்று இனங்காட்டி பயங்கரவாதப்பட்டியலில் போட்டு வைக்க நாமே காரணமாகக் கூடாது.

உலகெங்கும் ஆட்சி செய்யும் போலி ஜனநாயகத்தை ஜனநாயக உச்சரிப்பின் படிதான் அணுக வேண்டும். வன்முறையால் அணுகினால்.. ஜனநாயகம் அணுகுண்டு வீசக் கூடத்தயங்காது. மக்களால் மக்களை ஆட்சிசெய்ய உருவாக்கப்பட்ட அமெரிக்க அரசுகள் தான் உலகில் மனிதப் பேரழிவுகள் பலவற்றிற்கு காரணமாகவும் இருந்துள்ளதை மனித இனவரலாறு என்றும் காட்டியே நிற்கும். அதில் எந்த ஈவுஇரக்கமும் இன்றி அமெரிக்கா ஜப்பான் மீது போட்ட அணுகுண்டுகளும் அடங்கும்.

இப்படிப்பட்ட அடிப்படையில் பயங்கரவாதத்தை.. இராணுவ ஆயுதக் கலாச்சாரத்தை நம்பி கட்டி எழுப்பட்டு வரும் அமெரிக்க வல்லாதிக்க ஜனநாயத்தையும் அதன் போலி அம்சங்களையும் தோலுரிக்க வன்முறை தகுந்த வழிமுறையல்ல. ஏனெனில் ஜனநாயகவாதிகள் என்போர் எம்மைவிட கொடிய வன்முறையாளர்கள் என்பதை ஏலவே பல தடவைகள் நிறுவிட்டுள்ளனர். இன்றும் கூட ஆப்கானிஸ்தானி குண்டு போட்டு 21 அப்பாவி மக்களைக் கொன்றுள்ளனர். இதையே அல்குவைடா அமெரிக்காவில் செய்திருந்தால்.. அதுதான் இன்றைய மேற்குலக பத்திரிகைகளில் ஊடகங்களில் முதன்மைச் செய்தாகவிருக்கும். ஆனால் இது இவர்கள் செய்ததால்.. அது எங்கோ ஓர் மூலைக்குள் முடக்கப்பட்டுவிடும். இதுதான் ஜனநாயகம். இதை ஏற்பது கடினம்.. எதிர்ப்பதும் கடினம் என்ற நிலையை அவர்கள் உருவாக்கி வைத்துவிட்டுத்தான் ஜனநாயகப்பரப்புரைகளை செய்து வருகின்றனர் என்பது இருக்க.. இவர்களை அவர்களின் வன்முறையால் எதிர்கொள்வது கடினம்.

போலி ஜனநாயகத்தை அதன் வழியில் ஜனநாயகத்தை உச்சரித்தபடி எதிர்ப்பதே சிறந்தது. அதுவே ஜனநாயகப் பயங்கரவாதிகளிடம் இருந்து இந்த உலகையும் மனித இனத்தையும் பாதுகாக்க விழிப்புணர்வூட்டும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவுடன் தொடர்பு - கனடா உதயன் மக்களால் தாக்கப்பட்டது

சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்ந்த ராசபக்‌சவுடன் வர்த்தக உறவு கலந்துரையாடலில் பங்குபற்றியதற்காகவும் அதன் செய்தியினை முன்பக்கத்தில் பிரசுரித்தமைக்காகவும் கனடா ஸ்காபரோவில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை தாக்கப்பட்டுள்ளது.

கனடா உதயன் பத்திரிகை நிர்வாகி குலா செல்லத்துரை அவர்கள் கனடா - சிறீலங்கா வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக இருகின்றார். இவர்அண்மையில் சிறீலங்கா சென்று மகிந்த ராசபக்‌சவுடன் கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன் மகிந்தவுடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றினையும் எடுத்து அதனை உதயன் பத்திரிகையில் முன் அட்டையில் பிரசுரித்தாராம்.

இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், செல்லத்துரை அவர்கள் பத்திரிகை அலுவலகம் செல்லும் வேளை பார்த்து அங்கு எதிர்ப்பு தெரிவித்து காரியாலையத்தையும் தாக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஒருபக்கம் பொருளாதார தடை என்ற போராட்டம் தொடர இன்னொரு பக்கம் வர்த்தக உறவை பேணுவதும். இதே வேளை ஈவிரக்கமின்றி 40,000 வரையான மக்களை கொன்ற மகிந்;தவுடன் புலம் பெயர் மக்கள் உறவுகளை வைத்து கொள்ளல் ஆகியவையே தாக்குதலிற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

நன்றி சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தட்டிப்பார்க்கிறதுக்கு இது என்ன மேளமா? :wub: தமிழ்த்தேசியத்துக்கு உதவுவது, உதவாதது ஒருபுறம் இருக்க கனடா நாட்டை பொருத்த அளவில உதயன் பத்திரிகை ஓர் மக்கள் ஊடகம். அது விளம்பரத்தை மையப்படுத்தியதாக இருக்கிது, தனிநபர் புராணம் பாடுது என்பது எல்லாம் ஊடகவியல் ரீதியாக பார்க்கும்போது ஒரு பொருட்டு அல்ல.

கனடா நாட்டில் கனடா நாட்டு சட்டதிட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்காமல் சண்டித்தனம் காட்டினால் அதனால் பாதிப்பு கடைசியில தமிழ்ச்சமூகத்துக்குத்தான்.

கடைசியில இப்ப என்ன நடந்து இருக்கிது தெரியுமா? உதயன் பத்திரிகைக்கு அந்த கோவக்கார பசங்கள் இலவசமாக விளம்பரம் செய்து இருக்கிறாங்கள். குளோப் அன் மெயில் ஸ்டார், 680 தொடக்கம் எல்லா கனேடிய ஊடகங்களிலையும் இது ஓர் முக்கிய செய்தி. சேதம் சுமார் 12,000 டாலராம். 12,000 டாலர் கொடுத்து செய்யமுடியாத விளம்பரத்தை பசங்க சும்மா தட்டிப்பார்த்து செய்து இருக்கிறாங்க.

இதனால யாருக்கு லாபம்? ஒன்று தமிழ்ச்சமூகத்துக்கு கெட்ட பெயர், ரெண்டு உதயன் பத்திரிகைக்கு இலவச விளம்பரம் + அங்கீகாரம்.

இது விளம்பர பத்திரிகை என்றால் தமிழ் உணர்வாளர்கள் தமது விளம்பரங்களை கொடுப்பதை புறக்கணிக்க வேண்டும், எரிவதை புடுங்கினால் புகை தானாக அடங்கி விடும், ஏற்கனவே விளம்பரம் கொடுதவர்கள் அடுத்த தடவை விளம்பரத்தை புதுப்பிக்க மாட்டோம் என்று இப்போதே சொல்லி விட வேண்டும். இல்லை விளம்பரம் கொடுப்போம் என்பவர் தமிழ்தேசியம் பற்றி கதையாது கம்மெண்று வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது.

""மக்கள் எதை பெற தகுதி உடையவர்களோ அப்படிப்பட்ட தலைவர்களே அவர்களுக்கு வாய்ப்பர்""

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ தமிழ் மக்கள் ஜனனாய வழிகளைக்கைக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். தனி மனிதன் சட்டத்தைக்கியில் எடுப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது.

இலங்கை ஜனாதிபதியோடு பேசுவதும் பேசாததும் பத்திரிகை ஆசிரியரின் தனிப்பட்ட விருப்பு. அதை எவரும் தடுக்க முடியாதது. இந்த தாக்குதலை ஆதரித்து இங்கு கருத்து கூறுபவர் எவரும் இலங்கை அரசைக்கண்டிக்கும் தார்மீக உரிமையை இழக்கிறார்கள்.

Edited by samiyar

அடடா சங்கதி தமிழ்மக்கள் தாக்கினார்கள் என்று உரிமை வேறு கோரி இருக்கிது. :wub: சிலநூறுபேரை குளிர்விக்கும் முகமாய் எழுதப்படுகிற செய்தி ஒருபுறம் இருக்க, கீழ உள்ள ஊடகங்களில வருகிற செய்தியை உலகத்தில இருக்கிற எத்தனை இலட்சம் மக்கள் வாசிப்பீனம், பார்ப்பீனம் என்று ஒருக்கால் சிந்திச்சு பாருங்கோ.

இப்பிடி தட்டிப்பார்த்து, தடவிப்பார்த்துப்போட்டு உணர்வுகளை கொட்டிப்போட்டு... நாளைக்கு நாடு கடந்த அரசு, புறநிலை அரசாங்கம் என்று சொல்லி வாக்கெடுப்பும், மாநாடும் வையுங்கோ. சர்வதேச அங்கீகாரத்தோட நிச்சயம் தமிழீழம் கிடைக்கும்.

Toronto Tamil newspaper office vandalized

National Post - ‎1 hour ago‎

Police are investigating mischief at the offices of a Toronto Tamil community newspaper, in which two large windows were smashed late Saturday night, ...

Tamil newspaper vandalized after publisher warned of trouble

Globe and Mail - Anna Mehler Paperny - ‎2 hours ago‎

Tamil newspaper ransacked in Toronto

Times of India - ‎7 hours ago‎

TORONTO: The office of a prominent Tamil newspaper here was ransacked Saturday night for covering the talks of a local Tamil leader with Sri Lankan ...

Times Online - Jeremy Page - ‎13 hours ago‎

Modesty is apparently not a strong point for Namal Rajapaksa, the 23-year-old son of the Sri Lankan President – and scion of Asia's newest political dynasty ...

Tamil newspaper's Scarborough office attacked

Toronto Star - John Rieti - ‎17 hours ago‎

The front window of Uthayan newspaper's office looked like a “vehicle drove right through it” when Kula Sellathurai arrived at the scene. ...

Tamil Newspaper Office Pillaged In Toronto For Covering Unwanted Conversation

india-server.com - ‎5 hours ago‎

A renowned Tamil newspaper office was destroyed in Toronto on Saturday because the newspaper covered the conversation between the Sri Lankan President ...

Tamil newspaper east-end office vandalized

680 News - ‎9 hours ago‎

Police are probing an act of vandalism at a Sri Lankan newspaper office in Scarborough. Uthayan, a paper widely read by Toronto's Sri Lankan Community, ...

Reconciliation, Post-War and Post-Poll

Daily Mirror - ‎16 hours ago‎

Time used to be not very long ago when terms like rehabilitation, reconstruction and reconciliation had specific meanings in contemporary Sri Lanka. ...

Vandals Target Tamil Newspaper

CityNews - ‎12 hours ago‎

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பத்திரிகையின் மீதான வன்முறை தாக்குதல் மிகவும் கண்டிக்கதக்கது. இந்த தாக்குதலை யார் செய்தார்களோ தெரியாது. செய்தவர்கள், எமது ஜனநாயக போராட்டங்களை பின்னடைய செய்யும் நோக்கத்துடனும் செய்து இருக்கலாம்.

இங்கு பலர் சொல்லியிருப்பது போல புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள், இப்பது அவர்களது சொந்த பணத்தை? எம்நாட்டில் முதலிட்டு மேலும் லாபம் சம்பாதிக்க விழைகிறார்கள். 'அபிவிருத்தி' என்று மகிந்த புலம்புவது இதைதான். புலம் பெயர் மக்கள் தமது சொந்தங்களுக்கு அனுப்பும் பணம் திரும்பவும் இவர்களுக்கே வரும்.

இன்று உலகில் 'முதலாளித்துவமே' மேலோங்கி நிற்கிறது. மக்களை அடிமை நிலையில் வைத்திருந்து, சுரண்டுவதே முதலாளித்துவ நாடுகள் செய்கிறது. உதாரணமாக இந்தியாவை எடுத்து பார்த்தால், இந்திய அரசியலையே ஆட்டி படிப்பது அம்பானி, டாட்டா, பில்லா, மிட்டேல் போன்ற பெரும் முதலாளிகள்.நக்சலைட்டுகல் இந்த முதலாளிகலுக்கும், இந்திய அரசின் அராஜகத்துக்கும் எதிராகவும், ஏழை விவசாய, பழங்குடி மக்களுக்கும் ஆதரவாகவும் போராடுகிறார்கள்.

http://www.vinavu.com/2010/02/16/revolution-of-the-poor/

இலங்கையிலும் இப்போது, எழுபது வீத அரசு சொத்து ராஜபக்சவினால் நிர்வாகிக்கபடுகிறது.

http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article7035564.ece

With dozens more relatives in prominent positions, the net result is that the Rajapaksas control an estimated 70 percent of the national budget.

இதேபோலவே எமது தமிழ்/இந்திய முதலாளிகளும் அரசுக்கு ஆலவட்டம் பிடித்து முதலீடு செய்து அபிவிருத்தி என்றபெயரில் மக்களை சுரண்ட்ட விழைகிறார்கள்.

Edited by Queen

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது தேசியத்துக்காகச் செயற்பட்ட பத்திரிகை இப்போது குத்துக்கரணம் அடிக்கிறது என்றால் அப்போதும் இப்போதும் எப்போதும் வியாபாரமே இவர்களது குறிக்கோளாக இருந்திருக்கிறது. புலிகள் இல்லாத நிலையில், சிங்களத்தின் ஆதரவை ஒரு வியாபாரி என்கிற முறையில் இவர் எதிர்பார்க்கிறார்.

அதுபோக, இப்போது நடந்த தாக்குதலை, தனது நடுநிலைமைக்கு கிடைத்த பரிசு என்பதுபோல் சித்தரிக்கிறார். இந்தத் தாக்குதல் மகிந்தவுடன் இவர் ஏற்படுத்திய சந்திப்புக்கு எதிரானது என்று எவ்வாறு சித்தரிக்கிறார்? அலுவலக வாடகை கொடுக்காததால் யாராவது இடித்திருக்கலாம்தானே..! :wub:

இவர் முதலில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வ்ஏண்டும். அபாண்டமாகப் பழி போடக்கூடாது. ஆனால் இடித்தது யாராக இருந்தாலும் குற்றமே..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் பத்திரிகை பற்றி பேசும் கனவான்களே ..இந்தப் பத்திரிகையை 15 வருடங்களுக்கு மேலாக நான் அறிவேன்.தேசியம் என்றால் கிலோ என்ன விலை என்றுதான் கேட்பார்கள்.சுயவிளம்பரத்துக்கும் சினிமா களியாட்டங்கலுக்கும் தான் முதலிடம்.மற்றும்படி தேசியச்செய்திகள் ஒரு வியாபாரயுக்தியே..கனடா வர்த்தகர் சங்கக்குளு சிறீலங்கா போய்வந்தவுடன் தாக்குதல் நடந்தது என்றால் உண்மை எல்லொருக்கும் விளங்க வேண்டும்.என்னினும் பத்திரிகை மீதான வன்முறை கண்டிக்கப்பட வேண்டியதே இது யார் செய்தாலும்.இது கனடாத் தமிழ்ர்களுக்கு விள்ங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

.தமிழர் வரலாறு

தேசியக் குறியீடுகள்

பதிவுகள்

தேசியத் தலைவர்

மண்ணின் கதைகள்திங்கள், பிப்ரவரி 22, 2010 11:53 | மறைச்செல்வன், ஐரோப்பா

கனடா உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

கனடாவிலுள்ள முன்னணி தமிழ் வார உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் தொிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை இரவு இச் சம்பவம் நடந்துள்ளது.

கனடா ஐக்கிய தமிழ் சம்மேளனத் தலைவரும் கனடா- இந்திய வர்த்தக சம்மேளனத் தலைவருமான குல செல்லத்துரை சமீபத்தில் கொழும்பில் இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து தமிழர்கள் விவகாரம் குறித்துப் பேசினார்.

மேலும் போரில் அநாதரவாகிவிட்ட குழந்தைகளின் நலனுக்காக நிதியும் வழங்கினார். இது தொடர்பான செய்தியை கனடாவின் உதயன் இதழ் வெளியிட்டது. இதன் ஆசிரியரான லோகன் லோகேந்திரலிங்கம், செல்லத்துரையின் நெருங்கிய நண்பராவார்.

ராஜபக்சவுடனான சந்திப்பை ஆதரிப்பது போல செய்தி வெளியானதாகக் கூறி உதயன் நாளிதழ் அலுவலகத்தை இலங்கைத் தமிழர்கள் சனிக்கிழமை தாக்கினர்.

முன்னதாக லோகேந்திரலிங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திட்டிய பல தமிழர்கள் திடீரென அலுவலகத் தாக்குதலில் இறங்கினர்.

இது குறித்து செல்லத்துரை கூறுகையில்,

தாக்குதல் நடத்தியவர்கள் லோகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்கள் நண்பர் ராஜக்சவை சந்தித்துள்ளார். இப்போது நீங்கள் உங்கள் அலுவலகத்துக்கு சென்று, அங்கு என்ன நடந்துள்ளது என்பதைப் பாருங்கள் என்று கூறியுள்ளனர் என்றார்.

இந்தத் தாக்குதலுக்கு கனடா தமிழ் காங்கிரஸ் தலைவர் டேவிட் பூபாலபிள்ளை கண்டனம் தெரிவித்துள்ளார். பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வல்ல. கருத்தை வெளியிட அனைவருக்கும் உரிமை உண்டு. அதை அனைவரும் மதிக்க வேண்டும.

அதே நேரத்தில் பல்வேறு மனித உரிமை அமைப்புகளால் போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ராஜபக்சவுடன் பேச்சு நடத்துவதையும் ஏற்க முடியாது.

ராஜபக்சவை சந்தித்த செல்லத்துரை, இலங்கை அரசின் முகவர் ஆவார். அவர் அந் நாட்டு அரசின் கைக்கூலி. தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் இலங்கை அரசின் வலையில் செல்லத்துரையைப் போன்றவர்கள் விழுவது கவலைக்குரியது என்றார் பூபாலபிள்ளை.

(moolam: pathivu)

இந்த மென்வன்முறைக்கு அவன் திருப்பி வன்வன்முறையல்லோ பாவிக்கின்றான்,பிறகு றோட்டில போய் நின்று அழுகின்றோம் அவன் வன்முறை பாவிக்கின்றான் என்று,கேட்கத்தான் ஆட்களில்லை.

சீ.பீ.சீ யில் இலங்கையில் பத்திரிகைச் சுதந்தரம் பற்றி ஒரு நிகழ்ச்சி நடந்தது,சிறீலங்கா அரசாங்கத்தை வாங்கு வாங்கென வாங்கினார்கள் அதுவும் சவுத் ஏசியா தொடர்பாளர் தனக்கு லசந்தாவுடனான தொடர்புகளை நினைவுகூர்ந்தார்.முடிக்கும் போது அவர்கள் சொன்னார்கள் புலி இவ்வளவுகாலமும் செய்ததை இப்போ சிறிலங்கா அரசு செய்கின்றதென்று அவர்களின் கண்ணோட்டம் அப்படிதான் இருந்தது.

நாங்கள் விடும் பிழைகளை நாங்கள் நியாயப்படுத்தலாம் உலகம் ஏற்காது.

இவ்வளவு உணர்சிவசப்படும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டியது ஒன்றுள்ளது,

இப்படியான பத்திரிகைகள்,வானொலிகளை மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தமுடியாமல் போனது ஏன்?

சிறீலங்கா பொருட்கள் புறக்கணிப்பு வெற்றியடையாமல் போனது ஏன்?

நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்க மக்கள் தயாராக இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இப்படியான பத்திரிகைகள்,வானொலிகளை மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தமுடியாமல் போனது ஏன்?

மக்களும் பச்சோந்திகளாக, துரோகிகளாக இருப்பதன் காரணமாக இருக்கலாம். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்....சரியானபதில் புலத்தில வழங்கப்பட்டுள்ளது இதை நான் எப்பவோ எதிர்பார்த்தன் சரியான தருணத்தில வழங்கப்பட்டுள்ளது. இதை அந்த நாடு எப்படியான கண்ணோட்டத்தில பார்க்குதோ தெரியல... எல்லா நாட்டிலும்முள்ள, எமது இலட்சியத்தை சிதைக்கும் நடவடிக்கைகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

  • தொடங்கியவர்

நிழலி,

நீங்கள் தனிப்பட்ட விமர்சிசனமாக எடுத்து விட்டீர்கள். பரவாயில்லை. ஆனால், நடத்தப்பட்ட தாக்குதல் யாரால் என்று தெரியுமுன்னரே நீங்கள் முடிவுக்கு வந்தது ஆச்சரியம்தான். தமிழரில்லாத வேறு எவராலும் இது நடத்தப்படவில்லை என்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா?? வேறு யாரும் தனிப்பட்ட காரணத்துக்காக இதை செய்திருக்கலாம் அல்லவா??

கனடாவின் முக்கிய அனைத்து ஊடகங்களின் செய்திகளின் படி பத்திரிகை உரிமையாளருக்கு எதிரானவர்கள்தான் இதனைச் செய்திருக்கலாம் என்று போட்டுள்ளனர். அதனை விட சக தமிழ் பத்திரிகையாளனாக இதனை வெறுக்கின்றேன் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். RCMP இன் முழு விசாரணையும் முடிந்து யார் எனக் கண்டுபிடித்த, ஒரு ஆறுமாசத்தின் பின்தானா இதனை வெறுக்கின்றேன் என்று போடவேண்டும்? அப்படியே விசாரணை முடிவினை கனடா பொலிஸ் அறிவித்தால், நிச்சயம் அதனையும் செய்தியாக இங்கு பிரசுரிப்பேன்

இவையனைத்துக்கும் அப்பால், அரசியல் காரணங்களினால்தான் இந்த தாக்குதல் நடந்திருப்பின் நிச்சயம் கண்டிக்கின்றேன். தம் கருத்தை மிகச் சுதந்திரமாக வெளியிட அனைத்து வசதிகளும் உரிமைகளும் இருக்கும் கனடா நாட்டில் தம் கருத்தை வன்முறை மூலம் வெளியிட முனைந்த அவர்களின் படுகோழைத்தனமான செயலை மீண்டும் மீண்டும் கண்டிக்கின்றேன்.

15 வயதிலேயே பத்திரிக்கையாளரா??!! ஆச்சரியம்தான். வாழ்த்துக்கள்.

ஹி ஹி... உண்மையில் 13 என்று போட்டிருக்க வேண்டும். ஏனெனில் யாழ்ப்பாணத்தில் கோண்டாவில் முகாமில் இருந்து புலிகளின் செய்திகளை வாங்கி எங்கள் பிரதேசம் எங்கும் இருக்கும் புலிகளின் கரும்பலகையில் எழுதும் பணியில் தொடர்ந்து 1.5 வருடமாக ஈடுபட்டிருந்தேன். செய்தியை வெட்டி ஒட்டுவது பத்திரிகைத் தொழில் இல்லையென்பதால் அதனைச் சேர்க்கவில்லை :wub: .

நன்றி வணக்கம்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதயன் பத்திரிகையை தாக்கினது பற்றி அக்கறைப்படும் இந்த ஊடகங்கள் பற்றி நான் எதுக்கு அலட்டிக்கொள்ள வேணும்? இந்த ஊடகங்கள் என்னத்தை எங்களுக்கு செய்து புடுங்கினவை? நாங்ககள் எங்க ஏதாவது ஒரு இடத்தில சறுக்கிறமோ அந்தஇ டத்தை பிடிச்சு எழுதுற ஊடகங்களுக்கும் நீங்கள் பயப்படுங்க... இது எப்பிடி இருக்கு என்டா இந்தியாவின்ட அனுசரணையோட தமிழருக்கு விடுதலை வாங்கி கொடுக்கிறது போல இருக்கும்!

கனடாவில உலகத்தமிழர் தடை செய்யப்படும் போது அவர்களது பத்திரிகையும் தடை செய்யப்பட்டத பற்றி எந்த ஊடகமும் கண்டு கொள்ளவில்லை... பிறகு பெயரில மாற்றம் செய்து வெளியிட்டவை!

இப்பிடி ஒரு சார்பான ஊடகங்களுக்காக நாம் ஒப்பாரி வைக்க முடியாது. நீங்களும் நானும் செய்ய முடியாததை யாரோ நாலு பேர் செய்திருக்கின்றாங்க அதுக்காக நான் சந்தோசப்படத்தான் முடியும். லோகோந்திர லிங்கத்துக்கு எம்.பிமாராடைபடம் பிடிக்கீறதும், பொலிசுக:கு போன் பண்ணுறதும் தான் வேலை என்றா இதுக்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

வியாபாரமாக தன்ர பத்திரிகையை கொண்டு போனால் இப்பிடியான சம்பவங்கள் நடைபெறுவது தவிர்க்க முடியாதது.

நீங்கள் இது வரைக்கும் உங்கள ஜுனநாயக கோட்பாடுகளால என்னத்தை சாதிச்சனீங்கள்? முந்தியும் இப்பிடித்தான் ஆரம்பத்தில ரோட் புளொக் பண்ணுவம் என்றா நோ நோ அது பப்பிளிக்க டிஸ்ரொப் பண்ணும் என்றீங்கக பிறகு ஒருகிழமையா போய் ஒன்றுமே இல்லாத ரோட்ட புளோக் பண்ணினீங்க? எதையும் காலத்தின் அடிப்படையில செய்ய தெரியனும்!

அந்்த காலத்தின் அடிப்பபடையில் தான் உதயன் தாக்கப்்பட்டிருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் போராளிகளும் மக்களும் உயிரைக்கொடுத்து நாட்டுக்காக போராடிக்கொண்டிருந்த அந்த வேளையில்(என்ன இப்பமட்டும் குறைச்சலா?)பலர் புலம் பெயர் நாடுகளில் அதை வியாபாரமாக்கி சொத்துச்சேர்த்தார்கள். இன்னும் சிலர் சந்தர்ப்ப தேசியவாதிகளாக மாறி எமது மக்களின் துன்பங்களிலேயே குளிர்காய்ந்து இன்பத்தைக்கண்டார்கள். இன்று புலிகளின் வீழ்ச்சிக்குப்பின்னர் இவர்களது உண்மைமுகம் வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது. பொது நோக்கற்ற இந்த மனிதர்கள் ஆண்டாண்டு காலமாக பாசாங்கிற்கு புலிகளின் ஆதரவாளர்களாக நடித்து சாமரம் வீசினார்கள். பணம் பண்ணுவதையே குறியாகக் கொண்ட இவர்கள் ஒருபோதும் ஓயவே மாட்டார்கள். அதுதான் இன்று சிறிலங்கா செல்லும் இவர்கள் மகிந்தவை கண்ணில் ஒற்றிக்கொண்டு வரும் காரணம்.

ஊடக சுதந்திரம் வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை ஆனால் பத்திரிகைகள் தாங்கள் என்றும் நடுநிலையான கொள்கையை கடைப்பிடிப்பதாக கூறிக்கொள்வது வெறும் சுத்துமாத்து. அப்படியொரு பத்திரிகை நடத்தவும் சாத்தியமில்லை. ஒரு நாஸ்திகனும் கருத்தளவில் ஒரு ஆஸ்திகன்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நடுநிலையான பத்திரிகை என்பது மக்களுக்குத் தேவையான ஒரு கற்பனைச் சரக்கு. இதை மக்களுக்கு வழங்குவதாக சொல்லும் பத்திரிகைகள் தமது பக்கச்சார்பான கொள்கைகளை தேனில் மருந்தைக்குழைத்து ஊட்டுவதுபோல காரியமாற்றுவதற்கு வசதியாக தமக்கென ஒரு சௌகரியமான பாதையை வகுத்துக்கொண்டு தொழில் செய்வர். எந்த நிறுவனமும் - பத்திரிகைத் தொழிலையும் சேர்த்துத்தான் - தமது வியாபாரத்தை எப்படி தக்கவைப்பது என்பது தான் முதல் கரிசனையாக எடுப்பார்கள். அதற்கு ஆபத்து வரும்போது நிச்சயமாக வளைந்து கொடுத்தே ஆகவேண்டும்.

இவை தான் உண்மை!

சிங்களவனால் நேரடியாகவே பாதிக்கப்பட்ட ஒரு பொதுமகனாலையே தாக்கப்பட சந்தர்ப்பம் இருக்கலாமல்லவா? உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதை நான் நியாயப் படுத்தவில்லை ஆனால் இவரைப்போன்ற பச்சோந்திகளுக்காக வக்காளத்து வாங்குபவர்கள் பற்றித்தான் புரியல்லை.

இங்கு சிலர் தங்களால் எழுதும் கருத்தை உண்மையாக்குவதிற்காக தங்களை மறந்தே உளறுகிறார்கள், உதயன் பத்திரிகை பற்றி இங்குள்ள(கனடா) மக்களிற்கு நன்றாகவே தெரியும் வேறு நாட்டு மக்களுக்கு தேவையென்றால் உங்கள் வித்தைகளை காட்டுங்கள்.

பறவைகள்,

உதயன் பத்திரிகை தாக்கப்பட்டது தாயக மக்களுக்கு எப்படியான அனுகூலங்களை கொண்டுவரும் என்று கொஞ்சம் விளக்குங்கோ.

நாடுகடந்த அரசு - புறநிலை அரசு, வட்டுக்கோட்டை தீர்மானம் என்று ஒருபுறம் ஜனநாயக வழியில் தமிழர்கள் இருக்கிறீனம் என்று காட்டிக்கொண்டு மறுபுறம் இப்பிடி ஜனநாயக விரோத தாக்குதல் செய்தால் அதன் அர்த்தம் எப்படி புரிந்துகொள்ளப்படும்?

சரி, உங்களுக்கு சர்வதேசம், மற்றவர்கள் எப்படி உங்களை கணிப்பார்கள் என்பது பற்றி அக்கறை இல்லையென்றால் பிறகு ஏன் இந்த வாக்கெடுப்பு, மாநாடுகளில் மினக்கட்டுக்கொண்டு இருப்பான்?

  • தொடங்கியவர்

பறவைகள்,

உதயன் பத்திரிகை தாக்கப்பட்டது தாயக மக்களுக்கு எப்படியான அனுகூலங்களை கொண்டுவரும் என்று கொஞ்சம் விளக்குங்கோ.

நாடுகடந்த அரசு - புறநிலை அரசு, வட்டுக்கோட்டை தீர்மானம் என்று ஒருபுறம் ஜனநாயக வழியில் தமிழர்கள் இருக்கிறீனம் என்று காட்டிக்கொண்டு மறுபுறம் இப்பிடி ஜனநாயக விரோத தாக்குதல் செய்தால் அதன் அர்த்தம் எப்படி புரிந்துகொள்ளப்படும்?

சரி, உங்களுக்கு சர்வதேசம், மற்றவர்கள் எப்படி உங்களை கணிப்பார்கள் என்பது பற்றி அக்கறை இல்லையென்றால் பிறகு ஏன் இந்த வாக்கெடுப்பு, மாநாடுகளில் மினக்கட்டுக்கொண்டு இருப்பான்?

சர்வதேசமும் அவர்களை கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் தெருச்சண்டியர் வேலைகளையும் செய்ய அனுமதிக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான போராளிகளின் இரத்தம் சிந்தி வளர்க்கப்பட்ட தமிழ் தேசியத்தின் பெயரால் இன்று புலம்பெயர் நாடுகளில் உள்ள போலித் தமிழ் தேசியவாதிகளின் தெருச்சண்டித் தனத்தால்தான் சீரழிக்கப்பட்டது. அத்தகைய மாவீரகளைத் தங்கள் குடும்பங்களில் கொண்டவர்கள் கூட இத்தகைய சண்டித்தனத்தை ஆதரிப்பதை எந்த விதத்தில் ஏற்றுக்கொள்வது எனப் புரியவில்லை.

எமக்கு சர்வதேசமும், அது சொல்கின்ற சனநாயகமும், பத்திரிகைச் சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் வேண்டாம் என்றால் பிறகு என்னத்துக்கு நாடு கடந்த அரசும், வட்டுக்கோட்டை தீர்மானமும் அதற்கான ஆதரவுக் கோசமும்?

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

பறவைகள்,

உதயன் பத்திரிகை தாக்கப்பட்டது தாயக மக்களுக்கு எப்படியான அனுகூலங்களை கொண்டுவரும் என்று கொஞ்சம் விளக்குங்கோ.

நாடுகடந்த அரசு - புறநிலை அரசு, வட்டுக்கோட்டை தீர்மானம் என்று ஒருபுறம் ஜனநாயக வழியில் தமிழர்கள் இருக்கிறீனம் என்று காட்டிக்கொண்டு மறுபுறம் இப்பிடி ஜனநாயக விரோத தாக்குதல் செய்தால் அதன் அர்த்தம் எப்படி புரிந்துகொள்ளப்படும்?

சரி, உங்களுக்கு சர்வதேசம், மற்றவர்கள் எப்படி உங்களை கணிப்பார்கள் என்பது பற்றி அக்கறை இல்லையென்றால் பிறகு ஏன் இந்த வாக்கெடுப்பு, மாநாடுகளில் மினக்கட்டுக்கொண்டு இருப்பான்?

முரளி நீங்கள் முடிவே எடுத்துவிட்டீர்களா? இக்காரியத்தை இன்னவர்கள் செய்தார்கள் என்று யாரையாவது காவல்த்துறை கைது செய்து சாட்சியங்களோடு உறுதிப்படுத்தி உள்ளார்களா?

இங்கு கடைகளில் சில பொருட்களை வைத்து எரியூட்டி விட்டு காப்புறுதிப்பணத்தை மிகையாக எடுத்தும், ஒன்றுக்குமே பிரயோசனம் அற்ற வாகனத்தை எங்காவது மோத வைத்து விட்டு புதிய வாகனத்தை காப்புறதி மூலம் கொள்வனவு செய்வதையும் இல்லாத விளம்பரத்தை உருவாக்குவதற்காக தத்தம் ஊடகங்களின் மீது ஏதாவது விசமங்களைச் செய்வது ஒன்றும் கடினமான விடயம் அல்லவே..... எத்தனையைப் பார்த்திருக்கிறோம். இது கூட என்ன சூழ்ச்சியோ? அப்படியே இந்த ஊடகத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது ஏன் தனிநபர் பிரச்சனைகளாக இருக்கக் கூடாது? அப்படியும் சிந்தித்துப் பார்க்கலாமே....

இவ்வூடகத்துறை உணர்வுபூர்வமான மக்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பின் இதனைக் காட்டிலும் தேசியத்தை மலினப்படுத்தும் ஊடகங்கள் நம்மிடையே இருக்கின்றன. அப்படியானால் அவையும் அல்லவா இதனைக் காட்டிலும் சேதப்பட்டிருக்கவேண்டும்.

ஏன் இச்செயல் மகிந்த சிந்தனையாகக்கூட இருக்கலாம் அல்லவா? இப்போது பலவீனமடைந்த தமிழர் தரப்பு மீளெழுகையை பெற்றுவிடக்கூடாது என்ற நோக்கில் இவ்விடயத்தை இலங்கை அரசே செய்வித்து தமிழருக்கு எதிரான நிலையை மேலைநாடுகளில் தோற்றுவிக்க முயற்சி செய்யலாம் இல்லையா? எப்போதுமே அவசரப்பட்டு முடிவெடுக்காமல் பல பக்கங்களையும் நோக்கும் தன்மையை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

சகாறா அக்கா, சங்கதி பார்க்கறனீங்களோ? அதில தமிழ்மக்களிண்ட தாக்குதல் என்று போட்டு இருக்கிதாம். மேல பாருங்கோ குட்டிப்பையன் இணைச்ச கருத்தை. சரி, மகிந்த சிந்தனை, மற்றவர்களிண்ட சூழ்ச்சியால நடந்த தாக்குதல் என்றே வைத்து கொள்வம். அப்படியானால்.. ஓர் நேர்மையான ஜனநாயகவாதி என்ன செய்வான்? அனுதாபம் தெரிவித்து ஓர் கருத்து எழுதாவிட்டாலும்.. ஆஹா போட்டு தள்ளி இருக்கிறாங்கள் பாராட்டுக்கள் என்று சொல்லமாட்டான்.

இங்கு எழுதப்பட்ட கருத்துக்கள் எல்லாம்.. உதயன் பத்திரிகை பச்சோந்தி, துரோகியின் பத்திரிகை எனவே அது தாக்கப்பட்டது நல்லது என்பதன் அடிப்படையில எழுதப்பட்டு இருக்கிது. பார்க்க இல்லையோ? இப்படியான மனநிலையில இருந்துகொண்டு வட்டுக்கோட்டை தீர்மானமும், நாடு கடந்த அரசும் பற்றி சிந்திச்சுக்கொண்டு இருந்தால் வாக்கெடுப்பு வைச்சால் நிச்சயம் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

ஓர் ஊடகம் எனப்படுகிற வகையில் உதயன் மீதான தாக்குதலை கண்டிப்பதற்கு முன்வராத தன்மை எதைக்காட்டுகின்றது? தாக்குதல் செய்தது நல்லது என்று சொல்லுவது எதை காட்டுகிது?

இங்கு யார் தாக்குதலுக்கும், சிறீ லங்கா ஜனாதிபதியின் சந்திப்புக்கும் முடிச்சு போட்டார்கள்? வாசிச்சு பாருங்கோ விளங்கும். :wub:

name='மச்சான்' date='22 February 2010 - 11:34 AM' timestamp='1266856476' post='569603']

இப்படியான மனநிலையில இருந்துகொண்டு வட்டுக்கோட்டை தீர்மானமும், நாடு கடந்த அரசும் பற்றி சிந்திச்சுக்கொண்டு இருந்தால் வாக்கெடுப்பு வைச்சால் நிச்சயம் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

இதனை முறியடிப்பதற்காகக்கூட சதி நடந்திருக்கலாம் அல்லவா மச்சான்

நிங்களே கோடிட்டு காட்டிவிட்டீர்கள்

நிழலியும் மச்சானும் "உதயன்" ஐயும் லோகேந்திரலிங்கத்தையும் மிக நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். சஹாராக்கா குறிப்பிட்டதுபோல, உதயன் எத்தனை தடவைகள் இப்படி காப்புறுதிப் பணமும், வங்கி முறிதலும் செய்திருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? பொது இடத்தில் ஒரு கொலையே கூட நடந்தாலும் அதற்கு வழக்கு போடப்பட்டு விசாரித்தபின்னர்தான் தண்டனை வழங்கப்படும். ஆனால் இங்குள்ள சிலரோ........

மச்சான், வட்டுக்கோட்டை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்து மாதக்கணக்காகி விட்டது என்பதுகூட உங்களுக்கு மறந்து விட்டது என்றால்........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.